16.06.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களுக்குக் கற்பிப்பவர் ஒரு சரீரதாரி அல்ல என்ற சந்தோஷத்தை எப்பொழுதும் பேணுங்கள். சரீரமற்ற தந்தை குறிப்பாக உங்களுக்குக் கற்பிப்பதற்காக வந்து ஒரு சரீரத்தில் பிரவேசிக்கின்றார்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் ஞானம் என்ற மூன்றாவது கண்ணை ஏன் பெற்றிருக்கிறீர்கள்?பதில்:
உங்களுடைய மௌன தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் பார்ப்பதற்காக நீங்கள் ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் உட்பட, உங்கள் கண்களால் பார்க்கக்கூடிய, பழைய உலகிலுள்ள அனைத்தில் இருந்தும் உங்கள் புத்தியை அகற்றுங்கள். தந்தை உங்களைக் குப்பையில் இருந்து அகற்றி, உங்களை மலர்கள் ஆக்குவதற்காக (தேவர்கள்) வந்துள்ளார். ஆகையினால், நீங்கள் அத்தகைய தந்தைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய உங்களுடன் கடவுள் சிவன் பேசுகின்றார். கடவுள் சிவனே நிச்சயமாக உண்மையான பாபா என அழைக்கப்படுகிறார். ஏனெனில் அவரே படைப்பவர். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இறைவர், இறைவியர்கள் ஆகுவதற்காகக் கடவுளால் இப்பொழுது கற்பிக்கப்படுகிறீர்கள். ஒரு மாணவனுக்குத் தனது ஆசிரியரையோ, தனது கல்வியையோ அல்லது அந்தக் கல்வியின் பலனையோ தெரியாமல் இருக்க முடியாதென்பதை நீங்கள் ஒவ்வொருவரும் மிக நன்றாக அறிவீர்கள். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார். எனவே குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். ஏன் இந்தச் சந்தோஷம் ஸ்திரமாக இருப்பதில்லை? உங்களுக்குக் கற்பிப்பவர் ஒரு பௌதீகமான மனிதரல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். சரீரமற்ற தந்தை, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்காக, குறிப்பாக வந்து ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார். கடவுள் வந்து கற்பிப்பதை வேறு எவருமே அறிய மாட்டார்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகள், அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். அத்துடன் அவரே ஞானக்கடல் எனவும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சிவபாபாவின் நேர்முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். இப்பொழுது மாத்திரமே ஆத்மாக்களாகிய நீங்கள் பரமாத்மாவைச் சந்திக்கின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். எவ்வாறாயினும் மாயை உங்களை மறக்க வைக்கின்ற அத்தகையவள். இல்லையெனில், உங்களுக்குக் கடவுள் கற்பிக்கின்றார் என்ற போதை இருந்திருக்கும். நீங்கள் அவரைத் தொடர்ந்தும் நினைவுசெய்ய வேண்டும். எவ்வாறாயினும், அவரை முழுமையாக மறந்துவிடுகின்ற குழந்தைகளும் இங்கு இருக்கின்றார்கள். அவர்கள் எதையும் அறியார்கள். கடவுளே கூறுகிறார்: பல குழந்தைகள் என்னை மறந்து விடுகின்றனர். இல்லை எனில், நாங்கள் கடவுளின் குழந்தைகள், அவரே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற சந்தோஷம் இருந்திருக்கும். மாயை உங்களை முற்றாக அவரை மறக்கச் செய்யும் அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்தவள். உங்களுடைய புத்தி, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் உட்பட, இந்தப் பழைய உலகில் உங்கள் கண்களால் காண்பவை அனைத்தின் மீதும் செல்கின்றது. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்வதற்காக மூன்றாவது கண்ணைக் கொடுத்துள்ளார். இது தீய உலகமான, துன்பதாமம். பாரதம் சுவர்க்கமாக இருந்தது என்றும், அது இப்பொழுது நரகம் என்றும் நீங்கள் அறிவீர்கள். தந்தை உங்களை மீண்டும் ஒருமுறை மலர்கள் ஆக்குவதற்காக வருகின்றார். அங்கே, நீங்கள் 21 பிறவிகளுக்கு சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் அதற்காகவே கற்கின்றீர்கள். எவ்வாறாயினும் நீங்கள் முழுமையாகக் கற்காததால் உங்கள் புத்தி இங்கேயுள்ள செல்வத்திலும், செழிப்பிலும் சிக்கிக் கொள்கின்றது. நீங்கள் அவை அனைத்தில் இருந்தும் உங்கள் புத்தியை அகற்றுவதில்லை. தந்தை கூறுகின்றார்: உங்கள் புத்தியை அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நோக்கிச் செலுத்துங்கள். எவ்வாறாயினும், உங்கள் புத்தியை அதிலிருந்து அகற்ற முடியாதவாறு, உங்கள் புத்தி முழுமையாகத் தீய உலகுடன் பற்றிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுதும் உங்கள் புத்தி பழைய உலகிலிருந்து துண்டிக்கப்படவில்லை. பாபா உங்களைத் தூய்மை ஆனவர்களாகவும் அழகானவர்களாகவும் ஆக்குவதற்காக இப்பொழுது வந்துள்ளார். நீங்கள் தூய்மையைப் பற்றியே பிரதானமாகப் பேசுகின்றீர்கள். பாபா எங்களைத் தூய்மை ஆக்கி, தூய உலகிற்கு அழைத்துச் செல்கின்றார். ஆகையினால், அவ்வாறான தந்தைக்கு நீங்கள் அதிகளவு மதிப்பளிக்க வேண்டும். பரந்தாமத்தில் இருந்து எங்களுக்குக் கற்பிப்பதற்காக வருகின்ற தந்தையிடம் உங்களை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். அவர் குழந்தைகளாகிய உங்களுக்காக அதிகளவு முயற்சி செய்கின்றார். அவர் தீயவை அனைத்தில் இருந்தும் உங்களை முழுமையாக அகற்றுகின்றார். நீங்கள் இப்பொழுது மலர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் அத்தகைய மலர்களாக (தேவர்கள்) ஆகுகின்றீர்கள் என அறிவீர்கள். மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்கு கடவுளுக்கு நீண்டகாலம் எடுக்காது. தந்தை இப்பொழுது எங்களுக்குக் கற்பிக்கின்றார். நாங்கள் மனிதரில் இருந்து, தேவர்களாக மாறுவதற்கு இங்கு வந்துள்ளோம். நீங்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தீர்கள் என இப்பொழுது அறிந்துள்ளீர்கள். முன்னர், நீங்கள் இதை அறிந்திருக்கவில்லை. நீங்கள் உங்களுடைய இராச்சியத்தை ஆட்சிசெய்தீர்கள் எனவும், பின்னர் இராவணன் அதை அபகரித்து விட்டான் எனவும் தந்தை இப்பொழுது கூறுகின்றார். நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்தீர்கள், பின்னர் 84 பிறவிகள் எடுத்து, தொடர்ந்தும் ஏணியில் கீழே இறங்கினீர்கள். இது தீய உலகமாகும். மனிதர்கள் பெருமளவில் சந்தோஷமற்று இருக்கின்றார்கள். பட்டினியால் நூறாயிரக் கணக்கானோர் தொடர்ந்தும் மரணிக்கின்றனர். எந்தவிதச் சந்தோஷமும் இல்லை. மக்கள் எவ்வளவுதான் செல்வந்தர்களாக இருந்தாலும், அவர்களின் சந்தோஷம் காக்கையின் எச்சம் போன்று தற்காலிகமானது. இந்த உலகம் நச்சாறு என அழைக்கப்படுகின்றது. நீங்கள் சத்திய யுகத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். இப்பொழுது நீங்கள் அவலட்சணத்தில் இருந்து அழகானவர்களாக ஆகுகின்றீர்கள். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். பின்னர் மறு பிறவிகள் எடுத்ததன் மூலம் நீங்கள் விலைமாந்தர் இல்லத்திற்குள் பிரவேசித்துள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது சிவாலயத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றீர்கள். சிவபாபா சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். எனவே மிக நன்றாகக் கற்றிடுங்கள். கற்பதுடன், சக்கரத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருந்து, தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் ரூப்பும், பசந்தும் ஆவீர்கள். உங்கள் உதடுகளிலிருந்து எந்தவிதக் குப்பையும் அல்லாது, ஞான இரத்தினங்களே வெளிப்பட வேண்டும். தந்தை கூறுகின்றார்: நானும், ரூப்பும் பசந்தும் ஆவேன். பரமாத்மாவாகிய நான், ஞானக்கடல் ஆவேன். கல்வியே வருமானத்தின் மூலாதாரம். ஒருவர் கற்று சட்டநிபுணராகவோ, அல்லது வைத்தியராகவோ ஆகும் போது அவர் நூறாயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றார். ஒவ்வொரு வைத்தியரும் ஒரு மாதத்தில் நூறாயிரம் ரூபாய்களைச் சம்பாதிக்கிறார். அவர்களுக்கு உண்பதற்குக் கூட நேரம் இருப்பதில்லை. நீங்களும் இப்பொழுது கற்கின்றீர்கள். நீங்கள் என்னவாக ஆகுகின்றீர்கள்? உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். எனவே இந்தக் கல்வியின் போதை இருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசுகின்ற முறை மிகவும் இராஜரீகமாக இருக்க வேண்டும். நீங்கள் இராஜரீகமானவர்கள் ஆகுகின்றீர்கள். அரசர்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் எனப் பாருங்கள். பாபா அனுபவசாலி, இல்லையா? ஓர் அரசனுக்குப் பரிசுகள் வழங்கப்படும் பொழுது அவர் அதைத் தனது கைகளால் ஏற்றுக்கொள்ள மாட்டார். அவர் அதை ஏற்றுக் கொள்வதாயின், அதைக் காரியதரிசியிடம் கொடுக்குமாறு உங்களுக்குச் சைகை காட்டுவார். அவர்கள் மிகவும் இராஜரீகமானவர்கள். அவர்கள் எதையாவது ஏற்றுக்கொண்டால் பதிலாகத் தாங்களும் ஏதாவது கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அவர்கள் புத்தி அறிந்து கொண்டுள்ளது; எனவே அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. சில அரசர்கள் தமது மக்களிடம் இருந்து எதையுமே எடுத்துக் கொள்வதில்லை. ஏனைய அரசர்கள் தமது மக்களிடமே கொள்ளை அடிக்கின்றார்கள். அரசர்களுக்கு இடையிலும் வித்தியாசம் இருக்கின்றது. நீங்கள் இப்பொழுது சத்தியயுகத்தின் இரட்டைக் கிரீடமுள்ள அரசர்கள் ஆகுகின்றீர்கள். இரட்டைக் கிரீடம் அணிவதற்குத் தூய்மை நிச்சயமாகத் தேவை. இந்த விகார உலகம் துறக்கப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் விகாரங்களைத் துறந்துள்ளீர்கள். விகாரம் உள்ளவர்கள் இங்கே வந்து அமர முடியாது. அவ்வாறானவர்கள் எவரிடமும் கூறாமல், இங்கு வந்து அமர்ந்தால், அவர் தனக்கே ஓர் இழப்பை ஏற்படுத்துகின்றார். சிலர் திறமைசாலிகளாக இருக்க முயற்சித்து எவ்வாறாயினும் எவருக்கும் எதுவும் தெரியாது என நினைக்கின்றார்கள். தந்தை அதைப் பார்க்கின்றாரோ இல்லையோ, ஆனால் அந்த நபர் ஒரு பாவாத்மா ஆகுகின்றார். நீங்களும் பாவாத்மாக்களாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது முயற்சி செய்வதனால், புண்ணியாத்மாக்கள் ஆகவேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். இந்த ஞானத்தினால் நீங்கள் ஸ்ரீகிருஷ்ண தாமத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். தந்தை உங்களைப் பெருமளவில் அலங்கரிக்கின்றார்! அதிமேலான கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆகையினால், நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் கற்க வேண்டும்! பாக்கியசாலிகள் மாத்திரமே இவ்வாறான கல்வியைக் கற்கின்றனர். நீங்கள் உங்களுடைய நற்சான்றிதழையும் பெறவேண்டும். நீங்கள் கற்பதில்லை எனவும், உங்களுடைய புத்தி எல்லா இடங்களிலும் அலைபாய்கின்றது எனவும் பாபா கூறுவார். எனவே நீங்கள் என்னவாக ஆகப் போகின்றீர்கள்? இந்தச் சூழ்நிலையின் கீழ் நீங்கள் சித்தியடைய மாட்டீர்கள் என உங்கள் லௌகீகத் தந்தையும் கூறுவார். சிலர் கற்று நூறாயிரங்களைச் சம்பாதிக்;கின்றார்கள், மற்றவர்கள் தொடர்ந்தும் தடுமாறித் திரிகின்றார்கள். நீங்கள் தாய், தந்தையையும், நன்றாகக் கற்று பிறருக்கும் கற்பிக்கின்ற தொழிலை மாத்திரம் செய்கின்ற சகோதரர்களையுமே பின்பற்ற வேண்டும். கண்காட்சிகளில் பலருக்குக் கற்பிக்க முடியும். நீங்கள் முன்னேறிச் செல்கின்ற பொழுது துன்பமும் அதிகளவு அதிகரிக்கும், அப்பொழுது, அதிகளவு மனிதர்கள் தங்களது உலகில் விருப்பமின்மையைக் கொண்டிருந்து, கற்க ஆரம்பிப்பார்கள். அவர்கள் துன்பப்படும் பொழுது, கடவுளைப் பெருமளவில் நினைவு செய்கிறார்கள். மரணிக்கின்ற நேரத்தில் துன்பத்தைப் பெருமளவில் அனுபவம் செய்யும்பொழுது, அவர்கள் ‘ஓ கடவுளே! ஓ இராமா!’ என்று அழைக்கின்றார்கள். நீங்கள் அவ்வாறாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் சந்தோஷமாக உங்களைத் தயார் செய்கின்றீர்கள்: நான் வீட்டிற்குச் செல்வதற்கு, எப்பொழுது இந்தப் பழைய சரீரத்தை விட்டு நீங்குவேன்? பின்னர் நான் அங்கே அழகான சரீரத்தைப் பெறுவேன். உங்களுக்குக் கற்பிக்கின்றவரிலும் பார்க்க முன்னேறிச் செல்வதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். தங்களுக்குக் கற்பித்த ஆசிரியரின் ஸ்திதியிலும் பார்க்க சிறந்த ஸ்திதியைக் கொண்ட சில மாணவர்கள் இருக்கின்றார்கள். தந்தை ஒவ்வொருவரையும் அறிவார். குழந்தைகளாகிய நீங்களும் இதைப் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் என்ன பலவீனங்களைக் கொண்டுள்ளீர்கள் என உங்களைச் சோதித்துப் பாருங்கள். மாயையின் தடைகளை வெற்றி கொள்ளுங்கள். அவற்றிலே சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களால் மேலும் தொடர முடியாதளவிற்கு மாயை மிகவும் சக்திவாய்ந்தவள் என நீங்கள் நினைப்பீர்களாயின், மாயை உங்களை முழுமையாகவே விழுங்கி விடுவாள். “முதலை யானையை விழுங்கியது” என்பது இந்த நேரத்தையே குறிக்கின்றது. முதலையாகிய மாயை நல்ல குழந்தைகளையும் அவர்களால் தங்களை விடுவிக்க முடியாதவாறு முழுமையாகவே விழுங்கி விடுகின்றாள். மாயையினால் அறையப்படுவதில் இருந்து தங்களை நிறுத்தவேண்டும் என அவர்கள் புரிந்து கொண்ட பொழுதும், மாயை அவர்களை அவ்வாறு செய்ய அனுமதிப்பதில்லை. பின்னர் அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, என்னை அவ்வாறு பிடித்துக் கொள்ள வேண்டாமென மாயையிடம் கூறுங்கள். ஆ! ஆனால் இது ஒரு யுத்தகளம், இல்லையா? யுத்தகளத்தில் உங்களை வீழ்த்த வேண்டாம் என உங்கள் எதிராளியிடம் சொல்லுமாறு எவரிடமாவது கூறுவீர்களா? ஒரு போட்டியில் விளையாடும் பொழுது, எனக்குப் பந்து வீசாதீர்கள் என நீங்கள் கூறமாட்டீர்கள். உங்களுக்கு உடனடியாகவே கூறப்படும்: நீங்கள் யுத்தகளத்திற்கு வந்துள்ளீர்கள், அதனால் சண்டை செய்யுங்கள்! மாயை உங்களைத் தூக்கி எறிவாள். நீங்கள் மிக உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியும். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார்; அது ஒரு சிறிய விடயமல்ல! உங்களுடைய ஸ்திதி இப்பொழுது நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப வரிசைக்கிரமமாக உயர்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய எதிர்கால வாழ்க்கையை வைரத்தைப் போன்று பெறுமதி உடையதாக ஆக்கிக்கொள்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும்;. உங்களுடைய தடைகளைத் தொடர்ந்தும் அகற்றுங்கள். எவ்வாறாயினும் நீங்கள் நிச்சயமாகத் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோர வேண்டும். இல்லையெனில் நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் தோல்வி அடைவீர்கள். உதாரணமாக ஒரு செல்வந்தரான தந்தை தனது குழந்தை இந்தக் கல்வியைக் கற்பதைத் தடை செய்தால், அவர் கூறவேண்டும்: “அந்த நூறாயிரங்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? நான் எல்லையற்ற தந்தையிடம் இருந்து உலக இராச்சியத்தை கோர விரும்புகின்றேன்”. அந்த மில்லியன்களும் பில்லியன்களும் தூசாகப் போகின்றன. சிலரின் செல்வம் நிலத்தின் கீழே புதைக்கப்படும், பிறரின் செல்வம் எரிக்கப்படும். முழு உலகமுமே எரியூட்டப்படும். இந்த முழு உலகமும் இராவணனின் தீவு (இலங்கை) ஆகும். நீங்கள் அனைவரும் சீதைகள். இராமர் வந்துள்ளார். முழு உலகமுமே ஒரு தீவாகும். இப்பொழுது இது இராவண இராச்சியம். தந்தை இராவண இராச்சியத்தை அழித்து இராம இராச்சியத்தின் அதிபதிகளாக உங்களை ஆக்குவதற்கு வந்துள்ளார். நீங்கள் உள்ளே பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினால், (கடவுளின்) குழந்தைகளைக் கேளுங்கள் என நினைவு கூரப்படுகின்றது. கண்காட்சிகளில், நீங்கள் அனுபவம் செய்துள்ள சந்தோஷம் பற்றிப் பேசுகின்றீர்கள்; நாங்கள் பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குகின்றோம். நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் பாரதத்திற்குச் சேவை செய்கின்றோம். நீங்கள் எந்தளவிற்கு ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றீர்களோ அந்தளவிற்கு மேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள். பலரும் உங்களுக்கு அறிவுரை வழங்குவார்கள். ஆகையால், அதை அடையாளங் கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில விடயங்களில் மாயை மறைமுகமாகத் தலையீடு செய்கின்றாள். நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். ஆகையினால், உங்களுக்குள்ளே அதிகளவு சந்தோஷம் இருக்கவேண்டும். பாபா, நான் உங்களிடம் இருந்து சுவர்க்கம் எனும் ஆஸ்தியைக் கோரிக்கொள்ள வந்துள்ளேன் என நீங்கள் கூறுகின்றீர்கள். சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுப்பதன் மூலம் நான் சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகவும் சாதாரணப் பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாகவும் மாறுவேன். நீங்கள் அனைவரும் உங்களுடைய கைகளை உயர்த்தி நிச்சயமாகத் தந்தையிடம் இருந்து முழு ஆஸ்தியைக் கோருவோம் எனக் கூறுகின்றீர்கள். இல்லையெனில் நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் இதனை இழந்துவிடுவீர்கள். வருகின்ற எந்தத் தடைகளையும் நீங்கள் நிச்சயமாக அகற்றுவீர்கள். உங்களுக்கு அந்தளவு தைரியம் தேவை. நீங்கள் தைரியமானவர்கள்தானே? உங்களுக்கு உங்கள் ஆஸ்தியைக் கொடுக்க இருப்பவரை நீங்கள் விட்டுச் செல்லப் போவதில்லைத்தானே? சிலர் இங்கே நிரந்தரமாக இருக்கின்றார்கள். மற்றவர்கள் ஓடிவிடுகின்றார்கள். மாயை சில நல்ல குழந்தைகளையும் தின்று விட்டாள்; முதலை அவர்களை முழுமையாக விழுங்கி விட்டது. தந்தை இப்பொழுது கூறுகின்றார். ஓ ஆத்மாக்களே! நான் மிகுந்த அன்புடன் விளங்கப்படுத்துகின்றேன், நான் இந்தத் தூய்மையற்ற உலகைத் தூய்மை ஆக்குவதற்கு வந்துள்ளேன். தூய்மையற்ற இந்த உலகின் மரணம் சற்று முன்னாலே நிற்கின்றது. நான் இப்பொழுது உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆக்குகின்றேன், தூய்மையற்ற அரசர்களுக்கும் அரசர்கள் ஆக்குகின்றேன். ஒற்றைக் கிரீடம் அணிந்த அரசர்கள் ஏன் இரட்டைக் கிரீடம் அணிந்த அரசர்களின் சிலைகளுக்குத் தலை வணங்குகின்றார்கள்? அரைக் கல்பத்துக்குப் பின்னர் அவர்களுடைய தூய்மை மறையும் பொழுது அவர்கள் இராவண இராச்சியத்தினுள் பிரவேசித்து, விகாரமான பூஜிப்பவர்கள் ஆகுகின்றார்கள். ஆகையினால் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: இப்பொழுது எந்தத் தவறும் செய்யாதீர்கள்! மறந்து விடாதீர்கள்! நன்றாகக் கற்றிடுங்கள்! உங்களால் ஒவ்வொரு நாளும் வகுப்புக்குச் சமூகமளிக்க முடியாது விட்டால் பாபாவால் அதற்கான ஆயத்தங்களை உங்களுக்குச் செய்து கொடுக்க முடியும். 7 நாள் பாடநெறியை எடுங்கள், அப்பொழுது உங்களால் முரளியை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் எங்கு சென்றாலும் இரண்டு வார்த்தைகளை நினைவு செய்யுங்கள். இதுவே மகத்தான மந்திரமாகும். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகும்பொழுது, பாவம் செய்கிறீர்கள் அல்லது பாவச் செயலைப் புரிகின்றீர்கள். பாவச்செயல்கள் செய்யாது பாதுகாப்பாக இருப்பதற்கு, உங்கள் புத்தியை எந்தச் சரீரதாரிகளுடனும் அல்லாமல், தந்தையுடன் அன்பாக இணையுங்கள். உங்கள் புத்தியை ஒரேயொருவருடனான யோகத்தில் இணையுங்கள். இறுதிவரை தந்தையை நினைவு செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் எந்தப் பாவமும் செய்ய மாட்டீர்கள். அந்த உக்கிப்போன சரீரங்களின் பெருமையை விட்டுவிடுங்கள். நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. உங்களுடைய 84 பிறவிகளும் இப்பொழுது முடிவடைகின்றன. இந்த ஆத்மாக்களும் சரீரங்களும் இப்பொழுது பழையதாகி விட்டன. இப்பொழுது தமோபிரதானில் இருந்து, சதோபிரதான் ஆகுங்கள், நீங்கள் சதோபிரதான் சரீரங்களைப் பெறுவீர்கள். உங்களைச் சதோபிரதான் ஆக்கும் அக்கறையை மாத்திரமே ஆத்மாக்களாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். தந்தை இலகுவாகக் கூறுகின்றார். சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! இந்த ஓர் அக்கறையையே கொண்டிருங்கள். “பாபா, நான் நிச்சயமாகச் சித்தியடைவேன்” என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள். ஒரு வகுப்பிலுள்ள அனைவரும் புலமைப்பரிசிலைப் பெறமுடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். இருந்த பொழுதும் பலர் தொடர்ந்தும் பெருமளவு முயற்சி செய்கின்றார்கள். ஒரு சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுவதற்கு நீங்கள் முழுமையான முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் ஏன் குறைந்தளவு முயற்சி செய்கின்றீர்கள்? வேறு எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாதீர்கள். போர்வீரர்கள் எதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. சிலர் “பாபா, எனக்குப் பல புயல்களும், கனவுகளும் வருகின்றன” எனக் கூறுகின்றார்கள். அவை அனைத்தும் இடம்பெறும். தொடர்ந்தும் ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் அந்த எதிரியை வெற்றிகொள்ள வேண்டும். சிலவேளைகளில் நீங்கள் உங்களைத் தடுமாற வைக்கின்ற, ஒருபொழுதுமே நினைத்துக்கூடப் பார்த்திராத அல்லது உங்கள் ஆழ்மனதில் இல்லாத அவ்வாறான கனவுகளையும் காண்கிறீர்கள். அவை அனைத்தும் மாயையாகும். நாங்கள் மாயையை வெற்றி கொள்கின்றோம். நாங்கள் அந்த எதிரியிடம் இருந்து எங்கள் இராச்சியத்தை அரைக் கல்பத்துக்குத் திரும்பவும் பெறுகின்றோம். நாங்கள் வேறு எதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. தைரியமானவர்கள் ஒருபொழுதும் எதைப் பற்றியும் வார்த்தைஜாலம் பேசுவதில்லை. அவர்கள் சந்தோஷமாகவே யுத்தத்திற்குச் செல்கிறார்கள். நீங்கள் பெருமளவு சௌகரியத்துடன் உங்கள் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து கோரிக் கொள்கின்றீர்கள். நீங்கள் இந்த அசுத்தமான சரீரத்தைத் துறக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது எங்கள் இனிமையான மௌன வீட்டுக்குச் செல்கின்றோம். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்ல வந்துள்ளேன். என்னை நினைவுசெய்யுங்கள். நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். தூய்மையற்ற ஆத்மாக்களால் திரும்பிச் செல்ல முடியாது. இது புதிய விடயமாகும். அச்சா.
இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. பாவச் செயல்கள் செய்வதில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு, ஒரேயொரு தந்தையுடனான அன்பில் உங்கள் புத்தியை இணையுங்கள். உங்கள் உக்கிப்போன பழைய சரீரத்தின் பெருமைகள் அனைத்தையும் துறந்துவிடுங்கள்.2. நீங்கள் ஒரு போர்வீரர் என்ற விழிப்புணர்வில் இருப்பதனால், எதிரியாகிய மாயையை வெற்றி கொள்ளுங்கள். அவளைப் பற்றி அக்கறை கொள்ளாதீர்கள். மாயை பெருமளவில் மறைமுகமான வழியில் தலையீடு செய்கின்றாள். ஆகையினால் அவளை இனங்கண்டு எச்சரிக்கையாக இருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் முதலாம் இலக்கக் கீழ்ப்படிவான ஆத்மாவாகி, உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் உள்ள தூய்மையில் முழுமையான மதிப்பெண்களைப் பெறுவீர்களாக.உங்களின் மனதின் தூய்மை என்றால், உங்களின் எண்ணங்களிலேனும் எந்தவிதமான தூய்மையின்மையின் சம்ஸ்காரங்களும் வெளிப்படக்கூடாது. சதா ஆத்ம உணர்வுடன் இருப்பது என்றால், சகோதரத்துவத்தின் மேன்மையான விழிப்புணர்வைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். உங்களின் வார்த்தைகளில் சதா சத்தியமும் இனிமையும் இருக்க வேண்டும். உங்களின் செயல்களில் பணிவும் திருப்தியும் மலர்ச்சியும் இருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் இதன் அடிப்படையில் ஓர் இலக்கத்தைப் பெறுகிறீர்கள். இத்தகைய முற்றிலும் தூய்மையான, கீழ்ப்படிவான குழந்தைகளின் புகழைத் தந்தையும் பாடுகிறார். நீங்கள் உங்களின் ஒவ்வொரு செயலின் ஊடாகவும் தந்தையின் பணியை வெளிப்படுத்தும் நெருங்கிய இரத்தினங்கள் ஆவீர்கள்.
சுலோகம்:
உங்களின் உறவுமுறைகள், தொடர்புகள் மற்றும் ஸ்திதியில் இலேசாக இருங்கள். உங்களின் நாளாந்த அட்டவணையைப் பேணுவதில் அல்ல.அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள்.
சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும் அவை நல்லவையோ அல்லது உங்களைத் தளம்பல் அடையச் செய்பவையோ, அகநோக்கில் இருக்கும் ஆத்மாக்களால் எந்தவிதமான சூழல்களுக்கும் அனுசரித்து போக முடியும். நீங்கள் தனியாக இருந்தாலென்ன அல்லது ஒன்றுகூடலில் இருந்தாலென்ன, இரண்டு சூழ்நிலைகளிலும் அனுசரித்து நடப்பதே பிராமண வாழ்க்கையை வாழுதல் எனப்படும்.