16.12.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் கற்று ஏனையோருக்கும் கற்பிக்க வேண்டும். இதில் ஆசீர்வாதங்கள் என்னும் கேள்விக்கே இடமில்லை. தந்தையை நினைவு செய்வதனால், அவர்களின் துன்பம் அனைத்தும் அகற்றப்படும் என அனைவருக்கும் கூறுங்கள்.

கேள்வி:
மனிதர்களுக்கு இருக்கின்ற கவலைகள் எவை? குழந்தைகளாகிய உங்களுக்கு எக்கவலைகளும் இல்லை, ஏன்?

பதில்:
இந்நேரத்தில் மனிதர்களுக்குக் கவலையைத் தவிர வேறு எதுவும் இல்லை. தங்கள் குழந்தை நோய்வாய்ப்படும் பொழுது, அவர்கள் கவலைப்படுகிறார்கள். குழந்தை மரணித்தால், அவர்கள் கவலைப்படுகிறார்கள். ஒருவருக்குக் குழந்தை இல்லாத பொழுது, அவர் கவலைப்படுகிறார். ஒருவர் பெருமளவு தானியத்தைக் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும்போது, பொலீசார் அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரிப்பதற்கு வந்தால், அவர் கவலைப்படுகிறார். இது ஓர் அழுக்கான உலகம்; துன்பத்தை விளைவிக்கும் ஓர் உலகம். குழந்தைகளாகிய நீங்கள், எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில், நீங்கள் சற்குருவாகிய பாபாவைக் கண்டுவிட்டீர்கள். கூறப்பட்டுள்ளது: சற்குருவாகிய பிரபுவைக் கண்டுகொண்டதும், நீங்கள் கவலைகள் அனைத்திலிருந்தும் விடுபட்டவராகி விட்டீர்கள். நீங்கள் இப்பொழுது கவலையில் இருந்து விடுபட்ட, ஓர் உலகிற்குச் செல்கிறீர்கள்.

பாடல்:
நீங்களே அன்புக்கடல்; நாங்கள் ஒரு துளிக்காகத் தவிக்கின்றோம்!

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். நீங்கள் அதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்கிறீர்கள்; நாங்களும் மாஸ்டர் அன்புக்கடல்கள் ஆகவேண்டும். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். ஆகவே, சகோதரர்களாகிய உங்களுக்குத் தந்தை கூறுகிறார்: நான் அன்புக்கடலாக இருப்பதைப் போன்றே, நீங்களும் பேரன்புடன், தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும். தேவர்கள் பேரன்பைக் கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், மக்கள் அவர்களை அதிகளவு நேசித்து, அவர்களுக்கு போக் படைக்கிறார்கள். நீங்கள், இப்பொழுது தூய்மையாக வேண்டும்; இது ஒரு பெரிய விடயமல்ல. இது மிகவும் அழுக்கான உலகம். அனைத்தையும் பற்றிய கவலை உள்ளது. துன்பத்திற்கு மேல் துன்பமேயன்றி, வேறு எதுவுமே இல்லை. இது துன்ப தாமம் என அழைக்கப்படுகிறது. பொலீசார் அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் வரும்பொழுது, அவர்கள் மக்களுக்கு அதிகளவு தொல்லை கொடுக்கிறார்கள், கேட்கவும் வேண்டாம்! ஒருவர் பெருமளவு தானியத்தைக் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும்போது, பொலீசார் வரும்பொழுது, அவருக்கு முகம் வெளிறிப் போகின்றது. இது அத்தகைய அழுக்கான உலகம்; இது நரகம்! அவர்கள் சுவர்க்கத்தை நினைவு செய்கிறார்கள். நரகத்துக்குப் பின் சுவர்க்கமும், சுவர்க்கத்துக்குப் பின் நரகமும் எனச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்குவதற்குத் தந்தை இப்பொழுது வந்து விட்டார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் உங்களை நரகவாசிகளில் இருந்து சுவர்க்கவாசிகளாக மாற்றுகிறார். அங்கு விகாரங்கள் எதுவும் இல்லை, ஏனெனில் அங்கு இராவணன் இல்லை. அதுவே முற்றிலும் விகாரமற்ற, சிவாலயம் ஆகும். இது விபச்சார விடுதி ஆகும். இவ்வுலகில் சந்தோஷமா அல்லது துன்பமா இருக்கின்றது என்பதை அனைவரும் எவ்வாறு அறிந்து கொள்வார்கள் என்பதைச் சற்றுப் பொறுத்திருந்து பாருங்கள். சிறிய பூமியதிர்ச்சி ஏற்படும் பொழுது, மக்களின் நிலைமை என்னவாக ஆகுகிறது என்பதைப் பாருங்கள். சத்தியயுகத்தில் எதைப் பற்றியும் சிறிதளவு கவலையேனும் இல்லை. இங்கு, பல்வேறு கவலைகள் இருக்கின்றன. அவர்களின் குழந்தை நோய்வாய்ப்படும் பொழுது, அவர்கள் கவலைப்படுகிறார்கள்; குழந்தை மரணித்தால், அவர்கள் கவலைப்படுகிறார்கள். கவலையைத் தவிர வேறு எதுவுமே இல்லை. பிரபு மாத்திரமே உங்களை அனைத்துக் கவலைகளுக்கும் அப்பால் அழைத்துச் செல்கிறார். அனைவரினதும் பிரபு ஒரேயொருவரே. நீங்கள் சிவபாபாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். இந்தப் பிரம்மா ஒரு குரு அல்லர். இவரே பாக்கிய இரதம். தந்தை பாக்கிய இரதத்தின் மூலம் எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவரே ஞானக்கடல். நீங்களும், முழு ஞானத்தையும் பெற்று விட்டீர்கள். நீங்கள் அறியாத தேவர் ஒருவரேனும் இல்லை. நீங்கள் உண்மை என்றால் என்ன, பொய்மை என்றால் என்ன என்பதை இனங்கண்டு விட்டீர்கள். இது உலகிலுள்ள எவருக்கும் தெரியாது. அது சத்திய பூமியாக இருந்தது, இப்பொழுது அது பொய்மையான பூமியாகி விட்டது. சத்திய பூமியை ஸ்தாபித்தவர் யார் என்பதோ அல்லது எப்பொழுது ஸ்தாபித்தார் என்பதோ எவருக்கும் தெரியாது. இது அறியாமையின் காரிருள் ஆகும். தந்தை வந்து, உங்களுக்கு ஒளியைக் கொடுக்கிறார். மக்கள் பாடுகிறார்கள்: உங்களுக்கு மாத்திரமே உங்கள் வழிகளையும், முறைகளையும் தெரியும். அந்த ஒரேயொருவரே அதிமேலானவர், ஏனைய அனைவரும் படைப்புக்கள். அவரே, எல்லையற்ற தந்தையாகிய படைப்பவர். இரண்டு முதல் நான்கு குழந்தைகள் உள்ளவர்கள், எல்லைக்கு உட்பட்ட தந்தையர்கள். அவர்களுக்குக் குழந்தைகள் எவரும் இல்லாத பொழுது, கவலைப்படுகிறார்கள். அங்கு, அவ்வாறு எதுவுமே இல்லை. அங்கு, உங்களுக்கு நீண்ட ஆயுள் இருப்பதுடன், மிகவும் செல்வந்தர்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் ஆசீர்வாதங்களைக் கொடுப்பதில்லை; இது ஒரு கல்வியாகும். நீங்கள் ஆசிரியர்கள். நீங்கள் அவர்களுக்குக் கூறுங்கள்: சிவபாபாவை நினைவு செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதுவும் ஒரு கற்பித்தலே. இது இலகு யோகமும், நினைவும் எனப்படுகிறது. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், சரீரங்கள் அழியக்கூடியவை. தந்தை கூறுகிறார்: நானும் அழிவற்றவர். வந்து, தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குமாறு நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். ஆத்மாக்களே அதைக் கூறுகின்றனர். கூறப்பட்டுள்ளது: தூய்மையற்ற ஆத்மா, மகாத்மா. தூய்மை இருக்கும் பொழுது, அமைதியும், சந்தோஷமும் உள்ளன. இது புனிதமான தேவாலயங்கள் அனைத்திலும் அதிபுனிதமானது. விகாரத்தில் ஈடுபடுபவர்கள் இங்கு பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு தேவதை ஒரு மனிதனை இரகசியமாக இந்திர சபைக்கு அழைத்து வந்த கதையொன்று உள்ளது. அவர் (தேவதை) கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, சபிக்கப்பட்டுக் கல்லாக்கப்பட்டார். இங்கு, சபிக்கப்படுவதற்கான கேள்வியே இல்லை. இங்கு, இந்த ஞான மழையே பொழிகின்றது. இப்புனித இடத்திற்குத் தூய்மை அற்றவர்களால் வர முடியாது. இங்கு பெரிய மண்டபம் ஒன்று இருக்கின்ற காலமும் வரும். இதுவே புனிதமான இடங்கள் அனைத்திலும் அதிபுனிதமான இடம். நீங்களும் புனிதமானவர் ஆகுகிறீர்கள். எவ்வாறு விகாரமின்றி உலகம் தொடர முடியும் என மக்கள் வினவுகிறார்கள். இது எவ்வாறு சாத்தியம்? அவர்கள் அனைத்து விடயங்களையும் பற்றிய தங்கள் சொந்த ஞானத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேவர்களின் விக்கிரகங்கள் முன்னிலையில் சென்று கூறுகிறார்கள்: நீங்கள் சகல தெய்வீகக் குணங்களினாலும் நிறைந்தவர்கள், நாங்கள் பாவிகள். சுவர்க்கமே அதிபுனிதமானது. அவர்களே 84 பிறவிகளை எடுத்த பின்னர், அதிபுனிதமானவர்கள் ஆகுகிறார்கள். அது தூய உலகம், இது தூய்மையற்ற உலகம். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் பொழுது, பெருஞ் சந்தோஷத்தில் கொண்டாடுகிறார்கள். ஆனால், அக்குழந்தை நோய்வாய்ப்படும் பொழுது, அவர்களின் முகங்கள் வெளிறி விடுகின்றன. குழந்தை மரணித்தால், அவர்களுக்கு முழுமையாகவே பித்துப் பிடித்து விடுகின்றது. சிலர் அவ்வாறு ஆகுகிறார்கள். சிலர் அவ்வாறான மக்களையும் பாபாவிடம் அழைத்து வந்து, பாபாவிடம் கூறுகிறார்கள்: பாபா, இவருடைய குழந்தை மரணித்து விட்டதால், இவர் பித்துப் பிடித்தவராகி விட்டார். இது துன்ப உலகமாகும். இப்பொழுது தந்தை உங்களைச் சந்தோஷ உலகிற்கு அழைத்துச் செல்கின்றார். ஆகவே, நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். உங்களிடம் சிறந்த தெய்வீகக் குணங்கள் இருப்பதும் அவசியம். எதையாவது செய்பவர்கள் அதன் பிரதிபலனைப் பெறுவார்கள். ஒரு தெய்வீகமான குணாதிசயமும் தேவைப்படுகிறது. பாடசாலைகளில் ஒரு பதிவேட்டில் அவர்கள் ஒவ்வொருவருடைய நடத்தையையும் குறித்துக் கொள்கிறார்கள். சிலர் தொடர்ந்தும் வெளியில் தடுமாறித் திரிகிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோருக்குப் பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறார்கள். இப்பொழுது தந்தை உங்களை அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் அழைத்துச் செல்லவுள்ளார். அது மௌனக் கோபுரம் என அழைக்கப்படுகிறது; அதாவது, மௌனச் சிகரம் என அழைக்கப்படுகிறது. ஆத்மாக்கள் வசிக்கும் இடம் மௌனக் கோபுரம் ஆகும். சூட்சும உலகில் ‘அசைவு’ உள்ளது. நீங்கள் வெறுமனே அதன் காட்சிகளைப் பெறுகிறீர்கள், ஏனெனில் அங்கு எதுவுமே இல்லை. எவ்வாறு, சத்தியயுகத்தில், நீங்கள் வயோதிபராக இருக்கும்பொழுது, உங்கள் தோலைப் பெருஞ் சந்தோஷத்தில் நீக்குகிறீர்கள் என்பதற்கான காட்சிகளையும் சில குழந்தைகள் கண்டிருந்தார்கள். இது 84 பிறவிகளை வயதான, ஒரு பழைய தோல் ஆகும். தந்தை கூறுகிறார்: நீங்கள், தூய்மையாக இருந்தீர்கள், இப்பொழுது தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். உங்களைத் தூய்மை ஆக்குவதற்கு, தந்தை இப்பொழுது வந்துள்ளார். நீங்கள் என்னை அழைத்தீர்கள். உயிர்வாழும் ஆத்மாக்களே தூய்மை அற்றவர்களாகி விட்டார்கள், பின்னர் அவர்கள் மீண்டும் தூய்மை ஆகுவார்கள். நீங்கள் தேவ வம்சத்திற்;கு உரியவர்களாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது அசுர வம்சத்திற்கு உரியவர்களாக இருக்கிறீர்கள். அசுர வம்சத்திற்கும், இறை வம்சத்திற்கும், அதாவது, தேவ வம்சத்திற்கும் இடையில் அதிகளவு வித்தியாசம் உள்ளது. இது உங்கள் பிராமணக் குலமாகும். ஓர் இராச்சியமுள்ள இடத்திலேயே ஒரு வம்சமும் உள்ளது. இங்கு இராச்சியம் இல்லை. கீதையில் பாண்டவர்களினதும், கௌரவர்களினதும் இராச்சியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, ஆனால் உண்மையில் அவை இருப்பதில்லை. நீங்கள் ஆன்மீகக் குழந்தைகள். தந்தை கூறுகிறார்: இனிய குழந்தைகளே, மிகவும் இனிமையானவர்கள் ஆகுங்கள். அன்புக்கடல்கள் ஆகுங்கள். சரீர உணர்வினால், நீங்கள் அன்புக்கடல்கள் ஆகுவதில்லை. இதனாலேயே பெருமளவு தண்டனை அனுபவம் செய்யப்படும். அவ்வேளையில், அது தண்டனையைப் பெற்று விட்டதன் பின்னர், ஒரு சிறு துண்டு சப்பாத்தி கொடுக்கப்பட்டதைப் போன்று இருக்கும். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள், ஆனால் பெருமளவு தண்டனையை அனுபவித்த பின்னரேயே செல்வீர்கள். எவ்வாறு தண்டனை கொடுக்கப்படுகிறது என்பதற்கான காட்சிகளையும் குழந்தைகளாகிய நீங்கள் கண்டீர்கள். பாபா விளங்கப்படுத்துகிறார்: அனைவருடனும் பெருமளவு அன்புடன் தொடர்பு கொள்ளுங்கள்; இல்லாவிடின், அங்கு கோபத்தின் சுவடு இருக்க முடியும். உங்களை நரகத்திலிருந்து அகற்றி, சுவர்க்கத்திற்;கு அழைத்துச் செல்கின்ற தந்தையை நீங்கள் கண்டுகொண்டீர்கள் என்பதில் நன்றி உடையவர்களாக இருங்கள். தண்டனை பெறுவது மிகவும் தீயதாகும். சத்தியயுகத்தில் அன்பு இராச்சியம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்; அங்கு அன்பைத் தவிர வேறு எதுவுமே இல்லை. இங்கு, அற்ப விடயங்களுக்காக, ஒரு நபரின் முகம் மாறுகிறது. தந்தை கூறுகிறார்: நான் தூய்மையற்ற உலகிற்கு வந்து விட்டேன். தூய்மையற்ற உலகத்திற்கு வருமாறு நான் ஓர் அழைப்பிதழைப் பெற்றுள்ளேன். பின்னர், தந்தை அனைவரையும் அமிர்தத்தை அருந்துமாறு அழைக்கிறார். அமிர்தத்தையும், நஞ்சையும் பற்றிய ஒரு புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. அப்புத்தகத்தை எழுதியவர் மிகவும் நன்கு பிரசித்தி பெற்றவர், அவர் ஒரு பரிசைப் பெற்றுக் கொண்டார். அவர் என்ன எழுதியுள்ளார் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு அருந்துவதற்கென இந்த ஞான அமிர்தத்தைக் கொடுக்கிறேன். ஆகவே, நீங்கள் ஏன், பின்னர் நஞ்சை அருந்துகிறீர்கள்? ரக்ஷா பந்தன் பண்டிகையும் இவ்வேளையின் ஒரு ஞாபகார்த்தம் ஆகும். இந்த இறுதிப் பிறவியில், தூய்மை ஆகுவதற்கான ஒரு சத்தியத்தைச் செய்யுமாறு தந்தை அனைவருக்கும் கூறுகிறார். நீங்கள் தூய்மையாக இருந்து, யோகத்தில் நிலைத்திருந்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் உங்கள் இதயத்தை வினவ வேண்டும்: நான் நினைவில் நிலைத்திருக்கிறேனா அல்லது இல்லையா? தங்களின் சிறு குழந்தைகளை நினைவுசெய்யும் பொழுது, மக்கள் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள். ஒருவரையொருவர் நினைவு செய்வதில் கணவனும் மனைவியும் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள். அசரீரியான கடவுளின் வாசகங்கள் உள்ளன. அவர் யார்? தந்தை கூறுகிறார்: இவருடைய 84வது பிறவியின் பின்னர், இவரை மீண்டும் ஒருமுறை சுவர்க்க அதிபதி ஆக்குகிறேன். விருட்சம் இன்னமும் சிறிதாகவே உள்ளது. மாயையின் பல புயல்கள் வருகின்றன. இவை மிகவும் மறைமுகமான விடயங்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நினைவு யாத்திரையில் நிலைத்திருந்து, தூய்மையாக இருங்கள். முழு இராச்சியமும் இங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும். கீதையில், அவர்கள் ஒரு யுத்தத்தைச் சித்தரித்து, பின்னர் பாண்டவர்கள் மலைகளில் உருகியதாகக் காட்டியுள்ளார்கள். எவ்வாறாயினும், அதிலிருந்து பெறுபேறு எதுவும் இல்லை. இப்பொழுது உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றித் தெரியும். தந்தையே ஞானக்கடல். அவரே பரமாத்மா. ஓர் ஆத்மாவின் ரூபம் என்ன என்பது எவருக்கும் தெரியாது. இக்கருத்து உங்கள் புத்தியில் உள்ளது. உங்களிற் சிலர் இதை மிகச்சரியாகப் புரிந்து கொள்ளாமல், வினவுகிறீர்கள்: எவ்வாறு ஒரு புள்ளியை நினைவுசெய்ய முடியும்? அவர்கள் முற்றிலும் எதையும் புரிந்து கொள்வதில்லை. எவ்வாறாயினும், தந்தை கூறுகிறார்: அவர்கள் ஒரு சிறிதளவைச் செவிமடுத்திருந்தாலும், இந்த ஞானம் ஒருபொழுதும் அழிக்கப்படுவதில்லை. சிலர் இந்த ஞானப் பாதைக்கு வந்து, மீண்டும் சென்று விடுகிறார்கள். ஆனால், அவர்கள் சிறிதளவைச் செவிமடுத்துள்ள காரணத்தினால், நிச்சயமாகச் சுவர்க்கத்துக்குச் செல்வார்கள். பெருமளவைச் செவிமடுத்து, அதைக் கிரகிப்பவர்கள் இராச்சியத்தில் ஒருவர் ஆகுவார்கள். ஒரு சிறிதளவை மாத்திரமே செவிமடுப்பவர்கள், பிரஜைகளில் ஒருவர் ஆகுவார்கள். ஓர் இராச்சியத்தில் அரசர், அரசி, பிரஜைகள் இருக்கிறார்கள். அங்கு ஆலோசகர்கள் இல்லை. இங்கு, விகாரத்தில் ஈடுபடுகின்ற அரசர்கள் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். தந்தை உங்களுடைய புத்தியை மிகவும் பரந்ததாகவும், எல்லையற்றதாகவும் ஆக்குகிறார். அங்கு ஆலோசகர்களை நியமிக்கத் தேவையில்லை. சிங்கமும், ஆட்டுக்குட்டியும் ஒன்றாக நீர் அருந்துகின்றன. ஆகவே தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் உவர்நீர் போன்று ஆகக்கூடாது; பாலும், சீனியும் போன்றிருங்கள். பாலும், சீனியும், ஆகிய இரண்டும் நல்லதே. எவருடனும் முரண்பாடு எதனையும் கொண்டிருக்காதீர்கள். இங்கு, மக்கள் அதிகளவு சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறார்கள். இது ஆழ்நரகம். அவர்கள் தொடர்ந்தும் நரகத்தில் மூச்சுத் திணறுகிறார்கள். உங்களை அதிலிருந்து மீட்பதற்குத் தந்தை வந்துள்ளார். சிலசமயங்களில் மீட்கப்படும் பொழுது, நீங்கள் சிக்கிக் கொள்கிறீர்கள். சிலர் சென்று ஏனையோரை மீட்பதற்கு முயற்சிக்கிறார்கள், ஆனால் அவர்களே சிக்கிக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில், பலர் பெரிய முதலையான, மாயையினால் பீடிக்கப்பட்டார்கள்; அவள் முழுமையாகவே அவர்களை விழுங்கி விட்டாள். அவர்களின் சுவடேதும் எஞ்சியிருக்கவில்லை. சிலரிடம் இன்னமும் ஞானத்தின் சுவடுகள் இருப்பதனால், அவர்கள் மீண்டும் திரும்ப வருகிறார்கள். சிலர் முற்றாகவே முடிவடைந்து விடுகிறார்கள். இங்கு, அனைத்தும் நடைமுறை ரீதியாகவே நிகழ்கிறது. நீங்கள் வரலாற்றைக் கேட்டிருப்பின், வியப்படைவீர்கள். ஒரு பாடல் உள்ளது: நீங்கள் எங்களை நேசித்தாலும் அல்லது எங்களை நிராகரித்தாலும், நாங்கள் ஒருபொழுதும் உங்கள் வாசற்கதவை விட்டு நீங்க மாட்டோம். பாபா ஒருபொழுதும் அவருடைய உதடுகளின் மூலம் அத்தகைய விடயங்களைக் கூறுவதில்லை. அவர் உங்களுக்கு அதிகளவு அன்புடன் கற்பிக்கிறார். உங்கள் இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன்னிலையில் உள்ளன. அதிமேலான தந்தை உங்களை அவ்வாறு (விஷ்ணு) ஆக்குகிறார். அதே விஷ்ணு, பின்னர் பிரம்மா ஆகுகிறார். அவர் ஒரு விநாடியில் ஜீவன்முக்தியைப் பெற்றார், அவர் 84 பிறவிகளின் பின்னர் அவ்வாறு ஆகினார். அது உங்களுக்கும் பொருந்துகின்றது. நீங்கள் அந்தப் புகைப்படங்களையும் எடுத்துள்ளீர்கள். நீங்கள் பிரம்மாவின் குழந்தைகளாகிய, பிராமணர்கள். இவ்வேளையில் உங்களிடம் கிரீடங்கள் இல்லை; நீங்கள் அவற்றை எதிர்காலத்தில் பெறுவீர்கள். இதனாலேயே உங்களுடைய அப்புகைப்படம் இன்னமும் வைக்கப்பட்டுள்ளது. தந்தை வந்து, உங்களை இரட்டைக் கிரீடங்கள் அணிந்தவர்கள் ஆக்குகிறார். உண்மையிலேயே, முன்னர் உங்களுக்கு ஐந்து விகாரங்களும் இருந்ததை நீங்கள் உணர்கிறீர்கள். (நாரதரின் உதாரணம்.) நீங்களே, முதலாவது பக்தர்கள். தந்தை இப்பொழுது உங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகிறார். அவர் உங்களைத் தூய்மை அற்றவரிலிருந்து முற்றிலும் தூய்மையானவர்கள் ஆக்குகிறார். தந்தை உங்களிடம் இருந்து எதையும் பெற்றுக் கொள்வதில்லை. சிவபாபா உங்களிடம் இருந்து எதைப் பெற்றுக் கொள்வார்? நீங்கள் எவற்றையாவது சிவபாபாவின் பண்டாரியில் (பணப்பெட்டி) இடுகிறீர்கள். நான் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர்; சிவபாபாவுடனேயே உங்களுடைய கொடுக்கல், வாங்கல் கணக்குகள் அனைத்தும் உள்ளன. நான் கற்று, பின்னர் கற்பிக்கிறேன். அனைத்தையும் கொடுத்து விட்ட ஒருவர் ஏனையோரிடம் இருந்து எதனைப் பெறுவார்? எதன் மீதும் பற்று எஞ்சியிருக்கக் கூடாது. மக்கள் பாடுகிறார்கள்: இன்ன இன்னார் சுவர்க்கத்துக்குச் சென்று விட்டார். ஆகவே, பின்னர், நீங்கள் ஏன் நரகத்தின் உணவையும், பானத்தையும் அவருக்கு ஊட்டுகிறீர்கள்? அது அறியாமை. நீங்கள் அனைவரும் நரகத்தில் இருந்தால், அப்பொழுது, மறுபிறவியும் நரகத்திலேயே இருக்கும். நீங்கள் இப்பொழுது அமரத்துவ தாமத்திற்குச் செல்கிறீர்கள். இது குத்துக்கரண விளையாட்டாகும். பிராமணர்களாகிய நீங்கள் உச்சிக்குடுமிகள், பின்னர் நீங்கள் தேவர்களாகி, அதன்பின்னர் சத்திரியர்கள் ஆகுவீர்கள். ஆகவே, தந்தை விளங்கப்படுத்துகிறார்: மிகவும் இனிமையானவர்கள் ஆகுங்கள். நீங்கள் உங்களைச் சீர்திருத்தாது விட்டால், அது உங்கள் பாக்கியம் எனக் கூறப்படும். நீங்கள் உங்களுக்கே ஓர் இழப்பை ஏற்படுத்துகிறீர்கள். நீங்கள் முற்றாகவே உங்களைச் சீர்திருத்திக் கொள்ளாதுவிடின், கடவுளால் என்ன முயற்சியைச் செய்ய முடியும்? தந்தை கூறுகிறார்: நான் ஆத்மாக்களுடன் பேசுகிறேன். பரமாத்மாவான அழிவற்ற தந்தையே அழிவற்ற ஆத்மாக்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். ஆத்மாக்கள் தங்கள் செவிகளின் மூலம் செவிமடுக்கிறனர். எல்லையற்ற தந்தை இந்த ஞானத்தைப் பேசுகிறார். அவர் உங்களைச் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுகின்றார். உங்களுக்குப் பாதையைக் காட்டுவதற்கு, பரம வழிகாட்டி இங்கு அமர்ந்திருக்கிறார். ஸ்ரீமத் கூறுகிறது: தூய்மையாகி, என்னை நினைவு செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். பின்னர், நீங்கள் 84 பிறவிகளை எடுத்தீர்கள். தந்தை இவருக்கு விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் சதோபிரதானாக இருந்து, இப்பொழுது தமோபிரதானாகி விட்டீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை என்னை நினைவுசெய்யுங்கள். இது யோகத்தீ என அழைக்கப்படுகின்றது. இப்பொழுது உங்களுக்கு இந்த ஞானம் உள்ளது. சத்தியயுகத்தில் எவரும் என்னை நினைவு செய்வதில்லை. இந்நேரத்திலேயே என்னை நினைவு செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். வேறு வழி இல்லை. இது ஒரு பாடசாலை. இது விஷ்வ வித்தியாலயா, உலகப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது. வேறு எவருக்கும் படைப்பவரினதோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதோ ஞானம் இல்லை. சிவபாபா கூறுகிறார்: இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் கூட இந்த ஞானத்தைக் கொண்டிருப்பதில்லை. அங்கு, அது வெகுமதியாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் அன்பு இராச்சியத்துக்குச் செல்ல வேண்டும். ஆகவே, ஒருவரோடு ஒருவர் பாலும் சீனியும் போன்றிருங்கள். ஒருபொழுதும் உப்புநீர் போலாகவோ அல்லது ஒருவரோடு ஒருவர் முரண்பாட்டைக் கொண்டிருக்கவோ வேண்டாம். நீங்கள் உங்களைச் சீர்திருத்த வேண்டும்.

2. சரீர உணர்வைத் துறந்து, மாஸ்டர் அன்புக்கடல்கள் ஆகுங்கள். உங்கள் நடத்தையைத் தெய்வீகமாக ஆக்குங்கள். ஒருவரோடு ஒருவர் மிகவும் இனிமையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய மனம் மூலம் மகாதானியாகி, உங்கள் சுதந்திரமான மனம் மூலம் ஆத்மாக்கள் அனைவருக்கும் அமைதி எனும் தானத்தைக் கொடுப்பீர்களாக.

சில தாய்மார்கள் பௌதீகமாகப் பந்தனத்தில் இருந்த போதிலும், தங்கள் மனதில் சதா விடுபட்டவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே தங்கள் மனோபாவங்கள் மூலமும், தூய எண்ணங்கள் மூலமும் உலகின் சூழலை மாற்றுவதற்கான சேவையை அவர்களால் செய்ய முடியும். இந்நாட்களில், உலகிலுள்ள அனைவருக்கும் மன அமைதி தேவையாகும். உங்கள் விடுபட்டிருக்கின்ற மனங்கள் மூலம் ஆத்மாக்களாகிய உங்களால் அமைதி அதிர்வலைகளைப் பரப்ப முடியும். அமைதிக் கடலான, தந்தையின் நினைவில் நீங்கள் நிலைத்திருப்பதனால், அமைதிக் கதிர்கள் எங்கும் இயல்பாகவே பரவும். இவ்விதமாக அமைதித் தானம் செய்பவர்களே தங்கள் மனங்கள் மூலம் மகாதானிகளாக இருக்கின்றார்கள்.

சுலோகம்:
உங்கள் அன்பு ரூபத்தின் அனுபவங்களை நீங்கள் கூறுகின்றீர்கள், ஆனால் இப்பொழுது உங்கள் சக்தி ரூபத்தின் அனுபவங்களைக் கூறுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.

ஒவ்வொரு பிராமணரும் இப்பொழுது தந்தை பிரம்மாவைப் போல் ஓர் உயிர் வாழும் ரூபமாக வேண்டும். ஒரு வெளிச்ச வீட்டினதும் சக்தி வீட்டினதும் காட்சிப்பொருள் ஆகுங்கள். எண்ணத்தின் சக்தி மற்றும் மௌனம் பற்றிய சொற்பொழிவுகளைத் தயாரித்து, உங்கள் கர்மாதீத ஸ்திதியில் ஆசீர்வாதங்களை அருள்கின்ற ரூபமாக இருக்கின்ற பாகத்தை நடியுங்கள். அப்பொழுது நீங்கள் முழுமைக்கு அண்மித்து வருவீர்கள். அப்பொழுது ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் ஒரு பணியை மேற்கொள்ளும் இடமெங்கும் கம்பியில்லாத் தொகுதி மூலம் உங்களால் வழிகாட்டல்களைக் கொடுக்க இயலும். உங்கள் கர்மாதீத ஸ்திதியின் அடிப்படையில், உங்களுக்கு ஓர் எண்ணம் தோன்றும் பொழுது, அது ஒரு விநாடியில் நீங்கள் விரும்பிய இடத்திற்குச் சென்றடையும்.