19.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதும், மற்றவர்களுக்கு அதனை நினைவுபடுத்துவதுமே பிரதான சேவையாகும். நீங்கள் எவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து, அவர்களுக்கு நன்மை பயக்க வேண்டும்.

பாடல்:
எந்தவொரு சிறிய பழக்கம் உங்களைப் பெரியளவில் கீழ்ப்படிவற்றவர் ஆக்குகின்றது? அதிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான வழிமுறை என்ன?

பதில்:
எதையாவது திருடிவிட்டு, அதனை மறைக்கும் பழக்கம் ஒருவரிடம் இருக்குமாயின், அது மிகப்பெரிய கீழ்ப்படிவின்மையாகும். வைக்கோலைத் திருடுபவர்களால் நூறாயிரத்தையும் திருட முடியும் எனக் கூறப்படுகின்றது. ஒருவர் பசியிலிருக்கும்பொழுது, பேராசை காரணமாக எதனையாவது முதலில் அனுமதியைப் பெறாமல் உண்பாராயின், அவ்விதமாகத் திருடுவதும் மிகவும் தீய பழக்கமேயாகும். அப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு, தந்தை பிரம்மாவைப் போன்று ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகுங்கள். நீங்கள் அத்தகைய பழக்கங்களைக் கொண்டிருந்தால், தந்தையிடம் அவை பற்றி நேர்மையாகக் கூறுங்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் எல்லையற்ற தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் இறை குடும்பத்துக்கு உரியவர்கள். கடவுள் அசரீரியானவர். நீங்கள் இங்கு ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். இதில், விஞ்ஞானத்தின் அகங்காரம் அல்லது ஹத்தயோகம் செய்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. இது புத்தியால் செய்யப்பட வேண்டிய விடயமாகும். இச்சரீரத்தால் செய்யப்பட வேண்டியது எதுவுமே கிடையாது. ஹத்தயோகத்தில், நீங்கள் அனைத்தையும் சரீரத்தினாலேயே செய்ய வேண்டும். இங்கு, நாங்கள் எங்களைத் தந்தையின் குழந்தைகளாகக் கருதியவாறு அவர் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றோம். தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். முதலில், அவர் கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படும். அத்துடன், சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றி, மற்றவர்களுக்குச் சேவை செய்து அவர்களை உங்களைப் போன்று ஆக்குங்கள். தந்தை இங்கமர்ந்திருந்தவாறு, நீங்கள் ஒவ்வொருவரும் என்ன சேவை செய்கின்றீர்கள் எனப் பார்க்கின்றார். நீங்கள் பௌதீகச் சேவை செய்கின்றீர்களா, சூட்சுமமான சேவை செய்கின்றீர்களா அல்லது பிரதானமான சேவை செய்கின்றீர்களா என அவர் பார்க்கின்றார். தந்தை ஒவ்வொருவரையும் பார்க்கின்றார்: நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கின்றீர்களா? இதுவே பிரதான விடயமாகும். நீங்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கின்றீர்களா? என்னை நினைவு செய்தால் பிறவிபிறவியாக நீங்கள் செய்த பாவங்கள் அழிக்கப்படும் எனத் தந்தை கூறுகின்றார் என்பதை நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துகின்றீர்களா? எந்தளவிற்கு நீங்கள் இச்சேவையில் ஈடுபட்டிருக்கின்றீர்கள்? அனைவரிலும் அதிகூடிய சேவை செய்பவர் யார் எனக் காண்பதற்கு நீங்கள் ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்க்கின்றீர்களா? நான் ஏன் அவரைவிட அதிகச் சேவை செய்யக்கூடாது? என்னால் நினைவு யாத்திரையில்; அவரைவிட வேகமாகச் செல்ல முடிகின்றதா? பாபா ஒவ்வொருவரையும் பார்க்கின்றார். பாபா அனைவரிடமும் அவரவர் செய்கின்ற சேவை பற்றிய செய்திகளைக் கேட்கின்றார். நீங்கள் மற்றவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதனால், அவர்களுக்கு நன்மை செய்கின்றீர்களா? நீங்கள் உங்களது நேரத்தை வீணாக்குவதில்லை, இல்லையா? இதுவே பிரதான விடயமாகும். இந்நேரத்தில் அனைவரும் அநாதைகள். எவருமே எல்லையற்ற தந்தையை அறியார்கள். நீங்கள் நிச்சயமாகத் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறப்போகின்றீர்கள். முக்திதாமம், ஜீவன்முக்தி தாமம் எனும் இரு தாமங்களும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளன. நீங்கள் அனைவரும் இப்பொழுது கற்கின்றீர்கள் என்பதையும், பின்னர், நீங்கள் சுவர்க்கத்திற்குச் சென்று, ஜீவன்முக்தி எனும் உங்கள் இராச்சியப் பாக்கியத்தைப் பெறுவீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறாயினும், வெவ்வேறு சமயங்களை சேர்ந்த பல ஆத்மாக்களில் எவருமே எஞ்சி இருக்கமாட்டார்கள். பாரதத்தில் நாங்கள் மாத்திரமே இருப்போம். தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய நீங்கள் எதை உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கின்றார். இங்கே, நீங்கள் சங்கமயுகத்தில் இருப்பதால், உங்கள் உணவும், பானமும் நிச்சயமாக மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். நீங்கள் எதிர்காலத்திற்காக, சகல நற்குணங்களும் நிறைந்தவர்களாகவும், 16 சுவர்க்கக்கலைகள் நிறைந்தவர்களாகவும், முற்றிலும் விகாரமற்றவர்களாகவும் ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். இப்புகழ் சரீரத்திலுள்ள ஆத்மாக்களுக்கே உரியவை. அது ஆத்மாவிற்கு மாத்திரம் உரிய புகழல்ல. ஒவ்வொரு ஆத்மாவும் தான் இங்கு வரும்பொழுது நடிக்கின்ற, தனக்குரிய பாகத்தைக் கொண்டிருக்கின்றார். உங்கள் புத்தியில் இலக்கும், இலட்சியமும் உள்ளன: நாங்கள் அவர்களைப் போன்று ஆகவேண்டும். தந்தையின் கட்டளைகள்: குழந்தைகளே, தூய்மையாகுங்கள். அவர்கள் வினவுகின்றனர்: நாங்கள் எவ்வாறு தூய்மையாக இருக்க முடியும்? மாயையின் பல புயல்களும் வருவதால், அவர்களது புத்தி பல்வேறு இடங்களிலும் ஈர்க்கப்படுகின்றது. எவ்வாறு நாங்கள் அவை அனைத்தையும் துறக்க முடியும்? குழந்தைகளாகிய உங்களது புத்தி சதா செயற்படுகின்றது. வேறு எவரது புத்தியும் இவ்வாறு செயற்படுவதில்லை. நீங்கள் தந்தையையும், ஆசிரியரையும், குருவையும் கண்டுவிட்டீர்கள். கடவுளே அதிமேலானவர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவரே தந்தையும், ஆசிரியரும், ஞானக்கடலும் ஆவார். தந்தை ஆத்மாக்களாகிய எங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். சத்திய யுகத்தில் வெகு சில தேவர்களே உள்ளனர். இவ்விடயங்கள் உங்களைத் தவிர வேறு எவரது புத்தியிலும் இல்லை. விநாசத்தின் பின்னர், உங்களில் சிலரே எஞ்சியிருப்பீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. அந்நேரத்தில் வேறு சமயங்களோ, தேசங்களோ எதுவுமே இருக்கமாட்டாது. நாங்கள் மாத்திரமே உலகின் அதிபதிகளாக இருப்போம். எங்களுக்குச் சொந்தமான ஒரேயொரு இராச்சியம் மாத்திரமே இருக்கும். அது பெருமளவு சந்தோஷம் நிறைந்த இராச்சியமாக இருக்கும். எவ்வாறாயினும், அவர்கள் வெவ்வேறு அந்தஸ்தை உடையவர்களாக இருப்பார்கள். எங்கள் அந்தஸ்து எவ்வாறிருக்கும்? நான் எவ்வளவு ஆன்மீகச் சேவையைச் செய்கின்றேன்? தந்தையும் இதனைக் கேட்கின்றார். பாபா எங்களுக்குள் உள்ள அனைத்தையும் அறிவார் என்றல்ல. குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் என்ன செய்கின்றீர்கள் என்பதை நீங்களே புரிந்துகொள்ள முடியும். இந்த தாதாவே ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் முதற்தரமான சேவை செய்பவர் என்பதை நீங்கள் நிச்சயமாகப் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். தந்தை மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, சரீர உணர்வைத் துறந்துவிடுங்கள். எவ்வளவு நேரத்திற்கு நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுகின்றீர்கள்? நீங்கள் ஓர் ஆத்மா என்பதை நீங்கள் உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதன் மூலமே உங்கள் படகு அக்கரை செல்லும். நினைவின் மூலம் நீங்கள் பழைய உலகிலிருந்து புதிய உலகிற்குச் செல்வீர்கள். இப்பொழுது சொற்ப காலமே எஞ்சியுள்ளது. பின்னர், நாங்கள் எங்கள் சந்தோஷ தாமத்துக்குச் செல்வோம். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே பிரதான ஆன்மீக சேவையாகும். இதுவே அனைத்திலும் இலகுவானதாகும். பௌதீகச் சேவை செய்வதற்கும், உணவைத் தயாரித்து உண்பதற்கும் முயற்சி தேவை. இங்கு முயற்சி என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருத வேண்டும். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். சரீரங்கள் அழியக்கூடியவை. ஆத்மா முழுப் பாகத்தையும் நடிக்கின்றார். ஒரேயொரு தடவை, விநாச காலத்தின்பொழுதே தந்தை வந்து இக்கற்பித்தல்களை உங்களுக்குக் கொடுக்கின்றார். புதிய உலகம் தேவர்களுக்குரியது. நீங்கள் நிச்சயமாக அவ்வுலகிற்குச் செல்ல வேண்டும். ஏனையோர் அமைதிதாமத்திற்குச் செல்ல வேண்டும். இப்பழைய உலகம் எஞ்சியிருக்க மாட்டாது. நீங்கள் புதிய உலகிலுள்ளபொழுது, பழைய உலகை நினைவு செய்வீர்களா? ஒருபொழுதும் இல்லை! நீங்கள் சுவர்க்கத்தில் இருந்து, ஆட்சி செய்துகொண்டிருப்பீர்கள். இதனை உங்கள் புத்தியில் வைத்திருப்பதால், நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். அவர்கள் சுவர்க்கத்திற்குப் பல பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் நரகத்திற்கும் பல பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். இது பாவாத்மாக்களின் உலகமான, துன்ப பூமியாகிய நரகமாகும். ஒரேயொரு எல்லையற்ற தந்தையே இருக்கின்றார் என்பதையும், நாங்கள் நீண்டகாலம் தொலைந்திருந்து, இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் அவரது குழந்தைகள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். எனவே, அத்தகைய தந்தைமீது நீங்கள் பெருமளவு அன்பு கொண்டிருக்க வேண்டும். பெருமளவு சேவை செய்து, முட்களை மலர்களாக மாற்றுகின்ற குழந்தைகளைத் தந்தையும் மிக அதிகளவில் நேசிக்கின்றார். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற வேண்டும். தந்தை, அவ்வாறு ஆகுவதில்லை. அவர் எங்களை அவ்வாறு ஆக்குவதற்காகவே வந்துள்ளார். எனவே, நீங்கள் உள்;ரப் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நான் சுவர்க்கத்தில் என்ன அந்தஸ்தைப் பெறுவேன்? நான் என்ன சேவை செய்கின்றேன்? நீங்கள் உங்களது வீட்டில் உள்ள வேலையாட்களுக்கும் இந்த ஞானத்தை அறிமுகம் செய்ய வேண்டும். உங்களுடன் தொடர்பில் வருகின்ற எவருக்கும் நீங்கள் இக்கற்பித்தல்களைக் கொடுக்க வேண்டும். அப்பாவிகள், ஏழைகள், சுதேசிகள் போன்ற அனைவருக்கும் நீங்கள் சேவை செய்ய வேண்டும். ஏழைகள் பலர் உள்ளனர். அவர்கள் தங்களைச் சீர்திருத்திக் கொள்வதுடன் பாவங்கள் போன்ற எதனையும் செய்யமாட்டார்கள். இல்லாவிடில், அவர்கள் தொடர்ந்தும் பாவச் செயல்களைச் செய்கிறார்கள். பொய், களவு போன்றன எந்தளவிற்கு அதிகமாக உள்ளன என்பதை உங்களால் பார்க்க முடிகின்றது. வேலையாட்களும் திருடுகின்றார்கள். இல்லாவிடில், வீட்டில் குழந்தைகள் மாத்திரமே இருந்தபொழுது, எதனையும் பூட்டி வைத்திருப்பதற்கான அவசியம் என்ன? எவ்வாறாயினும், இன்று, குழந்தைகளும் திருடர்கள் ஆகுகின்றனர்; அவர்கள் எதையாவது இரகசியமாக எடுக்கின்றார்கள். அவர்களுக்குப் பசியேற்பட்டால், அப்பொழுது பேராசை காரணமாக அதனை உண்டுவிடுகின்றனர். பேராசையுள்ளவர்கள் நிச்சயமாக எதையாவது திருடி உண்பார்கள். இது சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியமாகும். நீங்கள் இங்கிருந்து ஒரு சதத்தைக்கூடத் திருடக்கூடாது. பிரம்மா ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராவார். எல்லையற்ற தந்தையாகிய கடவுள் உங்களிடம் வந்துள்ளார். கடவுளின் வீட்டிலிருந்து எவராவது எதையாவது திருடுவார்களா? தங்கள் கனவுகளில் கூட அவ்வாறு செய்யமாட்டார்கள்! கடவுள் சிவனே அதிமேலானவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் அவரது குழந்தைகள். எனவே, நாங்கள் தெய்வீகச் செயல்களையே செய்யவேண்டும். நீங்கள் சிறைச்சாலைகளுக்கும் சென்று, திருடுபவர்களுக்கும் ஞானத்தைக் கொடுக்கின்றீர்கள். அவர்கள் இங்கிருந்து எதனைத் திருடுவார்கள்? ஒரு மாம்பழத்தைப் பறிப்பது அல்லது வேறு எதையாவது எடுத்து அதனை உண்பதும் கூடத் திருட்டேயாகும். நீங்கள் முதலில் அனுமதியைப் பெறாமல் எதையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் அதனைத் தொடவேனும் கூடாது. சிவபாபா எங்கள் தந்தை, அவர் அனைத்தையும் கேட்டும், பார்த்தும் கொண்டுதான் இருக்கின்றார். அவர் வினவுகின்றார்: குழந்தைகளிடம் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா? உங்களிடம் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், அப்பொழுது பாபாவிடம் அவற்றைப் பற்றிக் கூறுங்கள். அவற்றைத் தானமாகக் கொடுத்துவிடுங்கள். நீங்கள் எதையாவது தானம் செய்துவிட்டு, பின்னர் கீழ்ப்படிவற்றவர்களாக இருப்பீர்களாயின், அதிகளவு தண்டனை இருக்கும். திருடும் பழக்கம் மிகவும் தீயதாகும். உதாரணமாக, ஒருவர் துவிச்சக்கரவண்டியொன்றைத் (டிiஉலஉடந) திருடிப் பின்னர் அகப்படுதல் அல்லது ஒருவர் கடைக்குச் சென்று பிஸ்கட் பெட்டி மற்றும் சிறிய பொருட்களை எடுத்து அவற்றை ஒளித்து வைத்திருத்தல் போன்றவையாகும். ஆகவே கடைக்காரர்கள் தங்கள் பொருட்களை பார்த்துக்கொள்வதில் மிகக்கவனமாக இருக்கின்றார்கள். அதேபோன்று, இதுவும் ஒரு பெரிய அரசாங்கமாகும். பாண்டவ அரசாங்கம் தனது தெய்வீக இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றது. தந்தை கூறுகின்றார்: நான் இராச்சியத்தை ஆட்சி செய்வதில்லை. பாண்டவர்களாகிய நீங்களே அதனை ஆட்சி செய்கின்றீர்கள். கிருஷ்ணரே பாண்டவர்களின் தந்தையாகிய பாண்டவபதி என அவர்கள் பின்னர் கூறினர். பாண்டவர்களின் தந்தை யார்? அவர் உங்கள் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பாபாவிற்காக என்ன சேவை செய்கின்றீர்கள் என்பதை நீங்களே புரிந்துகொள்ள முடியும். பாபா எங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுத்து, பின்னர் அப்பால் ஓய்வுஸ்திதிக்குள்; செல்கிறார். அவர் அத்தகைய தன்னலமற்ற சேவை செய்கின்றார். அனைவரும் சந்தோஷமுடையவர்களாகவும், அமைதியானவர்களாகவும் ஆகுகின்றனர். உலகில் அமைதி நிலவ வேண்டும் என அம்மக்கள் கூறுகின்றனர். அவர்கள் தொடர்ந்தும் அமைதிப் பரிசுகளை வழங்குகின்றார்கள். இங்கு, நீங்கள் மிகப்பெரிய பரிசொன்றைப் பெறுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சிறந்த சேவை செய்பவர்கள் பெரிய பரிசொன்றைப் பெறுகிறார்கள். தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே அனைத்திலும் அதியுயர்ந்த சேவையாகும். எவராலும் இதனைச் செய்ய முடியும். குழந்தைகளாகிய நீங்கள் தேவர்களாக வேண்டுமாயின், நீங்கள் சேவையும் செய்ய வேண்டும். இவரைப் பாருங்கள். இவருக்கும் ஒரு லௌகீகக் குடும்பம் இருந்தது. பாபா அவரை அதனைச் செய்ய வைத்தார். அவர் இவரில் (பிரம்மா) பிரவேசித்து, இவருக்கும், உங்களுக்கும் கூறுகின்றார்: இதனைச் செய்யுங்கள். அவர் எவ்வாறு எனக்குக் கூறுவார்? அவர் என்னில் பிரவேசித்து, என்னை அதனைச் செய்ய வைக்கின்றார். அவர் கரன்கரவன்ஹார். அவ்வாறே அவர் இவருக்கும் கூறினார்: இதனைத் துறந்துவிடுங்கள்! இது அழுக்கான உலகம்! வைகுந்தத்திற்கு வாருங்கள்! நீங்கள் இப்பொழுது வைகுந்தத்தின் அதிபதி ஆகவேண்டும். அவ்வளவுதான், அவருக்கு விருப்பமின்மை ஏற்பட்டுவிட்டது. அவருக்கு என்ன நடந்துவிட்டது என அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். அவர் அத்தகையதொரு வெற்றிகரமான வியாபாரியாக இருந்தார். இப்பொழுது அவர் என்ன செய்கின்றார்? அவர் இனி என்ன செய்யப்போகின்றார் என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. அவ்விடயங்களைத் துறப்பது ஒரு பெரிய விடயமாக இருக்கவில்லை. அவ்வளவுதான். அவர் அனைத்தையும் எளிதாகத் துறந்துவிட்டார். அவர் மற்றவர்களையும் அனைத்தையும் துறக்கச் செய்தார்: அவர் தனது மகளையும் அனைத்தையும் துறக்கச் செய்தார். நீங்கள் இப்பொழுது இந்த ஆன்மீகச் சேவையைச் செய்ய வேண்டும். நீங்கள் அனைவரையும் தூய்மையாக்க வேண்டும். தாங்கள் ஞானாமிர்தத்தைப் பருகப் போவதாக அனைவரும் கூறினர். அவர்கள் தாயின் பெயரைக் குறிப்பிடுவார்கள்: நாங்கள் ஞானாமிர்தத்தைப் பருகுவதற்காக ஓம் ராதையிடம் செல்கின்றோம். இவ்வழிமுறையை உருவாக்கியவர் யார்? சிவபாபாவே இவரில் பிரவேசித்து, அத்தகையதொரு சிறந்த வழிமுறையை உருவாக்கினார். யார் வந்தாலும் அவர்கள் ஞானாமிர்தத்தைப் பருகுவார்கள். நான் ஏன் அமிர்தத்தைத் துறந்து நஞ்சை அருந்த வேண்டும் என்பது நினைவுகூரப்படுகின்றது. நீங்கள் நஞ்சைத் துறந்து, அமிர்தத்தைப் பருகி, தூய தேவர்கள் ஆகவேண்டும். ஆரம்பத்தில் அவ்வாறே இருந்தது. எவராவது வந்தபொழுது, அவர்களிடம் தூய்மையாகுமாறு கூறப்பட்டது. நீங்கள் அமிர்தத்தைப் பருக விரும்பினால், நஞ்சைத் துறந்துவிட வேண்டும். நீங்கள் தூய வைகுந்தத்தின் அதிபதிகளாக விரும்பினால், ஒரேயொருவரை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். அப்பொழுது நிச்சயமாகச் சில முரண்பாடுகள் இருக்கும். ஆரம்பத்திலிருந்து இப்பொழுதுவரை முரண்பாடு தொடர்கின்றது. அப்பாவிகள் அதிகமாக அடிக்கப்படுகின்றார்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக உறுதியானவர்கள் ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக அவர்களும் தூய்மையே சிறந்தது என எண்ணுவார்கள். இதனாலேயே அவர்கள் கூவியழைக்கின்றனர்: பாபா, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! முன்னர் உங்களது நடத்தை எவ்வாறிருந்தது? இப்பொழுது நீங்கள் எவ்வாறு ஆகுகின்றீர்கள்? முன்னர், நீங்கள் தேவர்களின் முன்னிலையில் சென்று, நாங்கள் பாவிகள் எனப் பாடுவதுண்டு. இப்பொழுது நீங்கள் அவ்வாறு கூறமாட்டீர்கள், ஏனெனில், நீங்கள் இப்பொழுது அவர்களைப் போன்று ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் உங்களை வினவ வேண்டும்: எந்தளவிற்கு நான் சேவை செய்கின்றேன்? சமையலறை அதிபதி (போளி தாதி) உங்களுக்கு அதிகளவு சேவை செய்கின்றார். அவர் பெருமளவு புண்ணியத்தைச் சேர்த்துக்கொள்கின்றார். அவர் பலருக்குச் சேவை செய்வதால் அனைவரது ஆசீர்வாதங்களையும் பெறுகின்றார். அவர்கள் பெருமளவில் அவரது புகழை எழுதுகின்றார்கள். அனைவருக்காகவும் பலவித ஏற்பாடுகளையும் செய்வது சமையலறை அதிபதியின் அற்புதமேயாகும். அது பௌதீகச் சேவையாகும். நீங்கள் சூட்சுமச் சேவையும் செய்ய வேண்டும். குழந்தைகள் கூறுகின்றனர்: பாபா, இந்த ஐந்து தீய ஆவிகளும் மிகவும் பலமானவை; அவை எங்களை நினைவில் நிலைத்திருப்பதற்கு அனுமதிப்பதில்லை. பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, சிவபாபாவின் நினைவில் உணவைத் தயாரியுங்கள். சிவபாபாவைத் தவிர வேறு எவருமில்லை. அவர் மாத்திரமே உங்களுக்கு உதவி செய்பவர். “நான் உங்களிடம் புகலிடம் தேடி வந்துள்ளேன்” என்ற பாடலொன்று உள்ளது. நீங்கள் சத்தியயுகத்தில் இதனைக் கூறமாட்டீர்கள். இப்பொழுது நீங்கள் அவருடைய புகலிடத்திற்கு வந்துள்ளீPர்கள். ஒருவருக்குள் தீய ஆவி உள்ளபொழுது அவர் பெருமளவு வேதனைப்படுகின்றார். அது ஒரு தூய்மையற்ற ஆத்மாவின் தலையீடாகும். உங்களுக்குள் காமம், கோபம், பேராசை, பற்று.... போன்ற பல்வேறு தீய ஆவிகள் உள்ளன. இத்தீய ஆவிகள் உங்களைப் பெருமளவில் வருந்தச் செய்கின்றன. அத்தூய்மையற்ற ஆத்மாக்கள் சில ஆத்மாக்களைத் தொந்தரவு செய்கின்றன, ஆனால் இந்த ஐந்து தீய ஆவிகளும் 2500 வருடங்களாக இருந்து வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது பெருமளவு விரக்தியடைந்துவிட்டீர்கள். இந்த ஐந்து தீய ஆவிகளும் உங்களை ஏழையாக்கியுள்ளன. சரீர உணர்வு எனும் தீய ஆவியே முதல் இலக்கத்துக்கு உரியது. காமம் எனும் தீய ஆவியும் மிகவும் பெரியதே. அது உங்களைப் பெருமளவு தொந்தரவு செய்கின்றது. தந்தை இவை அனைத்தையும் உங்களுக்குக் கூறியுள்ளார். இத்தீய ஆவிகள் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களிடம் வருகின்றன. அரசனும் அரசியும் எவ்வாறோ, பிரஜைகளும் அவ்வாறே; தீய ஆவிகள் அனைவரிடமும் வருகின்றன. எனவே, இது தீய ஆவிகளின் உலகம் என அழைக்கப்படுகிறது. இராவண இராச்சியம் என்றால், அசுர உலகம் என்பதாகும். சத்திய, திரேதா யுகங்களில் தீய ஆவிகள் எதுவும் கிடையாது. ஒரு தீய ஆவி இருந்தாலும் அது பெருமளவு பிரச்சினைகளை விளைவிக்கின்றது. எவரும் இதனைப் பற்றி அறியார்கள். தந்தை வந்து, ஐந்து விகாரங்கள் என்ற தீய ஆவியாகிய இராவணனிடமிருந்து உங்களை விடுவிக்கின்றார். உங்களில் சிலர் விவேகிகள், இவை அவர்கள் புத்தியில் இருக்கின்றன. நீங்கள் இப்பிறவியில் அத்தகைய வேலையைச் செய்யக்கூடாது. நீங்கள் எதையாவது திருடினால் அல்லது சரீர உணர்வுடையவர் ஆகினால், அதன் விளைவு என்னவாக இருக்கும்? உங்கள் அந்தஸ்து அழிக்கப்படும். நீங்கள் எதனையாவது எடுப்பீர்களாயின்..... 'வைக்கோலைத் திருடுகின்றவரால் நூறாயிரங்களையும் திருட முடியும்" எனக் கூறப்படுகின்றது. நீங்கள் யக்ஞத்தில் அவ்வாறு எதனையும் செய்யக்கூடாது. ஒரு பழக்கம் பதிந்து விட்டால், அதிலிருந்து உங்களால் விடுபட இயலாதுள்ளது. நீங்கள் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பௌதீகச் சேவையுடன் நீங்கள் சூட்சுமச் சேவையையும் பிரதான சேவையையும் செய்ய வேண்டும். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். ஆத்மாக்களுக்கு நன்மை செய்யுங்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். இதுவே உண்மையான சேவை. இச்சேவையில் மும்முரமாக இருங்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

2. விவேகிகளாகி, ஐந்து விகாரங்கள் என்ற தீய ஆவிகளை வெற்றி கொள்ளுங்கள். திருடுதல், பொய் பேசுதல் போன்ற பழக்கங்களை அகற்றுங்கள். நீங்கள் தானம் செய்தவற்றைத் திரும்பவும் பெறாதீர்கள்.

ஆசீர்வாதம்:
பௌதீக நோய்களின் எண்ணங்களிலிருந்து விடுபட்டிருந்து, உங்களை இட்டு தூய, சாதகமான எண்ணங்களையும், பிறருக்காக ஞான எண்ணங்களையும் தூய சாதகமான எண்ணங்களையும் கொண்டிருப்பீர்களாக.

சரீர நோயை கொண்டிருப்பது ஒன்று, அந்த நோயினால் நிலைகுலைந்து போவது வேறொன்றாகும். நோய் வரவேண்டும் என்பது நியதியாகும், ஆனால் அதனால் உங்களுடைய மேன்மையான ஸ்திதியில் நீங்கள் நிலைகுலைதிருந்தால், அது அந்த பந்தனத்தில் சிக்கிக் கொண்டிருப்பதற்கான அடையாளமாகும். பௌதீக நோயின் எண்ணங்களிலிருந்து விடுபட்டிருந்து தங்களுக்காகத் தூய சாதகமான எண்ணங்களையும் ஞான எண்ணங்களையும் கொண்டிருப்பவர்களே, பிறருக்கான தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் ஆவார்கள். இயற்கையைப் பற்றி அதிகம் சிந்திக்கும்போது, நீங்கள் கவலையின் ரூபம் ஆகுகிறீர்கள். இந்த பந்தனத்தில் இருந்து விடுபட்டிருப்பதே, கர்மாதீத் ஸ்திதி என்று அழைக்கப்படுகிறது.

சுலோகம்:
அன்பு சக்தியானது மலைபோன்ற பிரச்சனையையும் தண்ணீரைப் போன்று இலேசாக ஆக்குகின்றது.