19.06.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள், இப்பொழுது கடவுளின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். எனவே, உங்களிடம் அசுர குணங்கள் இருக்கக்கூடாது. முன்னேறுங்கள், கவனயீனமாக இருக்காதீர்கள்.
கேள்வி:
சங்கமயுகப் பிராமணக் குழந்தைகளாகிய உங்களிடம் உள்ள நம்பிக்கையும் போதையும் என்ன?பதில்:
குழந்தைகளாகிய நாங்கள் இப்பொழுது கடவுளின் சமுதாயத்திற்கு உரியவர்களாகி விட்டோம் என்ற நம்பிக்கையும் போதையும் எங்களுக்கு உள்ளன. நாங்கள் உலக அதிபதிகளாகவும் சுவர்க்கவாசிகளாகவும் ஆகுகின்றோம். சங்கமயுகத்திலேயே, நாங்கள் மாற்றப்படுகின்றோம். நாங்கள் அசுர குழந்தைகளில் இருந்து, கடவுளின் குழந்தைகளாகி, 21 பிறவிகளுக்குச் சுவர்க்கவாசிகள் ஆகுகின்றோம். இதனைவிட வேறு எதுவும் மகத்தானதல்ல.ஓம் சாந்தி.
தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். பொதுவாக, மனிதர்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் மத்தியில் முரண்பாடு ஏற்பட்டால், அங்கு அமைதியின்மை நிலவுகின்றது. அமைதியின்மை இருக்கும் இடத்தில் துன்பம் அனுபவம் செய்யப்படுகின்றது. அமைதி இருக்கும் இடத்தில் சந்தோஷம் அனுபவம் செய்யப்படுகின்றது. இங்கே அமர்ந்திருக்கும் குழந்தைகளாகிய உங்களிடம் உண்மையான அமைதி உள்ளது. உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது: தந்தையை நினைவு செய்யுங்கள்! உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். அமைதிக் கடலான உங்கள் தந்தையை நினைவுசெய்வதன் மூலம், அரைக் கல்பமாக உங்களுக்குள் இருந்த அமைதியின்மை அகற்றப்படும். நீங்கள் உங்கள் ஆஸ்தியான அமைதியைப் பெறுகின்றீர்கள். அமைதியான உலகத்தில் இருந்து, அமைதியற்ற உலகம் முற்றிலும் வேறுபட்டது என்பது உங்களுக்குத் தெரியும். அசுர உலகம் என்றால் என்ன என்பதையோ, கடவுளின் உலகம் என்றால் என்ன என்பதையோ அல்லது சத்தியயுகம் என்றால் என்ன, கலியுகம் என்றால் என்ன என்பதையோ மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. எவ்வளவு பெரிய பதவியை நீங்கள் வகித்தாலும், இது உங்களுக்குத் தெரியாது என்றே நீங்கள் கூறுவீர்கள். ஒரு பதவியைக் கொண்டிருப்பவர்களிடம் பணம் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஏழை யார் என்பதையும் செல்வந்தர் யார் என்பதையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். அதேபோன்று கடவுளின் குழந்தைகளும் அசுரக் குழந்தைகளும் உள்ளார்கள் என்பதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்பதை இனிய குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் இந்த உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சுவர்க்கவாசிகளாகவும் உலக அதிபதிகளாகவும் ஆகுகின்றீர்கள் என்பதைக் கடவுளின் சமுதாயத்திற்குரிய பிராமணர்களாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இந்தச் சந்தோஷம் எப்பொழுதும் இருக்க வேண்டும். இதனை மிகச்சரியாக உங்களில் வெகுசிலரே புரிந்துகொள்கிறீர்கள். சத்திய யுகத்தில் கடவுளின் சமுதாயமே உள்ளது, ஆனால் கலியுகத்தில் அசுர சமுதாயமே உள்ளது. அசுர சமுதாயம், அதிமங்களகரமான சங்கமயுகத்திலேயே மாறுகின்றது. இப்பொழுது நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் ஆகியுள்ளோம். இதனை நாங்கள் இடைப்பட்ட காலப் பகுதியில் மறந்து விட்டோம். நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் ஆகியுள்ளோம் என்பதை இந்த நேரத்தில், நாங்கள் புரிந்து கொள்கிறோம். சத்தியயுகத்தில் எவரும் தங்களைக் கடவுளின் குழந்தை எனக் கூறமாட்டார்கள். அங்கே, அவர்கள் தேவர்களின் குழந்தைகள். இதற்கு முன்னர் நாங்கள் அசுர குழந்தைகளாக இருந்தோம். இப்பொழுது நாங்கள் கடவுளின் குழந்தைகள் ஆகியுள்ளோம். பிராமணர்களாகிய நாங்கள் பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள். நாங்கள் ஒரேயொரு தந்தையின் படைப்பு. நீங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகளும் கடவுளின் குழந்தைகளும் ஆவீர்கள். பாபாவிடம் இருந்தே நீங்கள் உங்கள் இராச்சியத்தைப் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எதிர்காலத்தில், நாங்கள் எங்கள் தெய்வீக, சுய இராச்சியத்தை அடைந்து, சந்தோஷமாக இருப்போம். சத்தியயுகம் உண்மையிலேயே அந்த சந்தோஷ பூமியாகும். கலியுகம் உண்மையில் இந்தத் துன்பபூமியாகும். இதனைச் சங்கமயுகத்துப் பிராமணர்களாகிய நீங்களே அறிவீர்கள். ஆத்மாக்கள், கடவுளின் குழந்தைகள். பாபா சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரே படைப்பவர். அவர் நரகத்தைப் படைப்பவர் அல்லர். அவரை யார் நினைவுசெய்வார்கள்? தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார் என்பது இனிமையிலும், இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவரே எங்கள் மிக இனிமையான தந்தை. அவர் எங்களை 21 பிறவிகளுக்குச் சுவர்க்கவாசிகள் ஆக்குகின்றார். இதனை விட வேறு எதுவும் மகத்தானதல்ல. நீங்களே, கடவுளின் குழந்தைகள் என்பதனால், நீங்கள் அசுரத்தனம் எதனையும் கொண்டிருக்கக்கூடாது என்ற புரிந்துணர்வைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் முன்னேற வேண்டும். சொற்ப நேரமே எஞ்சியுள்ளது. எனவே கவனயீனமாகி, தவறுகள் எதனையும் செய்யாதீர்கள். இதனை மறந்து விடாதீர்கள். குழந்தைகளாகிய உங்களுடைய தந்தையே உங்கள் முன்னிலையில் நேருக்கு நேராக அமர்ந்திருக்கின்றார் என்பதை உங்களால் பார்க்க முடியும். தேவர்களின் குழந்தைகள் ஆகுவதற்காகவே நாங்கள் தந்தையாகிய கடவுளுடன் கற்கின்றோம். ஆகவே, பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். பாபா கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகவே தந்தை வந்துள்ளார். அவரை நீங்கள் எந்தளவிற்கு நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கே உங்கள் பாவங்களும் அழிக்கப்படும். அறியாமைப் பாதையில், ஒரு பெண் நிச்சயதார்த்தம் செய்யப்படும்போது, அந்த நினைவு அவளில் உறுதியாகப் பதிந்து விடும். ஒரு குழந்தை பிறந்தவுடன், அந்த நினைவும் பதிந்து விடும். அந்த நினைவு சுவர்க்கத்திலும், நரகத்திலும் பதியப்படுகின்றது. “இவர் எனது தந்தை” என ஒரு குழந்தை கூறுவார். எனினும், அந்த ஒரேயொருவர் உங்கள் எல்லையற்ற தந்தையாவார். அவரிடம் இருந்தே நீங்கள் உங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவீர்கள். ஆகவே, அவரது நினைவே, இப்பொழுது உங்களில் பதியவேண்டும். எங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கான எங்களுடைய ஆஸ்தியை மீண்டும் ஒருமுறை தந்தையிடம் இருந்து நாங்கள் பெறுகின்றோம். அந்த ஆஸ்தி மாத்திரமே உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். அனைவரும் இறக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கு எவருமே எஞ்சியிருக்க மாட்டார்கள். உங்கள் அதி அன்புமிக்கவரும் திரும்பிச் செல்ல வேண்டும். இப்பழைய உலகம் இப்பொழுது ஒரு முடிவிற்கு வரவுள்ளது என்பதைப் பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். அது முடிவடைந்து விடுவதற்கு முன்னர் முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்பதால், உங்களுக்குள் எல்லையற்ற சந்தோஷம் இருக்க வேண்டும். தந்தை தொடர்ந்தும் கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் வாழ்க்கையை வைரம் போன்று ஆக்குங்கள். அது தெய்வீக உலகம், ஆனால் இதுவோ அசுர உலகம். சத்தியயுகத்தில் எல்லையற்ற சந்தோஷம் இருக்கிறது. அந்தச் சந்தோஷத்தைத் தந்தையால் மாத்திரமே கொடுக்க முடியும். இங்கே நீங்கள் தந்தையிடம் வந்துள்ளீர்கள். நீங்கள் இங்கே தங்கியிருக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் அதிகளவினர் என்பதால், நீங்கள் அனைவரும் இங்கே ஒன்றாகத் தங்கியிருக்க முடியாது. இங்கே நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் வந்ததனால் பெருமளவு உற்சாகத்தை அனுபவம் செய்கிறீர்கள். நாங்கள் கடவுளின் குழந்தைகள். தந்தையாகிய கடவுளின் குழந்தைகள் நாங்களே என்பதால் நாங்கள் ஏன் சுவர்க்கத்தில் இல்லை? தந்தையாகிய கடவுளே, சுவர்க்கத்தைப் படைக்கின்றார். முழு உலகின் வரலாறும், புவியியலும் உங்கள் புத்தியில் உள்ளன. தந்தையாகிய சுவர்க்கக் கடவுளே, உங்களைச் சுவர்க்கத்திற்குத் தகுதியானவர்கள் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு சக்கரத்திலும் அவர் உங்களை அவ்வாறு ஆக்குகின்றார். அவர் ஒரு நடிகர் என்பது மனிதர்கள் எவருக்குமே தெரியாது. நாங்கள் தந்தையாகிய கடவுளின் குழந்தைகள் என்பதால் நாங்கள் ஏன் சந்தோஷம் அற்றிருக்க வேண்டும்? நாங்கள் ஏன் எங்களுக்குள் சண்டை போடுகின்றோம்? ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவோம். சகோதரர்கள் எவ்வாறு தங்களுக்குள் சண்டை போடுகிறார்கள் எனப் பாருங்கள். அவர்கள் சண்டையிட்டு ஒருவரையொருவர் அழித்துக் கொள்கிறார்கள். இங்கே, நாங்கள் தந்தையிடமிருந்து எங்கள் ஆஸ்தியைக் கோருகின்றோம். சகோதரர்கள் ஒருவருக்கொருவர் என்றுமே உப்புநீர் போல் ஆகக்கூடாது. இங்கும் சிலர் தந்தையுடன் உப்புநீர் போல் ஆகுகின்றார்கள். மிக நல்ல குழந்தைகளும் உப்புநீர் போல் ஆகுகின்றார்கள். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். தந்தை நிச்சயமாக மிக நல்ல குழந்தைகளை நினைவுசெய்வார். தந்தை குழந்தைகள் மீது அதிகளவு அன்பு கொண்டுள்ளார். தந்தைக்குத் தனது குழந்தைகளைத் தவிர நினைவு செய்வதற்கு வேறு எவரும் இல்லை. உங்களுக்கு நினைவு செய்வதற்குப் பலர் உள்ளனர். உங்கள் புத்தி அங்குமிங்கும் செல்கிறது. உங்கள் புத்திகள் உங்கள் வியாபாரம் போன்றவற்றின் மீது செல்கின்றன. என்னிடம் வியாபாரம் போன்ற எதுவும் இல்லை. குழந்தைகளாகிய உங்களிடம் பல வியாபாரங்கள் உள்ளன. என்னிடம் ஒரேயொரு வியாபாரமே உள்ளது. குழந்தைகளாகிய உங்களைச் சுவர்க்கத்தின் வாரிசுகள் ஆக்குவதற்காகவே நான் வந்துள்ளேன். எல்லையற்ற தந்தையிடம் உள்ள ஒரேயொரு சொத்து, குழந்தைகளாகிய நீங்கள்தான். அவரே தந்தையாகிய கடவுள். ஆத்மாக்கள் எல்லோரும் அவருடைய சொத்து. மாயை உங்களை அழுக்காக்கி விட்டாள். தந்தை இப்பொழுது உங்களை அழகானவர்கள் ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் மாத்திரமே, எனக்குண்டு. உங்களிடம் நான் பற்று வைத்திருக்கின்றேன். நீங்கள் கடிதம் எழுதாதபோது, தந்தை அக்கறை கொண்டுள்ளார். மிக நல்ல குழந்தைகளிற் சிலரும் கடிதம் அனுப்புவதில்லை. மாயை மிக நல்ல குழந்தைகளை முற்றாகவே முடித்து விடுகிறாள். நிச்சயமாக, சரீர உணர்வு இருந்திருக்க வேண்டும். உங்கள் நலனைப் பற்றி எப்பொழுதும் தனக்கு எழுதுமாறு தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். பாபா வினவுகின்றார்: குழந்தாய், மாயை உங்களைத் தொந்தரவு செய்கின்றாளா? நீங்கள் துணிச்சலுடன் மாயையை வெற்றிகொள்கிறீர்கள், அல்லவா? நீங்கள் இப்பொழுது போர்க்களத்தில் உள்ளீர்கள், அல்லவா? உங்கள் பௌதீக உறுப்புக்கள் விஷமத்தனம் ஏதும் செய்யாதிருக்கும் வண்ணம், நீங்கள் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். சத்திய யுகத்தில், உங்கள் பௌதீகப் புலன்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கும். அங்கே உங்கள் பௌதீக உறுப்புக்கள் விஷமத்தனம் எதுவும் செய்வதில்லை. உங்கள் வாய், கைகள் அல்லது காதுகள் அங்கே எந்தவிதமான விஷமத்தனமும் செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை. அங்கே விஷமத்தனம் இல்லை. அங்கே அழுக்கான எதுவும் இல்லை. இங்கே, நீங்கள் உங்கள் யோக சக்தியினால் பௌதீக உறுப்புக்களை வெற்றி கொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: அங்கே அழுக்கான எதுவுமில்லை. நீங்கள் உங்கள் பௌதீக உறுப்புக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மிக நன்றாக முயற்சி செய்யுங்கள். குறுகிய காலமே எஞ்சியுள்ளது. அதிகளவு காலம் கடந்து விட்டது, மிகச் சொற்ப காலமே எஞ்சியுள்ளது என நினைவு கூரப்படுகின்றது. இப்பொழுது மிக, மிகக் குறுகியகாலமே எஞ்சியுள்ளது. ஒரு புதிய வீடு கட்டப்படும் பொழுது, மேலும் மிகச்சொற்ப காலமே எஞ்சியுள்ளது, அதுவும் விரைவிலேயே தயாராகிவிடும், இன்னமும் சொற்ப வேலையே செய்ய வேண்டி உள்ளது என்பது ஒருவரின் புத்தியில் இருக்கும். அந்த விடயம் எல்லைக்கு உட்பட்டது. ஆனால் இந்த விடயம் எல்லையற்றது. அவர்களுடையது விஞ்ஞான சக்தி, ஆனால் உங்களுடையதோ மௌன சக்தியாகும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. புத்தியே அவர்களுடைய சக்தியாகும், உங்களுடைய சக்தியும் புத்தியே ஆகும். விஞ்ஞானத்தின் மூலம் பல கண்டுபிடிப்புக்கள் உருவாக்கப்பட்டன. அவர்கள் எங்கிருந்தாலும், அந்தக் குண்டைப் போட்டவுடன் அந்த நகரத்தையே அழித்து விடக்கூடிய அத்தகைய குண்டுகளை இப்பொழுது கண்டுபிடித்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். அப்பொழுது இராணுவத்தினராலும் ஆகாய விமானங்கள் போன்ற எதனாலும் எவ்விதப் பயனுமில்லை. ஆதலால், அந்தப் புத்திகள் விஞ்ஞானத்திற்கு உரியவை. உங்கள் புத்தி மௌனத்திற்கானது. அவர்கள் விநாசத்திற்கான கருவிகள். நீங்கள் அழிவற்ற அந்தஸ்தைக் கோருவதற்கான கருவிகள் ஆகியுள்ளீர்கள். இதனைப் புரிந்து கொள்வதற்கும் ஒரு புத்தி உங்களுக்குத் தேவை. தந்தை உங்களுக்குக் காட்டுகின்ற பாதை எவ்வளவு இலகுவானது என்பதைக் குழந்தைகளாகிய உங்களால் புரிந்துகொள்ள முடியும். கல்லுப்புத்தியோ அல்லது கூன் முதுகோ உங்களுக்கு இருந்தாலும் தந்தையும் ஆஸ்தியும் என்ற இரு வார்த்தைகளை நினைவுசெய்யுங்கள். அப்பொழுது எந்தளவிற்கு நீங்கள் நினைவுசெய்கிறீர்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. அனைவரில் இருந்தும் துண்டித்து, ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தை கூறுகின்றார்: பக்தி மார்க்கத்தில், நான் எனது வீடான பரந்தாமத்தில் இருந்தபோது, நீங்கள் என்னை அழைத்தீர்கள்: பாபா, நீங்கள் வரும்போது, நான் அனைத்தையும் உங்களுக்கே அர்ப்பணிப்பேன். அது, மரணித்த பின்னர் ஒருவரின் பழையன அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் விசேட பிராமணப் புரோகிதரைப் போன்றதாகும். நீங்கள் தந்தைக்கு எதைக் கொடுப்பீர்கள்? நீங்கள் இவருக்கு (பிரம்மா) அனைத்தையும் கொடுக்கவில்லை, அல்லவா? இவரும் தன்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தார். இவர் இங்கே அமர்ந்திருந்து, தனக்காக ஒரு மாளிகையைக் கட்டப் போவதில்லை. இவை அனைத்தும் சிவபாபாவிற்கே ஆகும். நாங்கள் அனைத்தையும் அவரது வழிகாட்டல்களுக்கு ஏற்பவே செய்கிறோம். அவர் கரன்கரவன்ஹார். அவர் தொடர்ந்தும் வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, ஒரேயொருவரான நீங்கள் மாத்திரமே எனக்காக இருக்கின்றீர்கள், ஆனால் உங்களுக்கோ குழந்தைகள் பலர் உள்ளனர். பின்னர் பாபா கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே எனக்குண்டு, ஆனால் உங்களுக்குப் பலர் உள்ளனர். நீங்கள் சரீர உறவினர்கள் பலரை நினைவு செய்கிறீர்கள். தந்தை தனது இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: தந்தையை இயன்றவரை நினைவுசெய்வதுடன், ஏனைய அனைவரையும் தொடர்ந்தும் மறந்து விடுங்கள். நீங்கள் சுவர்க்க இராச்சியமான வெண்ணெயைப் பெறுகின்றீர்கள். இந்த நாடகம் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்பது பற்றிச் சிந்தியுங்கள். தந்தையை நினைவுசெய்வதன் மூலமும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவதன் மூலமும் நீங்கள் பூகோள ஆட்சியாளர்கள் ஆகுவீர்கள். இதனைக் குழந்தைகளான நீங்கள் இப்பொழுது நடைமுறைரீதியாக அனுபவம் செய்கிறீர்கள். பக்தி தொன்றுதொட்டு தொடர்வதாகவும் விகாரமும் தொன்று தொட்டுத் தொடர்வதாகவும் மக்கள் நம்புகின்றார்கள். இராதையும் கிருஷ்ணருமாக இருந்த இலக்ஷ்மி நாராயணனுக்கும் குழந்தைகள் இருந்தார்கள், அல்லவா? ஆம். ஏன் அவர்களுக்குக் குழந்தைகள் இருக்க மாட்டார்கள்? அவர்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இங்கே அனைவரும் முற்றிலும் விகாரம் உள்ளவர்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் தொடர்ந்தும் அவதூறு செய்கின்றார்கள். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீ ஸ்ரீ தந்தையிடம் இருந்து (இரட்டை மேன்மையான) ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். அவர் உங்களை மேன்மை ஆக்குகின்றார். நீங்கள் தந்தைக்குக் கீழ்ப்படிவானவர்கள் ஆகாவிட்டால் இவ்வாறு ஆக முடியாது. கீழ்ப்படிவானவர்களாக ஆகுவதா இல்லையா என்பது உங்களைப் பொறுத்த விடயம். கீழ்ப்படிவான குழந்தைகள் உடனடியாகவே அவருக்குக் கீழ்ப்படிவார்கள். நீங்கள் முழுமையாக உதவி செய்யாது வி;ட்டால், ஓர் இழப்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு சக்கரத்திலும் வருகிறேன். நான் உங்களை அதிகளவு முயற்சி செய்வதற்குத் தூண்டுகின்றேன். நான் உங்களுக்கு அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றேன். நீங்கள் உங்கள் முழு ஆஸ்தியையும் தந்தையிடம் இருந்து கோரும் போது, மாயை உங்களைக் கவனயீனமாக இருக்கத் தூண்டுகிறாள். எவ்வாறாயினும் அந்த வலையில் நீங்கள் அகப்படக்கூடாது. உங்கள் போர் மாயையுடன் மாத்திரமே ஆகும். மிகப்பெரிய புயல்கள் வரும். அதிலும் மாயை வாரிசுகளையே அதிகமாகத் தாக்குவாள். அவள் பலமுள்ளவளாகி, சக்திசாலிகளுடன் பலமாகப் போரிடுவாள். மூலிகை வைத்தியர், ஒருவருக்கு மருந்து கொடுக்கும்போது, உள்ளிருக்கும் அனைத்து நோய்களும் வெளிவரும். இங்கும் நீங்கள் எனக்கு உரியவர்களாகும் போது, அனைவரையும் நினைவு செய்ய ஆரம்பிக்கின்றீர்கள். புயல்கள் வரும். ஆனால் நீங்கள் உங்கள் புத்தியைத் தெளிவாக வைத்திருக்க வேண்டும். முதல் அரைச் சக்கரத்திற்கு நாங்கள் தூய்மையாக இருந்தோம். பின்னர் மிகுதி அரைச்சக்கரத்திற்கு நாங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகினோம். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். இந்த யோகத் தீயில் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்! என்னை எந்தளவிற்கு நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு ஓர் உயர்ந்த அந்தஸ்தை நீங்கள் பெறுவீரகள். என்னை நினைவு செய்தவண்ணம் நீங்கள் வீடு திரும்புவீர்கள். இதில் நீங்கள் முழுமையாக அகநோக்குள்ளவர்கள் ஆகவேண்டும். ஆத்மாக்களான உங்களாலேயே இந்த ஞானம் கிரகிக்கப்படுகிறது. ஆத்மாக்களான நீங்களே இதைக் கற்கிறீர்கள். பரமாத்மாவான தந்தையே, ஆத்மாக்களின் இந்த ஞானத்தை எமக்குக் கொடுக்கின்றார். நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுவதற்கான அத்தகைய முக்கியமான ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள், என்னைத் தூய்மையாக்குபவர், ஞானக்கடல், அமைதிக்கடல் என அழைக்கிறீர்கள். நான் உங்களுக்கு என்னிடமுள்ள அனைத்தையும் கொடுக்கின்றேன். ஆனால், தெய்வீகக் காட்சிகளுக்கான சாவியை மட்டுமே நான் உங்களுக்குக் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக நான் உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்றேன். காட்சிகளினால் ஒரு பலனும் இல்லை. பிரதான விடயம் இந்தக் கல்வியே ஆகும். நீங்கள் இந்தக் கல்வியால் 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். உங்களுடைய சந்தோஷத்தை மீராவின் சந்தோஷத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர் கலியுகத்தில் வாழ்ந்தார். அவருக்குக் காட்சிகளும் கிடைத்தன. ஆனால் பின்னர் என்ன? பக்தியின் மாலை, ஞானப்பாதையின் மாலையில் இருந்து வேறுபட்டது. இராவணனின் இராச்சியம் உங்கள் இராச்சியத்தில் இருந்து வேறுபட்டது. அது இரவு என அழைக்கப்படுகின்றது. ஆனால் இது பகல் என அழைக்கப்படுகின்றது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எந்தவிதமான விஷமத்தனமும் எஞ்சியிராத வகையில், யோக சக்தியினால், உங்கள் பௌதீக உறுப்புக்களைக் கட்டுப்படுத்துங்கள். மிகக் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. ஆகவே மிக நன்றாக முயற்சி செய்து, மாயையை வென்றவர் ஆகுங்கள்.2. அகநோக்கில் இருந்து, தந்தை உங்களுக்குக் கொடுக்கும் ஞானத்தைக் கிரகியுங்கள். ஒருபோதும் ஒருவரோடு ஒருவர் உப்புநீர் போல் ஆகாதீர்கள். நிச்சயமாகத் தந்தைக்கு உங்கள் நலம் பற்றிய செய்திகளை அனுப்புங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் நன்மை செய்யும் மனோபாவத்துடன் சேவை செய்வதன் மூலம் ஆத்மாக்கள் எல்லோரிடம் இருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறும் உரிமையைப் பெற்றுக் கொள்வீர்களாக.ஆத்மாக்கள் எல்லோரிடம் இருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான வழிமுறை, நன்மை செய்யும் மனோபாவத்துடன் சேவை செய்வதே. உலக உபகாரி ஆகுகின்ற இலட்சியத்தை நீங்கள் கொண்டிருக்கும்போது, உங்களால் நன்மை இல்லாத எந்தவொரு பணியையும் செய்ய முடியாது. உங்களின் பணிக்கேற்பவே, உங்களின் தாரணையும் இருக்கும். எனவே, நீங்கள் உங்களின் பணியை நினைத்தால், சதா கருணை நிறைந்தவராகவும் மகாதானியாகவும் இருப்பீர்கள். நீங்கள் ஒவ்வோர் அடியிலும் நன்மை செய்யும் மனோபாவத்துடன் தொடர்ந்து செயல்படுவீர்கள். உங்களிடம் ‘நான்’ என்ற எந்தவோர் உணர்வும் இருக்காது. அத்துடன் நீங்கள் ஒரு கருவி என்பதையும் நினைவு செய்வீர்கள். இத்தகைய சேவையாளர்கள், தமது சேவையின் பலனாக, ஆத்மாக்கள் எல்லோரிடம் இருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறும் உரிமையைப் பெறுவார்கள்.
சுலோகம்:
பௌதீக வசதிகளுக்கான கவர்ச்சி, உங்களின் ஆன்மீக முயற்சியைப் பாதிக்கும்.அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள். அகநோக்கில் உள்ள ஆத்மாக்கள் மூன்று வகையான மொழிகளில் அனுபவம் அடைகிறார்கள். 1) கண்களின் மொழி. 2) உணர்ச்சிகளின் மொழி. 3) எண்ணங்களின் மொழி. இந்த மூன்று மொழிகளும் ஓர் ஆன்மீக யோகி வாழ்க்கையின் மொழிகள் ஆகும். எந்தளவிற்கு நீங்கள் தொடர்ந்தும் இனிமையான மௌனம் என்ற ரூபத்தில் அகநோக்கில் இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு இந்த மூன்று மொழிகளின் ஊடாகவும் ஆத்மாக்களுக்கு உங்களால் அதிக அனுபவத்தை வழங்க முடியும். இப்போது, இந்த ஆன்மீக மொழிகளைப் பயிற்சி செய்வதை வளர்த்துக் கொள்ளுங்கள்.