20.03.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, புண்ணியாத்மாக்கள் ஆகுவதற்கு ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள். நினைவு செய்வதன் மூலமே கலப்படம் அகற்றப்பட்டு ஆத்மா தூய்மை ஆகுகிறார்.

கேள்வி:
எதையிட்டும் எப்போதும் குழப்பம் அடையாமல் இருப்பதற்கு எந்த விழிப்புணர்வை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்?

பதில்:
இந்த நாடகத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஆகும். எது நடந்தாலும் அது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது: எவையும் இவ்வேளையில் உருவாக்கப்பட மாட்டாது. அநாதியான நாடகம் தொடர்கிறது. இதில் எதையிட்டும் குழப்பம் அடையத் தேவை இல்லை. சில குழந்தைகள் 'இது என்னுடைய கடைசி, 84 ஆவது பிறவியா, இல்லையா என எனக்கே தெரியாது" எனக் குழப்பம் அடைகிறார்கள். பாபா கூறுகிறார்: குழப்பம் அடையாதீர்கள். மனிதரிலிருந்து தேவராக மாறுவதற்கான முயற்சியைச் செய்யுங்கள்.

ஓம் சாந்தி.
'ஓம் சாந்தி" என்பதன் அர்த்தம் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும், அதாவது நான் ஓர் ஆத்மா. ஆத்மாவாகிய எனது ஆதி தர்மம் அமைதியாகும். ஆத்மாவாகிய நான் ஓர் அமைதி சொரூபம். நான் சாந்திதாம வாசி. இந்தப் பாடத்தைத் தொடர்ந்தும் உறுதியாக்கிக் கொள்ளுங்கள். இதை உங்களுக்கு விளங்கப்படுத்துவது யார்? சிவபாபா. நீங்கள் சிவபாபாவையே நினைவு செய்ய வேண்டும். சிவபாபாவுக்கு சொந்தமாக ஓர் இரதம் இல்லை. இதனாலேயே அவர்கள் அவரை ஓர் எருதின் மேல் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கோயில்களிலும் ஓர் எருதினை வைத்திருக்கிறார்கள். இது முழுமையான அறியாமை என அழைக்கப்படுகிறது. ஆத்மாக்களாகிய குழந்தைகளுக்குத் தந்தை விளங்கப்படுத்துகிறார். ஆத்மாக்களின் தந்தையாகிய இவர் சிவன் ஆவார். அவருக்குப் பல பெயர்கள் உண்டு. எவ்வாறாயினும் அவருக்குப் பல பெயர்கள் இருப்பதனால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். உண்மையில், அவருடைய பெயர் சிவன். அவர்கள் பாரதத்திலேயே, சிவனுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அவர் அசரீரியான பாபா ஆவார். அவர் வந்து தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குகிறார். சிலர் அவரை பாக்கிய இரதம் (பகீரதன்) என அழைக்கிறார்கள். சிலர் அவரை எருது (நந்தி) எனவும் அழைக்கிறார்கள். எந்த பாக்கிய இரதத்தில் தான் வருகிறேன் என்பதை தந்தையே உங்களுக்கு கூறுகிறார். நான் பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசிக்கிறேன். நான் பிரம்மாவின் மூலம் பாரதத்தை சுவர்க்கம் ஆக்குகிறேன். அங்கே இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது என்பது பாரத மக்களாகிய உங்கள் அனைவருக்கும் தெரியும். பாரதக் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை சேர்ந்தவர்கள். நீங்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தீர்கள். நான், 5000 ஆண்டுகளுக்கு முன் வந்த போது, சதோபிரதானாக இருந்த சுவர்க்கத்திற்கு உங்கள் யாவரையும் அதிபதிகள் ஆக்கினேன். பின்னர், நீங்கள் நிச்சயமாக மறுபிறவி எடுக்க வேண்டியிருந்தது. தந்தை உங்களுக்கு அனைத்தையும் நேடியாகவே கூறுகிறார். நீங்கள் சிவனுடைய பிறந்த நாளைக் கொண்டாடும் போது இது சிவனுடைய 90 ஆவது பிறந்த நாள், அதாவது சிவபாபா முதன் முதலில் வந்ததிலிருந்து இப்போது 90 வருடங்களாகி விட்டன (1936-2026) என நீங்கள் கூறுகிறீர்கள். இத்துடன் பிரம்மா, விஷ்ணு, சங்கரின் அவதாரங்களும் இருக்கின்றன: அவர்கள் திரிமூர்த்தி பிரம்மாவின் பிறந்த நாளைக் காட்டுவதில்லை. இதைக் காட்ட வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் பாபா கூறுகிறார்: நான் பிரம்மா மூலம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபனையைச் செய்கிறேன். நான் தொடர்ந்தும் பிராமணர்களை உருவாக்குகிறேன். ஆகவே இது பிரம்மாவின் பிறந்த நாளும், அத்துடன் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்களினது பிறந்த நாளும் ஆகும். பின்னர் நீங்கள் விஷ்ணுவின் பூமியில் அதிபதிகளாக ஆகுவீர்களென நான் உங்களுக்குக் கூறுகின்றேன். தந்தையை நினைவு செய்வதால் மாத்திரமே உங்களுடைய கலப்படம் அகற்றப்படுகிறது. பாரதத்தின் புராதன யோகம் மிகப் பிரபல்யமான போதிலும், அதை யார் கற்பித்தார்கள் என்பது எவருக்கும் தெரியாது. அவரே கூறுகிறார்: ஓ குழந்தைகளே, உங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள்! உங்கள் ஆஸ்தியை நீங்கள் என்னிடம் இருந்து பெறுகிறீர்கள். நான் உங்கள் தந்தை. நான் ஒவ்வொரு கல்பத்திலும் வருகிறேன். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். பின்னர் 84 பிறவிகளை எடுத்ததன் மூலம் தூய்மை அற்றவர்களாகி விட்டதனால், நான் வந்து உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகிறேன். நீங்கள் இராவணனுடைய கட்டளைகளைப் பின்பற்றுகிறீர்கள். கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகின்றீர்கள். தந்தை கூறுகிறார்: நானும் முன்னைய கல்பத்தில் வந்தேன். எவை நடைபெற்றனவோ அவை தொடர்ந்தும் ஒவ்வொரு கல்பத்திலும் நடைபெறும். தந்தை வந்து மீண்டும் இவரினுள் பிரவேசிப்பார். அவர் இந்த தாதாவிற்கு விடுதலை அளிப்பார். பின்னர் அவர் உங்கள் யாவரையும் பராமரிப்பார். நீங்கள் மாத்திரமே சத்திய யுகத்தில் இருந்தீர்கள் என்பது உங்களுக்குப் புரிகிறது. பாரத மக்களாகிய நாங்களே 84 பிறவிகளை எடுக்க வேண்டியவர்கள். முதலில், நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிரம்பியவர்களாகவும், 16 சுவர்க்க கலைகளும் நிரம்பியவர்களாகவும் இருந்தீர்கள். அரசன், அரசி பிரஜைகளாகிய நீங்கள் யாவரும், வரிசைக்கிரமமானவர்கள். எல்லோருமே அரசனாக முடியாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் சத்திய யுகத்தில் 8 பிறவிகளையும், திரேதா யுகத்தில் 12 பிறவிகளையும் எடுக்கிறீர்கள். இவ்விதமாக உங்களுடைய பாகத்தை எவ்வாறு நடித்தீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் முதலில் உங்களுடைய பாகத்தை சூரிய வம்ச இராச்சியத்திலும் பின்னர் சந்திர வம்ச இராச்சியத்திலும் நீங்கள் நடித்தீர்கள். பின்னர், நீங்கள் பாவப் பாதையில் சென்று, தொடர்ந்தும் கீழிறங்கினீர்கள். நீங்கள் 63 பிறவிகளை எடுத்தீர்கள். பாரத மக்களே முழுமையான 84 பிறவிகளை எடுக்கிறார்கள். ஏனைய சமயங்களைச் சார்ந்த எவரும் இவ்வாறு பல பிறவிகளை எடுப்பதில்லை. குருநானக் வாழ்ந்து இப்போது 500 வருடங்களாகி விட்டன. அவர் ஏறக்குறைய 12 அல்லது 14 பிறவிகளை எடுத்திருப்பார். இது கணிக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளில் கிறிஸ்தவர்கள், ஏறக்குறைய 60 மறுபிறவிகளை எடுப்பார்கள். தொடர்ந்தும் கிறிஸ்தவ வளர்ச்சி இருப்பதுடன் அவர்கள் தொடர்ந்தும் மறுபிறவி எடுக்கிறார்கள். எவ்வாறு நீங்கள் மாத்திரமே 84 பிறவிகளை எடுக்கிறீர்கள் என்பதைச் சிந்திப்பதற்கு உங்கள் புத்தியை உபயோகப்படுத்துங்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் சதோபிரதானாக ஆக வேண்டும். நடந்தவை எல்லாம் நாடகத்தில் உள்ளவையே ஆகும். நாடகத்தில் உருவாக்கப்பட்டவை யாவும் திரும்பவும் நடைபெறும். பாபா உங்களை எல்லையற்ற வரலாற்றுக்கு அழைத்துச் செல்கிறார். நீங்கள் தொடர்ந்தும் மறுபிறவி எடுக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது உங்களுடைய 84 பிறவிகளையும் முடித்து விட்டீர்கள். உங்களுடைய வீடு சாந்திதாமம் என்பதைத் தந்தை இப்பொழுது மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறார். ஆத்மாவின் வடிவம் என்ன? ஒரு புள்ளி. அங்கே புள்ளிகளால் ஆன ஒரு மரம் இருப்பதைப் போல் உள்ளது. வரிசைக்கிரமமான ஆத்மாக்களைக் கொண்ட ஒரு விருட்சம் இருக்கின்றது. நீங்கள் வரிசைக் கிரமமாகக் கீழே இறங்குகிறீர்கள். பரமாத்மாவும் ஒரு புள்ளியே ஆவார். அவர் ஒரு பெரிய நீள்கோள் வடிவமானவர் என்பதல்ல. தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னுடைய குழந்தைள் ஆகுகிறீர்கள். ஆகவே நான் உங்களை சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகிறேன். முதலில், நீங்கள் வந்து எனக்கு உரியவர்கள் ஆகுகிறீர்கள். பின்னரே நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, நான் உங்களுக்கு உரியவர். அதே நேரத்தில் நீங்கள் கற்கவும் வேண்டும். நீங்கள் எனக்கு உரியவரானதும், உங்கள் கல்வி ஆரம்பமாகிறது. பாபா கூறுகிறார்: இது உங்கள் கடைசிப் பிறவி. ஒரு தாமரை மலர் போல் தூய்மை ஆகுங்கள்! குழந்தைகள் சத்தியம் செய்கிறார்கள்: பாபா, நான் ஒரு போதும் தூய்மையற்றவர் ஆக மாட்டேன். உங்களிடம் இருந்து என்னுடைய ஆஸ்தியை பெறுவேன். 63 பிறவிகளாக நாங்கள் தூய்மை அற்றவராக இருந்தோம். இது 84 பிறவிகளின் கதையாகும். ஒரு பௌதீக தந்தை உங்களுக்கு கூறுவது போல பாபா வந்து, உங்களுக்கு அனைத்தையும் கூறி, இதை மிகவும் இலகுவாக ஆக்குகிறார். இவரே எல்லையற்ற தந்தை ஆவார். இவர் வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கூறுகிறார்: குழந்தாய்! குழந்தாய்! மக்கள் சிவனின் இரவைக் (சிவராத்திரியை) கொண்டாடுகிறார்கள். அரைக் கல்பத்துக்குப் பகலும், அரைக் கல்பத்துக்கு இரவும் இருக்கின்றன. இப்பொழுது இது இரவின் இறுதியினதும் பகலின் ஆரம்பத்தினதும் சங்கமமாகும். பாரதம் சத்திய யுகமாக இருந்த போது அது பகலாக இருந்தது. சத்திய யுகமும், திரேதா யுகமும் பிரம்மாவின் பகல் எனக் கூறப்படுகிறது. நீங்கள் பிராமணர்கள். இல்லையா? இப்போது உங்களுடைய இரவு ஒரு முடிவிற்கு வருகிறது என்பதைப் பிராமணர்களாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பக்தி இப்பொழுது தமோபிரதானாக உள்ளது. மக்கள் தொடர்ந்தும் வாசலுக்கு வாசல் தடுமாறுவதுடன் தொடர்ந்து ஒவ்வொருவரையும் வழிபடுகிறார்கள். அவர்கள் தெருவின் முச்சந்தியில் கூட (T சந்திகளிலும்) வழிபடுகிறார்கள். அவர்கள் மனித சரீரங்களையும் வழிபடுகிறார்கள். சந்நியாசிகள் தங்களை 'சிவோஹம்" (நான் சிவன்) எனக் கூறிக் கொண்டு ஏதாவது ஓரிடத்தில் அமர்ந்திருப்பார்கள். பின்னர் பெண்கள் சென்று அவர்களை வழிபடுகிறார்கள். பாபா மிகவும் அனுபவம் வாய்ந்தவர். பாபா கூறுகிறார்: நானும் பெருமளவு வழிபாடு செய்தேன். எவ்வாறாயினும் எனக்கு அந்த நேரத்தில் ஞானம் இருக்கவில்லை. நான் மனிதர்களுக்கு பாலும், பழமும் கொடுத்தேன். இதுவும் ஒரு விதத்தில் ஏமாற்றுதலே. எவ்வாறாயினும் அவையெல்லாம் மீண்டும் நடைபெறும்! பக்தர்களைப் பாதுகாப்பவரும் கடவுளே. ஏனெனில் அனைவரும் சந்தோஷமற்றே இருக்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: துவாபர யுகத்தில் இருந்து நீங்கள் குருவை ஏற்றுக் கொண்டதுடன், பக்தி மார்க்கத்தில் தொடர்ந்தும் கீழிறங்கினீர்கள். இப்பொழுதும் சாதுக்கள் தொடர்ந்தும் ஆன்மீகச் சாதனைகளைச் செய்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் அவர்களுக்கும் ஆன்ம ஈடேற்றம் அளிக்கிறேன்! நீங்கள் சங்கமயுகத்தில் சற்கதியை பெற்று, பின்னர் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள். ஞானக்கடல், மனித உலக விருட்சத்தின் விதை, சத்தியம், உயிருள்ளவர், பேரானந்த சொரூபி என்றெல்லாம் தந்தை அழைக்கப்படுகிறார். அவர் ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. அவர் இந்த ஞானத்தைக் கொண்டிருக்கிறார், அவரே ஞானக்கடலும், அன்புக் கடலும் ஆவார். ஆகவே நீங்கள் நிச்சயமாக ஓர் ஆஸ்தியை அவரிடம் இருந்து பெறவேண்டும். நீங்கள் இப்பொழுது அவரிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அவர் பாபா. ஆனால் இவரும் உங்கள் தந்தையே. சிவபாபா பிரம்மாவின் மூலம் உங்களுக்குக் கற்பிப்பதனாலேயே, நீங்கள் பிரஜாபிதா பிரம்மாகுமார், குமாரிகள் என்று அழைக்கப்படுகிறீர்கள். பெருமளவு BKகள் இருக்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் எங்களுடைய ஆஸ்தியை எங்களுடைய பாட்டனாரிடம் இருந்து பெறுகிறோம். நரக வாசிகளில் இருந்து எங்களை பாபா சுவர்க்க வாசிகள் ஆக்குகிறார் எனக் குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள். அவர் கூறுகிறார்: ஓ குழந்தைகளே, நிலையாக என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். அதனால் உங்கள் தலையில் இருக்கும் பாவச் சுமைகள் எரிக்கப்படும். பின்னர் நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் தூய்மையான தங்கமாகவும், உண்மையான ஆபரணங்களாகவும் இருந்தீர்கள். ஆத்மா சரீரம் இரண்டுமே சதோபிரதானாக இருந்தன. ஆத்மாக்கள் சதோ, ரஜோ, தமோ நிலைகளினூடாகச் செல்கின்றனர். ஆதலால் ஆத்மாக்களும் ஒரு தமோகுணி சரீரத்தைப் பெறுகிறார்கள். தந்தை உங்களுக்குப் புத்திமதி கூறுகிறார்: குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் என்னைக் அழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! பாரதத்தின் புராதன இராஜ யோகம் மிகப் பிரபல்யமானது. என்னுடன் உங்கள் யோகத்தை கொண்டிருப்பதற்கு நான் இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கிறேன். அதனைச் செய்வதனால் உங்களுக்குள் இருக்கும் கலப்படம் எரிக்கப்பட்டு விடும். நீங்கள் நினைவு செய்கின்ற அளவிற்கு உங்கள் கலப்படம் அகற்றப்படும். நினைவு செய்தலே பிரதான விடயமாகும். தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்திருக்கிறார். சத்திய யுகத்தில், அரசர்கள், அரசிகள், பிரஜைகள் யாவருமே தூய்மையானவர்கள். ஆனால் இப்பொழுது யாவரும் தூய்மை அற்றவர்கள். தந்தை கூறுகிறார்: நான், இவருடைய பல பிறவிகளின் கடைசிப் பிறப்பின் இறுதியில் இவரினுள் பிரவேசிக்கிறேன். இவரே பாக்கிய இரதம் என அழைக்கப்படுகிறார். இவர் கற்று முதல் இலக்கத்தைப் பெறுகிறார். அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். ஆனால் பிரதானமான ஒரு பெயரே உள்ளது. 84 பிறவிகளின் இரகசியத்தை குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை மிக நன்றாக விளங்கப்படுத்தி இருக்கிறார். நீங்கள், ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள். இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. நீங்கள் மேன்மையான தர்மத்தைச் சார்ந்தவர்களும், மேன்மையான செயல்களைச் செய்பவர்களும் ஆவீர்கள். பின்னர் இராவணன் வெளிப்பட்டதும் உங்கள் தர்மமும் செயலும் சீரழிந்து விட்டன. உங்களை நீங்கள் தேவர்கள் என அழைப்பதற்கு மிகவும் வெட்கப்பட்டதாலேயே இந்துக்கள் எனும் பெயர் உங்களுக்குக் வழங்கப்பட்டது. உண்மையில் நீங்கள் ஆதியில், ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுத்து தூய்மை அற்றவர்கள் ஆகி விட்டீர்கள். 84 பிறவிகளைக் கொண்ட சக்கரம் பாரத மக்களுக்கே உரித்தானது. யாவரும் வீடு திரும்ப வேண்டும். முதலில் நீங்கள் செல்வீர்கள், அது ஊர்வலம் ஒன்று செல்வது போன்றதாகும். சிவபாபா மணவாளன் எனவும் அழைக்கப்படுகிறார். இந்த நேரத்தில், மணவாட்டிகளான நீங்கள் அழுக்காகவும், தமோபிரதானாகவும் இருக்கிறீர்கள். ஆதலால் அவர் உங்களை அழகாக்கி, உங்களை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். அவர் ஆத்மாக்களாகிய உங்களைத் தூய்மையாக்கி மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். அவர் முக்தியை அளிப்பவர் என்றும், வழிகாட்டி என்றும் அழைக்கப்படுகிறார். எல்லையற்ற தந்தை உங்களை வீட்டுக்குத் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். அவருடைய பெயர் என்ன? சிவபாபா. ஒரு பெயரானது ஒரு சரீரத்திற்குக் கொடுக்கப்படுகிறது. ஆனால் கடவுளின் பெயர் சிவன் ஆகும். பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கு சூட்சும சரீரங்கள் இருக்கின்றன. சிவபாபாவுக்கு தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. அவர் சிவபாபா என்றே அழைக்கப்படுகிறார். குழந்தைகள் கூறுகிறார்கள்: ஓ தாயும் தந்தையுமானவரே, நாங்கள் உங்கள் குழந்தைகளாகி விட்டோம். ஏனையோர் தொடர்ந்தும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அவரைத் தெரியாது. அனைவருக்கும் அவரைத் தெரிந்திருந்தால், என்ன நடக்கும் என்று தெரியாது! தேவர்களின் விருட்சத்தின் நாற்று இப்பொழுது நடப்படுகின்றது. ஒரு வைரத்தில் இருந்து, சிப்பியாக மாறுவதற்கு 84 பிறவிகள் எடுக்கின்றன. பின்னர் சக்கரம் புதிதாக ஆரம்பமாகின்றது. உலகின் வரலாறும் புவியியலும் திரும்பவும் இடம்பெறும். நீங்கள் முழுமையான 84 பிறவிகளையும் எடுத்திருக்கிறீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். அது 8.4 மில்லியன் பிறவிகளாக இருக்க முடியாது. இது ஒரு பெரிய பிழை. 8.4 மில்லியன் பிறவிகள் இருக்கின்றன என்று நம்பியதால் அவர்கள் சக்கரத்தின் கால எல்லையை நூறாயிரம் ஆண்டுகள் என்று கூறியுள்ளார்கள். அது முழுப் பொய்! பாரதம் இப்பொழுது ஒரு பொய்மை நிறைந்த பூமியாகும். சத்திய உலகில் நீங்கள் சதா சந்தோஷமாக இருந்தீர்கள். இந்நேரத்தில், 21 பிறவிகளுக்கான உங்கள் ஆஸ்தியை நீங்கள் பெறுகிறீர்கள். அனைத்தும் உங்கள் முயற்சியிலேயே தங்கி இருக்கிறது. இராச்சியத்தில் உங்களுக்கு வேண்டிய அந்தஸ்தை நீங்கள் பெறமுடியும். இதில் மந்திரவித்தை என்ற கேள்விக்கே இடமில்லை. ஆம், நீங்கள் நிச்சயமாக மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகிறீர்கள். அது ஒரு நல்ல மந்திரவித்தை தானே? இல்லையா? நீங்கள் பாபாவின் குழந்தைகளாக ஒரு விநாடியில் ஆகுகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் பாபா உங்களை சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகிறார். நீங்கள் அரைக் கல்பமாக தடுமாறிக் கொண்டு இருந்தீர்கள். ஆனால் எவருமே இன்னும் சுவர்க்கவாசி ஆகவில்லை. தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களைத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகிறார். மகாபாரத யுத்தம் உண்மையாகவே நடந்தது. அத்துடன் உங்களுக்கு இராஜ யோகம் கற்பிக்கப்பட்டது. சிவபாபா கூறுகிறார்: நான் கிறிஸ்து அல்ல. நான் வந்து உங்களுக்குக் கற்பிக்கிறேன். இது உங்களுடைய பல பிறவிகளின் இறுதியாகும். குழப்பம் அடையாதீர்கள். நீங்கள் பாரத வாசிகள். உங்களுடைய தர்மம் பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது. ஏனைய சமயத்தைச் சார்ந்தவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. இந்த நாடகம் அநாதியான, முன்னரே நிச்சயக்கப்பட்டது ஆகும். எப்பொழுது இது உருவாக்கப்பட்டது என்று உங்களால் வினவ முடியாது. அதற்கு ஒரு முடிவு இல்லை! உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் இடம்பெறும். இது குறுகிய சங்கமயுகம். பிராமணர்களே உச்சிக் குடுமிகள். தந்தை, பிராமணர்களாகிய உங்களைத் தேவர்கள் ஆக்குகிறார். ஆகவே நீங்கள் நிச்சயமாக பிரம்மாவின் குழந்தைகளாக ஆக வேண்டும். நீங்கள் உங்கள் பாட்டனாரிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் உங்களை ஒரு பிரம்மாகுமார் அல்லது குமாரி எனக் கருதாதுவிடின் நீங்கள் எப்படி ஆஸ்தியைப் பெறமுடியும்? எதுவாயினும் நீங்கள் இந்த ஞானத்தை ஒரு சிறிதளவு செவிமடுத்தாலும், நீங்கள் சாதாரண பிரஜைகளில் ஒருவர் ஆகுவீர்கள். அனைவருமே நிச்சயமாக அங்கே செல்ல வேண்டும். சிவபாபா பிரம்மாவின் மூலமாக பிராமண தர்மத்தையும், தேவ தர்மத்தையும், சத்திரிய தர்மத்தையும் ஸ்தாபிக்கிறார். கீதையைத் தவிர்ந்த வேறெந்த சமய நூலும் இல்லை. கீதையானது அதி மேன்மையான தேவ தர்மத்தின் சமய நூலாகும். இதன் மூலம் 3 தர்மங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. பிராமணர்கள் இங்கேயே உருவாக்கப்படுகிறார்கள். இங்கேயே நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒவ்வொருவருடைய பாகமும் நிச்சயிக்கப்பட்டு உள்ளது என்பதைப் புரிந்து கொண்டு, சதா கவலையற்று இருங்கள். நிச்சயிக்கப்பட்டதே இடம்பெறுகிறது. ஆகவே நாடகத்தை இட்டு அசைக்க முடியாதவர்களாக இருங்கள்.

2. தந்தையிடம் இருந்து உங்களுடைய முழு ஆஸ்தியையும் இக்குறுகிய காலத்தில் கோரிக் கொள்ளுங்கள். யோக சக்தியின் மூலம் கலப்படத்தை அகற்றி, உங்களை ஒரு சிப்பியில் இருந்து வைரம் ஆக்குங்கள். இனிமையான விருட்சத்தின் நாற்றுக்களாக, ஆகுவதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
பற்றற்ற பார்வையாளர் ஆகி, சதா ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்து இருப்பதால், உங்கள் ஸ்திதியை நிலையானதாகவும் ஸ்திரமாகவும் ஆக்குவீர்களாக.

நீங்கள் நினைத்திராத அல்லது கனவிலும் கண்டிராத அத்தகைய பரீட்சைத்தாள்கள் இப்பொழுது வரவுள்ளன. எவ்வாறாயினும், ஏதோ ஒரு எல்லைக்கு உட்பட்ட (லௌகீக) நாடகத்தைப் பார்ப்பதைப் போன்ற வகையில், உங்கள் நடத்தை இருக்கட்டும். சோகமாக இருந்தாலோ நகைச்சுவையாக இருந்தாலோ அதில் எந்தவித வித்தியாசமும் இருப்பதில்லை. அவ்வாறாகவே, ஒருவருக்கு களிப்பூட்டும் பாகம் இருக்கக்கூடும், இன்னொரு அன்பான ஆத்மாவிற்கோ கடுமையான (சீரியஸான) பாகம் இருக்கக்கூடும். ஒவ்வொருவரின் பாகத்தையும் ஒரு பற்றற்ற பார்வையாளராக பார்த்து, உங்கள் ஸ்திதியை நிலையாகவும் ஸ்திரமாகவும் வைத்திருங்கள். எவ்வாறாயினும், நீங்கள் சதா ஒரேயொரு தந்தையின் நினைவில் மூழ்கிருந்தால் மாத்திரமே உங்களால் அத்தகைய ஒரு ஸ்திதியைக் கொண்டிருக்க முடியும்.

சுலோகம்:
உங்கள் பாக்கியத்தை திடசங்கற்ப நம்பிக்கையுடன் (நிச்சய்) நிர்ணயித்துக் (நிஸ்சித்) கொண்டால், நீங்கள் சதா கவலையற்றவராக (நிஷ்சித்ந்) இருப்பீர்கள்.

அவ்யக்த சமிக்ஞை: உங்கள் நம்பிக்கை என்ற அத்திவாரத்தை பலப்படுத்தி, சதா பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் இருங்கள்.

எதனையும் செய்வதற்கு முன்னர், உங்கள் வெற்றிக்கான உத்தரவாதம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் பல கல்பங்களாக வெற்றி ஈட்டியிருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். பல கல்பங்களாக நீங்கள் வெற்றியீட்டி, வெற்றிமாலையில் கோர்க்கப்பட்டதால், இப்பொழுது மீண்டும் அதனைச் செய்யவேண்டியது மட்டுமே. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட செயல்களை மீண்டும் செய்ய வேண்டியதே. ஆகையாலேயே அவை ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவை எனக் கூறப்படுகின்றது. அவை ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவை என்பதால் இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை அவற்றைச் செய்து, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதைச் செய்தல் என்ற கூற்றை நிறைவேற்றுகிறீர்கள்.