20.06.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையிடம் இருந்து அன்பைப் பெறுவதற்கு, ஆத்ம உணர்வில் அமர்ந்திருங்கள். தந்தையிடம் இருந்து உங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்னும் சந்தோஷத்தில் இருங்கள்.
கேள்வி:
தேவதைகளாக மாறுவதற்குப் பிராமணர்களாகிய நீங்கள் சங்கமயுகத்தில் செய்யும் மறைமுகமான முயற்சி என்ன?பதில்:
பிராமணர்களாகிய நீங்கள், தூய்மையாக இருப்பதற்கு மறைமுகமாக முயற்சி செய்ய வேண்டும். சங்கமயுகத்தில், பிரம்மாவின் குழந்தைகளாகிய நீங்கள், சகோதரர்களும் சகோதரிகளும் ஆவீர்கள். சகோதரர்களும் சகோதரிகளும் ஒருவருக்கு ஒருவர் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருக்க முடியாது. கணவனும் மனைவியும் ஒன்றாக வாழும்பொழுதும், தங்களை பிரம்மாகுமார், பிரம்மாகுமாரியாகவே கருதுகிறார்கள். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் முழுமையாகவே தூய்மையாகிப் பின்னர் தேவதைகள் ஆகுகிறீர்கள்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இங்கு அமர்ந்திருக்கும் பொழுது, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். குழந்தைகளாகிய நீங்கள், இந்த இரகசியத்தை ஏனையோருக்கு விளங்கப்படுத்தவும் வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு ஆத்ம உணர்வில் அமரும்பொழுது, நீங்கள் தந்தை மீது அன்பைக் கொண்டிருப்பீர்கள். பாபா எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். நாங்கள் பாபாவிடம் இருந்து எங்கள் சுவர்க்க ஆஸ்தியைக் கோருகிறோம். நாள் முழுவதும் இந்த நினைவைக் கொண்டிருப்பதற்கே, முயற்சி தேவையாகும். நீங்கள் இதை மீண்டும் மீண்டும் மறப்பதனால், உங்கள் சந்தோஷப் பாதரசம் மந்தமாகி விடுகிறது. பாபா உங்களை எச்சரிக்கிறார்: குழந்தைகளே, இங்கு ஆத்ம உணர்வில் அமருங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். இப்பொழுது இடம்பெறும் இச்சந்திப்பு, ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவுக்கும் இடையிலானது. முன்னரும் இச்சந்திப்பு இடம்பெற்றது. அது எப்பொழுது இடம்பெற்றது? அது நிச்சயமாக, கலியுக இறுதியினதும், சத்தியயுக ஆரம்பத்தினதும் சங்கமத்திலேயே நடந்தது. இன்று, பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரு தலைப்பை விளங்கப்படுத்தப் போகின்றார். நீங்கள் நிச்சயமாக, ஒரு தலைப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். கடவுளே அதிமேன்மையானவர். பின்னர், நீங்கள் கீழே வரும்பொழுது, பிரம்மா, விஷ்ணு, சங்கரர் உள்ளார்கள்: தந்தையும் தேவர்களும் உள்ளனர். சிவனுக்கு பிரம்மா, விஷ்ணு, சங்கரருடன் உள்ள தொடர்பு என்ன என்பதை மனிதர்கள் அறிய மாட்டார்கள். எவரும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறியார். திரிமூர்த்தியின் படம் மிகவும் பிரபல்யமானது. இம்மூவரும் தேவர்கள் ஆவர். எவ்வாறாயினும், மூவருக்கு மாத்திரம், உரிய தர்மம் இருக்க முடியாது. தேவ தர்மமாகிய ஒரு தர்மம் ஒரு பெரும் எண்ணிக்கைக்கு உரியதாகும். அவர்கள் சூட்சும உலகவாசிகள். அவர்களுக்கும் மேலே சிவபாபா உள்ளார். பிரம்மாவும் விஷ்ணுவுமே முக்கியமானவர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இப்பொழுது, ‘பிரம்மா எவ்வாறு விஷ்ணு ஆகுகிறார், விஷ்ணு எவ்வாறு பிரம்மா ஆகுகிறார்’ என்னும் தலைப்பை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சூத்திரர்களில் இருந்து பிராமணர்களாக மாறியுள்ளதாகவும் பிராமணர்களில் இருந்து தேவர்களாக மாறுவதாகவும் நீங்கள் கூறுவதைப் போன்றே, அவர்களுக்கும் அவ்வாறே உள்ளது. அனைத்துக்கும் முதலில், பிரம்மா விஷ்ணு ஆகிப் பின்னர் விஷ்ணு பிரம்மா ஆகுகிறார். ஆத்மாவே பரமாத்மா எனவும், பரமாத்மாவே ஆத்மா எனவும் அவர்கள் கூறுகிறார்கள். அது பிழை. அது அவ்வாறு இருக்க முடியாது. ஆகவே, இந்தத் தலைப்பை மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துங்கள். கடவுள், ஸ்ரீகிருஷ்ணரின் சரீரத்தில் பிரவேசித்தார் எனச் சிலர் கூறுகிறார்கள். அவர் ஸ்ரீகிருஷ்ணரின் சரீரத்தில் வந்திருப்பின், பிரம்மாவுக்கு நடிப்பதற்கெனப் பாகம் இருக்க முடியாது. ஸ்ரீகிருஷ்ணர் சத்தியயுகத்தின் முதல் இளவரசர். அவர் வந்து தூய்மை ஆக்குவதற்கு, எவ்வாறு அங்கே தூய்மை அற்றவர்கள் இருக்க முடியும்;? அது முழுமையாகவே பிழையானது. மகாராத்தி சேவாதாரிக் குழந்தைகள் மாத்திரம், இந்த விடயங்களைப் புரிந்து கொள்கிறார்கள். அது வேறு எவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. ‘பிரம்மா எவ்வாறு விஷ்ணு ஆகுகிறார், விஷ்ணு எவ்வாறு பிரம்மா ஆகுகிறார்’ என்னும் தலைப்பு முதற்தரமானது. அவருடைய வாழ்க்கை வரலாறு காட்டப்பட வேண்டும், ஏனெனில், அவர்களுக்கு ஒரு தொடர்பு உள்ளது. அவ்வாறே நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். பிரம்மா ஒரு விநாடியில் விஷ்ணு ஆகுகிறார். விஷ்ணு பிரம்மா ஆகுவதற்கு 84 பிறவிகள் எடுக்கிறது. இது மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதொரு விடயம். நீங்கள் இப்பொழுது பிராமண குலத்துக்கு உரியவர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் பிராமண குலம் எங்கே சென்றது? பிரஜாபிதா பிரம்மாவிற்கு புதிய உலகம் தேவைப்படுகிறது. சத்தியயுகமே புதிய உலகம் ஆகும். பிரஜாபிதா அங்கு இருப்பதில்லை. பிரஜாபிதா கலியுகத்திலும் இருக்க மாட்டார். அவர் சங்கமயுகத்திலேயே இருக்கிறார். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் சூத்திரர்களில் இருந்து பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள். தந்தை பிரம்மாவைத் தத்தெடுத்துள்ளார். எவ்வாறு சிவபாபா இவரைப் படைத்தார் என்பதை எவரும் அறியார். படைப்பவராகிய, சிவனின் படம் திரிமூர்த்தியில் இல்லை, எனவே, எவ்வாறு கடவுளே அதிமேன்மையானவர் எனவும், ஏனைய அனைவரும் அவருடைய படைப்பு எனவும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்? இங்கேயே பிராமண சமுதாயம் உள்ளது. ஆகவே, பிரஜாபிதா பிரம்மா நிச்சயமாக இங்கு தேவைப்படுகிறார்; அவர் கலியுகத்தில் இருக்க முடியாது. அவர் சத்தியயுகத்திலும் இருக்க முடியாது. “பிராமணர்களுக்கும் தேவர்களுக்கும் வணக்கங்கள்” என்பது நினைவுகூரப்படுகிறது. அந்த பிராமணர்கள் எவ்விடத்துக்கு உரியவர்கள்? பிரஜாபிதா பிரம்மா எவ்விடத்துக்கு உரியவர்? அவர் சங்கமயுகத்துக்கு உரியவராக இருந்திருக்க வேண்டும் என நிச்சயமாகக் கூறப்படும். இதுவே அதிமங்களகரமான சங்கமயுகம் ஆகும். இச்சங்கமயுகம் எந்தச் சமயநூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. சத்தியயுகத்திலோ அல்லது கலியுகத்திலோ அன்றி, சங்கம யுகத்திலேயே மகாபாரத யுத்தமும் இடம்பெற்றது. சங்கமயுகத்திலேயே பாண்டவர்களும் கௌரவர்களும் இருக்கிறார்கள். பாண்டவர்களாகிய நீங்கள், சங்கமயுகத்துக்கு உரியவர்கள், கௌரவர்கள் கலியுகத்துக்கு உரியவர்கள். கீதையில் கடவுளின் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. நீங்களே தேவ சமுதாயத்தினரான, பாண்டவர்கள். நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகள் ஆகிவிட்டீர்கள். உங்கள் யாத்திரை ஆன்மீகமானது. உங்கள் புத்தி மூலம் நீங்கள் பயணிக்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். மக்கள் பௌதீக யாத்திரைகளுக்குச் சென்று பின்னர் வீடு திரும்புகிறார்கள். அந்த யாத்திரைகள் அரைக் கல்பத்துக்கு நீடிக்கின்றன. நீங்கள் சங்கமயுகத்தில், ஒருமுறை மாத்திரமே இந்த யாத்திரையில் செல்கிறீர்கள். ஒருமுறை நீங்கள் அங்கு வீட்டுக்குத் திரும்பியதும், திரும்பவும் இம்மரண உலகிற்கு வர மாட்டீர்கள். தூய்மையாகி விட்டதும், பின்னர் தூய உலகில் பிரவேசிப்பீர்கள். இதனாலேயே, நீங்கள் இப்பொழுது தூய்மை ஆகுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது பிராமண சமுதாயத்துக்கு உரியவர்கள் என்பதை அறிவீர்கள். பின்னர் நீங்கள் விஷ்ணுவின் சமுதாயமாகிய, தேவ சமுதாயத்தினர் ஆகுவீர்கள். சத்தியயுகத்தில், தேவர்கள் விஷ்ணுவின் சமுதாயத்துக்கு உரியவர்கள். அதுவே விஷ்ணு சமுதாயம் என உங்களால் இனங்காண முடிகின்ற, நான்கு கரங்களுடன் கூடிய விஷ்ணுவின் விக்கிரகம் உள்ளது. இங்கே, அவர்களிடம் இராவணனின் சிலை உள்ளது. அந்தச்சின்னம், இது இராவண சமுதாயம் என்பதைக் காட்டுகிறது. நீங்கள் இத்தலைப்பில் பேசும்பொழுது, மக்கள் வியப்படைவார்கள். தேவர்கள் ஆகுவதற்கு, நீங்கள் இப்பொழுது இராஜயோகத்தைக் கற்கிறீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான குழந்தைகள். நீங்கள் சூத்திரர்களில் இருந்து பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் தத்து எடுக்கப்பட்டுள்ளீர்கள். இங்கு நீங்கள் பிராமணர்களாக இருக்கிறீர்கள், பின்னர் நீங்கள் இங்கு தேவர்கள் ஆகுவீர்கள். இங்கே மாத்திரமே ஒரு வம்சம் உள்ளது. ஓர் இராச்சியமும் ஒரு வம்சம் என அழைக்கப்படுகிறது. விஷ்ணுவின் வம்சம் உள்ளது. பிராமணர்களின் வம்சம் உள்ளதென உங்களால் கூற முடியாது. பல்வேறு இராச்சியங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும் பொழுது, அது ஒரு வம்சம் என அழைக்கப்படுகிறது. இப்பொழுது நீங்கள் பிராமண குல அலங்காரங்களாக உள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் விஷ்ணுவின் குலத்துக்குள் பிரவேசிப்பீர்கள். விஷ்ணுவின் குலத்திலிருந்து நீங்கள் சந்திர வம்சமாகிய சத்திரிய குலம், பின்னர் வைசிய குலம், இறுதியில் சூத்திர குலத்துக்குள் செல்வீர்கள். பின்னர், மீண்டும் பிராமணர்களாகிப் பின்னர் தேவர்கள் ஆகுவீர்கள். அர்த்தம் மிகவும் தெளிவாக உள்ளது! அவர்களின் படங்களில் அவர்கள் எதைக் காட்டி உள்ளார்கள் எனப் பாருங்கள். பிராமணர்களாகிய நாங்கள், விஷ்ணு தாமத்தின் அதிபதிகள் ஆகவுள்ளோம். நீங்கள் இதைப் பற்றிக் குழப்பம் அடையக்கூடாது. நீங்கள் எவ்வாறு ஏனையோருக்கு விளங்கப்படுத்த முடியும் எனவும், இதனால் அவர்கள் வியப்படைந்து உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது எனவும் புரிந்துகொள்ளும் வகையில், நீங்கள் பாபா உங்களுக்குக் கொடுக்கும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதுவதற்கு ஞானத்தைக் கடைய வேண்டும். ஞானக்கடலைத் தவிர எவராலும் இதை விளங்கப்படுத்த முடியாது. ஞானக்கடலைக் கடையுங்கள், பின்னர் அதைப் பற்றி எழுதுங்கள். பின்னர் அதை மீண்டும் மீண்டும் வாசித்து, நீங்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டிய வார்த்தைகள் எவை என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். ஆரம்ப நாட்களில், பாபா முரளியை எழுதி உங்கள் கரங்களில் கொடுப்பது வழக்கம். பின்னர் நீங்கள் அதை ஏனையோருக்குக் கூறுவீர்கள். இங்கே, நீங்கள் பாபாவுடன் வாழ்கிறீர்கள். ஆனால் நீங்கள் இப்பொழுது வெளியே சென்று அங்குள்ள மக்களுக்கு இந்த விடயங்களைக் கூற வேண்டும். இத்தலைப்பு மிகவும் அற்புதமானது. எவ்வாறு பிரம்மா விஷ்ணு ஆகுகிறார் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். பிரம்மா விஷ்ணுவின் தொப்புள் கொடியின் நுனியில் சித்தரிக்கப்படுவதைப் போன்றே, அவர்கள் காந்தியின் தொப்புள் கொடியின் நுனியில் நேருவைக் காட்டி உள்ளார்கள். எவ்வாறாயினும், ஒரு வம்சம் இருக்க வேண்டும். பிராமண குலத்தின் இராச்சியம் ஒன்று இருக்க முடியாது. பிராமண குலம் பின்னர் தேவ வம்சம் ஆகுகிறது. பின்னர் நீங்கள் சந்திர வம்சத்திலும், அதன் பின்னர் வைசிய வம்சத்திலும் பிரவேசிக்கிறீர்கள். இவ்விதமாக ஒவ்வொரு வம்சமும் தொடர்கிறது. சத்தியயுகம் விகாரமற்ற உலகம், கலியுகமோ விகார உலகம். இந்த இரண்டு வார்த்தைகள் கூட எவர் புத்தியிலும் இருப்பதில்லை. இல்லாவிட்டால், நாங்கள் எவ்வாறு விகாரம் உள்ளவர்களில் இருந்து விகாரம் அற்றவர்களாக மாறுவது என்பது நிச்சயமாக அவர்களின் புத்தியில் பிரவேசிக்கும். விகாரம் அற்றவர்களையோ அல்லது விகாரம் உள்ளவர்களையோ மனிதர்கள் அறிய மாட்டார்கள். தேவர்கள் விகாரம் அற்றவர்கள் என்பது இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பிராமணர்களை விகாரம் அற்றவர்கள் என அழைப்பதை நீங்கள் ஒருபொழுதும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். புதிய உலகம் விகாரமற்றது, பழைய உலகம் விகாரமுள்ளது. ஆகவே, நிச்சயமாகச் சங்கமயுகம் காட்டப்பட வேண்டும். இந்த யுகம் பற்றி எவரும் அறிய மாட்டார்கள். மக்கள் மங்களகரமான, புண்ணிய மாதத்தைக் கொண்டாடுகிறார்கள்: மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அவர்கள் ஒரு மாதத்தைக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு 5000 வருடங்களும் நீங்கள் இந்த ஒரு சங்கமயுகத்தைக் கொண்டாடுகிறீர்கள். ஆத்மா என்றால் என்ன என்பதையோ அல்லது பரமாத்மா என்றால் என்ன என்பதையோ மனிதர்கள் மிகச்சரியாகப் புரிந்து கொள்வதில்லை. ஆகவே, நெற்றியின் மத்தியில் ஓர் அற்புதமான நட்சத்திரம் பிரகாசிக்கிறது என அவர்கள் வெறுமனே கூறுகிறார்கள். அவ்வளவுதான்! இராமகிருஷ்ண பரமஹம்சரின் சிஷ்யரான விவேகானந்தர், தான் தனது குருவின் முன்னிலையில் அமர்ந்திருப்பார் எனக் கூறுவது வழக்கம் எனக் காட்டப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் குருமார்களிடம் கவனம் செலுத்துகிறார்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! திரான்ஸ் பற்றிய கேள்விக்கே இடமில்லை. எவ்வாறாயினும், அவர் தனது குருவை நினைவுசெய்வார். அவர் குறிப்பாகக் குருவின் நினைவில் அமர்ந்த பொழுது, அவரை மாத்திரம் நினைவுசெய்வாரா? அவருடைய நம்பிக்கையின் காரணமாக, தனது குருவே கடவுள் என அவர் நம்பினார். ஆகவே, அந்த ஆத்மா அந்தச் சரீரத்தை (அவருடைய குருவின்) நீங்கித் தனது சொந்தச் சரீரத்தில் பிரவேசித்ததை அவர் பார்த்தார். அவருடைய சொந்த ஆத்மா எங்கே சென்றார் என்பதைப் பற்றியோ அல்லது அதன்பின்னர் என்ன இடம்பெற்றது என்பதைப் பற்றியோ எந்தக் குறிப்பும் இல்லை. அவ்வளவுதான்! தான் கடவுளின் காட்சியைக் கண்டேன் என அவர் வெறுமனே சந்தோஷப்பட்டார். யார் கடவுள் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. தந்தை கூறுகிறார்: ஏணியின் படத்தை விளங்கப்படுத்துங்கள். அது பக்தி மார்க்கம். ஒன்று பக்தியின் படகு எனவும், மற்றையது இந்த ஞானத்தின் படகு எனவும் நீங்கள் அறிவீர்கள். இந்த ஞானம் பக்தியில் இருந்து வேறுபட்டது. பாபா கூறுகிறார்: நான் உங்களுக்கு இந்த ஞானத்தை முன்னைய கல்பத்திலும் கொடுத்து, உங்களை உலக அதிபதிகள் ஆக்கினேன். இப்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? எவ்வாறு ஏனைய வம்சங்கள் வருகின்றன, எவ்வாறு விருட்சம் வளர்கிறது எனும் இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் ஒரு பூங்கொத்தை வைத்திருப்பதைப் போன்றே, இவ்வுலக விருட்சமும் ஒரு பூங்கொத்தைப் போன்றுள்ளது. உங்கள் தர்மம் மத்தியில் உள்ளது. மூன்று சமயங்கள் தோன்றுகின்றன, அதன்பின்னர் அவற்றிலிருந்து விரிவாக்கம் அனைத்தும் இடம்பெறுகிறது. ஆகவே, நீங்கள் இந்த விருட்சத்தையும் நினைவுசெய்ய வேண்டும். பல்வேறு கிளைகளும் சிறு மதப் பிரிவுகளும் தொடர்ந்தும் தோன்றுகின்றன. தாமதித்து வருபவர்களுக்கு மரியாதை உள்ளது. ஆலமரம் உள்ளது. அதற்கு அடிமரம் கிடையாது, ஆனால் விருட்சத்தின் மிகுதி இன்னமும் உள்ளது. தேவ தர்மம் மறைந்து விட்டது. அது முற்றிலும் உக்கி விட்டது. பாரத மக்களுக்கு அவர்களின் சொந்தத் தர்மத்தை முற்றிலும் தெரியாது. ஏனைய அனைத்துச் சமயத்தவர்களும் தங்கள் சொந்தச் சமயத்தை அறிவார்கள். அல்லது, தங்களுக்குச் சமயத்தில் முற்றாகவே நம்பிக்கை கிடையாது என அவர்கள் கூறுகிறார்கள்! நான்கு பிரதான சமயங்களும், எண்ணற்ற சிறிய சமயங்களும் உள்ளன. இந்த நேரத்திலேயே நீங்கள் விருட்சத்தையும் உலகச் சக்கரத்தையும் அறிந்து கொள்கிறீர்கள். தேவ தர்மத்தின் பெயர் கூட மறைந்து விட்டது. இப்பொழுது தந்தை அத்தர்மத்தை ஸ்தாபித்து, ஏனைய அனைத்துச் சமயங்களையும் அழிக்கிறார். எங்கே சத்தியயுகம் இருக்கிறது எனவும், எங்கே கலியுகம் இருக்கிறது எனவும் நீங்கள் சக்கரத்தின் படத்தை மக்களுக்குக் காட்ட வேண்டும். கலியுகத்தில் பல்வேறு சமயங்கள் உள்ளன, ஆனால் சத்தியயுகத்தில் ஒரு தர்மம் மாத்திரமே உள்ளது. ஒரே தர்மத்தை ஸ்தாபித்து, ஏனைய சமயங்கள் அனைத்தையும் அழிப்பது யார்? யாரோ ஒருவரினூடாக கடவுளே இந்தப் பணியை மேற்கொண்டாக வேண்டும், இல்லையா? தந்தை கூறுகிறார்: பிரம்மாவினூடாக, நான் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கிறேன். பிராமணர்கள், பின்னர் விஷ்ணு தாமத்தின் தேவர்கள் ஆகுகிறார்கள். இந்தச் சங்கம யுகத்திலேயே பிராமணர்களாகிய நீங்கள் தூய்மை ஆகுவதற்கான மறைமுகமான முயற்சியைச் செய்ய வேண்டும். சங்கமயுகத்தில் நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள். ஆகவே, நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். சகோதர, சகோதரிகள் ஒருவருக்கொருவர் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருக்க முடியாது. கணவன், மனைவி இருவரும் தங்களைப் பிரம்மாகுமார், குமாரியாகக் கருதுகின்றார்கள். இதற்குப் பெரும் முயற்சி தேவை. ஒருவரை ஒருவர் தொடுவதை நிறுத்த முடியாத அளவுக்கு, கணவன், மனைவி மத்தியில் அத்தகைய கவர்ச்சி உள்ளது. இங்கே, சகோதர, சகோதரிகளாகிய நீங்கள் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது. இல்லாவிட்டால், பாவம் செய்யும் உணர்வு இருக்கும். நீங்கள் பிரம்மாகுமார், குமாரி என்பதை மறக்கும் பொழுது, அனைத்தும் முடிவடைகின்றன. இதில் மறைமுகமான முயற்சி உள்ளது. உங்களில் சிலர் ஒரு தம்பதியாக ஒன்றாக வாழ்கிறீர்கள். எவ்வாறாயினும், இதைப் பற்றி வேறு எவரும் எப்படிப் புரிந்து கொள்வார்கள்? தங்களைத் தேவதைகளாகிய, பிரம்மாகுமார், குமாரி எனவும், தாங்கள் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது எனவும் அவர்கள் அறிவார்கள். இதைப் பின்பற்றுவதால், அவர்கள் சூட்சும லோகத்தின் தேவதைகள் ஆகுவார்கள். இல்லாவிட்டால், அவர்களால் தேவதைகள் ஆகமுடியாது. நீங்கள் ஒரு தேவதை ஆக விரும்பினால், தூய்மை ஆக வேண்டும். அத்தகைய தம்பதி வெளிப்பட்டால், அவர்கள் முதற்தரமானவர்கள் ஆகுவார்கள். இறுதியில், அனைத்தையும் துறப்பதற்கு முன்னர் தாதா அனைத்தையும் அனுபவம் செய்தார் எனச் சிலர் முறையிடுகிறார்கள். எவ்வாறாயினும், தம்பதிகளே அதிகளவு முயற்சியைச் செய்ய வேண்டியவர்கள். இந்த ஞானமும் யோகமும் இருக்க வேண்டும். நீங்கள் ஏனைய பலரையும் உங்களுக்குச் சமமானவர்களாக ஆக்கும்பொழுது மாத்திரமே, ஒரு பேரரசராக ஆக முடியும். அது மாத்திரமே ஒரு விடயம் அல்ல. தந்தை கூறுகிறார்: சிவபாபாவை நினைவுசெய்யுங்கள்! இவர் பிரஜாபிதா. எங்கள் தொடர்பு சிவபாபாவுடன் மாத்திரம் உள்ளது எனக் கூறும் பலரும் உள்ளார்கள். நாங்கள் ஏன் பிரம்மாவை நினைவுசெய்ய வேண்டும்? நாங்கள் ஏன் அவருக்கு ஒரு கடிதத்தை எழுத வேண்டும்? அத்தகைய குழந்தைகள் இருக்கிறார்கள்! நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்ய வேண்டும். இதனாலேயே, இந்த பாபா எவருக்கும் தனது புகைப்படத்தைக் கொடுப்பதில்லை. சிவபாபா இவரில் பிரவேசிக்கிறார். இவர் ஒரு சரீரதாரி. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அந்தக் குருமார்கள் தங்களைக் கடவுள் என அழைக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நீங்கள் எதைப் பெறுகிறீர்கள்? பாரத மக்கள் அதிகளவு இழந்துள்ளார்கள். பாரத மக்கள் முழுமையாகவே கடனாளிகள் ஆகிவிட்டார்கள். அரசாங்கம், தொடர்ந்தும் மக்களிடம் யாசிக்கிறது. அவர்கள் 20, 30 வருடங்களுக்கான கடன்களைப் பெறுகிறார்கள். அவர்கள் அதை மீளக் கொடுக்க வேண்டியதில்லை, ஏனெனில் கடன் கொடுப்பவர்கள், கடன் பெறுபவர்கள் இருசாராருமே அழியப் போகிறார்கள். நாடகம் முடிவடைந்து விடும். அவர்களுக்குப் பல சிரமங்கள் உள்ளன. பெருமளவுக்குக் கடன், நோய்கள் போன்றவை உள்ளன. சிலர் தங்கள் செல்வத்தைச் செல்வந்தர்களிடம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் (செல்வந்தர்கள்) கடனாளிகள் ஆகும்பொழுது, ஏழைகள் அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள். ஒவ்வோர் அடியிலும் துன்பம், துன்பம் மாத்திரமே உள்ளது. ஒருவர் எங்காவது அமர்ந்திருக்கும் பொழுது, அவருக்குத் திடீரென மரணம் ஏற்படுகின்றது. இது மரணபூமி ஆகும். இப்பொழுது நீங்கள் அமரத்துவ பூமிக்குச் செல்கிறீர்கள். நீங்கள் அமரத்துவ பூமியின் சக்கரவர்த்திகள் ஆகவுள்ளீர்கள். அமரத்துவ பிரபு, உண்மையான அமரத்துவக் கதையைப் பார்வதிகளான உங்களுக்குக் கூறுகிறார். அவர் எங்களுடைய அமரத்துவ பாபா எனவும், நீங்கள் அவரிடமிருந்து அமரத்துவக் கதையைச் செவிமடுக்கிறீர்கள் எனவும் அறிவீர்கள். இப்பொழுது நீங்கள் அமரத்துவ உலகிற்குச் செல்லவுள்ளீர்கள். தற்சமயம், நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஞானக்கடலைக் கடைந்து எவ்வாறு பிரம்மா விஷ்ணு ஆகுகிறார் எனும் தலைப்பில் பேசுங்கள். இந்த ஞானத்தைக் கடைவதில் உங்கள் புத்தியை மும்முரமாக வைத்திருங்கள்.2. ஓர் இராஜ அந்தஸ்தைக் கோருவதற்கு, இந்த ஞானத்தையும் யோகத்தையும் கொண்டிருப்பதுடன், ஏனையோரை உங்களுக்குச் சமமாக்குகின்ற சேவையையும் செய்யுங்கள். உங்கள் பார்வையை மிகவும் தூய்மையானதாக ஆக்குங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரேயொரு தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் அனுபவம் செய்யும் களைப்பற்ற, தடைகளை அழிப்பவர் ஆகுவீர்களாக.ஒரேயொரு தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் வைத்திருக்கும் குழந்தைகள், ஏனைய உறவுமுறைகள் அனைத்தையும் பெயரளவிலேயே அனுபவம் செய்வார்கள். அவர்கள் சதா சந்தோஷ நடனம் ஆடுவார்கள். ஒருபோதும் களைப்படைய மாட்டார்கள். அவர்கள் களைப்பற்றவர்கள். அவர்கள் தந்தையின் அன்பிலும் சேவை செய்வதிலும் தங்களை மறந்திருப்பார்கள். தடைகளால் தடுக்கப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் தடைகளை அழிப்பவர்கள் ஆகுவார்கள். அவர்கள் ஒரேயொரு தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் அனுபவம் செய்வதால், அவர்கள் இலேசாகவும் ஒளியாகவும் இருப்பார்கள். எந்தவிதமான சுமைகளையும் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களின் முறைப்பாடுகள் அனைத்தும் முடிந்துவிடும். அவர்கள் சம்பூரண ஸ்திதியை அனுபவம் செய்வார்கள். அவர்கள் இலகு யோகிகள் ஆகியுள்ளார்கள்.
சுலோகம்:
எந்தவொரு சரீரதாரியாலும் உங்களின் எண்ணங்களிலேனும் கவரப்படுதல் என்றால் விசுவாசம் அற்றவராக இருத்தல் என்று அர்த்தம்.அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள். விண்வெளிக் கலத்தில் உள்ள விண்வெளி வீரர்களால் பூகோளத்தைப் படம் எடுக்க முடியும். ஏனென்றால், அவர்கள் மிக உயரத்தில் இருப்பார்கள். அதேபோல், மௌன சக்தியால், அகநோக்கு எனும் விண்வெளிக் கலத்தால், மனதின் சக்தியால் உங்களால் எந்தவோர் ஆத்மாவையும் மேன்மையாகவும் பண்புகள் உடையவராகவும் ஆகுவதற்குத் தூண்ட முடியும்.