21.06.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைப் பூர்த்தி செய்துள்ளீர்கள் என்பதையும், இப்பொழுது அமைதி தாமமாகிய வீட்டிற்குச் செல்கின்றீர்கள் என்பதையும் நினைவுசெய்கிறீர்;கள். நீங்கள் வீடு திரும்புவதற்கு முன்னர் சொற்ப காலமே எஞ்சியுள்ளது.

கேள்வி:
வீடு திரும்புவதை அறிந்துள்ள குழந்தைகளின் அடையாளங்கள் எவை?

பதில்:
அவர்கள் இப்பழைய உலகைப் பார்த்தும் பார்க்காமல் இருக்கின்றார்கள். அவர்கள் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருப்பதுடன், தங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யும்பொழுது, இலேசாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நேரத்தை வம்பு பேசுவதில் வீணாக்குவதில்லை. அவர்கள் தங்களை இந்த உலகின் விருந்தாளிகளாகக் கருதுகிறார்கள்.

ஓம் சாந்தி.
நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கே இந்தப் பழைய உலகின் விருந்தாளிகளாக இருக்கிறீர்கள் என்பதைச் சங்கமயுகத்துப் பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். அமைதி தாமமே உங்கள் உண்மையான வீடாகும். தாங்கள் மன அமைதியைப் பெறுவோம் என எண்ணி, மனிதர்கள் அந்த இடத்தை அதிகளவு நினைவு செய்கிறார்கள். எவ்வாறாயினும், மனம் என்றால் என்ன, அமைதி என்றால் என்ன அல்லது அவர்கள் அதை எங்கே பெற முடியும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். வீடு திரும்புவதற்கு முன்னர் சொற்ப காலமே எஞ்சியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். முழு உலகிலும் உள்ள மனிதர்கள் அங்கே வரிசைக்கிரமமாகவே செல்வார்கள். அது அமைதி தாமம், இதுவோ துன்பதாமம் ஆகும். அதை நினைவுசெய்வது இலகுவானதுதானே? ஒருவர் இளைஞராகவோ அல்லது முதியவராகவோ இருந்தாலும், அவரால் இந்தளவையேனும் நினைவுசெய்ய முடியும். இதில் முழு உலக ஞானமும் அடங்கியுள்ளது. விபரமான விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் பிரவேசிக்கின்றன. இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். நாடகத் திட்டத்திற்கேற்ப, நீங்கள் அமைதி தாமத்திற்குச் செல்கிறீர்கள் என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. இதை உங்கள் புத்தியில் வைத்திருப்பதால், நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வதுடன், நினைவூட்டவும் படுகின்றீர்கள். நீங்கள் உங்கள் 84 பிறவிகளை நினைவு கூர்ந்துள்ளீர்கள். அந்தப் பக்திமார்க்கம் வேறுபட்டது, ஏனெனில் இவை இந்த ஞான மார்க்கத்தின் விடயங்கள். தந்தை வினவுகிறார்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது உங்கள் வீட்டை நினைவு செய்கிறீர்களா? நீங்கள் அதிகளவைச் செவிமடுக்கின்றீர்கள்; நீங்கள் பற்பல விடயங்களைச் செவிமடுக்கிறீர்கள். இப்பொழுது நாங்கள் அமைதி தாமத்திற்குச் சென்று, பின்னர் சந்தோஷ தாமத்திற்குச் செல்வோம் என்பது அந்த விடயங்களில் ஒன்றாகும். எங்களைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்வதற்கே தந்தை வந்துள்ளார். சந்தோஷ தாமத்திலும் ஆத்மாக்கள் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வசிக்கிறார்கள். அமைதி தாமத்தில், அமைதி மாத்திரம் உள்ளது. இங்கே, பெருமளவு குழப்பம் உள்ளது. நீங்கள் மதுவனத்திலிருந்து உங்கள் வீட்டிற்குத் திரும்பும்பொழுது, உங்கள் புத்தி வம்பு பேசுவதிலும், உங்கள் வியாபாரம் போன்றவற்றிலும் திசை திருப்பப்படுகிறது. இங்கே, உங்களுக்கு அந்த அதே சிக்கல்கள் இருப்பதில்லை. நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும் அமைதிதாம வாசிகள் என்பதையும் அறிவீர்கள். இங்கே நாங்கள் நடிகர்கள் ஆகிவிட்டோம். நாங்கள் நடிகர்களாக ஆகுவதை வேறு எவரும் அறிய மாட்டார்கள். தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கே கற்பிக்கிறார். பல மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினரே இதைக் கற்கிறார்கள். அனைவரும் கற்பார்கள் என்றில்லை. இப்பொழுது நீங்கள் மிகவும் விவேகமானவர்கள் ஆகுகிறீர்கள். முன்னர் நீங்கள் விவேகம் அற்றவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது எவ்வளவு சண்டையும், யுத்தமும் நடக்கின்றன எனப் பாருங்கள். இவை அனைத்தையும் நீங்கள் என்ன என்று அழைப்பீர்கள்? நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பது மறக்கப்பட்டு விட்டது. சகோதரர்கள் ஒருவரையொருவர் கொலை செய்வார்களா? ஆம், வெறும் சொத்துக்காகவும், செல்வத்திற்காகவும் அவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகளான, சகோதரர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். தந்தை வந்து, ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை நடைமுறை ரீதியாக ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர் 5000 வருடங்களுக்கு முன்னர் செய்ததைப் போன்றே, மிகச்சரியாக எங்களுக்குக் கற்பிக்கிறார். ஏனெனில் அவரே ஞானக்கடல். வேறு எவரும் இந்தக் கல்வியை அறிய மாட்டார்கள். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரம் அறிவீர்கள். அவரே உலகைப் படைப்பவர் என உங்களால் கூற முடியாது. உலகம் அநாதியானது. அவரே சுவர்க்கத்தைப் படைப்பவர் என உங்களால் கூற முடியும். அங்கே வேறு தேசங்கள் இருக்கவில்லை. இங்கே, பல தேசங்கள் உள்ளன. ஒரே தர்மமும், ஒரே தேசமும் மாத்திரம் இருந்த ஒரு காலம் இருந்தது. பல்வேறுபட்ட சமயங்கள் அனைத்தும் பின்னரே வந்தன. பல்வேறு சமயங்கள் எவ்வாறு வருகின்றன என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் பிரவேசித்துள்ளது. முதலாவது (தர்மம்) ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் ஆகும். இங்கேயே, நீங்கள் அதை ஆதிசனாதன தர்மம் என அழைக்கிறீர்கள், ஆனால் எவரும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் அனைவரும் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்கள். நீங்கள் இப்பொழுதே தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள். சதோபிரதானாக இருப்பதில் இருந்து, நீங்கள் தொடர்ந்தும் சதோ, ரஜோ, தமோ ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் அப்பொழுது தூய்மை மிக்கவராக இருந்தீர்கள், பின்னர் இப்பொழுது தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவதன் மூலம் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோரியுள்ளீர்கள். நீங்கள் முதலில், தூய இல்லற தர்மத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள் என்பதையும் நாடகத் திட்டத்திற்கேற்ப, இப்பொழுது இராவண இராச்சியத்தில் தூய்மையற்ற இல்லறப் பாதைக்கு உரியவர்களாக இருக்கிறீர்கள் என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் அழைக்கிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, எங்களைச் சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்! அது நேற்றைய விடயம்: நேற்று நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள், இன்று நீங்கள் தூய்மை அற்றவராகி அழைக்கிறீர்கள். ஆத்மாக்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டார்கள். ஆத்மாக்கள் அழைக்கிறார்கள்: பாபா, வந்து எங்களை மீண்டும் ஒருமுறை தூய்மை ஆக்குங்கள்! தந்தை கூறுகிறார்: இந்த இறுதிப்பிறவியில் தூய்மை ஆகுங்கள். அப்பொழுது நீங்கள் 21 பிறவிகளுக்கு மிகவும் சந்தோஷமானவர் ஆகுவீர்கள். தந்தை உங்களுக்கு மிகவும் சிறந்த விடயங்களைக் கூறி உங்களைத் தீய விடயங்களில் இருந்து விடுவிக்கிறார். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை அவ்வாறாக வேண்டும். தூய்மை ஆகுங்கள்! அது மிகவும் இலகுவானது. வருமானம் மகத்தானது. சிவபாபா வந்துள்ளார் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் உள்ளது. ஒவ்வொரு 5000 வருடங்களும் அவர் வருகிறார். அப்பொழுது பழைய உலகம் நிச்சயமாகப் புதியது ஆகுகின்றது. வேறு எவராலும் உங்களுக்கு இதைக் கூற முடியாது. அவர்கள் சமயநூல்களில் கலியுகத்தின் கால எல்லையை நீடித்துள்ளார்கள். இது நாடகத்தின் விதியில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் பாவத்திலிருந்து விடுபடுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். எனவே, மேலும் பாவம் செய்யாமல் இருப்பதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகும்பொழுதே, ஏனைய விகாரங்கள் வந்து உங்களைப் பாவம் செய்ய வைக்கின்றன. இதனாலேயே தீய ஆவிகள் விரட்டப்பட வேண்டும். இந்த உலகில் எதன் மீதும் பற்று வைத்திருக்காதீர்கள். இந்தப் பழைய உலகின் மீது விருப்பமின்மை இருக்கட்டும். நீங்கள் இன்னமும் பழைய வீட்டிலேயே வாழ்கிறீர்கள் என்பதைப் பார்த்தாலும், உங்கள் புத்தியானது புதிய உலகை நோக்கியே இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் புதிய வீட்டிற்குச் செல்லும் பொழுது புதிய வீட்டை மட்டுமே பார்க்கிறீர்கள். இந்தப் பழைய வீடு அழிக்கப்படும் வரை, நீங்கள் தொடர்ந்தும் அதை உங்கள் கண்களால் பார்ப்பீர்கள். அதேவேளை புதிய வீட்டை நினைவு செய்தவண்ணம் இருப்பீர்கள். வருந்த நேரிடும் வகையான எந்தச் செயலையும் செய்யாதீர்கள். “இன்று, நான் இன்ன, இன்னாருக்குத் துன்பம் கொடுத்தேன். நான் இந்தப் பாவத்தைச் செய்தேன்”. நீங்கள் பாபாவிடம் கேட்க முடியும். ‘பாபா, இது ஒரு பாவமா?’ நீங்கள் ஏன் மூச்சு திணற வேண்டும்? நீங்கள் கேட்கா விட்டால், தொடர்ந்தும் மூச்சுத் திணறுவீர்கள். நீங்கள் பாபாவிடம் கேட்டால், பாபா உங்களை உடனடியாகவே இலேசாக்குவார். நீங்கள் மிகவும் கனமாக இருக்கிறீர்கள். பாவச்சுமை மிகவும் கனமானது. நீங்கள் பின்னர் 21 பிறவிகளுக்கு எப்பாவச் சுமையில் இருந்தும் இலேசாகுவீர்கள். உங்கள் தலைமீது பல பிறவிகளின் பாவச்சுமை உள்ளது. நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவில் நிலைத்து இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கே நீங்கள் இலேசாகுவீர்கள்; கலப்படம் அகற்றப்பட்டு, உங்கள் சந்தோஷம் அதிகரிக்கிறது. சத்தியயுகத்தில் நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்கள், பின்னர் அந்தச் சந்தோஷம் படிப்படியாகக் குறைவடைந்து மறைந்து விடுகிறது. சத்தியயுகத்தில் இருந்து கலியுகம் வரையிலான பயணத்திற்கு 5000 வருடங்கள் எடுத்துள்ளன. சுவர்க்கத்தில் இருந்து நரகம் வரையிலான பயணம் பற்றியும், எவ்வாறு நீங்கள் சுவர்க்கத்தில் இருந்து நரகத்திற்கு வருகிறீர்கள் என்பதைப் பற்றியும் இப்பொழுது அறிவீர்கள். இப்பொழுது நீங்கள் நரகத்தில் இருந்து சுவர்க்கத்துக்குச் செல்கிறீர்கள். “ஒரு விநாடியில் ஜீவன்முக்தி” என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. நீங்கள் தந்தையை இனங்கண்டு கொண்டீர்கள். தந்தை வந்துள்ளார். எனவே அவர் நிச்சயமாக எங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார். ஒரு குழந்தை பிறந்தவுடன், அவர் சொத்துக்கு அதிபதி ஆகுகிறார். இப்பொழுது நீங்கள் தந்தைக்கு உரியவர் என்பதால், உங்கள் போதை அதிகரிக்க வேண்டும். அது ஏன் குறைய வேண்டும்? நீங்கள் மிகவும் மகத்தானவர்கள். இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தைக்கு உரியவர்கள், அதனால் உங்களுக்கு எல்லையற்ற இராச்சியத்திற்கான ஓர் உரிமை உள்ளது. இதனாலேயே நினைவுகூரப்பட்டுள்ளது: அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிய விரும்பினால், கோபிவல்லபருக்குச் சொந்தமான (கோபிகளின் தந்தை) கோபர், கோபிகைகளைக் கேளுங்கள். வல்லபரே தந்தை என்பதனால் அவரைக் கேளுங்கள். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, உங்கள் சந்தோஷப் பாதரசம் உயர்கின்றது. சிலர் மிக விரைவில் ஏனையோரைத் தங்களுக்குச் சமமாக ஆக்குவார்கள். ஏனைய அனைத்தையும் மறக்கச் செய்து, அவர்களுடைய இராச்சியத்தைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்டுவதே, குழந்தைகளாகிய உங்கள் பணி: நீங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தீர்கள். இது இப்பொழுது பழைய உலகமான கலியுகம், பின்னர் அங்கே புதிய உலகம் இருக்கும். தந்தை பாரதத்திற்கு 5000 வருடங்களுக்கு ஒருமுறை வருகிறார் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தந்தை வந்து எங்களுக்கு இராச்சியத்தைக் கொடுத்த பின்னர் திரும்பிச் செல்கிறார், பின்னர் அவரை நினைவுசெய்ய வேண்டிய தேவை இருக்காது என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர், பக்தி மார்க்கம் ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அவரை நினைவுசெய்ய ஆரம்பிக்கிறீர்கள். ஆத்மாக்கள் பொக்கிஷம் அனைத்தையும் பயன்படுத்தி முடித்து விட்டதால், தந்தையை நினைவுசெய்து கூறுகிறார்கள்: பாபா, மீண்டும் ஒருமுறை வாருங்கள், எங்களை அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் அழைத்துச் செல்லுங்கள். அவரே உங்கள் தந்தையும் ஆசிரியரும் குருவும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். உங்கள் புத்தியில் உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியும், 84 பிறவிகளின் இந்த ஞானமும் உள்ளது. நீங்கள் எண்ணற்ற தடவைகள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள், தொடர்ந்தும் அவற்றை எடுப்பீர்கள். இதற்கு முடிவே இல்லை. இந்தச் சக்கரம் உங்கள் புத்தியில் மாத்திரமே உள்ளது; சுயதரிசனச் சக்கரம் மீண்டும் மீண்டும் நினைவுகூரப்பட வேண்டும். இது “மன்மனாபவ” ஆகும். நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை நெருங்கும் பொழுது, எந்தப்பாவச் செயலையும் செய்ய மாட்டீர்கள். இப்பொழுதும் சில பாவச்செயல்கள் செய்யப்படுகின்றன. இன்னமும் உங்களில் எவரும் உங்களுடைய முழுமையான கர்மாதீத ஸ்திதியை அடையவில்லை. உங்களுடன், இந்த பாபாவும் ஒரு மாணவர் ஆவார். உங்களுக்குக் கற்பிப்பவர் சிவபாபா. அவர் இவரில் பிரவேசித்தாலும், இவரும் ஒரு மாணவரே. இவை புதிய விடயங்கள். இப்பொழுது தந்தையையும் உலகச் சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள். அது பக்தி மார்க்கம், இதுவோ இந்த ஞான மார்க்கம் ஆகும். பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. அங்கே, மக்கள் இசைக் கருவிகளை இசைத்து, மணிகள் போன்றவற்றையும் அடிக்கிறார்கள். இங்கே, நீங்கள் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். ஆத்மாக்கள் அமரத்துவமானவர்கள். அமரத்துவ சிம்மாசனமும் உள்ளது. தந்தை மாத்திரமே அமரத்துவ ரூபமானவர் என்றல்ல, நீங்களும் அமரத்துவ ரூபங்களே. நெற்றியே அமரத்துவ ரூபமாகிய, ஆத்மாவின் சிம்மாசனம் ஆகும். அவர் நிச்சயமாக நெற்றியில் இருக்கிறார். ஓர் ஆத்மா வயிற்றில் இருக்க மாட்டார். அமரத்துவ ரூபமாகிய, ஆத்மாவின் சிம்மாசனம் எங்கே உள்ளது என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். எங்கள் நெற்றியின் மத்தியில் எங்கள் சிம்மாசனங்கள் உள்ளன. அம்ரித்சாரில், அமரத்துவ ரூபத்தைக் கொண்டிருந்து, அமரத்துவ ரூபத்தின் புகழைப் பாடினாலும், அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தங்கள் அமரத்துவ சிம்மாசனம் பற்றி எவரும் அறிய மாட்டார்கள். இதுவே அவர் அமர்ந்து உங்களுடன் பேசுகின்ற அமரத்துவ சிம்மாசனம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்கள் அழியாதவர்கள், சரீரங்கள் அழியக்கூடியவை. இதுவே ஆத்மாவின் அமரத்துவ சிம்மாசனம் ஆகும். இது எப்பொழுதும் அமரத்துவ சிம்மாசனமாகவே இருக்கிறது. நீங்கள் இதைப் புரிந்து கொள்கிறீர்கள். பின்னர் அந்த மக்கள் ஒரு பௌதீகச் சிம்மாசனத்தை உருவாக்கி அதற்கு அந்தப் பெயரைக் கொடுத்துள்ளார்கள். உண்மையில், அமரத்துவமான ஆத்மா இங்கே அமர்கிறார். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் “ஏக் ஓம்கார்” (ஒரேயொரு அசரீரியானவர்) என்பதன் அர்த்தம் உள்ளது. நீங்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறீர்கள். மக்கள் ஆலயங்களுக்குச் சென்று இராமரினதும், நாராயணனினதும் புகழைப் (அச்சுதம் கேசவம் ஸ்ரீ இராமா நாராயணன்… கடவுளின் புகழ், வெவ்வேறு பெயர்கள்) பாடுகிறார்கள். அதற்கு அர்த்தம் இல்லை. இவ்வாறாக அவர்கள் தொடர்ந்தும் புகழ் பாடுகிறார்கள். இப்பொழுது இராமருக்கும் நாராயணனுக்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது. தந்தை கூறுகிறார்: அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. இந்த ஞானம் மிகவும் இலகுவானது. நீங்கள் வேறு எதைப் பற்றியும் வினவுவதற்கு முன்னர், தந்தையையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். அவர்கள் இதனை மறந்து விடுவதால், எவராலும் இந்த முயற்சியைச் செய்ய இயலாதுள்ளது. ஒரு நாடகம் உள்ளது: மாயை உங்களை ஒருபுறம் திருப்ப, கடவுள் மறுபுறம் திருப்புகிறார். நீங்கள் தந்தையை நினைவு செய்யும் பொழுது, மாயை பல புயல்களை உருவாக்குகின்றாள். மாயையின் கட்டளை: சக்திசாலியாகிச் சக்தி நிறைந்தவர்களுடன் சண்டையிடுங்கள். நீங்கள் அனைவரும் யுத்த களத்தில் இருக்கிறீர்கள். அங்கே எவ்விதமான போராளிகள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். சிலர் மிகவும் பலவீனமானவர்களும் சிலர் சிறிதளவு பலவீனமானவர்களும் ஏனையோர் மிகவும் சக்தி நிறைந்தவர்களும் ஆவர். எல்லோரும் மாயையுடன் ஒரு மறைமுகமான முறையில் வெளியே தெரியாமல் யுத்தம் செய்கிறார்கள். அந்த மக்கள் தங்கள் குண்டுகளை நிலத்துக்குக் கீழே பரீட்சிக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இதையும் நன்றாக அறிவீர்கள். தங்கள் சொந்த மரணத்திற்காகவே அவர்கள் அனைத்தையும் செய்கிறார்கள். நீங்கள் முழுமையான மௌனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். அவர்களிடம் விஞ்ஞான சக்தி உள்ளது. பல இயற்கை அனர்த்தங்களும் உள்ளன. அவற்றையிட்டு எவராலும் எதையும் செய்ய முடியாது. இப்பொழுது அவர்கள் செயற்கை மழையை உருவாக்கவும் முயற்சி செய்கிறார்கள். அவர்களால் செயற்கை மழையை உருவாக்க முடியும் என்றால், அவர்களால் பல பயிர்களை வளர்க்கவும் முடியும். எவ்வளவுதான் மழை பெய்தாலும், நிச்சயமாக இயற்கை அனர்த்தங்கள் இருக்கும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அடைமழை ஏற்படும். ஆகவே உங்களால் அப்பொழுது என்ன செய்ய முடியும்? அவை இயற்கை அனர்த்தங்கள் என அழைக்கப்படுகின்றன. சத்தியயுகத்தில் அந்த விடயங்கள் இருப்பதில்லை. அவை இங்கே நடைபெறுகின்றன, அவை விநாசத்துக்கு உதவும். நீங்கள் சத்தியயுகத்தில் இருக்கும் பொழுது, யமுனை நதிக்கரையில் தங்க மாளிகைகளில் வாழ்வீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. எங்களில் மிகச் சொற்ப அளவினரே அங்கே வசிப்போம். அது ஒவ்வொரு கல்பமும் இவ்வாறாகவே தொடரும். முதலில், அங்கே சொற்ப அளவினரே இருப்பார்கள், பின்னர் விருட்சம் வளரும். அங்கே, அசுத்தத்தை உண்டாக்கும் எதுவும் இருக்காது. இங்கே, பறவைகளும் எங்கும் அசுத்தம் ஆக்குகின்றன. அங்கே, எவ்வகையான அசுத்தமும் இருக்க மாட்டாது. அது சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது. நீங்கள் தேவர்களாக ஆகுகிறீர்கள் என்பதனால் உங்களுக்குள் அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். ஜீனியாகிய, மாயையிடம் இருந்து உங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குத் தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இந்த ஆன்மீக வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபடுங்கள். மன்மனாபவ! இதில் ஒரு ஜீனி ஆகுங்கள், அவ்வளவுதான்! சில வேலைகளைச் செய்யக் கொடுக்கும்படி கேட்ட ஜீனியின் உதாரணத்தை அவர்கள் கொடுக்கிறார்கள். ஆகவே, பாபாவும் உங்களுக்குச் சில வேலைகளைக் கொடுக்கிறார். இல்லாவிட்டால், மாயை உங்களை விழுங்கி விடுவாள். தந்தையின் முழுமையான உதவியாளர்கள் ஆகுங்கள். தந்தை எதையும் தனியாகச் செய்ய மாட்டார். தந்தை ஆட்சி செய்வதில்லை. நீங்கள் சேவை செய்கிறீர்கள். எனவே இராச்சியமும் உங்களுக்கானதே. தந்தை கூறுகிறார்: அதி தூய்மையற்ற தேசத்துக்குள் நான் வருகின்றேன். மாயை ஒரு பெரிய முதலை; அவள் மகாராத்திகள் பலரையும் விழுங்குகிறாள். அவர்கள் அனைவரும் எதிரிகள். ஒரு தவளையின் எதிரி பாம்பு ஆகும். உங்கள் எதிரி மாயை என்பதை நீங்கள் அறிவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களைப் பாவங்களில் இருந்து விடுவிப்பதற்கு, முயற்சி செய்யுங்கள். ஒருபொழுதும் சரீர உணர்வு உடையவர்கள் ஆகாதீர்கள். இவ்வுலகில் உள்ள எதன் மீதும் பற்று வைக்காதீர்கள்.

2. ஜீனியாகிய மாயையிடம் இருந்து, பாதுகாப்பாக இருப்பதற்கு, உங்கள் புத்தியை இந்த ஆன்மீக வியாபாரத்தில் மும்முரமாக வைத்திருங்கள். தந்தையின் முழுமையான உதவியாளர்கள் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் பொக்கிஷங்கள் அனைத்தையும் சரியான வேளையில் பயன்படுத்துவதன் மூலம் சந்தோஷ பாக்கியத்தைக் கொண்டதோர் ஆத்மாவாகி சதா சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்களாக.

நீங்கள் உங்களின் பிராமணப் பிறவி எடுத்தவுடனேயே, நாள் முழுவதற்கும் பல மேன்மையான சந்தோஷப் பொக்கிஷங்களைப் பாப்தாதாவிடம் இருந்து பெற்றுள்ளீர்கள். இதனாலேயே, இன்றும், உங்களின் பெயரைக் கேட்டதுமே பக்தர்கள் தற்காலிகமான சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள். உங்களின் உயிரற்ற விக்கிரகங்களைக் கண்டதும் அவர்கள் சந்தோஷத்தில் நடனம் ஆட ஆரம்பிக்கிறார்கள். அதேபோல், உங்கள் எல்லோருக்கும் சந்தோஷ பாக்கியம் உள்ளது. ஏனென்றால் நீங்கள் பல பொக்கிஷங்களைப் பெற்றுள்ளீர்கள். இப்போது அவற்றைச் சரியான வேளையில் பயன்படுத்துங்கள். சதா அவற்றுக்கான சாவியை உங்களின் முன்னாலேயே வைத்திருங்கள். அதாவது, இவற்றைச் சதா உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து அந்த விழிப்புணர்வை நடைமுறை வடிவில் கொண்டு வாருங்கள். நீங்கள் சதா சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள்.

சுலோகம்:
தந்தையின் மேன்மையான எதிர்பார்ப்புக்களின் ஒளியை ஏற்றி வைப்பவர்களே, குல தீபங்கள் (தீபக்) ஆவார்கள்.

அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள்.
ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருங்கள். புறநோக்கைக் கைவிடுங்கள். நீங்கள் சிரமப்படுவதில் இருந்து பாதுகாக்கப்பட்டு, அனுபவக் கடலில் அமிழ்ந்து இருப்பீர்கள். ஒன்றோ அல்லது இரண்டோ அனுபவங்கள் இல்லை, ஆனால் அதிகளவான அனுபவங்கள் ஏற்படும். ஒன்றோ அல்லது இரண்டோ அனுபவங்களை மட்டும் பெற்று, அனுபவங்களின் குளத்தில் மட்டும் குளிக்காதீர்கள். கடலானவரின் குழந்தைகளாக, அனுபவங்களின் கடலில் அமிழ்ந்து இருங்கள்.