22.06.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.12.2005     Om Shanti     Madhuban


புது வருடத்தில், அன்பினதும் ஒத்துழைப்பினதும் ரூபத்தை மேடையில் கொண்டு வாருங்கள். ஒவ்வொருவருக்கும் நற்குணங்களினதும் சக்திகளினதும் பரிசை வழங்குங்கள்.


இன்று, தந்தையான இறைவன், இறையன்பின் உரிமையைக் கொண்டுள்ள எங்கும் உள்ள தனது குழந்தைகளைப் பார்க்கிறார். உலகில் பலமில்லியன்களில் கைப்பிடி அளவினர் மட்டுமே இந்த இறையன்பைப் பெறுகிறார்கள். இந்த இறையன்பானது சுயநலமற்ற அன்பாகும். ஏனென்றால், பரமாத்மாவான இறைவன் மட்டுமே அசரீரியானவரும் அகங்காரம் அற்றவரும் ஆவார். மனித ஆத்மாக்கள் சரீரதாரிகளாக இருப்பதனால், அவர்களிடம் நிச்சயமாக ஏதாவதொரு சுயநலமான நோக்கம் காணப்படும். தந்தையான இறைவன் மட்டுமே தனது குழந்தைகளுக்கு இத்தகைய தன்னலமற்ற அன்பை வழங்க முடியும். இறையன்பானது பிராமண வாழ்க்கைக்கான விசேடமான அடிப்படை ஆகும். இது இந்த பிராமண வாழ்க்கையின் வாழ்க்கைத் தானம் ஆகும். இறையன்பானது பிராமண வாழ்க்கையில் குறைவாக இருந்தால், அன்பில்லாத அந்த வாழ்க்கையை இரசிக்க முடியாது. அது வரண்டதொரு வாழ்க்கை ஆகிவிடும். இறையன்பே சதா உங்களின் வாழ்க்கையில் இருப்பதுடன் எல்லா வேளைகளிலும் உங்களின் சகபாடியாக உங்களுடன் ஒத்துழைக்கிறது. எங்கே அன்பும் சகவாசமும் இருக்கிறதோ, அங்கே எல்லாமே மிகவும் இலகுவானதாகவும் எளிமையானதாகவும் ஆகும். சிரமப்படுகின்ற அனுபவம் இருக்க மாட்டாது. உங்களுக்கு இந்த அனுபவம் உள்ளதல்லவா? இறையன்பைக் கொண்டிருப்பவர்கள் எந்தவொரு நபராலோ அல்லது பொருளாலோ கவரப்பட முடியாது. ஏனென்றால், இறையன்பும் இறைவனின் கவர்ச்சியும் நீங்கள் சதா அன்பிலே திளைத்திருக்கக் கூடிய அன்பின் அனுபவத்தைக் கொடுக்கும். மக்கள் இதை இறைவனில் கலந்து விடுதல் எனப் புரிந்து கொண்டுள்ளார்கள். யாரும் இறைவனுடன் ஒன்றுகலப்பதில்லை. ஆனால் இறையன்பிலேயே அமிழ்ந்திருப்பார்கள்.

பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகளைப் பார்க்கிறார். எல்லோரும் இறைவன் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு வகையினர், அன்பான குழந்தைகள். மற்றைய வகையினர், அன்பிலே அமிழ்ந்துள்ள குழந்தைகள். எனவே, உங்களையே கேளுங்கள்: எல்லோரும் அன்பானவர்களே. ஆனால், எந்தளவிற்கு நீங்கள் அன்பிலே அமிழ்ந்திருக்கிறீர்கள்? அன்பிலே திளைத்திருக்கும் குழந்தைகளின் அடையாளம், அவர்கள் எப்போதும் மற்றும் இலகுவாகவும் இறை வழிகாட்டல்களைப் பின்பற்றுவார்கள். அந்த வழிகாட்டல்களைப் பின்பற்றுவது என்று வரும்போது, அவர்கள் கீழ்ப்படிவானவர்கள். அத்துடன் அவர்கள் தமது சரீர உணர்வை அர்ப்பணித்திருப்பார்கள். ஏனென்றால், எங்கே அன்பு உள்ளதோ, அங்கே உங்களை அர்ப்பணிப்பது கடினம் இல்லை. முதலாவது வழிகாட்டலானது: நீங்கள் யோகி ஆகுவீர்களாக! நீங்கள் புனிதம் (தூய்மை) ஆகுவீர்களாக! தந்தைக்கு குழந்தைகளான உங்களிடம் அன்பு இருப்பதனால், குழந்தைகளான நீங்கள் சிரமப்படுவதை அவரால் பார்க்க முடியாது. ஏனென்றால், நீங்கள் 63 பிறவிகளாக அதிகளவு சிரமப்பட்டீர்கள் என்பதை அவர் அறிவார். இப்போது, இந்த அலௌகீகப் பிறவியானது நீங்கள் சிரமப்படுவதில் இருந்து விடுபடவும் அதீந்திரிய சந்தோஷத்தின் களிப்பை அனுபவம் செய்வதற்கும் ஆகும். எனவே, நீங்கள் இந்தக் களிப்பைக் கொண்டாடுகிறீர்களா அல்லது நீங்கள் சிரமப்படுகிறீர்களா? அன்பு இருக்கும்போது, வழிகாட்டல்களைப் பின்பற்றுவது சிரமம் போல் தோன்றாது. நீங்கள் சிரமப்பட வேண்டியிருந்தால், அன்பிலே ஒரு சதவீதம் குறைவாக இருக்கிறது என்பதே அதன் அர்த்தம். எங்கேயோ ஏதாவதொரு வகையான ஒழுக்கு உள்ளது. இரண்டு விடயங்களின் ஒழுக்கு உங்களைச் சிரமப்பட வைக்கிறது. 1. பழைய உலகின் மீதான கவர்ச்சி - இதில் உறவுமுறைகளும் சடப்பொருட்களும் அடங்கும். 2. பழைய சம்ஸ்காரங்களின் மீதான கவர்ச்சி. இந்தப் பழைய உலகமும் பழைய சம்ஸ்காரங்களும் உங்களைத் தம்மை நோக்கிக் கவருகின்றன. எனவே, இறைவனின் அன்பிலே சதவீதம் உள்ளது. உங்களைச் சோதித்துப் பாருங்கள்: நான் இந்த இரண்டு வகையான ஒழுக்குகளில் இருந்தும் விடுபட்டிருக்கிறேனா? நினைவில் வைத்திருங்கள்: ஆத்மாவான உங்களின் அநாதியான, ஆதியான சம்ஸ்காரங்கள் எவை? இறுதியில் இந்த பிராமண வாழ்க்கையின் சம்ஸ்காரங்கள் எவை? உங்களிடம் அநாதியாக, ஆரம்பத்திலும் அத்துடன் இப்போது இறுதியிலும் மேன்மையான சம்ஸ்காரங்கள் உள்ளன. அந்தப் பழைய சம்ஸ்காரங்கள் மத்திய காலப்பகுதிக்கு உரியவை. அவை அநாதியானவை. ஆரம்ப காலத்திற்கோ இறுதிக் காலத்திற்கோ உரியவை அல்ல. எவ்வாறாயினும், உங்கள் எல்லோருடைய இலட்சியம் என்ன? எந்தவொரு குழந்தையையும் கேளுங்கள். நீங்கள் ஒரேயொரு பதிலை மட்டுமே பெறுவீர்கள்: ‘எனது இலட்சியம் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதே’. இதுதானே? இதுதான் என்றால், உங்களின் கையை உயர்த்துங்கள்! இதுதான் உங்களின் இலட்சியம் என்பது உங்களுக்கு உறுதியாக இருக்கிறதுதானே? அல்லது, அது இடையில் மாறுகிறதா?

தந்தை குழந்தைகளான உங்களைக் கேட்கிறார்: பாபா மற்றும் தாதா இருவரிலும் சமமாக இருக்கும் சம்ஸ்காரங்கள் எவை? தந்தை எப்போதும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் பெருந்தன்மையான இதயத்துடனேயே இருக்கிறார். அவர் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அன்பையும் மரியாதையையும் கொடுப்பதில் எப்போதும் ஒத்துழைப்பவராகவே இருக்கிறார். எனவே, அதேபோல் நீங்களும் உங்களை ஒவ்வோர் ஆத்மாவுடனும் ஒத்துழைப்பவராக அனுபவம் செய்கிறீர்களா? அவர்கள் ஒத்துழைக்கும் போது நீங்கள் ஒத்துழைப்பதென்று இல்லை. அல்லது, அவர்கள் அன்பாக இருக்கும்போது நீங்கள் அன்பைக் கொடுப்பது என்றில்லை. இல்லை. எப்படி தந்தை பிரம்மா ஒவ்வொரு குழந்தையுடனும் ஒத்துழைப்பவராகவும் அன்பாகவும் இருக்கிறாரோ, அதேபோல், எல்லோருடனும் அன்பாகவும் ஒத்துழைப்பவராகவும் இருங்கள். இது சமமாக இருத்தல் எனப்படுகிறது. உங்களின் சம்ஸ்காரங்களை மாற்றுவதில் குழந்தைகளான நீங்கள் சிரமப்பட்டால், அதற்கான காரணம் என்ன? தந்தை பிரம்மா தன்னில் கவனம் செலுத்தினார். ஆனால் அவர் சிரமப்படவில்லை. சம்ஸ்காரங்களை மாற்றுவதில் நீங்கள் சிரமப்படுவதற்கான காரணம், நீங்கள் அன்பானவராக ஆகினாலும் நீங்கள் அன்பிலே திளைத்திருப்பது இல்லை.

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் அன்பான குழந்தையாகக் கருதுகிறார். ஒவ்வொரு குழந்தையும் இத்தகையவர் என்பதை அவர் அறிவார். அவருக்கு ஒவ்வொரு குழந்தையின் ஜாதகமும் தெரியும். அப்படி இருந்தும் அவர் என்ன சொல்கிறார்? இந்தக் குழந்தை அன்பானவர். பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் அதே படிப்பை, அதே பராமரிப்பை, அதே ஆசீர்வாதத்தையே வழங்குகிறார். அந்தக் குழந்தை கடைசி இலக்கங்களில் இருக்கிறார் என்பதை பாப்தாதா அறிந்திருந்தாலும், அவர் எந்தவொரு குழந்தையின் குறைபாட்டை அல்லது பலவீனத்தைத் தனது எண்ணங்களிலும் வைத்திருப்பதில்லை. பாப்தாதா சதா அவர்களை அன்பானவர்களாகவும் நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட அதியன்பான குழந்தைகள், மிக இனிமையான குழந்தைகள் என்ற பார்வையுடனும் மனோபாவத்துடனுமே பார்க்கிறார். ஏனென்றால், இந்த மனோபாவம் மற்றும் மேன்மையான பார்வையால் மட்டுமே அந்தப் பலவீனமானவர்கள் மகாவீரர்கள் ஆகுவார்கள்; என்பதை அவர் அறிவார். அதேபோல், உங்களின் மேன்மையான மனோபாவம், நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகளினூடாக உங்களால் எவரையும் மாற்ற முடியும். நீங்கள் இயற்கையின் கூறுகளையும் நிச்சயமாக மாற்றுவீர்கள் என்ற சவாலை விடுத்திருக்கும்போது, உங்களால் ஆத்மாக்களை மாற்ற முடியாதா? நீங்கள் சடப்பொருளை வெல்பவர்கள் ஆகியுள்ளீர்கள். எனவே, ஆத்ம உணர்வெனும் மேன்மையான உணர்வினாலும் நன்மை செய்கின்ற விருப்பத்துடனும் உங்களால் ஆத்மாக்களை மாற்ற முடியாதா?

இப்போது, புதிய வருடம் ஆரம்பம் ஆகப் போகிறதுதானே? எனவே, புது வருடத்தில், எல்லையற்ற பிராமணக் குடும்பத்தில் உள்ள உங்கள் எல்லோருக்கும் இடையில், உங்களின் நல்லாசிகளாலும் மேன்மையான உணர்வுகளாலும் நீங்கள் எல்லோரும் உங்களை மாற்றுவதற்கு ஒருவரோடு ஒருவர் உதவி செய்ய வேண்டும். யாராவது ஒருவர் பலவீனமாக இருந்தாலும் அவரின் சம்ஸ்காரங்களில் ஒரு குறிப்பிட்ட பலவீனம் அவரிடம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் உங்களின் அன்பும் மற்றும் ஒத்துழைப்பு என்ற சக்திகளால் அவருக்கு உதவி செய்யுங்கள். ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புக் கரத்தைக் கொடுங்கள். ஒத்துழைப்புடன் கைகுலுக்கும் காட்சியானது, நீங்கள் இன்னொருவரின் கையில் உங்களின் கையை வைத்து, ஒத்துழைப்பில் நீங்கள் ஒன்று சேர்வதைப் போன்று இருக்கும். அப்போது ஒரு மாலை தயாராகும். கற்பித்தல்களைக் கொடுக்காதீர்கள். ஆனால் அன்பான ஒத்துழைப்பைக் கொடுங்கள். பற்றற்றவர் ஆகாதீர்கள். அப்பால் செல்லாதீர்கள். ஆனால் ஓர் ஆதாரம் ஆகுங்கள். ஏனென்றால், வெற்றி மாலையே உங்களின் ஞாபகார்த்தம் ஆகும். ஒவ்வொரு மணியும் ஏனைய மணிகளுடன் ஒத்துழைக்கும் சகபாடி, இதனாலேயே மாலையின் வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

எல்லோரும் பாப்தாதாவிடம் தாம் புது வருடத்திற்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்கிறார்கள். செய்தியைக் கொடுக்கும் பல நிகழ்ச்சிகளை நீங்கள் செய்துள்ளீர்கள். நீங்கள் அதைச் செய்கிறீர்கள், தொடர்ந்தும் அதைச் செய்வீர்கள். இப்போது, செய்தியை வழங்குபவர்களின் அன்பையும் ஒத்துழைப்பையும் மேடையில் கொண்டு வாருங்கள். ஒரு மகாதானி ஆகுங்கள். உங்களின் நற்குணங்களால் ஒத்துழையுங்கள். மற்றவர்களையும் அப்படியே ஆக்குங்கள். உங்களின் நற்குணங்களால் - உண்மையில், அவை இறை குணங்கள். ஆனால், நீங்கள் அவற்றை உங்களுடையது ஆக்கியுள்ளீர்கள். அவர்களின் பலவீனங்களை நீக்குவதற்கு நீங்கள் அந்த நற்குணங்களின் சக்தியைப் பயன்படுத்துங்கள். உங்களால் இதைச் செய்ய முடியுமா? உங்களால் அதைச் செய்ய முடியுமா அல்லது அது கஷ்டமான காரியமா? ஆசிரியர்களே, பேசுங்கள்! உங்களால் இதைச் செய்ய முடியுமா? உங்களால் அதைச் செய்ய முடியுமா? அல்லது, நீங்கள் நிச்சயமாக அதைச் செய்ய வேண்டுமா? நீங்கள் நிச்சயமாக அதைச் செய்ய வேண்டும். எவரும் பலவீனங்களுடன் இருக்கக்கூடாது. ஏனென்றால், நீங்கள் எல்லோரும் பலமில்லியன்களில் அதிர்ஷ்டசாலிகளான கைப்பிடி அளவினர் ஆவீர்கள், அப்படித்தானே? அது கடைசி மணியாக இருந்தாலும், அது பலமில்லியன்களில் கைப்பிடி அளவினரில் ஒன்றேயாகும். உங்களின் பட்டம், மாஸ்ரர் சர்வசக்திவான்கள் என்பதே. எனவே, சர்வசக்திவான்களாக இருப்பவர்களின் கடமை என்ன? சக்தியைக் கொடுப்பதும் எடுப்பதுமே. நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்ற நற்குணங்களை உங்களுக்கு இடையே கொடுப்பதும் எடுப்பதுமே. ஒருவருக்கு ஒருவர் இந்த ஒத்துழைப்பெனும் பரிசைக் கொடுங்கள். புது வருடத்தில், மக்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை வழங்குகிறார்கள்தானே? எனவே, இந்த வருடம், ஒருவருக்கு ஒருவர் நற்குணங்கள் என்ற பரிசைக் கொடுங்கள். எல்லோருக்காகவும் நன்மை செய்யும் உணர்வுகளை வைத்திருங்கள். அதன்பின்னர், நீங்கள் எப்படி சொற்பொழிவுகளாலும் வார்த்தைகளாலும் செய்தியைக் கொடுக்கிறீர்களோ, அவ்வாறே, உங்களின் நன்மை செய்யும் உணர்வுகளால், நன்மை செய்யும் மனோபாவத்தால், நன்மை செய்யும் சூழலால் இந்த நற்குணங்களின் பரிசையும் சக்திகளின் பரிசையும் எல்லோருக்கும் கொடுங்கள். பலவீனமானவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது என்றால், சரியான நேரத்தில் பரிசை வழங்குதல் என்று அர்த்தம். விழுந்தவர்களை மேலும் விழச் செய்யாதீர்கள். அவர்களைத் தூக்கி விடுங்கள். அவர்களை உயரே தூக்கிவிடுங்கள். ‘இவர் இப்படிப்பட்டவர், அவர் அப்படிப்பட்டவர்’ என்பதாக இருக்கக்கூடாது. அவர்கள் இறையன்பிற்குத் தகுதியானவர்கள். அவர்கள் பலமில்லியன்களில் கைப்பிடி அளவினர், அவர்கள் விசேடமான ஆத்மாக்கள். அவர்கள் வெற்றி பெறப் போகும் ஆத்மாக்கள். இந்தப் பார்வையைக் கொண்டிருங்கள். இப்போது உங்களின் மனோபாவத்தையும் பார்வையையும் சூழலையும் மாற்றுங்கள். ஏதாவது புதுமை இருக்க வேண்டும். ஒரு பலவீனத்தைப் பார்த்தாலும் அதைப் பார்க்காதிருங்கள். உற்சாகத்தையும் ஒத்துழைப்பையும் கொடுங்கள். இத்தகையதொரு பிராமண ஒன்றுகூடலைத் தயார் செய்யுங்கள். அந்த வெற்றிக்காக பாப்தாதா உங்களுக்காகக் கைதட்டிப் பாராட்டுவார். நீங்களும் மீண்டும் மீண்டும் கைதட்டுகிறீர்கள்தானே? அதன்பின்னர், பாப்தாதா உங்களை, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்! எனக் கைதட்டிப் பாராட்டுவார். நீங்களும் பாப்தாதாவுடன் சேர்ந்து கைதட்டுவீர்கள்தானே? நீங்கள் கைதட்டினீர்கள். அது நன்றாக இருந்தது. ஆனால் இப்போது உலகமே கைதட்ட வேண்டும். எல்லோருடைய வாயில் இருந்தும், ‘எமது விசேடமான இஷ்ட தெய்வங்கள் வந்துவிட்டார்கள்! எமது பூஜிக்கத் தகுதிவாய்ந்த ஆத்மாக்கள் வந்து விட்டார்கள்!’ என்ற ஒலி வெளிப்பட வேண்டும். இந்த இலட்சியம் உறுதியாக இருக்கிறதுதானே? நீங்கள் செய்வீர்கள் என்ற இலட்சியம் உறுதியாக உள்ளதல்லவா? அல்லது, நீங்கள் அதைப் பற்றிச் சிந்தித்துத் திட்டங்கள் போன்றவற்றைச் செய்வீர்களா? நீங்கள் அதைச் செய்யவே வேண்டும். திட்டங்களை ஒருபுறம் ஒதுக்கி வையுங்கள். நீங்கள் அதைச் செய்யவே வேண்டும். எல்லோரும் இப்போது காத்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் காத்திருப்பதை முடிவிற்குக் கொண்டு வாருங்கள். இப்போது வெளிப்படுத்தலுக்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள். பாருங்கள், இப்போது பஞ்சபூதங்களும் அதிகளவில் கொந்தளிக்கின்றன. எனவே, பஞ்சபூதங்களையும் சாந்தப்படுத்துங்கள். நீங்கள் வெளிப்படுத்தப்படும்போது, தானாகவே உலக அமைதி ஏற்படும். அச்சா.

தற்காலத்தில், உலகிலுள்ள மக்கள் குறிப்பாக இரண்டு விடயங்களைச் செய்கிறார்கள். தேக அப்பியாசம் மற்றும் அவர்களின் உணவில் கவனம் செலுத்துதல். எனவே, நீங்களும் இந்த இரண்டையும் செய்கிறீர்களா? உங்களின் தேக அப்பியாசம் என்ன? எல்லோரும் பௌதீகமான அப்பியாசங்களைச் செய்கிறார்கள். ஆனால் மனதின் அப்பியாசம்: ஒரு நிமிடம் ஒரு பிராமணர் ஆகவேண்டும். பின்னர் ஒரு தேவதை ஆக வேண்டும். பின்னர் தேவர் ஆகப் போகின்ற ஒரு தேவதை ஆகவேண்டும். சதா மனதின் இந்த அப்பியாசத்தைத் தொடர்ந்தும் செய்யுங்கள். அத்துடன் மனதின் தூய உணவு, தூய எண்ணங்களே. உங்களுக்குள் வீணான அல்லது எதிர்மறையான எண்ணங்கள் ஏற்பட்டால், அது மனதிற்கான தூய்மையற்ற உணவாகும். எனவே, எப்போதும் உங்களின் மனதில் தூய உணவே இருக்க வேண்டும். இரண்டையும் எப்படிச் செய்வது என உங்களுக்குத் தெரியும்தானே? நீங்கள் விரும்பிய அளவு நேரத்திற்கு, தூய எண்ணங்களின் சொரூபம் ஆகுங்கள். அச்சா.

இறையன்பின் உரிமையைக் கொண்டுள்ள எங்கும் உள்ள விசேடமான ஆத்மாக்கள் எல்லோருக்கும் தந்தையுடன் அன்பாகவும் ஒத்துழைப்பாகவும் இருப்பதுடன் எப்போதும் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்கும் ஆத்மாக்களுக்கும் ‘நாங்கள் வெற்றி பெறுபவர்கள், நாங்கள் உலகில் வெற்றிக் கொடியை ஏற்றுவோம்’ என்ற இலட்சியத்தை நடைமுறையில் கடைப்பிடிக்கும் வெற்றியாளர் குழந்தைகளுக்கும் தந்தைக்குச் சமமாக இருப்பதுடன் சதா இந்தப் பழைய உலகம் மற்றும் அதன் சம்ஸ்காரங்களின் எந்தவிதமான கவர்ச்சிக்கும் அப்பாற்பட்டு இருப்பவர்களுக்கும் இதயங்களுக்கு சௌகரியம் அளிக்கும் தந்தையின் இதயபூர்வமான அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

தாதிஜியிடம்: நீங்கள் மிக நல்லதொரு பாகத்தை நடிக்கிறீர்கள். உங்களைப் பார்க்கும்போது, எல்லோரும் தேவதை வாழ்க்கையை நினைக்கிறார்கள். அன்பாகவும் பற்றற்றும் இருத்தல்.

குஜராத்தின் பிரதானமான 13 கருவி ஆசிரியர்களிடம்: நீங்கள் நல்ல மகாவீரர்கள். மகாவீரர்களின் கடமை, வெற்றியாளராக இருப்பதுடன் மற்றவர்களையும் வெற்றி பெறச் செய்வதே ஆகும். நீங்கள் எல்லோரும் நல்ல சேவை செய்கிறீர்கள். எதிர்காலத்திலும் சேவை தொடர்ந்து நடக்கும். குழந்தைகளான உங்களிடம் உள்ள ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பார்க்கும்போது பாப்தாதாவிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் ஒலியை குஜராத் எங்கும் மிக நன்றாகப் பரப்புகிறீர்கள். நீங்கள் தொடர்ந்தும் மேலும் அதிகமாகப் பரவச் செய்வீர்கள். பாப்தாதா குழந்தைகள் எல்லோரையும் நம்பிக்கை தீபங்களாகவே பார்க்கிறார். இது நல்லது. ஒன்றுகூடலும் நல்லது. உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பியல்பு உள்ளது. ஓகே? சந்தோஷமா? சந்தோஷத்தைப் பகிர்ந்து அளிப்பவர்கள். (சரளா தீதி பாப்தாதாவிடம் கேட்டார்: தாதிஜி யாரை மாலையில் வைத்தார்?) நீங்கள் என்ன நினைக்கிறார்கள்? ‘நான் நிச்சயமாக அதில் இருப்பேன்’ என நீங்கள் நினைக்கிறீர்களா? இன்னமும் சிறிதளவேனும் எஞ்சி இருந்தால், ஒத்துழைப்பைக் கொடுப்பதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அதை முடித்துவிடுங்கள். நீங்கள் எல்லோரும் நிச்சயமாகத் தந்தைக்குச் சமம் ஆகுபவர்கள். (நாங்கள் என்ன புதுமையை ஏற்படுத்த வேண்டும்?) ஒவ்வொரு நிலையமும் குறைந்தபட்சம் ஒரு வாரிசையாவது தயார் செய்ய வேண்டும் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. எனவே, அடுத்த வருடம், அவர்களை இங்கே அழைத்து வாருங்கள். குறைந்தபட்சம் 21 வாரிசுகளுடன் திரும்பி வாருங்கள். இதைச் செய்ய ஆரம்பியுங்கள். முதல் இலக்கத்தைக் கோருங்கள். எல்லோரும் ‘ஆம்’ என்றே கூறுகிறார்கள். ஒரு வாரிசின் தகைமைகளை நீங்கள் அறிவீர்கள்தானே? நீங்கள் அவர்கள் எல்லோரையும் பாபாவிற்குச் சொந்தமானவர்கள் ஆக்குவீர்கள்தானே? நீங்கள் அவர்களை உங்களுக்குச் சொந்தமானவர்கள் ஆக்க மாட்டீர்கள்தானே? அச்சா.

இந்தத் தடவை, இது குஜராத்தின் சேவை செய்வதற்கான முறை. குஜராத்தைச் சேர்ந்தவர்கள் பாப்தாதாவுடன் சந்திப்பைக் கொண்டாட வந்துள்ளார்கள். குஜராத்தைச் சேர்ந்த எல்லோரும், நீங்கள் சந்திப்பிற்காக வந்திருந்தாலென்ன அல்லது சேவை செய்ய வந்திருந்தாலென்ன, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பலர் இருக்கிறீர்கள். மிகவும் நல்லது. நீங்கள் நல்லதொரு வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். சிந்தியில் உள்ள பழமொழியில், ‘அடுப்பங்கரையில் இருப்பவர்கள் இதயத்தில் இருப்பார்கள்’ எனக் கூறுவதைப் போல், குஜராத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பாப்தாதா இவ்வாறுதான் கூறுகிறார். எனவே, குஜராத்தே எல்லாவற்றிலும் மிக நெருக்கமானவர்கள். நெருக்கமாக இருப்பவர்கள், கூப்பிடு தூரத்தில் (மிகவும் நெருக்கமாக) இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களை அழைத்ததும் அவர்கள் வருவார்கள். எனவே, குஜராத் இந்த முறையில் என்றும் தயாராக இருக்கிறீர்கள்தானே? எந்த வேளையில் வரும்படி அழைத்தாலும் நீங்கள் வருவீர்கள்தானே? இது இப்படித்தானே? உங்களின் குடும்பத்தைப் பற்றி நினைப்பதற்காக நீங்கள் நிற்க மாட்டீர்களா? நீங்கள் வந்துவிடுவீர்களா? நீங்கள் என்றும் தயாராக இருக்கிறீர்கள். இது நல்லது. குஜராத் சாகார் பிரம்மாவின் தூண்டுதலால் ஸ்தாபிக்கப்பட்டது. குஜராத்தில் இருப்பவர்கள், குஜராத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை. தந்தை பிரம்மாவே குஜராத் நிலையத்தைத் திறந்து வைத்தார். எனவே, தந்தை பிரம்மாவின் விசேடமான பார்வை குஜராத்தின் மீது விழுந்தது. குஜராத் முயற்சி செய்து, நல்லதொரு எண்ணிக்கையான நிலையங்களைத் திறந்து வைத்துள்ளார்கள். அங்கே எத்தனை நிலையங்கள் உள்ளன? 300 நிலையங்களும் உபநிலையங்களும் மற்றும் 3000 கீதா பாடசாலைகளும். எந்தப் பிராந்தியத்தில் அதிகபட்ச எண்ணிக்கையான நிலையங்கள் உள்ளன? (பம்பாய், மகாராஷ்டிரா). அச்சா. மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளார்களா? (இந்தத் தடவை அவர்கள் வரவில்லை). குஜராத்தைச் சேர்ந்தவர்கள் நல்ல சேவை செய்கிறார்கள். குஜராத்தில் மிக நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. நீங்கள் இப்போது என்ன செய்யப் போகின்றீர்கள்? விரிவாக்கம் காணப்படுகிறது. நீங்கள் மிக நல்ல விரிவாக்கத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள். இப்போது, குஜராத்தைச் சேர்ந்தவர்கள் முதலாம் இலக்க வாரிசுகளைத் தயார் செய்ய வேண்டும். குறைந்த பட்சம், பழைய வாரிசுகளைக் கொண்டுள்ள பெரிய நிலையங்கள் உள்ளன. ஆனால் இப்போது, புதிய வாரிசுகளை உருவாக்குங்கள். ஒவ்வொரு நிலையமும் ஒரு வாரிசை உருவாக்க வேண்டும். ஏனென்றால், வாரிசு தரமுள்ள ஆத்மாக்களால் மட்டுமே மாலையின் மணிகள் ஆகமுடியும். எனவே, நீங்கள் மாலையைத் தயார் செய்ய வேண்டும்தானே? 16108 மணி மாலையும் தயார் செய்யப்பட வேண்டும். பாப்தாதா உங்களிடம் 108 மணிமாலையைத் தயார் செய்யும்படி கேட்டால், உங்களால் அதைச் செய்ய முடியுமா? அதைச் செய்ய முடியுமா? 108 மணி மாலையைச் செய்ய முடியுமா என தாதி சொல்ல வேண்டும். (ஆம், அதை உருவாக்க முடியும் என தாதிஜி கூறினார்). அது தயாரா? 108 மணிமாலை செய்யப்பட்டு விட்டதா? (ஆம், பாபா, அது தயார்). ஓகே, அதை எழுதி பாபாவிடம் காட்டுங்கள்! அது தயாராகினால், அது மிகவும் நல்லது. பாராட்டுக்கள்! ஓகே, 16000 மணி மாலையில் அரைவாசி தயாராகிவிட்டதா? (அரைவாசி மட்டுமல்ல, அரைவாசியை விட அதிகம் தயாராகிவிட்டது) நல்லது. பாருங்கள், அது மறைமுகமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களின் தாதி அதைப் பார்த்துள்ளார். அது நல்லது. இப்போது, எல்லோரும் உங்களைக் கேட்பார்கள்: ‘எனது பெயர் மாலையில் உள்ளதா?’ நல்லது. இத்தகைய நல்லாசிகளும் தூய எதிர்பார்ப்புக்களும் நிச்சயமாக அதைத் தயார் செய்யும். நீங்கள் எல்லோரும் இதைக் கேட்டிருப்பதனால், உங்களையே சோதித்துப் பாருங்கள்: ‘நான் அந்த மாலைக்கு என்றும் தயாராக இருக்கிறேனா?’ அச்சா. நாம் வேறு என்ன செய்யப் போகிறோம்?

இதய நாடி நோய்க்கான குழு (CAD): நல்லது. இந்த முறையில் ஒலியைப் பரவச் செய்வதும் மிக நல்லது. ஏனெனில், மக்கள் நடைமுறை அத்தாட்சியைப் பார்க்கிறார்கள். அவர்கள் எந்தவிதச் செலவும் இல்லாமல் தியானத்தின் மூலம் குணம் அடைகிறார்கள். எல்லோரும் இதை மிகவும் விரும்புகிறார்கள். இப்போது, தொடர்ந்து இதைப் படிப்படியாக அதிகரியுங்கள். அவர்கள் இதைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளார்கள். நீங்கள் அதைச் செய்கிறீர்கள். நீங்கள் வெற்றியும் பெறுகிறீர்கள். தொடர்ந்தும் அதைப் பெறுவீர்கள். எனவே, இந்தப் பணிக்குக் கருவிகளாக உள்ளவர்களை பாப்தாதா பாராட்டுகிறார். இதன் பெறுபேறும் அரசாங்கத்தை உத்தியோக பூர்வமாகச் சென்று அடைகிறது. நீங்கள் தொடர்ந்தும் அதைப் பரவச் செய்தால், தியானத்தின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரிக்கும். பாப்தாதா இந்த வழிமுறையை விரும்புகிறார். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் மனதின் மௌனத்தால் சேவை செய்வதன் மூலம் புதியதொரு கண்டுபிடிப்பை உருவாக்கி, வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

ஆரம்பத்தில், நீங்கள் எல்லோரும் மௌனத்தைக் கடைப்பிடிக்கும்போது, நீங்கள் எல்லோரும் சுதந்திரம் அடைந்தீர்கள். அத்துடன் நேரமும் சேமிக்கப்பட்டது. அதேபோல், இப்போது மனதின் மௌனத்தைக் கடைப்பிடியுங்கள். அதனால் நீங்கள் வீணான எண்ணங்கள் எதையும் கொண்டிருக்க மாட்டீர்கள். எப்படி உங்களின் வாயில் இருந்து எந்தவித சத்தமும் வெளிப்படாதோ, அப்படியே, வீணான எண்ணங்களும் இருக்கக்கூடாது. இது மனதின் மௌனம் ஆகும். அது உங்களின் நேரத்தையும் சேமிக்கும். இந்த மனதின் மௌனத்தால், புதியதொரு கண்டுபிடிப்பு உருவாகும். அதன் மூலம் நீங்கள் குறைந்தளவு முயற்சி செய்து மகத்தான வெற்றியைப் பெற முடியும். எப்படி விஞ்ஞானத்தின் வசதிகள் ஒரு விநாடியில் நீங்கள் ஒரு பதிலைப் பெறச் செய்கிறதோ, அப்படியே, இந்த மௌனத்தின் வசதிகளால் நீங்கள் ஒரு விநாடியில் ஒரு பதிலைப் பெறுவீர்கள்.

சுலோகம்:
அர்ப்பணித்த நிலையில் இருப்பவர்களிடம் எல்லோருடைய ஒத்துழைப்பும் அர்ப்பணித்துவிடும்.

அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள்.

பல விதமான மனிதர்கள், பௌதீகமான சௌகரியங்கள் மற்றும் உடமைகளின் தொடர்பில் வரும்போது, ஆத்ம உணர்வுகளையும் கவர்ச்சியில் இருந்து விடுபட்ட மனோபாவத்தையும் கிரகியுங்கள். அந்த பௌதீக சௌகரியங்களும் உடமைகளும் கவர்ச்சியில் இருந்து விடுபட்டவர்களின் முன்னால் வேலையாட்களைப் போன்றே இருக்கும். ஆனால் கவரப்படுபவர்கள், காந்தம் போல் ஈர்க்கப்பட்டு, அகப்பட்டுக் கொள்வார்கள்.