23.07.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, நீங்கள் உரிய நேரத்தில் வீடு திரும்ப வேண்டும். ஆதலால் உங்கள் நினைவு யாத்திரையின் வேகத்தை அதிகரியுங்கள். இத் துன்ப பூமியை மறந்து அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்யுங்கள்.

பாடல்:
மக்களின் புத்தியில் எழுச்சியை ஏற்படுத்துவதற்கு நீங்கள் எந்த ஆழமான இரகசியத்தைக் கூறவேண்டும்?

பதில்:
எக்காலத்திற்குமான ஒரு பாகம் தன்னுள் பதியப்பட்டுள்ள சின்னஞ்சிறிய புள்ளியாகிய ஓர் ஆத்மா எவ்வாறு தொடர்ந்தும் தனது பாகத்தை நடிக்கின்றார் என்ற ஆழமான இரகசியத்தை அவர்களுக்குக் கூறுங்கள். ஓர் ஆத்மா ஒருபோதும் களைப்படைவதில்லை. எவருமே அநாதியான முக்தியைப் பெற முடியாது. அதிகளவு துன்பத்தைப் பார்ப்பதால், அநாதியான முக்தியைப் பெறுவதே மேல் என்று மக்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் அழிவற்ற ஆத்மாக்களால் தமது பாகத்தை நடிக்காமல் இருக்க முடியாது. இவ்விடயத்தைக் கேட்டதும் அவர்களின் புத்தியில் எழுச்சி ஏற்படுகின்றது.

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்குத் தந்தை விளங்கப்படுத்துகின்றார்.

இங்கே நீங்கள் ஆன்மீகக் குழந்தைகள். உண்மையில் ஏழை மக்கள் அதிகளவு துன்பப்படுகின்றார்கள் என்று தந்தை தினமும் விளங்கப்படுத்துகின்றார். வெள்ளம் ஏற்படும் போதும் ஏழை மக்களே துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள். அவர்களின் சொத்துக்கள் போன்றவற்றிற்கு என்ன நிகழ்ந்தது என்று பாருங்கள். அதனையிட்டு அவர்கள் துன்பம் அடைகின்றார்கள். எல்லையற்ற துன்பம் உள்ளது. செல்வந்தர்கள் சந்தோஷமாக இருந்தாலும் அதுவும் தற்காலிகமானதே. செல்வந்தர்களும் நோயுறுகின்றார்கள். பல மரணங்கள் ஏற்படுகின்றன: இன்று இன்னார்; மரணித்து விட்டார், இன்று இது நடந்தது. இன்று ஒருவர் ஜனாதிபதி ஆகலாம். ஆனால் நாளை அவர் அப் பதவியை விட்டு விலக நேரிடும். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரை அப்பதவியிலிருந்து நீக்கி விடுகின்றார்கள். அதனையிட்டும் துன்பம் உள்ளது. இந்தத் துன்ப பூமியில் எத்தனை வகையான துன்பம் உள்ளது என ஒரு பட்டியலைத் தயாரியுங்கள் என பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷ பூமியை அறிந்துள்ளீர்கள். எனினும் உலகத்தினருக்கு எதுவும் தெரியாது. அவர்களால் துன்ப பூமியைச் சந்தோஷபூமியுடன் ஒப்பிட முடியாது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள். நீங்கள் நிச்சயமாக உண்மையையே கூறுகின்றீர்கள் என்று அவர்கள் நம்புவார்கள். இங்கு சிலரிடம் பெரிய கட்டடங்கள், விமானங்கள் போன்றவை இருப்பதால், அவர்கள் கலியுகம் இன்னமும் 40.000 வருடங்களுக்கு நீடிக்கும் என்றும், சத்தியயுகம்; அதன் பின்னரே வரும் என்றும் நம்புகின்றார்கள். அவர்கள் காரிருளில் இருக்கின்றார்கள். இப்பொழுது நீங்கள் அவர்களை நெருங்கச் செய்ய வேண்டும். சொற்ப நேரமே எஞ்சியுள்ளது. நூறாயிரம் வருடங்கள் உள்ளதென அவர்கள் கூறுவதற்கும், 5000 வருடங்கள் மாத்திரமே உள்ளது என்று நீங்கள் நிரூபிப்பதற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. சக்கரம் 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் சுழல்கிறது. நாடகம் நூறாயிரக் கணக்கான வருடங்களாக இருக்க முடியாது. நடக்க வேண்டிய அனைத்தும் 5000 வருடங்களுக்குள் இடம்பெறுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். எனவே இத்துன்ப பூமியில் நோய்கள் போன்றவை இருக்கின்றன. நீங்கள் ஒரு சில முக்கிய விடயங்களை எழுதலாம். சுவர்க்கத்தில் துன்பம் என்ற வார்த்தையே இல்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: மரணம் சற்று முன்னர் உள்ளது. கீதையின் அதே அத்தியாயமே இப்பொழுதும் இடம்பெறுகின்றது. சத்தியயுகம் நிச்சயமாகச் சங்கமயுகத்தில் ஸ்தாபிக்கப்படும். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர் ஆக்குகின்றேன். அதனால் அவர் நிச்சயமாக உங்களைச் சத்தியயுகத்தின் அரசர் ஆக்குவார். பாபா அனைத்தையும் மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகின்றார். இப்பொழுது நாங்கள் சந்தோஷபூமிக்குச் செல்கின்றோம். தந்தை எங்களை அழைத்துச் செல்ல வேண்டும். சதா என்னை மாத்திரமே நினைவு செய்பவர்களே உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். அதற்கான பல யுக்;திகளை பாபா தொடர்ந்தும் உங்களுக்குக் காட்டுகின்றார். உங்கள் நினைவின் வேகத்தை அதிகரியுங்கள். கும்பமேலாவிற்கு அனைவரும் உரிய நேரத்திற்குச் செல்ல வேண்டும். நீங்களும் உரிய நேரத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே நீங்கள் மேலும் விரைவாகச் செல்ல முடியும் என்றில்லை. இல்லை. அங்கு நீங்கள் விரைந்து செல்ல முடியும் என்பது உங்கள் கரங்களில் இல்லை. அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எல்லாப் புகழும் நாடகத்திற்கே ஆகும். துன்பத்தை விளைவிக்கும் பலவகையான பூச்சிகள், கிருமிகள் போன்றவை உள்ளன. அவை சத்தியயுகத்தில் இருக்க மாட்டாது. அங்கே இருக்கும் விடயங்களைப் பற்றியே நீங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் சத்தியயுகத்தை நினைவு செய்கின்றீர்கள், அல்லவா? தந்தையே சத்தியயுகத்தை ஸ்தாபிக்கின்றார். இறுதியில் நீங்கள் முழு ஞானத்தையும் இரத்தினச் சுருக்கமாகக் கொண்டிருப்பீர்கள். உதாரணமாக, ஒரு விதை மிகவும் சிறியதாக உள்ளது. ஆனால் மரமோ மிகவும் பெரியது. அவை உயிரற்ற விடயங்களாகும். அவை யாவும் உயிரற்றவை, ஆனால் இதுவே உயிருள்ளது. இவ் விருட்சத்தைப் பற்றி எவருக்குமே தெரியாது. அவர்கள் சக்கரத்தின் ஆயுட்காலத்தை மிகவும் நீண்டதாக்கி விட்டார்கள். அதிகளவு சந்தோஷமாக இருந்த பாரதமே, இப்பொழுது அதிகளவு துன்பத்தில் உள்ளது. பாரத்திலேயே அதிகளவு நோய்களும் உள்ளன. இங்கு மக்கள் நுளம்புகள் மரணிப்பதைப் போன்று மரணிக்கின்றார்கள். ஏனெனில் அவற்றின் ஆயுட்காலம் மிகவும் குறுகியது. இங்கே சுத்தம் செய்கின்றவர்களுக்கும் வெளிநாடுகளில் சுத்தம் செய்பவர்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து இங்கு வருகின்றன. சத்தியயுகத்தின் பெயரே வைகுந்தம் ஆகும். அங்கே அனைவரும் சதோபிரதானாக உள்ளார்கள். நீங்கள் அனைத்தினது காட்சிகளையும் காண்பீர்கள். இது இப்பொழுது தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்தும் சங்கமயுகமாகும். அவர் தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் தொடர்ந்தும் புதிய விடயங்களைக் கூறுவார். தந்தை கூறுகின்றார்: நாளுக்கு நாள் நான் உங்களுக்கு ஆழமான, புதிய விடயங்களைக் கூறுகின்றேன். முன்னர், பாபா சின்னஞ்சிறிய புள்ளி என்றும், அவருடைய பாகம் முழுவதும் என்றென்றும் அவரினுள் பதியப்பட்டிருந்தது என்றும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் பாகங்களை நடித்து வந்துள்ளீர்கள். ஒருவருக்கு நீங்கள் இதனைக் கூறும் போது அவரின் புத்தியில் எழுச்சி ஏற்படும்: நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? அத்தகைய சின்னஞ்சிறிய புள்ளி ஒரு பெரிய பாகத்தைத் தனக்குள் பதித்துக் கொண்டு, தொடர்ந்து நடித்தாலும் அவர் ஒருபோதும் களைப்படைவதில்லை! எவருக்கும் இது தெரியாது. அரைக்கல்பத்திற்குச் சந்தோஷமும், அரைக்கல்பத்திற்குத் துன்பமும் உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் புரிந்து கொள்கின்றீர்கள். அதிகளவு துன்பத்தைப் பார்க்கும் பொழுது மக்கள் கூறுகின்றார்கள்: இதைவிட நாங்கள் அநாதியான முக்தியைப் பெறுவதே மேலாகும். நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போதோ அல்லது அமைதியாக இருக்கும் போதோ இவ்வாறு கூறமாட்டீர்கள். தந்தை விதை என்பதால் அவர் ஞானம் முழுவதையும் தனக்குள் கொண்டிருப்பதைப் போன்று நீங்களும் இந்த ஞானம் முழுவதையும் உங்கள் புத்தியில் கொண்டிருக்கின்றீர்கள். விருட்சத்தின் மாதிரி காட்டப்பட்டுள்ளது. அதனை மிகவும் பெரிய வடிவில் காட்ட முடியாது. முழு ஞானமும் உங்கள் புத்தியில் இருப்பதால், குழந்தைகளாகிய நீங்கள் பரந்த மற்றும் எல்லையற்ற புத்தியைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்தப்பட வேண்டும். இன்னார்; தனது பாகத்தை நடிப்பதற்காக அந்தந்த காலத்தின் பின்னர் மீண்டும் வருகின்றார். இது அத்தகைய மகத்தான, பெரியதொரு நாடகமாகும். நாடகம் முழுவதையும் எவராலும் பார்க்க முடியாது. அது சாத்தியமற்றதாகும். நல்ல விடயங்கள் தெய்வீகக் காட்சிகள் மூலம் பார்க்கப்படுகின்றன. கணேஷ், அனுமன் போன்றவர்கள் பக்தி மார்க்கத்திற்கு உரியவர்கள். எனினும் மக்கள் அவர்கள் மீது அந்த நம்பிக்கை வைத்திருப்பதால், அவர்களால் அவர்களைத் துறக்க முடிவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முயற்சி செய்ய வேண்டும். முன்னைய கல்பத்தில் நீங்கள் செய்ததைப் போன்று உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதற்கு நீங்கள் கற்க வேண்டும். ஒவ்வொருவரும் மறுபிறவி எடுக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஏணியிலிருந்து எவ்வாறு இறங்குகின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். இதனை அறிந்தவர்கள் பிறருக்கு விளங்கப்படுத்த ஆரம்பிப்பார்கள். நீங்கள் முன்னைய கல்பத்திலும் இதனையே செய்திருப்பீர்கள். முன்னைய கல்பத்திலும் நீங்கள் இதனைப் போன்றே அருங்காட்சியகங்களையும் உருவாக்கிக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்தியிருப்பீர்கள். தொடர்ந்தும் முயற்சி செய்கின்ற நீங்கள் மீண்டும் அவ்வாறே தொடர்ந்தும் செய்வீர்கள். அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பின்னர் இவ்வாறான பல இடங்கள் இருக்கும். ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பாடசாலை இருக்கும். இது தாரணைக்கான விடயமாகும். அவர்களிடம் கூறுங்கள்: உங்களுக்கு இரு தந்தையர் உள்ளனர். அவர்களில் அதிக மகத்தானவர் யார்? மக்கள் அவரையே கூவி அழைக்கின்றார்கள்: கருணை காட்டுங்கள்! ஆசீர்வாதங்;களைக் கொடுங்கள்! தந்தை கூறுகின்றார்: அதனைக் கேட்பதனால் நீங்கள் எதனையும் பெற மாட்டீர்கள். நான் உங்களுக்குப் பாதையைக் காட்டியுள்ளேன். உங்களுக்குப் பாதையைக்; காட்டுவதற்கே நான் வந்துள்ளேன். உங்கள் புத்தியில் முழு விருட்சமும் உள்ளது. தந்தை தொடர்ந்தும் அதிகளவு முயற்சி செய்கின்றார். இன்னமும் சொற்பளவு நேரமே உள்ளது. சேவை செய்யும் குழந்தைகளே எனக்குத் தேவையாகும். எனக்கு ஒவ்வொரு வீட்டிலும் கீதைப் பாடசாலை தேவையாகும். நீங்கள் வேறு எப்படத்தையும் வைத்திருக்க வேண்டியதில்லை. ஆனால் இதனை வாசலில் எழுதுங்கள். படங்களைப் பொறுத்தவரை இச் சின்னமே போதும். இச் சின்னமே இறுதியில் உங்களுக்கு உதவும். இது சமிக்ஞைக்கான விடயமாகும். எல்லையற்ற தந்தையே நிச்சயமாகச் சுவர்க்கத்தை உருவாக்குவார் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே நீங்கள் தந்தையை நினைவு செய்வதால் மாத்திரமே சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் தூய்மையற்றவர்கள் என்பதையும், நினைவு செய்வதனால் மாத்திரமே நீங்கள் தூய்மையாகுவீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். வேறெந்த வழியும் இல்லை. சுவர்க்கம் ஒரு தூய உலகமாகும். நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதியாக விரும்பினால், நிச்சயமாக நீங்கள் தூய்மையாக வேண்டும். சுவர்க்கத்திற்குச் செல்பவர்கள், எவ்வாறு நரகத்தில் மூழ்க முடியும்? இதனாலேயே உங்களுக்குக் கூறப்படுகின்றது: மன்மனாபவ! எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச்; செல்லும். சுவர்க்கத்திற்குச் செல்பவர்கள் விகாரத்தில் ஈடுபடக்கூடாது. பக்தர்கள் விகாரத்தில் அதிகளவு ஈடுபடுவதில்லை. சந்நியாசிகள் உங்களைத் தூய்மையாகுங்கள் என்று கூறமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் திருமண வைபவங்களை நடாத்தி வைக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம், நீங்கள் மாதத்தில் ஒருமுறை விகாரத்தில் ஈடுபடலாம் என்று கூறுகின்றார்கள். பிரம்மச்சரியம் காப்பவர்களிடம், நீங்கள் திருமணம் செய்யக்கூடாது என்று அவர்கள் கூறுவதில்லை. சிலர் இங்கே தூய்மையான திருமணம் செய்கின்றார்கள். அடுத்த நாளே, அனைத்தும் முடிவடைந்து விடுகின்றது. மாயை பெருமளவு கவர்ச்சியுடையவள். இந் நேரத்திலேயே நீங்கள் தூய்மையாக முயற்சி செய்கின்றீர்கள், பின்னர் அதற்கான வெகுமதியைப் பெறுகின்றீர்கள். அங்கே இராவண இராச்சியம் இருப்பதில்லை. குற்ற எண்ணங்கள் அங்கே இருப்பதில்லை. இராவணனே உங்களைக் குற்றவாளியாக்குகின்றான். சிவபாபா உங்களைக் குற்றமற்றவர் ஆக்குகின்றார். இதனையும் நீங்கள் நினைவு செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வகுப்புக்கள் இடம்பெறும் போது, அனைவரும் விளங்கப்படுத்த ஆரம்பிப்பார்;கள். நீங்கள் ஒவ்வொரு வீட்டிலும் கீதைப்பாடசாலையை உருவாக்க வேண்டும். அத்துடன் உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் சீர்திருத்த வேண்டும். விரிவாக்கம் இவ்வாறாகத் தொடர்ந்தும் இடம்பெறும். சாதாரணமானவர்களும், ஏழைகளும் சமமானவர்கள் ஆவார்கள். முக்கியஸ்தர்கள் சாதாரண மக்களின் ஆன்மீக ஒன்றுகூடல்களில் கலந்து கொள்ளச் சங்கடப்படுகின்றார்கள். ஏனெனில் இங்கே மந்திரசக்தி உள்ளது என்றும், நீங்கள் அனைவரையும் சகோதர சகோதரிகள் ஆக்குகின்றீர்கள் என்றும் அவர்கள் கேள்விப்பட்டுள்ளனர். ஆஹா, அதுவும் நல்லதே! ஓர் இல்லறத்தில் பல சிக்கல்கள் உள்ளன. அவர்கள் மிகவும் சந்தோஷமற்றவர்கள் ஆகுகின்றார்கள். இது துன்ப உலகமாகும். அளவற்ற துன்பம் உள்ளது, அங்கே அளவற்ற சந்தோஷம் இருக்கும். நீங்கள் ஒரு பட்டியல் தயாரிக்க முயற்சி செய்ய வேண்டும். 25 முதல் 30 வரையிலான பிரதான துன்பங்களின் பட்டியலை நீங்கள் தயாரிக்க வேண்டும். எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்கு, நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். தந்தை இந்த இரதத்தின் மூலம், எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்தத் தாதாவும் ஒரு மாணவர் ஆவார். சரீரதாரிகள் அனைவருமே மாணவர்கள் ஆவார்கள், ஆனால் உங்களுக்குக் கற்பிப்பவர் சரீரமற்றவர் ஆவார். அவர் உங்களையும் சரீரமற்றவர் ஆக்குகின்றார். ஆகையால் தந்தை கூறுகின்றார்: தொடர்ந்தும் சரீர உணர்வைத் துறந்திடுங்கள். இக் கட்டடடங்கள் எதுவும் எஞ்ச மாட்டாது. அங்கே உங்களுக்கு அனைத்தும் புதிதாகவே கிடைக்கும். இறுதியில் நீங்கள் பல காட்சிகளைப் பெறுவீர்கள். வெளிநாடுகளில், அணுக்குண்டுகளினால் அதிகளவு விநாசம் இடம்பெறும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இங்கோ இரத்த ஆறு ஓடும். அதற்குக் காலம் பிடிக்கிறது. மரணம் இங்கே மிகவும் மோசமாக இருக்கிறது. இது அழிவற்ற தேசமாகும். இந்துஸ்தான் ஒரு மூலையில் இருப்பதை நீங்கள் உலக வரைபடத்தில் பார்க்கின்றீர்கள். நாடகத்திற்கு ஏற்ப, அங்குள்ள விடயங்கள் இங்கு எத்தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டாது. இங்கு இரத்த ஆறு ஓடும். அவர்கள் இப்பொழுது அதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இறுதியில், அவர்கள் இங்குள்ளவர்களுக்குக் குண்டுகளைக் கடனாகவும் வழங்கும் சாத்தியம் உள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் பயன்படுத்தும் போது, உலகை அழிக்கக்கூடிய குண்டுகளை அவர்கள் கடனாகக் கொடுக்க மாட்டார்கள்! அவர்கள் தரம் குறைந்த குண்டுகளையே கொடுப்பார்கள். உங்களுக்குப் பயன்மிக்க ஒன்றை நீங்கள் பிறருக்குக் கொடுக்க மாட்டீர்கள். விநாசம் முன்னைய கல்பத்தில் இடம்பெற்றதைப் போன்று மீண்டும் இடம்பெறும். இது புதியதொரு விடயமல்ல. எண்ணற்ற சமயங்கள் அழக்கப்பட்டு ஒரேயொரு தர்மம் ஸ்தாபிக்கப்படும். பாரததேசம் ஒருபோதும் அழிய மாட்டாது. சிலர் எஞ்சியிருப்பார்கள். அனைவரும் மரணித்து விட்டால், பிரளயம் ஏற்படும். நாளுக்கு நாள் உங்கள் புத்தி பரந்ததாகவும் எல்லையற்றதாகவும் ஆகி, நீங்களும் அதிகளவு மரியாதையைக் கொண்டிருப்பீர்கள். இப்பொழுது நீங்கள் அந்தளவு மரியாதை கொடுக்காததால் சிலரே சித்தி அடைகின்றீர்கள். அதிகளவு தண்டனை கிடைக்கும் என்பது உங்கள் புத்தியில் பிரவேசிப்பதில்லை. ஆகையால் நீங்கள் காலம் தாமதித்தே வருவீர்கள். நீங்கள் விழும் போது, நீங்கள் ஈட்டிய வருமானம் முழுவதும் இழக்கப்பட்டு, நீங்கள் அவலட்சணத்திலும் அவலட்சணமானவர் ஆகுவீர்கள். மீண்டும் உங்களால் எழவே முடியாது. பலர் சென்றுவிட்டார்கள். இன்னமும் பலர் செல்வதற்கு உள்ளார்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் சரீரத்தை விட்டுச் சென்றால், உங்கள் நிலைமை என்னவென்பது உங்களுக்கே தெரியும். இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்களே அமைதியை ஸ்தாபிப்பவர்கள். உங்களுக்குள் அமைதியின்மை இருக்குமாயின், உங்கள் அந்தஸ்து அழிக்கப்படும். எவருக்கும் துன்பம் விளைவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தந்தை அனைவரிடமும் அதிகளவு அன்புடன் ‘குழந்தாய், குழந்தாய்’ என்று பேசுகின்றார். அவரே எல்லையற்ற தந்தையாவார். அவரிடம் முழு உலகினது ஞானமும் உள்ளது. ஆகையாலேயே அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இவ் உலகில் பல வகையான துன்பம் உள்ளது. துன்பத்தைப் பற்றி பல விடயங்களை நீங்கள் எழுதலாம் இதனை நீங்கள் நிரூபிக்கும் போது, இது முற்றிலும் உண்மை என்று மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த அளவற்ற துன்பத்தை அகற்ற முடியாது. உங்களிடம் துன்பங்களின்; பட்டியல் இருந்தால், மக்களின் புத்தியில் ஏதாவது ஒன்று பதியும். இல்லாவிட்டால், அவர்கள் எதையாவது கேட்டுவிட்டு, அதனையும் மறந்து விடுகின்றார்கள். அத்தகையவர்களையிட்டே ‘சுவர்க்க ஓசையை, செம்மறி ஆடு எவ்வாறு அறியும்’ என்பது நினைவுகூரப்படுகின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் அழகானவர்கள் ஆக வேண்டும். எவ்வித அமைதியின்மையோ, அழுக்கோ இருக்கக்கூடாது. அமைதியின்மையைப் பரப்புபவர்கள் சரீர உணர்வுடையவர்கள். அவர்களிடமிருந்து விலகியிருங்கள். அவர்களை நீங்கள் தீண்டவும் கூடாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் எவ்வாறு சரீரமற்றவராகவும், சரீர உணர்வு எதுவுமே அற்றவராகவும் இருப்பதைப் போன்று நீங்களும் சரீரமற்றவர் ஆகுங்கள். தொடர்ந்தும் சரீர உணர்வைத் துறந்திடுங்கள். உங்கள் குற்றமுள்ள கண்களைக் குற்றமற்றதாக்குங்கள்.

2. உங்கள் புத்தியைப் பரந்ததாகவும், எல்லையற்றதாகவும் ஆக்குங்கள். தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு, தந்தைக்கும், கல்விக்கும் மரியாதை கொடுங்கள். ஒருபோதும் துன்பம் விளைவிக்காதீர்கள். அமைதியின்மையைப் பரவச் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
உங்களுடைய பிராமண வாழ்க்கையின் இயல்பான சுபாவத்தினால், கல்லையும் தண்ணீராக மாற்றுகின்றதொரு மாஸ்ரர் அன்புக்கடல் ஆகுவீர்களாக.

அன்பானது கல்லையும் தண்ணீராக மாற்றக்கூடியது என உலக மக்கள் கூறுகிறார்கள். அவ்வாறே, மாஸ்ரர் அன்புக்கடலாக இருப்பதே பிராமணர்களாகிய உங்களுடைய இயல்பான சுபாவமாகும். நீங்கள் அதிகளவு ஆத்ம உணர்வுடைய அன்பையும் இறை அன்பையும் கொண்டிருக்கிறீர்கள். அவற்றினால் பலதரப்பட்ட சுபாவங்களை மாற்ற முடியும். அன்புக்கடலானவர் தனது அன்பு சொரூபமாக இருக்கின்ற அநாதியான சுபாவத்தினால் குழந்தைகளாகிய உங்களை தனக்குரியவர்கள் ஆக்கினார். அவ்வாறே, நீங்களும் மாஸ்ரர் அன்புக்கடல்கள் ஆகி, உலக ஆத்மாக்களுக்கு உண்மையான, சுயநலமற்ற, ஆன்மிக அன்பை கொடுக்க வேண்டும். அப்பொழுது அவர்களின் சுபாவங்கள் மாற்றமடையும்.

சுலோகம்:
உங்களுடைய சிறப்பியல்புகளின் விழிப்புணர்வினைக் கொண்டிருந்து, சேவைக்காக அவற்றை பயன்படுத்தினால் நீங்கள் பறக்கின்ற ஸ்திதியில் தொடர்ந்தும் பறப்பீர்கள்.