24.06.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    Om Shanti     Madhuban


மாதேஸ்வரிஜியின் நினைவு நாளன்று வகுப்பில் வாசிக்கப்பட வேண்டிய,
அவரின் இனிய, மேன்மையான வாசகங்கள்


பாடல்: எனது சிறிய உலகைப் பாருங்கள்…

இப்பாடல் எப்போது பாடப்பட்டது? இந்தச் சங்கமயுக காலத்தில் மாத்திரமே எமது பிராமணக் குலத்திடம் இந்தச் சிறிய உலகம் உள்ளது. வரிசைக்கிரமமாகக் காட்டப்படுகின்ற, எமது இந்தக் குடும்பம் எது? நாங்கள் பரம தந்தை, பரமாத்மா, சிவனின் பேரக் குழந்தைகளும், பிரம்மா மற்றும் சரஸ்வதியின் வாய்வழியாகத் தோன்றிய குழந்தைகளும் ஆவோம். விஷ்ணுவும், சங்கரரும் எமது மாமன்மார் ஆவர். எங்கள் மத்தியில், நாங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள் ஆவோம். இது எமது சிறிய உலகம். இதற்கு அப்பால் வேறெந்த உறவுமுறைகளும் உருவாக்கப்படவில்லை. இந்த நேரத்தில், இந்த உறவுமுறைகள் மாத்திரமே உள்ளன என்றே நாம் கூறுவோம். இத்தகைய மிகப்பெரிய அதிகாரியுடன் எமது உறவுமுறை என்னவென்று பாருங்கள்! எமது தாத்தா சிவன் ஆவார். அவருடைய பெயர் மிக முக்கியமானது, அவரே மனித உலகின் விதை ஆவார். அவர் முழு உலகிற்கும் உபகாரியாக இருப்பதனால் “ஹர ஹர போலாநாத் சிவ மஹாதேவ்” (போலா நாதர், மகா தேவரான கள்ளங்கபடமற்ற பிரபுவான சிவன்) என அழைக்கப்படுகிறார். அவர் முழு உலகினதும் துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவர். நாங்கள் அவரிடமிருந்து சந்தோஷம், அமைதி மற்றும் தூய்மையைப் பெறுவதற்கான மிகப்பெரிய உரிமையைப் பெறுகிறோம். அமைதியில், கர்மக் கணக்குகள் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், இவை இரண்டும் (அமைதி, சந்தோஷம்) தூய்மையின் அடிப்படையிலேயே உள்ளன. நீங்கள் தந்தையின் பராமரிப்பின் முழு ஆஸ்தியையும் பெறும்வரை, தந்தையிடம் இருந்து நற்சான்றிதழைப் பெறும்வரை, உங்களால் அந்த ஆஸ்தியைக் கோர முடியாது. பாருங்கள், பிரம்மாவிற்கு மிகப்பெரிய பணியொன்றைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது: அவர் ஐந்து விகாரங்களாலும் அழுக்காகவும், தூய்மை அற்றவர்களாகவும் ஆகிவிட்ட ஆத்மாக்களை மிக அழகானவர்கள் ஆக்குகிறார். அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அலௌகீகப் பணிக்கான பெறுபேறு, சத்திய யுகத்தின் முதலாம் இலக்க ஸ்ரீ கிருஷ்ணர் என்ற பதவி ஆகும். நீங்கள் அந்தத் தந்தையுடன் இப்பொழுது கொண்டுள்ள உறவுமுறையைப் பாருங்கள். எனவே, நீங்கள் எந்தளவிற்கு கவலை அற்றவர்களாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும்? இப்போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தைக் கேட்டுப் பாருங்கள்: நான் அவருக்கு முழுமையாகவே சொந்தமாகி விட்டேனா?

பரமாத்மாவாகிய தந்தை வந்துவிட்டதால், நாங்கள் அவரிடமிருந்து எங்களுடைய முழு ஆஸ்தியையும் கோரவேண்டும் என நீங்கள் சிந்திக்க வேண்டும். முழுமையாக முயற்சி செய்து, ஒரு புலமைப்பரிசைப் பெறவேண்டியது ஒரு மாணவனின் கடமையாகும். எனவே, நாங்கள் ஏன் முதல் இலக்க அதிர்ஷ்டலாபச் சீட்டை வெல்லக்கூடாது? இதுவே வெற்றி மாலையில் கோர்க்கப்படுதல் என்பதன் அர்த்தம். எவ்வாறாயினும், சிலர் லட்டைப் பிடித்து வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இங்கேயும் எல்லைக்குட்பட்ட சந்தோஷத்தை சிறிது அனுபவம் செய்வதுடன், வைகுந்தத்திலும் சிறிதளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய விரும்புகிறார்கள். அத்தகைய எண்ணங்களைக் கொண்டவர்களை நடுத்தரமான அல்லது குறைந்த மட்ட முயற்சி செய்கின்ற முயற்சியாளர்கள் என்றே கூறமுடியுமே தவிர, அதிமேன்மையான முயற்சியாளர்கள் என்று கூறமுடியாது. தந்தை உங்களுக்கு அனைத்தையும் கொடுப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. எனவே, அதைப் பெறுபவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்? இதனாலேயே குருநானக் கூறினார்: “கடவுள் அருள்பவர், அவர் சர்வசக்திவான், ஆனால் அவரிடமிருந்து பெறுவதற்கான சக்தி ஆத்மாக்களிடம் இல்லை.” ஒரு கூற்று உள்ளது: “கொடுப்பவர் தொடர்ந்தும் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் பெறுபவர்களோ, பெறுவதில் களைப்படைந்து விடுகிறார்கள்.” உங்கள் இதயத்தில் நீங்கள் இந்த உணர்வைக் கொண்டிருக்கலாம்: நான் ஏன் இந்த அந்தஸ்தைக் கோர விரும்பக்கூடாது? எவ்வாறாயினும், பாருங்கள், பாபா அதிக முயற்சி செய்கிறார், அப்படியிருந்தும்கூட, மாயை பல தடைகளை உருவாக்குகிறாள். ஏன்? மாயையின் இராச்சியம் இப்பொழுது முடிவடையப் போகிறது. மாயை இப்பொழுது உங்களுடைய பலம் முழுவதையும் பறித்து விட்டாள். இதனாலேயே கடவுள் வருகிறார். இனிமை அனைத்தும் அவருக்குள் அமிழ்ந்துள்ளது. நீங்கள் சகல உறவுமுறைகளினதும் இனிமையை அவரிடமிருந்து பெறுகிறீர்கள். இதனாலேயே கூறப்படுகிறது: “நீங்களே தாயும், நீங்களே தந்தையும்.” இது அந்தப் பரமாத்மாவைப் பற்றிப் பாடப்படும் புகழாகும். எனவே, இந்த நேரத்தின் மகத்துவத்தின் காரணமாகவே, நீங்கள் அத்தகையதோர் உறவுமுறையை அவருடன் கொண்டிருக்கிறீர்கள்.

நாங்கள் கடவுளுடன் முழுமையான உறவுமுறையைக் கொண்டிருக்க வேண்டும். அதன்மூலம் 21 பிறவிகளுக்கான சந்தோஷத்தை அவரிடமிருந்து பெற முடியும். இதுவே உங்கள் முயற்சிகளுக்கான வெற்றி ஆகும். எவ்வாறாயினும், 21 பிறவிகள் என்று கேள்விப்படும்போது கோழை ஆகிவிடாதீர்கள். 21 பிறவிகளுக்காக நீங்கள் இந்த நேரத்தில் அதிக முயற்சி செய்ய வேண்டியுள்ளது, அப்படியிருந்தும், 21 பிறவிகளுக்குப் பின்னரும் நீங்கள் கீழிறங்கவே வேண்டும், எனவே அதில் என்ன வெற்றி உள்ளது? என நினைக்காதீர்கள். எவ்வாறாயினும், ஆத்மாக்களாகிய உங்களுக்கு நாடகத்தில் என்ன மேன்மையான வெற்றி நிச்சயிக்கப்பட்டுள்ளதோ, அதை நீங்கள் எப்படியோ பெறுவீர்கள். தந்தை வந்து எங்களை சம்பூரண ஸ்திதியை அடைய வைக்கிறார். ஆனால், அப்படியிருந்தும்கூட, குழந்தைகளாகிய நாங்கள் பாபாவை மறந்துவிடுகிறோம். எனவே நாங்கள் நிச்சயமாக விழுவோம். இதற்குத் தந்தையைக் குற்றம் சாட்ட முடியாது. இது குழந்தைகளாகிய எங்களின் குறைபாடே ஆகும். ஏனெனில், சத்திய, திரேதா யுகங்களின் முழு சந்தோஷமும் நாங்கள் இந்த நேரத்தில் செய்யும் முயற்சிகளிலேயே தங்கியுள்ளது. எனவே, நாங்கள் ஏன் முழுமையாக முயற்சிகள் செய்து, எமது அதி மேன்மையான பாகங்களை நடிக்கக்கூடாது? ஏன் நாங்கள் முயற்சி செய்து, எமது ஆஸ்தியைக் கோரக்கூடாது? மனிதர்கள் எப்பொழுதும் சந்தோஷத்தை அடைவதற்காகவே முயற்சி செய்கிறார்கள். அவர்கள் சந்தோஷத்திற்கும் துன்பத்திற்கும் அப்பால் செல்வதற்காக முயற்சி செய்வதில்லை. நாடகத்தின் இறுதியில் கடவுள் வந்து, எல்லா ஆத்மாக்களுக்கும் தண்டனை வழங்கி, அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களின் பாகங்களில் இருந்து விடுதலை செய்கிறார். கடவுள் அவருக்கென நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்து, அவருடைய பணியைச் செய்து, எமக்குக் கூறுகிறார். ஆத்மாக்கள் தமது பாகங்களை மீண்டும் நடிப்பதற்காக வரவேண்டும் என்பதால், அவர்கள் ஏன் தமது அதியுயர்ந்த பாகங்களை நடிக்கக்கூடாது?

மனித உலகை சந்தோஷத்தைக் கொடுக்கும் இடமாக மாற்றுகின்ற தந்தைக்கு, எவ்வாறு உலகம் சந்தோஷத்தைக் கொடுக்கும் இடமாக ஆகுமென்பது தெரியும். ஆத்மாக்கள் சுத்தமாகும்வரை (தூய்மை), உலகமானது சந்தோஷத்தைக் கொடுக்கும் இடமாக இருக்க முடியாது. இதனாலேயே அவர் வந்து, அனைத்திற்கும் முதலில் ஆதமாக்களாகிய எங்களைச் சுத்தப்படுத்துகிறார். ஆத்மாக்கள் இப்பொழுது தூய்மையின்மையால் மூடப்பட்டுள்ளனர். முதலில், இந்தத் தூய்மையின்மை அகற்றப்பட வேண்டும். பின்னர், ஆத்மாக்களின் சக்தியால் அனைத்தும் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக மாறும். இதுவே அனைவரும் சத்திய யுகத்தினுள் செல்லல் எனக் குறிப்பிடப்படுகிறது. பின்னர், பஞ்சதத்துவங்கள் போன்ற அனைத்தும் தமது சத்திய யுக ஸ்திதிக்குள் செல்லும். எவ்வாறாயினும், அனைத்திற்கும் முதலில், ஆத்மாக்களின் ஸ்திதி மாறுகிறது. ஆத்மாக்களை மாற்றுபவர், அதாவது ஆத்மாக்களைத் தூய்மையாக்குபவர் அந்த அதிகாரியே ஆவார். உலகம் இப்பொழுது மாறிக் கொண்டிருப்பதை உங்களால் பார்க்க முடிகிறது. முதலில், நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். முதலில் நாங்கள் எங்களை மாற்றிய பின்னர், இதன் அடிப்படையில், உலகம் மாறும். இப்பொழுதுவரை எங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால், நாங்கள் எங்களை மாற்றவில்லையாயின், உலகம் எவ்வாறு மாறும்? இதனாலேயே நீங்கள் தினமும் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அட்டவணை வைத்திருப்பவர்கள், இரவில் தமது கணக்குகளைப் பார்த்து, என்ன சேமிக்கப்பட்டுள்ளது எனப் பார்ப்பார்கள். அனைவரும் தமது கணக்குகளை வைத்திருக்கிறார்கள். எனவே, இங்கும்கூட, நீங்கள் உங்களுடைய கணக்குகளை வைத்திருந்து, நாள் முழுவதும் எவ்வளவு இலாபம் அடைந்தீர்கள், எவ்வளவு இழந்தீர்கள் எனப் பார்க்கவேண்டும். பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருந்தால், மறுநாள் நீங்கள் மேலதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறாக உங்கள் மீது கவனம் செலுத்துவதால், நீங்கள் இலாபம் அடைவதுடன், உங்களுடைய நிலையை அடையமுடியும். இவ்வாறாக உங்கள் மீது கவனம் செலுத்துவதால், உங்களில் ஒரு மாற்றத்தை உணர்வீர்கள். நீங்கள் எப்படியோ தேவர்கள் ஆகிவிடுவீர்கள் என்றும் அது பின்னர் வந்துவிடும் என்றும், நீங்கள் இப்பொழுது நன்றாக இருக்கிறீர்கள் என்றும் நினைக்காதீர்கள். இல்லை, உங்களுடைய தேவ சம்ஸ்காரங்களை நீங்கள் இப்பொழுதே உருவாக்க வேண்டும். இப்பொழுது வரைக்கும், நாங்கள் ஐந்து விகாரங்களினதும் ஆதிக்கத்திற்கு ஏற்பவே சென்றுகொண்டிருந்தோம். ஆனால் இப்பொழுது, அந்த விகாரங்களில் இருந்து நாங்கள் விடுவிக்கப்படுகின்றோமா எனப் பார்க்கவேண்டும். என்னிடமிருந்த கோபம் அகற்றப்படுகிறதா? பேராசை மற்றும் பற்றின் விகார சம்ஸ்காரங்கள் மாறுகின்றனவா? அவை மாறினால், நீங்கள் அவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டால், நீங்கள் மாறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். அவை அகற்றப்படாவிட்டால், நீங்கள் இன்னமும் மாறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய மாற்றத்தில் வேறுபாட்டை நீங்கள் உணரவேண்டும். உங்களில் ஏதாவது மாற்றம் இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் நாள் முழுவதும் விகாரக் கணக்குகளின் அடிப்படையில் சென்றுவிட்டு, பின்னர் நீங்கள் தானம் கொடுத்து, ஏதாவது புண்ணியம் செய்ததாகவும் அது நல்லதே என்றும் நினைக்காதீர்கள். இல்லை, நாங்கள் எங்களுடைய கர்மக் கணக்குகளுக்கேற்ப எங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். நான் எதைச் செய்தாலும், எந்த விகாரத்தின் ஆதிக்கத்தினாலும் எனது பாவக் கணக்கில் சேர்த்துக் கொள்கின்றேனா? இதில், என்னை நான் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்காக ஓர் அட்டவணை வைத்திருங்கள். படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர், எவ்வாறு உங்களுடைய நாளைக் கழித்தீர்கள் என 10 முதல் 15 நிமிடங்களுக்கு உங்களைப் பாருங்கள். நீங்கள் அனைத்தையும் குறித்துக் கொள்ளவும் வேண்டும். ஏனெனில், உங்கள் தலைமீதுள்ள கடந்தகாலப் பாவங்களின் சுமையும் அகற்றப்பட வேண்டும். அதற்கு, தந்தையின் கட்டளைகள்: என்னை நினைவு செய்யுங்கள். எனவே, எவ்வளவு நேரத்தை நான் நினைவில் செலவிட்டேன். இந்த அட்டவணையை வைத்திருப்பதால், நீங்கள் மறுநாள் எச்சரிக்கையாக இருப்பீர்கள். இவ்வாறாக எச்சரிக்கையாக இருப்பதால், நீங்கள் கவனமாக இருப்பீர்கள், உங்களுடைய செயல்களும் நல்லதாக அமைவதுடன், எந்தப் பாவமும் செய்ய மாட்டீர்கள். நீங்கள் பாவம் செய்வதை நிறுத்த வேண்டும். அச்சா. இனிய குழந்தைகளுக்கு உங்களுடைய இனிய அன்னையிடமிருந்து அன்பும், நினைவும், காலை வணக்கமும்.

திரான்ஸ் செய்தியாளர் மூலமாக கடவுளுடன் அவ்யக்த சந்திப்பும், சரஸ்வதி மாதாவுடன் உரையாடலும்

மகளே ஸ்ரீ ராதே, யார் உங்களிடம் வந்திருக்கிறார் எனப் பாருங்கள். எவ்வளவு பெரிய சக்தி கொண்டவர் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். எனது வருகையின் இரகசியத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் உங்களைப் பற்றியும் உங்களால் அறிந்துகொள்ள முடியும். வந்திருக்கும் ஒரேயொருவரின் பதவியுடன் கூடவே, உங்களுடைய பதவியையும், அதாவது அந்தஸ்தையும் உங்களால் அறிந்துகொள்ள முடியும். ஓ மகளே ராதே, நீங்கள் எனது மகிமையைக் காண விரும்புகிறீர்களா? நான் விரும்பினால், ஒரு விநாடியில் என்னால் விநாசம் இடம்பெறச் செய்ய முடியும், ஆனால் நான் அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில், பல்சுவை சினிமாவிற்கேற்ப, என்னென்ன கடமைகள்(பாகங்கள்) ஒவ்வொருவராலும் நடிக்கப்பட வேண்டுமோ, அவர்கள் நிச்சயமாக அவ்விதமாகவே அவற்றை நடிப்பார்கள். அநாதியான நியதிகளை அறிந்தவரான அவ்யக்த கடவுளால் மாத்திரமே வந்து, இந்த அநாதியான நியதிகளின் சரியான புரிந்துணர்வை எமக்கு வழங்க முடியும். முழு உலகினதும் அநாதியான நாடகம் மேடையில் இடம்பெறுகிறது. நாடகம் நடைமுறையில் நடிக்கப்படுவதற்கு நேரம் எடுக்கும். பல வருடங்களைக் கொண்ட நாடகத்தை நான் ஒரு விநாடியில் முடித்துவிட்டால், நாடகத்தில் என்ன எஞ்சியிருக்கும்? என்னென்ன கஷ்டங்கள் பார்க்கப்பட வேண்டுமோ, அல்லது சகித்துக் கொள்ளப்பட வேண்டுமோ, சிக்கலான இரகசியத்தின்படி அதேபோன்று அவை மீண்டும் நிகழும். இது சிக்கலான, மீண்டும் மீண்டும் இடம்பெறும் நிகழ்வு. இதை எமது அன்பான ராதே, நீங்களும் நானும் சந்தோஷமாகப் பார்க்கின்றோம்.

இந்தப் பல்சுவை நாடகத்தில், எல்லாப் பகுதிகளுக்கும் ஒரு பரீட்சை கொடுக்கப்பட வேண்டும். இந்த நாடகத்தை இடம்பெறச் செய்பவர் விரும்பினால், அவரால் ஒரு விநாடியில் இந்நாடகத்தை நிறுத்திவிட்டு, புதியதொன்றை ஆரம்பிக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில், கடவுளும்கூட அனைத்தையும் இவ்விதமாக சாதாரணமான முறையிலேயே செய்யவேண்டும். அசரீரியான சர்வசக்திவான் கடவுளே இங்கே பௌதீக ரூபத்தில் இருக்கின்றார், ஆனால் ஒரு சாதாரண ஆடையில் இருக்கின்றார். இது சிக்கல் நிறைந்த அற்புதமான விளையாட்டு, இதை அறிந்தவர் ஜனிஜனன்ஹார் (அனைத்தையும் அறிந்தவர்) ஆவார்.

மகளே ஸ்ரீ ராதே, அன்பிற்கினிய குழந்தைகள் இப்பாதையில் சகித்துக் கொள்ள வேண்டியதும் இடம்பெற வேண்டும். நான் விரும்பினால், எனது குழந்தைகளுக்காக இலகுவான ஒரு பாதையை என்னால் உருவாக்க முடியும். ஏனெனில், காட்சிகளை அருள்வதற்கான சாவி எனது கையில்தான் உள்ளது. நான் ஒரு செல்வந்த பக்தருக்கு ஒரு தேவரின் காட்சியை அருளினால், அவர் தனது செல்வம் முழுவதையும் யக்ஞத்திற்குக் கொண்டுவந்து, அனைத்தையும் அர்ப்பணித்து விடுவார். ஏனெனில், கடவுளே செல்வந்தர்களை விடவும் மிகுந்த செல்வந்தர். எவ்வாறாயினும், உங்களுடைய தந்தை தனது அன்பான, பிச்சைக்காரக் குழந்தைகளை இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் ஆக்க விரும்புகிறார். இதனாலேயே நீங்கள் அனைத்தையும் சகித்துக்கொண்ட பின்னரே இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் சகித்துக்கொள்ள வேண்டிய இந்தப் பாதையை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத் தந்தை அறிவார். ஏனெனில், அனைத்தையும் சகித்துக்கொள்வது இறை தெய்வீகக் குணம் ஆகும். அதனுள் சந்தோஷம் அமிழ்ந்துள்ளது. இந்த நற்குணத்தால், உங்களால் இறை சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியும். அனைத்தையும் சகித்துக் கொள்ளும்போதும், நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறீர்கள். இது களிப்பூட்டும் ஞானம் ஆகும். எவ்விதமான ஈர்ப்புகளில் இருந்தும் விடுபட்டிருக்கும் யோகிகளால் மாத்திரமே நிரந்தரமான சந்தோஷத்தை அடைய முடியும்.

பரீட்சைகளுக்கான காலம் இப்பொழுது அண்மித்து விட்டது. ஒவ்வொரு குழந்தையும் வரப்போகின்ற பரீட்சைகளை முற்கூட்டியே தமக்கு முன்னால் வைத்து, தொடர்ந்தும் அந்தப் பயிற்சியுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். சில குழந்தைகளுக்கு எவ்விதமான உணவோ, தண்ணீரோ கிடைக்கா விட்டாலும், நீங்களும் ஒரு கவலையற்ற சக்கரவர்த்தியாகவே இருக்க வேண்டும். நீங்கள் நீண்ட காலத்திற்கு அத்தகையதோர் அழகான ஸ்திதியை உங்களுக்காக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவர் தன்னால் அந்த நேரத்தில் முன்னேறிச் செல்ல முடியும் என நம்புவாராயின், அவர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார். இதனாலேயே நீங்கள் முற்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆழமாக நேசிக்கப்படும் எனது குழந்தைகள் நினைவில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது வரைக்கும், அந்த ஒளியின் பிரகாசம் எனது உலகை வந்தடையவில்லை. அனைவரும் தமது ஒளி ரூபத்தில் இருக்கும்போது, அவர்களின் யோகத்தின் பிரகாசம் எனது உலகை வந்தடையும். அப்பொழுதே முழு ஒளியும் ஒவ்வொருவரிலும் பிரவேசமாகும். அந்த நேரத்தில் சக்திகளின் புகழ் வெளிப்படும். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய நம்பிக்கையில் ஸ்திரமாக இருக்கவேண்டும். அதாவது, நான் உங்களைக் கீழே கொண்டுவர முயற்சி செய்தாலும், உங்களால் கீழிறங்க முடியாமல் இருக்கவேண்டும்.

ஓ சக்தி ராதே, அனைத்து மணிகளிலும் அதியுயர்ந்த மணியே, யோகத்தை வழிநடத்தும் சக்தியுடனும், தமது வாயால் ஞானமுரளியை இசைப்பதிலும் சக்திகள் தயாராக இருக்க வேண்டும். உங்களுடைய ஸ்திரமான, தெய்வீகமான இறை திருஷ்டியால், அனைவரையும் அப்பால் கொண்டுசெல்ல வேண்டும். உங்களுடைய இனிய வார்த்தைகளால், நான் யார், எனது தந்தை யார், எவ்வாறு பிரம்மா மூலமாக கடவுள் வெளிப்படுத்தப்படுகிறார், இறுதி நேரத்தில் அசுர உலகை அழித்து, எமது சொந்த இடமான, அந்த தேவ உலகிற்கு எம்மை அழைத்துச் செல்பவர் யார் என்ற புரிந்துணர்தலை அவர்களுக்குக் கொடுங்கள்.

ஓ மகளே ராதே, ஒவ்வொருவரின் ஸ்திதியும் ஒரு தீபத்தின் சுவாலையைப் போன்று ஸ்திரமாக இருக்கும்போது, அவர்களால் சூட்சுமமான தூண்டுதல்களைப் பிடித்துக்கொள்ள முடிவதுடன், அவர்களின் பணியை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியும். இந்த ஞானத்தின் பிரகாரம் அவர்களின் ஸ்திதி என்னவாக உள்ளதோ, அதற்கேற்ப, அவர்களால் அத்தூண்டுதல்களைப் பிடித்துக் கொள்ள முடியும். எந்தளவிற்கு அவர்கள் தொடர்ச்சியாக அந்த ஸ்திதியில் நிலைத்திருக்கிறார்களோ, அதற்கேற்ப அவர்கள் சூட்சுமமான தூண்டுதல்களால் தொடப்படுவார்கள்.

ஓஹோ! மகளே ராதே, எனது ரூபத்தைப் பாருங்கள். குழந்தைகளால் எனது ரூபத்தையும், நான் எவ்வாறு மகா தத்துவத்திலிருந்து வந்து, இவரில் பிரவேசித்து, உங்களுடன் பேசுகிறேன் என்பதையும் பார்க்க முடியாதா? இந்தக் காட்சிகள் அனைத்தும் என் மூலமாகவே அருளப்படுகின்றன. ஏனெனில், நானே அனைத்தினதும் பிரதான வேர் ஆவேன். பாருங்கள், இந்த ஞானத்தின் ஒளியானது பஞ்சதத்துவங்களின் மத்தியில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும்: ஓஹோ! முழு உலகமும் அழைத்துக் கொண்டிருக்கின்ற, அந்த சர்வசக்திவான் இறைவனே இந்த யக்ஞத்திற்கும், குழந்தைகளாகிய உங்களிடமும் தனிப்பட்ட முறையில் வந்திருக்கிறார். அவருடைய குளிர்ந்த மடியில் அமர்வதால், இதயம் அமைதி அடைகிறது. படைப்புக்கள் தம்மைப் படைத்தவரைச் சந்தித்து விட்டால், ஏன் அவர்கள் அவரை விட்டு நீங்கி, அவரது படைப்பிடம் செல்லவேண்டும்? அதியுயர்ந்த அதிகாரிக்கு எல்லாம் அதியுயர்ந்தவராகவும், சகல சக்திகளையும் வெளிப்படுத்துகின்ற, சர்வ சக்திகளினதும் அதிபதியாகவும் இருப்பவரை நீங்கள் ஒரு தடவை இனங்கண்டு விட்டால், அந்த மடியை விட்டு நீங்குவது என்பது அசாத்தியம். படைப்பவரை நீங்கள் இனங்கண்டு கொள்ளும்போது மாத்திரமே, இந்த ஒரேயொருவர் யாரென்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். அனைத்து மணிகளினதும் மணியான (சிரோமணி) ராதே, இதைப் புரிந்து கொள்ளுங்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் சங்கம யுகத்தின் அலௌகீகப் பேறுகள் அனைத்தினாலும் நிறைந்திருந்;து, சதா அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பீர்களாக.

சதா அலௌகீகப் பேறுகளால் நிறைந்திருக்கும் குழந்தைகள் தொடர்ந்தும் அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பார்கள். விசேடமாக நேசிக்கப்படும் குழந்தைகள் ஊஞ்சல்களில் ஆடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்று, சகல பேறுகளாலும் நிறைந்திருக்கும் பிராமணர்களின் ஊஞ்சல், அதீந்திரிய சுகத்தின் ஊஞ்சலாகும். சதா தொடர்ந்தும் இந்த ஊஞ்சலில் ஆடுங்கள். ஒருபோதும் சரீர உணர்வுக்குள் செல்லாதீர்கள். இந்த ஊஞ்சலை விட்டு இறங்கி, தமது பாதங்களை சேற்றுக்குள் வைப்பவர்கள் அழுக்காகின்றனர். அதிமேலான தந்தையின் சுத்தமான குழந்தைகள் சதா அதீந்திரிய சுகத்தின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருப்பார்கள், அவர்களால் தமது பாதங்களை சேற்றில் வைக்க முடியாது.

சுலோகம்:
“நான் ஒரு துறவி” என்ற அகங்காரத்தையும் துறப்பதே உண்மையான துறவாகும்.

அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள்.

நீங்கள் உங்களை அமரத்துவ ரூபமான ஆத்மாவாகக் கருதும்போது, அகால மரணத்தில் இருந்தும், சகல பிரச்சனைகளில் இருந்தும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். மனக் கவலைகளையும், பிரச்சனைகளையும் அகற்றுவதற்கு ஒரு வழிதான் உள்ளது. உங்களுடைய பழைய சரீரத்தின் உணர்வை முடிப்பதே அதுவாகும். உங்களுடைய சரீர உணர்வை முடிப்பதனால், பாதகமான சூழ்நிலைகள் யாவும் முடிவடைந்துவிடும்.