25.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையின் ஸ்ரீமத் சதா உங்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்குகின்றது. ஆகையால் மனிதர்களின் வழிகாட்டல்களைத் துறந்து, ஒரேயொரு தந்தையின் மேன்மையான வழிகாட்டல்களை மாத்திரம் பின்பற்றுங்கள்.
கேள்வி:
எந்தக் குழந்தைகளின் புத்திகள் இன்னமும் அலைந்து திரிவதை நிறுத்தவில்லை?பதில்:
அதிமேலான தந்தையின் வழிகாட்டல்களில், அதாவது, கடவுளின் வழிகாட்டல்களில் நம்பிக்கையற்ற குழந்தைகளின் புத்திகள் இன்னமும் அலைந்து திரிவதை நிறுத்தவில்லை. தந்தையின் மீது முழுமையான நம்பிக்கை இல்லாததால், அவர்கள் இரு பக்கங்களிலும் தங்கள் காலை வைத்துள்ளார்கள். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதுடன், அவர்கள் தொடர்ந்தும் பக்தியையும் செய்வதனால் கங்கை போன்றவற்றில் நீராடுகின்றார்கள். அவ்வாறான குழந்தைகளின் நிலை என்னவாகும்? அவர்கள் ஸ்ரீமத்தை முற்றாகப் பின்பற்றாததால், தொடர்ந்தும் தடுமாறுகின்றார்கள்.பாடல்:
எங்களை இப் பாவ உலகில் இருந்து மீட்டு, ஓய்வும் சௌகரியமும் நிறைந்த உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்.ஓம் சாந்தி.
குழந்தைகளான நீங்கள் பக்தர்களின் இப்பாடலைச் செவிமடுத்தீர்கள். நீங்கள் இப்பொழுது இதனைப் பாடுவதில்லை. நீங்கள் அதிமேலான தந்தையைக் கண்டடைந்து விட்டீர்கள் என்பதை அறிவீர்கள். அவர் மாத்திரமே அதிமேலானவர். இந்நேரத்தில் மனிதர்கள் அனைவரும் தங்கள் அதி சீரழிந்த ஸ்திதியில் இருக்கின்றார்கள். பாரதத்தில் தேவர்களாக இருந்தவர்களே, அதிமேலான மனிதர்கள். தெய்வீகக் குணங்கள் போன்ற அனைத்தும் நிறைந்தவர்கள் என்பதே அவர்களின் புகழாகும். அந்தத் தேவர்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்கியவர் யார் என்பதை மக்கள் அறியார்கள். அவர்கள் இப்பொழுது முற்றிலும் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளார்கள். தந்தையே அதிமேலானவர். சாதுக்கள், புனிதர்கள் போன்றோர் அனைவரும் அவரைப் பிரார்த்தனை செய்கின்றார்கள். அரைக் கல்பத்திற்கு மக்கள் அத்தகைய சாதுக்களின் பின்னால் அலைந்து திரிந்தார்கள். இப்பொழுது தந்தை வந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் இப்பொழுது தந்தையுடன் திரும்பிச் செல்லவுள்ளோம். அவரது ஸ்ரீமத்தை எங்களுக்குக் கொடுப்பதன் மூலம், அவர் எங்களை அதிமேலானவர்களாகவும் சதா சந்தோஷம் நிறைந்தவர்களாகவும் ஆக்குகின்றார். இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றியதால், நீங்கள் அதி சீரழிந்த புத்தியை உடையவர்கள் ஆகினீர்கள். இனியும் நீங்கள் வேறு எவரது வழிகாட்டல்களையும் பின்பற்றக்கூடாது. நீங்கள் தூய்மையாக்குபவரான தந்தையாகிய என்னை அழைத்தீர்கள். அவ்வாறாயின், உங்களை மூழ்கச் செய்கின்றவர்களின் பின்னால் நீங்கள் ஏன் செல்கின்றீர்கள்? ஏன் ஒரேயொருவரின் வழிகாட்டல்களைத் துறந்து, வேறு பலரின் பின்னால் சென்று, தொடர்ந்தும் தடுமாறித் திரிகின்றீர்கள்? பல குழந்தைகள் இந்த ஞானத்தைச் செவிமடுக்கின்றார்கள். அத்துடன் கங்கையிலும் நீராடுகின்றார்கள் அல்லது குருமார்கள் போன்றோரின் பின்னாலும் செல்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அந்தக் கங்கை தூய்மையாக்குபவர் அல்ல. இருப்பினும், நீங்கள் மனித கட்டளைகளைப் பின்பற்றுவதால், அங்கு சென்று நீராடினால், தந்தை கூறுவார்: உங்களுக்கு அதிமேலான தந்தையின் வழிகாட்டல்களின் மீது நம்பிக்கை இல்லை. ஒருபுறம் கடவுளின் வழிகாட்டல்கள் உள்ளன, மறுபுறம் அசுர வழிகாட்டல்கள் உள்ளன. அத்தகையவர்களுக்கு என்ன நடக்கும்? உங்கள் ஒவ்வொரு காலையும் இரு வேறு படகுகளில் வைத்தால், நீங்கள் இரண்டாகக் கிழிந்து விடுவீர்கள். அவர்களுக்குத் தந்தையின் மீது முழுமையான நம்பிக்கை இல்லை. அவர்கள் கூறுகின்றார்கள்: “பாபா, நான் உங்களுக்கு உரியவன். நான் உங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி மேன்மை அடைவேன். நாங்கள் எடுக்கின்ற ஒவ்வோர் அடியும் அதிமேலான தந்தையின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.” தந்தையே உங்களை மௌன தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் அதிபதிகள் ஆக்குவார். ஆகவே, தந்தை கூறுகின்றார்: நான் பிரவேசித்திருக்கின்ற சரீரத்திற்குரியவர் 12 குருமார்களை ஏற்றுக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் தமோபிரதான் ஆகினார். அவர்களைப் பின்பற்றியதில் எப்பயனும் இருக்கவில்லை. தந்தையைக் கண்டடைந்த பின்னர் அவர்கள் அனைவரையும் அவர் துறந்தார். அதிமேலான தந்தையை அவர் கண்டடைந்த பொழுது தந்தை கூறினார்: தீயதைக் கேட்காதீர்கள்! தீயதைப் பார்க்காதீர்கள்! மனிதர்கள் இப்பொழுது முற்றிலும் தூய்மை அற்றவர்களாகவும், தமோபிரதான் புத்தியை உடையவர்களாகவும் உள்ளார்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்ற முடியாத பலரும் இங்கே இருக்கின்றார்கள்; அவர்களுக்குப் போதிய சக்தி இல்லை. மாயை அவர்களைத் தொடர்ந்தும் தடுமாறச் செய்கின்றாள். இராவணனே உங்கள் எதிரியாவான். ஆனால் இராமர் உங்கள் நண்பர். சிலர் அவரை இராமர் என்றும், சிலர் சிவன் என்றும் அழைக்கின்றார்கள். அவரது உண்மையான பெயர் சிவபாபா. நான் மறுபிறப்பு எடுப்பதில்லை. நாடகத்திற்கு ஏற்ப, எனது பெயர் சிவன். மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். ஏனெனில், ஒரேயொருவருக்கு வெவ்வேறு பத்து பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் மனதில் தோன்றிய பெயர்கள் அனைத்தையும் கொடுத்தார்கள். எனது உண்மையான பெயர் சிவன். நான் இச்சரீரத்தில் பிரவேசிக்கின்றேன், நான் ஸ்ரீ கிருஷ்ணர் போன்றோருக்குள் பிரவேசிப்பதில்லை. விஷ்ணு சூட்சும உலகில் வாழ்வதாக மக்கள் நினைக்கின்றார்கள். உண்மையில், அவர் இல்லறப் பாதையைப் பிரதிநிதிப்படுத்துகின்ற, இரட்டை வடிவமாவார். எவ்வாறாயினும் நான்கு கரங்களுடன் எவரும் இருப்பதில்லை. நான்கு கரங்கள் இல்லறப் பாதையின் அடையாளம். ஆனால் இரண்டு கரங்கள் துறவறப் பாதையின் அடையாளம். தந்தை இல்லறப் பாதைக்குரிய தர்மத்தையே ஸ்தாபிக்கின்றார். சந்நியாசிகள் துறவறப் பாதையைச் சேர்ந்தவர்கள். இல்லறப் பாதையைச் சேர்ந்தவர்கள் தூய்மையானவரில் இருந்து தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றார்கள். ஆகையால், உலகிற்கு ஆதாரமாக இருப்பதற்காக, சந்நியாசிகள் தூய்மையாக வேண்டிய பாகத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் நூறாயிரக் கணக்கானோர், மில்லியன் கணக்கானோர் உள்ளனர். ஒரு மேளா இடம்பெறும் பொழுது, பலரும் அங்கே செல்கின்றார்கள். அவர்கள் தங்கள் உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்வதில்லை; அவர்கள் இல்லறத்தினர் வழங்குகின்ற பராமரிப்பிலேயே வாழ்கின்றார்கள். அவர்கள் செயல்களைத் துறந்துள்ளார்கள். ஆகவே, அவர்கள் எங்கிருந்து உணவைப் பெறுவார்கள்? ஆகவே அவர்கள் இல்லறத்தினர் தங்களுக்குக் கொடுக்கின்ற உணவை உண்ணுகின்றார்கள். இல்லறத்தினர் அது தாங்கள் செய்யும் தானம் என நினைக்கின்றார்கள். இவரும் (பிரம்மா) தூய்மையற்ற, பூஜிப்பவராகவே இருந்தார். இவர் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் தூய்மை ஆகுகின்றார். இவர் தனது ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெற முயற்சிக்கின்றார். இதனாலேயே “தந்தையைப் (பிரம்மா) பின்பற்றுங்கள்” என உங்களுக்குக் கூறப்படுகின்றது. மாயை ஒவ்வொரு விடயத்திலும் உங்களை வீழ்த்துகின்றாள். ஏழைகளாயினும் செல்வந்தர்களாயினும் மக்கள் சரீர உணர்வினாலேயே தவறுகளைச் செய்கின்றார்கள். குறைந்தபட்சம், சரீர உணர்வைத் துண்டிக்கின்ற முயற்சியையேனும் நீங்கள் செய்ய வேண்டும்! சரீர உணர்வைத் துண்டிப்பதற்குப் பெரும் முயற்சி தேவை. தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி, உங்கள் சரீரங்களின் மூலம் உங்கள் பாகங்களை நடியுங்கள். நீங்கள் ஏன் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகின்றீர்கள்? நாடகத்திற்கு ஏற்ப, நீங்கள் சரீர உணர்வு உடையவர்களாக வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் நீங்கள் முற்றிலும் சரீர உணர்வு உடையவர்கள் ஆகியுள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஆத்மாக்கள். ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார். ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கும்பொழுது, அதன்பின்னர் அந்தச் சரீரத்தை வெட்டினாலும் ஏதாவது சத்தம் கேட்குமா? கேட்காது. ஆத்மாவே கூறுகின்றார்: “எனது சரீரத்தைத் துன்புறுத்தாதீர்கள்.” ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். ஆனால் சரீரங்களோ அழியக்கூடியவை. உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, தந்தையான என்னை நினைவுசெய்யுங்கள். சரீர உணர்வைத் துறவுங்கள். குழந்தைகளான நீங்கள் எந்தளவிற்கு ஆத்ம உணர்வுடையவர் ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் தொடர்ந்தும் ஆரோக்கியமாகவும் நோயிலிருந்து விடுபட்டவர்களாகவும் ஆகுவீர்கள். இந்த யோக சக்தியினாலேயே நீங்கள் 21 பிறவிகளுக்கு நோய்களில் இருந்து விடுபட்டவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் எந்தளவிற்கு ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் தண்டனையில் இருந்தும் விடுபட்டிருப்பீர்கள். அவ்வாறில்லா விட்டால் நீங்கள் பெரும் தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். ஆகவே, நீங்கள் மிகவும் ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும். பலருக்கு இந்த ஞானம் கிடைக்கின்ற பாக்கியம் இருப்பதில்லை. ஒருவர் உங்கள் குலத்திற்கு வந்து, ஒரு பிராமணர் ஆகாமல், அதாவது, பிரம்மாவின் வாய்வழித் தோன்றிய குழந்தை ஆகாமல் விட்டால் அவரால் எப்படி ஒரு தேவர் ஆக முடியும்? பலரும் இங்கே வந்து, கூறவேண்டும் என்பதற்காக ‘பாபா, பாபா’ என்று எழுதுகின்றார்கள். அவர்கள் ஓரிரு கடிதங்கள் எழுதிய பின்னர் மறைந்து விடுகின்றார்கள். அவர்களும் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள், ஆயினும் அவர்கள் பிரஜைகளில் ஒருவராகவே இருப்பார்கள். பல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றார்கள். பின்னர், பெருந் துன்பம் ஏற்படும்பொழுது, பலரும் ஓடோடி வருவார்கள். பல நிலையங்கள் திறக்கப்படும். கடவுள் வந்து விட்டார் என்ற ஓசை பரவும். குழந்தைகளாகிய உங்களுக்கு ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதில் இன்னமும் குறைபாடுள்ளது. இன்னமும் பெருமளவு சரீர உணர்வு உள்ளது. இறுதியில், உங்களுக்குச் சரீர உணர்வு இருக்குமாயின், உங்கள் அந்தஸ்தும் குறைவடையும். நீங்கள் அப்பொழுது பணிப்பெண்களாகவும், வேலையாட்களாகவும் ஆகுவீர்கள். பல பணிப்பெண்களும் வேலையாட்களும் வரிசைக்கிரமமாக உள்ளனர். அரசர்களுக்குச் சீர்வரிசையாகப் பணிப்பெண்களும் கொடுக்கப்படுகின்றார்கள். செல்வந்தப் பிரஜைகளுக்கு அவ்வாறு கொடுப்பதில்லை. இராதை எத்தனை பணிப்பெண்களையும் வேலையாட்களையும் சீர்வரிசையாகக் கொடுக்கப்பட்டு தன்னுடன் அழைத்து வருகின்றார் என்பதைச் சில குழந்தைகள் (காட்சிகளில்) பார்த்துள்ளார்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது, பல காட்சிகளைக் காண்பீர்கள். ஒரு சாதாரணப் பணிப்பெண்ணாக இருப்பதை விட, ஒரு செல்வந்தப் பிரஜையாக இருப்பது மேலானது. ‘பணிப்பெண்’ என்ற வார்த்தை நல்லதல்ல என்பதால் ஒரு செல்வந்தப் பிரஜை ஆகுவது சிறந்தது. நீங்கள் தந்தைக்கு உரியவர் ஆகும்பொழுது, மாயை உங்களைப் பெருமளவு உபசரிக்கின்றாள். அவள் அதிகளவு சக்திவாய்ந்தவளாகி, சக்திசாலிகளுடன் சண்டை இடுகின்றாள். பின்னர், சரீர உணர்வு காரணமாக, நீங்கள் சிவபாபாவிடம் இருந்து உங்கள் முகத்தைத் திருப்பிக் கொள்வதால், பாபாவை நினைவு செய்வதை நிறுத்தி விடுகின்றீர்கள். உங்களுக்கு உணவு உண்ண நேரம் இருக்கின்றது, எனினும் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையை நினைவுசெய்ய உங்களுக்கு நேரம் இருப்பதில்லை! பல நல்ல குழந்தைகள் சிவபாபாவை மறந்து விடுவதால், சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகின்றார்கள். உங்களுக்கு வாழ்க்கை என்ற தானத்தைக் கொடுத்துள்ள தந்தையை நினைவுசெய்து, அவருக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுதக்கூடாதா? எவ்வாறாயினும், கேட்கவும் வேண்டாம்! மாயை உங்கள் மூக்கைப் பிடித்து உங்களை வெளியேற்றுகின்றாள். ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நீங்கள் பல மில்லியன்களுக்கான வருமானத்தை ஒவ்வோர் அடியிலும் பெறுகின்றீர்கள். உங்களிடம் உள்ள செல்வத்தை எண்ண முடியாதளவிற்கு நீங்கள் செல்வந்தர் ஆகுகின்றீர்கள். நீங்கள் செல்வம், செழிப்பு, நிலம் அனைத்தையும் பெறுகின்றீர்கள். செப்பு, இரும்பு, வெண்கலம் போன்றவை அங்கே இருப்பதில்லை. அங்கே தங்க நாணயங்கள் மாத்திரம் இருக்கின்றன. கட்டடங்களும் தங்கத்தினால் கட்டப்பட்டிருக்கின்றன. ஆகவே, உங்களுக்கு என்ன குறை இருக்கும்? இதுவே அந்தச் சீரழிந்த இராச்சியம். ஆட்சியாளர் எவ்வாறோ, பிரஜைகளும் அவ்வாறே உள்ளனர். சத்திய யுகத்தில், ஆட்சியாளர்கள் எவ்வாறு உள்ளார்களோ, அவ்வாறே பிரஜைகளும் இருக்கின்றார்கள்; அனைவரும் மேன்மையானவர்கள். எவ்வாறாயினும், இது மனிதர்களின் புத்தியில் நிலைத்து இருப்பதில்லை; அவர்கள் தமோபிரதானாக உள்ளார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் அவ்வாறே இருந்தீர்கள். இவரும் அவ்வாறே இருந்தார். நான் இப்பொழுது உங்களைத் தேவர்களாக ஆக்குவதற்கே வந்துள்ளேன். இருப்பினும், நீங்கள் அவ்வாறு ஆகுவதில்லை. நீங்கள் தொடர்ந்தும் உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றீர்கள். ‘நான் மிகவும் நல்லவர், நான் இப்படியானவர், அப்படியானவர்’. தாங்கள் நரகத்தில் இருப்பதை அவர்கள் எவருமே புரிந்து கொள்வதில்லை. நாங்கள் ஆழ் நரகத்திற்குள் இருக்கின்றோம். நீங்கள் செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப, குழந்தைகளாகிய நீங்கள் இதனை வரிசைக்கிரமமாக அறிந்திருக்கின்றீர்கள். மனிதர்கள் இப்பொழுது ஆழ்நரகத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் இரவுபகலாகக் கவலையுடன் வாழ்கின்றார்கள். இந்த ஞான மார்க்கத்தில், பிறரைத் தங்களைப் போன்றவர்கள் ஆக்குகின்ற சேவையைச் செய்யாமல், ‘எனது, உனது’ எனக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களே நோயாளிகளும் சுகவீனமானவர்களும் ஆவார்கள். தந்தையை மாத்திரம் அல்லாது வேறு எவரையும் நினைவுசெய்வது கலப்படமான நினைவாகும். தந்தை கூறுகின்றார்: வேறு எவர் கூறுவதையும் செவிமடுக்காதீர்கள்! நான் கூறுவதை மாத்திரமே செவிமடுங்கள்! என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள்! மனிதர்களை நினைவுசெய்வதில் எப்பயனும் இல்லை. அதனை விட தேவர்களை நினைவுசெய்வது சிறந்தது. தந்தை வினவுகின்றார்: நீங்கள் ஏன் தலை வணங்குகின்றீர்கள்? நீங்கள் இந்த பாபாவிடம் வரும்பொழுது, சிவபாபாவை நினைவுசெய்த பின்னர் இங்கே வாருங்கள். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்யாது விட்டால், அது நீங்கள் பாவம் செய்வதைப் போன்றது. பாபா கூறுகின்றார்: முதலில் தூய்மை ஆகுவதற்கான சத்தியத்தைச் செய்யுங்கள். சிவபாபாவை நினைவுசெய்யுங்கள்! பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனை உங்களில் எவரும் புரிந்துகொள்வதில்லை. தந்தையிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்று அறிந்து கொள்வதற்கான போதுமானளவு விவேகம் கூட அவர்களிடம் இல்லை. இதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. மாலையில் மணியாகுவது என்பது உங்கள் மாமியாரின் வீட்டிற்குச் செல்வதைப் போன்றதல்ல! தந்தையை நினைவுசெய்வதே பிரதானமானது. தந்தையை உங்களால் நினைவுசெய்ய முடியாதுள்ளதா? அதிகளவு சேவையும், தந்தையின் நினைவும் இருக்க வேண்டும். நாளாந்த அட்டவணையை வைத்திருக்குமாறு தந்தை உங்களிடம் கூறுகின்றார். தங்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்று எண்ணுகின்ற குழந்தைகள், தொடர்ந்தும், சகல வகையிலும் அதிகளவு முன்னெச்சரிக்கையுடன் இருப்பார்கள். அவர்களின் உணவும், பானமும் மிகவும் தூய்மையாக இருக்கும். குழந்தைகளாகிய உங்களின் நன்மைக்காகவே தந்தை அதிகளவு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் சகல வகையான முன்னெச்சரிக்கையையும் எடுக்க வேண்டும். உங்களது உணவும், பானமும் தூய்மையாக உள்ளனவா, உங்களுக்குப் பேராசை இல்லையா என்பதைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் கர்மாதீத நிலையை அடையும்வரை மாயை உங்களைப் பிழையான விடயங்களைச் செய்ய வைப்பாள். அதற்கு இன்னமும் நேரம் உள்ளது. பின்னர் நீங்கள் விநாசம் உங்கள் முன்னாலேயே உள்ளதை அறிந்து கொள்வீர்கள். தீ பரவும். குண்டுகள் எப்படி விழுகின்றன என்பதையும் நீங்கள் பார்ப்பீர்கள். பாரதத்தில் இரத்த வெள்ளம் ஓடும். ஏனைய இடங்களில் அவர்கள் குண்டுகள் வீசி, ஒருவரையொருவர் அழித்துக் கொள்வார்கள். இயற்கை அனர்த்தங்களும் இடம்பெறும். அதிகபட்ச கஷ்டங்கள் பாரதத்திலேயே இருக்கும். நீங்கள் என்ன சேவை செய்கின்றீர்கள் என்று உங்களையே நீங்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் எத்தனை பேரை உங்களுக்குச் சமமாக ஆக்குகின்றீர்கள், எத்தனை பேரைச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக ஆக்குகின்றீர்கள்? பலரும் பக்தியில் அதிகளவில் சிக்கி உள்ளார்கள். ‘இந்தப் புதல்விகளால் எங்களுக்கு என்ன கற்பிக்க முடியும்?’ என்று அவர்கள் நினைக்கின்றார்கள். தந்தையான கடவுளே அவர்களுக்குக் கற்பிப்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குச் சிறிதளவு கல்வியறிவு அல்லது செல்வம் இருப்பதால், அவர்கள் உங்களுடன் விவாதம் செயய ஆரம்பிக்கின்றார்கள். அவர்கள் தங்கள் கௌரவத்தை இழக்கின்றார்கள். சற்குருவை அவதூறு செய்பவர்களால், ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. அவர்கள் பின்னர் சதப் பெறுமதியான அந்தஸ்தையே கோருவார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ‘என்னுடையது, உங்களுடையது’ என்ற கவலைகள் அனைத்தையும் துறந்து விட்டு, பிறரை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குகின்ற சேவை செய்யுங்கள். ஒரேயொரு தந்தை கூறுவதை மாத்திரமே செவிமடுங்கள். ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். உங்கள் நினைவு கலப்படம் ஆகுவதை அனுமதிக்காதீர்கள்.2. உங்களுக்கு நன்மை செய்வதற்கு, உங்கள் உணவிலும், பானத்திலும் பெரும் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். நீங்கள் எதிலும் பேராசை கொள்ளக்கூடாது. மாயை உங்களைப் பிழையான செயல்களைச் செய்ய வைக்காதிருப்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தீர்மானிக்கும் சக்தியையும், கட்டுப்படுத்தும் சக்தியையும் கொண்டிருந்து, சதா வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.லௌகீக அல்லது ஆன்மீகப் பணி எதனிலும் வெற்றி பெறுவதற்கு, உங்களுக்குக் குறிப்பாக, கட்டுப்படுத்தும் சக்தியும் தீர்மானிக்கும் சக்தியும் தேவை. ஏனெனில் ஆத்மாக்கள் உங்களுடன் தொடர்பில் வரும்பொழுது, அவர்களுக்கு என்ன தேவை என்பதை முதலில் நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அவர்களின் நாடித் துடிப்பை உணர்ந்த பின்னரே, அவர்களின் தேவைக்கேற்ப, அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். உங்கள் கட்டுப்படுத்தும் சக்தி மற்றும் உங்கள் அசைக்க முடியாத ஸ்திதி மூலம் நீங்கள் பிறரில் (ஆன்மீக) ஆதிக்கம் செலுத்த வேண்டும். செயற் களத்தில், இவ்விரு சக்திகளும் உங்களை ஒரு வெற்றி சொரூபம் ஆக்கும்.
சுலோகம்:
சர்வசக்திவான் தந்தையை உங்கள் சகபாடி ஆக்குங்கள், மாயை ஒரு கடதாசிப் புலி ஆகுவாள்.அவ்யக்த சமிக்ஞை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வுடன் சதா வெற்றியாளராக இருங்கள்.
வெவ்வேறு விதமான தடைகள் அனைத்தும் உங்களுக்கும் சேவைக்கும் வருவதற்கான காரணம்: நீங்கள் உங்களை ஒரு சேவகராக மட்டும் கருதுகின்றீர்கள். எவ்வாறாயினும், “நான் ஓர் இறை சேவகர். நான் வெறுமனே சேவையில் இல்லை, ஆனால் நான் இறை சேவையில் இருக்கின்றேன்.” இவ் விழிப்புணர்வின் மூலம், நினைவும் சேவையும் இயல்பாகவே இணைந்தவை ஆகுகின்றன.