25.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் ஆத்மாக்கள் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருங்கள். ஓர் ஆத்மாவாக இருக்கின்ற உணர்வுடன் எந்தப் பணியையும் ஆரம்பியுங்கள். உங்களுக்குத் தந்தையின் நினைவு ஏற்படும், அத்துடன் பாவம் எதுவும் செய்யமாட்டீர்கள்.

பாடல்:
கர்மாதீத ஸ்திதியை அடைவதற்கு, நீங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய முயற்சி என்ன? நீங்கள் கர்மாதீத ஸ்திதியை அண்மித்து விட்டதை எது குறிக்கின்றது?

பதில்:
கர்மாதீதம் ஆகுவதற்காக, உங்கள் பௌதீகப் புலனங்கங்களை நினைவு சக்தியின் மூலம் கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். பயிற்சி செய்யுங்கள்: ஓர் அசரீரி ஆத்மாவாகிய நான், அசரீரியான தந்தையின் குழந்தை ஆவேன்;. உங்கள் பௌதீகப் புலனங்கங்கள் அனைத்தையும் விகாரமற்றதாக்குவதே, அதி சிறந்த முயற்சி ஆகும். நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அண்மிக்கும் அளவிற்கேற்ப, உங்களுடைய ஒவ்வொரு புலனங்கமும் சாந்தமாகவும், நறுமணம் மிக்கதாகவும் இருக்கும். விகாரத்தின் துர்நாற்றம் அவற்றிலிருந்து அகற்றப்படுவதுடன், நீங்கள் தொடர்ந்தும் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வீர்கள்.

ஓம் சாந்தி.
கடவுள் சிவன் பேசுகின்றார். அவர் யாருடன் பேசுகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறத் தேவையில்லை. சிவபாபாவே ஞானக்கடல் என்பதும்; அவரே மனித உலகின் விதை என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆகவே, அவர் நிச்சயமாக ஆத்மாக்களுடன் பேசுவார். சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். “பாபா” என்;ற வார்த்தையைப் பயன்படுத்துவதால், அது பரமாத்மாவாகிய பாபாவைக் குறிக்கின்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். மனிதர்கள் அனைவரும் அந்தப் பரமாத்மாவைத் தந்தையாகக் குறிப்பிடுகின்றனர். பாபா பரந்தாமத்தில் வசிக்கின்றார். நீங்கள் முதலில் இந்த விடயத்தை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதிக் கொள்வதுடன் இதில் மிகவும் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருங்கள். தந்தை அவர்களுக்கு என்ன கூறுகின்றார் என்பதை ஆத்மாக்கள் கிரகிக்க வேண்டும். பரமாத்மாவில் இருக்கின்ற ஞானம், ஆத்மாக்களாகிய உங்களுக்குள்ளும் பதிய வேண்டும். பின்னர் நீங்கள் அதை ஏனையோருக்கு உங்களுடைய உதடுகளினூடாகக் கூற வேண்டும். நீங்கள் எதைக் கற்றாலும், ஆத்மாவே அதைக் கற்கின்றார். ஓர் ஆத்மா சரீரத்தைவிட்டு நீங்கும்பொழுது, கல்வி போன்றவற்றைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. ஆத்மா தனது சம்;ஸ்காரங்களை எடுத்துச் சென்று அவருடைய அடுத்த சரீரத்தில் அமர்கின்றார். ஆகவே, முதலில், நீங்கள் உறுதியாக உங்களை ஓர் ஆத்மா எனக் கருத வேண்டும். நீங்கள் இப்பொழுது சரீர உணர்வைத் துறக்க வேண்டும். ஆத்மாவே கேட்கின்றார், ஆத்மாவே கிரகிக்கின்றார். ஒரு சரீரத்தில் ஆத்மா இல்லாதபொழுது, சரீரத்தால் நகரவும் முடியாது. பரமாத்மாவே ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார் என்;ற உறுதியான நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கொண்டிருக்க வேண்டும். நீங்கள் சரீரங்களை மாத்திரமே நினைவு செய்வதனால், நீங்கள் ஆத்மாக்கள்;, சரீரங்களினூடாகக் கேட்;;கின்றீர்கள் என்பதையும், பரமாத்மா ஒரு சரீரத்தினூடாகப் பேசுகின்றார் என்பதையும் நீங்கள் மீண்டும் மீண்டும் மறக்கின்றீர்கள்;. நல்ல, தீய சம்ஸ்காரங்கள் ஆத்மாவிலேயே உள்ளன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆத்மாவே பௌதீகப் புலனங்கங்களினூடாக மது அருந்தி, அழுக்கான விடயங்களைப் பௌதீகப் புலனங்கங்களினூடாகப் பேசுகின்றார். ஆத்மாவே இந்தப் புலனங்கங்களினூடாகத் தனது பாகத்தை நடிக்கின்றார். அனைத்திற்கும் முதலில், நீங்கள் நிச்சயமாக ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக வேண்டும். தந்தை ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றார். பின்னர் ஆத்மாக்கள் இந்த ஞானத்தை மீண்டும் தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். பரமாத்மா அங்கு ஞானத்துடன் வசிப்பதைப்; போன்று, ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த ஞானத்தை உங்களுடன் எடுத்துச் செல்கின்றீர்கள். நான் குழந்தைகளாகிய உங்களை இந்த ஞானத்துடன் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன். பின்னர், ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுடைய பாகங்களை நடிப்பதற்குக் கீழே வர வேண்டும். புதிய உலகில் வெகுமதியை அனுபவம் செய்வதே உங்கள் பாகமாகும்., ஆனால் நீங்கள் ஞானத்தை மறக்கின்றீர்கள். நீங்கள் இவை அனைத்தையும் மிகவும் நன்றாகக் கிரகிக்க வேண்டும். அனைத்திற்கும் முதலில், நீங்கள் ஓர் ஆத்மா என்பதை மிகவும் ஆழமாக உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். இதை மறக்கின்ற பலர் உள்ளனர். நீங்கள் உங்களின் மீதே பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் முயற்சி செய்யாமல் உலகின் அதிபதிகள் ஆக முடியாது. இந்த ஞானம் புதியது என்பதனால், நீங்கள் மீண்டும் மீண்டும் இக் கருத்துக்களை மறக்கின்றீர்கள். நீங்கள் ஓர் ஆத்மா என்பதை மறந்து சரீர உணர்வுடையவர்கள் ஆகும்பொழுது, நீங்கள் ஏதோவொரு பாவத்தைச் செய்கின்றீர்கள். ஆத்ம உணர்வில் இருக்கும்பொழுது நீங்கள் பாவம் செய்ய மாட்டீர்கள்;. உங்களுடைய பாவங்கள் அழிக்கப்பட்டுவிடும். பின்னர், அரைக் கல்பத்திற்குப் பாவங்கள் செய்யப்படமாட்டாது ஆகவே, ஆத்மாக்களாகிய நீங்களே கற்கின்றீர்கள், சரீரங்கள் அல்ல என்;ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருங்கள். முன்னர், நீங்கள் சரீரதாரிகளிடம் இருந்து வழிகாட்டல்களைப் பெறுவது வழக்கமாகும். இப்பொழுது நீங்கள் தந்தையிடமிருந்து ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். இது புதிய உலகிற்கான, முற்றிலும் புதிய ஞானமாகும். நீங்கள் அனைவரும் புதியவர்கள் ஆகுவீர்கள். இதில் குழப்பமடையத் தேவை இல்லை. நீங்கள் எண்ணற்ற தடவைகள் பழையவர்களில் இருந்து புதியவர்களாகவும,; புதியவர்களில் இருந்து பழையவர்களாகவும் மாறியுள்ளீர்கள். ஆகவே, நீங்கள் மிகச் சிறந்த முயற்சியைச் செய்ய வேண்டும். உங்களுடைய புலனங்கங்களினூடாக ஆத்மாக்களாகிய நீங்கள் செயல்களைச் செய்கின்றீர்கள். நீங்கள் அலுவலகங்கள் போன்றவற்றில் இருக்கும்பொழுதும், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தொடர்ந்தும் உங்கள் புலனங்கங்களினூடாகச் செயல்களைச் செய்தால், உங்களுக்குக் கற்பிக்கின்ற தந்தையை நிச்சயமாக உங்களால் நினைவுசெய்ய முடியும். ஆத்மாக்களே தந்தையை நினைவு செய்கின்றார்கள். முன்னர், அசரீரியான, கடவுளை நீங்கள் நினைவுசெய்வது வழக்கம் என்று கூறினாலும், உங்களைப் பௌதீகமானவர் என்று கருதியே நீங்கள் அசரீரியானவரை நினைவுசெய்தீர்கள். அசரீரியானவரை நினைவுசெய்கையில், நீங்கள் ஒருபொழுதும் உங்களை அசரீரியானவராகக் கருதுவதில்லை. நீங்கள் இப்பொழுது உங்களை அசரீரியானவராகக் கருதி அசரீரியான தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இது மிகவும் நன்றாகக் கடையப்பட வேண்டிய ஒரு விடயமாகும். சிலர் தாங்கள்;; இரண்டு மணித்தியாலங்களாக நினைவுசெய்வதில் நிலைத்திருப்பதாக எழுதினாலும், சிலர் தாங்கள் சிவபாபாவை சதா நினைவுசெய்வதாகக் கூறினாலும் எவராலும் நிலையான நினைவைக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் செய்திருந்தால், நீங்கள் உங்களுடைய கர்மாதீத ஸ்திதியை இப்பொழுதே அடைந்திருப்பீர்கள். பெருமளவு முயற்சியைச் செய்த பின்னர் மாத்திரமே, உங்களால் உங்களுடைய கர்மாதீத ஸ்திதியை அடைய முடியும். அந்த ஸ்திதியில், விகாரமான பௌதீகப் புலனங்கங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். சத்தியயுகத்தில், உங்களுடைய பௌதீகப் புலனங்;கங்கள் அனைத்தும் விகாரமற்றவை ஆகுகின்றன. உங்களுடைய ஒவ்வொரு புலனங்கமும் நறுமணம் நிறைந்ததாக ஆகுகின்றது. இப்பொழுது பௌதீகப் புலனங்கங்கள் அழுக்கானவையும் துர்நாற்றம் நிறைந்தவையும் ஆகும். சத்தியயுகத்தின் புகழ் மிகவும் சிறந்ததாகும். அது சுவர்க்கம் எனவும், புதிய உலகம் எனவும், வைகுந்தம்; எனவும் அழைக்கப்படுகின்றது. அங்கே இருக்கின்ற முகச்சாயல்களும் கிரீடங்கள்; போன்றவையும் இங்குள்ள எவராலும் உருவாக்கப்பட முடியாது. நீங்கள் திரான்ஸில் சென்று அவற்றைப் பார்த்தாலும், உங்களால் அவற்றை இங்கு உருவாக்க முடியாது. அங்கு இயற்கை அழகு இருக்கின்றது. ஆகவே, இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் நினைவினூடாகத் தூய்மையாக வேண்டும். நீங்கள் நினைவுயாத்திரையில் அதிகளவு நிலைத்திருக்க வேண்டும். இதற்குப் பெரும் முயற்சி தேவைப்படுகின்றது. பாபாவை நினைவுசெய்கையில், நீங்கள் உங்களுடைய கர்மாதீத ஸ்திதியை அடைவதுடன் உங்களுடைய பௌதீகப் புலனங்கங்கள் அனைத்தும் குளிர்மை அடையும். ஒவ்வொரு அங்கமும் நறுமணம் நிறைந்திருப்பதுடன் எந்தத் துர்நாற்றமும் இருக்க மாட்டாது. இப்பொழுது பௌதீகப் புலனங்கங்கள் அனைத்திலும் துர்நாற்றம் இருக்கின்றது. இந்தச்சரீரம் எப்பயனும் அற்றதாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். உங்களுடைய சரீரம் தூய்மையாக முடியாது. நீங்கள் ஒரு புதிய சரீரத்தைப் பெறும்பொழுது மாத்திரமே அது நிகழும். “ஒவ்வொரு பௌதீகப் புலனங்கத்திலும் நறுமணம்” என்;ற புகழ் தேவர்களையே குறிக்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். தந்தை வந்துள்ளார், ஆகவே உங்களுடைய சந்தோஷ பாதரசம் உயர வேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். கீதையின் வாசகங்கள் மிகவும் தெளிவானவையாகும். பாபாவும் கூறியுள்ளார்: என்னுடைய பக்தர்களும் கீதையைக் கற்பவர்களும் நிச்சயமாகக் கிருஷ்ண பக்தர்களாக இருப்பார்கள். இதனாலேயே பாபா கூறுகின்றார்: இதைத் தேவர்களை வழிபடுபவர்களுக்கும் கூறுங்கள். மக்கள் சிவனை வழிபடுவதுடன், அவர் சர்வவியாபி என்றும் கூறுகின்றார்கள்! அவர்கள் அவரை இகழ்ந்தாலும், அவர்கள் ஒவ்வொரு நாளும் ஆலயங்களுக்குச் செல்கின்றார்கள். மக்கள் பலரும் சிவாலயங்களுக்குச் செல்கின்றார்கள். அவர்கள் மிகவும் செங்குத்தான படிகளில் உச்சிக்கு ஏறுகின்றார்கள். உச்சியிலேயே சிவாலயம் கட்டப்படுகிறது. சிவபாபா வந்து உங்களுக்கு ஏணியின் படத்தைக் காட்டுகின்றார். அவருடைய பெயர் உயர்வானது. அவருடைய வசிப்பிடமும் உயர்ந்ததாகும். மக்கள் மிகவும் மேலே உச்சிக்குச் செல்கின்றார்கள். பத்ரிநாத்திலும் அமர்நாத்திலும் சிவனுக்கு ஆலயங்கள் இருக்கின்றன. அவர் எங்களை மேன்மையாக்குவதால், அவர்கள் அவருக்கு உயரத்திலேயே ஓர் ஆலயத்தைக் கட்டுகின்றார்கள். இங்கும், குரு சிக்கார் ஆலயம் ஒரு மலையில் உயர்ந்த இடத்திலே கட்டப்பட்டுள்ளது. அதிமேலான தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். சிவபாபா வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது உலகிலுள்ள வேறு எவருக்கும் தெரியாது. அவர் சர்வவியாபி என்று அவர்கள் கூறுகின்றார்கள். இப்பொழுது உங்கள் முன்னால் இலக்கும் இலட்சியமும் உள்ளன. தந்தையைத் தவிர வேறு யார், ‘இது உங்களுடைய இலக்கும் இலட்சியமும்’ என்று கூறுவார்கள்? தந்தை மாத்திரமே இதைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார். நீங்கள் சத்திய நாராயணனின் கதையையும் செவிமடுக்கின்றீர்கள். அம்மக்கள் கடந்த காலத்தில் இடம்பெற்ற சமயக் கதைகளின் விடயங்களைக் கூறி, அடுத்து என்ன நிகழ்ந்தது என்பதை உங்களுக்குக் கூறுகின்றார்கள். இதுவும் ஒரு கதை என அழைக்கப்படுகின்றது. அந்த அதிமேலான தந்தை உங்களுக்கு ஒரு மகத்தான கதையைக் கூறுகின்றார். இக்கதை உங்களை மிகவும் மேன்மையானவர்களாக ஆக்கும். நீங்கள் அதை எப்பொழுதும் நினைவுசெய்வதுடன் அதை வேறு பலருக்கும் கூற வேண்டும். இக்கதைகளைக் கூறுவதற்கு நீங்கள் அருங்காட்சியகங்களையும் கண்காட்சிகளையும் உருவாக்குகின்றீர்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதம் மாத்திரம் இருந்ததுடன் அங்கு தேவர்கள் ஆட்சி செய்தார்கள். இது உண்மையான கதை ஆகும், இதை வேறு எவராலும் உங்களுக்குக் கூற முடியாது. விருட்சத்தின் உயிருள்ள பிரபுவாகிய தந்தை, இந்த நிஜமான கதையை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அதனூடாக நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். இதில் தூய்மையே பிரதான விடயமாகும். நீங்கள் தூய்மையானவர்கள் ஆகாதுவிட்டால், உங்களால் கிரகிக்க இயலாதிருக்கும். ஒரு பெண் சிங்கத்தின் பாலை வைத்திருப்பதற்கு ஒரு தங்கப் பாத்திரம் தேவையாகும். அப்பொழுதே கிரகித்தல் இடம்பெற முடியும். உங்கள் காதுகள் ஓரு பாத்திரம் போன்றவையாகும். அவை ஒரு தங்கப் பாத்திரமாக இருக்க வேண்டும். அவை தற்சமயம் கற்கள் போன்றதாகும். அவை தங்கம் ஆகும்பொழுதே, கிரகித்தல் இடம்பெற முடியும். நீங்கள் பெருமளவு கவனத்துடன் செவிமடுத்து அதைக் கிரகிக்க வேண்டும். கதை இலகுவானது, அது கீதையிலும் எழுதப்பட்டுள்ளது. அந்த மக்கள் கதைகளைக் கூறி, ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கின்றார்கள். கதைகளைக் கேட்பவர்களிடம் இருந்து தங்களுடைய வருமானத்தை அவர்கள் சம்பாதிக்கின்றார்கள். இங்கு, உங்களுக்கும் ஒரு வருமானம் உண்டு. ஒரே நேரத்தில் இரண்டு விதமான வருமானமும் தொடர்கின்றது. இரண்டுமே வியாபாரம் ஆகும். உங்களுக்குக் கற்பிக்கப்படுகின்றது. அவர் கூறுகின்றார்: மன்மனாபவ ஆக இருங்கள்! தூய்மையாகுங்கள்! வேறு எவராலும் இதைக் கூறவும் முடியாது, எவரும் மன்மனாபவ என்னும் நிலையில் இருப்பதும் இல்லை. தூய்மையின்மையினூடாக இங்கு படைப்பு இருப்பதால், இங்கு மனிதர்கள் எவருமே தூய்மையானவர்களாக இருக்க முடியாது. இராவண இராச்சியம் கலியுக இறுதிவரை தொடர வேண்டும்., அந்த இராச்சியத்திலேயே நீங்கள் தூய்மையானவர்கள் ஆக வேண்டும். மனிதர்கள் அல்லாது, தேவர்களே தூய்மையானவர்கள் எனக் கூறப்படுகின்றார்கள். சந்நியாசிகளும் மனிதர்களே, ஆனால் அவர்களுடைய சமயம் துறவறப்பாதை ஆகும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். பாரதத்தில் எப்பொழுதும் இல்லறப் பாதையின் இராச்சியம் இருந்து வருகின்றது. துறவறப்பாதையில் உள்ளவர்களுடன் உங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.. இங்கு, கணவன், மனைவி இருவருமே தூய்மையானவர்கள் ஆக வேண்டும். இரண்டு சக்கரங்களும் ஒத்திசையும்பொழுது, அது நல்லதே, இல்லாதுவிட்டால், அங்கு சண்டை இருக்கும். அங்கு, தூய்மையின் காரணமாகச் சண்டை உள்ளது. வேறு எந்த ஆன்மீக ஒன்றுகூடலிலும் தூய்மையின் காரணத்தால், ஏதாவது சண்டை உள்ளதென நீங்கள் ஒருபொழுதுமே கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தந்தை வரும்பொழுது ஒருமுறை மாத்திரம் இந்தச் சண்டை இடம்பெறுகின்றது. சாதுக்கள் அல்லது புனிதர்கள் எப்பொழுதாவது அப்பாவிகள் அடிக்கப்படுவதாகக் கூறுகின்றார்களா? இங்கு, புதல்விகள் கூவியழைக்கின்றார்கள்: பாபா, எங்களைக் காப்பாற்றுங்;;;;;;;;;;;;;கள்! தந்தையும் வினவுகின்றார்: நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆக மாட்டீர்கள், அப்படித்தானே? காமமே மிகப் பெரிய எதிரியாகும். நீங்கள் முழுமையாகவே வீழ்கின்றீர்கள். இந்தக் காம விகாரமே அனைவரையும் ஒரு பெனியேனும் (ஆங்கில நாணயம்) பெறுமதியற்றவர்கள் ஆக்கியுள்ளது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் 63 பிறவிகளாக, விபச்சார விடுதியில் தங்கி உள்ளீர்கள். இப்பொழுது தூய்மையாகி சிவாலயத்திற்;குச் செல்லுங்கள். இந்த ஒரு பிறவியிலேயே தூய்மையாகுங்கள். சிவபாபாவை நினைவுசெய்யுங்கள், நீங்கள் சுவர்க்கமாகிய சிவாலயத்திற்குச் செல்வீர்கள். எவ்வாறாயினும், காமவிகாரம் மிகவும் சக்திவாய்ந்ததாகும். உங்களை அது பெருமளவு தொல்லைப்படுத்துகின்றது. அதில் பெருமளவு கவர்ச்சி உள்ளது. அக்கவர்ச்சி அகற்றப்பட வேண்டும். நீங்கள் வீடு திரும்ப வேண்டியுள்ளதால், நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். இங்கு எப்பொழுதும் ஆசிரியர் அமர்ந்திருக்க மாட்டார். ஒரு குறுகிய காலத்திற்கே கல்வி தொடரும். உங்களுக்கு இது தன்னுடைய இரதம் என்று பாபா உங்களுக்குக் கூறுகின்றார். அவர் உங்களுக்கு இரதத்தின் வயதைக் கூறுகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் அமரத்துவமானவர்;. என்னுடைய பெயர் அமரத்துவப் பிரபு ஆகும். அவர் மறுபிறவி எடுப்பதில்லை என்பதனால், அவர் அமரத்துவப் பிரபு என்று அழைக்கப்படுகின்றார். உங்களை அவர் அரைக்கல்பத்திற்கு அமரத்துவமானவர்கள் ஆக்குகின்றார். இருந்தும் நீங்கள் இன்னமும் தொடர்ந்து மறுபிறவி எடுக்கின்றீர்கள். ஆகவே, இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் திரும்பவும் மேலே செல்ல வேண்டும். நீங்கள் உங்களுடைய முகத்தை அந்தத்திசையிலும் உங்களுடைய பாதங்களை மறு திசையிலும் வைக்க வேண்டும். ஆகவே, பின்னர், நீங்கள் ஏன் உங்களுடைய முகத்தை மறு திசையில் திருப்புகின்றீர்கள் (பழைய உலகை நோக்கி)? சிலர் கூறுகின்றார்கள்: பாபா, நான் ஒரு தவறு செய்து, எனது முகத்தை மறு திசையில் திருப்பினேன். எனவே, நீங்கள் தவறான பாதையில் சென்றீர்கள் என்று அர்த்தமாகும். நீங்கள் தந்தையை மறந்து சரீர உணர்வுடையவர்கள் ஆகியதால், நீங்கள் தவறான பாதையில் சென்றீர்கள். தந்தை உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் தந்தையிடம் எதையும் கேட்கக் கூடாது: எனக்கு வலிமையைக் கொடுங்கள்;, எனக்குச் சக்தியைக் கொடுங்கள்! தந்தை உங்களுக்குப் பாதையைக் காட்டுகின்றார்: நீங்கள் யோகசக்தி மூலம்; அவ்வாறு ஆக வேண்டும். நீங்கள் 21 பிறவிகளுக்கு எவரிடமும் எதையும் கேட்கத் தேவையில்லாதவாறு யோகசக்தி மூலம் மிகவும் செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள்; நீங்கள் தந்தையிடமிருந்து பெருமளவு பெறுகின்றீர்கள். பெருமளவு வருமானத்தை நீங்கள் சம்பாதிப்பதற்கு பாபா உங்களைத் தூண்டுகின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் கூறுகின்றார்: உங்களுக்கு வேண்டியதையெல்லாம் எடுங்கள்! இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் மேன்மையானவர்கள். பின்னர், உங்களுக்கு வேண்டியதையெல்லாம் நீங்கள் பெற முடியும். நீங்கள் முழுமையாகக் கற்காதுவிடின், நீங்கள் பிரஜைகளில் ஒருவர் ஆகுவீர்கள். பிரஜைகளும் நிச்சயமாக உருவாக்கப்பட வேண்டும். நீங்கள் மேலும் முன்னேறுகையில், நீங்கள் அதிகமான அருங்காட்சியகங்களைக் கொண்டிருப்பீர்கள், நீங்கள் சேவை செய்யக்கூடியதாகப் பெரிய மண்டபங்களையும் கல்லூரிகளையும் பெறுவீர்கள். மக்கள் திருமண நிகழ்ச்சிகளை நடாத்துவதற்காகக் கட்டிய மண்டபங்களையும் நிச்சயமாக நீங்கள் பெறுவீர்கள். கடவுள் சிவன் பேசுகின்றார் என்று நீ;ங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: நான் உங்களை மிகவும் தூய்மையானவர்கள் ஆக்குகின்றேன் (தேவர்கள்). பின்னர் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் தங்கள் மண்டபத்தை உங்களுக்குக் கொடுப்பார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: கடவுள் சிவன் பேசுகின்றார்: நீங்கள் துன்பத்தைப் பெற்ற காமமே மிகப் பெரிய எதிரியாகும். இப்பொழுது தூய்மையானவர்களாகித் தூய உலகிற்குச் செல்லுங்கள். நீங்கள் தொடர்ந்தும் மண்டபங்களைப் பெறுவீர்கள். பின்னர் கூறப்படும்: மிகவும் தாமதித்து விட்டீர்கள்! தந்தை கூறுகின்றார்: பின்னர் நான் ஒரு பிரதிபலனைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்பதால், ஒன்றுமில்லாததற்காக நான் உங்களிடமிருந்து எதையும் பெறமாட்டேன். குழந்தைகளின் பெனிகள் (நாணயங்கள்) ஒரு ஏரியையே உருவாக்குகின்றன, ஏனையோரின் அனைத்துமே மண்ணோடு மண்ணாகி விடும். தந்தையே மகத்தான நகை அடகுபிடிப்பவரும், பொற்கொல்லரும், சலவைத் தொழிலாளியும் கைவினைஞரும் ஆவார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை உங்களுக்குக் கூறுகின்ற உண்மைக் கதையைக் கவனமாகச்; செவிமடுத்து அதைக் கிரகியுங்கள். தந்தையிடம் இருந்து என்றுமே எதையும் வேண்டாதீர்கள். 21 பிறவிகளுக்கான உங்கள் வருமானத்தைச் சேமித்துக் கொள்ளுங்கள்.

2. நீங்கள் வீடு திரும்ப வேண்டும். ஆகவே, யோகசக்தி மூலம்; சரீரத்தின் கவர்ச்சியை முடித்;துவிடுங்கள். உங்களுடைய பௌதீகப் புலனங்கங்களைக் குளிர்மை ஆக்குங்கள். உங்கள் சரீர உணர்வுகள் அனைத்தையும் துறப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓரிடத்தில் இருந்தவண்ணம் ஆத்மாக்கள் பலருக்குச் சேவை யெ;கின்ற, ஒளியாலும் சக்தியாலும் நிரம்பியவர் ஆகுவீர்களாக.

எப்படி ஒரு வெளிச்சவீடு ஓரிடத்தில் இருந்தவண்ணம் தொலைதூரத்திற்கும் சேவை செய்கிறதோ, அப்படியே, உங்களாலும் ஓரிடத்தில் இருந்தவண்ணம் பல ஆத்மாக்களுக்குச் சேவை செய்வதற்குக் கருவிகள் ஆகமுடியும். இதற்கு, நீங்கள் ஒளியாலும் சக்தியாலும் நிரம்பியவர் ஆகவேண்டும், அவ்வளவுதான். உங்களின் மனமும் புத்தியும் சதா வீணான எண்ணங்களில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். ‘மன்மனாபவ’ எனும் மந்திரத்தின் இலகு சொரூபம் ஆகுங்கள். உங்களின் மனதின் ஸ்திதியானது நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் மேன்மையான மனோபாவத்தாலும் மேன்மையான அதிர்வலைகளாலும் நிரம்பியிருக்க வேண்டும். அப்போது உங்களால் இலகுவாக இந்தச் சேவையைச் செய்ய முடியும். இது உங்களின் மனதின் மூலமான உண்மையான சேவையாகும்.

சுலோகம்:
பிராமண ஆத்மாக்களான நீங்கள் இப்போது சக்தியைக் கொண்டிருந்து, ஏனைய ஆத்மாக்களை மைக்குகள் ஆக்க வேண்டும்.