26.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தூய்மையாக்குபவராகிய தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ள உங்கள் பலமில்லியன் மடங்கு பாக்கியத்தின் போதையில் எப்பொழுதும் நிலைத்திருங்கள். நாங்கள் அவரிடமிருந்து எல்லையற்ற சந்தோஷம் என்ற ஆஸ்தியைப் பெறுகின்றோம்.

பாடல்:
குழந்தைகளாகிய நீங்கள் ஏன் எந்தச்; சமயத்தின் மீதும் விருப்பமின்மையையோ அல்லது வெறுப்பையோ கொண்டிருக்க முடியாது?

பதில்:
ஏனெனில் உங்களுக்கு விதையையும் விருட்சத்தையும் தெரியும். இது மனித உலகின் எல்லையற்ற விருட்சம் என்பது உங்களுக்குத் தெரியும். அதில் ஒவ்வொருவரும் தத்தமது சொந்தப் பாகத்தைக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு நாடகத்தில், நடிகர்கள் ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொண்டிருப்பதில்லை. இந்த நாடகத்தில் நீங்கள் கதாநாயக, கதாநாயகி பாகங்களைக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் கண்ட சந்தோஷத்தை வேறு எவரும் காண முடியாது. நீங்கள் முழு உலகத்தையும் ஆட்சி செய்வீர்கள் என்ற எல்லையற்ற சந்தோஷத்தை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள்.

ஓம் சாந்தி.
'ஓம் சாந்தி" என்று கூறுவதால், குழந்தைகளாகிய நீங்கள் பெறுகின்ற ஞானம் அனைத்தும் உங்கள் புத்தியில் பிரவேசிக்கிறது. தந்தையிடம் உள்ள ஞானம் என்ன? இது கல்ப விருட்சம் என்றும் அழைக்கப்படுகின்ற, மனித உலக விருட்சமாகும். அது எவ்வாறு உருவாக்கப்படுகின்றது, அது எவ்வாறு பராமரிக்கப்படுகின்றது, விநாசம் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பவை அனைத்தும் உங்கள் புத்தியில் பிரவேசிக்க வேண்டும். அது உயிரற்ற விருட்சமாக உள்ளதைப் போன்றே, இது உயிருள்ள விருட்சமாக உள்ளது. விதையும் உயிருள்ளவர். அவர் சத்தியமானவரும் உயிருள்ளவரும் ஆவார் என்று மக்கள் அவருடைய புகழைப் பாடுகின்றார்கள். அதாவது, அவர் முழு விருட்சத்தினதும் ஆரம்பம், மத்தி, இறுதியை எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவரின் தொழில் என்ன என்பது எவருக்கும் தெரியாது. பிரஜாபிதா பிரம்மாவின் தொழில் என்ன என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பிரம்மாவை எவரும் அறியாததால், அவரை எவரும் நினைவு செய்ய முடியாது. அஜ்மீரில் பிரம்மாவிற்கு ஓர் ஆலயம் உள்ளது. அவர்கள் திரிமூர்த்தியின் படத்தை அச்சடித்து, அதில் பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் காட்டுகின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: பிரம்ம தேவருக்கு வந்தனங்கள். இந்த நேரத்தில் பிரம்மாவை ஒரு தேவர் என அழைக்க முடியாது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் முழுமை அடையும் பொழுதே அவரைத் தேவர் என்று அழைக்க முடியும். அவர் முழுமையடைந்து, சூட்சும உலகிற்குச் செல்கின்றார். பாபா கூறுகின்றார்: உங்கள் தந்தையின் பெயர் என்ன? அவர் யாரிடம் வினவுகின்றார்? அவர் ஆத்மாக்களிடம் வினவுகின்றார். ஆத்மாக்கள் கூறுகின்றார்கள்: எங்களுடைய பாபா. இதனைக் கூறியவர் யார் என்பதனை அறியாதவர்களால், இந்தக் கேள்வியைக் கேட்க முடியாது. அனைவருக்கும் உண்மையிலேயே இரண்டு தந்தையர் இருக்கின்றார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொண்டிருக்கிறீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். இது சிவபாபாவின் இரதம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இரதத்தின் மூலமே பாபா எங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். முதலில் இது பௌதீகத் தந்தை பிரம்மாவின் இரதமாக இருக்கிறது. இரண்டாவதாக, இது ஆன்மீகத் தந்தையின் இரதமாகவும் இருக்கின்றது. ஆன்மீகத் தந்தையின் புகழ்: சந்தோஷக்கடலும், அமைதிக் கடலும் என்பதாகும். அவரே உங்கள் எல்லையற்ற தந்தை என்பதும், அவரிடமிருந்தே நீங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதும் உங்கள் புத்தியில் முதலில் பிரவேசிக்க வேண்டும். நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அசரீரியானவரைக் கூவியழைக்கின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! ஆத்மாவே கூவி அழைக்கின்றார். ஆத்மா தூய்மையாக இருக்கும்பொழுது கூவியழைப்பதில்லை. அவர் தூய்மையற்றவராக இருக்கும் பொழுதே கூவியழைக்கின்றார். தூய்மையாக்குபவராகிய தந்தை இந்தச் சரீரத்தில் பிரவேசித்துள்ளார் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது அவருக்கு உரியவர்கள் என்பதனை மறந்துவிடக் கூடாது. இது வெறும் நூறு மடங்கு பாக்கியம் அல்ல, ஆனால் இது பல மில்லியன் மடங்கு பாக்கியமாகும். எனவே, அந்தத் தந்தையை நீங்கள் ஏன் மறக்க வேண்டும்? இந்நேரத்தில் தந்தை வந்துள்ளார். இது புதியதொன்று ஆகும். ஒவ்வொரு வருடமும் சிவஜெயந்தி கொண்டாடப்படுகின்றது. எனவே, அவர் நிச்சயமாக ஒருமுறை மாத்;திரமே வருகின்றார். இலக்ஷ்மியும் நாராயணனும் சத்தியயுகத்தில் இருந்தார்கள். இந்த நேரத்தில் அவர்கள் இங்கு இல்லை. எனவே அவர்கள் மறுபிறப்பு எடுத்திருப்பார்கள் என நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களிலிருந்து 14 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகவும், பின்னர் 12 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகவும் ஆகியிருப்பார்கள். உங்களைத் தவிர வேறு எவருக்கும் இது தெரியாது. புதிய உலகம் சத்தியயுகம் என அழைக்கப்படுகின்றது. அங்கே அனைத்தும் புதியதாக இருக்கிறது. தேவ தர்மத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தேவர்கள் பாவப் பாதையில் செல்லும் பொழுது, அவர்களைப் புதியவர்கள் என்றோ, தேவர்கள் என்றோ அழைக்க முடியாது. அவர்களைத் தங்கள் வம்சத்தினர் என எவரும் கூறமாட்டார்கள். அவர்கள் அந்த வம்சத்தினர் எனத் தங்களைக் கருதினால், அவர்கள் ஏன் தேவர்களை புகழ்ந்தும், தங்களை இகழ்ந்தும் கொள்கின்றார்கள்? அவர்கள் புகழைப் பாடும் பொழுது, தேவர்களைத் தூய்மையானவர்கள் என்றும் தங்களைத் தூய்மையற்றவர்கள் என்றும் நிச்சயமாகக் கருதியிருப்பார்கள். நீங்கள் மறுபிறப்பு எடுப்பதால் தூய்மையானவர்களிலிருந்து தூய்மையற்றவர்கள் ஆகுகின்றீர்கள். முதலில் தூய்மையாக இருந்தவர்களே தூய்மையற்றவர்கள் ஆகுபவர்கள். நீங்கள் தூய்மையானவர்களிலிருந்து தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் பாடசாலையில் கற்கின்றீர்கள். முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு போன்ற வகுப்புக்கள் வரிசைக்கிரமமாக உள்ளன. தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையும், இதனாலேயே அவர் வருகின்றார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இல்லாவிட்டால் அவர் இங்கு வருவதற்கான அவசியம் என்ன? இவர் ஒரு குருவோ, மகாத்மாவோ அல்லது மகான் போன்றவரோ அல்ல. இது ஒரு சாதாரண மனித சரீரமும், பழைய சரீரமும் ஆகும். அவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியிலேயே நான் அவரில் பிரவேசிக்கின்றேன். இவருக்கு வேறு எந்தப் புகழும் இல்லை. நான் அவரில் பிரவேசிக்கும் பொழுதே, அவரின் பெயர் போற்றப்படுகின்றது. இல்லாவிடில் பிரஜாபிதா பிரம்மா எங்கிருந்து வந்தார்? மக்கள் நிச்சயமாகக் குழப்பம் அடைந்துள்ளார்கள். நீங்கள் இவ்வாறு பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்பதால் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். பிரம்மாவின் தந்தை யார்? சிவபாபாவே பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் படைப்பவர். எனவே, உங்கள் புத்தி மேல் நோக்கிச் செல்கின்றது. இது பரந்தாமத்தில் வசிக்கின்ற, பரமாத்மா பரமதந்தையின் படைப்பாகும். பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் தொழில்கள் வேறுபட்டவை. ஒரு குழுவில் மூன்று அல்லது நான்கு பேர் இருக்கும் பொழுது, ஒவ்வொருவரின் தொழிலும் வெவ்வேறானது. ஒவ்வொருவரின் பாகமும் வேறானது. மில்லியன் கணக்கான ஆத்மாக்கள் உள்ளனர், ஒவ்வொருவரின் பாகமும் மற்றவரிலிருந்து வேறானது. இந்த அற்புதமான விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். பல மனிதர்கள் உள்ளனர். சக்கரம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. அதுவே முடிவாகும். அனைவரும் வீட்டிற்குச் செல்வார்கள். பின்னர் சக்கரம் மீண்டும் மீண்டும் சுழல வேண்டும். தந்தை உங்களுக்கு இந்த விடயங்கள் அனைத்தையும் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். இது ஒரு புதிய விடயமல்ல. அவர் கூறுகின்றார்: நான் முன்னைய கல்பத்திலும் உங்களுக்கு விளங்கப்படுத்தினேன். தந்தை மிகவும் வசீகரமானவர். அத்தகைய தந்தையை நீங்கள் பெருமளவு அன்புடன் நினைவு செய்ய வேண்டும். நீங்கள் தந்தையின் வசீகரமான குழந்தைகள். நீங்கள் தந்தையை நினைவுசெய்து வருகிறீர்கள். முதலில், அனைவரும் ஒரேயொருவரையே வழிபடுகின்றார்கள். இதில் வேறுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. இப்பொழுது அதிகளவு வேறுபாடு உள்ளது: ஒருவர் இராம பக்தராகவும், இன்னொருவர் கிருஷ்ண பக்தராகவும் உள்ளனர். இராம பக்தர்கள்; ஊதுபத்தியை ஏற்றினால், கிருஷ்ண பக்தர்கள்; தங்கள் மூக்கைப் மூடிக் கொள்கின்றனர். அவர்கள் சமயநூல்களில் அவ்வாறான விடயங்களை எழுதியுள்ளார்கள். ஒருவர் 'எனது கடவுளே பெரியவர்" எனக் கூறுவார், இன்னொருவரோ 'எனது கடவுளே பெரியவர்" எனக் கூறுவார். இரண்டு கடவுள்கள் உள்ளனரென அவர்கள் எண்ணுகின்றார்கள். தவறாகப் புரிந்து கொள்வதால், அனைவரும் அநீதியான செயல்களைச் செய்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, பக்தி பக்தியும், ஞானம் ஞானமும் ஆகும். ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக் கடல் ஆவார். ஏனைய அனைவரும் பக்திக் கடல்கள் ஆவார்கள். ஞானத்தின் மூலமே சத்கதி பெறப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஞானம் உள்ளவர்கள் ஆகியுள்ளீர்கள். தந்தை உங்களுக்குத் தனது அறிமுகத்தையும், முழுச் சக்கரத்தின் அறிமுகத்தையும் கொடுத்துள்ளார். வேறு எவராலும் இதனை உங்களுக்குக் கொடுக்க முடியாது. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆவீர்கள். ஒரேயொரு பரமாத்மா பரமதந்தையே உள்ளார். ஏனைய அனைவரும் குழந்தைகள் ஆவார்கள். எவரும் தன்னைப் பரம தந்தையென அழைத்துக் கொள்ள முடியாது. இது அத்தகைய பெரிய நாடகம் என்பதனைச் சிறந்த விவேகிகள் புரிந்து கொள்கிறார்கள். இதில் உள்ள நடிகர்கள் அனைவரும் தங்கள் அநாதியான பாகங்களை நடிக்கின்றார்கள். அந்தச் சிறிய நாடகங்கள் அழியக்கூடியவை. ஆனால் இதுவோ அநாதியானதும் அழிவற்றதும் ஆகும். இது என்றுமே முடிவடையாது. அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மா சரீரத்தை எடுப்பதும் அதிலிருந்து நீங்குவதும், தனது பாகத்தை நடிப்பதும் என்ற அத்தகைய பெரிய பாகத்தைப் பெற்றுள்ளார். இந்த விடயங்கள் எந்த ஒரு சமயநூலிலும் குறிப்பிடப்படவில்லை. ஒரு குரு இவருக்கு (பிரம்ம பாபா) கூறியிருந்தால், அவர் வேறு சிஷ்யர்களையும் கொண்டிருந்திருப்பார். ஒரேயொரு சிஷ்யரைக் கொண்டிருப்பதில் என்ன பயன்? சிஷ்யர் என்றால் முழுமையாகப் பின்பற்றுகின்றவர் என்று அர்த்தமாகும். இவரது ஆடை அவர்களுடையது போன்றதல்ல. அவர் தங்களுடைய சீடரென யார் கூறுவார்? இங்கே, தந்தை அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஓர் ஊர்வலத்தில் செல்வதைப் போல, நீங்கள் தந்தையை மாத்திரமே பின்பற்ற வேண்டும், அவர்கள் சிவனின் ஊர்வலத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: இது எனது ஊர்வலமாகும். நீங்கள் அனைவரும் பக்தர்களும், நான் கடவுளும் ஆவேன். நீங்கள் அனைவரும் மணவாட்டிகள்;. உங்களை அலங்கரித்து, உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வதற்கு பாபா வந்துள்ளார். நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு இப்பொழுது உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியைத் தெரியும். நீங்கள் தந்தையை நினைவு செய்வதன் மூலம் தூய்மை ஆகுகின்றீர்கள், ஆகையால் நீங்கள் ஒரு தூய இராச்சியத்தைக் பெறுகின்றீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் இறுதியிலேயே வருகின்றேன். வந்து, தூய உலகை ஸ்தாபித்து, தூய்மையற்ற உலகை அழிக்குமாறு நீங்கள் என்னைக் கூவியழைக்கின்றீர்கள். இதனாலேயே அவர்கள் என்னை மகாகாலன் எனவும் அழைக்கின்றார்கள். மகாகாலனுக்கு ஓர் ஆலயமும் உள்ளது. காலனின் ஆலயத்தையும் உங்களால் காண முடியும். சிவனே காலன் (மரணம்) என அழைக்கப்படுகின்றார். வந்து தங்களைத் தூய்மை ஆக்குமாறு மக்கள் என்னைக் கூவி அழைக்கின்றார்கள். அவர் ஆத்மாக்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். எல்லையற்ற தந்தை பல ஆத்மாக்களை வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். மகாகாலன் ஆத்மாக்கள் அனைவரையும் தூய்மையானவர்களாகவும், அழகானவர்களாகவும் ஆக்கி, அவர்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார். நீங்கள் அழகானவரானதும், தந்தை உங்களைத் தனது மடியில் இருத்தித் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார். நீங்கள் தூய்மையாகாது விட்டால், தண்டனை பெற வேண்டும். பாவங்கள் எஞ்சி இருந்தால், வித்தியாசம் உள்ளது. பின்னர் தண்டனையை அனுபவிக்க வேண்டும். பின்னர் நீங்கள் அதற்கேற்ப அந்தஸ்தைப் பெறுவீர்கள். இதனாலேயே தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிய குழந்தைகளே, மிக மிக இனிமையானவர் ஆகுங்கள். அனைவரும் கிருஷ்ணரை மிகவும் இனிமையானவராகக் காண்கின்றார்கள். மக்கள் கிருஷ்ணரை அதிகளவு அன்புடன் ஒரு தொட்டிலில் ஆட்டுகின்றார்கள். திரான்ஸில், அவர்கள் குழந்தை கிருஷ்ணரைக் கண்டதும், அவர்கள் அவரைத் தங்கள் மடியில் இட்டு, அதிகளவு அன்பைப் பொழிகின்றார்கள். அவர்கள் வைகுந்தத்திற்குச் செல்கின்றார்கள்; அங்கே அவர்கள் கிருஷ்ணரை உயிருள்ள ரூபத்தில் காணுகின்றார்கள். வைகுந்தம் உண்மையில் வருகின்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். எதிர்காலத்தில், நாங்கள் இவ்வாறு ஆகுவோம். ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி அவர்கள் உருவாக்கியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவையாகும் எல்லாவற்றிற்கும் முதலில் குழந்தைகளாகிய நீங்கள் போதை கொண்டிருக்க வேண்டும். ஆரம்பத்தில், நீங்கள் பல காட்சிகளைக் கண்டீர்கள், எனவே இறுதியிலும், நீங்கள் பல காட்சிகளைக் காண்பீர்கள். ஞானம் மிகவும் களிப்பூட்டுவதாகும். அதிகளவு சந்தோஷம் உள்ளது. பக்தியில் எந்தச் சந்தோஷமும் இல்லை. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு ஞானத்தில் எவ்வளவு சந்தோஷம் உள்ளது என்பது தெரியாது. அவர்களால் அதனை ஒப்பிட முடியாது. எல்லாவற்றிற்கும் முதலில் குழந்தைகளாகிய நீங்கள் இப்போதையைக் கொண்டிருக்க வேண்டும். தந்தையைத் தவிர, வேறு எந்த ரிஷிகள் அல்லது முனிவர்கள் போன்ற எவராலும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. உலகிலுள்ள குருமார்களினால் எவருக்கும் முக்திக்கான அல்லது ஜீவன்முக்திக்கான வழியைக் காட்ட முடியாது. எந்த ஒரு மனிதரும் குருவாகி, 'ஓ ஆத்மாக்களே, ஓ குழந்தைகளே, நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன்" எனக் கூற முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தைக்கு மாத்திரமே 'குழந்தாய், குழந்தாய்!" எனக் கூறுகின்ற பயிற்சி உள்ளது. இவர்கள் தனது படைப்பு என்பது அவருக்குத் தெரியும். தானே அனைவரையும் படைப்பவர் எனத் தந்தை கூறுகின்றார். நீங்கள் அனைவரும் சகோதரர்கள், நீங்கள் அனைவரும் பாகங்களைப் பெற்றுள்ளீர்கள். அவர் இங்கமர்ந்திருந்து, நீங்கள் எவ்வாறு உங்கள் பாகங்களைப் பெறுவீர்களென உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஒவ்வொரு ஆத்மாவிலும் முழுப் பாகமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 84 பிறவிகளை எடுக்கின்ற எம் மனிதரும் மற்றவர் கொண்டிருப்பதைப் போன்ற அதே முகச்சாயலைக் கொண்டிருக்க முடியாது. நிச்சயமாக அவற்றில் சிறிதளவு வித்தியாசங்கள் உள்ளன. பஞ்சதத்துவங்கள் கூட சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்ல வேண்டும். ஒவ்வொரு பிறவியிலும் முகச்சாயல் வேறுபடுகின்றது. ஒரு பிறவியில் உள்ள அதே முகச்சாயல் பிறிதொரு பிறவியில் இருக்க மாட்டாது. இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். தந்தை உங்களுக்கு ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்துகின்றார்: இனிய குழந்தைகளே, ஒருபொழுதும் தந்தை மீது எந்தச் சந்தேகமும் கொள்ளாதீர்கள். 'நம்;பிக்கை", 'சந்தேகம்" என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளன. தந்தை என்றால் தந்தை தான். இதனைப் பற்றிய எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. தந்தையை நினைவுசெய்ய முடியவில்லை எனக் குழந்தைகளால் கூற முடியாது. உங்களால் யோகம் செய்ய முடியவில்லை என நீங்கள் மீண்டும் மீண்டும் கூறுகின்றீர்கள். யோகம் என்ற வார்த்தை சரியல்ல. நீங்கள் இராஜ ரிஷிகள். “ரிஷி” எனும் வார்த்தை தூய்மையைக் குறிக்கும் பதமாகும். நீங்கள் இராஜரிஷிகள். எனவே நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக இருப்பீர்கள். அற்ப விடயமொன்றின் காரணமாக, நீங்கள் தோல்வியடைந்தால், உங்களால் இராச்சியத்தைப் பெற முடியாது. அதன்பின்னர் நீங்கள் பிரஜைகளில் ஒருவர் ஆகுகிறீர்கள். அதிகளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்தஸ்து வரிசைக்கிரமமாகும். ஒருவரின் அந்தஸ்தானது இன்னொருவரின் அந்தஸ்தைப் போன்றிருக்காது. இது எல்லையற்ற, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு இதனை விளங்கப்படுத்த முடியாது. எனவே குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். தந்தை தனது புத்;தியில் ஞானம் அனைத்தையும் கொண்டிருப்பதைப் போன்று, நீங்களும் அவ்வாறே அதனை உங்கள் புத்தியில் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் விதையையும் விருட்சத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். இது மனித உலக விருட்சமாகும். இதனை ஓர் ஆலமரத்துடன் ஒப்பிடுதல் முற்றிலும் சரியானதாகும். எங்கள் ஆதி சனாதன தேவதேவியரின் அடிமரமானது மறைந்து விட்டது, ஆனால் மற்றைய சமயங்கள் அனைத்தினதும் கிளைகளும் சிறு கிளைகளும் இன்னமும் உள்ளன எனப் புத்தி கூறுகின்றது. நாடகத்திற்கு ஏற்ப, இவை யாவும் இடம்பெற வேண்டும். இதில் விருப்பமின்மை என்ற கேள்விக்கு இடமில்லை. ஒரு நாடகத்தில் உள்ள நடிகர்கள் எப்பொழுதாயினும் ஒருவர் மீது ஒருவர் விருப்பமின்மையை உணர்வார்களா? தந்தை கூறுகின்றார்: நீங்கள் தூய்மையற்றவர் ஆகியுள்ளீர்கள், நீங்கள் இப்பொழுது தூய்மையானவர்கள் ஆக வேண்டும். நீங்கள் காணுமளவு சந்தோஷத்தைப் போன்று வேறு எவரும் காண்பதில்லை. நீங்கள் கதாநாயகர்களும், கதாநாயகிகளும் ஆவீர்கள். நீங்களே உலக இராச்சியத்தைப் பெறுவீர்கள் என்பதால் நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார்! ஆகையால் நீங்கள் தினமும் கற்க வேண்டும். எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற அதிகளவு சந்தோஷத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். தந்தையே உங்களுக்கு இராஜயோகத்தையும் கற்பிப்பவர். எந்த ஒரு சரீரதாரியாலும் இதனை உங்களுக்குக் கற்பிக்க முடியாது. ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தந்தையே கற்பித்தார், ஆத்மாக்களாகிய நீங்கள் அனைத்தையும் கிரகிக்கின்றீர்கள். தந்தை தனது பாகத்தை நடிப்பதற்கு ஒருமுறை மாத்திரமே வருகின்றார். ஓர் ஆத்மா தனது பாகத்தை நடிக்கின்றார், ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றைப் பெறுகின்றார். தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் தேவர்களுக்குக் கற்பிக்க மாட்டார். அங்கே தேவர்கள் உங்களுக்குக் கற்பிப்பார்கள். உங்களை அதி மேன்மையானவர்கள் ஆக்குவதற்காக, தந்தை சங்கமயுகத்தில் மாத்திரமே கற்பிக்கின்றார். நீங்கள் மாத்திரமே இதனைக் கற்கின்றீர்கள். இது மாத்திரமே நீங்கள் அதி மேன்மையானவர்கள் ஆகுகின்ற சங்கமயுகம் ஆகும். உங்களைச் சத்தியமானவர்கள் ஆக்கி, சத்திய பூமியை ஸ்தாபிப்பவர் ஒரேயொரு சத்தியமான பாபா மாத்திரமே ஆவார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சங்கமயுகத்தில் நீங்கள் கடவுளுடன் நேரடியாகக் கற்று, ஞானம் நிறைந்;த ஆஸ்திகர்களாகி, ஏனையோரையும் ஞானம் நிறைந்தவர்கள் ஆக்குங்கள். என்றுமே தந்தையின் மீதோ, கல்வியின் மீதோ எந்தச் சந்தேகமும் கொள்ளாதீர்கள்.

2. தந்தையைப் போன்று வசீகரமானவர் ஆகுங்கள். கடவுள் உங்களை அலங்கரிக்கின்றார் என்ற சந்தோஷத்தைப் பேணுங்கள். எந்த ஒரு நடிகர் மீதும் விருப்பமின்மையையோ அல்லது வெறுப்பையோ கொண்டிராதீர்கள். இந்த நாடகத்தில் ஒவ்வொருவரும் மிகச்சரியான பாகத்தைக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சேவைக்களத்தில் இருக்கும்போது, அவ்வப்போது ஏகாந்தத்தில் செல்கின்ற, அகநோக்குடையவர் ஆகுவீர்களாக.

மௌன சக்தியுடன் பரிசோதனை செய்வதற்கு, அகநோக்கில் இருப்பதும் ஏகாந்தமாக இருப்பதும் அவசியமாகும். சில குழந்தைகள், சேவைக்கான செயல்பாடுகளும் பேச்சு சக்தியால் சேவை செய்வதும் அதிகரித்திருப்பதனால், அகநோக்கு ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு அல்லது ஏகாந்தமாக இருப்பதற்கு தமக்கு நேரம் இல்லை எனச் சொல்கிறார்கள். எவ்வாறாயினும், இதற்காக அரைமணிநேரம் அல்லது ஒரு மணிநேரம் எடுப்பதற்குப் பதிலாக, அவ்வப்போது சிறிதளவு நேரத்தை ஒதுக்குங்கள். அப்போது உங்களின் ஸ்திதியானது சக்திநிறைந்ததாக ஆகும்.

சுலோகம்:
பிராமண வாழ்க்கையில் போராடுவதற்குப் பதிலாக, அதை மகிழ்;ச்சியாகக் கொண்டாடுங்கள். அப்போது கஷ்டமான எதுவும் இலேசாகிவிடும்.