27.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் உங்களுடைய சரீரங்களிலிருந்து பிரிந்து, தந்தையிடம் செல்ல வேண்டும். நீங்கள், உங்கள் சரீரங்களை உங்களுடன் எடுத்துச்; செல்ல மாட்டீர்கள். ஆகவே சரீரங்களை மறந்து, ஆத்மாக்களையே பாருங்கள்.

பாடல்:
குழந்தைகளாகிய நீங்கள் யோக சக்தியின் மூலம் உங்கள் ஆயுட்காலங்களை அதிகரிப்பதற்கு ஏன் முயற்சி செய்கிறீர்கள்?

பதில்:
இப்பிறவியில் கடவுளிடமிருந்து அனைத்தையும் கற்க வேண்டும் என்று உங்கள் இதயம் விரும்புகின்றது. தந்தை கூறுகின்ற அனைத்தையும் நீங்கள் செவிமடுக்க விரும்புவதால், யோக சக்தி மூலம் உங்கள் ஆயுட்காலங்களை அதிகரிப்பதற்கான முயற்சியைச் செய்கின்றீர்கள். இப்பொழுது மாத்திரமே, நீங்கள் தந்தையிடமிருந்து அன்பைப் பெறுகிறீர்கள். நீங்கள் அவ்வாறானதோர் அன்பை, முழுச் சக்கரத்திலும், வேறு எக் காலத்திலும் பெற மாட்டீர்கள். தங்கள் சரீரங்களை விட்டு நீங்கியவர்களையிட்டுக் கூறும்போது, அதுவே நாடகத்தில் இருந்தது என்றும், அவர்களது பாகங்கள் அவ்வளவே என்றும்; நீங்கள் கூறுவீர்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பிறவிபிறவியாக, ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களுக்குச் சென்று கொண்டிருந்தீர்கள், அத்துடன் இங்கும் வந்துள்ளீர்கள். உண்மையில், இதுவும் ஆன்மீக ஒன்றுகூடல் (சத்சங்) என்றே அழைக்கப்படுகிறது. சத்தியத்தின் சகவாசம் உங்களை அக்கரைக்கு இட்டுச் செல்கிறது. முன்னர், பக்தி மார்க்கத்தில் நாங்கள் ஆன்மீக ஒன்றுகூடல்களுக்குச் சென்றோம் என்பதும், இப்பொழுது நாங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது, பகலுக்கும், இரவுக்கும் இடையே வித்தியாசத்தை உணர்கிறோம் என்பதும் குழந்தைகளான உங்களின் இதயத்தில் பிரவேசிக்கிறது. இங்கு, அனைத்திற்கும் முதலில் உங்களுக்குத் தந்தையின் அன்பு கிடைக்கிறது. அத்துடன் குழந்தைகளான உங்களின் அன்பையும் தந்தை பெறுகிறார். இப்பொழுது, இந்தப் பிறவியில் நீங்கள் மாறுகிறீர்கள். நீங்கள் ஆத்மாக்கள், சரீரங்கள் அல்ல என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொண்டுள்ளீர்கள். “இவர் என்னுடைய ஆத்மா” என்று சரீரம் ஒருபோதும் கூறாது. “இது என்னுடைய சரீரம்” என்று ஆத்மா கூறலாம். பிறவிபிறவியாக நீங்கள் மகாத்மாக்களையும், சாதுக்களையும், புனிதர்களையும் ஏற்றுக் கொண்டிருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இந்நாட்களில் “சாய்பாபா”, “மேஹார் பாபா” போன்றோரிடம் செல்வதை அவர்கள் நவநாகரீகமாகக் கருதிச் செல்கின்றார்கள். அவர்கள் அனைவரும் பௌதீகமானவர்கள். பௌதீக அன்பினால் எந்தவிதமான சந்தோஷத்தையும் பெற முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீக அன்பைக் கொண்டிருக்கிறீர்;கள்; இரவுக்கும், பகலுக்கும் இடையேயுள்ள வித்தியாசமுள்ளது. இங்கு நீங்கள் புரிந்துணர்வைப் பெறுகிறீர்கள். ஆனால் அங்கேயோ, நீங்கள் முழுமையாக விவேகமற்றவர்கள். பாபா வந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவரே அனைவரதும் தந்தை. ஆண்களும், பெண்களுமாகிய நீங்கள் அனைவரும், உங்களை ஆத்மாக்களாகக் கருதுகிறீர்கள். பாபா உங்களை அழைக்கிறார்: ஓ குழந்தைகளே! குழந்தைகளும் ஒரு பதிலைக் கொடுப்பார்கள். இது குழந்தைகளுடனான தந்தையினது சந்திப்பு ஆகும். தந்தையினதும், குழந்தைகளினதும், அதாவது ஆத்மாக்களினதும், பரமாத்மாவினதும் சந்திப்பானது ஒருதடவையே இடம்பெறுகிறது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். குழந்தைகள் தொடர்ந்தும் “பாபா, பாபா” என்று கூறுகிறார்கள். “பாபா” என்ற வார்த்தை மிகவும் இனிமையானது. “பாபா” என்று கூறுவதன் மூலம் நீங்கள் உங்களுடைய ஆஸ்தியை நினைவுசெய்கிறீர்கள். நீங்கள் இன்னும் சிறு குழந்தைகள் அல்ல. குழந்தைகள் தங்கள் தந்தை யார் என்பதை மிகவும் விரைவாகப் புரிந்து கொள்கிறார்கள். தங்கள் தந்தையிடமிருந்து என்ன ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வார்கள் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். சிறு குழந்தைகளால்; அதனைப் புரிந்துகொள்ள முடியாது. இங்கு, நீங்கள் பாபாவிடம் வந்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை கூறுகிறார்: ஓ குழந்தைகளே!” இதில் குழந்தைகள் அனைவரும் அடங்குகிறார்கள். ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் பாகங்களை நடிப்பதற்கு வீட்டிலிருந்து இங்கு வருகிறார்கள். யார், எந்நேரத்தில் தங்கள் பாகங்களை நடிக்க வருகின்றார்கள் என்பது உங்கள் புத்தியிலுள்ளது. அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த, பல்வேறு பிரிவுகளிலிருந்தும் வருகிறார்கள். பின்னர், இறுதியில் அவர்கள் அனைவரும் தங்கள் சொந்தப் பிரிவிற்குள் திரும்பிச் செல்வார்கள். இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை எவரையும் கீழே அனுப்பவதில்லை; அது நாடகத்தில் இயல்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தொடர்ந்தும் தங்கள் சொந்தச் சமயங்களுக்குள் வருகின்றார்கள். பௌத்த சமயம் ஸ்தாபிக்கப்படாதுவிடின், அச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இறங்கி வந்திருக்க மாட்டார்கள். சூரிய, சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே முதலில் இறங்கி வருகின்றார்கள். தந்தையிடம் சிறந்த முறையில் கற்பவர்களே, வரிசைக்கிரமப்படி சூரிய, சந்திர வம்சங்களுக்குள் வந்து, சரீரங்களைப் பெறுகின்றார்கள். அங்கே விகாரம் என்ற கேள்விக்கே இடமில்லை. ஓர் ஆத்மா வந்து, யோக சக்தி மூலம் கருப்பையினுள் பிரவேசிக்கின்றார். ஆத்மாவாகிய நீங்கள் சென்று, ஒரு சரீரத்தினுள் பிரவேசிப்பீர்கள் என்பதை இதிலிருந்து நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்கின்றீர்கள். முதியவர்கள், தமது ஆத்மாக்கள் சென்று, வேறு சரீரங்களை யோக சக்தியின் மூலம் பெறுவார்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றார்கள். இந்த ஆத்மாவாகிய நான், இப்பொழுது மறுபிறவி எடுப்பேன். ‘என்னிடம் ஒரு குழந்தை வந்துள்ளார்’ என்று ஒரு தந்தையும் புரிந்து கொள்கின்றார். ஒரு குழந்தையின் ஆத்மா வருகிறார், அவர்களும் அதன் காட்சியைக் காண்கின்றார்கள். தான் சென்று, இன்னுமொரு சரீரத்தினுள் பிரவேசிப்பார் என்பதையும் ஆத்மா புரிந்துகொள்கின்றார். இந்த எண்ணங்கள் எழுகின்றன. அவர்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்குரிய வயதிற்கான நியதிகள் அங்கு நிச்சயமாக இருக்கும். அங்கு அனைத்தும் மிகவும் ஒழுங்காக இடம்பெறும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது, அவை அனைத்தையும் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் அனைத்தையும் அறிந்து கொள்வீர்கள். இங்கு 15 முதல் 20 வயதான குழந்தைகள் குழந்தைகளைப் பெற்றெடுப்பது போன்று, அங்கு இருக்க மாட்டாது, இல்லை, அவர்களின் ஆயுட்காலங்கள்; 150 ஆண்டுகளாகும். ஆகவே, அங்கு அவர்களின் ஆயுட்காலங்களின் அரைவாசிக்குச் சற்றுக் குறைவாக இருக்கும்போதே, அவர்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றார்கள். அவர்களின் ஆயுட்காலங்கள் நீண்டவை என்பதால், அவர்கள் அந்நேரத்திலேயே குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றார்கள். எவ்வாறாயினும், அவர்களுக்கு ஒரு புத்திரர் மாத்திரமே இருப்பார், பின்னர் அவர்களுக்கு ஒரு புத்திரியும் இருக்கின்றார்; அதுவே நியதியாகும். முதலில் புத்திரனின் ஆத்மாவும், பின்னர் புத்திரியின் ஆத்மாவும் வருகின்றார்கள். முதலில் புத்திரனே வரவேண்டும் என்பதற்கான காரணமும் உள்ளது. முதலில் ஆணும், பின்னர் எட்டு முதல் 10 பத்து வருடங்களின் பின், ஒரு புத்திரியும் பிறப்பார்கள். குழந்தைகளாகிய நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, அனைத்துக் காட்சிகளையும் காண்பீர்கள். தந்தை இங்கு அமர்ந்திருந்து, புதிய உலகத்தின் சம்பிரதாயங்கள் எவை என உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தை மாத்திரமே புதிய உலகை ஸ்தாபிக்கிறார். அவர் தொடர்ந்தும் உங்களுக்குச் சம்பிரதாயங்களைப் பற்றிக் கூறுகிறார். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது, இன்னும் பல விடயங்களை உங்களுக்குக் கூறுவார். பின்னர் உங்களுக்குக் காட்சிகள் தொடர்ந்தும் கிடைக்கும். அங்கு எவ்வாறு குழந்தைகள் பிறக்கிறார்கள் என்பது ஒரு புதிய விடயமல்ல. ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் செல்ல வேண்டிய, அத்தகையதோர் இடத்திற்கே நீங்கள் செல்கிறீர்கள். இப்பொழுது வைகுந்தம் அண்மையில் வந்துள்ளது. நீங்கள் இப்பொழுது மிகவும் அண்மித்துள்ளீர்கள். ஞானத்திலும், யோகத்திலும் நீங்கள் எந்தளவுக்கு உறுதியானவர்கள் ஆகுகிறீர்களோ, அந்தளவுக்குச் சமீபமாக நீங்கள் அனைத்தையும் காண்பீர்கள். நீங்கள் அந்தப் பாகங்களைப் பல தடவைகள் நடித்திருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் புரிந்துணர்வைப் பெறுகின்றீர்கள். அதனை நீங்கள் மீண்டும் உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். அங்குள்ள சம்பிரதாயங்கள் என்னவாக இருக்கும் என்ற அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் அனைத்தையும் பற்றிய காட்சிகளைக் கண்டீர்கள். அந்நேரத்தில் நீங்கள் அல்பாஃவையும், பீற்றாவையும், கற்றுக் கொண்டிருந்தீர்கள். இறுதியிலும் நிச்சயமாக உங்களுக்குக் காட்சிகள் கிடைக்கும். தந்தை இங்கு அமர்ந்திருந்து, அவை அனைத்தையும் பற்றி உங்களுக்குக் கூறுகிறார். அவை அனைத்தையும் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் உங்களுக்கு இங்குதான் இருக்கும். இங்கு நீங்கள் உங்களுடைய சரீரங்களை விடக்கூடாது எனவும், அனைத்தையும் பார்த்த பின்பே செல்ல வேண்டும் எனவும் உணர்கிறீர்கள். இதற்கு, உங்கள் ஆயுட்காலங்களை நீடிப்பதற்கு, உங்களுக்கு யோக சக்தி இருப்பது அவசியம். அப்பொழுது உங்களால் அனைத்தையும் தந்தையிடமிருந்து கேட்கவும், பார்க்கவும் முடியும். ஏற்கெனவே சென்று விட்டவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படக்கூடாது. அவை நாடகத்தில் அவர்களின் பாகங்களாகும். தந்தையிடமிருந்து அதிகளவு அன்பைப் பெறுவது அவர்களின் பாக்கியத்தில் இல்லை. ஏனெனில் எந்தளவிற்;கு அதிகமாகச் சேவை செய்யக்கூடியவர்கள் ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் தந்தையால் நேசிக்கப்;படுவீர்கள். எந்தளவிற்;கு அதிகமாக நீங்கள் சேவை செய்கின்றீர்களோ, எந்தளவிற்;கு அதிகமாக நீங்கள் தந்தையை நினைவுசெய்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக அந் நினைவு உறுதியாக இருக்கிறது. நீங்கள் உங்களையிட்டே பெருமளவு களிப்படைகிறீர்கள் இப்பொழுது நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். பக்தி மார்க்கத்தில் முக்தி அடைவதற்காக மக்கள் பல விடயங்களைச் செய்கின்றார்கள். அவர்களுக்கு ஜீவன்முக்தியைப் பற்றித் தெரியாது. இந்த ஞானம் மிகவும் இனிமையானது. உங்களுக்குப் பெருமளவு அன்புள்ளது. தந்தையே தந்தையும், ஆசிரியரும், சற்குருவுமாவார். 21 பிறவிகளுக்கு எங்களைச் சந்தோஷ தாமத்திற்கு அனுப்புகின்றவரே, உண்மையான பரம பாபா. ஆத்மாக்களே சந்தோஷமற்றவர்கள் ஆகுகிறார்கள். ஆத்மாக்களே சந்தோஷத்தையும், துன்பத்தையும் அனுபவம் செய்கிறார்கள். கூறப்படுகிறது: பாவாத்மாக்களும், புண்ணியாத்மாக்களும். எங்களை அனைத்து வகையான துன்பங்களிலிருந்தும் விடுவிப்பதற்குத் தந்தை இப்பொழுது வந்துள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது, அனைவரும் சந்தோஷமாக இருக்கின்ற, எல்லையற்றதிற்குச் செல்ல வேண்டும்; முழு உலகமுமே சந்தோஷமாக இருக்கும். இப்பொழுது நீங்கள் நாடகத்தில் அனைவரது பாகங்களையும் புரிந்துகொண்டு விட்டீர்கள். உங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதற்காக பாபா வந்திருக்கிறார் என்று நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரையும் அவர் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார். தந்தை உங்களுக்குப் பொறுமையைக் கொடுக்கிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, அனைத்து வகையான துன்பங்களிலிருந்தும் உங்களை விடுவித்து, அழைத்துச் செல்வதற்கே நான் வந்திருக்கிறேன். ஆகவே அவ்வாறான தந்தையின் மீது நீங்கள் அதிகளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுடைய உறவுமுறைகள் அனைத்தும் உங்களுக்குத் துன்பத்தையே கொடுத்துள்ளன. இங்குள்ள குழந்தைகள் எபபொழுதும் துன்பத்தையே விளைவிக்கிறார்கள். நீங்கள் சந்தோஷமற்றவர்களாகி, தொடர்ந்தும் சந்தோஷமற்ற விடயங்களையே செவிமடுத்தீர்கள். தந்தை இப்பொழுது அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். முன்னர் அவர் பல தடவைகள் உங்களுக்கு விளங்கப்படுத்தி, பூகோளத்தை ஆள்பவர்கள் ஆக்கியுள்ளார். ஆகவே, அவ்வாறானதொரு சுவர்க்கத்திற்கு உங்களை அதிபதிகள் ஆக்குகின்ற தந்தை மீது நீங்கள் அதிகளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டும். ஒரேயொரு தந்தையை மாத்திரம் நீங்கள் நினைவுசெய்கிறீர்கள். ஒரேயொரு தந்தையைத் தவிர, எவருடனும் எந்த உறவுமுறையையும் நீங்கள் கொண்டிருப்பதில்லை. அனைத்தும் ஆத்மாக்களிற்கு விளங்கப்படுத்தப்படுகிறது. நாங்கள் பரம தந்தையின் குழந்தைகள். இப்பொழுது நாங்கள் பாதையைக் கண்டு கொண்டதால், சந்தோஷத்திற்கான இப் பாதையை மற்றவர்களுக்கும் காட்ட வேண்டும். நீங்கள் ஒவ்வொரு கல்பத்தினதும் அரைக் கல்பத்திற்கு மாத்திரமல்ல, முக்கால் கல்பத்திற்குச் சந்;தோஷத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து, அவர்களின் துன்பத்தை நீக்குவதால், சிலர் தங்களை உங்களிடம் அர்ப்பணிக்கிறார்கள். இவர் கூட (பிரம்மா) பரம தந்தையிடமிருந்தே இந்த ஞானத்தைப் பெறுகிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பின்னர் அவர் எங்களுக்குச் செய்தியைக் கொடுக்கிறார். பின்னர் நாங்கள் மற்றவர்களுக்குச் செய்தியைக் கொடுக்கிறோம். அவர் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து, தொடர்ந்தும் அறியாமை என்ற உறக்கத்தில் இருக்கின்ற குழந்தைகள் அனைவரையும் விழித்தெழச் செய்கிறார். பக்தியே அறியாமை என்று அழைக்கப்படுகிறது. ஞானமும், பக்தியும் வேறானவை. ஞானக் கடலான தந்தை, இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கற்பிக்கிறார். ஒவ்வொரு 5000 வருடங்களிலும், பாபா வந்து, உங்களை விழித்தெழச் செய்கிறார் என்பது உங்கள் இதயத்தில் பிரவேசிக்கிறது. எங்களது தீபங்களில் இன்னமும் சிறிதளவு எண்ணெயே எஞ்சியுள்ளது. ஆகவே தந்தை இப்பொழுது ஞானம் என்ற எண்ணெயை ஊற்றி, எங்கள் தீபங்களை ஏற்றுகிறார். நீங்கள் தந்தையை நினைவுசெய்யும்போது, ஆத்மாக்களான உங்களின் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. தந்தையை நினைவுசெய்யும்போது, ஆத்மாக்களிலுள்ள துரு நீக்கப்படுகிறது. இதிலேயே மாயையுடனான போர் தொடர்கிறது. மாயை மீண்டும் மீண்டும் உங்களை மறக்கச் செய்கிறாள். அதனால் துரு நீக்கப்படுவதற்குப் பதிலாக, அதிக துரு ஆத்மாவில் சேகரிக்கப்படுகிறது. உண்மையில் அகற்றப்பட்டதிலும் பார்க்கக் கூடிய துரு சேகரிக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, என்னை நினைவுசெய்யுங்கள். உங்கள் மேலுள்ள துரு அகற்றப்படும். இதற்கு முயற்சி தேவை. சரீரங்களில் எவ்விதக் கவர்ச்சியும் இருக்கக்கூடாது. ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! நாங்கள் ஆத்மாக்கள். நாங்கள் எங்கள் சரீரங்களுடன் தந்தையிடம் செல்ல மாட்டோம். எங்கள் சரீரங்களிலிருந்து பிரிந்த பின்னரே, அவரிடம் செல்ல வேண்டும். ஆத்மாக்களைப் பார்ப்பதன் மூலம், துரு அகற்றப்படுகிறது. சரீரங்களைப் பார்ப்பதன் மூலம் துரு மேலும் சேர்த்துக்; கொள்ளப்படுகிறது. சிலவேளைகளில் அது அகற்றப்படுகிறது, சிலவேளைகளில் அது சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இது சதாகாலமும் தொடர்கிறது. சிலவேளைகளில் நீங்கள் மேலே ஏறுகின்றீர்கள் சிலவேளைகளில் கீழே இறங்குகின்றீர்கள். இது மிகவும் சிக்கலான பாதையாகும். நீங்கள் இவை அனைத்தினூடாகவும் சென்று, இறுதியில் உங்களுடைய கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள். அனைத்திலும், கண்களே உங்களை ஏமாற்றுகின்றன என்பது முக்கியமான விடயமாகும். ஆகவே, சரீரங்களைப் பார்க்காதீர்கள். எங்களுடைய புத்தி அமைதி தாமத்திலும், சந்தோஷ தாமத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் தூய உணவையும் உண்ண வேண்டும் தேவர்களின் உணவு தூய்;மையானது. “விஷ்ணு” என்ற வார்த்தையிலிருந்தே “வைஷ்ணவம்” என்ற வார்த்தை உருவாகியது. தேவர்கள் ஒருபொழுதும் அசுத்தமான, தூய்மையற்ற உணவை உண்ண மாட்டார்கள். விஷ்ணுவுக்கு ஓர் ஆலயம் உள்ளது. அதனை அவர்கள் நர-நாராயணன் (சாதாரண மனிதனும், நாராயணனும்) என்றும் அழைக்கின்றார்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் சரீரதாரிகள். அவர்கள் நான்கு கரங்களைக் கொண்டிருக்கக்கூடாது. எவ்வாறாயினும், பக்தி மார்க்கத்தில் அவர்களுக்கு நான்கு கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுவே எல்லையற்ற அறியாமை என்று அழைக்கப்படுகின்றது. நான்கு கரங்களுடன் மனிதர்கள் இருக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. சத்திய யுகத்தில் இரண்டு கரங்களுடன் மனிதர்கள் இருக்கின்றார்கள். பிரம்மாவிற்குக் கூட இரண்டு கரங்களே உள்ளன. புத்திரி சரஸ்வதியை அவர்கள் பிரம்மாவுடன் காட்டியதுடன், சரஸ்வதி நான்கு கரங்களை உடையராகவும் காட்டப்பட்டுள்ளார். சரஸ்வதி, பிரம்மாவின் மனைவி அல்ல. அவர் பிரஜாபிதா பிரம்மாவின் புத்திரியாவார். தத்தெடுக்கப்படுகின்ற குழந்தைகளுடைய எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அவருடைய கரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அவர்கள் பிரம்மாவை 108 கரங்களுடன் காட்டுகிறார்கள்;; இவ்வாறாக விஷ்ணு பற்றியோ அல்லது சங்கரர் பற்றியோ அவர்கள் கூறமாட்டார்கள். பிரம்மாவிற்குப் பல கரங்கள் உள்ளன. பக்தி மார்க்கத்தில், அவர்களுக்குப் புரிந்துணர்வு இருப்பதில்லை. தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, வந்து எங்களை விவேகிகள் ஆக்கியுள்ளார். மக்கள், தாங்கள் சிவனின் பக்தர்கள் என்று கூறுவார்கள். அச்சா. சிவனை நீங்கள் யாராகக் கருதுகிறீர்கள்? சிவபாபாவே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அதனாலேயே அவர் வணங்கப்படுகிறார். தந்தை கூறுகிறார்: சதா, என்னை மாத்திரம் நினைவுசெய்வதே பிரதான விடயமாகும். நீங்கள் கூவி அழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! அனைவரும் தொடர்ந்தும் கூவி அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, சீதைக்கு உரியவரான இராமரே. நீங்களும் இவ்வாறு பாடினீர்கள். தந்தை வந்து, தன்னுள் பிரவேசிப்பார் என்று பாபா அறிந்திருக்கவில்லை. அது அவர் முன்னர் ஒருபொழுதும் நினைத்துக்கூடப் பார்க்காத அத்தகைய அற்புதமாகும் ஆரம்பத்தில், தனக்கு என்ன நடக்கிறது என்று அவர் வியப்படைந்ததுடன். அதிசயமும் அடைந்தார்;. “நான் எவரையாவது பார்த்தால், அவரும் கவரப்பட்டார் - என்ன நடந்தது?” சிவபாபா அவரை ஈர்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் அமர்ந்திருப்பவர் எவரும் திரான்ஸில் செல்வார்கள். அவர் வியப்படைந்தார். “இவையெல்லாம் என்ன”? இவ் விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்வதற்கு ஏகாந்தம் தேவைப்பட்டது. அப்பொழுதுதான் அவருக்கு ஆர்வமின்மை ஏற்படத் தொடங்கியது. “நான் எங்கு செல்ல வேண்டும்? சரி, நான் பெனாரஸிற்குச் செல்லப் போகிறேன்.” அவரை அனைத்தையும் செய்யும்படி தூண்டுகின்ற ஒருவரின் ஈர்ப்பு இதுவாகும். அவர் மிகப் பெரிய வியாபாரத்தைக் கைவிட்டுச் சென்றார். அந்த அப்பாவி, உதவியற்ற மக்களுக்கு ஏன் அவர் பெனாரஸ் சென்றார் என்பது தெரியாது. அவர் சென்று, அங்குள்ள பூந்தோட்டத்தில் அமர்ந்தார். அவர் கரத்தில் ஒரு பென்சிலை எடுத்து, சுவர்களில் வட்டங்களை வரைவார். பாபா என்னைக் கொண்டு செய்வித்த எதனையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இரவில் நான் படுக்கைக்குச் செல்லும்பொழுது, எங்கோ பறந்து விட்டாற் போன்று உணர்வேன். பின்னர் நான் மீண்டும் கீழே வருவேன். என்ன நடக்கின்றது என்று எனக்கு எதுவுமே தெரியவில்லை. ஆரம்பத்தில் பல்வேறு காட்சிகள் கிடைத்தன. அங்கு அமர்ந்திருக்கும்போது புத்திரிகள் திரான்ஸில் செல்வார்கள். அப்பொழுது நீங்கள் பெருமளவைக் கண்டீர்கள். நீங்கள் கூறுவீர்கள்: நாங்கள் பார்த்தவற்றை நீங்கள் பார்க்கவில்லை. நீங்கள் மேலும் நெருங்கி வருவதால், இறுதியில், பாபா உங்களுக்குப் பல காட்சிகளைக் காட்டுவார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் செய்தியை அனைவருக்கும் கொடுத்து, அவர்களின் துன்பத்தை நீக்குங்கள். சந்தோஷத்திற்கான பாதையை அனைவருக்கும் காட்டுங்கள். எல்லைக்குட்பட்டதிலிருந்து வெளியே வந்து, எல்லையற்றதினுள் செல்லுங்கள்.

2. இறுதியில் அனைத்துக் காட்சிகளைக் காண்பதற்கும், தந்தையின் அன்பான பராமரிப்பைப் பெறுவதற்கும், இந்த ஞானத்திலும், யோகத்திலும் உறுதியானவர்களாகுங்கள். பிறரைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஆனால், யோக சக்தி மூலம் உங்கள் ஆயுட்காலங்களை அதிகரியுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் கவனயீனத்தையும், ஆணவத்தையும் துறப்பதனாலும். தந்தையின் உதவியைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகுவதற்கான கவனத்தைச் செலுத்துவதாலும் ஓர் இலகு முயற்சியாளர் ஆகுவீர்களாக.

சில குழந்தைகள் தைரியத்தைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, தங்கள் கவனயீனத்தால் ஆணவத்தை விருத்தி செய்வதுடன், நான் எப்பொழுதும் தகுதிவாய்ந்தவன் என்று எண்ணுகின்றார்கள். தந்தை எனக்கு உதவிசெய்திராது விடின், வேறு எவருக்கு அவர் உதவுவார்? இந்த ஆணவம் காரணமாக, அவர்கள் தைரியத்தைக் கொண்டிருக்கின்ற வழிமுறையை மறந்து விடுகின்றனர். தங்களில் கவனம் செலுத்துவதால், சிலர் ஆணவத்தை வளர்த்துக் கொள்கின்றனர், இது அவர்களை உதவி பெறுவதிலிருந்து தவிர்த்து விடுகின்றது. தாங்கள் பெருமளவு யோகம் செய்வதாகவும், தாங்கள் ஞானி, யோகி ஆத்மாக்களாகி விட்டதாகவும், தாங்கள் சேவைக்கான தங்கள் இராச்சியத்தை உருவாக்கி விட்டதாகவும் அவர்கள் நம்புகின்றார்கள். ஆகவே, இவ்வகையான ஆணவத்தைக் கைவிட்டு, உங்கள் தைரியத்தின் அடிப்படையில், உதவியைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுங்கள், அப்பொழுது நீங்கள் ஓர் இலகு முயற்சியாளர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
வீணான, எதிர்மறையான எண்ணங்கள் எதனையும் உலக நன்மைக்கான பணிக்காகப் பயனுள்ளவையாக மாற்றுங்கள்.