28.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இப்பொழுது இந்த நாடகச் சக்கரம் முடிவடைகிறது. எனவே, புதிய உலகிற்குச் செல்வதற்கு, நீங்கள் பாலும் சீனியும் போன்று இருக்கவேண்டும். அங்கே அனைவரும் பாலும் சீனியும் போன்று இருப்பார்கள், ஆனால் இங்கோ அனைவரும் உப்புநீர் போன்றவர்கள் ஆவார்கள்.

கேள்வி:
இந்த ஞானம் என்ற மூன்றாவது கண்ணைக் கொண்ட குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஞானத்தை அறிந்து கொள்வதால், முக்காலங்களையும் அறிந்தவர்கள் ஆகுகிறீர்கள்?

பதில்:
நீங்கள் இப்பொழுது முழு உலகின் வரலாறினதும் புவியியலினதும் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். சத்திய யுகத்தின் ஆரம்பத்தில் இருந்து கலியுகத்தின் இறுதி வரையிலான வரலாற்றையும் புவியியலையும் பற்றி நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கிவிட்டு, இன்னும் ஒன்றை எடுக்கிறார். ஒவ்வோர் ஆத்மாவிலும் சம்ஸ்காரங்கள் உள்ளன. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இப்பொழுது பெயரில் இருந்தும் ரூபத்திலிருந்தும் விடுபட்டவர்கள் ஆகுங்கள். உங்களை ஒரு சரீரமற்ற ஆத்மாவாகக் கருதுங்கள்.

பாடல்:
ஓ மனிதா, பொறுமையாக இரு! உனது சந்தோஷ நாட்கள் வரப்போகின்றன….

ஓம் சாந்தி.
இது ஒவ்வொரு கல்பத்திலும் குழந்தைகளுக்குக் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்களும் இதை அறிவீர்கள். சத்தியயுகம் விரைவில் வரவேண்டும், அப்பொழுதே நீங்கள் இத்துன்ப உலகிலிருந்து விடுவிக்கப்பட முடியும் என்பதே உங்கள் இதயங்களின் விருப்பம் ஆகும். எவ்வாறாயினும், நாடகம் மிகவும் மெதுவாகவே நகர்கிறது. தந்தை உங்களைப் பொறுமையுடன் இருக்குமாறு கூறுகிறார்: மிகச்சொற்ப நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த உலகம் மாறவேண்டும் என்று முக்கியஸ்தர்களும் ஒலி எழுப்புகின்றார்கள். தலைவர்கள் அனைவரும், உதாரணத்திற்கு பாப்பரசர் போன்றவர்கள் இந்த உலகம் மாறப்போகிறது என்று கூறுகிறார்கள். அச்சா, அவ்வாறாயின் அங்கே எவ்வாறு அமைதி இருக்க முடியும்? தற்பொழுது, அனைவரும் உப்புநீரைப் போன்றவர்கள். இங்கே, நாங்கள் பாலும் சீனியும் போன்றவர்கள் ஆகிக் கொண்டிருக்கிறோம், மறுபுறத்தில் உள்ளவர்களோ, நாளுக்கு நாள் மேலும் மேலும் உப்புநீரைப் போன்றவர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் மத்தியில் சண்டையிட்டு ஒருவரையொருவர் அழித்து விடுகின்றார்கள். அதற்கான முன்னேற்பாடுகள் யாவும் செய்யப்பட்டு வருகின்றன. இப்பொழுது நாடகச் சக்கரம் முடிவடைகிறது. பழைய உலகம் முடிவடைய உள்ளது, புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது. புதிய உலகம் பழையதாகிப் பின்னர் பழைய உலகம் மீண்டும் புதியது ஆக்கப்படுகிறது. இதுவே உலகச் சக்கரம் என அழைக்கப்படுகிறது, அது தொடர்ந்தும் சுழல்கிறது. நூறாயிரக்கணக்கான வருடங்களின் பின்னர் பழைய உலகம் புதியதாகிறது என்பதல்ல. இல்லை. பக்தியானது இந்த ஞானத்தில் இருந்து முற்றாக வேறுபட்டது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் தெட்டத் தெளிவாக அறிவீர்கள். பக்தி இராவணனுடன் தொடர்புபட்டது, இந்த ஞானம் இராமருடன் தொடர்புபட்டது. இப்பொழுது நீங்கள் இதைப் புரிந்து கொள்கிறீர்கள். ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து புதிய உலகை ஸ்தாபியுங்கள்’ என நீங்கள் தந்தையை அழைத்துப் பிரார்த்திக்கிறீர்கள். நிச்சயமாகப் புதிய உலகில் சந்தோஷம் உள்ளது. நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதை இளைய, முதிய குழந்தைகள் இருசாராரும் அறிவார்கள். இப்பொழுது இந்த நாடகம் முடிவடைகிறது. மீண்டும் ஒருமுறை, நாங்கள் சத்திய யுகத்துக்குச் செல்லவேண்டும், பின்னர் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வரவேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் எங்களை இனங்கண்டு கொண்டுள்ளோம். ஆத்மாக்களாகிய நாங்கள் இந்த ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளோம், அதாவது எங்களுக்கு உலகச் சக்கரம் பற்றித் தெரியும். இதுவே திரிநேத்ரியாக இருத்தல் என அழைக்கப்படுகிறது. உங்கள் ஒவ்வொருவரிடமும் இப்பொழுது மூன்றாவது கண் உள்ளது, ஏனைய மனிதர்கள் அனைவருக்கும் வெறுமனே அவர்களின் பௌதீகக் கண்களே உள்ளன. அவர்கள் எவருக்கும் இந்த ஞானக் கண் கிடையாது. ஆத்மாக்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்ற, மூன்றாவது கண்ணை அவர்கள் கொண்டிருக்கும் பொழுது மட்டுமே அவர்கள் முக்காலங்களையும் அறிபவர்கள் ஆகமுடியும். ஆத்மாவே ஒரு சரீரத்தை நீக்கி, இன்னுமொன்றை எடுக்கிறார். ஆத்மாவிலேயே சம்ஸ்காரங்கள் உள்ளன. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: பெயரிலிருந்தும் ரூபத்திலிருந்தும் விடுபட்டவர்கள் ஆகுங்கள். உங்களை ஒரு சரீரமற்ற ஆத்மாவாகக் கருதுங்கள். உங்களை ஒரு சரீரமாகக் கருதாதீர்கள். நீங்கள் அரைக் கல்பமாக, பரமாத்மாவை நினைவுசெய்து வருகிறீர்கள் என்பதையும் உங்களுக்குப் பெருமளவுக்குத் துன்பம் உள்ளபொழுது, நீங்கள் அவரை அதிகளவில் நினைவுசெய்கிறீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது பெரும் துன்பம் உள்ளது. முன்னர், அதிகளவு துன்பம் இருக்கவில்லை. அந்நியர்கள் வந்தபொழுது, அந்த அரசர்கள் தங்கள் மத்தியில் சண்டையிட ஆரம்பித்தார்கள். அவர்கள் பிளவுபட்டனர். சத்தியயுகத்தில் ஒரேயொரு இராச்சியமே இருந்தது. சத்தியயுக ஆரம்பத்தில் இருந்து கலியுக இறுதிவரைக்குமான வரலாற்றையும் புவியியலையும் நாங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறோம். சத்திய, திரேதா யுகங்களில் ஒரேயொரு இராச்சியமே இருந்தது. இல்லாவிட்டால், வழக்கமாக ஒரு வம்சம் மட்டும் இருப்பதில்லை. கிறிஸ்தவர்களைப் பாருங்கள். அவர்கள் அனைவரும் பிளவுபட்டிருக்கின்றார்கள். அங்கு, சத்தியயுகத்தில் ஒரேயொருவரின் கரத்திலேயே முழு உலகமும் உள்ளது. அது சத்திய, திரேதா யுகங்களில் மட்டுமே உள்ளது. இந்த எல்லையற்ற வரலாறும் புவியியலும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளன. வேறு சத்சங்கங்களில் நீங்கள் “வரலாறும் புவியியலும்” என்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அங்கு, நீங்கள் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் மட்டுமே செவிமடுக்கிறீர்கள். அந்த விடயங்கள் இங்கே இருப்பதில்லை. இங்கே உங்களிடம் உலகின் வரலாறும் புவியியலும் உள்ளன. உங்கள் தந்தையே அதிமேலானவர் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. இந்த ஞானம் அனைத்தையும் பேசியுள்ள தந்தைக்கு நன்றிகள். ஒரு விருட்சம் ஆத்மாக்களுடையது. மற்றைய விருட்சம் மனிதர்களுடையது. மனித விருட்சத்தின் உச்சியில் நின்று கொண்டிருப்பதாக யார் காட்டப்பட்டுள்ளார்? பிரம்மா மாத்திரமே முப்பாட்டனார் என அழைக்கப்படுகிறார். பிரம்மாவே பிரதானமானவர் என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் எவரும் பிரம்மாவின் வரலாற்றையும் சுயசரிதத்தையும் அறிய மாட்டார்கள். அதிமேன்மையான தந்தை பரந்தாமத்தில் வசிக்கிறார் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் சூட்சும லோகத்தைப் பற்றியும் அறிவீர்கள். மனிதர்களாகிய நீங்கள் தேவதைகளாக மாறவுள்ளீர்கள். இதனாலேயே சூட்சும லோகம் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆத்மாக்களாகிய நீங்கள் அங்கே செல்கிறீர்கள். உங்கள் சரீரங்கள் சூட்சும லோகத்துக்குச் செல்வதில்லை. நீங்கள் எப்படி அங்கே செல்கிறீர்கள்? அது உங்களின் மூன்றாவது கண் மூலம் எனப்படுகிறது. அது தெய்வீகப் பார்வை அல்லது திரான்ஸ் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் திரான்ஸில் செல்லும்பொழுது, பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் பார்க்கிறீர்கள். சங்கரரின் கண் திறந்தபொழுது, விநாசம் இடம்பெறுவதாக மக்கள் காண்பித்துள்ளார்கள். அதிலிருந்து எவரும் எதையும் புரிந்துகொள்ள முடியாது. நாடகத்துக்கேற்ப, விநாசம் இடம்பெற வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் தங்கள் மத்தியில் சண்டையிடும் பொழுது விநாசம் இடம்பெறும். எவ்வாறாயினும், சங்கரர் என்ன செய்கிறார்? நாடகத்துக்கேற்ப, அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, பிரம்மா, விஷ்ணு, சங்கரர் என மூவர் இருப்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். பிரம்மா ஸ்தாபனைக்கும் விஷ்ணு பராமரிப்புக்கும் சங்கரர் விநாசத்துக்கும் காண்பிக்கப்பட்டுள்ளனர். உண்மையில், இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. சங்கரருக்கு நடிப்பதற்கென ஒரு பாகம் கிடையாது. பிரம்மாவும் விஷ்ணுவும் நடிக்கின்ற பாகங்கள் சக்கரம் முழுவதும் உள்ளன. பிரம்மா விஷ்ணு ஆகுகிறார், விஷ்ணு பிரம்மா ஆகுகிறார். பிரம்மாவின் 84 பிறவிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால், விஷ்ணுவின் 84 பிறவிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. சங்கரர் பிறப்பு, இறப்புக்கு அப்பாற்பட்டவர் ஆவார். இதனாலேயே அவர்கள் சிவனையும் சங்கரரையும் இணைத்துள்ளனர். உண்மையில், சிவனுக்கே அதிமகத்துவமான பாகம் உள்ளது. அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். கடவுள் ஞானம்-நிறைந்தவர் என அழைக்கப்படுகிறார். அவர் தனது பணியைத் தூண்டுதலினூடாக மேற்கொண்டிருப்பின், அவர் எவ்வாறு எங்களுக்கு உலகச் சக்கரத்தின் ஞானத்தைக் கொடுப்பார்? இதனாலேயே தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, இதில் தூண்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை இங்கே வந்தாக வேண்டும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, என்னிடம் உலகச் சக்கரத்தின் இந்த ஞானம் உள்ளது. நான் நடிப்பதற்கென இப்பாகத்தைப் பெற்றுள்ளேன். இதனாலேயே நான் ஞானம்-நிறைந்தவரான, ஞானக்கடல் என அழைக்கப்படுகிறேன். நீங்கள் இந்த ஞானத்தைப் பெறும்பொழுதே, இந்த ஞானம் என்றால் என்ன என்பதை அறிய முடியும். நீங்கள் அதைப் பெற்றிராது விட்டால், எவ்வாறு அதன் அர்த்தத்தை அறியமுடியும்? முன்னர், கடவுள் தூண்டுதல்களைக் கொடுக்கிறார் எனவும், அவர் அனைத்தையும் அறிவார் எனவும், நாங்கள் செய்த பாவங்களை எல்லாம் கடவுள் பார்க்கிறார் எனவும் நீங்கள் கூறுவது வழக்கமாகும். பாபா கூறுகிறார்: நான் அத்தொழிலைச் செய்வதில்லை. நீங்கள் செய்த செயல்களுக்கு எல்லாம், நீங்களே தண்டனையை அனுபவம் செய்ய வேண்டியிருக்கும். நான் யாரையும் தூண்டுவதில்லை. நான் எவரையும் பார்ப்பதும் இல்லை, நான் தூண்டுதலினூடாகத் தண்டனையைக் கொடுப்பதும் இல்லை. தூண்டுதலினூடாக நான் எதையாவது செய்தால், அது நான் தண்டனை கொடுத்ததைப் போன்றிருக்கும். நான் ஒருவரிடம் மற்றவரைக் கொல்லும்படி கூறினால், நான்தான் குற்றம் சுமத்தப்படுவேன். மற்றவருக்குக் கூறுபவர் சிக்கிக்கொள்வார். சங்கரர் தூண்டுதலைக் கொடுத்திருந்தால், அவரும் சிக்கிக் கொண்டிருப்பார். தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறேன். நீங்கள் என்னைப் புகழ்கிறீர்கள். நீங்கள் பாடுகிறீர்கள்: பாபா, வந்து எங்கள் துன்பத்தை அகற்றுங்கள். நான் உங்களுக்கு எந்தத் துன்பத்தையும் விளைவிப்பதில்லை. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்; தந்தையின் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் இருக்கிறீர்கள். ஆகவே, உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். பாபா எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்ற நேரடி உணர்வை நீங்கள் இங்கே பெறுகிறீர்கள். இது ஒரு சந்திப்பு (மேளா) என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் நிலையங்களிற்குச் செல்கிறீர்கள், ஆனால், அங்கு பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் சந்திப்பு என நீங்கள் அதனை அழைக்க மாட்டீர்கள். இங்கேயே பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் சந்திப்பு இடம்பெறுகிறது. இப்பொழுது சந்திப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். தந்தை தனது குழந்தைகளின் மத்தியில் வந்திருக்கின்றார். ஆத்மாக்கள் அனைவரும் இங்கேயே உள்ளார்கள். ஆத்மாவே தந்தையை நினைவுசெய்து அவரை வருமாறு அழைக்கின்றார். இதுவே சிறந்த சந்திப்பு ஆகும். தந்தை வந்து இராவண இராச்சியத்தில் இருந்து ஆத்மாக்கள் அனைவரையும் விடுவிக்கிறார். எனவே, இது ஒரு சிறந்த சந்திப்பு, இல்லையா? இதனூடாக மனிதர்கள் தெய்வீகப் புத்தி உடையவர்கள் ஆகுகின்ற ஒரு சந்திப்பு இதுவே ஆகும். மனிதர்கள் அம்மேளாக்களில் (திருவிழாக்களில்) அழுக்கடைகிறார்கள். அவர்கள் எதையும் பெறுவதில்லை, ஆனால் தங்கள் பணத்தைத் தொடர்ந்தும் வீணாக்குகிறார்கள். அவை மாயையின் அசுர மேளாக்கள் என அழைக்கப்படுகின்றன. இது கடவுளின் மேளா ஆகும். பகலுக்கும் இரவுக்குமான வேறுபாடு உள்ளது. நீங்களும் அசுர மேளாக்களுக்கு உரியவர்களாக இருந்தீர்கள். ஆனால் நீங்கள் இப்பொழுது கடவுளின் மேளாவுக்கு உரியவர்கள் ஆகிவிட்டீர்கள். பாபா வந்துவிட்டார் என்பதை நீங்களும் அறிவீர்கள். இதை அனைவரும் அறிந்திருந்தால், இங்கே எவ்வளவு சனக்கூட்டம் இருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை. மக்கள் தங்குவதற்கான பல்வேறு கட்டடங்களையும் பாபா எங்கிருந்து பெறுவார்? “ஓ கடவுளே! உங்கள் நாடகம் அற்புதமானது!” என மக்கள் இறுதியில் பாடியதாக நினைவுகூரப்படுகிறது. எந்த நாடகம்? உலகத்தை மாற்றுவதற்கான நாடகம். இதுவே மகத்துவமான, அற்புதமான நாடகம். பழைய உலகம் அழிக்கப்பட முன்னர், புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். ஆகவே, நீங்கள் எவருக்காவது விளங்கப்படுத்தும் பொழுது, எல்லாவற்றுக்கும் முதலில், எப்பொழுதும் ஸ்தாபனையைப் பற்றியும் பின்னர் விநாசத்தைப் பற்றியும் அதன்பின்னர் பராமரிப்பைப் பற்றியும் பேசுங்கள். ஸ்தாபனை பூர்த்தி செய்யப்படும் பொழுது, விநாசம் ஆரம்பிக்கும். பின்னர் பராமரிப்பு இடம்பெறும். ஆகவே, நீங்களே சுயதரிசனச் சக்கரதாரிகளாகிய பிராமணக் குழந்தைகள் என்ற சந்தோஷம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கிறது. பின்னர் நீங்கள் பூகோளத்தை ஆட்சி செய்பவர்கள் ஆகுகிறீர்கள். தேவர்களின் இராச்சியத்துக்கு என்ன நடந்தது என்பதை எவரும் அறியார். அதன் பெயரும் சுவடும் தொலைந்து விட்டன. தங்களைத் தேவர்கள் என அழைப்பதற்குப் பதிலாக, அவர்கள் இந்துக்கள் என அழைக்கிறார்கள். இந்துஸ்தானில் வசிப்பவர்கள் இந்துக்கள் என அழைக்கப்படுகிறார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் ஒருபொழுதும் அவ்வாறு அழைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தேவர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். ஆகவே, நாடகத்துக்கேற்ப, நீங்கள் இந்த மேளாவுக்கு வந்துள்ளீர்கள். நாடகத்தில் இது நிச்சயிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் படிப்படியாகத் தொடர்ந்தும் இடம்பெறும். நீங்கள் இப்பொழுது என்ன பாகத்தை நடிக்கிறீர்களோ, அடுத்த சக்கரத்திலும் அதே பாகத்தையே நடிப்பீர்கள். இந்தச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. இராவண இராச்சியத்தில் உங்களுக்கு அசுரப் பராமரிப்பு இருந்துள்ளது. நீங்கள் இப்பொழுது கடவுளின் குழந்தைகள் ஆவீர்கள். பின்னர் நீங்கள் தேவர்களின் குழந்தைகளாகவும் அதன் பின்னர் சத்திரியர்களின் குழந்தைகளாகவும் ஆகுவீர்கள். நீங்கள் தூய்மையற்ற இல்லறப் பாதையில் ஒருவராக ஆகினாலும், இப்பொழுது தூய இல்லறப் பாதையின் ஒருவராக ஆகுகிறீர்கள். அவர்களும் மனிதர்களே, ஆனால் அவர்களிடம் தெய்வீகக் குணங்கள் இருந்தன. அவர்கள் பல கரங்களுடன் சித்தரிக்கப்பட்டு உள்ளார்கள். விஷ்ணு யார் என்பதை எவராலும் உங்களுக்குக் கூற இயலாது. அவர்கள் மகா இலக்ஷ்மியை வழிபடுகிறார்கள். மக்கள் ஒருபொழுதும் ஜெகதாம்பாளிடம் செல்வத்தை வேண்டுவதில்லை. அவர்கள் பெருமளவு பணத்தைப் பெற்றால், அது அவர்கள் இலக்ஷ்மியை வழிபட்டதால், இலக்ஷ்மி அவர்களின் பொக்கிஷக் களஞ்சியத்தை நிரப்பியதாகக் கூறுகிறார்கள். இங்கு, நீங்கள் ஜெகதாம்பாளினூடாக, பரமாத்மா பரமதந்தை சிவனிடமிருந்து அனைத்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அவரே அருள்பவர் ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் பாப்தாதாவை விடவும் அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள். ஜெகதாம்பாளுக்காக, எத்தனை திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன என்று பாருங்கள். பிரம்மாவுக்கு அத்தனை திருவிழாக்கள் நடத்தப்படுவதில்லை. பிரம்மா ஓரிடத்தில் மாத்திரமே அமருமாறு செய்யப்பட்டார். அஜ்மீருக்கு அருகில் பிரம்மாவுக்கென ஒரு பெரிய ஆலயம் உள்ளது. நீங்கள் இப்பொழுது செய்யும் விடயங்கள் அனைத்தினதும் புகழ் காரணமாக இறைவிகளுக்குப் பல ஆலயங்கள் உள்ளன. நீங்கள் பாரதத்துக்குச் சேவை செய்வதனால் அதிகளவில் வழிபாடு செய்யப்படுகிறீர்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள். ஜெகதாம்பாள் ஒருபொழுதும் சர்வவியாபி என அழைக்கப்படுவது இல்லை. நீங்கள் புகழப்படுகிறீர்கள். ஒருபொழுதும் பிரம்மா, விஷ்ணு, சங்கரரைச் சர்வவியாபி என அழைப்பதில்லை, ஆனால் நான் ஒவ்வொரு துணிக்கையிலும் இருப்பதாகக் கூறப்படுகிறேன்! நீங்கள் என்னை அதிகளவு அவமரியாதை செய்கிறீர்கள். நான் உங்களுடைய புகழை அதிகளவு அதிகரிக்கிறேன். ‘பாரத மாதாவுக்கு வெற்றி’ என்று கூறப்படுகின்றது. பூமி அன்றி, நீங்களே பாரதத்தின் தாய்மார்கள் ஆவீர்கள். இப்பொழுது தமோபிரதானாக இருக்கும் இந்த பூமி, பின்னர் சத்தியயுகத்தில் சதோபிரதானாக இருக்கும். தேவர்கள் ஒருபொழுதும் தங்கள் பாதங்களை இந்தத் தூய்மையற்ற பூமியில் வைப்பதில்லை என இதனாலேயே கூறப்பட்டுள்ளது. தேசம் சதோபிரதானாக ஆகும்பொழுதே, அவர்கள் வருகிறார்கள். இப்பொழுது நீங்கள் சதோபிரதானாக வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றித் தந்தையை நினைவுசெய்தால், ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். உங்களுக்கு இந்த அக்கறை இருக்கவேண்டும். நீங்கள் பாபாவை நினைவுசெய்யும் பொழுது, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பெறுவீர்கள். சத்தியயுகத்தில், ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகி இருப்பீர்கள். ஆகவே, நீங்கள் தூய்மையான சரீரங்களைப் பெறுவீர்கள். தங்கத்தினுள் கலப்படம் கலக்கப்பட்டிருக்கும் பொழுது, அதிலிருந்து செய்யப்படும் அணிகலனும் அவ்வாறே இருக்கும். அதேபோன்று, ஆத்மாக்கள் பொய்யானவர்களாக இருக்கும் பொழுது, அவர்களின் சரீரங்களும் பொய்யானவையாகவே இருக்கும். தங்கத்தில் கலப்படம் கலக்கப்பட்டிருக்கும் பொழுது, அதன் பெறுமதி குறைகிறது. இப்பொழுது உங்களுக்குப் பெறுமதி இல்லை. முன்னர், நீங்கள் உலக அதிபதிகளாக, 24 கரட் தங்கமாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் ஒன்பது கரட் தங்கமெனக் கூறப்படுகிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுடன் தந்தை இந்த இதயபூர்வமான சம்பாஷணையைக் கொண்டிருக்கிறார். அவர் இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் களிப்பூட்டுகிறார். ஆகவே, அவர் கூறுவதைக் கேட்பதால் மட்டுமே, நீங்கள் சாதாரண மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவீர்கள். அங்கு வைரங்களாலும் இரத்தினங்களாலும் ஆன மாளிகைகள் இருக்கும். சுவர்க்கம் வேறு எவ்வாறு இருக்கும்? நீங்கள் (திரான்ஸில்) அங்கே மாம்பழச் சாற்றையும் பருகிவிட்டு பின்னர் இங்கு திரும்பி வருகிறீர்கள். அங்கே பழம் மிகப்பெரியதாக இருக்கும். இங்கே நீங்கள் அத்தகைய பழத்தைக் கண்டுபிடிக்க மாட்டீர்கள். சூட்சும லோகத்தில் எதுவும் இல்லை. விரைவில் நீங்கள் அங்கே நடைமுறையில் செல்ல இருக்கிறீர்கள். இதுவே பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் சந்திப்பு ஆகும். இச்சந்திப்பினூடாக நீங்கள் சுத்தமாகவும் பிரகாசமாகவும் ஆகுகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இங்கே வரும்பொழுது, ஓய்வாக இருக்கிறீர்கள். ஏனெனில் உங்களுக்கு உங்கள் வீட்டையும் வியாபாரத்தையும் பற்றிய கவலைகள் எதுவும் இருக்காது. ஆகவே, நீங்கள் இங்கே இருக்கும் பொழுது, நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதற்கு, உங்களுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம் இருக்கிறது. அங்கே, நீங்கள் உங்கள் வீட்டையும் அனைத்தையும் நினைவு செய்கிறீர்கள். இங்கே நினைவு செய்வதற்கு எதுவுமே இல்லை. இங்கே நீங்கள் காலையில் இரண்டு மணிக்கு விழித்தெழுந்து அமரலாம். உங்களால் நிலையங்களுக்கு இரவில் செல்ல முடியாது. இங்கே இது மிகவும் இலகுவானது. நீங்கள் வந்து சிவபாபாவின் நினைவில் அமர முடியும். வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். இங்கே நீங்கள் உதவியையும் பெறுகிறீர்கள். நேரத்துக்கு உறங்கச் சென்று நேரத்துக்கு விழித்தெழுங்கள். மூன்றிலிருந்து ஐந்து மணி வரை இங்கே வந்து அமருங்கள். பாபாவும் வருவார். குழந்தைகளாகிய நீங்களும் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்.யோகத்தைக் கற்பிப்பவர் பாபாவே ஆவார். இவரும் கற்றுக் கொண்டிருக்கிறார். ஆகவே, பாபாவும் தாதாவும் இருவரும் இங்கே வருவார்கள். நினைவில் இங்கே அமர்வதற்கும் அங்கே அமர்வதற்கும் இடையிலான வேறுபாட்டை பின்னர் நீங்கள் அவதானிப்பீர்கள். நீங்கள் இங்கே வேறு எதையும் நினைவுசெய்ய வேண்டியதில்லை. இதில் பெருமளவு நன்மை உள்ளது. இது மிகவும் சிறந்தது என பாபா உங்களுக்கு ஆலோசனை கூறுகிறார். குழந்தைகளாகிய உங்களால் விழித்தெழ முடியுமா என நாங்கள் இப்பொழுது பார்ப்போம். உங்களில் சிலருக்கு அதிகாலையில் விழித்தெழும் பயிற்சி உள்ளது. நீங்கள் ஐந்து விகாரங்களையும் துறந்துள்ளதுடன், இந்தப் பழைய உலகம் முழுவதிலும் விருப்பமின்மையைக் கொண்டுள்ளீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உலகை மாற்றுகின்ற அற்புதமான செயல் இப்பொழுது இடம்பெறுகிறது. ஆகவே, உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். பாலும் சீனியும் போன்று ஒன்றாக வாழுங்கள்.

2. அதிகாலையில் விழித்தெழுந்து ஒரேயொரு தந்தையின் நினைவில் அமருங்கள். அந்த நேரத்தில் வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். பழைய உலகில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருப்பதுடன், ஐந்து விகாரங்களையும் துறவுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எல்லையற்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதுடன் சேவை செய்யும்போது பற்றற்றவராகவும் அன்பானவராகவும் இருக்கும் ஓர் உலக சேவையாளர் ஆகுவீர்களாக.

உலக சேவையாளர் என்பவர் எல்லையற்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பவர் ஆவார். இத்தகையதொரு சேவையாளர் சேவை செய்யும்போது சதா பற்றற்றவராகவும் தந்தையின் மீது அன்பு உடையவராகவும் இருப்பார். அவர் அந்தச் சேவையில் பற்று வைக்க மாட்டார். ஏனென்றால் எந்தவொரு சேவையிலும் பற்று வைப்பது என்றால் அது ஒரு தங்கச் சங்கிலியைப் போன்றதாகும். அந்த பந்தனம் உங்களை எல்லையற்றதில் இருந்து எல்லைக்கு உட்பட்டது ஆக்குகிறது. ஆகவே, நீங்கள் சரீரங்களின் எந்தவிதமான விழிப்புணர்வில் இருந்தும் இறை உறவு முறைகளில் இருந்தும் சேவை செய்வதற்கான எந்தவிதமான வசதிகளில் இருந்தும் பற்றற்றவர் ஆகுவதுடன் தந்தையின் மீது அன்புடையவர் ஆகவேண்டும். அப்போது நீங்கள் ஓர் உலக சேவையாளர் என்ற ஆசீர்வாதத்தைப் பெறுவதுடன் சதா தொடர்ந்து வெற்றியைப் பெறுவீர்கள்.

சுலோகம்:
ஒரு விநாடியில் வீணான எண்ணங்களை நிறுத்துவதற்கான ஒத்திகைகளைச் செய்யுங்கள். நீங்கள் சக்திவாய்ந்தவர் ஆகுவீர்கள்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

உங்கள் ஒவ்வொருவரின் முதலாவது இல்லறமும் உங்களின் சரீரம் என்ற இல்லறமே. அதன்பின்னர், உங்களின் சரீர உறவுகளின் இல்லறம் உள்ளது. எனவே, நீங்கள் முதலில் உங்களின் சரீரம், உங்களின் பௌதீக அங்கங்கள் என்ற இல்லறத்தைத் தூய்மை ஆக்க வேண்டும். உங்களின் சரீரம் என்ற இல்லறத்தை நீங்கள் தூய்மை ஆக்கும்வரை உங்களால் உங்களின் சரீர உறவுகளின் இல்லறத்தை, அது எல்லைக்கு உட்பட்டதோ அல்லது எல்லையற்றதோ, அதைத் தூய்மை ஆக்க முடியாது. எனவே, எல்லாவற்றுக்கும் முதலில் உங்களையே கேளுங்கள்: நீங்கள் உங்களின் சரீர இல்லறத்தை - உங்களின் எண்ணங்கள், புத்தி, கண்கள், உதடுகள் என்பவற்றை ஆன்மீகமாகவும் தூயதாகவும் ஆக்கிவிட்டீர்களா? இத்தகைய தூய ஆத்மாக்கள் மட்டுமே மகாத்மாக்கள் ஆவார்கள்.