28.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அகநோக்குடையவர்கள் ஆகுங்கள். அதாவது, மௌனத்தில் நிலைத்திருங்கள். உங்கள் வாயினால், எதனையும் கூறாதீர்கள். பணிகள் அனைத்தையும் அமைதியாக மேற்கொள்ளுங்கள். ஒருபோதும் அமைதியின்மையைப் பரப்பாதீர்கள்.

பாடல்:
குழந்தைகளாகிய உங்களை ஏழ்மையாக்கிய மிகப் பெரிய எதிரி எது?

பதில்:
கோபமாகும். கோபம் இருக்குமிடத்தில் தண்ணீர்க் கலசமும் உலர்ந்து விடுகின்றது எனக் கூறப்பட்டுள்ளது. இத் தீய ஆவியினாலேயே வைரங்களினாலும், இரத்தினங்களினாலும் நிறைந்திருந்த பாரதத்தின் கலசம் இப்போது வெறுமையாகி விட்டது. இத் தீய ஆவியே உங்களை ஏழ்மையாக்கி விட்டது. கோபமடைந்திருப்பவர் தானும் சூடாகி. பிறரையும் சூடாக்கி விடுகின்றார். எனவே, இப்பொழுது அகநோக்குடையவர்களாகி, இத்தீய ஆவியை அகற்றி விடுங்கள்.

ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: இனிய குழந்தைகளே, அகநோக்குடையவர்கள் ஆகுங்கள். அகநோக்குடையவராகுதல் என்றால் எதனையும் கூறாதிருப்பதாகும். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு இக்கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். இதனைப் பற்றி மேலும் அதிகமாகக் கூற வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில், உங்கள் குடும்பத்துடன் எவ்வாறு வாழ்வது என்பது பற்றி ஒரு விளக்கம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே மன்மனாபவ ஆகும். என்னை நினைவுசெய்யுங்கள்! இதுவே முதலாவதும் முக்கியமானதுமான கருத்தாகும். குழந்தைகளாகிய நீங்கள் வீட்டில் கோபப்படக்கூடாது. ஒரு கலசத்தில் உள்ள நீரையும், உலரச் செய்யக்கூடியதே கோபமாகும். கோபம் அடைந்துள்ளவர் அமைதியின்மையைப் பரப்புகின்றார். எனவே வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போதும், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் உணவை உண்ணுங்கள், உங்கள் காரியாலயத்திற்கோ அல்லது தொழில் போன்றவற்றிற்கோ செல்லுங்கள். அங்கும், நீங்கள் மௌனத்தில் நிலைத்திருப்பது நல்லது. அனைவரும் தங்களுக்கு அமைதி வேண்டுமெனக் கூறுகின்றார்கள். தந்தை அமைதிக் கடல் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒரேயொரு தந்தையே உங்களுக்குக் கொடுக்கும் வழிகாட்டல்: என்னை நினைவுசெய்யுங்கள். எதுவும் கூறவேண்டிய அவசியம் இல்லை; அகநோக்கில் நிலைத்திருந்தாலே போதும். நீங்கள் காரியாலயத்தில் உங்கள் பணியையும் செய்ய வேண்டும். ஆனால் அதிகமாகப் பேச வேண்டியதில்லை. நீங்கள் முற்றிலும் இனிமையானவர் ஆகவேண்டும். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். சண்டையிடுதல் போன்றவையும் கோபமடைவதே ஆகும். காமம் உங்கள் கொடிய எதிரி, இரண்டாவது எதிரி கோபம் ஆகும். இது உங்களை ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்குமாறு செய்கின்றது. கோபத்தினாலேயே பல சண்டைகள் இடம்பெறுகின்றன. சத்திய யுகத்தில், சண்டையே இல்லை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். கோபம் என்பது ஒருவர் இராவணனைப் போன்றிருப்பதாகும். கோபம் உடையவர்கள், அசுர சமுதாயத்தைச் சேர்ந்தவர்களென அழைக்கப்படுகின்றனர். அவர்களினுள் தீய ஆவி பிரவேசிக்கின்றது. அவர்களுக்கு எதுவுமே கூற வேண்டியதில்லை. ஏனெனில் அம்மனிதர்களிடம் இந்த ஞானம் இல்லை; அவர்கள் தொடர்ந்தும் கோபம் அடைவார்கள். கோபமடைபவர்களுடன் நீங்கள் கோபித்துக்கொள்ளும்போது, சண்டை இடம்பெறும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அது மிகவும் மூர்க்கமான தீய ஆவியாகும்; அதனை நீங்கள் சாதுரியமாக விரட்டிவிட வேண்டும். உங்கள் வாயிலிருந்து கசப்பான வார்த்தைகள் வெளிவருவதை அனுமதிக்காதீர்கள். அவை பெருமளவு பாதிப்பை விளைவிக்கின்றன. கோபத்தினாலேயே விநாசம் இடம்பெறுகின்றது. ஒரு வீட்டில் கோபம் ஏற்படும்போது, அங்கு பெரும் அமைதியின்மை நிலவுகின்றது. நீங்கள் கோபம் அடையும்போது தந்தையின் பெயரை இழிவடையச் செய்கின்றீர்கள். இவ்வாறான தீய ஆவிகளை நீங்கள் விரட்டி விட வேண்டும். அவற்றை நீங்கள் ஒருமுறை விரட்டி விட்டால், அரைச் சக்கரத்திற்கு அவை இருக்க மாட்டாது. இந்த ஐந்து விகாரங்களும் இப்பொழுது முழு வலிமையுடன் உள்ளன. விகாரங்கள் முழு வலிமையுடன் இருக்கின்ற இந்த நேரத்திலேயே தந்தை வருகின்றார். இக் கண்கள் மிகவும் குற்றப்பார்வை உடையன. வாயும் குற்றமுள்ளதாகவே உள்ளது. மக்கள் சத்தமாகப் பேசும்போது, அவர்கள் சூடாகுவதுடன், தமது வீட்டையும் சூடேற்றுகின்றார்கள். காமமும் கோபமும் உங்கள் மிகப் பெரிய இரு எதிரிகளாகும். கோபம் அடைபவர்களால் நினைவில் நிலைத்திருக்க முடியாது. நினைவில் நிலைத்திருப்பவர்கள் எப்பொழுதும் அமைதியாக இருப்பார்கள். உங்கள் சொந்த இதயத்திடம் வினவுங்கள்: நான் எனக்குள் தீய ஆவியைக் கொண்டுள்ளேனா? பற்று என்ற தீய ஆவியும் உள்ளது, பேராசை என்ற தீய ஆவியும் உள்ளது. தீய ஆவியான பேராசையும், குறைந்தது அல்ல. இவை அனைத்தும் தீய ஆவிகள், ஏனெனில் அவை இராவணனின் சேனைக்குரியவை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவு யாத்திரையைக் கற்பிக்கின்றார். எனினும், இதில் பலர் குழப்பம் அடைந்துள்ளார்கள். அவர்கள் அதிகளவு பக்தி செயதுள்ளதால், அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. பக்தி மார்க்கம் என்பது சரீர உணர்வாகும். அரைச் சக்கரத்திற்கு சரீர உணர்வே இருந்து வருகின்றது. புறநோக்குடையவர்களாக இருந்ததால். உங்களை ஆத்மாக்கள் என்ற உங்களால் கருத முடியவில்லை. தந்தை இதனைப் பெருமளவு வலியுறுத்திக் கூறுகின்றார்: உங்களை; ஆத்மாக்கள் எனக கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள். எனினும் இதனை எவ்வாறு செய்வதென அவர்கள் அறியார்கள். ஏனைய விடயங்கள் அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் வினவுகின்றார்கள்: நாங்கள் எவ்வாறு நினைவைக் கொண்டிருப்பது? எதனையும் எங்களால் பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: உங்களை ஆத்மாக்கள என்று நீங்கள் கருதுகின்றீர்களா? அந்த ஒரேயொருவரே உங்கள் எல்லையற்ற தந்தை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ‘சிவ சிவா’ என்று உங்கள் உதட்டினால் கூற வேண்டியதில்லை. நீங்கள் ஓர் ஆத்மா என்பதை உள்ளார்த்தமாக அறிவீர்கள். மனிதர்கள் அமைதியை வேண்டி நிற்கின்றார்கள். பரமாத்மா மாத்திரமே அமைதிக் கடல் ஆவார். நிச்சயமாக அவர் ஒருவர் மாத்திரமே ஆஸ்தியைக் கொடுப்பவர். இப்பொழுது தந்தை விளங்கப்படுத்துகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் அமைதி நிறைந்தவர்களாகுவதுடன், உங்கள் எண்ணற்ற பிறவிகளின் பாவங்களும் அழிக்கப்படும். வேறெதுவுமேயில்லை. பெரிய நீள்கோள வடிவமாக எதுவுமில்லை. ஆத்மாக்கள் சின்னஞ்சிறியவர்கள். தந்தையும் சின்னஞ்சிறியவரே. அனைவரும் அவரை நினைவுசெய்து கூறுகின்றார்கள்: ஓ பகவானே! ஓ கடவுளே! இதனைக் கூறியவர் யார்? இதனை ஆத்மாக்களே கூறுகின்றார்கள். ஆத்மாக்கள் தங்கள் தந்தையை நினைவுசெய்கின்றார்கள். எனவே தந்தை குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: மன்மனாபவ! இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, அகநோக்கில் நிலைத்திருங்கள். நீங்கள் பார்க்கின்ற அனைத்தும் அழியவுள்ளன. ஆத்மாக்கள் அமைதியில் (அமைதி தாமத்தில்) இருப்பார்கள். ஆத்மாக்கள் அமைதி தாமத்திற்குத் திரும்ப வேண்டும். ஆத்மாக்கள் தூய்மையாகும்வரை, அமைதி தாமத்திற்கு திரும்ப முடியாது. சாதுக்களும், புனிதர்களும் தாங்கள் எவ்வாறு அமைதியை அடைவது என்று வினவுகின்றார்கள். தந்தை உங்களுக்கு இலகுவான வழியைக் காட்டுகின்றார். எனினும் குழந்தைகளாகிய உங்களில் பலருக்கு அமைதியில் நிலைத்திருக்க முடிவதில்லை. வீட்டில் வாழ்கின்ற உங்களிற் சிலர் அமைதியாகவே இருப்பதில்லை என்பதை பாபா அறிவார். அவர்கள் சிறிது நேரத்தை நிலையத்தில் செலவழிக்கின்றார்கள். இருப்பினும் அவர்கள் உள்ளார்த்தமாக அமைதியாக இருப்பதோ அல்லது தந்தையை நினைவுசெய்வதோ இல்லை. அவர்கள் நாள் முழுவதும் தொடர்ந்தும் வீட்டில் குழப்பம் விளைவிக்கின்றார்கள். ஆதலால் அவர்கள் நிலையத்திற்குச் சென்றாலும் அமைதியாக இருக்க முடிவதில்லை. ஒருவர் பிறர் ஒருவரின் சரீரத்தின் மீது அன்பு கொண்டிருந்தால் அவருடைய மனமானது ஒருபோதும் அமைதியை அனுபவம் செய்ய முடியாது. அவரை மாத்திரம் நீங்கள் நினைவுசெய்கிறீர்கள், அவ்வளவே! தந்தை விளங்கப்படுத்துகின்றார்: மனிதர்கள் தங்களுக்குள் ஐந்து விகாரங்களைக் கொண்டிருக்கின்றார்கள். தீய ஆவி ஒன்று இவருக்குள் பிரவேசித்து விட்டது என்று கூறப்படுகின்றது. இத் தீய ஆவிகளே உங்களை ஏழ்மை ஆக்கியுள்ளன. ஒரு நேரத்தில் ஒரு தீய ஆவியே (பேய்) ஒருவரில் பிரவேசிக்க முடியும். தந்தை கூறுகின்றார்: இந்த ஐந்து தீய ஆவிகளும் அனைவரிலும் இருக்கின்றன. இத் தீய ஆவிகளை அகற்றுவதற்காக மக்கள் கடவுளைக் கூவி அழைக்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, வந்து எங்களுக்கு அமைதியைக் கொடுங்கள். இத் தீய ஆவிகளை விரட்டுவதற்கான வழியை எங்களுக்குக் காட்டுங்கள். இத் தீய ஆவிகள் அனைவரிலும் உள்ளன. இது இராவண இராச்சியமாகும். காமமும், கோபமுமே மிகப்பெரிய தீய ஆவிகள் ஆகும். தந்தை வந்து, இத் தீய ஆவிகளை விரட்டி விடுகின்றார். எனவே அவருக்கு அதற்கான பிரதிபலனை நீங்கள் கொடுக்க வேண்டும். அம் மக்கள் தீய ஆவிகளையும், பேய்களையும் விரட்டினாலும், அதன்மூலம் அவர்கள் எதனையும் அடைவதில்லை. முழு உலகிலிருந்தும் தீய ஆவிகளை விரட்டுவதற்காகவே தந்தை வருகின்றார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது இத் தீய ஆவிகள் உலகிலுள்ள அனைவரின் மீதும் உள்ளன. தேவர்களில் எத்தீய ஆவிகளும் இருப்பதில்லை. அவர்களிடம் காமம், கோபம், பேராசை அல்லது பற்று போன்ற எந்தச் சரீர உணர்வும் இருப்பதில்லை; ‘எனக்கு முட்டை உண்ண ஆசையாக உள்ளது! எனக்கு இதனை அல்லது அதனை உண்ண ஆசையாக உள்ளது! என்ற தீய ஆவியான பேராசையும் குறைந்தது அல்ல. அந்தத் தீய ஆவி பலரிலும் உள்ளது. காமம், கோபம் போன்ற தீய ஆவிகள் உங்களுக்குள் உள்ளனவா என்பதை உங்கள் இதயபூர்வமாக நீஙகள் புரிந்துகொள்கின்றீர்கள். ஆதலால், இத் தீய ஆவிகளை விரட்டுவதற்குத் தந்தை அதிகப் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. சரீர உணர்விற்கு வரும்போது, எவரையாவது அரவணைக்கும் ஆசையும் ஏற்படுகின்றது. அப்பொழுது உங்கள் வருமானம் முழுவதும் அழிக்கப்படுகின்றது. கோபத்தைக் கொண்டிருப்பவர்களுககும் அதுவே நடைபெறுகின்றது. ஒரு தந்தை (லௌகீகத் தந்தை) கோபம் அடைந்து, தனது மகனை அடிக்கின்றார் அல்லது மகன் தனது தந்தையை அடிக்கின்றார், அல்லது மனைவி தனது கணவனைக் கொலை செய்கின்றாள். எவ் வகையான வழக்குகள் இருக்கின்றன என்று சிறைச்சாலைகளுக்குச் சென்று பாருங்கள். இத் தீய ஆவிகள் பிரவேசித்ததனால், பாரதத்தின் நிலைமை என்னவாகியுள்ளதெனப் பாருங்கள். தங்கமும், வைரங்களும் நிறைந்திருந்த பாரதத்தின் பாரிய கலசம், இப்பொழுது வெறுமையாகி விட்டது. ஒருவர் கோபம் அடைவதால். நீர்க் கலசமும் கூட உலர்ந்து விடுகின்றது என்று கூறப்படுகிறது. பாரதமும் அதே நிலைமையை அடைந்துள்ளது. இதனை எவருமே அறியார்கள். தந்தையே வந்து, இத்தீய ஆவிகளை அகற்றுகின்றார்; மனிதர்கள் எவராலும் அவற்றை அகற்ற முடியாது. இந்த ஐந்து தீய ஆவிகளும் மிகவும் சக்திவாய்ந்தன. அவை அரைச் சக்கரமாக இருந்தன் கேட்கவே வேண்டாம்! சிலர் தூய்மையாக இருந்தாலும், விகாரத்தின் மூலமே அவர்கள் பிறப்பெடுக்கின்றார்கள்; அதுவும் விகாரமே. ஐந்து தீய ஆவிகளும் பாரதத்தை முற்றிலும் ஏழ்மையாக்கி விட்டன. நாடகம் எவ்வாறு ஆக்கப்பட்;டுள்ளது எனப் பாருங்கள். தந்தை அமர்ந்திருந்து, இதனை விளங்கப்படுத்துகின்றார். பாரதம் வெளிநாடுகளிடமிருந்து கடன் பெறும் லகையில் அது மிகவும் ஏழ்மையாகி விட்டது. பாரதத்தின் விடயங்களைப் பற்றித் தந்தை விளங்கப்படுத்துகின்றார். இக்கல்வியின் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு செல்வத்தைப் பெறுகின்றீர்கள். இது அழிவற்ற தந்தை கற்பிக்கின்ற, அழிவற்ற கல்வியாகும். பக்தி மார்க்கத்திற்கென அதிகளவு சம்பிரதாயங்கள் உள்ளன. மிகவும் இளம் வயதிலிருந்தே பாபா கீதையைக் கற்பதும், நாராயணனை வழிபடுவதும் வழக்கமாக இருந்தது, ஆனாலும் அவர் எதனையும் புரிந்துகொள்ளவில்லை. தான் ஓர் ஆத்மா என்பதையும், அந்த ஒருவரே எங்கள் தந்தை என்பதையும் கூட அவர் புரிந்துகொள்ளவில்லை. இதனாலேயே, எவ்வாறு நினைவுசெய்வது என்று நீங்கள் வினவுகின்றீர்கள். ஓ! நீங்கள் பக்தி மார்க்கத்திலும் அவரை நினைவுசெய்து கூறுகின்றீர்கள்: ஓ கடவுளே, வந்து எங்களை விடுதலை செய்யுங்கள்! எங்கள் வழிகாட்டியாகுங்கள். முக்தியையும், ஜீவன்முக்தியையும் அடைவதற்கு ஒரு வழிகாட்டி தேவைப்படுகின்றார். இப்பழைய உலகின் மீது நீங்கள் விருப்பமின்மையைக் கொண்டிருப்பதற்குத் தந்தை உங்களைத் தூண்டுகிறார். இந்நேரத்தில் ஒவ்வோர் ஆத்மாவும் அவலட்சணமானவர் ஆகியுள்ளார். எனவே எவராலும் எவ்வாறு ஓர் அழகான சரீரத்தைப் பெற முடியும்? எவ்வளவுதான் அழகான நிறத்தைக் கொண்டிருந்தாலும், ஆத்மா இன்னமும் அவலட்சணமாகவே உள்ளார். அழகான நிறத்தையும், அழகான சரீரங்களையும் உடையவர்கள் அதிகளவு போதையைத் தங்களையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆத்மாக்கள் எவ்விதம் அழகானவர்களாக ஆகுகின்றார்கள் என்பது கூட மனிதர்களுக்குத் தெரியாது. இதனாலேயே அவர்கள் நாஸ்திகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். படைப்பவரான தந்தையையும், அவரது படைப்பையும் அறியாதவர்கள் நாஸ்திகர்கள் என அழைக்கப்படுகின்றனர். அவரை அறிந்தவர்கள் ஆஸ்திகர்கள் என அழைக்கப்படுகின்றனர். தந்தை இங்கமர்ந்திருந்து, அனைத்தையும் மிகத் தெளிவாகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தை வினவ வேண்டும்: நான் எந்தளவிற்குச் சுத்தமாக உள்ளேன்? எந்தளவிற்கு என்னை நான் ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவுசெய்கின்றேன்? நினைவு சக்தியினாலேயே இராவணனை நீங்கள் வெற்றிகொள்ள வேண்டும். அதில் பௌதீகமான சக்தி என்ற கேள்விக்கே இடமில்லை. இந்நேரத்தில் அமெரிக்காவே மிகவும் சக்தி வாய்ந்தது. ஏனெனில், அதனிடம் பெருமளவு செல்வமும், சொத்தும், போர்த் தளபாடங்கள் Nhன்றவையும் உள்ளன. அது அனைவரையும் கொல்வதற்கான பௌதீகச் சக்தியாகும். வெற்றியடைய வேண்டுமென்பதே அவர்களுடைய புத்தியில் உள்ளது. உங்களுடையது ஆன்மீக சக்தியாகும். அதன் மூலம் நீங்கள் இராவணனை வெற்றிகொண்டு உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். அரைக் கல்பத்திற்கு உங்களை எவராலும் வெற்றி கொள்ளவோ அல்லது உங்கள் இராச்சியத்தை அபகரிக்கவோ முடியாது. வேறு எவராலும் இந்த ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெற முடியாது. நீங்கள் என்னவாகுகின்றீர்கள் என்பதை ஒருகணம் சற்றுச் சிந்தியுங்கள்! நீங்கள் பெருமளவு அன்புடன் தந்தையை நினைவு செய்வதுடன், சுயதரிசனச் சக்கரத்தையும் சுழற்றுங்கள். விஷ்ணு பிறரின் கழுத்தை வெட்டுவதற்காகவே சுயதரிசனச் சக்கரத்தைப் பயன்படுத்தினார் என்று மக்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும், இதில் வன்முறை என்ற கேள்விக்கே இடமில்லை. எனவே இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை கூறுகிறார்: இனிய குழந்தைகளே, முன்னர் நீங்கள் எவ்வாறிருந்தீர்கள் என்றும், இப்பொழுது உள்ள உங்கள் நிலைமையையும் பாருங்கள். நீங்கள் எவ்வளவு பக்தி செய்திருந்தாலும் உங்களால் தீய ஆவிகளை அகற்ற முடியாதிருந்தது. இப்பொழுது அகநோக்குடையவர்கள் ஆகி, உங்களுக்குள் ஏதாவது தீய ஆவிகள் உள்ளனவா எனப் பாருங்கள். எவருடனாவது இதயபூர்வமாகப் பற்று வைத்திருந்தாலோ அல்லது எவரையாவது அரவணைத்தாலோ நீங்கள் சம்பாதித்துள்ள அனைத்தும் இழக்கப்பட்டுள்ளது என்பதை அப்போது புரிந்துகொள்ள வேண்டும். அத்தகையவர்களின் முகத்தையேனும் பார்க்க பாபா விரும்புவதில்லை. அவர்கள் தீண்டத்தகாதவர்கள் ஆகுவதைப் போலுள்ளது; அவர்கள் சுத்தமானவர்கள் அல்ல. அவர்களின் மனச்சாட்சி உறுத்துவதால், அவர்கள் தாம் நிச்சயமாகத் தீண்டத் தகாதவர்களாகி விட்டதாக உணர்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் சரீரம் உட்பட, அனைத்தையும் மறந்து, உங்களை ஆத்மாக்கள் என்று கருதுங்கள். இந்த ஸ்திதியைப் பேணினாலே, நீங்கள் ஓர் தேவராகுவீர்கள். ஆகவே உங்களுக்குள் எவ்விதத் தீய ஆவியும் இருக்கக்கூடாது. உங்களைச் சோதிக்கமாறு பாபா உங்களுக்குக் தொடர்ந்தும் கூறுகின்றார். பலருக்குள் கோபம் உள்ளது; அவர்களால் எவரையேனும் அவதூறு செய்யாமல், இருக்க முடியாது. அப்போது சண்டை இடம்பெறுகின்றது. கோபம் மிகவும் தீயது. இத் தீய ஆவிகளை விரட்டியடித்து விட்டு, முற்றிலும் தெளிவடையுங்கள். உங்கள் சொந்தச் சரீரத்தைக் கூட நீங்கள் நினைவு செய்யக்கூடாது. அப்பொழுதே நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். இதனாலேயே எட்டு இரத்தினங்கள் மாத்திரம் நினைவுசெய்யப்பட்டுள்ளனர். நீங்கள் ஓர் இரத்தினம் ஆகுவதற்காகவே, ஞான இரத்தினங்களைப் பெற்றுள்ளீர்கள். முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர் என்று மக்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்களில் எட்டுப் பேர் மாத்திரமே சிறப்புச் சித்தி எய்துகின்றார்கள். அவர்களே பரிசைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இது ஒரு புலமைப் பரிசைப் பெறுதல் போலாகும். இலக்கு மிகவும் உயர்ந்தது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். மேலும் முன்னேறிச் செல்லும்போது, சிலரில் ஒரு தீய ஆவி பிரவேசிக்கும்போது, வீழ்ந்து விடுகின்றார்கள். அங்கு விகாரம் எதுவும் இல்லை. குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் முழு நாடகச்; சக்கரமும் சுழல வேண்டும். 5000 வருடங்களில் எத்தனை வருடங்கள், எத்தனை மாதங்கள், எத்தனை மணித்தியாலங்கள், எத்தனை விநாடிகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். உங்களில் யாராவது விரும்பினால் இதனைக் கணக்கிடலாம். அப்பொழுது ஒவ்வொரு சக்கரத்திலும்; எத்தனை வருடங்கள், எத்தனை மாதங்கள், எத்தனை மணித்தியாலங்கள், எத்தனை விநாடிகள் உள்ளன என்பதை நீங்கள் விருட்சப் படத்தில் எழுதலாம். அப்போது நீங்கள் கூறுவது முற்றிலும் மிச்சரியானது என்று மக்கள் கூறுவார்கள். பாபா உங்களிடம் 84 பிறவிக் கணக்கைப் பற்றிக் கூறுவாராயின், அவர் ஏன் சக்கரத்தின் கால எல்லையைப் பற்றிக் கூறமாட்டார்? குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டிருக்கின்ற பிரதான விடயம்: நீங்கள் ஐந்து விகாரங்களையும் விரட்டியடிக்க வேண்டும். இந்தத் தீய ஆவிகளே அனைத்து உண்மையையும் அழித்து விட்டன. இந்தத் தீய ஆவிகள் நிச்சயமாக ஒவ்வொரு மனிதரிலும் உள்ளன. அவை தூய்மையின்மையின் மூலம் பிறக்கின்றன. அங்கே, தூய்மையின்மை இருக்க மாட்டாது. இராவணனும் இருக்க மாட்டான். இராவணன் யார் என்பதைக் கூட அவர்கள் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் பின்னர் இராவணன் இருக்காத வகையில், இராவணனை வெற்றி கொள்கின்றீர்கள். இப்பொழுது, முயற்சி செய்யுங்கள்! தந்தை வந்து விட்டதால், நீங்கள் நிச்சயமாகத் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறவேண்டும். நீங்கள் எத்தனை தடவைகள் தேவர்கள் ஆகியுள்ளீர்கள் என்பதையும் எத்தனை தடவைகள் அசுரர்கள் ஆகியுள்ளீர்கள் என்பதையும் உங்களால் கணக்கிட முடியாது. நீங்கள் எண்ணற்ற தடவைகள் அவ்வாறு ஆகியுள்ளீர்கள். அச்சா. குழந்தைகளே, மௌனமாக இருந்தால் நீங்கள் ஒருபோதும் கோபமடைய மாட்டீர்கள். தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ள கற்பித்தல்களை நீங்கள் பயிற்சியில் இடவேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களிடம் வினவுங்கள்: எனக்குள் தீய ஆவி ஏதேனும் உள்ளதா? எனது கண்கள் குற்றமுடையவை ஆகுகின்றனவா? நான் மிகவும் சத்தமிட்டுப் பேசுகின்ற சம்ஸ்காரத்தினால், அமைதியின்மையைப் பரப்புகின்றேனா? பற்று அல்லது பேராசை என்ற விகாரங்கள் என்னைத் தொந்தரவு செய்கின்றனவா?

2. எந்தச் சரீரதாரி மீதும் பற்று கொண்டிருக்காதீர்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதன் மூலம் உங்கள் சரீரம் உட்பட, அனைத்தையும் மறந்து, உங்களை ஆன்மீக சக்தியினால் நிரப்பிக் கொள்ளுங்கள். அந்தத் தீய ஆவிகளை நீங்கள் ஒருமுறை விரட்டியடித்து விட்டால், அவற்றிலிருந்து அரைக் கல்பத்திற்கு விடுதலை அடைந்தவர்கள் ஆகுகிறீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சரியான வழிமுறையைப் பயன்படுத்துவதாலும், இறை நியதிகளைப் புரிந்தகொள்வதாலும், முதற் பிரிவிற்கான உரிமையைக் கொண்டிருந்து, வெற்றி அடைவீர்களாக.

ஓர் அடியைத் தைரியமாக எடுத்து வைப்பதால், நீங்கள் பல மில்லியன் கணக்கான அடிகள் உதவியைப் பெறுவீர்கள். நாடகத்தில் இவ்வழிமுறை ஒரு நியதியாக நிச்சயிக்கப்;பட்டுள்ளது. நாடகத்தில் இவ்வழிமுறை ஒரு நியதியாக நிச்சயிக்கப்;படாதிருந்தால், அனைவரும் உலகின் முதல் அரசராகி விடுவார்கள். இவ் வழிமுறையினாலேயே வரிசைக்கிரமமாக இருக்கின்ற நியதி உள்ளது. உங்களுக்கு எவ்வளவு தைரியம் உள்ளது என்பதற்கு அமையவே, உங்கள் ஒவ்வொருவராலும் உதவியைப் பெற முடியும். நீங்கள் அர்ப்பணித்தவராகவோ அல்லது குடும்பத்தில் ஒருவராகவோ இருந்தாலும், உங்களுக்குச் சமமான உரிமைகளே உள்ளன, நீங்கள் சரியான வழிமுறையப் பயன்படுத்துவதால், வெற்றி அடைகிறீர்கள். இந்த இறை நியதியைப் புரிந்தகொண்டு, கவனயீனம் எனும் விளையாட்டுக்களை முடித்து விடுங்கள். அப்போதே நீங்கள் முதற் பிரிவிற்கான உரிமையைப் பெறுவீர்கள்.

சுலோகம்:
உங்கள் எண்ணங்கள் எனும் பொக்கிஷத்தின் ரீதியில் ஒரு சிக்கன அவதாரம் ஆகுங்கள்.