29.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் இலக்கை அடைந்துள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து படைப்பவரையும் படைப்பையும் பற்றி அறிய வந்துள்ளீர்கள். அதனால், உங்களுக்குச் சந்தோஷத்தில் புல்லரிக்க வேண்டும்.

கேள்வி:
இந்த நேரத்தில் தந்தை குழந்தைகளாகிய உங்களை ஏன் அலங்கரிக்கின்றார்?

பதில்:
நீங்கள் இப்பொழுது முழுமையாக அலங்கரிக்கப்பட்டு விஷ்ணு தாமத்திற்குச் (உங்களின் புகுந்த வீட்டுக்கு) செல்ல இருக்கின்றீர்கள். இந்த ஞானத்தால் அலங்கரிக்கப்பட்ட பின்னர் நீங்கள் உலகச் சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். உங்களைப் பெற்றோரின் வீட்டிலிருந்து, புகுந்த வீட்டிற்கு அனுப்புவதற்காக பாபா, ஆசிரியராக இருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார்.

பாடல்:
இறுதியில் நாங்கள் காத்திருந்த அந்த நாளும் வந்துவிட்டது!

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். நீங்கள் அரைக் கல்பமாக நினைவுசெய்து கொண்டிருந்த அன்பிற்கினியவரைக் கடைசியில் கண்டுகொண்டீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அரைக் கல்பமாகப் பக்தி செய்தீர்கள் என்பதை இந்த உலகிலுள்ள எவருமே அறிய மாட்டார்கள். அவர்கள் அன்பிற்கினியவரான தந்தையை அழைக்கின்றார்கள். நாங்கள் அவரது காதலர்கள், அவர் எமது அன்பிற்கினியவர். இதையும் எவருமே அறிய மாட்டார்கள். தந்தை கூறுகின்றார்: இராவணன் அனைவரது புத்தியையும் முற்றிலும் சீரழித்து விட்டான். இது குறிப்பாகப் பாரத மக்களுக்கே பொருந்துகின்றது. நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்பதை மறந்து விட்டீர்கள். ஆகையினால் உங்கள் புத்தி சீரழிந்து விட்டது. ஒருவரது சொந்தத் தர்மத்தை மறப்பது சீரழிந்த புத்தியின் அடையாளமாகும். பாரத மக்களாகிய நாங்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தோம் என நீங்கள் மாத்திரமே இப்பொழுது அறிவீர்கள். இந்தப் பாரதம் சிறிது காலத்திற்கு முன்னரே சுவர்க்கமாக இருந்தது. அது 1250 வருடங்களுக்குச் சத்திய யுகமாகவும், பின்னர் அடுத்த 1250 வருடங்களுக்கு இராம இராச்சியமாகவும் இருந்தது. அந்த நேரத்தில் எல்லையற்ற சந்தோஷம் இருந்தது. இந்தச் சந்தோஷத்தை நினைவுசெய்யும் பொழுது, உங்களுக்குப் புல்லரிக்க வேண்டும். சத்திய, திரேதா யுகங்கள் கடந்து விட்டன. சத்திய யுகத்திற்கான கால எல்லை என்ன? எவருமே இதை அறிய மாட்டார்கள். எவ்வாறு அது நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பது சாத்தியம்? மாயை உங்களது புத்தியை மிகவும் சீரழித்து விட்டாள் எனத் தந்தை இப்பொழுது வந்து விளங்கப்படுத்துகின்றார். உலகிலுள்ள எவருமே தங்களைச் சீரழிந்த புத்தியைக் கொண்டவர்களாகக் கருதுவதில்லை. நீங்கள் நேற்று சீரழிந்த புத்தியைக் கொண்டவர்களாக இருந்தீர்கள் என அறிவீர்கள். இப்பொழுது படைப்பவரை இனங்கண்டு கொள்வதற்கும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் புரிந்துகொள்வதற்கும் தேவையான விவேகத்தை பாபா உங்களுக்குக் கொடுத்துள்ளார். நேற்று இதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. இன்று நாங்கள் இதை அறிந்துள்ளோம். எந்தளவிற்கு நீங்கள் அறிந்து கொள்கின்றீர்களோ, அந்தளவிற்கு சந்தோஷப் புல்லரிப்பைக் கொண்டிருப்பீர்கள். நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை எங்களின் இலக்கை அடைந்துள்ளோம். தந்தை உண்மையில் எங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுத்தார். பின்னர் நாங்கள் அதைத் தொலைத்து விட்டோம். நாங்கள் இப்பொழுது தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டோம். சத்தியயுகம் தூய்மை அற்றதாகக் கருதப்படுவதில்லை. அது தூய உலகம். மக்கள் கூறுகின்றார்கள்: ஓ தூய்மை ஆக்குபவரே, வாருங்கள்! இராவண இராச்சியத்திலே எவருமே தூய்மையாகவோ அல்லது மேன்மையாகவோ இருக்க முடியாது. நீங்கள் இப்பொழுது அதிமேலான தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். ஆகவே நீங்களும் மேன்மையானவர்கள் ஆகிவிட்டீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையை அறிவீர்கள், ஆனால் அதுவும் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமானது. அதிகாலை வேளையில் எழுந்திருந்து உங்களது இதயத்திடம் இதைக் கேளுங்கள். அமிர்த வேளைக்கான அதிகாலை நேரமானது அமர்ந்திருந்து இந்த விடயங்களைக் கடைவதற்கு மிகவும் நல்ல நேரமாகும். பாபா எங்களுடைய தந்தையும் ஆசிரியரும் ஆவார். ஓ தந்தையான கடவுளே! ஓ பரமாத்மாவான பரமதந்தையே! என மக்கள் கூறுகின்றார்கள். அவர்கள் ‘ஓ கடவுளே!’ என்று நினைவுசெய்து அழைத்த ஒருவரை நீங்கள் இப்பொழுது கண்டுகொண்டீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களுடைய எல்லையற்ற ஆஸ்தியைக் கோருகின்றோம். அவர்கள் உங்களுடைய பௌதீகத் தந்தையர். இவர் எல்லையற்ற தந்தை. உங்கள் பௌதீகத் தந்தையரும் அந்த எல்லையற்ற தந்தையையே நினைவு செய்கின்றனர். ஆகவே அவர் தந்தையர்களுக்கு எல்லாம் தந்தையும் கணவர்களுக்கு எல்லாம் கணவரும் ஆவார். பாரத மக்கள் இதைக் கூறுகின்றனர், ஏனெனில் நான் இப்பொழுது தந்தையர்களுக்கு எல்லாம் தந்தையாகவும் கணவர்களுக்கு எல்லாம் கணவராகவும் ஆகியுள்ளேன். நான் இப்பொழுது உங்கள் தந்தை, நீங்கள் எனது குழந்தைகளாகி இருக்கின்றீர்கள். நீங்கள் தொடர்ந்தும் ‘பாபா! பாபா!’ எனக் கூறுகின்றீர்கள். நான் இப்பொழுது மீண்டும் ஒருமுறை உங்களை உங்களுடைய புகுந்த வீடாகிய, விஷ்ணுதாமத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றேன். இது உங்களுடைய தந்தையின் வீடு, பின்னர் நீங்கள் புகுந்த வீட்டிற்குச் செல்வீர்கள். நீங்கள் மிக அழகாக அலங்கரிக்கப்படுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது உங்களுடைய தந்தையுடன் வீட்டில் இருக்கின்றீர்கள். நீங்கள் கற்பிக்கப்படுகின்றீர்கள். இந்த ஞானத்தால் அலங்கரிக்கப்பட்ட பின்னர் நீங்கள் உலகச் சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவதற்காக இங்கே வந்திருக்கின்றீர்கள். அது சத்தியயுகமாக இருந்தபொழுது பாரத மக்களாகிய நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது உலகின் அதிபதிகள் எனக் கூறமாட்டீர்கள். தற்பொழுது பாரதத்தின் அதிபதிகள் கலியுகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நீங்கள் சங்கமயுகத்திற்குச் சொந்தமானவர்கள் என்றும் அறிவீர்கள். பின்னர் சத்தியயுகத்தில் நீங்கள் முழு உலகினதும் அதிபதிகள் ஆகுவீர்கள். இந்த விடயங்கள் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் பிரவேசிக்க வேண்டும். உலக இராச்சியத்தை உங்களுக்குக் கொடுக்கின்றவர் இப்பொழுது வந்துள்ளார் என நீங்கள் அறிவீர்கள். அவர் இப்பொழுது இந்தச் சங்கம யுகத்தில் வந்துள்ளார். தந்தையைத் தவிர, வேறு எந்த மனிதரையும் ஞானத்தை அருள்பவர் என அழைக்க முடியாது. ஏனெனில் தந்தையிடமே முழு உலகத்திற்கும் சற்கதி அருள்கின்ற இந்த ஞானம் உள்ளது. இயற்கை உட்பட, அனைத்துக்குமே சற்கதி வழங்கப்படுகிறது. மனிதர்களிடம் சற்கதி பற்றிய இந்த ஞானம் எதுவும் இல்லை. இயற்கை உட்பட, முழு உலகமுமே இப்பொழுது தமோபிரதானாகி உள்ளது. இங்கு வசிப்பவர்கள் அனைவருமே தமோபிரதான் ஆகியுள்ளனர். புதிய உலகம் சத்தியயுகம் என அழைக்கப்படுகின்றது. தேவர்கள் அங்கே வசித்தார்கள், பின்னர் இராவணன் அவர்களைத் தோற்கடித்தான். தந்தை இப்பொழுது மீண்டும் ஒருமுறை வந்துள்ளார். நீங்கள் பாப்தாதாவிடம் செல்கின்றீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் கூறுகின்றீர்கள். தந்தை இந்தத் தாதாவின் மூலம் சுவர்க்க இராச்சியம் எனும் உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார்; தந்தை உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுப்பார்: அவர் வேறு எதைக் கொடுக்க முடியும்? குறைந்தபட்சம் இந்த விடயமாவது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் பிரவேசிக்க வேண்டும். எவ்வாறாயினும் மாயை இதை உங்களை மறக்கச் செய்கிறாள். அவள் உங்களைச் சதா சந்தோஷமாக இருக்க விடுவதில்லை. நன்றாகக் கற்பவர்களும் பிறருக்கு நன்றாகக் கற்பிப்பவர்களும் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். ‘ஒரு விநாடியில் ஜீவன்முக்தி’ நினைவு கூரப்படுகின்றது. நீங்கள் அவரை ஒருமுறை இனங்கண்டு கொள்ள வேண்டும். ஆத்மாக்கள் அனைவருக்கும் ஒரு தந்தையே இருக்கின்றார், ஆத்மாக்கள் அனைவரினதும் அந்தத் தந்தை இப்பொழுது வந்து விட்டார். எவ்வாறாயினும் அனைவராலும் அவரைச் சந்திக்க முடியாது; அது சாத்தியம் இல்லை. தந்தை உங்களுக்குக் கற்பிக்க வருகின்றார். நீங்கள் அனைவரும் ஆசிரியர்கள். இது கீதையின் பாடசாலை என அழைக்கப்படுகின்றது. இந்த வார்த்தைகள் பொதுவானவை. கிருஷ்ணர் கீதையை உரைத்ததாக அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும் இது கிருஷ்ணரின் பாடசாலையல்ல, கிருஷ்ணரின் ஆத்மா இங்கே கற்கின்றார். சத்தியயுகத்தில் எவராவது கீதைப் பாடசாலையில் கற்பார்களா அல்லது கற்பிப்பார்களா? கிருஷ்ணர் சத்தியயுகத்தில் இருக்கின்றார், அவர் 84 பிறவிகளை எடுக்கின்றார். ஒருவருடைய சரீரம் இன்னொருவருடையதைப் போன்று இருக்க முடியாது. நாடகத் திட்டத்திற்கு ஏற்ப ஒவ்வோர் ஆத்மாவிலும் 84 பிறவிகளின் பாகம் பதியப்பட்டுள்ளது. ஒரு விநாடி அடுத்த விநாடியைப் போன்று இருக்க முடியாது. நீங்கள் 5000 வருடங்களுக்கான உங்களுடைய பாகங்களை நடிக்கின்றீர்கள். ஒரு விநாடியில் நீங்கள் நடிக்கின்ற பாகம் போல் அடுத்த விநாடியில் நடிக்கின்ற பாகம் இருக்க முடியாது. இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய, மகத்தான விடயமாகும். இது ஒரு நாடகம். உங்களுடைய பாகங்கள் மறுபடியும் தொடர்ந்து இடம்பெறும். அனைத்துச் சமயநூல்களும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. பக்தி அரைக் கல்பத்திற்கு நீடிக்கிறது. பின்னர் நான் வந்து அனைவருக்கும் சற்கதி அருள்கின்றேன். 5000 வருடங்களுக்கு முன்னர், உங்களுக்குச் சற்கதி அருளப்பட்டு, நீங்கள் அங்கே ஆட்சிசெய்தீர்கள் என்பதை அறிவீர்கள். அங்கே துன்பம் என்ற கேள்வியே இல்லை. இங்கே, துன்பத்தைத் தவிர வேறெதுவும் இல்லை; இது துன்ப உலகம் என அழைக்கப்படுகின்றது. அமைதிதாமம், சந்தோஷதாமம், துன்பதாமம் போன்றவை இருக்கின்றன. நான் வந்து பாரத மக்களாகிய உங்களுக்குச் சந்தோஷ தாமத்துக்கான பாதையைக் காட்டுகின்றேன். நான் ஒவ்வொரு கல்பத்திலும் வரவேண்டியுள்ளது. நான் முன்னரும் பலதடவைகள் வந்துள்ளேன், நான் தொடர்ந்தும் வருவேன். இதற்கு எந்த ஒரு முடிவும் இல்லை. முழுச் சக்கரத்தையும் சுற்றி வருகின்ற பொழுது நீங்கள் துன்ப உலகில் பிரவேசிக்கின்றீர்கள், பின்னர் நான் வரவேண்டி உள்ளது. நீங்கள் இப்பொழுது உங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை நினைவு செய்கின்றீர்கள். தந்தையே படைப்பவர் என அழைக்கப்படுகின்றார். இதற்கு அவர் நாடகத்தைப் படைக்கின்றார் என்று அர்த்தமல்ல. படைப்பவர் என்றால், அவர் இந்த நேரத்தில் வந்து சத்தியயுகத்தை ஸ்தாபிக்கின்றார் என்று அர்த்தம். சத்தியயுகத்தில் இராச்சியத்தைக் கொண்டிருந்து பின்னர் இழந்தவர்களுக்கே நான் வந்து கற்பிக்கின்றேன். நான் குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுக்கின்றேன். நீங்கள் என்னுடைய குழந்தைகள். உங்களுக்குக் கற்பிப்பவர் ஒரு சாதுவோ அல்லது புனிதரோ இல்லை. அனைவரும் நினைவு செய்கின்ற ஒரேயொரு தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர்கள் நினைவு செய்கின்றவர் நிச்சயமாக இங்கே ஒருநேரத்தில் வருவார். அவர்கள் ஏன் அவரை நினைவு செய்கின்றார்கள் என எவரும் புரிந்து கொள்வதில்லை. எனவே தூய்மை ஆக்குகின்ற தந்தை நிச்சயமாக வருகின்றார். அவர்கள் கிறிஸ்துவுக்கு ‘மீண்டும் வாருங்கள்’ எனக் கூற மாட்டார்கள். அந்த ஆத்மா ஒன்றுகலந்து விட்டதாக மக்கள் நினைக்கிறார்கள், எனவே அவர் திரும்பி வருவது என்ற கேள்வி இல்லை. இருந்த பொழுதிலும் அவர்கள் தூய்மையாக்குபவரை நினைவு செய்கின்றார்கள். ஆத்மாக்களாகிய எங்கள் ஆஸ்தியை மீண்டும் ஒருமுறை கொடுங்கள். பாபா வந்துள்ளார் என்ற விழிப்புணர்வு இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. அவர் புதிய உலகை ஸ்தாபிக்க வருகின்றார். மற்றைய மத ஸ்தாபகர்கள் தங்களுடைய சொந்த நேரமாகிய ரஜோ, தமோ நேரத்தில் வருகின்றார்கள். நீங்கள் இப்பொழுது மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை மாத்திரமே உங்களுக்குக் கற்பித்து, உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். அவர் உலக அதிபதி ஆகுவதில்லை. ஆகவே அவர் தன்னலமற்ற சேவையாளர் என அழைக்கப்படுகின்றார். மக்கள் தாங்கள் செய்கின்றவற்றுக்கு எந்த வெகுமதியும் தேவையில்லை எனவும் தாங்கள் தன்னலமற்ற சேவை செய்வதாகவும் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் அது அவ்வாறில்லை. அவர்கள் கொண்டிருக்கும் சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப அவர்கள் அடுத்த பிறவியை எடுப்பார்கள். அவர்களுடைய கர்மத்தின் பலனை நிச்சயமாக அவர்கள் பெறுகின்றார்கள். சந்நியாசிகளும் இல்லறத்தவர்களுக்கு மறுபடியும் பிறந்து அவர்களுடைய சம்ஸ்காரத்திற்கு ஏற்ப துறவற தர்மத்துக்குச் செல்கின்றனர். அதேபோன்று பாபா போர்வீரர்களின் உதாரணத்தையும் கொடுக்கின்றார். ‘நீங்கள் போர்க்களத்தில் இறந்தால் சுவர்க்கத்துக்குச் செல்வீர்கள்’ எனக் கீதையில் கூறப்பட்டுள்ளதை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். எவ்வாறாயினும் சுவர்க்கத்திற்கு ஒரு காலம் இருக்க வேண்டும். அவர்கள் சுவர்க்கத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனக் கூறுகின்றார்கள். தந்தை என்ன கூறுகின்றார் எனவும் கீதையில் என்ன எழுதப்பட்டுள்ளது எனவும் இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நான் சர்வவியாபி எனக் கடவுளின் வாசகங்கள் கூறுவதாக அவர்கள் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் சர்வவியாபி என்று கூறுவதன் மூலம் எவ்வாறு என்னை நான் அவமரியாதை செய்யமுடியும்? நான் எப்படி பூனைகளிலும் நாய்களிலும் இருக்க முடியும்? நீங்கள் என்னை ஞானக்கடல் என அழைக்கின்றீர்கள். ஆகையினால் எவ்வாறு நான் என்னை அவ்வாறு அழைக்க முடியும்? அது அத்தகைய பொய்யாகும். எவரிடமும் இந்த ஞானம் எதுவும் இல்லை. சந்நியாசிகள் தூய்மையாக இருப்பதனால் மக்கள் அவர்களிடம் அதிகளவு மதிப்பு வைத்திருக்கின்றார்கள். சத்தியயுகத்தில் குருமார் எவரும் இருக்க மாட்டார்கள். இங்கே ஒரு மணப்பெண்ணுக்கு, அவளுடைய மணவாளனே குருவும் கடவுளும் எனவும், அவள் வேறெந்தக் குருவையும் ஏற்கக்கூடாது எனவும் கூறப்படுகின்றது. அந்த விளக்கம் பக்தி முதலில் சதோபிரதானாக இருந்தபொழுது கொடுக்கப்பட்டது. சத்தியயுகத்தில் எந்தக் குருமாரும் இல்லை. பக்தியின் ஆரம்ப காலத்தில் கூட எந்தக் குருமாரும் இருக்கவில்லை. கணவனையே அனைத்துமாகக் கருதியதால் அவர்கள் ஒரு குருவை ஏற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் இப்பொழுது இந்த விடயங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள். மக்கள் பிரம்மா குமாரர்கள், குமாரிகள் என்ற பெயரைக் கேட்டவுடனேயே பயப்படுகின்றார்கள். ஏனெனில் நாங்கள் அனைவரையும் சகோதரர்கள், சகோதரிகள் ஆக்குகின்றோம் என அவர்கள் நினைக்கின்றார்கள். ஓ! பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆகுவது நல்லதே. பிரம்மாகுமாரர்கள், குமாரிகள் மாத்திரமே சுவர்க்க ஆஸ்தியைக் கோருகின்றார்கள். நீங்கள் இப்பொழுது அதைக் கோருகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது பிரம்மா குமாரர்கள், குமாரிகள் ஆகியுள்ளீர்கள். கணவன், மனைவி இருவரும் தாங்கள் சகோதர, சகோதரிகள் எனக் கூறுகின்றார்கள். இவ்வாறே சரீர உணர்வும் விகாரங்களின் துர்நாற்றமும் அகற்றப்படுகின்றது. ஒரு தந்தையின் குழந்தைகளாகிய நாங்கள் சகோதரர்கள், சகோதரிகள் ஆதலால், எவ்வாறு விகாரத்தில் ஈடுபடமுடியும்? அது மகத்தான பாவம். இது உங்களைத் தூய்மையாக இருக்கச் செய்வதற்கான நாடகத்திலுள்ள யுக்தியாகும். சந்நியாசிகள் துறவறப் பாதைக்கு உரியவர்கள், ஆனால் நீங்கள் இல்லறப் பாதைக்கு உரியவர்கள். நீங்கள் இப்பொழுது இந்த அழுக்கான உலகின் பழக்க, வழக்கங்களைப் பின்பற்றுவதை நிறுத்தி இந்த உலகை மறக்க வேண்டும். நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தீர்கள். பின்னர் இராவணன் உங்களை மிக அழுக்கானவர்கள் ஆக்கிவிட்டான். எவ்வாறு தாங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்வது என்று மக்கள் வினவும் பொழுது நீங்கள் என்ன கூறவேண்டும் என பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். நீங்கள் 84 பிறவிகள் எடுத்தீர்கள் என உங்களுக்கு நாங்கள் கூறுவது நல்லதொன்றே ஆகும். அவர்கள் 84 பிறவிகள் எடுக்காதுவிடின், இங்கே இருக்க மாட்டார்கள். பின்னர் நீங்கள் அவர்கள் தேவ தர்மத்துக்கு உரியவர்கள் இல்லை எனவும் அவர்கள் சுவர்க்கத்திற்கு வரமுடியாது எனவும் புரிந்து கொள்ளலாம். அவர்கள் பிரஜைகளுக்கு இடையே தாழ்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். பிரஜைகளுக்கு இடையேயும் உயர்ந்த அந்தஸ்தும் தாழ்ந்த அந்தஸ்தும் உள்ளன. இந்த விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. கடவுள் வந்து இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணர் வைகுந்தத்தின், சுவர்க்கத்தின் அதிபதியாக இருந்தார். தந்தையே அந்த வைகுந்தத்தை ஸ்தாபிப்பவர். தந்தை கீதையைப் பேசுகின்றார், அதன் மூலம் நாங்கள் ஓர் அந்தஸ்தை அடைகின்றோம். அந்த நேரத்தில் கற்பதற்கோ அல்லது கற்பிப்பதற்கோ தேவை இருக்காது. நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைக் கற்று ஓர் அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். பின்னர் நீங்கள் இந்த கீதையின் ஞானத்தை அங்கே கற்க மாட்டீர்கள், ஏனெனில் நீங்கள் சற்கதி பெற்றிருப்பீர்கள். இப்பொழுது அதிகளவு முயற்சி செய்தால் அங்கே நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்த அதேயளவு முயற்சியையே சரியாகத் தொடர்ந்தும் செய்வீர்கள். நீங்கள் அனைத்தையும் பற்றற்ற முறையில் அவதானிக்க வேண்டும். உங்களுக்குக் கற்பித்த பிராமண ஆசிரியரை அவதானித்து அவரிலும் திறமைசாலியாக நீங்கள் ஆகவேண்டும். பெரிய இடைவெளி இருக்கின்றது. நீங்கள் அதிமேலானவராக ஆகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். பிரதான விடயம் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவதாகும். இந்த விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். உங்கள் குடும்பத்தினருடன் வீட்டிலிருந்து கொண்டே தந்தையை நினைவு செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். இங்கே அனைவரும் தூய்மை அற்றவர்கள். துன்பத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அது சந்தோஷ இராச்சியமாக எப்பொழுது இருந்தது என எவருமே அறியார். துன்ப நேரத்தில் அவர்கள் அழைக்கின்றார்கள்: ஓ கடவுளே! ஓ இராமா ஏன் நீங்கள் எங்களுக்கு இந்தத் துன்பத்தைக் கொடுத்தீர்கள்? எவ்வாறாயினும் கடவுள் எவருக்கும் துன்பம் கொடுப்பதில்லை. இராவணனே துன்பத்தைக் கொடுக்கின்றான். உங்களுடைய இராச்சியத்தில் வேறு எந்த மதங்களும் இருக்கமாட்டாது என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். மற்றைய அனைத்து மதங்களும் பின்னரே வருகின்றன. நீங்கள் எங்கே சென்றாலும் இந்தக் கல்வியை உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். நீங்கள் ‘மன்மனாபவ’ என்ற இலக்கைப் பெற்றுள்ளீர்கள்; தந்தையை நினைவுசெய்யுங்கள். நாங்கள் தந்தையிடம் இருந்து சுவர்க்க ஆஸ்தியைக் கோருகின்றோம். இந்தளவாவது உங்களால் நினைவுசெய்ய முடியாதா? இந்த நினைவு உறுதியாக இருக்க வேண்டும், ஏனெனில் உங்களுடைய இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்கிற்கு இட்டுச் செல்லும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அதிகாலை அமிர்தவேளையில் எழுந்திருந்து, எவ்வாறு பாபா எங்களின் தந்தையாகவும் ஆசிரியராகவும் இருக்கின்றார் எனச் சிந்தியுங்கள். பாபா இப்பொழுது எங்களை ஞான இரத்தினங்களால் அலங்கரிக்க வந்துள்ளார். அவர் தந்தையர் அனைவருக்கும் தந்தையாகவும் கணவன்மார் அனைவருக்கும் கணவராகவும் இருக்கின்றார். இவ்வாறான எண்ணங்களைக் கொண்டிருந்து, எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்யுங்கள்.

2. ஒவ்வொருவரின் முயற்சியையும் பற்றற்ற பார்வையாளராக அவதானியுங்கள். உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்காக முயற்சி செய்வதற்கு இன்னமும் இடைவெளி இருக்கின்றது. ஆகையினால் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக மாறுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மகா பாக்கியசாலி ஆகி, விகாரம் அற்றிருக்கும் சக்தியால் சூட்சும வதனத்தையும் மூன்று உலகங்களையும் அனுபவம் செய்வீர்களாக.

புத்தியின் யோகம் முற்றிலும் தெளிவாக இருப்பதுடன் விகாரம் அற்றிருக்கும் சக்தியைக் கொண்ட பாக்கியசாலிக் குழந்தைகளால் இலகுவாக மூன்று உலகங்களுக்கும் பயணம் செய்ய முடியும். உங்களின் எண்ணங்கள் சூட்சும வதனத்தை அடையச் செய்வதற்கு, உங்களிடம் சகல உறவுமுறைகளின் சாரத்தின் தெளிந்த நினைவு இருக்க வேண்டும். இதுவே அதி சக்திவாய்ந்த வயர் ஆகும். இதில் மாயையால் இடையூறு செய்ய முடியாது. எனவே, சூட்சும வதனத்தின் கோலாகலத்தை அனுபவம் செய்வதற்கு உங்களை விகாரம் அற்றிருக்கும் சக்தியால் நிரப்புங்கள்.

சுலோகம்:
எந்தவொரு நபர், பொருள் அல்லது பௌதீகமான வசதிகளால் கவரப்படுதல் என்றால் உங்களின் சகபாடியான தந்தையை உங்களின் மனதில் இருந்து ரத்துச் செய்தல் என்று அர்த்தம்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

தூய்மையே சங்கமயுக பிராமணர்களின் மேன்மையான வாழ்க்கையின் மகத்துவம் ஆகும். தூய்மையே பிராமண வாழ்க்கையின் மேன்மையான அலங்காரம் ஆகும். எப்படி பௌதீகமான வாழ்க்கைக்கு மூச்சு அவசியமோ - உங்களால் மூச்சு விட முடியாவிட்டால், உயிர்வாழ முடியாது - அதேபோல், பிராமண வாழ்க்கையின் மூச்சு தூய்மை ஆகும். உங்களின் 21 பிறவிகளுக்கான வெகுமதியின் அடிப்படை, அதாவது, அத்திவாரம் தூய்மையே ஆகும்.