30.01.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்தப் பழைய உலகில் எந்தவிதமான சாரமும் இல்லை. இதனாலேயே, அதன் மீது உங்கள் இதயம் பற்று வைப்பதற்கு நீங்கள் அனுமதிக்கக் கூடாது. தந்தையை நினைவு செய்ய நீங்கள் மறந்தால், உங்களுக்குத் தண்டனை கிடைக்கும்.
கேள்வி:
தந்தையின் பிரதானமான வழிகாட்டல்களில் ஒன்றிற்கு, நீங்கள் ஏன் கீழ்ப்படிவதில்லை? அந்த வழிகாட்டல் என்ன?பதில்:
தந்தையின் வழிகாட்டல்: எவரிடமிருந்தும் என்றுமே தனிப்பட்ட சேவையை ஏற்காதீர்கள், ஏனெனில் நீங்களே சேவகர்கள். எவ்வாறாயினும், சரீர உணர்வினால் உங்களிற் சிலர் தந்தை கொடுக்கும் வழிகாட்டல்களை மீறுகின்றீர்கள். பாபா கூறுகின்றார்: நீங்கள் அந்த சந்தோஷத்தை இங்கே ஏற்பீர்களாயின், அங்கே உங்கள் சந்தோஷம் குறைக்கப்படும். குழந்தைகளாகிய உங்களிற் பலர் சுதந்திரமாக இருக்க விரும்புவதாகக் கூறுகின்றீர்கள், ஆனால் உண்மையில் நீங்கள் அனைவரும் தந்தையில் தங்கி இருக்கின்றீர்கள்.பாடல்:
எனது இதயத்தின் ஆதாரம் துண்டிக்கப்படக் கூடாது.ஓம் சாந்தி.
கடவுள் சிவன் தனது சாலிகிராம்களுடன் பேசுகின்றார்: மனிதர்கள் அனைவரும் சிவனையும் சாலிகிராம்களையும் அறிவார்கள். இருவரும் அசரீரியானவர்கள். கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பேசுகின்றார் என நீங்கள் இப்பொழுது கூறுவதில்லை. ஒரேயொரு கடவுளே இருப்பதால், கடவுள் சிவன் யாருடன் பேசுகின்றார்? ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுடனேயே. குழந்தைகளாகிய நீங்கள் அந்தத் தந்தையுடன் மாத்திரமே ஒரு தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும் எனத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். சிவபாபா மாத்திரமே தூய்மை ஆக்குபவரும், ஞானக்கடலும், சுவர்க்க ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பவரும் என்பதால், அவர் ஒருவரையே நீங்கள் நினைவு செய்ய வேண்டும். பிரம்மா அவரது மகா பாக்கியசாலியான இரதம் ஆவார். அவர் இந்த இரதத்தினூடாக உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பவர் பிரம்மா அல்ல. அவரும் ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றார். ஆதலால் குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். உதாரணமாக, இரதத்திற்கு ஏதாவது சிரமம் இருந்தாலோ அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் நீங்கள் முரளியைப் பெற்றுக் கொள்ளாமல் விட்டாலோ குழந்தைகளாகிய உங்கள் கவனம் சிவபாபா மீதே செல்கின்றது. அவருக்கு என்றுமே நோய் வருவதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவில் இந்த ஞானம் கொடுக்கப்படுகின்றது, அதனை உங்களால் பிறருக்கு விளங்கப்படுத்த முடியும். சில குழந்தைகள் கண்காட்சிகளில் அதிகளவு விளங்கப்படுத்துகின்றார்கள். குழந்தைகளாகிய உங்களிடம் இந்த ஞானம் முழுவதும் உள்ளது. படங்களில் காட்டப்பட்டுள்ள ஞானம் உங்கள் ஒவ்வொருவரின் புத்தியிலும் உள்ளது. எதுவும் குழந்தைகளாகிய உங்களை நிறுத்தக் கூடாது. தபால் சேவை இல்லாவிட்டால் அல்லது வேலை நிறுத்தம் இடம்பெற்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? எவ்வாறாயினும் குழந்தைகளாகிய உங்களிடம் ஞானம் உள்ளது. சத்தியயுகம் இருந்தது என்றும், இது இப்பொழுது பழைய உலகமாகிய கலியுகம் எனவும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இந்தப் பழைய உலகில், எந்தவித சாரமும் இல்லை எனப் பாடலிலும் நீங்கள் பாடுகின்றீர்கள். அதன் மீது உங்கள் இதயம் பற்று வைக்க அனுமதிக்காதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தண்டனையை அனுபவிக்க நேரிடும். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதனால் உங்கள் தண்டனையைக் குறைத்துக் கொள்ள முடியும். தந்தையுடனான உங்கள் நினைவு துண்டிக்கப்படுவதனால், நீங்கள் தண்டனையை அனுபவம் செய்து, பழைய உலகிற்கே திரும்பிச் செல்கின்றீர்கள் என்றிருக்கக் கூடாது, இவ்வாறாக விட்டுச் சென்ற பலர் உள்ளனர். அவர்கள் தந்தையை நினைவு செய்வதும் இல்லை. அவர்களுடைய இதயம் இன்னமும் பழைய உலகின் மீதே பற்றுக் கொண்டுள்ளது. இப்போது, இவ் உலகம் மிகவும் தீயதாகும். நீங்கள் யார் மீதாவது பற்று வைத்திருந்தால், அதிகளவு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைச் செவிமடுக்க வேண்டும். நீங்கள் பக்திமார்க்கத்துப் பாடல்களைச் செவிமடுக்கக் கூடாது. நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள். இந்தச் சங்கம யுகத்திலேயே நீங்கள் ஞானக்கடலான தந்தையிடமிருந்து ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அவர் ஒரேயொருவரே ஞானக்கடல் என்பதை உலகிலுள்ள வேறு எவரும் அறியமாட்டார்கள். அவர் மனிதர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கும் போதே அவர்கள் சத்கதியைப் பெறுகிறார்கள். அந்த ஒரேயொருவரே சத்கதியை அருள்பவர் என்பதால் நீங்கள் அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். மாயை எவரையும் விட்டுவைக்க மாட்டாள். நீங்கள் சரீர உணர்விற்கு வருவதானாலேயே, ஏதாவது ஒரு தவறைச் செய்கின்றீர்கள். உங்களிற் சிலர் காமத்தினால் அரைவாசி ஆதிக்கத்திற்கும், சிலர் கோபத்தின் ஆதிக்கத்திற்கும் உள்ளாகுகின்றீர்கள். மனதில் பல புயல்கள் எழுகின்றன. நீங்கள் எவரையாவது நேசிப்பதனால், இதையும் அதையும் செய்ய விரும்புகின்றீர்கள். நீங்கள் உங்கள் இதயத்தை எவரது சரீரத்தின் மீதும் பற்று வைக்க அனுமதிக்காதீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். அப்பொழுது உங்கள் சரீர உணர்வுகள் அனைத்தும் முடிவடைந்து விடும். இல்லாவிடில் நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களை மீறியவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகும் போதே அதிகளவு நட்டம் ஏற்படுகின்றது. ஆதலால் உங்கள் சொந்த சரீரம் உட்பட அனைத்தையும் மறந்து விடுங்கள். தந்தையையும் வீட்டையும் நினைவு செய்யுங்கள். தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: உங்கள் சரீரங்களினூடாகச் செயலாற்றும் போதும், என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் எரிக்கப்படும். இந்தப் பாதை மிகவும் எளிமையானது. நீங்கள் தொடர்ந்தும் தவறுகள் செய்வதை பாபாவும் அறிவார். எவ்வாறாயினும் நீங்கள் தொடர்ந்தும் உங்கள் தவறுகளினால் சிக்கிக் கொள்வதாக இருக்கக்கூடாது. நீங்கள் ஒரு பிழையைச் செய்தால், அதனை மீண்டும் செய்யக் கூடாது. உங்கள் காதைத் திருகி உங்களுக்கே கூறுங்கள்: நான் இந்தத் தவறை மீண்டும் செய்யமாட்டேன். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்தால், உங்களுக்கு நீங்களே இழப்பை ஏற்படுத்துகின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் தவறுகளினாலேயே நீங்கள் தாழ்வு நிலையை அடைகின்றீர்கள். அத்தகையதோர் உயர்ந்த ஏணியில் இருந்து நீங்கள் கீழிறங்கி வந்ததால், இப்போது நீங்கள் என்னவாக ஆகியுள்ளீர்கள்? முன்னர் உங்களுக்கு இந்த ஞானம் இருக்கவில்லை. நீங்கள் அனைவரும் இப்பொழுது நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக இந்த ஞானத்தினால் புத்திசாலிகள் ஆகியுள்ளீர்கள். இயன்றவரை அகநோக்கில் நிலைத்திருங்கள். உங்கள் வாயை மூடி வைத்திருங்கள்! இந்த ஞானத்தால் புத்திசாலி ஆனவர்கள் தங்கள் இதயத்தின் பற்றை என்றுமே பழைய உலகின்மீது வைக்க மாட்டார்கள். இராவண இராச்சியத்தின் விநாசத்தை அவர்கள் கொண்டு வர வேண்டும் என்பதை அவர்களின் புத்தி அறியும். இந்தச் சரீரம் பழையது. அது இராவண சமுதாயத்துக்கு உரியது. நாங்கள் ஏன் இராவண சமுதாயத்தை நினைவு செய்ய வேண்டும்? நாங்கள் ஒரேயொரு இராமரை(கடவுளை) மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். நாங்கள் உண்மையிலேயே தந்தைக்கு நம்பிக்கைக்கு உரியவர்கள் ஆக வேண்டும். தந்தை கூறுகின்றார்: தொடர்ந்தும் என்னை நினைவு செய்யுங்கள், அப்போது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் தந்தைக்கு நம்பிக்கை உரியவர்கள் ஆக வேண்டும். அதாவது கடவுளுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். பக்தர்கள் கடவுளை மாத்திரமே நினைவு செய்து பிரார்த்திக்கின்றார்கள்: கடவுளே வந்து எங்களுக்கு அமைதி, சந்தோஷம் என்ற எங்கள் ஆஸ்தியைத் கொடுங்கள். பக்தி மார்க்கத்தில் பக்தர்கள் தங்களைத் தியாகம் செய்கின்றார்கள். இங்கே உங்களைத் தியாகம் செய்வதென்ற கேள்விக்கே இடமில்லை. நாங்கள் மரணித்து வாழ்கின்றோம். அதாவது, நாங்கள் எங்களைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றோம். நாங்கள் அவரிடம் இருந்து எங்கள் ஆஸ்தியைக் கோருவதால், நாங்கள் வாழும் காலம் வரை தந்தைக்கு உரியவராக இருக்க வேண்டும். நாங்கள் அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். உயிர் வாழும் போது, தன்னைப் பலிகொடுப்பது என்பது உண்மையில் இந்நேரத்தையே குறிக்கின்றது. பக்தி மார்க்கத்தில் அவர்கள் தற்கொலை போன்றவற்றைச் செய்கின்றார்கள். இங்கே தற்கொலை செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையுடன் யோகம் செய்யுங்கள். சரீர உணர்வுடையவர்கள் ஆகாதீர்கள். நீங்கள் அமர்ந்திருந்தாலும் அல்லது உலாவித் திரிந்தாலும், தந்தையை நினைவு செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்;. நீங்கள் எவருமே இன்னமும் 100சதவீதம் சித்தி அடையவில்லை. நீங்கள் அனைவரும் தொடர்ந்தும் தளம்பல் அடைகின்றீர்கள். நீங்கள் செய்யும் தவறுகளை இட்டு உங்களை எச்சரிக்காவிட்டால், எவ்வாறு நீங்கள் தவறு செய்வதை நிறுத்தப் போகிறீர்கள்? மாயை எவரையும் விட்டு வைப்பதில்லை. பலர் கூறுகின்றார்கள்: பாபா நாங்கள் மாயையினால் தோற்கடிக்கப்பட்டோம். நாங்கள் முயற்சி செய்தோம், ஆனால் என்ன நடந்தது என்பதுதான் தெரியவில்லை. அத்தகைய பாரதூரமான ஒரு தவறை நாங்கள் எப்படிச் செய்தோம் எனத் தெரியவில்லை. இந்தத் தவறினால் தங்கள் பெயர் பிராமண குலத்தில் அவதூறு செய்யப்படும் என அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். அவர்கள் மாயையினால் உக்கிரமாகத் தாக்கப்படுவதால் அவர்களால் அதைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அவர்கள் சரீர உணர்வு உடையவர்களாக ஆகியதும், விவேகமற்றவர்கள் போல் ஆகுகின்றார்கள். விவேகமில்லாத போது அவதூறும் ஏற்படுகிறது. பின்னர் அவர்கள் ஆஸ்தியும் குறைக்கப்படுகின்றது. அத்தகைய தவறு செய்கின்ற பலர் இருக்கின்றார்கள். மாயை அவர்களைத் தோற்கடிக்கும் வண்ணம் பலமாக அறைகின்றாள். பின்னர் தமது கோபத்தினால் அவர்கள் மற்றவர்களை அறைகின்றார்கள் அல்லது தங்கள் சப்பாத்தால் அடிக்கின்றார்கள். பின்னர் அவர்கள் மனம் வருந்துகின்றார்கள். பாபா கூறுகின்றார்: இப்போது நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றீர்கள். நீங்கள் அதிகளவை இழந்து விட்டீர்கள். இராகுவின் கிரகணத்தின் சகுனம் உங்களின் மீது உள்ளது. தந்தை கூறுகின்றார்: இப்போது நீங்கள் உங்கள் விகாரங்களைத் தானம் செய்வீர்களேயாயின் நீங்கள் அந்தத் தீய சகுனங்களிலிருந்து விடுபட முடியும். இராகுவின் சகுனங்கள் உங்களின் மீது வந்துவிட்டால், அதற்குக் காலம் எடுக்கும். ஏணியில் ஒரு தடவை மேலே ஏறினால், கீழே இறங்குவது சிரமமாக இருக்கும். மது அருந்தும் பழக்கம் உடையவருக்கு அதனைக் கைவிடுவது சிரமமாக இருக்கும். உங்கள் முகத்தை அழுக்காக்குவதே உங்களிற் சிலர் செய்யும் மிகப் பெரிய தவறாகும். நீங்கள் பின்னர் சரீரத்தைத் தொடர்ந்தும் நினைவு செய்கின்றீர்கள். பின்னர் உங்களுக்குக் குழந்தைகள் பிறக்கும் போது, நீங்கள் அவர்களைத் தொடர்ந்தும் நினைவு செய்கின்றீர்கள். அப்போது உங்களால் என்ன ஞானத்தை மற்றவர்களுக்குக் வழங்க முடியும்? எவரும் நீங்கள் கூறுவதைச் செவிமடுக்க மாட்டார்கள். நாங்கள் இப்போது ஒரேயொருவரை மாத்திரம் நினைவு செய்து, ஏனையோரை மறக்க முயற்சி செய்கின்றோம். இதில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். நாள் முழுவதும் சிவபாபாவை நினைவு செய்வதே உங்கள் அக்கறையாக இருக்க வேண்டும். இந்த நாடகம் இப்போது ஒரு முடிவுக்கு வருகின்றது. நாங்கள் வீடு திரும்ப வேண்டும். எங்கள் சரீரங்கள் அழிக்கப்படவுள்ளன. நீங்கள் எந்தளவுக்குத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அதற்கேற்ப வேறு எவரையும் நினைவு செய்ய மாட்டீர்கள். அத்துடன் உங்களின் சரீர உணர்வும் அகற்றப்படும். இந்த இலக்கு மிகவும் உயர்ந்தது. தந்தையைத் தவிர வேறு எவர் மீதும் உங்கள் இதயத்தைப் பற்று வைக்க அனுமதிக்காதீர்கள். இல்லாவிட்டால், அந்த நபர் உங்கள் முன் தோன்றியவாறே இருப்பார். அவர் நிச்சயமாக உங்களைப் பழிவாங்குவார். எங்கள் இலக்கு மிகவும் உயர்ந்தது. இதனைப் பற்றிப் பேசுவது சுலபம். பல்லாயிரக்கணக்கானவரில் வெகு சிலரே மாலையின் மணி ஆகுகின்றார்கள். சிலர் ஒரு புலமைப் பரிசிலைப் பெறுகின்றார்கள். மிக நல்ல முயற்சி செய்தவர்கள், நிச்சயமாக ஓர் புலமைப் பரிசிலை பெறுவார்கள். ஒரு பற்றற்ற பார்வையாளராகி நீங்கள் எவ்வளவு சேவை செய்கிறீர்கள் எனப் பாருங்கள். உங்களில் பலர் வேலை செய்வதில் இருந்து விடுபட்டு, ஆன்மீக சேவையில் ஈடுபட விரும்புகின்றீர்கள். எனினும் பாபா ஒவ்வொருவருடைய நிலைமையையும் பார்க்கின்றார். நீங்கள் உறவினர்கள் யாருமில்லாத ஒரு தனி நபராயின், அது பரவாயில்லை. இருந்தாலும் பாபா கூறுகின்றார்: உங்கள் மற்றைய தொழிலுடன் இந்தச் சேவையையும் தொடர்ந்தும் செய்யுங்கள். உங்கள் தொழிலில் நீங்கள் சேவை செய்யக் கூடிய பலரைச் சந்திக்க நேரிடும். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்கள் மூலமாகவே அதிகளவு சேவை மேற்கொள்வதற்குத் தூண்டுகின்றார். அவர் சில குழந்தைகளில் பிரவேசித்தும் சேவை செய்கின்றார். அவர் சேவை செய்யவே வேண்டும். பொறுப்பு இருக்கும் ஒருவரால் எப்படித் தூங்க முடியும்? சிவபாபா சதா ஏற்றப்பட்ட தீபம் ஆவார். தந்தை கூறுகின்றார்: நான் இரவு பகலாகச் சேவை செய்கின்றேன். சரீரம் களைப்பு அடைந்தால் ஆத்மாவினால் என்ன செய்ய முடியும்? சரீரத்தினால் போதியளவு தொழிலைச் செய்ய முடியாதுள்ளது. தந்தையோ களைப்பில்லாதவர். ஏற்றிய தீபமாகிய அவரே உலகில் உள்ள அனைவரையும் விழிப்படையச் செய்கின்றார். அவரின் பாகம் அற்புதமானது. குழந்தைகளாகிய உங்களுக்குள் வெகு சிலரே அவரை அறிந்துள்ளீர்கள். தந்தையே மகா காலன் ஆவார். நீங்கள் அவருக்குக் கீழ்ப்படியாவிடின், தர்மராஜிடம் இருந்து தண்டனை அனுபவம் செய்ய நேரிடும். தந்தையின் பிரதான வழிகாட்டல்களில் ஒன்று: எவரிடமிருந்தும் தனிப்பட்ட சேவைகளைப் பெற்றுக் கொள்ளாதீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகுவதனால் தந்தையின் வழிகாட்டல்களை மீறுகின்றீர்கள். பாபா கூறுகின்றார்: நீங்களே சேவகர்கள். நீங்கள் இங்கே அந்தச் சந்தோஷத்தை ஏற்றுக் கொண்டால், அங்கே உங்கள் சந்தோஷம் குறைக்கப்பட்டு விடும். நீங்கள் அதனைப் பழக்கப்படுத்திக் கொண்டால், வேலைக்காரர்கள் இல்லாமல் அதனை உங்களால் செய்ய முடியாதிக்கும். பலர் கூறுகின்றார்கள்: நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். எனினும், தந்தை கூறுகின்றார்: தங்கியிருத்தல் நல்லதே. நீங்கள் அனைவரும் தந்தையில் தங்கியிருக்க வேண்டும். சுதந்திரமாக இருப்பதற்கு முயற்சிக்கும் போதே நீங்கள் வீழ்ந்து விடுகிறீர்கள். நீங்கள் அனைவரும் சிவபாபாவில் தங்கியிருக்கிறீர்கள். முழு உலகமும் அவரிலேயே தங்கியிருக்கிறது. இதனாலேயே அவர்கள் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! அவரிடமிருந்து நீங்கள் அமைதியையும் சந்தோஷத்தையும் பெறுகிறீர்கள். ஆனால் மக்களுக்கு இது புரிவதில்லை. நீங்கள் பக்தி மார்க்கத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். இரவு முடிவடையும் போதே தந்தை வருகின்றார். தந்தை வருவதில் ஒரு வினாடியேனும் வேறுபாடு இருப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: இந்த நாடகத்தை நான் அறிவேன். இந்த நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றி எவருக்குமே தெரியாது. சத்தியயுகத்தில் இந்த ஞானம் மறைந்து விடும். உங்களுக்கு இப்பொழுது படைப்பவரையும் படைப்பின் ஆரம்பம் மத்தி, இறுதியையும் தெரியும், இதுவே ஞானம் என அழைக்கப்படுகின்றது. ஏனைய அனைத்தும் பக்தியாகும். தந்தை ஞானம் நிறைந்தவர் எனப்படுகின்றார். இப்பொழுது அவரே எங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். எனினும் ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சிலர் சாதாரண பிரஜைகளாக அல்லது பணிப்பெண்களாகவும் வேலையாட்களாகவும் ஆகுகின்றார்கள். அவர்கள் சிறிதளவேனும் இந்த ஞானத்தைப் புரிந்து கொள்வதில்லை! இது ஓர் அதிசயமே. இந்த ஞானம் புரிந்து கொள்வதற்கு மிகவும் இலகுவானது. எங்கள் 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது ஒரு முடிவிற்கு வருகிறது. நீங்கள் உங்கள் வீட்டிற்கு வெகுவிரைவில் திரும்பிச் செல்ல வேண்டும். நாங்களே இந்த நாடகத்தின் பிரதான நடிகர்கள் என்பதால் எங்களுக்கு முழு நாடகத்தையும் தெரியும். நாடகம் முழுவதும் நாங்களே கதாநாயகன், கதாநாயகி பாகங்களை நடிக்கின்றோம். இது மிகவும் இலகுவானது. ஆனால், அது உங்கள் பாக்கியத்தில் இல்லையாயின் நீங்கள் என்ன முயற்சியைச் செய்வீர்கள்? இது இந்தக் கல்வியில் தொடர்ந்து நிகழ்கின்றது. உங்களிற் சிலர் இன்னமும் தோல்வி அடைகின்றீர்கள். இது அத்தகையதொரு மிகப் பெரிய பாடசாலையாகும். ஓர் இராச்சியம் உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் எந்தளவிற்குக் கற்கின்றீர்களோ, அந்தளவிற்கு என்ன அந்தஸ்தைக் கோருவீர்கள் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். உங்களிற் பலர் உள்ளனர். நீங்கள் அனைவரும் வாரிசுகள் ஆக முடியும் என்றில்லை. தூய்மையாகுவது மிகவும் சிரமமானது. தந்தை அனைத்தையும் மிக இலகுவாக உங்களுக்குப் புரிய வைக்கின்றார். இந்த நாடகம் ஒரு முடிவிற்கு வருகின்றது. தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலமாக, நீங்கள் முழுமையாகத் தூய்மையாக வேண்டும். அப்போது நீங்கள் முற்றிலும் தூய்மையான புதிய உலகிற்கு அதிபதிகள் ஆகுவீர்கள். எவ்வளவு அதிக நேரத்திற்கு நினைவில் இருக்க முடியுமோ, அவ்வளவு நேரத்திற்கு இருங்கள். இது உங்கள் பாக்கியத்தில் இல்லையாயின், தந்தையை நினைவு செய்வதற்குப் பதிலாக, நீங்கள் பிறரை நினைவு செய்வீர்கள். பிறர் மீது உங்கள் இதயத்தை இணைப்பதனால் நீங்கள் அதிகளவில் அழ நேரிடும். தந்தை கூறுகின்றார்: இந்தப் பழைய உலகில் பற்றை வைப்பதற்கு உங்கள் இதயத்தை அனுமதிக்காதீர்கள். இந்த உலகம் அழிக்கப்பட வேண்டும். வேறு யாருக்கும் இது தெரியாது. கலியுகம் நீண்ட காலத்திற்குத் தொடரும் என அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார்கள். கண்காட்சி போன்றவற்றில் நீங்கள் செய்யும் சேவை, பிரஜைகளை உருவாக்குவதற்கு ஒரு துரிதமான வழியாகும். சில அரசர்களும், அரசிகளும்கூட வெளிப்படுவார்கள். பலர் சேவை செய்வதில் மிகவும் ஆர்வம் உடையவர்களாக உள்ளார்கள். சிலர் பணக்காரர்களாகவும், சிலர் ஏழைகளாகவும் உள்ளார்கள். நீங்கள் உங்களைப் போன்று மற்றவர்களையும் ஆக்க வேண்டும். அதிலிருந்து நீங்களும் நன்மையைப் பெறுவீர்கள். நீங்கள் குருடருக்குக் கைத்தடி ஆக வேண்டும். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள் என அவர்களிடம் கூறுங்கள். விநாசம் உங்கள் முன்னால் உள்ளது. விநாச காலம் மிகவும் நெருங்கி வருவதை அவர்கள் பார்க்கும் போதே, அவர்கள் நீங்கள் கூறுவதைச் செவிமடுப்பார்கள். உங்கள் சேவையும் அதிகரிக்கும். “இது சரியானது” என அவர்கள் எண்ணுவார்கள். விநாசம் இடம் பெறவேண்டும் எனப் பிறருக்கு நீங்கள் தொடர்ந்தும் கூறுங்கள். கண்காட்சிகளிலும் திருவிழாக்களிலும் நீங்கள் செய்யும் சேவையும் அதிகரிக்கும். சிறந்ததொரு மண்டபத்தைத் தேர்ந்து எடுப்பதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு வாடகை கொடுப்பதற்குத் தயாராக உள்ளோம் என அவர்களிடம் கூறுங்கள். அவர்களிடம் கூறுங்கள்: உங்கள் பெயர் மென்மேலும் புகழப்படும். பலர் அத்தகைய மண்டபங்களை வைத்திருக்கின்றார்கள். முயற்சி செய்வதினால், உங்களால் மூன்று சதுர அடி நிலத்தைப் பெற முடியும். அது வரைக்கும் சிறு கண்காட்சிகளைத் தொடர்ந்தும் நடாத்துங்கள். நீங்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடும் போது, அதன் ஓசை எங்கும் பரவும். எழுதுங்கள்: சிவஜெயந்தி நாளை ஒரு பொது விடுமுறையாக்க வேண்டும். உண்மையில், அந்த ஒரேயொருவரின் பிறந்ததினமே கொண்டாடப்பட வேண்டும். அவரே தூய்மையாக்குபவர். உண்மையான முத்திரை திரிமூர்த்தியினதாகும். அதில் கூறப்படுகின்றது: சத்தியத்தின் மூலம் வெற்றி. இதுவே நீங்கள் வெற்றி பெறும் காலம் ஆகும். இவ்விடயங்களைப் பிறருக்கு நன்றாக விளங்கப்படுத்தக் கூடிய ஒருவர் உங்களுக்குத் தேவை. நிலையத்தில் இருக்கும் பிரதானமானவர், அனைவர் மீதும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த முத்திரையை உருவாக்கலாம். இது திரிமூர்த்தி சிவஜெயந்தி. சிவஜெயந்தி என்று மட்டும் நீங்கள் கூறும்போது மக்கள் எதனையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்களே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். நீங்கள் பலருக்கு நன்மை செய்யும் போது, நீங்களும் அத்தகையதோர் உயர்த்தியைப் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் சேவையிலிருந்து மிகப் பெரிய உயர்த்தியைப் பெறுவீர்கள். கண்காட்சிகளில் பெருமளவு சேவையை நிறைவேற்ற முடியும். பிரஜைகளையும் உருவாக்க வேண்டும். சேவையில் எந்தக் குழந்தைகள் கவனம் செலுத்துகிறார்கள் என பாபா தொடர்ந்தும் பார்க்கின்றார். அவர்களே பாபாவின் இதய சிம்மாசனத்தில் ஏறுவார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் ஏதாவது தவறு செய்தால், அப்போதே உங்கள் காதுகளைத் திருகிக் கொள்ளுங்கள். அதனால் மீண்டும் அதே தவறைச் செய்யாமல் இருப்பீர்கள். ஒருபோதும் சரீர உணர்வுடையவர் ஆகாதீர்கள். இந்த ஞானத்தில் ஒரு திறமைசாலியாகி அகநோக்கில் இருங்கள்.2. ஒரேயொரு தந்தையிடம் உண்மையான நம்பிக்கைக்கு உரியவராக இருங்கள். நீங்கள் வாழும் வரை உங்களையே அவரிடம் அர்ப்பணியுங்கள். வேறு எவரிடமும் உங்கள் இதயத்தைப் பற்று வைக்க அனுமதிக்காதீர்கள். விவேகமற்ற எதனையும் செய்யாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அன்பு சொரூபமாகி, எல்லா வேளையும் பிரிந்திருப்பதற்கு விடை கொடுப்பீர்களாக.அன்பு என்பது, நீங்கள் நேசிக்கின்ற ஒருவர் விரும்புவதையும் நேசிப்பதாகும். நீங்கள் நேசிக்கின்ற ஒரேயொருவரால் விரும்பப்படும் முறையில் உங்களின் நடக்கின்ற, உண்கின்ற, குடிக்கின்ற, வாழுகின்ற முறைகள் இருக்க வேண்டும். இதற்கு, உங்களுக்குள் என்ன எண்ணங்கள் தோன்றினாலும் எத்தகைய செயல்களை நீங்கள் செய்தாலும் அனைத்திற்கும் முதலில், அவை நீங்கள் அன்பு செலுத்தும் தந்தையால் விரும்பப்படுகின்றனவா என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். உண்மையான அன்பு கொண்டவர் ஆகுங்கள். நீங்கள் ஒரு சதா, இலகு யோகி ஆகுவீர்கள். உங்களின் அன்பான ரூபத்தை, சமமானவர் ஆகுகின்ற ரூபமாக மாற்றினால், நீங்கள் அமரராக இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். அத்துடன் எல்லா வேளையும் பிரிந்திருப்பதற்கு நீங்கள் விடை கொடுப்பீர்கள்.
சுலோகம்:
உங்களின் சுபாவம் இலகுவானதாகவும் உங்களின் முயற்சிகள் கவனம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
முழு மரமும் ஒரு விதையில் அமிழ்ந்திருப்பதைப் போல், உங்களின் முழு மரத்தின் விரிவாக்கமும் உங்களின் எண்ணங்கள் என்ற விதையில் அமிழ்ந்திருக்கட்டும். அப்போது மட்டுமே உங்களின் எண்ணங்களின் குழப்பம் முடிவடையும். தற்காலத்தில், சகல வகையான குழப்பங்களும் உலகில் அதிகரிக்கின்றன – அரசியலில் குழப்பம், பொருட்களின் பெறுமதியில் குழப்பம், பணத்தில் குழப்பம், கர்ம வேதனையில் குழப்பம், மதங்களில் குழப்பம். அந்தக் குழப்பத்தில் இருந்து உங்களையும் எல்லோரையும் பாதுகாத்துக் கொள்வதற்கு, உங்களின் மனதையும் புத்தியையும் ஒருமுகப்படுத்துவதைப் பயிற்சி செய்யுங்கள். அத்துடன் சகாஷ் கொடுக்கும் சேவையையும் தொடர்ந்து செய்யுங்கள்.