30.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது அமைதி தாமத்துக்கும், சந்தோஷ தாமத்துக்கும் செல்வதற்காக, இறை தாமத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். இது உங்களை அதிமேன்மையான மனிதர்களாக்கும் சத்தியத்தின் சகவாசமாகும்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு தந்தையை விடவும் மேன்மையானவர்களாகவும், அவரை விட எவ்விதத்திலும் குறைவற்றவர்களாகவும் ஆவீர்கள்?

பதில்:
பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, நான் உலக அதிபதி ஆகுவதில்லை. நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதுடன், உங்களைப் பிரம்மாந்தத்திற்கும் அதிபதிகள் ஆக்குகிறேன். அதிமேன்மையான தந்தையாகிய நான், குழந்தைகளாகிய உங்களுக்கு வணக்கம் கூறுகிறேன். இதனாலேயே நீங்கள் என்னை விட அதிமேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். அதிபதிகளாகிய உங்களுக்கு நான் வணக்கம் கூறுகிறேன். பின்னர் நீங்கள் உங்களை இவ்வாறு ஆக்கிய தந்தைக்கு வணக்கம் கூறுகிறீர்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா நமஸ்தே கூறுகின்றார். நீங்களோ “பாபா நமஸ்தே” எனப் பதிலாகக் கூறுவதும் இல்லை. பாபா உங்களைப் பிரமாந்தத்தின் அதிபதிகளாகவும் உலக அதிபதிகளாகவும் ஆக்குகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தந்தை பிரமாந்தத்திற்கு மாத்திரமே அதிபதி ஆகுகின்றார்; அவர் உலக அதிபதி ஆகுவதில்லை. அவர் குழந்தைகளாகிய உங்களைப் பிரமாந்தம், உலகம் இரண்டிற்கும் அதிபதிகளாக ஆக்குகின்றார். எனவே, யார் பெரியவர்? என என்னிடம் கூறுங்கள். குழந்தைகளாகிய நீங்களே பெரியவர்கள். இதனாலேயே குழந்தைகளாகிய நீங்கள் கூறுகின்றீர்கள்: நமஸ்தே. பாபா, நீங்களே எங்களைப் பிரமாந்தத்துக்கும், உலகிற்கும் அதிபதிகள் ஆக்குகின்றீர்கள். இதனாலேயே நாங்கள் உங்களுக்கு நமஸ்தே கூறுகின்றோம். முஸ்லிம்கள் கூறுகின்றார்கள்: அல்லாவுக்கு வணக்கங்கள். நம்பிக்கை உள்ள குழந்தைகளாகிய உங்களிடம் சந்தோஷமும் இருக்கும். நம்பிக்கை இல்லாத எவரும் இங்கு வருவதும் இல்லை. இங்கே வருபவர்கள் தாங்கள் ஒரு மனிதக் குருவிடம் வரவில்லை என்பதை அறிவார்கள்; அவர்கள் ஒரு மனிதத் தந்தையிடமோ, ஒரு மனித ஆசிரியரிடமோ அல்லது மனிதக் குருவிடமோ வரவில்லை. நீங்கள் ஆன்மீகத் தந்தையிடமும் ஆன்மீக ஆசிரியரிடமும் ஆன்மீகச் சற்குருவிடமும் வருகின்றீர்கள். எண்ணற்ற மனிதர்கள் உள்ளார்கள், ஆனால் அவர் ஒரேயொருவர் மாத்திரமே உள்ளார். முன்னர், எவருக்கும் அவருடைய அறிமுகம் இருக்கவில்லை. எவரும் படைப்பவரையோ அல்லது படைப்பையோ அறியார்கள் எனப் பக்தி மார்க்கத்துச் சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் அவரை அறியாததால், அநாதைகள் என அழைக்கப்படுகின்றார்கள். ஒரேயொரு அசரீரியானவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை என்பதை நன்கு கற்றவர்களால் புரிந்து கொள்ள முடிகின்றது. அவர் வந்து எங்கள் தந்தையாகவும் எங்கள் ஆசிரியராகவும் சற்குருவாகவும் ஆகுகிறார். கீதையில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயர் போற்றப்பட்டுள்ளது. கீதையே சமயநூல்கள் அனைத்தினதும் இரத்தினம்; அது சமயநூல்கள் அனைத்தினதும் தாய்; அதுவே அதிமேன்மையான சமயநூல் ஆகும். கீதையே தாயும் தந்தையும் எனக் கருதப்படுகின்றது. ஏனைய சமயநூல்கள் எவையும் தாயும் தந்தையும் என அழைக்கப்படுவதில்லை. ஸ்ரீமத் பகவத் கீதையே தாய் என நினைவு கூரப்படுகின்றது. கீதா ஞானமே கடவுளின் கமல உதடுகளில் இருந்து வெளிப்பட்டது. தந்தையே அதிமேன்மையானவர். ஆகவே, அதிமேன்மையான படைப்பவரினால் கீதை பேசப்பட்டுள்ளது என்பது உண்மை; ஏனைய சமயநூல்கள் அனைத்தும் அதன் படைப்பாகிய, அதன் இலைகள் ஆகும். ஒரு படைப்பிடம் இருந்து ஒருபொழுதும் ஆஸ்தியானது பெறப்படுவதில்லை. நீங்கள் அதைப் பெற்றால், அது தற்காலிகமானதே. மனிதர்கள் மனிதர்களுக்குக் கற்பிக்கின்ற, ஏனைய சமயநூல்கள் பல உள்ளன. அவற்றைக் கற்பதால், அவர்கள் ஒரு பிறவிக்கான தற்காலிகச் சந்தோஷத்தை மட்டுமே பெறுகிறார்கள். பல்வேறுபட்ட கல்விகள் அனைத்தும் மனிதர்களால் மனிதர்களுக்குத் தற்காலிகமாகவே கற்பிக்கப்படுகின்றன. அவர்கள் தற்காலிகச் சந்தோஷத்தை மட்டுமே பெறுகிறார்கள். பின்னர், மறுபிறவியில், அவர்கள் வேறொரு கல்வியைக் கற்க வேண்டும். இங்கே, ஒரேயொரு அசரீரியான தந்தையே உள்ளார், அவரிடமிருந்து நீங்கள் 21 பிறவிகளுக்கான ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். மனிதர்களால் உங்களுக்கு இதைக் கொடுக்க முடியாது. அவர்கள் உங்களை ஒரு சதப் பெறுமதியும் அற்றவர்கள் ஆக்குகிறார்கள், ஆனால் தந்தையோ உங்களை ஒரு பவுண்ட் பெறுமதியானவர்கள் ஆக்குகிறார். இப்பொழுது தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள். அவரைச் சர்வவியாபி என அழைத்ததால், அவர்கள் எந்த அர்த்தத்தையும் புரிந்து கொள்ளவில்லை. அனைவரிலும் பரமாத்மா இருந்தால், அது தந்தைத்துவம் என அழைக்கப்படும். அனைவருமே தந்தையாக இருந்தால் உங்களால் எப்படி ஓர் ஆஸ்தியைப் பெற முடியும்? யாரால், யாருடைய துன்பம் அகற்றப்படும்? தந்தை மட்டுமே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அளிப்பவர் என அழைக்கப்படுகிறார். அனைவரையும் தந்தை என அழைப்பதில் அர்த்தமில்லை. தந்தை இங்கே அமர்ந்திருந்து, இது இராவண இராச்சியம் என்பதை விளங்கப்படுத்துகின்றார். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அது படங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் அதிமங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. உங்களை அதிமேன்மையான மனிதர்களாக ஆக்குவதற்குத் தந்தை வந்துள்ளார். கற்பதால் ஒரு சட்டநிபுணர் அல்லது வைத்தியர் ஆகுகின்ற அந்தஸ்தை நீங்கள் பெறுவதைப் போலவே, இக்கல்வியினூடாக என்னவாக ஆகுவீர்கள் என்பதையும் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இங்கே சத்தியத்தின் சகவாசத்தில் அமர்ந்திருப்பதால், இதனூடாகச் சந்தோஷ உலகிற்குச் செல்வீர்கள். இரு சத்திய தாமங்கள் உள்ளன: ஒன்று சந்தோஷ தாமமும், மற்றையது கடவுளின் வீடான, அமைதி தாமமும் ஆகும். தந்தையே படைப்பவர். தந்தையுடன் கற்பதால் விவேகிகள் ஆகுபவர்களுக்கு, சேவை செய்யும் கடமை உள்ளது. தந்தை கூறுகிறார்: அனைத்தையும் புரிந்து கொள்வதால், இப்பொழுது நீங்கள் திறமைசாலிகள் ஆகிவிட்டீர்கள். ஆகவே, சிவாலயங்களுக்குச் சென்று அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். அவர்களை வினவுங்கள்: நீங்கள் ஏன் பல்வேறு பழங்களையும் மலர்களையும் வெண்ணெய், நெய், எருக்கலம் மற்றும் ரோஜா மலர்களைச் சிவனுக்குப் படைக்கிறீர்கள்? கிருஷ்ணரின் ஆலயத்தில் அவர்கள் எருக்கலம் மலர்களைப் படைப்பதில்லை. அங்கு, மிகச்சிறந்த நறுமணமுள்ள மலர்களையே அவர்கள் படைக்கிறார்கள். அவர்கள் சிவாலயத்தில் எருக்கலம் மலர்களை அல்லது ரோஜா மலர்களை மட்டுமே படைக்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்களில் எவரும் அதன் அர்த்தத்தை அறியவில்லை. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். உங்களுக்குக் கற்பிப்பவர் ஒரு மனிதரல்ல. மிகுதி உலகில் ஏனைய மனிதர்கள், மனிதர்களுக்குக் கற்பிக்கின்றார்கள். ஆனால் இங்கே கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார். மனிதர்கள் எவரையும் கடவுள் என என்றுமே அழைக்க முடியாது. இலக்ஷ்மியும் நாராயணனுமே கடவுள் என்று அழைக்கப்பட முடியாது; அவர்கள் தேவர்கள் என்றே அழைக்கப்படுகின்றார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரரும் தேவர்கள் என்றே அழைக்கப்படுகின்றார்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே கடவுள் ஆவார். அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை. ‘ஓ பரமாத்மாவாகிய பரமதந்தையே!’ என அனைவரும் அழைக்கின்றார்கள். அவருடைய உண்மையான பெயர் சிவன். குழந்தைகளாகிய நீங்கள் சாலிகிராம்கள் என அழைக்கப்படுகின்றீர்கள். பண்டிதர்கள் யாகத்தை வளர்க்கும் பொழுது, மிகப்பெரிய சிவலிங்கத்தையும் பல சிறிய சாலிகிராம்களையும் உருவாக்குகிறார்கள். ஆத்மாக்கள் சாலிகிராம்கள் என அழைக்கப்படுகிறார்கள். பரமாத்மா, சிவன் என அழைக்கப்படுகிறார். அவரே அனைவரினதும் தந்தை; நாங்கள் அனைவரும் சகோதரர்கள். மக்கள் சகோதரத்துவத்தைப் பற்றியும் பேசுகிறார்கள். நாங்கள் தந்தையின் குழந்தைகள்; நாங்கள் சகோதரர்கள். எனவே, எவ்வாறு நாங்கள் சகோதர, சகோதரிகள் ஆகினோம்? மக்களாகிய நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் வாயின் மூலமாகப் படைக்கப்பட்டீர்கள்; நீங்கள் பிராமணர்கள்; நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள். இதனாலேயே நீங்கள் பிரம்மா குமார்களும், குமாரிகளும் என அழைக்கப்படுகிறீர்கள். அச்சா. பிரம்மாவைப் படைத்தவர் யார்? கடவுளே ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரரும் படைப்பின் ஒரு பகுதியே. சூட்சும உலகமும் ஒரு படைப்பே. குழந்தைகளாகிய நீங்கள் பிரம்மாவின் கமல வாயின் மூலம் தோன்றி உள்ளீர்கள். நீங்கள் பிராமணர்கள் என அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் தத்தெடுக்கப்பட்ட, வாய் மூலம் பிறப்பெடுத்த குழந்தைகள். பிரஜாபிதா பிரம்மா எவ்வாறு குழந்தைகளைப் படைக்கிறார்? குருமார்களைப் பின்பற்றுபவர்கள் தத்தெடுக்கப்படுவது போன்று, அவர் அவர்களை நிச்சயமாகத் தத்தெடுக்க வேண்டும்; அவர்களைச் சீடர்கள் என அழைக்கிறார்கள். பிரஜாபிதா பிரம்மா முழு உலகினதும் தந்தை ஆவார். அவர் முப்பாட்டன் எனவும் அழைக்கப்படுகிறார். மக்களின் தந்தையான பிரம்மா இங்கே தேவைப்படுகின்றார். சூட்சும உலகிலும் ஒரு பிரம்மா உள்ளார். பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் பெயர்கள் சூட்சுமவாசிகளாக நினைவுகூரப்பட்டாலும், சூட்சும உலகில் மக்கள் எவரும் இல்லை. பிரஜாபிதா பிரம்மா யார்? தந்தை இங்கே அமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். பிராமணப் புரோகிதர்களும் தங்களைப் பிரம்மாவின் குழந்தைகள் என அழைக்கின்றார்கள். இப்பொழுது பிரம்மா எங்கே உள்ளார்? அவர் இங்கே உள்ளார் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அவர் கடந்த காலத்தில் வாழ்ந்தவர் என அவர்கள் கூறுகின்றார்கள். அப்பிராமணர்கள் தங்களை வழிபடுபவர்கள் என அழைக்கிறார்கள். நடைமுறை ரீதியாக நீங்கள் இப்பொழுது பிராமணர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். சிவபாபா பிரம்மாவைத் தத்தெடுத்தார். அவர் கூறுகின்றார்: நான் இந்தப் பழைய சரீரத்தினுள் பிரவேசித்து, உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவது ஒரு மனிதரின் பணியல்ல. தந்தை மாத்திரம் படைப்பவர் என அழைக்கப்படுகின்றார். சிவனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதைப் பாரத மக்கள் அறிவார்கள். சிவனே தந்தை ஆவார். இந்த இராச்சியத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தவர் யார் என்பது பாரத மக்களுக்குத் தெரியாது. தூய்மையாக்குபவர் என்றும் அழைக்கப்படுகின்ற, பரமாத்மாவே சுவர்க்கத்தைப் படைப்பவர். ஆத்மாக்களாகிய நீங்கள் ஆதியில் தூய்மையானவர்கள். பின்னர் நீங்கள் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் செல்கின்றீர்கள். கலியுகத்தில் உள்ள அனைவரும் இப்பொழுது தமோபிரதானாக உள்ளார்கள், ஆனால் சத்தியயுகத்தில் உள்ள அனைவரும் சதோபிரதானாக உள்ளார்கள். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் 5000 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பம் ஆகியது. தேவர்களின் வம்சம் 2500 வருடங்களுக்கு நீடித்தது. அவர்களின் குழந்தைகளும் அந்த இராச்சியத்தை ஆட்சிசெய்தார்கள்; முதலாவது, இரண்டாவது இலக்ஷ்மி நாராயணன் போன்றோர் இருந்தனர். இவ்விடயங்களைப் பற்றி மக்களுக்கு எதுவும் தெரியாது. இப்பொழுது அனைவரும் தமோபிரதானாகவும் தூய்மை அற்றவர்களாகவும் உள்ளார்கள். இங்கே ஒரு மனிதரேனும் தூய்மையாக இருக்க முடியாது. ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!’ என அனைவரும் அழைக்கிறார்கள். ஆகவே, இவ்வுலகம் தூய்மை அற்றுள்ளது. இது கலியுகத்தின் நரகம் என அழைக்கப்படுகிறது. புதிய உலகம், தூய உலகமாகிய, சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. பின்னர், எவ்வாறு நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகுகிறீர்கள்? இது எவருக்குமே தெரியாது. தனது 84 பிறவிகளைப் பற்றியும் அறிந்த, ஒரு மனிதரேனும் பாரதத்தில் இல்லை. மக்கள் அதிகபட்சம் 84 பிறவிகளையும், குறைந்தபட்சம் ஒரு பிறவியையும் எடுக்கிறார்கள். பாரதமே அழிவற்ற தேசம் எனக் கருதப்படுகின்றது. ஏனெனில் சிவபாபா இந்தத் தேசத்திலேயே அவதரிக்கின்றார். பாரத தேசம் என்றுமே அழிக்கப்படுவதில்லை. ஆனால் ஏனைய தேசங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இப்பொழுது மறைந்து விட்டது. தேவர்கள் தூய்மையான, சதோபிரதான் ஆனவர்கள் என்பதால் இங்குள்ள எவரும் தங்களை ஒரு தேவர் என அழைக்க முடியாது. அவர்கள் அனைவரும் இப்பொழுது தூய்மை அற்றவர்களாகவும் வழிபடுபவர்களாகவும் ஆகியுள்ளார்கள். இவை அனைத்தையும் தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். கடவுள் பேசுகின்றார்: கடவுளே, அனைவரதும் தந்தை ஆவார். அவர் ஒருமுறை மாத்திரமே பாரதத்திற்கு வருகின்றார். அவர் எப்பொழுது வருகின்றார்? இந்த அதிமேன்மையான சங்கமயுகத்திலேயே ஆகும். இந்தச் சங்கமயுகமே அதிமேன்மையான யுகம் என அழைக்கப்படுகின்றது. இதுவே கலியுக காலத்தைச் சத்தியயுகமாகவும், தூய்மையற்றதைத் தூய்மையாகவும் மாற்றுகின்ற சங்கமயுகம் ஆகும். தூய்மையற்ற மனிதர்கள் கலியுகத்தில் வாழ்கின்றார்கள். ஆனால் தூய தேவர்கள் சத்தியயுகத்தில் வாழ்கின்றார்கள். இதனாலேயே தந்தை வந்து உங்களைத் தூய்மை அற்றதிலிருந்து தூய்மையாக மாற்றுகின்ற, அதிமேன்மையான சங்கமயுகம் என இந்த யுகம் அழைக்கப்படுகின்றது. சாதாரண மனிதரில் இருந்து அதிமேன்மையான தேவர்களாக மாறுவதற்காகவே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் நிர்வாணா தாமத்தில் வாழ்ந்தோம் என்பதை மனிதர்கள் அறிந்திருக்கவும் இல்லை. எங்கள் பாகங்களை நடிப்பதற்காக நாங்கள் அங்கிருந்து இங்கே வருகின்றோம். இந்த நாடகத்தின் கால எல்லை 5000 வருடங்கள். இந்த எல்லையற்ற நாடகத்தில் எங்கள் பாகங்களை நாங்கள் நடிக்க வேண்டும். மனிதர்கள் யாவரும் நடிகர்களே. இந்த நாடகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது; அது என்றுமே நிற்க முடியாது. அனைத்துக்கும் முதலில், தேவர்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காகச் சத்திய யுகத்துக்கு வருகின்றார்கள். பின்னர் திரேதா யுகத்தின் சத்திரியர்கள் உள்ளார்கள். இந்த நாடகம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இப்பொழுது இந்த உலகம் ஒரு முட்காடாகும்; மனிதர்கள் யாவரும் சந்தோஷம் அற்றுள்ளார்கள். இந்தக் கலியுகத்தின் பின் சத்தியயுகம் வரும். கலியுகத்தில் பல மனிதர்கள் உள்ளார்கள்: சத்தியயுகத்தில் எத்தனை பேர் இருப்பார்கள்? மிகச்சிலரே இருப்பார்கள். ஆதிசனாதன சூரிய வம்ச தேவர்களே அங்கிருப்பார்கள். இந்தப் பழைய உலகம் இப்பொழுது மாற்றமடைய வேண்டும். அது சாதாரண மனிதர்களின் உலகிலிருந்து, தேவர்களின் உலகாக மாறும். ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் அங்கிருந்தது. ஆனால் இப்பொழுது எவருமே தன்னை ஒரு தேவர் என அழைக்க முடியாது. அவர்கள் தங்கள் சொந்தத் தர்மத்தையே மறந்து விட்டார்கள். பாரத மக்கள் மாத்திரமே தங்கள் சொந்தத் தர்மத்தை மறந்து விட்டார்கள். அவர்கள் இந்துஸ்தானில் வாழ்ந்ததால், தங்கள் சமயத்தை இந்து சமயம் என அழைக்கின்றனர். தேவர்கள் தூய்மையானவர்கள். ஆனால் இந்துக்களோ தூய்மை அற்றவர்கள். அதனாலேயே அவர்களைத் தேவர்கள் என அழைக்க முடியாது. அவர்கள் தொடர்ந்தும் தேவர்களை வழிபடுகின்றார்கள். அவர்கள் தங்களைப் பாவம் நிறைந்தவர்களும் சீரழிந்தவர்களும் என அழைக்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் வழிபடத் தகுதிவாய்ந்தவராக இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் தூய்மையற்ற, வழிபடுபவர்கள் ஆகியுள்ளீர்கள். “ஹம்சோ” என்பதன் அர்த்தமும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா என அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் அதனைப் பிழையாக மொழிபெயர்த்து விட்டார்கள். சரீரங்களும் பொய், மாயையும் பொய்யே. நீங்கள் இதனைச் சத்தியயுகத்தில் கூற மாட்டீர்கள். தந்தை சத்திய தாமத்தை உருவாக்குகின்றார். பின்னர் இராவணன் வந்து அதனைப் பொய்யான தேசமாக ஆக்குகின்றான். தந்தை இப்பொழுது வந்து இவை அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மா என்றால் என்ன? பரமாத்மா என்றால் என்ன? இதை எவருமே அறிய மாட்டார்கள். தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் ஒளிப்புள்ளிகள். ஒவ்வொருவரது 84 பிறவிகளின் பாகமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆத்மாக்களாகிய நாங்கள் எவ்வாறானவர்கள் என்பது எவருக்குமே தெரியாது. அவர்கள் இன்னார் சட்டநிபுணர், இவர் இன்னார் என அறிவார்கள் அன்றி, ஆத்மாக்களைப் பற்றி எவருக்குமே எதுவுமே தெரியாது. தந்தை வரும்பொழுதே, அவர் உங்களுக்கு இனங்காணுதலைக் கொடுக்கின்றார். உங்கள் அநாதியான 84 பிறவிகளின் பாகங்களும் ஆத்மாக்களாகிய உங்களில் பதியப்பட்டுள்ளது. உங்கள் பாகங்கள் என்றுமே அழிக்கப்படுவதில்லை. இந்தப் பாரதமே பூந்தோட்;டமாக இருந்தது. அங்கு சந்தோஷத்தைத் தவிர, வேறு எதுவுமே இருக்கவில்லை. இப்பொழுது அங்கு துன்பத்தைத் தவிர, வேறு எதுவுமேயில்லை. இப்பொழுது அத்தந்தை எங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து புதிய விடயங்களைச் செவிமடுக்கின்றீர்கள். நீங்கள் சாதாரண மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவதே, புதிய விடயமாகும். மனிதனிலிருந்து தேவராக மாறுவதற்கான கல்வியை உங்களுக்குக் கற்பிப்பது, ஒரு மனிதரல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்; கடவுளே இக்கல்வியைக் கற்பிக்கிறார். கடவுளைச் சர்வவியாபி என அழைப்பது அவரை அவமதிப்பது என்றே அர்த்தம். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகிறார்: 5000 வருடங்களுக்கு ஒரு முறை நான் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றேன். இராவணன் வந்து அதனை நரகம் ஆக்குகின்றான். இவ்விடயங்களை உலகிலுள்ள எவருமே அறிய மாட்டார்கள். தந்தையே வந்து உங்களைச் சாதாரண மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகின்றார். கடவுள் அழுக்குத் துணிகளைக் கழுவுகின்றார் என நினைவுகூரப்பட்டுள்ளது. அங்கே விகாரம் எதுவும் இல்லை; அந்த உலகம் முற்றிலும் விகாரமற்றது. இப்பொழுது உலகம் விகாரம் நிறைந்ததாக உள்ளது. மக்கள் அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! இராவணன் எங்களைத் தூய்மை அற்றவர்களாக்கி விட்டான். எனினும், அவர்களுக்கு இராவணன் எப்பொழுது வந்தான் என்றோ அல்லது என்ன நிகழ்ந்தது என்றோ தெரியாது. இராவணன் உங்களை மிகவும் ஏழையாக்கி விட்டான்! 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதம் செல்வம் மிக்கதாக இருந்தது; அங்கே வைரங்களாலும் இரத்தினங்களாலும் பதிக்கப்பட்ட தங்க மாளிகைகள் இருந்தன் அதிகளவு செல்வம் நிறைந்திருந்தது. அது இப்பொழுது உள்ள நிலையைப் பாருங்கள்! தந்தையைத் தவிர வேறு எவராலும் பாரதத்தைக் கிரீடமாக்க முடியாது (அதியுயர்ந்த தேசம்). சிவபாபா பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றார் என நீங்கள் இப்பொழுது கூறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது மரணம் உங்கள் முன்னால் உள்ளது. நீங்கள் அனைவரும் ஓய்வுபெறும் ஸ்திதியில் உள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். ஆகவே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, சதா என்னை மாத்திரம் நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு விடும். அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நாங்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றிய குழந்தைகளான, பிராமணர்கள். சாதாரண மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவதற்கான இக்கல்வியைக் கடவுளே வந்து எங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்தப் போதையிலும் சந்தோஷத்திலும் நிலைத்திருங்கள். இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்தில், அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

2. இப்பொழுது இது எங்கள் ஓய்வுபெறும் ஸ்திதி. மரணம் எங்கள் முன்னால் உள்ளது. நாங்கள் வீடு திரும்ப வேண்டும். இதனாலேயே நாங்கள் தந்தையின் நினைவில் இருப்பதால், எங்கள் பாவங்கள் அனைத்தையும் எரிக்க வேண்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இந்த ஞானம் என்ற சாவியால் எல்லையற்ற பாக்கியத்தின் பொக்கிஷங்களைப் பெற்று, சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியவர் ஆகுவீர்களாக.

சங்கமயுகத்தில், குழந்தைகளான நீங்கள் எல்லோரும் இந்த ஞானச் சாவியைப் பெறுகிறீர்கள். இதன்மூலம் நீங்கள் உங்களின் பாக்கியத்தை உருவாக்குகிறீர்கள். இந்தச் சாவியைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பிய அளவு பாக்கியப் பொக்கிஷங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்தச் சாவியை நீங்கள் எடுத்த உடனேயே, சகல பொக்கிஷங்களாலும் நீங்கள் நிரம்பியவர்கள் ஆகுகிறீர்கள். எந்தளவிற்கு நீங்கள் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியவர் ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களிடம் இயல்பாகவே சந்தோஷம் காணப்படும். அதை நீங்கள் சந்தோஷத்தின் நீர்வீழ்ச்சி அநாதியாகவும் நிற்காமலும் பாய்வதைப் போன்று அனுபவம் செய்வீர்கள். எந்த வகையான பேறுகளும் குறைவின்றி சகல பொக்கிஷங்களாலும் நிரம்பி இருப்பது போல் நீங்கள் தோற்றம் அளிப்பீர்கள்.

சுலோகம்:
தந்தையுடன் நல்லதொரு இணைப்பை வைத்திருங்கள். நீங்கள் தொடர்ந்து சகல சக்திகளின் மின்னோட்டத்தைப் பெறுவீர்கள்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

உங்களிடம் எந்த அளவிற்குத் தூய்மை உள்ளதோ, அந்தளவிற்கு பிராமண வாழ்க்கையின் ஆளுமையைக் கொண்டிருப்பீர்கள். தூய்மை குறைவாக இருக்குமாயின், அந்த ஆளுமையும் குறைவாகவே இருக்கும். இந்தத் தூய்மையின் ஆளுமை, இலகுவாக சேவையை வெற்றிநிறைந்தது ஆக்குகிறது. எவ்வாறாயினும், ஏதாவதொரு விகாரத்தின் சுவடு சிறிதளவேனும் இருக்குமாயின், அதன் சகபாடிகள் நிச்சயமாக அங்கே இணைந்து கொள்ளும். எப்படித் தூய்மை அமைதியுடனும் சந்தோஷத்துடனும் ஆழமாகத் தொடர்பு பட்டதோ, அதேபோல், தூய்மை இன்மையும் ஐந்து விகாரங்களுடனும் ஆழமாகத் தொடர்புபட்டது. உங்களுக்குள் விகாரத்தின் சிறிதளவு சுவடேனும் இல்லாதபோதே, நீங்கள் உங்களின் தூய்மையின் ஆளுமையால் மற்றவர்களுக்குச் சேவை செய்கிறீர்கள் எனச் சொல்ல முடியும்.