31.01.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிமையான குழந்தைகளே, நீங்கள் புண்ணியாத்மாக்களாக விரும்பினால், நீங்கள் எந்த ஒரு பாவத்தையும் செய்யவில்லை என்பதையும், நீங்கள் சத்தியத்தை உங்கள் கணக்கில் சேகரிக்கின்றீர்கள் என்பதையும் உங்கள் அட்டவணையில் சோதித்துப் பாருங்கள்.

கேள்வி:
மிகப்பெரிய பாவங்களில் ஒன்று எது?

பதில்:
எவரின் மீதும் தீய பார்வையைக் கொண்டிருப்பது மிகப்பெரிய பாவங்களில் ஒன்று. புண்ணியாத்மா ஆகிக் கொண்டிருக்கும் குழந்தைகளாகிய நீங்கள் எவரின் மீதும் தீய (விகாரமான) பார்வையை ஒருபோதும் கொண்டிருக்கக் கூடாது. எவ்வளவு நேரம் யோகத்தில் நிலைத்திருக்கிறீர்கள் என்றும், நீங்கள் ஏதாவது பாவத்தைச் செய்கிறீர்களா என்றும்; நீங்களே உங்களைச் சோதியுங்கள். உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வதற்கு, தந்தை உங்களுக்குக் கொடுக்கும் மேன்மையான வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றுவதிலும், எவரிலும் விகாரமான பார்வையை ஒருபோதும் கொண்டிராமல் இருப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.

பாடல்:
உங்களின் இதயக் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள்….

ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை தனது குழந்தைகளுக்குக் கூறுகிறார்: உங்களுக்குள் சோதனை செய்யுங்கள்! மக்கள் தாம் எவ்வளவு பாவத்தையும் எவ்வளவு புண்ணியத்தையும் அவர்கள் வாழ்க்கையில் செய்துள்ளனர் என்பதைப் பொதுவாக தெரிந்திருப்பார்கள். ஆகவே ஒவ்வொரு நாளும் உங்களது அட்டவணையைப் பார்த்து உங்களையே வினவுங்கள்: நான் எத்தனை பாவங்களைச் செய்துள்ளேன், எவ்வளவு புண்ணியத்தைச் செய்துள்ளேன்? நான் எவரையும் குழப்பமடையச் செய்தேனா? ஒவ்வொரு மனிதராலும் தனது வாழ்நாளில் எதனைச் செய்துள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்: எத்தனை பாவங்கள் செய்யப்பட்டுள்ளன, எவ்வளவு தானம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் யாத்திரை செல்லும்போது, தான தர்மம் செய்கின்றனர். அவர்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்கு முயற்சிக்கின்றனர். ஆகவே, குழந்தைகளாகிய உங்களிடம் தந்தை வினவுகிறார்: நீங்கள் எத்தனை பாவங்களைச் செய்துள்ளீர்கள், எவ்வளவு புண்ணியம் செய்துள்ளீர்கள்? குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புண்ணியாத்மாக்களாக வேண்டும். ஆகவே, நீங்கள் எந்த ஒரு பாவத்தையும் செய்யக்கூடாது. எண்ணற்ற வகையான பாவங்கள் இருக்கின்றன. எவரிலும் தவறான பார்வையைக் கொண்டிருப்பதும் பாவமாகும். விகாரம் நிறைந்த பார்வையே தீய பார்வை ஆகும், அனைத்திலும் அதுவே மோசமானது. நீங்கள் எவரிலும் விகாரமான பார்வையை ஒருபோதும் கொண்டிருக்கவே கூடாது. பொதுவாகக் கணவன் மனைவிக்கு இடையிலேயே விகாரமான பார்வை இருக்கிறது. சிலவேளைகளில் குமார் குமாரிகளிடையேயும் கூட விகாரமான பார்வை இருக்கிறது. தந்தை கூறுகிறார்: நீங்கள் எத்தகைய விகாரமான பார்வையையும் கொண்டிருக்கக் கூடாது. இல்லாவிடின் நீங்கள் குரங்குகள் என்றே அழைக்கப்பட வேண்டும். நாரதரின் உதாரணம் இருக்கிறது. அவர் இலக்ஷ்மியைத் தான் திருமணம் செய்ய முடியுமா என வினவினார். நீங்களும் இலக்ஷ்மியைத் திருமணம் செய்வீர்கள் எனவும், அதாவது, சாதாரண மனிதரில் இருந்து இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆகுவீர்கள் என்று; கூறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: எந்தளவிற்கு நான் ஒரு புண்ணியாத்மா ஆகியுள்ளேன் என உங்கள் சொந்த இதயத்திடம் வினவுங்கள். நீங்கள் இன்னமும் பாவம் எதனையும் செய்கிறீர்களா? எந்தளவிற்கு நீங்கள் யோகத்தில் நிலைத்திருக்கிறீர்கள்? நீங்கள் தந்தையை இனங்கண்டு கொண்டதனாலேயே நீங்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். உலகில் உள்ள வேறெவரும் பாபாவையோ அல்லது இவர்கள் பாப்தாதா என்பதையோ இனங்காணவில்லை. பரமாத்மாவாகிய பரமதந்தை பிரம்மாவினுள் பிரவேசித்து அழிவற்ற ஞான இரத்தினங்கள் எனும் பொக்கிஷங்களை உங்களுக்குக் கொடுக்கின்றார் என்பது பிராமணக் குழந்தைகளாகிய உங்களுக்கே தெரியும். மனிதர்களிடம் உள்ள செல்வம் அழியக்கூடியது. அதனையே அவர்கள் தானம் செய்கிறார்கள். அவை கற்களைப் போன்றவை, ஆனால் இவையோ ஞான இரத்தினங்கள். ஞானக் கடலான தந்தையிடம் மாத்திரமே இந்த இரத்தினங்கள் உள்ளன. ஒவ்வோர் இரத்தினமும் நூறாயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமதி வாய்ந்தவை. நீங்கள் தந்தையாகிய நகை வியாபாரி கொடுத்த ஞான இரத்தினங்களைக் கிரகித்து, அவற்றைப் பின்னர் தானம் செய்ய வேண்டும். எவ்வளவிற்கு நீங்கள் அந்த இரத்தினங்களை எடுத்து மற்றவர்களுக்குத் தானம் செய்கிறீர்களோ அதற்கேற்ப நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரிக் கொள்வீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் எத்தனை பாவங்களைச் செய்துள்ளீர்கள் என உங்களைச் சோதித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்போது எந்தப் பாவத்தையும் செய்யவில்லையே என்பதைச் சோதியுங்கள். நீங்கள் எவரிலும் சிறிதளவேனும் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருக்கக் கூடாது. தந்தை உங்களுக்குக் கொடுக்கும் ஸ்ரீமத்தை முழுமையாகத் தொடர்ந்தும் பின்பற்றுங்கள். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாயையின் புயல்கள் வரும், ஆனால் நீங்கள் ஒருபோதும் உங்கள் புலன்களால் பாவம் செய்யக்கூடாது. உங்கள் பார்வை ஒருவர் மீது தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருப்பின், நீங்கள் அவரின் முன்னால் ஒருபோதும் நிற்கக்கூடாது, ஆனால் உடனடியாக அவ்விடத்திலிருந்து சென்றுவிடுங்கள். ஒருவர் விகாரமான பார்வையைக் கொண்டிருக்கும் போது அதை உடனடியாகக் கூறமுடியும். நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோர விரும்பினால், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் தூய்மையற்ற பார்வையினைக் கொண்டிருந்தால், பலவீனம் உடையவர்கள் ஆகுவீர்கள். தந்தை கொடுக்கின்ற ஸ்ரீமத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே தந்தையை இனம் கண்டுள்ளீர்கள். உதாரணமாக, பாபா எங்காவது சென்றால் குழந்தைகளாகிய உங்களுக்கே பாப்தாதா வந்திருக்கிறார் என்பது தெரியும். ஏனைய பலர் அவரைப் பார்ப்பார்கள், ஆனால் அவர்கள் எதனையும் அறிய மாட்டார்கள். ஆகவே, அவர்கள் ‘யார் அவர்?’ எனக் கேட்டால் “அவர் பாப்தாதா” எனக் கூறுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த பட்ஜ்களை வைத்திருக்க வேண்டும். அவர்களுக்குக் கூறுங்கள்: இந்த தாதாவின் மூலம் சிவபாபா எங்களுக்கு அழிவற்ற ஞான இரத்தினங்களைத் தானம் செய்கிறார். இது ஆன்மீக ஞானமாகும். ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாகிய ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து, இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். இவை கடவுள் சிவனுடைய வாக்கியங்கள். கீதையில் தவறாகக் கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பேசுகிறார் என எழுதப்பட்டுள்ளது. சிவனே தூய்மை ஆக்குபவராகிய, ஞானக்கடல் எனப்படுகிறார். ஞானத்தின் மூலமே அங்கே சற்கதி பெறப்படுகிறது. இவை அழிவற்ற ஞான இரத்தினங்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே சற்கதியை அருள்பவர். நீங்கள் இந்த வார்த்தைகளை நன்றாக நினைவிற் கொண்டிருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை அறிவீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள், தந்தையும் குழந்தைகளாகிய உங்களை அறிவார் என்பதனைப் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை கூறுவார்: நீங்கள் அனைவரும் எனது குழந்தைகள். எவ்வாறாயினும், உங்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும் என்றில்லை. ஒருவரது பாக்கியத்தில் அது இருப்பின், அவரை அவர் பின்னர் அறிந்து கொள்வார். பாபா எங்காவது சென்றால், மக்கள் யார் அவர் எனக் கேட்கும்போது, நிச்சயமாக தூய நோக்கத்துடனேயே அவர்கள் வினவுகின்றனர். அவர் பாப்தாதா என அவர்களுக்குக் கூறுங்கள். எல்லையற்ற தந்தை அசரீரியானவர். தந்தை பௌதீக உலகத்தினுள் வரும்வரை, எவ்வாறு நாங்கள் எங்கள் ஆஸ்தியை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்? ஆகவே, சிவபாபா எங்களை பிரம்மாவின் மூலம் தத்தெடுத்து, எங்கள் ஆஸ்தியை எங்களுக்குக் கொடுக்கிறார். இவர் பிரஜாபிதா பிரம்மா, நாங்கள் பிரம்மாகுமாரர்களும் பிரம்மாகுமாரிகளும் ஆவோம். எங்களுக்குக் கற்பிப்பவர் ஞானக் கடல். நாங்கள் எங்கள் ஆஸ்தியை அவரிடமிருந்து பெறுகிறோம். இந்த பிரம்மாவும் கற்கிறார். பின்னர் அவர் பிராமணரிலிருந்து தேவர் ஆகுகின்றார். இவ்விடயங்கள் விளங்கப்படுத்துவதற்கு மிக இலகுவானவை. பட்ஜின் அர்த்தத்தை எவருக்கேனும் விளங்கப்படுத்துவது நல்லது. பாபா கூறுகிறார் என அவர்களிடம் கூறுங்கள்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் தூய்மையாகித் தூய உலகிற்குச் செல்வீர்கள். அந்தத் தந்தையே தூய்மையாக்குபவர். நாங்கள் தூய்மை ஆகுவதற்கு முயற்சி செய்கிறோம். விநாசம் வரும் வேளையில், நாங்கள் எங்கள் கல்வியை முடித்திருப்போம். அது விளங்கப்படுத்துவதற்கு மிக இலகுவானது. உங்களில் எவரேனும் பிரயாணம் செய்யும்போது உங்களுடன் நீங்கள் சில பட்ஜையும் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த பட்ஜ்களுடன், நீங்கள் இவ்வாறு எழுதப்பட்டுள்ள சிறிய துண்டுப் பிரசுரங்களையும் கொண்டிருக்க வேண்டும்: நாடகத் திட்டத்திற்கேற்ப முன்னைய கல்பத்தில் இடம்பெற்றதைப் போன்று, மகாபாரத யுத்தத்தில் ஏனைய அனைத்து எண்ணற்ற சமயங்களையும் அழித்து, மீண்டும் ஒருமுறை அநாதியான தேவ தர்மத்தை ஸ்தாபிப்பதற்காகத் தந்தை பாரதத்தில் வருகின்றார். நீங்கள் எவருக்கும் கொடுக்கத்தக்க வகையில் இரு நூறாயிரம் அல்லது நானூறாயிரம் அத்தகைய துண்டுப்பிரசுரங்களை அச்சடித்து வைத்திருக்க வேண்டும். மேலே திரிமூர்த்தியின் படம் இருக்க வேண்டும், அடுத்த பக்கத்தில் அனைத்து நிலையங்களினதும் முகவரி இருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் நாள்முழுவதும் சேவையில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். குழந்தைகளே, நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். தினமும் நீங்கள் உங்கள் அட்டவணையைச் சோதித்து, நாள் முழுவதும் உங்கள் ஸ்திதி எவ்வாறு இருந்தது என உங்களையே நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டும். ஒவ்வோர் இரவும் தங்கள் முழுநாளினதும் கணக்குகளை எழுதும் பலரை பாபா சந்தித்துள்ளார். அவர்கள் தாம் ஏதேனும் தவறான செயல்களைச் செய்துள்ளோமா எனச் சோதிக்கின்றனர். அவர்கள் அனைத்தையும் எழுதுகிறார்கள். ஏனெனில் அவர்களது சரிதை நல்ல முறையில் எழுதப்படும்போது, பின்னர் வருபவர்கள் அதிலிருந்து கற்பித்தல்களைப் பெற்றுக் கொள்வார்கள் என அவர்கள் நினைக்கின்றார்கள். நல்லவர்கள் மாத்திரமே இந்த முறையில் எழுதுவார்கள். எவ்வாறாயினும், அனைவரும் விகாரம் நிறைந்தவர்களாகவே இருக்கின்றனர். இங்கு, இது அதே விடயம் அல்ல. நீங்கள் உங்கள் அட்டவணையைத் தினமும் சோதித்த பின்னர் அதனை பாபாவுக்கு அனுப்ப வேண்டும். அப்போது நீங்கள் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டிருப்பதுடன், (எதிர்காலம் பற்றிய) கவனமும் இருக்கும். நீங்கள் அனைத்தையும் தெளிவாக எழுத வேண்டும். இன்று, ஒருவரிடம் நான் தவறான பார்வையைக் கொண்டிருந்தேன். இது நடந்தது, அது நடந்தது. ஏனையோரைச் சந்தோஷம் அற்றவர்கள் ஆக்குபவர்களை, பாபா ஏமாற்றுக்காரர்கள் என அழைக்கிறார். பல பிறவிகளின் எண்ணற்ற பாவச்சுமைகள் உங்கள் தலைகளில் இருக்கின்றன. நீங்கள் இப்பொழுது நினைவுச் சக்தியின் மூலம் அந்தப் பாவச் சுமையை அகற்ற வேண்டும். நீங்கள் உங்களைத் தினமும் சோதிக்க வேண்டும்: நான் நாள் முழுவதும் எவ்வளவு ஏமாற்றுபவராக இருந்தேன்? எவருக்காவது துன்பத்தைக் கொடுத்தல் என்பது ஏமாற்றுக்காரராக இருப்பதாகும். அவ்வாறாயின் நீங்கள் பாவமொன்றைச் செய்துள்ளீர்கள். தந்தை கூறுகிறார்: எவரையும் ஏமாற்றுபவராகவோ அல்லது எவருக்கும் துன்பம் கொடுக்கவோ வேண்டாம். எத்தனை பாவங்களைச் செய்துள்ளீர்கள், எவ்வளவு புண்ணியத்;தைச் செய்துள்ளீர்கள் எனப் பார்ப்பதற்கு உங்களைச் சோதியுங்கள். நீங்கள் சந்திக்கும் எவருக்கும் இப்பாதையைக் காட்டுங்கள். அனைவருக்கும் மிக அன்புடன் கூறுங்கள்: நீங்கள் தந்தையை நினைவு செய்து தூய்மையாக வேண்டும். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வசிக்கும்பொழுதே, தாமரை மலரைப் போன்று தூய்மை ஆகுங்கள். நீங்கள் சங்கம யுகத்தில் இருந்தபோதிலும் இது இன்னமும் இராவண இராச்சியமே. மாயையினால் நிறைந்து காணப்படும் நச்சு ஆற்றில் வசிக்கும்போது, நீங்கள் ஒரு தாமரை மலரைப் போன்று தூய்மையாக வேண்டும். ஒரு தாமரை மலர் பல குழந்தைகளைக் (மொட்டுக்கள்) கொண்டுள்ளது, இருந்தும் அது நீரின் மேலேயே உள்ளது. அது இல்லறத்தவரைப் போன்றது. அது பல பொருட்களை உருவாக்குகிறது (தாமரையின் பல்வேறு பாகங்களும் உண்ணக்கூடியவை). இந்த உதாரணம் உங்களுக்கே பொருந்துகிறது. விகாரங்களில் இருந்து விடுபட்டிருங்கள். இந்த ஒரு பிறவியில் தூய்மை ஆகுங்கள், அது பின்னர் அழிவற்றதாகுகின்றது. தந்தை உங்களுக்கு அழிவற்ற ஞான இரத்தினங்களைக் கொடுக்கிறார். ஆனால் ஏனைய அனைவரும் கற்களையே கொடுக்கின்றனர். அவர்கள் பக்தி சார்ந்த விடயங்களையே பேசுகின்றனர். இந்த ஒரேயொருவரே ஞானக்கடலாகிய, தூய்மையாக்குபவர். ஆகவே, இந்தத் தந்தையிடம் நீங்கள் அதிகளவு அன்பு செலுத்த வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் அன்பினைக் கொண்டிருக்கிறார், குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் அன்பு செலுத்துகிறீர்கள். நீங்கள் வேறு எவருடனும் எத்தகைய தொடர்புகளையும் கொண்டிருக்கக் கூடாது. தந்தையின் வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றாதவர்கள் மாற்றாந்தாய்க் குழந்தைகள். அவர்கள் இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றனர், ஆகையால் அவை இராமரின் வழிகாட்டல்கள் அல்ல. அது கடந்த அரைக்கல்பமாக இராவணனது சமுதாயமாகவே இருந்தது. இதனாலேயே இந்த உலகம் சீரழிந்தது என அழைக்கப்படுகிறது. நீங்கள் இப்பொழுது ஏனையோரை மறந்து, ஒரேயொரு தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். பிரம்மா குமாரிகளினூடாக நீங்கள் பெற்றுக் கொள்ளும் வழிகாட்டல்கள் சரியானவையா அல்லது பிழையானவையா என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு எது சரி, எது பிழை என்பது பற்றிய புரிந்துணர்வு கொடுக்கப்பட்டுள்ளது. தர்மவான் வரும்பொழுது மாத்திரமே அவரால் உங்களுக்கு எது சரி, பிழை என்பதைக் கூற முடியும். தந்தை கூறுகிறார்: நீங்கள் கடந்த அரைக்கல்பமாக, பக்தி மார்க்கத்தில் சமயநூல்களையே செவிமடுத்தீர்கள். இப்பொழுது, அவை சரியா, அல்லது நான் கூறுபவை சரியா? அவர்கள் கடவுள் சர்வவியாபி எனக் கூறுகிறார்கள், நான் உங்கள் தந்தை என உங்களுக்குக் கூறுகிறேன். யார் சரி என்பதை நீங்களே இப்பொழுது தீர்மானியுங்கள். இவை அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பிராமணர்கள் ஆகும் பொழுதே உங்களால் இவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அங்கு பலர் இராவண சமுதாயத்தில் இருக்கின்றனர். ஆனால் நீங்களோ மிகச்சிலர், அதிலும் வரிசைக்கிரமமாக உள்ளீர்கள். ஏனையோர் மீது தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருப்பவர்கள் இராவண சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். அவர்களின் பார்வை முற்றாக மாற்றமடைந்து, தெய்வீகமாக ஆகினால் மாத்திரமே அவர்கள் இராமரின் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்பட முடியும். உங்களுடைய ஸ்திதி என்ன என்பதை உங்கள் ஒவ்வொருவராலும் புரிந்துகொள்ள முடியும். முன்னர் உங்களிடம் இந்த ஞானம் எதுவும் இருக்கவில்லை. இப்பொழுது தந்தை உங்களுக்குப் பாதையைக் காட்டியுள்ளார். நீங்கள் எவ்வளவிற்கு இந்த ஞான இரத்தினங்களைத் தானம் செய்கிறீர்கள் எனப் பார்க்க வேண்டும். பக்தர்கள் அழியக்கூடிய செல்வத்தையே தானம் செய்கின்றனர். நீங்கள் இப்பொழுது அழியக்கூடிய செல்வத்தையன்றி, இந்த அழிவற்ற ஞான இரத்தினங்களையே தானம் செய்ய வேண்டும். உங்களிடம் அழியக்கூடிய செல்வம் இருப்பின், அதனை அலௌகீகச் சேவைக்குப் பயன்படுத்துங்கள். பணத்தைத் தூய்மை அற்றவர்களுக்குத் தானம் செய்வதன் மூலம் நீங்களும் தூய்மையற்றவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் செல்வத்தைத் தானம் செய்யும்போது, அதன் பலனை நீங்கள் 21 பிறவிகளுக்குப் புதிய உலகில் பெறுகிறீர்கள். நீங்கள் இவ் விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். பாபா சேவை செய்வதற்குத் தொடர்ந்தும் பல வழிமுறைகளைக் காட்டுகின்றார். அனைவரிலும் கருணை கொண்டிருங்கள்! பரமாத்மாவாகிய பரமதந்தை, பிரம்மாவின் மூலம் புதிய உலகை ஸ்தாபிக்கின்றார் என்பது நினைவு கூரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் எவரும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. பரமாத்மா சர்வவியாபி என அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதில் மிக ஆர்வமாக இருக்க வேண்டும். நீங்கள் பலருக்கு நன்மை செய்தால் நீங்களும் நன்மை பெறுவீர்கள். நாளுக்கு நாள், பாபா அனைத்தையும் மிக இலகுவாக ஆக்குகின்றார். இந்தத் திரிமூர்த்திப் படம் மிகவும் நல்லது. சிவ பாபாவும் பிரஜாபிதா பிரம்மாவும் உள்ளனர். அவர் பிரஜாபிதா பிரம்மா குமாரர்கள் பிரம்மா குமாரிகளாகிய உங்கள் மூலமாக மீண்டும் ஒருமுறை பாரதத்தில் நூறு சதவீதம் தூய்மை, அமைதி, சந்தோஷத்தைக் கொண்ட புதிய இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். கடந்த கல்பத்;தில் இடம்பெற்றதைப் போன்று, ஏனைய அனைத்துச் சமயங்களும் மகாபாரதப் போரில் அழியப் போகின்றன. அத்தகைய துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து, அவற்றை விநியோகியுங்கள். பாபா அத்தகைய இலகுவான பாதையைக் காட்டுகிறார். நீங்கள் கண்காட்சிகளிலும் துண்டுப் பிரசுரங்களைக் கொடுக்க வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளங்கப்படுத்துவது மிக இலகுவானது. பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது. ஒரேயொரு ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஸ்தாபிக்கப்படுகிறது. ஒரு கல்பத்;திற்கு முன்னர் இடம்பெற்றது போல் ஏனைய அனைத்துச் சமயங்களும் அழிக்கப்படும். நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் சட்டைப்பையில் சில பட்ஜ்களையும், துண்டுப் பிரசுரங்களையும் வைத்திருக்க வேண்டும். “ஒரு வினாடியில் ஜீவன்முக்தி” என்பது நினைவு கூரப்படுகிறது. அவர்களுக்குக் கூறுங்கள்: அவர் தந்தையும், இவர் தாதாவும் ஆவர். அந்தத் தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் சத்தியயுகத் தேவ அந்தஸ்தைக் கோரிக் கொள்வீர்கள். அங்கு புதிய உலக ஸ்தாபனையும், பழைய உலக விநாசமும் இருக்கின்றன. பின்னர் அவர்கள் விஷ்ணு பூமியாகிய, புதிய உலக இராச்சியத்தை ஆட்சி செய்வார்கள். அது மிகவும் இலகுவானது. மக்கள் யாத்திரை போன்றவற்றில் அதிகளவு தடுமாறித் திரிகிறார்கள். ஆரிய சமாஜத்தவர்களும் மக்கள் நிறைந்த புகையிரதத்தில் செல்வதன் மூலம் (யாத்திரை செல்வதில்) தடுமாறுகின்றனர். அது சமயத்தின் பெயரில் தடுமாறுதல் என அழைக்கப்படுகிறது. உண்மையில், அது அதர்மத்தின் பெயரில் தடுமாறுதலே ஆகும். சமயத்தின் பெயரில் தடுமாறுவதற்கான அவசியம் இல்லை. நீங்கள் இப்பொழுது கற்கின்றீர்கள். மக்கள் பக்தி மார்க்கத்தில் அதிகளவைச் செய்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள்: “உங்களது இதயக் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள்”. வேறு எவரும் அல்லாது நீங்களே அந்த முகத்தைப் பார்க்க முடியும். நீங்கள் அதனைக் கடவுளுக்கும் காட்டலாம். இந்த விடயங்கள் ஞானமாகும். நீங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகிறீர்கள், தூய்மையற்ற ஆத்மாக்களிலிருந்து தூய புண்ணியாத்மாக்கள் ஆகுகின்றீர்கள். ஏனையோருக்;கு இவ்விடயங்கள் எதுவும் தெரியாது. எவ்வாறு இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்க அதிபதிகள் ஆகினார்கள் என்பது எவருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் தெரியும். உங்கள் அம்பு அவர்களது புத்தியைத் தைத்தால், அவர்களின் படகு அக்கரை சேர முடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களிடம் அழியும் செல்வம் இருப்பின், அதனைத் தகுதிவாய்ந்த முறையில் அலௌகீக சேவைக்குப் பயன்படுத்துங்கள். நீங்கள் நிச்சயம் அழிவற்ற ஞான இரத்தினங்களைத் தானம் செய்ய வேண்டும்.

2. உங்கள் அட்டவணையைச் சோதித்துப் பாருங்கள்: 1) உங்கள் ஸ்திதி எவ்வாறுள்ளது, 2) நீங்கள் நாள் முழுவதும் ஏதாவது தவறு செய்தீர்களா, 3) நீங்கள் எவருக்காவது துன்பத்தைக் கொடுத்தீர்களா, 4) நீங்கள் எவர் மீதேனும் தூய்மையற்ற பார்வையினைக் கொண்டிருந்தீர்களா?

ஆசீர்வாதம்:
நீங்கள் இலேசாகவும், ஒளியாகவும் ஆகுவதாலும் உயரப் பாய்வதாலும் ஒரு தீவிர முயற்சியாளராகி, அனைத்துப் பிரச்சனைகளையும் வெற்றி கொள்வீர்களாக.

நீங்கள் உங்களை ஒரு விலைமதிப்பற்ற இரத்தினமாகக் கருதி, பாப்தாதாவின் இதயமாகிய கொள்கலனில் அமர்ந்திருங்கள், அதாவது, தந்தையின் நினைவில் அமிழ்ந்திருங்கள். அப்பொழுது நீங்கள் எதனையும்; சிரமமாக அனுபவம் செய்ய மாட்டீர்கள், உங்கள் சுமைகளும் முடிவடைந்து விடும். இலோகவும் ஒளியாகவும் ஆகுவதற்கு, இந்த யோகத்தைச் செய்யுங்கள். அதன்பின்னர், உங்கள் முயற்சிகளில் உயரே பாயுங்கள். பின்னர் நீங்கள் ஒரு தீவிர முயற்சியாளர் ஆகுவீர்கள். நீங்கள் எப்பொழுதாவது எதனையாவது சிரமமாகக் கருதினால், தந்தையின் முன்னால் அமர்ந்து, உங்கள் தலை மீது அவருடைய ஆசீர்வாதக் கரத்தை அனுபவம் செய்யுங்கள். இதனைச் செய்வதனால், ஒரு விநாடியில் சகல பிரச்சனைகளுக்குமான தீர்வைக் காண்பீர்கள்.

சுலோகம்:
ஒத்துழைப்புச் சக்தியானது அசாத்தியமானதையும் சாத்தியம் ஆக்குகின்றது, இதுவே உங்கள் பாதுகாப்புக் கோட்டை ஆகும்.

உங்கள் சக்திவாய்ந்த மனதால், சகாஷைக் கொடுக்கின்ற சேவையைச் செய்யுங்கள்.

காலத்திற்கமைய, நீங்கள் இப்பொழுது உங்கள் மனம் மூலம் ஒரு சூழலை உருவாக்குவதற்கு, எங்கும் சகாஷைக் கொடுக்கின்ற பணியை மேற்கொண்டு, அதிர்வலைகளைப பரப்புங்கள். இந்தச் சேவை இப்பொழுது தேவைப்படுகின்றது. நீங்கள் சாகார ரூபத்தில் கண்டீர்கள், குறிப்பாக ஏதேனும் அலைகள் ஏற்படும்போது, இரவுபகலாக, சகாஷைக் கொடுப்பதற்கும், பலவீனமானவர்களைச் சக்தியூட்டுவதற்கும் அவர் கவனம் செலுத்தியதை நீங்கள் கண்டீர்கள். ஆத்மாக்களுக்குச் சகாஷைக் கொடுக்கின்ற சேவைக்கு நேரம் ஒதுக்கினார். அதேபோல் தந்தையைப் பின்பற்றுங்கள்.