01.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தூய்மையாகாமல் உங்களால் வீடு திரும்ப முடியாது. எனவே தந்தையை நினைவு செய்வதன் மூலம் ஆத்மா என்ற பற்றரியைச் சக்தியூட்டி, இயல்பாகவே தூய்மையானவர்கள் ஆகுங்கள்.

பாடல்:
உங்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர், தந்தை உங்களுக்கு எதனைக் கற்பிக்கின்றார்?

பதில்:
குழந்தைகளே, வீடு திரும்புவதற்கு முன்னர், மரணித்து வாழுங்கள்! இதனாலேயே, பாபா சரீர உணர்வுக்கு அப்பால் செல்வதை, முன்கூட்டியே பயிற்சி செய்விக்கின்றார், அதாவது, அவர் உங்களுக்கு மரணித்து வாழ்வதைக் கற்பிக்கின்றார். மேலே செல்வது என்றால் மரணிப்பதாகும். நீங்கள் இப்பொழுது 'வருவதும் போவதும்' என்பதைப் பற்றிய ஞானத்தைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய பாகங்களை அந்தச் சரீரங்களினூடாக நடிப்பதற்கு மேலிருந்து வந்தீர்கள் என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். ஆதியில் நீங்கள் அந்த இடத்தில் வசித்தவர்கள், நீங்கள் இப்பொழுது அங்கு திரும்பிச் செல்ல வேண்டும்.

ஓம் சாந்தி.
உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்வதில் எவ்விதச் சிரமமும் இல்லை. நீங்கள் அதில் மூச்சுத்திணறக் கூடாது. இது இலகுவான நினைவு செய்தல் என்று அழைக்கப்படுகின்றது. அனைத்திற்கும் முதலில், நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருத வேண்டும். ஓர் ஆத்மாவே ஒரு சரீரத்தை எடுத்து, ஒரு பாகத்தை நடிக்கின்றார். சம்ஸ்காரங்கள் அனைத்தும் ஆத்மாவிலேயே உள்ளன. ஆத்மா சுதந்திரமானவர். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்களுடைய தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். இந்த ஞானத்தை நீங்கள் இந்நேரத்தில் மாத்திரமே பெறுகிறீர்கள். நீங்கள் இதனை மீண்டும் பெற மாட்டீர்கள். நீங்கள் அமைதியாக இருப்பதை உலகம் அறியாது. இது இயற்கையான அமைதி என அழைக்கப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நாங்கள் சரீரங்களின் மூலம் எங்களுடைய பாகங்களை நடிப்பதற்காக மேலிருந்து வந்தோம். ஆத்மாக்களாகிய நாங்கள் ஆதியில் அந்த இடத்தில் வசித்தவர்கள். இந்த ஞானம் உங்களுடைய புத்தியில் உள்ளது. இதில் ஹத்தயோகம் போன்ற கேள்விக்கே இடமில்லை. இது மிகவும் இலகுவானது. ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டுமாயினும், தூய்மையாகாமல் எங்களால் அங்கு செல்ல முடியாது. தூய்மையாகுவதற்கு நீங்கள் பரமாத்மாவாகிய தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அவரை நினைவு செய்வதால் உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் உலாவச் செல்லும்போது, தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். இந்நேரத்தில் மாத்திரமே நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மையாக முடியும். அங்கு, அது தூய உலகமாகும். அங்கு, அந்தத் தூய உலகில், இந்த ஞானம் தேவைப்படாது. ஏனெனில், அங்கு பாவச்செயல்கள் எதுவும் செய்யப்படுவதில்லை. நினைவு செய்வதன் மூலம் பாவங்கள் இங்கேயே அழிக்கப்பட வேண்டும். நீங்கள் இங்கு செய்வதைப் போன்றே, அங்கும் அனைத்தையும் இயல்பாகச் செய்வீர்கள். அதன் பின்னர் சிறிது சிறிதாக நீங்கள் கீழிறங்குகிறீர்கள். நீங்கள் இப் பயிற்சியை அங்கேயும் செய்ய வேண்டும் என்பதல்ல. இப்பொழுதே நீங்கள் இப் பயிற்சியைச் செய்ய வேண்டும். உங்களின் பற்றரிகள் இப்பொழுதே சக்தியூட்டப்பட (சார்ஜ்) வேண்டும், எவ்வாறாயினும், நாளடைவில் நிச்சயமாக அவற்றின் சக்தி இழக்கப்படும். ஒருமுறை மாத்திரமே, அதாவது, இந்தநேரத்திலேயே பற்றரிக்கு எவ்வாறு சக்தியூட்டுவது என்ற ஞானத்தை நீங்கள் பெறுகிறீர்கள். சதோபிரதானிலிருந்து தமோபிரதானாகுவதற்கு உங்களுக்கு எவ்வளவு காலம் எடுக்கின்றது! ஆரம்பத்திலிருந்து உங்களின் பற்றரிகள் தொடர்ந்தும் நேரத்திற்கு நேரம் சிறிது, சிறிதாகக் குறைவடைகின்றன. அசரீரியான உலகில் ஆத்மாக்களே இருக்கிறார்கள். அங்கு சரீரங்கள் இல்லை. அதனால் உங்களின் பற்றரி இயல்பாகவே சக்தியை இழத்தல் அல்லது குறைவடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. மோட்டார் கார் இயங்க ஆரம்பிக்கும் போதே, பற்றரியும் சக்தியை இழக்க ஆரம்பிக்கின்றது. மோட்டார் காரை நிறுத்தி வைத்திருக்கும்போது, பற்றரி தொழிற்படுவதில்லை. மோட்டார் கார் போகும்போதே, பற்றரி தொழிற்பட ஆரம்பிக்கின்றது. மோட்டார் காரில் பற்றரி தொடர்ந்தும் சக்தியூட்டப்படுகிறது. ஆனால், உங்களுடைய பற்றரி இந்த நேரத்தில் மாத்திரம், ஒரு தடவை மாத்திரமே சக்தியூட்டப்படுகின்றது. பின்னர், நீங்கள் இந்த சரீரத்தினூடாகச் செயல்களைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது, பற்றரிகளின் சக்தி சிறிது குறைவடைகின்றது. அனைத்திற்கும் முதலில், அவரே ஆத்மாக்களாகிய அனைவரும் நினைவு செய்யும் ஒரேயொரு பரமதந்தை என்பதை விளங்கப்படுத்துங்கள். 'ஓ கடவுளே! அவர் தந்தை. நாங்கள் குழந்தைகள்´ என அவர்கள் கூறுகிறார்கள். உங்களின் பற்றரிகள் எவ்வாறு சக்தியூட்டப்படுகின்றன என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இங்கே விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் சுற்றுலாச் சென்றாலும் தந்தையை நினைவு செய்து, சதோபிரதான் ஆகலாம். உங்களால் எதனையும் புரிந்துகொள்ள முடியாவிட்டால், நீங்கள் வினவலாம். அது மிக இலகுவானது. எங்களுடைய பற்றரிகள் ஒவ்வொரு 5000 வருடங்களும் சக்தியை இழக்கின்றன. தந்தை வந்து, அனைவரின் பற்றரியையும் சக்தியூட்டுகின்றார். விநாசம் இடம்பெறும் பொழுதே அனைவரும் தந்தையை நினைவு செய்கிறார்கள். உதாரணத்திற்கு, வெள்ளம் வரும்பொழுது, பக்தர்கள் அனைவரும் கடவுளை நினைவு செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள். எவ்வாறாயினும், அந்த நேரத்தில், அவர்களால் கடவுளின் நினைவைக் கொண்டிருக்க முடியாது. நண்பர்கள், உறவினர்கள், செல்வம், சொத்து என்பவையே நினைவு செய்யப்படும். எவ்வாறாயினும் 'ஓ கடவுளே´ என்று அவர்கள் கூறினாலும் அதை வெறுமனே கூற வேண்டும் என்பதற்காகவே கூறுகிறார்கள். கடவுள் தந்தை ஆவார், நாங்கள் அவருடைய குழந்தைகள். அவர்களுக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது. அவர்கள் சர்வவியாபி எனும் பிழையான ஞானத்தைப் பெற்றிருக்கிறார்கள். தந்தை வந்து, உங்களுக்கு சரியான ஞானத்தைக் கொடுக்கின்றார். பக்தி எனும் திணைக்களம் முற்றிலும் வேறுபட்டது. அவர்கள் பக்திமார்க்கத்தில் தடுமாறித் திரிய வேண்டும். பிரம்மாவின் இரவு, பிராமணர்களின் இரவாகும். பிரம்மாவின் பகல், பிராமணர்களின் பகலாகும். 'சூத்திரர்களின் பகல், சூத்திரர்களின் இரவு´ என்று கூறப்படுவதில்லை. தந்தை இங்கமர்ந்திருந்து இந்த இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். இது எல்லையற்ற இரவும், பகலும் ஆகும். இரவு இப்பொழுது முடிவடையப் போகின்றது, நீங்கள் பகலிற்குள் செல்லப் போகின்றீர்கள். இந்த வார்த்தைகள் சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் பிரம்மாவின் பகலைப் பற்றியும், பிரம்மாவின் இரவைப் பற்றியும் பேசுகின்றார்கள். ஆயினும், அவர்களுக்கு எதுவுமே தெரியாது. உங்களுடைய புத்தி இப்பொழுது எல்லையற்றதினுள் சென்றுவிட்டது. உண்மையில் தேவர்களைப் பற்றி நீங்கள் கூற முடியும்: விஷ்ணுவின் பகலும், விஷ்ணுவின் இரவும். ஏனென்றால் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையிலான உறவுமுறை உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. திரிமூர்த்தியின் தொழில் என்ன என்பதை வேறு எவராலும் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் கடவுளை ஒரு மீனாகவும், ஒரு முதலையாகவும், பிறப்பு இறப்புச் சக்கரத்துக்குள்ளும் காட்டியுள்ளார்கள். ராதை கிருஷ்ணர் போன்றோரும் மனிதர்களே, ஆயினும், அவர்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது அவர்களைப் போல ஆகவேண்டும். நீங்கள் உங்களுடைய அடுத்த பிறவியில் தேவர்கள் ஆகுவீர்கள். 84 பிறவிகளுக்கான கணக்கும் இருக்கிறது. ஆனால் இப்பொழுது அது முடிவடைந்துவிட்டது. அது மீண்டும் இடம்பெறும். இப்பொழுது நீங்கள் இந்தக் கற்பித்தல்களைப் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நீங்கள் ஆத்மாக்கள் என்பதில் நம்பிக்கை கொண்டிருங்கள். தாங்கள் நடிகர்கள் என அவர்கள் கூறுகிறார்களாயினும், ஆத்மாக்கள் எவ்வாறு மேலிருந்து கீழே வருகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தங்களைச் சரீரதாரிகளாகக் கருதுகிறார்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் மேலிருந்து வருகிறோம் ஆயினும், நாங்கள் எப்பொழுது மீண்டும் திரும்பிச் செல்வோம்? மேலே செல்வது என்றால் உங்கள் சரீரத்தை நீக்கி, மரணிப்பது என்பதாகும். மரணிப்பதற்கு யார் விரும்புகிறார்கள்? தந்தை கூறுகின்றார்: தொடர்ந்தும் உங்கள் சரீரத்தை மறந்துவிடுங்கள். எவ்வாறு மரணித்து வாழ்வது என்பதை அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். வேறு எவராலும் உங்களுக்கு இதனைக் கற்பிக்க முடியாது. நீங்கள் உங்களுடைய வீட்டிற்குச் செல்வதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள். எவ்வாறு வீடு திரும்புவது என்பதைப் பற்றிய ஞானத்தை, நீங்கள் இப்பொழுதே பெறுகிறீர்கள். மரண பூமியில் இதுவே உங்களுடைய இறுதிப் பிறவியாகும். சத்தியயுகம் அமரத்துவ பூமி என அழைக்கப்படுகின்றது. விரைவாக வீடு திரும்ப வேண்டும் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. அனைத்திற்கும் முதலில், நீங்கள் முக்திதாமமாகிய உங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். நீங்கள் இங்கேயே சரீரமாகிய ஆடையை நீக்கிவிட வேண்டும், பின்னர் ஆத்மா திரும்பிச் செல்வார். எல்லைக்குட்பட்ட நாடகம் முடிவடையும் போது, நடிகர்கள் தங்கள் ஆடைகளை கழற்றி அங்கேயே வைத்து விட்டு, வீட்டில் அணியும் ஆடைகளை அணிந்து கொண்டே வீடு திரும்புகிறார்கள். அவ்வாறே இப்பொழுது நீங்களும் ஆடைகளை நீக்கி வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். சத்தியயுகத்தில் மிகக் குறைவான தேவர்களே உள்ளார்கள். இங்கோ, எண்ணற்ற மனிதர்கள் உள்ளார்கள். அங்கே, ஆதிசனாதன தேவி தேவதா தர்மமே உள்ளது. இப்பொழுது அவர்கள் தங்களை இந்துக்கள் என அழைக்கிறார்கள். அவர்கள் தங்களின் மேன்மையான தர்மத்தையும், செயல்களையும் மறந்துவிட்டார்கள். இதனாலேயே அவர்கள் சந்தோஷமற்றவர்கள் ஆகிவிட்டார்கள். சத்தியயுகத்தில், உங்களுடைய தர்மமும், செயல்களும் மேன்மையானவை. இப்பொழுது, கலியுகத்தில், உங்களுடைய தர்மம் சீரழிந்துவிட்டது. நீங்கள் எவ்வாறு வீழ்ந்தீர்கள் என்பது உங்களுடைய புத்தியில் தோன்றுகின்றதா? நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கிறீர்கள். எல்லையற்ற தந்தை வந்து, சுவர்க்கமாகிய புதிய உலகை உருவாக்குகின்றார். அவர் கூறுகிறார்: மன்மனாபவ! இவ்வார்த்தைகள் கீதையிலிருந்தே வந்தன. இலகு இராஜயோகம் என்ற ஞானத்திற்கு கீதை எனும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது உங்களுடைய பாடசாலை. குழந்தைகள் இங்கு வந்து கல்வி கற்கும் பொழுது 'இது எங்களுடைய பாபாவின் பாடசாலை´ என்று அவர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக, ஒரு அதிபரின் குழந்தை கூறுகிறார்: நான் என்னுடைய தந்தையின் கல்லூரியில் கல்வி கற்கின்றேன். அவருடைய தாயும் அதிபராக இருப்பாராயின், அவர் கூறுவார்: என்னுடைய தாய் தந்தை இருவருமே அதிபர்கள். அவர்கள் இருவரும் கற்பிக்கிறார்கள். இது என்னுடைய தாய் தந்தையினுடைய கல்லூரி. நீங்கள் கூறுவீர்கள்: இது எங்களுடைய மம்மா, பாபாவினுடைய பாடசாலை. அவர்கள் இருவரும் கற்பிக்கிறார்கள். அவர்கள் இருவரும் இந்த ஆன்மீகக் கல்லூரியை அல்லது பல்கலைக்கழகத்தைத் திறந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் கற்பிக்கிறார்கள். பிரம்மா உங்களைத் தத்தெடுத்திருக்கிறார். இவை ஞானத்தில் மிக ஆழமான விடயங்கள். தந்தை உங்களுக்கு புதிதாக எதனையும் விளங்கப்படுத்தவில்லை. அவர் சென்ற கல்பத்திலும் உங்களுக்கு இந்த விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். ஆம், அதிகளவு ஞானம் உள்ளதுடன், அது நாளுக்கு நாள் தொடர்ந்தும் ஆழமாகுகின்றது. நீங்கள் எவ்வாறு ஆத்மாவின் விளக்கத்தைப் பெறுகிறீர்கள் என்று பாருங்கள். ஒரு சின்னஞ் சிறிய ஆத்மா தன்னுள் 84 பிறவிகளுக்கான பாகத்தைப் பதிவு செய்து வைத்துள்ளார். அது ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. ஆத்மா அழிவற்றவர், எனவே அவருள் இருக்கும் பாகமும் அழிவற்றது. ஆத்மா செவிகளினூடாகச் செவிமடுக்கின்றார். ஒரு சரீரம் இருக்கும் பொழுது, ஒரு பாகமும் இருக்கும். ஆத்மா சரீரத்திலிருந்து பிரிந்து சென்றதும், எந்த விளைவும் இருக்க மாட்டாது. தந்தை இப்பொழுது கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இந்த அதி மங்களகரமான சங்கமயுகம் வரும்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். தூய்மையே பிரதானமானது, அதுவே இப்பொழுது தேவைப்படுகின்றது. தூய ஆத்மாக்கள் மாத்திரமே அமைதி தாமத்தில் வசிக்கிறார்கள். அமைதி தாமம், சந்தோஷ தாமம் எனும் இரண்டும் தூய தாமங்கள். அங்கு சரீரங்கள் இல்லை. ஆத்மாக்கள் தூய்மையானவர்கள். அங்கு பற்றரியின் சக்தி இழக்கப்படுவதில்லை. நீங்கள் இங்கு ஒரு சரீரத்தை எடுத்ததும், மோட்டார் வேலை செய்யத் தொடங்குகிறது. மோட்டார் கார் இயங்காத போது, பெற்றோல் குறைவடைவதில்லை. ஆத்மாக்களாகிய உங்களுடைய ஒளி இப்பொழுது மிகவும் மங்கலாகிவிட்டது. அது முற்றிலும் அணைந்துவிடவில்லை. ஒருவர் மரணிக்கும் போது, அவர்கள் சிட்டி விளக்கை ஏற்றி, அது அணைந்து விடாமல் மிகக் கவனமாகப் பார்க்கிறார்கள். ஆத்மாவின் ஒளி ஒருபோதும் முற்றாக அணைவதில்லை. அது அழிவற்றது. தந்தை இங்கமர்ந்திருந்து இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் மிக இனிமையான குழந்தைகள் என்பதும், நீங்கள் காமச் சிதையில் அமர்வதனால் எரிந்து விட்டீர்கள் என்பதும் பாபாவுக்குத் தெரியும். நான் உங்களை மீண்டும் விழித்தெழச் செய்கின்றேன். நீங்கள் முற்றிலும் தமோபிரதானான சடலங்கள் ஆகிவீட்டீர்கள். உங்களுக்குத் தந்தையையே தெரியாமல் போய்விட்டது. மனிதர்களால் எந்தப் பயனுமில்லை. மனிதர்களின் சாம்பலில் எந்தப் பயனும் இல்லை. முக்கியஸ்தர்களின் சாம்பல் பயனுடையது என்றும் ஏழைகளின் சாம்பல் பயனற்றது என்றும் அல்ல. அனைத்தும் ஒன்றாகக் கலக்கின்றன: சாம்பல் சாம்பலுடனும், தூசி தூசியுடனும் கலக்கின்றது, அது யாராக இருந்தாலும் பரவாயில்லை. சிலர் தகனம் செய்கின்றார்கள், ஏனையவர்கள் புதைக்கின்றார்கள். பார்சி இனத்தவர் பிரேதங்களை கிணற்றுக்கு மேலே ஒரு கோபுரத்தில் வைக்கிறார்கள். பின்னர் பறவைகள் வந்து சதையை உண்கின்றன. பின்னர் எலும்புகள் கிணற்றுக்குள் விழுந்துவிடும். அது ஓரளவு பயன்படுகிறது. உலகில் அனேகமான மக்கள் இறக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது இயல்பாகவே உங்கள் சரீரத்தை நீக்க வேண்டும். நீங்கள் உங்கள் சரீரத்தை நீக்கி வீடு திரும்புவதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள், அதாவது, நீங்கள் இறப்பதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் ஜீவன்முக்திதாமதிற்குச் செல்வதால், நீங்கள் சந்தோஷமாகச் செல்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் என்ன பாகத்தை நடிக்கின்றீர்களோ, அதே பாகத்தை நீங்கள் இறுதிவரை நடிப்பீர்கள். தந்தை உங்களை முயற்சி செய்வதற்குத் தொடர்ந்தும் தூண்டுவார், பற்றற்ற பார்வையாளரைப் போன்று தொடர்ந்தும் பார்த்துக்கொண்டு இருப்பார். இது புரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும். இதில் பயப்படுவது என்ற கேள்வியே இல்லை. நாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வதற்காக எங்கள் சரீரங்களை நீக்குவதற்கு முயற்சி செய்கின்றோம். நீங்கள் தந்தையை மாத்திரம் சதா நினைவு செய்ய வேண்டும். உங்களுடைய இறுதி எண்ணங்கள் உங்களுடைய இலக்குக்கு உங்களை அழைத்துச் செல்லும். இதற்கு முயற்சி தேவைப்படுகின்றது. ஒவ்வொரு கல்வியிலும் முயற்சி தேவைப்படுகின்றது. கடவுள் உங்களுக்குக் கற்பிப்பதற்காக வந்துள்ளார், எனவே நிச்சயமாக இந்தக் கல்வி மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். இங்கே தெய்வீகக் குணங்கள் தேவைப்படுகின்றன. நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் போன்று ஆக வேண்டும். அவர்கள் சத்தியயுகத்திலேயே வாழ்ந்தார்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை சத்தியயுக தேவர்களாக மாறுவதற்காக இங்கு வந்துள்ளீர்கள். இலக்கும் குறிக்கோளும் மிக இலகுவானது! திரிமூர்த்தியும் மிகத் தெளிவாக உள்ளது. உங்களிடம் பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் படம் இல்லாவிட்டால், எப்படி உங்களால் விளங்கப்படுத்த முடியும்? பிரம்மா விஷ்ணுவாகின்றார், விஷ்ணு பிரம்மாவாகின்றார். அவர்கள் 8 கரங்களை உடைய பிரம்மாவையும்,100 கரங்களை உடைய பிரம்மாவையும் காட்டியுள்ளார்கள். ஏனெனில் பிரம்மாவுக்குப் பல குழந்தைகள் உள்ளார்கள். அதனால், அவர்கள் அப் படங்களை உருவாக்கி இருக்கிறார்கள். எவ்வாறாயினும், மனிதர்கள் பல கரங்களைக் கொண்டிருப்பார்கள் என்பதல்ல. பத்துத் தலை இராவணனும் ஓர் அடையாளமாகும். அவ்வாறான மனிதர் எவரும் இல்லை. தந்தை இங்கிருந்து இதனை விளங்கப்படுத்துகிறார். மக்களுக்கு எதுவும் தெரியாது. இதுவும் நாடகமே. இது எப்பொழுது தொடங்கியது என்பது எவருக்கும் தெரியாது. தொன்றுதொட்டே அது இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆ! ஆனால் அது எப்பொழுது? தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் ஆசிரியரும் குருவும் ஆவார். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். யாருடைய வழிகாட்டல்களினால் இந்த அருங்காட்சியகங்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ளன? இங்கு, தாய், தந்தை குழந்தைகள் இருக்கிறார்கள். பல குழந்தைகள் உள்ளார்கள். வழிகாட்டல்களுக்கேற்பவே நிலையங்கள் தொடர்ந்தும் திறக்கப்படுகின்றன. மக்கள் கூறுகிறார்கள்: கடவுள் ஓர் இரதத்தின் ஊடாகப் பேசுகிறார் என நீங்கள் கூறுகிறீர்கள், எனவே எங்களுக்கு ஒரு காட்சியைக் கொடுங்கள்! ஆ! ஆனால் நீங்கள் ஓர் ஆத்மாவின் காட்சியைப் பெற்றிருக்கிறீர்களா? உங்களால் எப்படி அத்தகைய ஒரு சின்னஞ் சிறிய புள்ளியின் காட்சியைப் பெற முடியும்? அதற்கு அவசியம் இல்லை. இது ஆத்மாவை அறிந்து கொள்கின்ற விடயமாகும். ஆத்மா நெற்றியின் நடுவில் வசிக்கின்றார், ஒரு பெரிய சரீரத்தின் தொழிற்பாடு அதன் அடிப்படையிலேயே இடம்பெறுகிறது. உங்களிடம் இப்பொழுது ஒளிக்கிரீடமோ அல்லது இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடமோ இல்லை. நீங்கள் இரண்டு கிரீடங்களையும் பெறுவதற்கு மீண்டும் ஒருமுறை முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். பாபா உங்களிடம் கேட்கிறார்: நாங்கள் முன்னர் சந்தித்துள்ளோமா? நீங்கள் கூறுகிறீர்கள்: ஆம், பாபா. நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் சந்திக்கின்றோம். ஏன்? இலக்ஷ்மி நாராயணன் போன்று ஆகுவதற்கு. அனைவரும் ஒரே விடயத்தையே கூறுவார்கள். தந்தை கூறுகின்றார்: நல்லது, நீங்கள் மங்களகரமான விடயங்களைக் கூறுவதினால் இப்பொழுது முயற்சி செய்யுங்கள்! அனைவரும் சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆக மாட்டார்கள். பிரஜைகளும் தேவைப்படுகிறார்கள். சத்திய நாராயணனின் கதையும் உள்ளது. அம்மக்கள் அந்தக் கதையை கூறுகின்றார்களாயினும், அவர்களுடைய புத்தியில் எதுவும் புகுவதில்லை. அது அசரீரியான உலகமாகிய அமைதிதாமம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அங்கிருந்து நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள். தந்தை ஒருவரே உங்களைச் சந்தோஷதாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். எவருக்கேனும் விளங்கப்படுத்தி, அவருக்குக் கூறுங்கள்: நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப உள்ளோம். சரீரமற்ற தந்தை மாத்திரமே ஆத்மாக்களாகிய அனைவரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். தந்தை இப்பொழுது வந்திருக்கிறாராயினும், அவர்களுக்கு அவரைத் தெரியாது. தந்தை கூறுகின்றார்: நான் யாருடைய சரீரத்தில் பிரவேசித்துள்ளேன் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இரதமும் இருக்கிறார். ஒவ்வோர் ஆத்மாவும் ஓர் இரதத்தினுள் பிரவேசிக்கின்றார். அனைவரின் ஆத்மாவும் நெற்றியின் மத்தியிலேயே வசிக்கின்றார். தந்தை வந்து இந்த நெற்றியின் மத்தியில் அமர்கின்றார். அவர் மிக இலகுவாக விளங்கப்படுத்துகிறார். தந்தை ஒருவரே தூய்மையாக்குபவர். தந்தையின் குழந்தைகளாகிய அனைவரும் சமமானவர்களே. ஒவ்வொருவரும் தனக்கென தனியான பாகத்தைக் கொண்டிருக்கிறார். அதில் வேறு எவரும் தலையிட முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1.சரீரமாகிய ஆடையிலிருந்து பற்றை அகற்றி, மரணித்து வாழுங்கள்! அதாவது, நீங்கள் உங்களுடைய கடந்தகாலக் கர்மக் கணக்குகள் அனைத்தையும் தீர்க்க வேண்டும்!

2.இரட்டைக் கிரீடம் உடையவர்கள் ஆகுவதற்கு, நீங்கள் கற்பதற்கு முயற்சி செய்யுங்கள். அத்துடன் தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். உங்கள் இலக்குக்கும், மங்களகரமான வார்த்தைகளுக்கும் ஏற்ப, முயற்சியைச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுகின்றவராகவும் எவருக்கும் தீங்கு விளைவிக்கும் எண்ணங்களை முடிப்பவராகவும் இருக்கும் ஒரு ஞானி ஆத்மா ஆகுவீர்களாக.

யாராவது உங்களை இகழ்ந்தாலும், ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் தீங்கு விளைவித்தாலும் அல்லது அவமதித்தாலும், உங்களின் மனதில் அவருக்காக எந்தவிதமான வெறுப்பு உணர்வுகளும் இருக்கக்கூடாது. உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுவது, ஞானி ஆத்மாக்களின் பணியாகும். குழந்தைகளான நீங்கள் 63 பிறவிகளாகத் தந்தையை அவமதித்தீர்கள். அப்படியிருந்தும், தந்தை உங்களை நன்மை செய்யும் பார்வையுடனேயே பார்த்தார். எனவே, தந்தையைப் பின்பற்றுங்கள். ஞானி ஆத்மாவாக இருத்தல் என்றால், எல்லோருக்காகவும் நன்மை செய்யும் உணர்வுகளைக் கொண்டிருப்பதாகும். எவருக்கும் தீங்கு செய்யும் எண்ணம் சிறிதளவையேனும் கொண்டிராதீர்கள்.

சுலோகம்:
உங்களை ‘மன்மனாபவ’ என்ற ஸ்திதியில் ஸ்திரப்படுத்துங்கள். மற்றவர்களின் மனங்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள்.