03.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இது எல்லையற்ற மேடையாகும், இதில் ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் பாகங்களை நடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒவ்வொருவரின் பாகமும் இதில் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

பாடல்:
உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவதற்கு எம் முயற்சியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்?

பதில்:
நீங்கள் கர்மாதீத் ஆகுவதற்கு, உங்களை முற்றாக அர்ப்பணிக்க வேண்டும். எதுவுமே உங்களுடையதல்ல. நீங்கள் அனைத்தையும் மறந்துவிட வேண்டும். அப்பொழுதுதான் உங்களால் கர்மாதீத் ஆக முடியும். தங்கள் செல்வம், சொத்துக்கள், குழந்தைகள் போன்றவற்றை நினைவுசெய்பவர்கள் கர்மாதீத் ஆக முடியாது. ஆகவே, பாபா கூறுகிறார்: நான் ஏழைகளின் பிரபு. ஏழைக் குழந்தைகள் விரைவில் தங்களை அர்ப்பணிக்கிறார்கள். அவர்களால் அனைத்தையும் இலகுவாக மறந்துவிடவும், ஒரேயொரு தந்தையின் நினைவில் இருக்கவும் முடியும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து, தனது ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பது நிச்சயமாகக் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. இது பக்தர்களின் புத்தியில் இல்லை. 84 பிறவிகளின் இந்தச் சக்கரம், இப்பொழுது முடிவுக்கு வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இது மிகப் பெரிய, எல்லையற்ற மேடையாகும். இது ஓர் எல்லையற்ற மேடையாகும். நீங்கள் இந்தப் பழைய மேடையை விட்டு, வீட்டிற்குச் செல்ல வேண்டும். தூய்மையற்ற ஆத்மாக்களால் அங்கு செல்ல முடியாது. நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். இப்பொழுது, இது இந்த நாடகம் முடிவடையும் நேரமாகும். இப்பொழுது இது எல்லையற்ற துன்பத்தின் முடிவாகும். இந்நேரத்தில் சுவர்க்கம் என மக்கள் கருதுகின்ற அனைத்தும், மாயையின் பகட்டாகும். ஏராளமான மாளிகைகள், கார் போன்றவை உள்ளன. அது மாயையின் போட்டி என அழைக்கப்படுகின்றது. அது சுவர்க்கத்திற்கும், நரகத்திற்குமிடையேயான போட்டியாகும். தற்காலிகச் சந்தோஷம் உள்ளது. அது மாயையின் ஈர்ப்பாகும். நாடகத்தின்படி, ஏராளமான மக்கள் உள்ளனர். முதலில், ஒரேயொரு ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் மாத்திரமே இருந்தது. இப்பொழுது மேடை நிரம்பிவிட்டது. இந்தச் சக்கரம் இப்பொழுது முடிவடைவதுடன், அனைவரும் தமோபிரதானாகவும் உள்ளார்கள். உலகமும் தமோபிரதானாக உள்ளது. அது சதோபிரதான் ஆகவேண்டும். முழு உலகமும் புதியதாக ஆக்கப்பட வேண்டும். அது தொடர்ந்து எண்ணற்ற தடவைகள் பழையதிலிருந்து புதியதாகவும், புதியதிலிருந்து பழையதாகவும் ஆகுகிறது. இதுவே அநாதியான நாடகமாகும். அது எப்பொழுது ஆரம்பமானதென உங்களால் கூற முடியாது. அது அநாதியாகத் தொடர்கிறது. உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். வேறெவருக்கும் இது தெரியாது. இந்த ஞானத்தைப் பெறுவதற்கு முன்னர், நீங்களும் எதனையும் அறிந்திருக்கவில்லை. தேவர்கள் கூட இதனை அறிந்திருக்கவில்லை. அதி மேன்மையான சங்கமயுகத்துப் பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே, இது தெரியும். பின்னர் இந்த ஞானம் மறைந்துவிடும். தந்தை உங்களைச் சந்தோஷதாமத்தின் அதிபதிகள் ஆக்குகிறார். ஆகவே, உங்களுக்கு அதனை விட வேறு என்ன வேண்டும்? நீங்கள் அடைவதற்கு விரும்பியவை அனைத்தையும், தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள். அப்பொழுது அவற்றை விட நீங்கள் பெறுவதற்கு வேறு எதுவுமே இல்லை. ஆகவே தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நீங்களே மிகவும் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்களே முதலில் வந்து, பாகங்களை நடிப்பவர்கள். ஆகவே, நீங்களே முதலில் திரும்ப வேண்டியவர்கள். இது ஒரு சக்கரமாகும். நீங்களே முதலில் மாலையில் கோர்க்கப்படுகிறீர்கள். இது உருத்திரரின் மாலையாகும். உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு நூலில் கோர்க்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அந்த நூலிலிருந்து விடுபட்டு, பரந்தாமத்திற்குச் செல்கிறார்கள், பின்னர் அவர்கள் மீண்டும் அவ்வாறு கோர்க்கப்படுகின்றார்கள். மாலை மிகவும் பெரியதாகும். சிவபாபாவிற்கு ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள். தேவர்களாகிய நீங்களே, முதலில் வருபவர்;கள். இது ஓர் எல்லையற்ற மாலையாகும். இதில் அனைவரும் மணிகளைப் போன்று கோர்க்கப்பட்டுள்ளார்கள். உருத்திரரின் மாலையும், விஷ்ணுவின் மாலையும் நினைவுகூரப்படுகின்றன. பிரஜாபிதா பிரம்மாவின் மாலை இல்லை. பிரம்மகுமாரர், குமாரிகள் ஆகிய உங்களின் மாலையும் இல்லை. ஏனெனில் நீங்கள் மேலே ஏறுகிறீர்கள், இறங்குகிறீர்கள், தோற்கடிக்கப்படுபவர் ஆகுகிறீர்கள். மாயை மீண்டும், மீண்டும் உங்களை விழச் செய்கிறாள். இதனாலேயே, பிராமணர்களின் மாலை உருவாக்கப்படவில்லை. நீங்கள் முழுமையாகச் சித்தியடையும்பொழுது, விஷ்ணுவின் மாலை உருவாக்கப்படும். உண்மையில், பிரஜாபிதா பிரம்மாவின் வம்ச விருட்சமும் உள்ளது. நீங்கள் சித்தியடையும்பொழுது, பிரம்மாவின் மாலையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. வம்ச விருட்சம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மாலை உருவாக்கப்பட முடியாது. ஏனெனில், இன்று நீங்கள் தூய்மையாகுகிறீர்கள், ஆனால், நாளையே மாயை உங்களை அறைந்து, அனைத்தையும் இழக்கச் செய்கிறாள். அப்பொழுது நீங்கள் சம்பாதித்த அனைத்தும் இழக்கிறீர்கள். பின்னர், நீங்கள் துண்டிக்கப்படுகிறீர்கள். நீங்கள் எங்கிருந்து வீழ்கிறீர்கள் என்று எண்ணிப் பாருங்கள்! தந்தை உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார். அவருடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியும். நீங்கள் தோற்கடிக்கப்பட்டால், அனைத்தும் முடிந்து விடுகின்றது. காமம் என்ற விகாரமே மிகப்பெரிய எதிரியாகும். நீங்கள் அதனால் தோற்கடிக்கப்படக்கூடாது. மற்றைய விகாரங்கள் அனைத்தும், அதன் குழந்தைகளே. காமம் என்ற விகாரமே கொடிய எதிரியாகும். இதனையே நீங்கள் வெல்ல வேண்டும். காமத்தை வெல்வதன் மூலம் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். இந்த ஐந்து விகாரங்களும் அரைக் கல்பத்திற்கு உங்கள் எதிரிகளாக இருந்தவை என்பதால் அவை உங்களை விட்டுவிட மாட்டாது. தாங்கள் கோபப்பட வேண்டியுள்ளது என்று அனைவரும் கூக்குரலிடுகிறார்கள். அதற்கு என்ன தேவையுள்ளது? அனைத்தையும் அன்பினாலும் அடைய முடியும். நீங்கள் ஒரு திருடனுக்கு அன்புடன் விளங்கப்படுத்தினால், அவன் விரைவில் உண்மையைக் கூறிவிடுவான். தந்தை கூறுகிறார்: நானே அன்புக் கடல். ஆகவே குழந்தைகளே, நீங்கள் அனைத்தையும் அன்புடன் செய்ய வேண்டும். ஒருவர் எப்பதவியில் இருந்தாலும் சரி - இராணுவத்தில் இருப்பவர்கள் கூட பாபாவிடம் வருகிறார்கள் - அவர்களுக்கும் பாபா விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல விரும்பினால், சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். அவர்களுக்குக் கூறப்படுகிறது: நீங்கள் யுத்த களத்தில் மரணித்தால், சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். உண்மையில் இதுவே யுத்தகளமாகும். அம் மக்கள் யுத்தகளத்தில் யுத்தம் புரியும்பொழுது மரணிக்கிறார்கள். பின்னர் அவர்கள் இங்கு இன்னொரு பிறவியை எடுக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அந்தச் சம்ஸ்காரத்தைத் தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். அவர்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. ஆகவே பாபா அவர்களுக்கு விளங்கப்படுத்துவதுண்டு: சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுவதனால், சிவபாபாவை நினைவுசெய்வதால், உங்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும். சிவபாபாவை நினைவு செய்வதால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் இந்த ஞானத்தில் ஒரு சிறிதளவைப் பெற்றுக்கொண்டாலும், இந்த அழியாத ஞானம் ஒருபொழுதும் அழிக்கப்பட மாட்டாது. குழந்தைகளாகிய நீங்கள் ஒன்றுகூடல்கள் போன்றவற்றை நடத்தும்பொழுது, பல பிரஜைகள் போன்றவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். நீங்களே ஆன்மீக இராணுவத்தினர். இங்கு ஒரு சில கொமாண்டர்களும், மேஜர் போன்றவர்களும் இருக்கிறார்கள். பல பிரஜைகள் உருவாக்கப்படுகிறார்கள். நன்றாக விளங்கப்படுத்துபவர்கள் ஏதாவதொரு நல்ல பதவியைப் பெறுவார்கள். அவர்கள் மத்தியிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் தரத்தினர் உள்ளார்கள். நீங்கள் தொடர்ந்தும் அவர்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கும்பொழுது, சிலர் மிகச்சரியாக உங்களைப் போன்று ஆகுகிறார்கள். சிலரால் அனைவரையும் விட முன்னோக்கிச் செல்ல முடியும். அவர்கள் ஒருவரை விட மற்றொருவர் முன்னேறிச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. புதியவர்கள் பழையவர்களை விட முன்னேறிச் செல்கின்றார்;கள். நீங்கள் தந்தையுடன் பூரணமாக யோகம் செய்தால், உங்களால் மிக உயரத்திற்குச் செல்ல முடியும். அனைத்தும் யோகத்திலேயே தங்கியுள்ளது. இந்த ஞானம் மிகவும் இலகுவானது என்று நீங்கள் உணர்கிறீர்கள். தந்தையை நீங்கள் நினைவுசெய்வதில் தடைகள் உள்ளன. தந்தை கூறுகிறார்: நீங்கள் உண்ணும்பொழுது, உணவை தந்தையின் நினைவில் இருந்தவாறு உண்ணுங்கள். எவ்வாறாயினும், சிலர் இரண்டு நிமிடங்கள் அல்லது ஐந்து நிமிடங்கள் நினைவில் இருக்கின்றார்கள். முழு நேரமும் நினைவில் அமர்ந்திருப்பது, எவருக்குமே மிகவும் கடினமானதாகும். மாயை உங்களை எங்காவது ஓர் இடத்திற்குக் கூட்டிச் சென்று, உங்களை மறக்கச் செய்கிறாள். வேறு எவரையுமன்றி, தந்தையை மாத்திரம் நினைவுசெய்வதாலேயே உங்களால், உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைய முடியும். ஏதாவது உங்களுக்குச் சொந்தமானதாக இருந்தால், நீங்கள் நிச்சயமாக அதனை நினைவு செய்வீர்கள். எதுவும் நினைவுசெய்யப்படக்கூடாது. இந்த பாபா ஓர் உதாரணமாகும். அவர் எதனை நினைவுசெய்வார்? அவர் தனது குழந்தைகளை அல்லது தனது செல்வம் போன்றவற்றை நினைவுசெய்வாரா? அவர் குழந்தைகளாகிய உங்களை மாத்திரம் நினைவுசெய்கின்றார். தந்தை நிச்சயமாக உங்களை நினைவுசெய்வார், ஏனெனில், அவர் உங்களுக்கு நன்மை செய்யவே வந்துள்ளார். அவர் அனைவரையும் நினைவுசெய்கிறார். ஆனால, அவரது புத்தி மலர்களின் பக்கமே ஈர்க்கப்படுகிறது. பல வகையான மலர்கள் உள்ளன. சில நறுமணம் அற்றவை. இது ஒரு பூந்தோட்டமாகும். தந்தையும் பூந்தோட்டத்தின் அதிபதி என்றும், பூந்தோட்டக்காரர் என்றும் அழைக்கப்படுகிறார். மக்கள் கோபத்;தால் எவ்வாறு சண்டை, சச்சரவு செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவர்களுக்குப் பெருமளவு சரீர உணர்வு உள்ளது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: எவராவது கோபப்பட்டால், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். கோபம் ஒரு தீய ஆவியாகும். ஒரு தீய ஆவிக்கு நீங்கள் மௌனமாகவே பதிலளிக்க வேண்டும். கடவுளின் வழிகாட்டலான, ஸ்ரீமத் பகவத் கீதை, அனைத்துச் சமயநூல்களினதும் இரத்தினமாகும். கடவுள் மாத்திரமே வந்து, எங்களுக்கு இறை வழிகாட்டல்கள், அசுர வழிகாட்டல்கள், தெய்வீக வழிகாட்டல்களைப் பற்றிக் கூறுகிறார். அவர் இராஜயோகத்தின் ஞானத்தைத் தருகிறார். இந்த ஞானம் பின்னர் மறைந்துவிடும். நீங்கள் அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகிய பின்னர், இந்த ஞானத்தைக் கொண்டு என்ன செய்வீர்கள்? நீங்கள் 21 பிறவிகளுக்கான வெகுமதியைப் பெறுகிறீர்கள். இந்தக் குறிப்பிட்ட முயற்சியின் பலனே அது என்பதை நீங்கள் அங்கு தெரிந்துகொள்ள மாட்டீர்கள். நீங்கள் பல தடவைகள் சத்திய யுகத்திற்குச் சென்றிருக்கிறீர்கள். இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. சத்திய, திரேதா யுகங்களே இந்த ஞானத்தின் பலனாகும். அங்கு நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள் என்றில்லை. தந்தை இங்கு வந்து, உங்களுக்குப் பக்தியின் பலனான, இந்த ஞானத்தைத் தருகிறார். நீங்களே அதிகளவு பக்தியைச் செய்திருக்கிறீர்கள் என தந்தை உங்களுக்குக் கூறியிருக்கிறார். இப்பொழுது ஒரேயொரு தந்தையை நினைவுசெய்தால், நீங்கள் தமோபிரதானிலிருந்து, சதோபிரதான் ஆகுவீர்கள். இதற்கு முயற்சி தேவை. படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை நினைவு செய்தால், நீங்கள் பூகோளத்தை ஆள்பவர்கள் ஆகுவீர்கள். கடவுள் குழந்தைகளாகிய உங்களை இறைவர்களாகவும், இறைவிகளாகவும் ஆக்குகிறார். எவ்வாறாயினும் சரீரதாரிகளை இறைவர்கள் என்றும், இறைவிகள் என்றும் அழைப்பது தவறாகும். பிரம்மா, விஷ்ணு மற்றும் சங்கரர் ஆகியோருக்கிடையே ஆழமான தொடர்பொன்று உள்ளது. இந்தப் பிரம்மா, பின்னர் விஷ்ணு ஆகுவார். சிவன் இவருக்குள் பிரவேசிக்கிறார். சூட்சும உலகத்தில் இருப்பவர்கள் தேவதைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் தேவதைகள் ஆகவேண்டும். உங்களுக்குக் காட்சிகள் கிடைக்கின்றன. அவ்வாறன்றி, அங்கு வேறெதுவும் இருக்காது. அங்கு மௌனமும், பின்னர் அசைவும், பின்னர் இங்கு பேச்சும் இருக்கும். இதுவே விபரமாகும். ஆனால் மீண்டும் ஒரு முறை உங்களுக்குச் சுருக்கமாகக் கூறப்படுகிறது: மன்மனாபவ! சதா என்னை மாத்திரம் நினைவுசெய்வதுடன், உலகச் சக்கரத்தையும் நினைவுசெய்யுங்கள்! இங்கு அமர்ந்திருக்கும்பொழுது, அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்யுங்கள். தொடர்ந்தும் இந்தப் பழைய துன்ப பூமியை மறந்து விடுங்கள்! இது உங்கள் புத்தி மூலமான எல்லையற்ற துறவறமாகும். அவர்களுடையது எல்லைக்குட்பட்ட துறவறமாகும். துறவறப் பாதையில் இருப்பவர்களால் இல்லறப் பாதைக்கான இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. அரசர்களும், அரசிகளும் ஆகுவது இல்லறப் பாதையாகும். அங்கு சந்தோஷம் மாத்திரமே இருக்கின்றது. அம் மக்களுக்குச் (சந்நியாசிகள்) சந்தோஷத்தில் நம்பிக்கையில்லை. மில்லியன் கணக்கான சந்நியாசிகள் இருக்கிறார்கள். அவர்களின் பராமரிப்பும், வருமானமும் இல்லறத்தில் இருப்பவர்களிடமிருந்தே வருகிறது. முதலில் நீங்கள் உங்கள் பணத்தைத் தான, தர்மங்கள் செய்வதில் செலவழித்;தீர்கள். பின்னர் நீங்கள் பாவம் நிறைந்த வியாபாரத்தைச் செய்தீர்கள். ஆகவே நீங்கள் பாவாத்மாக்கள் ஆகினீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஒருவருக்கொருவர் அழிவற்ற ஞான இரத்தினங்களைப் பரிமாறுகிறீர்கள். தர்மசாலைகள் போன்றவற்றைக் கட்டும் அந்த மக்கள் தங்களின் அடுத்த பிறவியில் சிறந்த பலனைப் பெறுகிறார்கள். அந்த ஒருவரே எல்லையற்ற தந்தையாவார். இது நேரடியானது. மற்றையது மறைமுகமானது. அவர்கள் அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறார்கள். ஆனால், எவருமே இதற்கான பசியை கொண்டிருப்பதில்லை. சிவபாபாவே அருள்பவர். அவருக்குப் பசிக்குமா? ஸ்ரீகிருஷ்ணர் அருள்பவர் அல்லர். தந்தை ஒருவரே அனைவருக்கும் அருள்பவர். அவர் எதனையும் பெறுவதில்லை. நீங்கள் ஒன்றைக் கொடுத்தால், அதற்குப் பிரதிபலனாகப் பத்து மடங்கை பெறுகின்றீர்கள். ஏழைகள் இரண்டு ரூபாய் கொடுத்தாலும், அதற்கு வெகுமதியாக பல மில்லியன்களைப் பெறுகின்றார்கள் (சுதாமாவின் உதாரணம்) பாரதம் தங்கச் சிட்டுக் குருவியாக இருந்தது. தந்தை உங்களை மிகவும் செல்வந்தர்களாக ஆக்கினார். சோமநாதர் ஆலயத்தில் எல்லையற்ற செல்வம் இருந்தது. அந்த மக்கள் அதிகளவு கொள்ளையடித்தார்கள். அங்கு மிகப் பெரிய வைரங்களும், இரத்தினங்களும் இருந்தன. இப்பொழுது நீங்கள் அவற்றை எங்குமே காணமுடியாது. அவை அனைத்தும் வெட்டப்பட்டு விட்டன. பின்னர் வரலாறு மீண்டும் இடம்பெறும். அங்கு அனைத்துச் சுரங்கங்களும் உங்களுக்காக நிறைந்திருக்கும். அங்குள்ள வைரங்களும், இரத்தினங்களும் கற்களைப் போன்றிருக்கும். இந்த அழியாத ஞான இரத்தினங்களைத் தந்தை உங்களுக்குத் தருகிறார். அதனால் நீங்கள் மிகுந்த செல்வந்தர்கள் ஆகுகிறீர்கள். ஆகவே இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கவேண்டும். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாகத் தொடர்ந்து கற்கின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமாக, உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். எவராவது ஒரு முக்கிய பரீட்சையில் சித்தியடையும்பொழுது, அவரின் புத்தியில் நான் இந்தப் பரீட்சையில் சித்தியடைந்ததும், இவ்வாறாகி, இதனைச் செய்வேன் என்பது இருக்கின்றது. நீங்கள் அந்தத் தேவர்கள் ஆகுவீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும். அவை உயிரற்ற விக்கிரகங்கள். ஆனால் நாங்கள் அங்கு உயிருள்ள விக்கிரகங்களாக இருப்போம். நீங்கள் உருவாக்கியுள்ள படங்கள் எங்கிருந்து வந்தன? தெய்வீகக் காட்சிகளில் நீங்கள் அவற்றைக் கண்டீர்கள். அந்தப் படங்கள் மிகவும் அற்புதமானவை. அவற்றை பிரம்மா செய்ததாகச் சிலர் நினைக்கிறார்கள். அவர் அதனை எவரிடமிருந்தும் கற்றிருந்தால், அதனைக் கற்றவராக ஒருவர் மாத்திரம் இருந்திருக்க மாட்டார். மற்றவர்களும் கற்றிருப்பார்கள். இந்த ஒருவர் கூறுகிறார்: நான் எதனையும் கற்கவில்லை. உங்கள் தெய்வீகக் காட்சிகள் மூலம் தந்தையே அவற்றைச் செய்தார். இந்தப் படங்கள் அனைத்தும் ஸ்ரீமத்திற்கு ஏற்பவே செய்யப்பட்டுள்ளன. அவை மனிதர்களின் கட்டளைகளுக்கு அமையச் செய்யப்பட்ட படங்கள் அல்ல. அவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். அவற்றின் பெயரோ அல்லது சுவடோ எஞ்சியிருக்காது. இது இந்த உலகத்தின் முடிவாகும். பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்கள் ஏராளமாக உள்ளன. அவை எவையும் எஞ்சியிருக்காது. புதிய உலகில் அனைத்தும் புதியனவாக இருக்கும். நீங்கள் பல தடவைகள் சுவர்க்க அதிபதிகள் ஆகிவிட்டீர்கள். பின்னர் மாயை உங்களைத் தோற்கடித்தாள். விகாரங்களே மாயை என்று அழைக்கப்படுகின்றன, செல்வம் அல்ல. குழந்தைகளாகிய நீங்கள் அரைக் கல்பத்திற்கு இராவணனின் சங்கிலியில் அகப்பட்டு இருக்கிறீர்கள். இராவணனே மிகப்பழைய எதிரியாவான். அவனுடைய இராச்சியம் அரைக் கல்பத்திற்குத் தொடர்கின்றது. அவர்கள் அது நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கானது எனகக் கூறும்பொழுது, அரைவாசி, அரைவாசி என்ற கணக்கீடு சரியாக இருக்க மாட்டாது. அதிகளவு வித்தியாசம் உள்ளது! முழுச் சக்கரத்தினதும் ஆயுட்காலம் 5000 ஆண்டுகள் என்று தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். 8.4 மில்லியன் ஐீவராசிகள் இருக்க முடியாது. அது பெரிய பொய்யாகும். சூரிய, சந்திர வம்சத்துத் தேவர்கள் நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆட்சிசெய்தார்களா? அவர்களுடைய புத்தி இயங்குவதில்லை. இந் நேரத்தில் சந்நியாசிகள் தாங்கள் செய்பவை தவறெனக் கருதினால், அவர்களுடைய சிஷ்யர்கள் அவர்களை விட்டுச் சென்று விடுவார்கள். அப்பொழுது ஒரு புரட்சி இருக்கும். இதனாலேயே அவர்கள் இப்பொழுது உங்கள் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதில்லை, தங்கள் இராச்சியத்தையும் விட்டு வருவதில்லை. அவர்கள், இப்பொழுதல்ல, இறுதியிலேயே சிறிதளவைப் புரிந்துகொள்வார்கள். செல்வந்தர்களும் ஞானத்தைப் பெற மாட்டார்கள். தந்தை கூறுகிறார்: நான் ஏழைகளின் பிரபு. செல்வந்தர்கள் ஒருபொழுதும் தங்களை அர்ப்பணிக்கவும் மாட்டார்கள், தங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையவும் மாட்டார்கள். தந்தை மிகவும் சக்தி நிறைந்த பங்குத் தரகராவார். அவர் ஏழைகளிடமிருந்து மாத்திரமே பெறுகிறார். அவர் செல்வந்தர்களிடமிருந்து பெற்றால், அதற்குப் பிரதிபலனாக அந்தளவு கொடுக்க வேண்டியிருக்கும். செல்வந்தர்கள் அரிதாகவே வருகின்றார்கள். ஏனெனில் இங்கு அவர்கள் அனைத்தையும் மறக்க வேண்டும். உங்களிடம் எதுவும் இல்லாதபொழுதே உங்களால், உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைய முடியும். செல்வந்தர்களால், மறக்க முடியாதுள்ளது, முன்னைய கல்பத்தில் தங்கள் ஆஸ்தியைப் பெற்றவர்கள் மீண்டும் பெறுவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை அன்புக்கடலாக இருப்பது போன்று, நீங்களும் மாஸ்டர் அன்புக் கடல்கள் ஆகுவதுடன், அனைத்துக் கருமங்களையும் அன்புடன் நிறைவேற்றுங்கள். கோபப்படாதீர்கள். எவராவது கோபப்பட்டால் மௌனமாக இருங்கள்.

2. இப் பழைய துன்ப உலகை, உங்கள் புத்தியிலிருந்து அகற்றி, எல்லையற்ற சந்நியாசி ஆகுங்கள். அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்யுங்கள். ஒருவருக்கொருவர் அழியாத ஞான இரத்தினங்களைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
விகாரங்கள் என்ற நச்சு பாம்பை உங்கள் கழுத்து மாலை ஆக மாற்றி, சங்கரரை போன்று தபஸ்யா ரூபமானவர் ஆகுவீர்களாக.

ஐந்து விகாரங்களும் மக்களுடைய நச்சு பாம்பாகும். ஆனால் அப்பாம்பு யோக பரிசோதனை செய்கின்ற யோகி ஆத்மாக்களான உங்கள் கழுத்து மாலை ஆகுகின்றது. சங்கரரின் சரீரமற்ற, தபஸ்வி வடிவத்தின் ரூபமானது பிராமணர்களாகிய உங்களுடையதும், தந்தை பிரம்மாவினதும் ஞாபகார்த்தமாகும், அது இன்றும் வழிபாடு செய்யப்படுகின்றது. இரண்டாவதாக, இந்த பாம்பு நீங்கள் சந்தோஷ நடனமாடுகின்ற மேடையாகுகின்றது. இந்த ஆன்மிக ஸ்திதியே பௌதீக மேடை என்ற வடிவத்தில் காட்டப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் விகாரங்களின் மீது அத்தகையதொரு வெற்றியை ஈட்டும் போது நீங்கள் யோக சக்தியினால் பரிசோதனை செய்கின்ற ஓர் ஆத்மா என்றும் தபஸ்ய வடிவமானதோர் ஆத்மா எனவும் அழைக்கப்படுகிறீர்கள்.

சுலோகம்:
இனிமையான அமைதிநிறைந்த சுபாவத்தைக் கொண்டிருப்பவர்களை, கோபம் என்ற தீய ஆவியினால் தாக்க முடியாது.