12.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். எனவே, தந்தையை நினைவு செய்வதற்கும், உங்களது நடத்தையைச் சீர்திருத்துவதற்கும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

பாடல்:
அறியாமைப் பாதையில் உங்களை நித்திரையில் ஆழ்த்துவது எது? அதனால் எத்தகைய சேதம் ஏற்படுகின்றது?

பதில்:
சக்கரத்தின் காலப்பகுதி நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனக் கூறுவது, அனைவரையும் அறியாமை என்ற உறக்கத்தில் ஆழ்த்துகின்றது. இதன் மூலமாகவே அவர்கள் ஞானக் கண்ணை இழந்துவிட்டார்கள். வீடு வெகு தொலைவில் இருப்பதாக அவர்கள் கருதுகின்றார்கள். தாங்கள் இன்ப, துன்பங்களைக் கொண்ட பாகத்தை நூறாயிரக் கணக்கான வருடங்கள் நடிக்க வேண்டும் என்பதே அவர்களது புத்தியில் இருப்பதால், அவர்கள் தூய்மையாகுவதற்கு முயற்சி செய்வதில்லை. வீடு இப்பொழுது மிக அண்மித்திருப்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் இப்பொழுது முயற்சி செய்து, கர்மாதீதம் ஆகவேண்டும்.

ஓம் சாந்தி.
தந்தை இப்பொழுது இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு உங்களது வீட்டை ஞாபகப்படுத்தியுள்ளார். பக்தி மார்க்கத்தில் மக்கள் வீட்டை நினைவு செய்தாலும், எவ்வாறு அல்லது எப்பொழுது அங்கு செல்வது என்பது பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. சக்கரத்தின் காலப்பகுதி நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனக் கூறியதன் மூலம் அவர்கள் தங்களது வீட்டை மறந்துவிட்டார்கள். தாங்கள் இன்னமும் நூறாயிரக்கணக்கான வருடங்கள் தங்களது பாகத்தை நடிப்போம் என நம்புவதால், அவர்கள் தங்களது வீட்டை மறந்துவிட்டார்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார்: குழந்தைகளே, உங்களது வீடு மிக அண்மையிலேயே உள்ளது. நீங்கள் இப்பொழுது வீடு செல்ல வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் என்னைக் கூவியழைத்ததால், நான் வந்துவிட்டேன். நீங்கள் என்னுடன் வருவீர்களா? இது மிக இலகுவானது! பக்தி மார்க்கத்தில், தாங்கள் எப்பொழுது முக்திதாமத்திற்குச் செல்வோம் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். முக்தியே வீடு எனப்படுகின்றது. நூறாயிரக் கணக்கான வருடங்கள் எனக் கூறியதனால், அவர்கள் அனைத்தையும் மறந்துவிட்டார்கள். அவர்கள் தந்தையையும், அத்துடன் வீட்டையும் மறந்துவிட்டார்கள். நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனக் கூறுவதால் பெருமளவு வேறுபாடு ஏற்படுத்தப்படுகின்றது. அது அவர்கள் அறியாமை உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டதைப் போன்று உள்ளது. எவருமே எதையும் புரிந்துகொள்வதில்லை. பக்தி மார்க்கத்தில், அவர்கள் வீட்டை வெகு தொலைவில் காண்பிக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அற்புதம்! இப்பொழுது நீங்கள் முக்திதாமத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் நூறாயிரக்கணக்கான வருடங்கள் பக்தி செய்கின்றீர்கள் என்றில்லை. பக்தி எப்பொழுது ஆரம்பித்தது என்பதுகூட உங்களுக்குத் தெரியாது. நூறாயிரக்கணக்கான வருடங்களைக் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் தந்தையையும், வீட்டையும் மறக்கின்றார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர்கள் அநாவசியமாக அதனைத் தொலைவாக்கி விட்டார்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: குழந்தைகளே, உங்களது வீடு மிக அண்மையிலேயே உள்ளது. நான் இப்பொழுது உங்களைத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றேன். நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். நீங்கள் கங்கையில் நீராடினீர்கள், எனினும் உங்களில் எவருமே தூய்மையாகவில்லை. நீங்கள் தூய்மையாகியிருந்தால், வீட்டிற்குச் சென்றிருப்பீர்கள். எவ்வாறாயினும், வீட்டைப் பற்றியோ, தூய்மையைப் பற்றியோ உங்களுக்குத் தெரியாது. மக்கள் அரைக் கல்பமாக பக்தி செய்வதால், அவர்களால் அதனை நிறுத்த முடியாதுள்ளது. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: பக்தி இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. பக்தியில் தொடர்ந்தும் எல்லையற்ற துன்பமே இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் நூறாயிரக் கணக்கான வருடங்களாகத் துன்பத்தைப் பார்த்திருக்கின்றீர்கள் என்றில்லை. நூறாயிரக்கணக்கான வருடங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. கலியுகத்தில், நீங்கள் பல விகாரங்களாலும் அவலட்சணமாகியபோது உண்மையான துன்பத்தை அனுபவித்தீர்கள். முன்னர், நீங்கள் ரஜோ ஸ்திதியில் இருந்தபோது, உங்களிடம் சிறிதளவு புரிந்துணர்வு இருந்தது. ஆனால் இப்பொழுது, முற்றிலும் விவேகமற்றவர்கள் ஆகிவிட்டீர்கள்! குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது கூறப்பட்டுள்ளது: நீங்கள் சந்தோஷதாமத்திற்குச் செல்ல விரும்பினால், தூய்மையாகுங்கள்! உங்கள் தலைமீதுள்ள, பல பிறவிகளின் பாவச் சுமையை நினைவினால் அகற்றுங்கள். நினைவின் மூலமாகவே நீங்கள் மிகவும் சந்தோஷமானவர்கள் ஆகுவீர்கள். உங்களை அரைக் கல்பத்திற்கு சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்கின்ற தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனைப் போன்று ஆகவேண்டும். எனவே, தூய்மையாகி உங்களது நடத்தையைச் சீர்திருத்துங்கள். விகாரங்கள் தீய ஆவிகள் எனப்படுகின்றன. பேராசை என்ற தீய ஆவியும் சற்றும் குறைந்ததல்ல. அத் தீய ஆவி மிகவும் தூய்மையற்றது. அது மக்களை முற்றிலும் அவலட்சணமாக்குகின்றது. பேராசைகூட உங்களை அதிகளவு பாவங்கள் செய்ய வைக்கின்றது. ஐந்து விகாரங்களும் மிகவும் பலம் வாய்ந்த தீய ஆவிகளாகும். நீங்கள் அவையனைத்தையும் துறக்க வேண்டும். பேராசையைத் துறப்பது என்பது காமத்தைத் துறப்பது போன்று கடினமானதாகும். பற்றைத் துறப்பதும்கூட, காமத்தைத் துறப்பது போன்று கடினமானதாகிவிட்டது. அவர்களால் அதனைத் துறக்க முடியாதுள்ளது. தந்தை உங்களது வாழ்க்கை முழுவதையும் விளங்கப்படுத்துகின்றார், எனினும் பற்றின் இழைகள் இணைக்கப்பட்டே உள்ளன. கோபம்கூட பெருமளவு சிரமத்துடனேயே துறக்கப்படுகின்றது. மக்கள் கூறுகின்றனர்: நான் குழந்தைகள்மீது கோபப்படுகின்றேன். அவர்கள் “கோபம்” என்ற வார்த்தையைக் குறிப்பிடுகின்றனர். தீய ஆவிகள் எதுவும் வரக்கூடாது. நீங்கள் அவற்றை வெற்றிகொள்ள வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் இங்கிருக்கும்வரை தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள். தந்தை எத்தனை வருடங்கள் இங்கு இருப்பார்? தந்தை இங்கிருந்தவாறு பல வருடங்களாக விளங்கப்படுத்துகின்றார். அவர் சிறந்த கால அவகாசத்தைக் கொடுத்திருக்கின்றார். உலகச் சக்கரத்தை அறிந்துகொள்வது மிக இலகுவானது. முழு ஞானமும் ஏழு நாட்களில் உங்களது புத்தியில் பதிந்துகொள்கின்றது. எனினும், பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படுவதற்குக் காலமெடுக்கும். இதுவே சிரமமாகும். பாபா உங்களுக்கு இதற்காக நேரம் தருகின்றார். உங்களை முற்றிலும் மறக்க வைப்பதற்காக மாயையிடமிருந்து பெருமளவு எதிர்ப்பு வருகின்றது. இங்கு அமர்ந்திருக்கும்போது, முழு நேரமும் நீங்கள் நினைவில் இருப்பதில்லை. உங்களது புத்தி பல திசைகளிலும் அலைபாய்கின்றது. இதனாலேயே முயற்சி செய்து, உங்களது கர்மாதீத நிலையை அடைவதற்கு நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும். கல்வி மிக இலகுவானது. ஒரு விவேகமான குழந்தை 84 பிறவிகளின் இச்சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பது பற்றிய ஞானம் முழுவதையும் ஏழு நாட்களில் புரிந்துகொள்வார். எவ்வாறாயினும், தூய்மையாகுவதற்கு முயற்சி தேவை. இதனாலேயே பெருமளவு குழப்பம் ஏற்படுகின்றது. இதுவே சரி என்பதை மக்கள் புரிந்துகொள்கின்றார்கள். பிரம்ம குமாரிகள் அனைவரையும் சகோதர, சகோதரிகள் ஆக்குகின்றனர் எனக் கூறி அவர்கள் அவதூறை ஏற்படுத்தினார்கள். எவ்வாறாயினும், இது முற்றிலும் சரியானதே. நாங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆகாமல் எவ்வாறு தூய்மையாக இருக்க முடியும்? எவ்வாறு நாங்கள் குற்றப் பார்வையிலிருந்து குற்றமற்ற பார்வையுடையவர்களாக மாறலாம்? இது மிகச் சிறந்த ஒரு முறையாகும்: நாங்கள் பிரம்ம குமாரர்களும், குமாரிகளும் என்பதால், சகோதர சகோதரிகளாவோம். உங்களது கண்களைக் குற்றமற்றது ஆக்குவதற்கு, இதன் மூலமாகப் பெருமளவு உதவியைப் பெறுகின்றீர்கள். பிரம்மாவின் பணியும் உள்ளது. பிரம்மாவின் மூலமாகவே தேவ தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அதாவது, மனிதர்கள் தேவர்கள் ஆக்கப்படுகின்றனர். தந்தை அதி மங்களகரமான சங்கமயுகத்திலேயே வருகின்றார். எனவே, இதனை விளங்கப்படுத்துவதற்கு நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதற்காக நிலையங்கள் திறக்கப்படுகின்றன. நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறவேண்டும். கடவுள் அசரீரியானவர், கிருஷ்ணரோ சரீரதாரியாவார். அவரைக் கடவுள் என அழைக்க முடியாது. கடவுள் வந்து, பக்தியின் பலனைக் கொடுப்பார் என மக்கள் கூறுகின்றனர், எனினும் கடவுளின் அறிமுகத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை. நீங்கள் அதிகளவு விளங்கப்படுத்துகின்றீர்கள். இருந்தும், அவர்கள் புரிந்து கொள்வதில்லை. சரீரதாரிகள் நிச்சயமாக மறுபிறவி எடுக்கின்றார்கள். அவர்களிடமிருந்து ஆஸ்தியைப் பெற முடியாது. ஆத்மாக்கள் பரமதந்தை, பரமாத்மாவிடமிருந்தே இந்த ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். மனிதர்களால் மனிதர்களுக்கு ஜீவன் முக்தியை அருள முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஆஸ்தியைப் பெறுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். தந்தையைச் சந்திப்பதற்காக நீங்கள் அதிகளவில் அலைந்து திரிந்தீர்கள். முன்னர், நீங்கள் சிவனை மாத்திரமே வழிபட்டதுடன், வேறு எங்குமே சென்றதில்லை! அது கலப்படமற்ற பக்தியாக இருந்தது. வேறு எவருக்குமே அந்தளவு ஆலயங்கள் இருக்கவில்லை. இப்பொழுது பல உருவங்கள் உள்ளன. மக்கள் ஆலயங்கள் பலவற்றைக் கட்டுகின்றார்கள். பக்தி மார்க்கத்தில், நீங்கள் பெருமளவு முயற்சி செய்தாக வேண்டும். சமய நூல்களில், முக்திக்கும் அல்லது சற்கதிக்குமான எந்தவழியும் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரேயொரு தந்தையே உங்களுக்கு அதனைக் காட்டுகின்றார். பக்தி மார்க்கத்தில் அவர்கள் தொடர்ந்தும் பல ஆலயங்களைக் கட்டுகின்றார்கள். உண்மையில், சத்தியயுகத்தில் வாழ்ந்த தேவர்களுக்கு மாத்திரமே ஆலயங்கள் கட்டப்படுகின்றன. ஏனைய மனிதர்கள் தூய்மையற்றிருப்பதால், அவர்களுக்கு ஆலயங்கள் கட்டப்படுவதில்லை. தூய்மையற்ற மனிதர்கள் தூய்மையான தேவர்களை வழிபடுகின்றார்கள். அவர்களும் மனிதர்களேயாயினும், அவர்களிடம் தெய்வீகக் குணங்கள் உள்ளன. தெய்வீகக் குணங்கள் ௮ற்றவர்கள் அவர்களை வழிபடுகின்றார்கள். நீங்களே பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களிலிருந்து பூஜிப்பவர்களாகினீர்கள். மனிதர்களை வழிபடுதல் என்றால், பஞ்ச தத்துவங்களையும் வழிபடுதல் என்பதாகும். சரீரமானது பஞ்ச தத்துவங்களாலானது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முக்தி தாமத்திற்கு திரும்பிச் செல்லவேண்டும். அதற்காகவே நீங்கள் அதிகளவு பக்தி செய்தீர்கள். இப்பொழுது நான் உங்களைத் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்கின்றேன். பின்னர், நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்வீர்கள். தந்தை உங்களைத் தூய்மையற்ற உலகிலிருந்து தூய உலகிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றார். முக்தி தாமம், ஜீவன் முக்தி தாமம் என இரு தூய உலகங்கள் உள்ளன. தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் வருகின்றேன். பக்தி மார்க்கத்தில் நீங்கள் அதிகளவு துன்பத்தை எடுத்துக்கொள்கின்றீர்கள். நாங்கள் நாலா திசைகளிலும் அலைந்து திரிந்தோம், இருந்தும் உங்களிலிருந்து வெகு தொலைவிலேயே இருந்தோம் என்ற பாடலும் உள்ளது. யாரிடமிருந்து நாங்கள் தொலைவில் இருந்தோம்? தந்தையிடமிருந்தாகும். தந்தையைக் கண்டுகொள்வதற்காக நீங்கள் பிறவி பிறவியாக அலைந்து திரிந்தீர்கள். இருந்த போதிலும், தந்தையிடமிருந்து விலகித் தொலைவிலேயே இருந்தீர்கள். இதனாலேயே மக்கள் கூவியழைக்கின்றனர்: ஓ, தூய்மையாக்குபவரே வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களை இவ்வாறு ஆக்க முடியாது. எனவே இது 5000 வருடங்கள் கொண்ட ஒரு நாடகமாகும். நீங்கள் அனைவரும் நாடகத்தின்படி, கடந்த கல்பத்தில் செய்ததைப் போன்றே முயற்சி செய்கின்றீர்கள். அதற்கேற்பவே இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அனைவரும் ஒரே அளவிற்குக் கற்கமாட்டார்கள். இது ஒரு பாடசாலை. இது இராஜ யோகக் கல்வியாகும். தேவ தர்மத்தைச் சார்ந்தவர்கள் வெளிப்படுவார்கள். அசரீரி உலகின் சனத்தொகையும் மிகவும் சரியானதாகவே இருக்கும், அது கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கமாட்டாது. ஒரு நாடகத்தில் குறித்த எண்ணிக்கை கொண்ட நடிகர்கள் இருக்கின்றார்கள், ஆனால் மக்களால் இதனைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் எவ்வளவு பேராக இருந்தாலும், அந்த எண்ணிக்கை மிகச் சரியானதாகவே இருக்கும். அவர்கள் வந்து தங்கள் பாகத்தை நடிப்பார்கள். நீங்கள் புதிய உலகிற்குச் செல்வீர்கள். ஏனையோர் அனைவரும் அங்கு (வீட்டிற்கு) செல்வார்கள். உங்களில் எவராவது இப்பொழுது அவர்களைக் கணக்கெடுக்க வேண்டுமெனில் உங்களால் அதைச் செய்ய முடியும். தந்தை இப்பொழுது உங்களுக்கு ஆழமான கருத்துக்களைக் கூறுகின்றார். ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கும், இப்போது கொடுக்கப்படுகின்ற விளக்கத்திற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. கல்வியைக் கற்பதற்குக் காலம் எடுக்கும். எவராலும் நேரடியாக ஐ.சி.எஸ் (இந்தியன் சிவில் சேவிஸ்) ஆகமுடியாது. கல்வி வரிசைக்கிரமமாகவே இடம்பெறுகின்றது. தந்தை அனைத்தையும் மிக இலகுவானதாக்கி, உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். எனவே, அது புத்தியில் இலகுவாகப் பதியும். அவர் தொடர்ந்தும் நாளுக்கு நாள் புதிய கருத்துக்களை விளங்கப்படுத்துகின்றார். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: தூய்மையாக்கும் தந்தையாகிய என்னை நீங்கள் வருமாறு கூவியழைத்தீர்கள், நான் வந்துவிட்டேன். எனவே, தூய்மையாகுங்கள்! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். பின்னர் நீங்கள், உங்களது பாகத்தை நடிப்பதற்காகக் கீழிறங்கி இங்கு வந்தாக வேண்டும். தந்தை கூறுகின்றார்: ஆத்மா தூய்மையற்றவராகிவிட்டார். அதனாலேயே நீங்கள் தூய்மையாகுவதற்காக, தூய்மையாக்குபவரான தந்தையை நினைவு செய்கின்றீர்கள். ஒரு சின்னஞ்சிறிய ஆத்மா பெரிய பாகமொன்றை நடிப்பது ஓர் அற்புதமேயாகும். இது அதிசயம் எனப்படுகின்றது. அதனைப் பார்க்க முடியாது. சிலர் தங்களுக்குப் பரமாத்மாவின் காட்சி வேண்டும் எனக் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: ஒரு சின்னஞ்சிறிய ஆத்மாவில் நீங்கள் எத்தகைய காட்சியைக் காண்பீர்கள்? நான், நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒருவன், ஆனால் என்னை நீங்கள் பார்ப்பது கடினமானதாகும். ஆத்மா தனது பாகத்தை நடிப்பதற்காகவே இப் பௌதீகப்; புலனங்கங்கள் அனைத்தையும் பெற்றிருக்கின்றார். எவ்வளவு மகத்துவமான பாகத்தை ஒரு ஆத்மா நடிக்கின்றார் என்பது அற்புதமே! ஆத்மா ஒருபோதும் தேய்வதில்லை. இது, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட அழியாத நாடகமாகும். அது எப்போது உருவாக்கப்பட்டது என நீங்கள் கேட்கமுடியாது. அது அநாதியானது எனப்படுகின்றது. மக்களிடம் கேளுங்கள்: நீங்கள் இராவணனை எப்போதிருந்து எரிக்க ஆரம்பித்தீர்கள்? எப்போது சமய நூல்களைக் கற்க ஆரம்பித்தீர்கள்? அவர்கள் அதனை அறியாததால், ‘அநாதியாக!’ எனக் கூறுவார்கள். அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். தந்தை இங்கிருந்து குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகின்ற அதே முறையில் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் முற்றிலும் விவேகமற்றவர்களாக இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது எல்லையற்ற புரிந்துணர்வைக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதையும் அறிவீர்கள். அது எல்லைக்குட்பட்ட கல்வி, இதுவோ எல்லையற்ற கல்வியாகும். அரைக்கல்பத்திற்குப் பகலும் அரைக்கல்பத்திற்கு இரவும் காணப்படுகின்றது. நீங்கள் 21 பிறவிகளுக்குச் சிறிதளவேனும் துன்பத்தை அனுபவிக்கமாட்டீர்கள். உங்கள் தலைமுடிகூட கலைந்திருக்காது எனக் கூறப்படுகின்றது. எவரும் உங்களுக்குத் துன்பத்தை விளைவிக்க முடியாது. அதன் சரியான பெயர் சந்தோஷதாமம் ஆகும். இங்கு எவ்வித சந்தோஷமும் கிடையாது. தூய்மையே பிரதான விடயமாகும். மிகச் சிறந்த நடத்தை தேவைப்படுகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்தப்படுகின்றது. சேதமும், நஷ்டமும் இருக்கின்றன. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: இந்நேரத்தில் நன்மை என்ற கேள்விக்கே இடமில்லை. இப்பொழுது நஷ்டத்துக்கு மேல் நஷ்டமே ஏற்படுகின்றது. விநாசகாலம் வருகின்றது. அந்நேரத்தில் என்ன நிகழும் எனப் பாருங்கள்! மழை இல்லாதபோது தானியங்களின் விலை அதிகரித்து விடுகின்றது. மூன்று வருடங்களுக்குப் பின் பெருமளவு தானியம் இருக்குமென அவர்கள் என்னதான் கூறியபோதிலும், அவர்கள் இன்னமும் தானியத்தை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றார்கள். உங்களால் ஒரு தானிய மணியைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாத காலம் வரும். பல அனர்த்தங்கள் வரவிருக்கின்றன. அவர்கள் அதனை “இறை அனர்த்தங்கள்” எனக் கூறுகின்றார்கள். மழை இல்லாதபோது நிச்சயமாகப் பஞ்சம் ஏற்படும். தத்துவங்கள் அனைத்தும் மிக மோசமான நிலைக்குச் செல்லும். பல இடங்களில் மழை பெருமளவு சேதத்தை உண்டாக்குகின்றது. தந்தை தேவதர்மத்தை ஸ்தாபிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதுவே உங்களது இலக்கும் இலட்சியமும் ஆகும். நீங்கள் மீண்டும் ஒரு தடவை சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆக்கப்படுகின்றீர்கள். எல்லையற்ற தந்தையே இந்த எல்லையற்ற பாடத்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். எவ்வாறாயினும், ஒருவர் எந்தளவிற்குக் கற்கின்றாரோ அதற்கேற்பவே ஓர் அந்தஸ்தைப் பெற்றுக்கொள்கின்றார். தந்தை உங்களை முயற்சி செய்வதற்குத் தூண்டுகின்றார். நீங்கள் குறைந்தளவு முயற்சி செய்வீர்களாயின் குறைவான அந்தஸ்தையே பெறுவீர்கள். ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு விளங்கப்படுத்துவார். நீங்கள் மற்றவர்களை உங்களைப் போன்று ஆக்கும்போது, நீங்கள் நன்றாகக் கற்று ஏனையோருக்கும் கற்பிக்கின்றீர்கள் என்பதை அறிய முடிகின்றது. நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும். உங்கள் தலைமீது பெரிய பாவச்சுமை இருக்கின்றது. என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் எரிக்கப்படும். இது ஒரு ஆன்மீக யாத்திரையாகும். சிறு குழந்தைகளுக்கும் சிவபாபாவை நினைவு செய்வதற்குக் கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கும் உரிமையுள்ளது. தங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவுசெய்ய வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். இல்லை. அவர்கள் சிவபாபாவை மாத்திரமே நினைவு செய்வார்கள். முயற்சி செய்வதன் மூலம் அவர்களும் நன்மை பெற முடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு, எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற பாடத்தைக் கற்று, மற்றவர்களுக்கும் கற்பியுங்கள். மற்றவர்களை உங்களைப் போன்று ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.

2. பற்று, பேராசை ஆகியவற்றின் இழைகளை நீக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். தீய ஆவிகள் எதுவும் உங்களுக்குள் பிரவேசிக்காத வகையில் உங்களது நடத்தையைச் சீர்திருத்துங்கள்.

ஆசீர்வாதம்:
கடவுளையும் உங்கள் பாக்கியத்தையும் அறிந்திருப்பதன் மூலம் நீங்கள் சந்தோஷமாகவும் பாக்கியசாலிகளாகவும் ஆகி, பிறரின் பாக்கியத்தை உருவாக்குவீர்களாக.

அமிர்தவேளையில் இருந்து இரவு நேரம் வரையில், உங்களுடைய பலதரப்பட்ட பாக்கியத்தையும் அறிந்திருப்பதால், தொடர்ந்தும் இப் பாடலை பாடுங்கள்: ஆஹா எனது மேன்மையான பாக்கியமே! கடவுளையும், தமது பாக்கியத்தையும் அறிந்திருப்பவர்களால் மாத்திரமே பிறரின் பாக்கியத்தை உருவாக்க முடியும். ஒரு பிராமணனாக இருப்பது என்றால் சதா பாக்கியசாலியாக இருப்பதும், சதா சந்தோஷ பாக்கியத்தை கொண்டிருப்பதும் ஆகும். பிராமண ஆத்மாக்களின் சந்தோஷத்தை குறைக்கின்ற தைரியம் எவருக்குமே கிடையாது. ஒவ்வொரு பிராமணரும் சந்தோஷமானவரும், சந்தோஷ பாக்கியத்தைக் கொண்டிருப்பவரும் ஆவார். பிராமண வாழ்வைவிட்டு, சந்தோஷம் அகன்று விடுவது அசாத்தியமாகும்: நீங்கள் சரீரத்தைவிட்டு நீங்கிச் சென்றாலுமே உங்கள் சந்தோஷம் மறைய முடியாது.

சுலோகம்:
மாயையின் ஊஞ்சலில் இருந்து இறங்கி, சதா அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுங்கள்.