14.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் அநாதியான உறவுமுறை சகோதரர்களினது ஆகும். சரீர வடிவில் நீங்கள் சகோதர, சகோதரிகள் என்பதால் நீங்கள் ஒருபொழுதும் குற்றப் பார்வையைக் கொண்டிருக்க முடியாது.

பாடல்:
எட்டு வெற்றி இரத்தினங்கள் ஆகுபவர்கள் யார்? அவர்களின் பெறுமதி என்ன?

பதில்:
தங்கள் மனதில் எந்தத் தவறான எண்ணங்களைக் கொண்டிராதவர்களும், முற்றிலும் குற்றமற்ற கண்களை உடையவர்களுமே விசேடமான எட்டு இரத்தினங்கள் ஆகுகிறார்கள். அவர்கள் தமது கர்மாதீத ஸ்திதியை அடைகிறார்கள். அவர்களது பெறுமதி மிக அதிகமாகும், அதனாலேயே எவராவது தீய சகுனங்களை அனுபவம் செய்யும் பொழுது, எட்டு இரத்தினங்கள் பதித்த மோதிரம் அவர்களுக்கு அணிவிக்கப்படுகின்றது. அந்த மோதிரத்தை அணிந்தால், தமது சகுனங்கள் அகற்றப்படுமென அவர்கள் நம்புகிறார்கள். எட்டு இரத்தினங்கள் ஆகுபவர்கள், சகோதர்கள் என்ற விழிப்புணர்வில் இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் தொலை நோக்கு புத்தியை கொண்டிருக்கிறார்கள்.

ஓம் சாந்தி.
உங்கள் பெயர் என்னவென்பது ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள். பல பிரம்மகுமாரர்களும், பிரம்மகுமாரிகளும் உள்ளனர். இது நீங்கள் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் என்பதை நிரூபிக்கின்றது. நீங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் என்பதனால், நிச்சயமாகத் தத்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். பிரம்ம குமார், பிரம்மகுமாரிகளாகிய நீங்களே தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் ஆவீர்கள். பல குழந்தைகள் உள்ளனர். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஒரு வகையினரும், பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனின் குழந்தைகள் மற்ற வகையினரும் ஆவார்கள். எனவே அவர்களுக்கிடையில் நிச்சயமாகத் தொடர்புள்ளது. அந்த ஒரேயொருவருக்கு ஆன்மீகக் குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவருக்குப் பௌதீகக் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அந்த ஒரேயொருவரின் குழந்தைகளாயின், அவர்கள் சகோதரர்கள் போன்றவர்களே. பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் பௌதீகச் சகோதர, சகோதரிகள் ஆகுகிறார்கள். சகோதரனும் சகோதரியும் குற்றமான உறவுமுறையை என்றுமே கொண்டிருக்க முடியாது. நீங்கள் அனைவரையும் சகோதர, சகோதரிகள் ஆக்குகின்றீர்கள் என்று உங்களைப் பற்றி அவர்கள் கூறுகின்றனர். அதன் மூலம் தூய உறவுமுறை இருப்பதுடன், குற்றப் பார்வையும் இருப்பதில்லை. இந்த ஒரு பிறவியில் இந்தப் பார்வையை நீங்கள் கொண்டிருப்பதனால், எதிர்காலத்தில் குற்றப் பார்வை இருக்க மாட்டாது. அங்கே நீங்கள் உங்களைச் சகோதர, சகோதரிகள் என்று கருதுகிறீர்கள் என்றில்லை. அங்கே, நீங்கள் சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகள் போல் இருக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அதிமங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள் என்பதையும் அறிவீர்கள். “பிரஜாபிதா பிரம்மா” என்ற பெயர் உள்ளது. பிரஜாபிதா பிரம்மா எப்பொழுது இருந்தார் என்பதை உலகம் அறிய மாட்டாது. நீங்கள் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் மங்களகரமான சங்கமயுகப் பிரம்மகுமார், குமாரிகள் என்பதை அறிவீர்கள். இது ஒரு சமயம் என்று அழைக்கப்பட மாட்டாது. இது ஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு குலமாகும். நீங்கள் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள். பிரம்மகுமார், குமாரிகளாகிய நீங்கள் நிச்சயமாக பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் என நீங்கள் கூறலாம். இது புதியதொரு விடயமாகும். நீங்கள் பிரம்மகுமார், குமாரிகள் என்று உங்களைக் கூறலாம். உண்மையில், நாங்கள் அனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகளான, சகோதரர்கள். எனவே நீங்கள் சிவபாபாவினால் தத்தெடுக்கப்பட்டவர்கள் என்று கூற மாட்டீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அநாதியாகவே அவரின் குழந்தைகள். பரமதந்தையே பரமாத்மா ஆவார். ‘பரம்’ என்ற வார்த்தையை வேறெவருக்கும் கொடுக்க முடியாது. முற்றிலும் தூய்மையான ஒரேயொருவரையே ‘பரம்’ என்று அழைக்க முடியும். அனைவரும் தூய்மையாக உள்ளார்கள் என உங்களால் கூற முடியாது. நீங்கள் இந்தச் சங்கமயுகத்திலேயே தூய்மையைக் கற்றுக் கொள்கின்றீர்கள். கலியுகவாசிகள், சத்தியயுக வாசிகள் என நீங்கள் பேசுவதைப் போன்றே, நீங்கள் அதி மங்களகரமான சங்கமயுக வாசிகள். சத்திய, கலியுகங்களைப் பற்றி மக்கள் அறிவார்கள். சிலர் தொலைநோக்குப் புத்தியைக் கொண்டிருப்பதால், அவர்களால் சத்தியயுகத்துக்கும் கலியுகத்துக்கும் இடையிலுள்ள சங்கமயுகத்தைப் புரிந்துகொள்ள முடியும். சமயநூல்களில் கடவுள் ஒவ்வொரு யுகத்திலும் வருகின்றார் என்று கூறியுள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை. நீங்களே அதி மங்களகரமான சங்கமயுகப் பிரம்மகுமார்களும், பிரம்மகுமாரிகளும் என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். நாங்கள் சத்தியயுகத்திலோ அல்லது கலியுகத்திலோ இல்லை. சங்கமயுகத்தின் பின்னர் நிச்சயமாகச் சத்தியயுகம் வர வேண்டும். நீங்கள் சத்தியயுகத்துக்குச் செல்வதற்கே இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். தூய்மை இல்லாமல் எவராலும் அங்கு செல்ல முடியாது. இந்நேரத்தில் நீங்கள் தூய்மையாகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். அனைவருமே தூய்மையானவர்கள் என்றில்லை. தூய்மையற்ற பலர் உள்ளனர். முன்னேறிச் செல்லும்பொழுது அவர்கள் வீழ்ந்து விடுகின்றார்கள். பின்னர் அவர்கள் இரகசியமாகச் சென்று அமிர்தத்தைப் பருகுகின்றார்கள். உண்மையில், அமிர்தத்தைத் துறந்து, நஞ்சை அருந்துபவர்கள் சில காலத்திற்கு இங்கு வர அனுமதிக்கப்படுவதில்லை. “அமிர்தம் பரிமாறப்படும்பொழுது, விகாரமுடைய அசுரர்களும் இரகசியமாக அங்கு அமர்ந்து விடுகின்றார்கள்” என்பதும் எவ்வாறாயினும் நினைவுகூரப்பட்டுள்ளது. அத்தகைய இந்திரனின் ஒன்றுகூடலின் மத்தியில், அத்தகைய தூய்மையற்றவர்கள் வந்து அமர்ந்தால், அவர்கள் சபிக்கப்படுகின்றார்கள் என்று கூறப்படுகின்றது. ஒரு தேவதை விகாரமுள்ள ஒருவரை ஒன்றுகூடலுக்குள் அழைத்து வந்ததாக ஒரு கதையும் உள்ளது. அவரின் (அந்தத் தேவதை) நிலைமை என்னவாயிற்று? விகாரம் நிறைந்தவர்கள் நிச்சயமாக வீழ்வார்கள். இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம். விகாரம் நிறைந்தவர்களால் மேலேற முடியாது. பின்னர் அவர் (விகாரம் நிறைந்தவர்) கல்லாக்கப்பட்டார் என்று கூறப்படுகின்றது. மனிதர்கள் கற்களாகவோ, மரங்களாகவோ ஆகுவதில்லை. அவர்கள் கல்லுப் புத்தி உடையவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தெய்வீகப் புத்தி உடையவர்கள் ஆகுவதற்கே இங்கு வருகின்றார்கள் ஆனால், அவர்கள் இரகசியமாக நஞ்சை அருந்தும்பொழுது, கல்லுப்புத்தி உடையவர்கள் ஆகுகின்றார்;கள் என்பதே அதன் அர்த்தம். இது தனிப்பட்ட ரீதியில் விளங்கப்படுத்தப்படுகின்றது. ஆனால் மக்கள் வாசிப்பதற்காக அவை சமயநூல்களில் எழுதப்படுகின்றன. அதனை அவர்கள் “இந்திரசபை” என்று அழைப்பதுடன், அங்கே பல்வேறு தேவதைகளையும் அவர்கள் காட்டியுள்ளார்கள். இரத்தினங்களும் வரிசைக்கிரமமாகவே உள்ளார்கள். சிலர் மிகவும் நல்ல இரத்தினங்களாகவும், ஏனையோர் சற்றுக் குறைந்தவர்களாகவும் உள்ளார்கள். சிலரின் பெறுமதி குறைவாகவும், ஆனால் சிலரின் பெறுமதி அதிகமாகவும் உள்ளது. நவ இரத்தினங்கள் பதித்த மோதிரங்கள் பலவற்றைச் செய்கிறார்கள். அவை இரத்தினங்கள் என்று அழைக்கப்பட்டபொழுதிலும் அவற்றை அவர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள். நீங்கள் இங்கமர்ந்திருக்கின்றீர்கள், ஆனால் உங்கள் மத்தியிலும் இவர் ஒரு வைரம், இவர் ஒரு மரகதம், இவர் ஒரு பவளம், இவர் புட்பராகம் என்று கூறப்படுகின்றது. இரவுக்கும் பகலுக்கும் இடையேயுள்ள வேறுபாடுள்ளது. அவற்றின் பெறுமதிகளுக்கிடையிலும் பெருமளவு வேறுபாடுள்ளது. அதனைப் போன்றே, நீங்களும் மலர்களுடன் ஒப்பிடப்படுகின்றீர்கள். மலர்களிலும், பல்வேறு வகைகள் உள்ளன. யார் மலர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். வழிகாட்டிகளாக வருகின்ற பிராமண ஆசிரியர்கள் மிகவும் நல்ல மலர்கள். விளங்கப்படுத்துவதில், சில மாணவர்கள் மிகவும் திறமைசாலிகளாக உள்ளனர். பாபா ஒரு மலரை ஆசிரியருக்கு அல்ல, மாணவருக்கே கொடுப்பார். மாணவர்களின் பல தகுதிகள் கற்பிப்பவர்களை விடச் சிறந்ததவை. அவர்களிடம் எந்த விகாரங்களும் இல்லை. சிலரிடம் தீய ஆவிகளான கோபம், பேராசை போன்ற குறைபாடுகள் உள்ளன. அவர் விருப்பத்திற்குரிய வழிகாட்டி என்பதையும், இவர் இரண்டாம் இலக்க வழிகாட்டி என்பதையும் தந்தை அறிவார். சில வழிகாட்டிகள் மாணவர்களைப் போன்று விருப்பத்திற்குரியவர்களாக இருப்பதில்லை. அவர்களால் அழைத்து வரப்படுபவர்கள் விருப்பத்திற்குரியவர்களாக உள்ளார்கள். கற்பிப்பவர்கள் மாயையின் பிடிக்குள் சிக்கி, விகாரத்தினுள் வீழ்வதும் உண்டு. புதைமணலில் இருந்து ஏனைய பலரைக் காப்பாற்றிய பின்னர், அதற்குள் சிக்கிக் கொண்ட பலரும் உள்ளார்கள். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். குற்றமான கண்கள் மிகவும் ஏமாற்றக்கூடியவை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். குற்றமான கண்கள் இருந்தால், சகோதர சகோதரிகளாக இருக்கின்ற வழிகாட்டலை உங்களால் பின்பற்ற முடியாது. குற்றமற்ற கண்கள் குற்றக் கண்களாக மாறுகின்றன. குற்றமான கண்கள் நீக்கப்பட்டு, நீங்கள் உறுதியான குற்றமற்ற கண்களை விருத்திசெய்யும்;பொழுது, அது கர்மாதீத ஸ்திதி என அழைக்கப்படுகின்றது. இந்தளவிற்கு நீங்கள் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஒருமித்து வாழும்பொழுதும் விகாரமான பார்வை இருக்கக்கூடாது. நீங்கள் இங்கே சகோதரர், சகோதரிகள் ஆகுகிறீர்கள். அவர்களுக்கிடையில் ஞான வாள் இருக்கின்றது. நீங்கள் தூய்மையாக இருப்பீர்கள் என்ற சத்தியத்தைச் செய்ய வேண்டும். இருப்பினும் சிலர் எழுதுகின்றார்கள்: பாபா, கவர்ச்சி உள்ளது. அந்த ஸ்திதியை நாங்கள் இன்னமும் உறுதியாக்கிக் கொள்ளவில்லை, அது நிகழாமல் இருப்பதற்காக நாங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்கின்றோம். எங்கள் கண்கள் முற்றிலும் குற்றமற்றவை ஆகும்பொழுதே, நாங்கள் வெற்றியடைய முடியும். எந்த விகார எண்ணங்களும் தோன்றாதவாறு உங்கள் ஸ்திதி இருக்க வேண்டும். இதுவே கர்மாதீத ஸ்திதி என்று அழைக்கப்படுகின்றது. இதுவே இலக்காகும். அத்தகையதோர் அற்புதமான மாலை உருவாக்கப்படுகின்றது. எட்டு இரத்தினங்களின் மாலையும் உள்ளது. பல குழந்தைகள் உள்ளனர். சூரிய, சந்திர வம்ச குலங்கள் இங்கேயே ஸ்தாபிக்கப்படுகின்றன. அவர்கள் அனைவருக்குள்ளும் எட்டு இரத்தினங்கள் மாத்திரமே முழுமையாகச் சித்தி எய்தி, புலமைப்பரிசைக் கோருகின்றார்கள். அவர்களை அத்தகைய இரத்தினங்கள் ஆக்கிய வைரமான, சிவனை அவர்கள் தங்களுக்கு இடையில் வைக்கின்றார்கள். மக்கள் தீய சகுனத்தை அனுபவம் செய்யும்பொழுது, எட்டு இரத்தினங்கள் பதித்த மோதிரத்தை அணிகின்றார்கள். இந்த நேரத்தில் இராகுவின் சகுனங்கள் பாரதத்தின் மீதுள்ளன. முதலில், விருட்சத்தின் பிரபுவின் சகுனங்களும் இருந்தன. அதாவது, வியாழ சகுனங்கள் இருந்தன. நீங்களே உலகை ஆட்சிசெய்த, சத்தியயுகத்துத் தேவர்கள். பின்னர் இராகுவின் சகுனங்கள் இருந்தன. உங்கள் மீது வியாழ சகுனங்கள் இருந்தன என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். விருட்சத்தின் பிரபு என்பதே அவர் பெயராகும். சுருக்கமாக அவர் வியாழன் (குரு) என அழைக்கப்படுகின்றார். நாங்கள் உலக அதிபதிகளாக இருந்தபொழுது, உண்மையிலேயே வியாழ சகுனங்களைக் கொண்டிருந்தோம். ஆனால் இப்பொழுது, இராகுவின் சகுனங்களே உள்ளதால், நாங்கள் சிப்பிகள் போலாகியுள்ளோம். நீங்கள் ஒவ்வொருவரும் இதனைப் புரிந்துகொள்ள முடியும். அதனைப் பற்றி வினவுவது என்ற கேள்விக்கே இடமில்லை. தாங்கள் குறிப்பிட்ட பரீட்சையில் சித்தி எய்துவார்களா என மக்கள் தம் குருமாரிடம் வினவுகிறார்கள். இங்கும் சிலர் பாபாவிடம் வினவுகின்றார்கள்: நான் சித்தி எய்துவேனோ? பாபா கூறுகின்றார்: அத்தகைய முயற்சியை நீங்கள் தொடர்ந்தும் செய்து முன்னேறினால், ஏன் சித்தி எய்த மாட்டீர்கள்? எவ்வாறாயினும், மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். அவள் புயல்களைக் கொண்டு வருகின்றாள். இந்த நேரத்தில் நீங்கள் நன்றாக முன்னேறிக் கொண்டிருக்கலாம். ஆனால் நீங்கள் முன்னேறும்பொழுது, பல புயல்கள் வந்தால் என்ன நடக்கும்? நீங்கள் இப்பொழுது ஒரு யுத்த களத்தில் உள்ளீர்கள் என்பதால், என்னால் எவ்வாறு ஓர் உத்தரவாதத்தை அளிக்க முடியும்? முன்னர், ஒரு மாலை உருவாக்கப்பட்டது. இரண்டாம் அல்லது மூன்றாம் இலக்கத்தில் இடப்பட்டவர்கள், இப்பொழுது இங்கில்லை. அவர்கள் முற்றிலும் முள்ளாகி விட்டார்கள். தந்தை கூறினார்: பிராமணர்களின் மாலையை உருவாக்க முடியாது. நீங்கள் ஒரு யுத்த களத்தில் இருக்கிறீர்கள். இன்று ஒருவர் பிராமணராக இருக்கின்றார், நாளையே அவர் சூத்திரர் ஆகிவிடுவார். அவர்கள் விகாரத்தில் ஈடுபடும்பொழுது, சூத்திரர்கள் ஆகுவதால், இராகுவின் தீய சகுனங்களே நிலவுகின்றன. வியாழ சகுனங்களிற்காக நீங்கள் முயற்சி செய்தீர்கள். விருட்சத்தின் பிரபுவே உங்களுக்குக் கற்பித்தார். நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது, மாயையினால் அறையப்பட்டு, இராகுவின் சகுனங்கள் நிலவின. சிலர் துரோகிகள் ஆகுகிறார்கள். இது எங்கும் இடம்பெறுகின்றது. அவர்கள் ஒரு நாட்டை விட்டு, இன்னொரு நாட்டில் தஞ்சம் புகுகின்றார்கள். அவர்களினால் நல்ல பயனுள்ளது என்பதை அந்நாட்டவர்கள் காண்பதால், தஞ்சம் அளிக்கின்றார்கள். பலரும் அத்தகைய துரோகிகள் ஆகுகிறார்கள். அவர்கள் விமானம் ஒன்றை எடுத்துக் கொண்டு இன்னுமொரு நாட்டிற்குச் சென்று விடுகின்றார்கள். பின்னர் அவர்கள் அந்த விமானத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு, அந்த நபருக்குத் தஞ்சம் அளிக்கின்றார்கள். அவர்கள் விமானத்திற்குத் தஞ்சம் அளிப்பதில்லை. ஏனெனில் அது இன்னுமோர் அரசாங்கத்தின் சொத்தாகும். தமக்குச் சொந்தமில்லாதவற்றை அவர்கள் திரும்பவும் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் தங்களிடம் வந்துள்ள மக்களுக்குத் தஞ்சம் கொடுக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையிடம் தஞ்சம் பெறுவதற்கு வந்துள்ளீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: எனது மரியாதையைப் பேணுங்கள்! திரௌபதி கூவியழைத்தார்: அவர்கள் என்னைத் துகிலுரிகிறார்கள்! நான் தூய்மையற்றவள் ஆகுவதிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்! சத்தியயுகத்தில் என்றுமே எவரும் தூய்மையற்றவர் ஆகுவதில்லை. அது முற்றிலும் விகாரமற்ற உலகம் என அழைக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் சிறு குழந்தைகள் விகாமற்றவர்கள்! அவர்கள் வீட்டில் வசிக்கும்பொழுதும், முற்றிலும் விகாரமற்றவர்களாக இருக்கின்றார்கள். கணவனும் மனைவியும் ஒருமித்து வாழ்ந்தபொழுதிலும், விகாரமற்றவர்களாக உள்ளார்கள். ஆகையாலேயே நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகவும், சாதாரணப் பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாகவும் மாறுகின்றோம். அது விகாரமற்ற உலகாகும். இராவணன் அங்கிருப்பதில்லை. அது இராம இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. சிவபாபா இராமர் என்று அழைக்கப்படுகின்றார். இராமரது நாமத்தை உச்சரித்தல் என்றால், தந்தையை நினைவுசெய்வது என்று அர்த்தம். மக்கள் “இராமா, இராமா” என்று உச்சாடனம் செய்யும்பொழுது, அவர்களின் புத்தியில் அசரீரியானவரை மாத்திரமே கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் “இராமா! இராமா!” என்று கூறி, சீதையை விட்டு விடுகின்றார்கள். அவர்கள் கிருஷ்ணரின் பெயரை எடுத்துக் கொண்டு, இராதையை விட்டு விடுகின்றார்கள். இங்கு, ஒரு தந்தையே உள்ளார், அவர் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். கிருஷ்ணரைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்க முடியாது. குழந்தைப் பருவத்திலே, இராதையும் கிருஷ்ணரும் சகோதரர், சகோதரியாக இருக்கவில்லை; அவர்கள் வெவ்வேறு இராச்சியங்களுக்கு உரியவர்களாக இருந்தார்கள். எனினும் சிறு குழந்தைகள் எப்பொழுதும் தூய்மையானவர்கள். பாபாவும் கூறுகின்றார்: சிறு குழந்தைகள் மலர்கள். அவர்கள் எந்த விகாரப் பார்வையையும் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் வளரும்பொழுதே, அவர்களின் பார்வை விகாரத்தின் பால் ஈர்க்கப்படுகின்றது. இதனாலேயே ஒரு குழந்தையும் ஒரு மகாத்மாவும் சமமானவர்கள் எனக் கருதப்படுகின்றது. உண்மையில், ஒரு குழந்தை ஒரு மகாத்மாவை விடவும் உயர்ந்தவர். ஒரு மகாத்மாவுக்குத் தான் விகாரத்தினூடாகப் பிறந்து வந்துள்ளார் என்பது தெரியும். அதைப் பற்றிச் சிறு குழந்தைகள் அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு குழந்தை தந்தைக்குரியவர் ஆனதும், அவருக்கு ஓர் ஆஸ்தி உள்ளது. நீங்கள் உலக இராச்சியத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தது நேற்றைய விடயமாக இருந்தது. நீங்கள் இப்பொழுது மீண்டும் அவ்வாறு ஆகுகின்றீர்கள். நீங்கள் பெருமளவு பேற்றைப் பெறுகின்றீர்கள். கணவனும் மனைவியும் சகோதர, சகோதரிகளாக ஆகித் தூய்மையாக இருப்பது ஒரு பெரிய விடயமா? சிறிது முயற்சி தேவைப்படுகின்றது. ஆம், நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, உங்கள் மீது இப்பொழுது வியாழ சகுனம் நிலவுகின்றது. நீங்கள் சுவர்க்கத்துக்குச் செல்கின்றீர்கள், ஆனால் கற்பதினூடாக, சிலர் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றார்கள், சிலர் ஒரு நடுத்தர அந்தஸ்தைக் கோருகின்றார்கள். சிலர் மலர்கள் ஆகுவதுடன், ஏனையோர்கள் ஏதோவொன்றாக ஆகுகின்றார்கள். இது ஒரு பூந்தோட்டம். ஆகவே நீங்களும் அதற்கேற்பவே ஓர் அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். அத்தகைய மலர்கள் ஆகுவதற்கு நீங்கள் பெருமளவு முயற்சியைச் செய்யவேண்டும். அதனாலேயே பாபா குழந்தைகளாகிய உங்களுக்குக் காண்பிப்பதற்கு மலர்களைக் கொண்டு வருகின்றார். ஒரு பூந்தோட்டத்தில் பல வகையான மலர்கள் உள்ளன. சத்தியயுகம் மலர்களினாலான தோட்டமாகும். இதுவோ முட்களின் காடு. நீங்கள் இப்பொழுது முட்களிலிருந்து மலர்களாக மாறுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். முட்களைப் போன்று ஒருவர் மற்றவரைக் குத்துவதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு நீங்கள் முயற்சி செய்;கின்றீர்கள். ஒருவர் செய்யும் முயற்சியின் அளவுக்கேற்ப, வெற்றியாளர் ஆகுவார். நீங்கள் காமத்தை வெல்வதனாலேயே உலகை வென்றவர்கள் ஆகுகிறீர்கள் என்பதே பிரதான விடயம். இது குழந்தைகளாகிய உங்களிலேயே தங்கியுள்ளது. இளையோர்கள் பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும், முதியோர்கள் குறைந்தளவு முயற்சியே செய்ய வேண்டியுள்ளது. ஓய்வுபெறும் ஸ்திதியில் உள்ளவர்கள், அதிலும் குறைந்தளவு முயற்சியையே செய்ய வேண்டும். சிறு குழந்தைகளும் குறைந்தளவு முயற்சியே செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் உலக இராச்சியம் எனும் சொத்தைப் பெறுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே, அதைப் பெறுவதற்காக நீங்கள் ஒரு பிறவியில் தூய்மையாக இருப்பது என்பது ஒரு பெரிய விடயமா? அத்தகையவர்கள் பிறப்பிலிருந்து இறுதிவரை, தூய்மையாக இருக்கின்ற, பிரம்மச்சாரிகள் என அழைக்கப்படுகின்றார்கள். தூய்மையாகி விட்டவர்கள், தந்தையால் கவரப்படுகின்றார்கள். குழந்தைப் பருவத்திலிருந்து தொடர்ந்தும் ஞானத்தைப் பெற்றால், குழந்தைகள் காப்பாற்றப்பட முடியும். சிறு குழந்தைகள் அறியாமையில் உள்ளார்கள், ஆனால் அவர்கள் வெளியே பாடசாலை போன்றவற்றுக்குச் செல்லும்பொழுது, அவர்கள் கொண்டுள்ள சகவாசத்தால் நிறமுமூட்டப்படுகின்றார்கள். கூறப்பட்டுள்ளது: நல்ல சகவாசம் உங்களை அக்கரைக்கு இட்டுச் செல்கின்றது, தீய சகவாசம் உங்களை மூழ்கடிக்கின்றது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களைச் சிவாலயத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். சத்திய யுகமே முற்றிலும் புதிய உலகாகும். மிகச் சிலரே அங்கு இருப்பார்கள், பின்னர் வளர்ச்சி இடம்பெறும். அங்கு மிகச் சில தேவர்களே வசிக்கின்றார்கள். ஆகவே நீங்கள் புதிய உலகிற்குச் செல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தைக்குப் பிரியமானவர் ஆகுவதற்கு, நற்குணங்கள் உடையவர்கள் ஆகுங்கள். நற்குணங்களை நன்றாகக் கிரகித்து, ஒரு மலர் ஆகுங்கள். குறைபாடுகளை அகற்றுங்கள். என்றுமே ஒரு முள்ளைப் போன்று எவரையும் குத்தாதீர்கள்.

2. முழுமையாகச் சித்தி அடைந்து, ஒரு புலமைப் பரிசிலைக் கோருவதற்கு, நீங்கள் எதையுமே நினைவுசெய்யாத, அத்தகையதொரு ஸ்திதியை உருவாக்குங்கள். உங்களுடைய கண்கள் முற்றிலும் குற்றமற்றவையாக இருக்கட்டும். சதா உங்கள் மீது வியாழ சகுனங்கள் இருக்கட்டும்.

ஆசீர்வாதம்:
உங்கள் பிராமண வாழ்வில், அனைத்து பொக்கிஷங்களையும் தகுதியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் திருப்தி இரத்தினங்களாகவும் சதா சகல பேறுகளை கொண்டிருப்பவராகவும் ஆகுவீர்களாக.

பிராமண வாழ்வில், அனைத்திலும் மகத்தான பொக்கிஷம், திருப்தியாக இருப்பதாகும். சகல பேறுகளும் இருக்கும் இடத்தில், திருப்தியும் உள்ளது, திருப்தி உள்ள இடத்தில் அனைத்தும் உள்ளது. திருப்தி இரத்தினங்களாக இருப்பவர்கள் சகல பேறுகளின் சொரூபம் ஆவார்கள். அவர்களுடைய பாடல்: நான் அடைய விரும்பிய அனைத்தையும் அடைந்துவிட்டேன். நீங்கள் பெற்ற அனைத்து பொக்கிஷங்களையும் தகுதியான முறையில் பயன்படுத்துவதே சகல பேறுகளும் நிறைந்திருப்பதற்கான வழிமுறையாகும். ஏனெனில், நீங்கள் எந்தளவிற்கு அந்த பொக்கிஷங்களை தகுதியான முறையில் பயன்படுத்துகிறீர்களோ அந்தளவிற்கு அவை அதிகரிக்கின்றன.

சுலோகம்:
புனித அன்னங்கள் எப்பொழுதும் நல்லவை என்ற முத்துக்களையே தெரிவு செய்கின்றன, குறைபாடுகள் என்ற கூழாங்கற்களை அல்ல.