16.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களுடைய சரீரமற்ற தந்தையாகிய நான், உங்களைச் சரீரமற்றவர்களாக ஆக்கும்பொருட்டு, சரீரதாரிகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றேன். இது குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரம் புரிந்துகொள்கின்ற, ஒரு புதிய விடயமாகும்.

பாடல்:
ஏன் பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் மீண்டும் அதே விடயங்களை விளங்கப்படுத்த வேண்டும்?

பதில்:
ஏனெனில் குழந்தைகளாகிய நீங்கள் மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றீர்கள். சில குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா அதே விடயங்களையே மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துகின்றார். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் மறந்து விடுவதால், நான் நிச்சயமாக அதே விடயங்களையே கூற வேண்டும். மாயையின் புயல்கள் உங்களை விரக்தியடைய வைக்கின்றன. ஒவ்வொரு நாளும் உங்களை நான் எச்சரித்திருக்காதுவிடின், நீங்கள் மாயையின் புயல்களினால் தோற்கடிக்கப்பட்டிருப்பீர்கள். இன்னமும் நீங்கள் சதோபிரதான் ஆகவில்லை. நீங்கள் அவ்வாறு ஆகும்பொழுது, பாபா உங்களுடன் இந்த ஞானத்தைப் பேசுவதை நிறுத்தி விடுவார்.

ஓம் சாந்தி.
இது ஒரு தனித்துவமான, ஆன்மீகக் கல்வி என அழைக்கப்படுகின்றது. சத்திய யுகமான புதிய உலகிலும் சரீரதாரிகளே ஒருவருக்கொருவர் கற்பிப்பார்கள். அனைவரும் ஞானத்தைக் கற்பிக்கின்றார்கள். அது இங்கும் கற்பிக்கப்படுகிறது. அச் சரீரதாரிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் கற்பிக்கின்றார்கள். கற்பிப்பவர் சரீரமற்ற தந்தை அல்லது ஆன்மீகத் தந்தையே என்பதை நீங்கள் ஒருபொழுதும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். “கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார்” என்றே அவர்கள் சமயநூல்களிலும் எழுதியுள்ளார்கள். அவரும் ஒரு சரீரதாரியே. மக்கள் இப் புதிய விடயத்தைக் கேட்கையில், குழப்பம் அடைகின்றார்கள். ஆன்மீகத் தந்தை ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை வரிசைக்கிரமமாக நீங்கள் செய்கின்ற முயற்சிகளுக்கேற்ப, புரிந்துகொள்கின்றீர்கள். இது புதியதொன்றாகும். இச் சங்கம யுகத்தில் மாத்திரம் தந்தையே வந்து, உங்களுக்குக் கூறுகின்றார்: நான் உங்களுக்கு இவரினூடாகக் கற்பிக்கின்றேன். அவர் ஞானக் கடலும், அமைதிக் கடலும், ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையும் ஆவார். இது புரிந்துகொள்ளப்பட வேண்டியதொன்றாகும். பார்ப்பதற்கு எதுவுமேயில்லை. ஆத்மாவே பிரதானமானவர், அவர் அழிவற்றவர், சரீரமோ அழியக்கூடியதாகும். அந்த அழிவற்ற ஆத்மா இங்கமர்ந்திருந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் உங்களின் முன்னிலையில் ஒரு பௌதீகச் சரீரத்தைப் பார்த்தாலும், உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பவர் அச் சரீரதாரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியும்; உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பவர், சரீரமற்ற தந்தையாவார். அவர் அதை எவ்வாறு கொடுக்கின்றார்? நீங்கள் இதையும் புரிந்துகொள்கின்றீர்கள். மக்கள் இதைப் பெரும் சிரமத்துடன் புரிந்துகொள்கின்றார்கள். அவர்களை இந்நம்பிக்கையைக் கொண்டிருக்கச் செய்வதற்கு, நீங்கள் அதிகப் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. அசரீரியானவருக்குப் பெயரோ, ரூபமோ, காலமோ அல்லது இடமோ கிடையாது என்று அம்மக்கள் கூறுகின்றார்கள். அத் தந்தையே இங்கமர்ந்திருந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் கூறுகின்றார்: நான் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை. நீங்கள் அவரைப் பார்க்க முடியாது. அவர் சரீரமற்றவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் ஞானக் கடலும், பேரானந்தக் கடலும், அன்புக் கடலும் ஆவார். எவ்வாறு அவர் உங்களுக்குக் கற்பிப்பார்? தந்தையே எவ்வாறு தான் வருகின்றார் என்பதையும், தான் யாருடைய ஆதாரத்தைப் பெறுகின்றார் என்பதையும் விளங்கப்படுத்துகின்றார். நான் ஒரு கருப்பையினூடாகப் பிறவி எடுப்பதில்லை. நான் ஒருபொழுதும் ஒரு மனிதராகவோ அல்லது ஒரு தேவராகவோ ஆகுவதில்லை. தேவர்களும் சரீரங்களை ஏற்றுக் கொள்கின்றார்கள். நான் சதா சரீரமற்றவராகவே இருக்கின்றேன். எனக்கு மாத்திரம் ஒருபொழுதும் மறுபிறவி எடுக்காத பாகம் நாடகத்தில் உள்ளது. ஆகவே, இது புரிந்துகொள்ளப்பட வேண்டியதொன்றாகும். நான் (கண்களுக்கு) புலப்பட மாட்டேன். கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரே பேசுகின்றார் என அம்மக்கள் எண்ணுகின்றார்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் உருவாக்கியுள்ள இரதத்தின் வகையைப் பாருங்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் குழப்பம் அடைவதில்லையா? உங்களால் எதையாவது புரிந்துகொள்ள முடியாது விடின், தந்தையிடம் வந்து அதைப் பற்றிப் புரிந்துகொள்ளுங்கள். உண்மையில், நீங்கள் கேட்காமலே தந்தை அனைத்தையும் உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் எதையும் கேட்க வேண்டிய தேவையில்லை. நான் இந்த அதிமங்களகரமான சங்கம யுகத்தில் மாத்திரம் அவதரிக்கின்றேன். எனது பிறப்பு அற்புதமானதாகும். குழந்தைகளாகிய நீங்களும் அதை ஓர் அற்புதம் எனக் கண்டுகொள்கின்றீர்கள். அவர் உங்களை அத்தகையதொரு முக்கியமான பரீட்சையில் சித்தியடைய வைக்கின்றார். உங்களை உலகின் மகத்தான அதிபதிகள் ஆக்குவதற்கு, அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். இது அற்புதமான ஒன்றாகும். ஓ ஆத்மாக்களே, ஒவ்வொரு 5000 வருடங்களும் நான் உங்களுக்குச் சேவை செய்வதற்கு வருகின்றேன். நான் ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றேன். நான் உங்களுக்குச் சேவை செய்யும்பொருட்டு, ஒவ்வொரு கல்பத்திலும் சங்கம யுகத்தில் வருகின்றேன். அரைக் கல்பமாக நீங்கள் கூவியழைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்: ஓ பாபா, ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஸ்ரீ கிருஷ்ணரைத் தூய்மையாக்குபவர் என அழைக்க முடியாது. பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரம் தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார். எனவே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு பாபா இங்கு வர வேண்டும். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: உண்மையான பாபாவின் அமரத்துவ ரூபம், உண்மையான ஆசிரியரின் அமரத்துவ ரூபம், உண்மையான சற்குருவின் அமரத்துவ ரூபம். சீக்கியர்களிடம் மிகச் சிறந்த சுலோகங்கள் உள்ளன. எவ்வாறாயினும், அமரத்துவ ரூபமாகிய, சற்குரு எப்பொழுது வருகின்றார் என்பது அவர்களுக்குத் தெரியாது. மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு நீண்டகாலம் பிடிக்கவில்லை என நினைவுசெய்யப்படுகின்றது. மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்கு அவர் எப்பொழுது வருகின்றார்? அவர் மாத்திரம் அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். நீங்கள் இதில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். அவர் வந்து என்ன கூறுகின்றார்? அவர் கூறுகின்றார்: மன்மனபவ! அவர் அதன் அர்த்தத்தையும் விளங்கப்படுத்துகின்றார். வேறு எவரும் அதன் அர்த்தத்தை விளங்கப்படுத்துவதில்லை. அமரத்துவ ரூபமாகிய, சற்குரு இங்கமர்ந்திருந்து இச்சரீரத்தினூடாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். எனவே நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களை உலக அதிபதிகள் ஆக்கும்பொருட்டு, குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்வதற்குத் தந்தை இங்கு வர வேண்டும். அவர் விளங்கப்படுத்துகின்றார்: ஓ ஆன்மீகக் குழந்தைகளே, நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் தமோபிரதான் ஆகினீர்கள். இவ்வுலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. அத் தேவர்களுக்கு மாத்திரம் உரிய தூய உலகம் இருந்தது. அவர்கள் அனைவரும் எங்கு சென்றார்கள்? இது எவருக்கும் தெரியாது; அவர்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். தந்தை வந்து, உங்களை விவேகிகள் ஆக்குகின்றார். குழந்தைகளே, நான் ஒருமுறை மாத்திரம் வருகின்றேன். நான் ஏன் தூய உலகிற்குள் வரவேண்டும்? அங்கு மரணம் வர முடியாது. தந்தையே மகாகாலன். அவர் சத்திய யுகத்துக்குள் வர வேண்டிய அவசியமில்லை. அங்கு மரணமோ அல்லது மகாகாலனோ வர முடியாது. அவர் வந்து, ஆத்மாக்கள் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்கின்றார். நீங்கள் சந்தோஷத்துடன்; திரும்பிச் செல்கிறீர்கள். ஆம் பாபா! நாங்கள் உங்களுடன் சந்தோஷமாகத் திரும்பிச் செல்லத் தயாராகவுள்ளோம். இதனாலேயே நாங்கள் உங்களைக் கூவியழைத்தோம்: எங்களை இத்தூய்மையற்ற உலகிலிருந்து அமைதி தாமத்தினூடாக, தூய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள். இவ்விடயங்களை மீண்டும் மீண்டும் மறக்க வேண்டாம். எவ்வாறாயினும், எதிரியாகிய மாயை இங்கு நின்று கொண்டிருக்கின்றாள். அவள் உங்களை மீண்டும் மீண்டும் மறக்க வைக்கின்றாள். நான் அதிபதியும், சர்வசக்திவானும் ஆவேன், ஆனால் மாயையும் சர்வசக்தியுடையவள். அவள் உங்களை அரைக் கல்பமாக ஆட்சிசெய்து, உங்களை மறக்க வைக்கின்றாள். இதனாலேயே தந்தை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் பாபா உங்களை எச்சரித்திருக்காதுவிடின், மாயை பெருஞ் சேதத்தை விளைவித்திருப்பாள். இது தூய்மைக்கும், தூய்மையின்மைக்குமான ஒரு நாடகம் ஆகும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: உங்கள் நடத்தையைச் சீர்திருத்தும்பொருட்டு, தூய்மையாகுங்கள். காம விகாரத்தின் காரணமாக அதிக யுத்தங்கள் ஏற்படுகின்றன. தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது மூன்றாம் கண்ணாகிய ஞானத்தைப் பெற்று விட்டதால், ஆத்மாக்களை மாத்திரம் பாருங்கள். உங்கள் பௌதீகக் கண்களால் எதையும் பார்க்கக் கூட வேண்டாம். ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் சகோதரர்கள். நாங்கள் எவ்வாறு விகாரத்தில் ஈடுபட முடியும்? நாங்கள் சரீரமற்று வந்தோம், நாங்கள் சரீரமற்றவர்களாகி, வீடு திரும்ப வேண்டும். ஆத்மா இங்கு சதோபிரதானாகவே வந்தார், அவர் சதோபிரதானாகி இனிய வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். தூய்மையே பிரதான விடயமாகும். மக்கள் கூறுகின்றார்கள்: ஒவ்வொரு நாளும் அதே விடயம் விளங்கப்படுத்தப்படுவது நல்லதே. ஆனால், குறைந்தபட்சம் அவர்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்ற அனைத்து விடயங்களையும் அவர்கள் பின்பற்ற வேண்டும். அவை உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுவதால், அவற்றை நீங்கள் பயிற்சியிலிட வேண்டும், ஆனால் அரிதாகவே எவரும் அவற்றைப் பின்பற்றுகிறார்கள். இதனாலேயே ஒவ்வொரு நாளும் பாபா விளங்கப்படுத்த வேண்டியுள்ளது. நீங்கள் கூறுவதில்லை: “பாபா, ஒவ்வொரு நாளும் நீங்கள் எங்களுக்கு விளங்கப்படுத்துபவற்றை நாங்கள் மிக நன்றாகப் புரிந்துகொண்டுள்ளோம், நாங்கள் இப்பொழுது தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவோம். நீங்கள் இப்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளீர்கள்!” நீங்கள் இதைக் கூறுகிறீர்களா? ஆகவே, பாபா ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்த வேண்டியுள்ளது. ஒரு விடயமே இருப்பினும், நீங்கள் அதைச் செய்வதில்லை. நீங்கள் தந்தையை நினைவுசெய்வது கூட இல்லை. நீங்கள் கூறுகின்றீர்கள்: “பாபா, நான் உங்களை மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றேன்”. நினைவுசெய்வதை உங்களுக்கு நினைவூட்டும்பொருட்டு, பாபா உங்களுக்கு மீண்டும்; மீண்டும் கூற வேண்டியுள்ளது. இதையே நீங்கள் ஒருவருக்கொருவர் விளங்கப்படுத்த வேண்டும்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, பரமாத்மாவை நினைவுசெய்யுங்கள், உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். வேறு வழி கிடையாது. இதையே அவர் ஆரம்பத்திலும் இறுதியிலும் கூறுகின்றார். நினைவினூடாக மாத்திரம் நீங்கள் சதோபிரதானாக முடியும். நீங்களே எழுதுகின்றீர்கள்: “பாபா, மாயையின் புயல்கள் என்னை உங்களை மறக்க வைக்கின்றன”. எனவே, தந்தை உங்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டாமா? அவர் உங்களைத் தனியே விட்டுவிடுவாரா? நீங்கள் உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமானவர்கள் என்பதைத் தந்தை அறிவார். நீங்கள் சதோபிரதான் ஆகும்வரையில் உங்களால் திரும்பிச் செல்ல முடியாது. இதுவும் யுத்தத்துடன் ஒரு தொடர்பைக் கொண்டுள்ளது. உங்களின் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, நீங்கள் சதோபிரதான் ஆகும்பொழுது, யுத்தம் ஆரம்பமாகும். இந்த ஞானம் ஒரு விநாடிக்கானதாகும். நீங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டுகொண்டுள்ளீர்கள், ஆனால் நீங்கள் தூய்மையாகும்பொழுது மாத்திரமே அவரிடமிருந்து எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுவீர்கள். நீங்கள் மிக நன்றாக முயற்சி செய்ய வேண்டும். சிலர் முற்றாகவே எதையும் புரிந்துகொள்வதில்லை; அவர்களுக்குத்; தந்தையை நினைவுசெய்ய வேண்டும் எனும் ஞானம் கூட கிடையாது. அவர்கள் ஒருபொழுதும் இக்கல்வியைக் கற்றதில்லை. முழுக் கல்பத்திலும் எவரும் அசரீரியான தந்தையுடன் எப்பொழுதும் கற்றதில்லை. ஆகவே இது புதியதொன்றாகும். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும் ஒருமுறை உங்களைச் சதோபிரதான் ஆக்குவதற்கு வருகின்றேன். நீங்கள் சதோபிரதான் ஆகும்வரையில், உங்களால் அந்த அந்தஸ்தை அடைய முடியாது. ஏனைய கல்விகளில் மாணவர்கள் சித்தியடையாததைப் போன்றே, இங்கும் மாணவர்கள் சித்தியடைவதில்லை. சிவபாபாவை நினைவுசெய்வதால் என்ன நடைபெறும் என்பதை அவர்கள் முற்றிலும் புரிந்துகொள்வதில்லை. அவர் தந்தையாதலால், நீங்கள் அவரிடமிருந்து நிச்சயமாகச் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவீர்கள். தந்தை உங்களுக்கு ஒருமுறை மாத்திரம் விளங்கப்படுத்துகின்றார், நீங்கள் அதனூடாகத் தேவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள், பின்னர் தங்களுடைய பாகங்களை நடிப்பதற்கு வரிசைக்கிரமமாக ஏனைய அனைவரும் இங்கு வருவார்கள். இவ்விடயங்கள் அனைத்தும் முதிய தாய்மார்களின் புத்தியில் இருக்க முடியாது. எனவே, தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். அவ்வளவுதான். அந்தச் சிவபாபாவே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார். அனைவருக்கும் அவனுடைய அல்லது அவளுடைய சொந்த லௌகீகத் தந்தை உள்ளார். சிவபாபா அசரீரியானவர். அவரை நினைவுசெய்கையில், நீங்கள் தூய்மையாகி, உங்கள் சரீரத்தை நீக்கித் தந்தையை அடைவீர்கள். தந்தை பெருமளவு விளங்கப்படுத்துகின்றார், ஆனால் நீங்கள் அனைவரும் ஒரேயளவுக்குப் புரிந்துகொள்வதில்லை. மாயை உங்களை மறக்க வைக்கின்றாள். இது ஒரு யுத்தம் என அழைக்கப்படுகின்றது. தந்தை இங்கமர்ந்திருந்து, உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்குப் பல்வேறு விடயங்களையும் நினைவூட்டுகின்றார். செய்யப்பட்டுள்ள பிரதான தவறுகளை ஒரு பட்டியலிடுங்கள். ஒன்று தந்தை சர்வவியாபியாக இருப்பதாகும். கடவுள் பேசுகின்றார்: நான் சர்வவியாபி அல்ல. ஐந்து விகாரங்களே சர்வவியாபிகளாக உள்ளன. இது மிகவும் கடுமையான தவறாகும். ஸ்ரீ கிருஷ்ணர் கீதையின் கடவுள் அல்லர். பரமாத்மாவாகிய பரமதந்தையாகிய சிவனே கீதையின் கடவுள். இத் தவறுகளைச் சரியாக்கிக் கொள்ளுங்கள், நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். எவ்வாறாயினும், இத்தவறுகள் காரணமாகவே பாரதம் தூய்மையானதிலிருந்து தூய்மையற்றதாகி விட்டது என்று ஏனையோருக்கு விளங்கப்படுத்தியதாகக் கூறி, இன்னமும் எக்குழந்தையும் பாபாவுக்கு எழுதியதில்லை. இதுவும் அவர்களுக்குக் கூறப்பட வேண்டும். கடவுள் எவ்வாறு சர்வவியாபியாக இருக்க முடியும்? கடவுள் ஒருவரே, அவர் பரமதந்தையும், பரம ஆசிரியரும், பரம சற்குருவும் ஆவார். எச் சரீரதாரியையும் பரம தந்தையும் ஆசிரியரும், சற்குருவும் என அழைக்க முடியாது. ஸ்ரீ கிருஷ்ணரே முழு உலகிலும் அதியுயர்வானவர், அவர் உலகம் சதோபிரதானாக உள்ளபொழுது வருகின்றார், பின்னர் உலகம் சதோவாக உள்ளபொழுது, இராமர் வருகின்றார். பின்னர் ஏனையோர் அவர்களுக்குரிய நேரத்தில் வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருகின்றார்கள். அனைவருடைய விகாரங்களையும் விழுங்கியதால், சங்கரரின் கழுத்து நீலநிறமாகியதாக அவர்கள் சமயநூல்களில் காட்டியுள்ளார்கள். எவ்வாறாயினும், இப்பொழுதும், இவ்விடயங்களை விளங்கப்படுத்தும்பொழுது, உங்கள் தொண்டை வரண்டு விடுகின்றது. இது அத்தகையதொரு சிறிய விடயம், ஆனால் மாயை மிகவும் சக்திவாய்ந்தவள்! நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் இதயத்தை வினவ முடியும்: நான் நற்குணங்கள் மிக்கவராகவும், சதோபிரதானாகவும் ஆகிவிட்டேனா? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் எவ்வளவுதான் பிரயத்தனம் செய்தாலும், விநாசம் இடம்பெறும்வரையில், உங்களின் கர்மாதீத ஸ்திதியை உங்களால் அடைய முடியாது. அமர்ந்திருந்து, சிவபாபாவை முழுநேரமும் நினைவுசெய்யுங்கள். வேறு எதையும் பேசவும் வேண்டாம். அவ்வளவுதான். பாபா, யுத்தம் இடம்பெறும் முன்னர், நான் நிச்சயமாகக் கர்மாதீத ஸ்திதியை அடைவேன். அவ்வாறான ஒருவர் வெளிப்படுவது நாடகத்தில் சாத்தியமல்ல. ஒரு நபர் மாத்திரமே முதல் இலக்கத்தைக் கோருவார். இவரும் கூறுகின்றார்: நான் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. மாயை மேலும் அதிகச் சக்தியுடன் வருகின்றாள். இந்த பாபாவே கூறுகின்றார்: சிவபாபா எனக்கு அருகிலேயே அமர்ந்திருக்கின்றார், ஆனால் அப்படியிருந்தும் என்னால் அவரை நினைவுசெய்ய முடியாதுள்ளது; நான் அவரை மறந்து விடுகின்றேன். சிவபாபா என்னுடன் இருப்பதை நான் புரிந்துகொள்கின்றேன், ஆனால் அப்பொழுதும் நீங்கள் செய்வது போன்றே நானும் அவரை நினைவு செய்ய வேண்டியுள்ளது. நான் அவருடன் இருப்பதால் மாத்திரம் நான் சந்தோஷம் அடைகின்றேன் என்பதல்ல. இல்லை. அவர் எனக்கும் கூறுகின்றார்: சதா என்னை நினைவுசெய்யுங்கள்! நீங்கள் என்னுடன் இருக்கின்றீர்கள், நீங்கள் சத்திவாய்ந்தவர், ஆனால் உங்களுக்கு மேலும் அதிகப் புயல்கள் கூட வரும். வேறு எவ்வாறு உங்களால் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்த முடியும்? இப்புயல்கள் அனைத்தும் உங்களைக் கடந்து செல்லும். அவருக்கு மிக அருகாமையில் அமர்ந்திருக்கையில் கூட, என்னால் கர்மாதீத ஸ்திதியை அடைய இயலாதுள்ளது, ஆகவே, வேறு யார் அவ்வாறு ஆகுவார்கள்? இந்த இலக்கு மிகவும் உயர்ந்தது. நாடகத்துக்கேற்ப, அனைவரும் தொடர்ந்தும் முயற்சி செய்கின்றார்கள். ஒருவர் அம்முயற்சியைச் செய்து காண்பிக்கட்டும்: பாபா, உங்களுக்கு முன்னதாகவே கர்மாதீதம் ஆகுவதை, நான் உங்களுக்குச் செய்து காண்பிப்பேன். அது சாத்தியமல்ல. இந்நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. நீங்கள் பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும். உங்களுடைய குணாதிசயமே பிரதான விடயமாகும். தேவர்களின் குணாதிசயங்களுக்கும், தூய்மையற்ற மனிதர்களின் குணாதிசயங்களுக்கும் இடையில் அதிக வித்தியாசம் உள்ளது. சிவபாபாவே உங்களை விகாரமுடையவர்களிலிருந்து விகாரமற்றவர்கள் ஆக்குகின்றார். எனவே, நீங்கள் இப்பொழுது பெருமளவு முயற்சி செய்து, தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அவரை மறக்க வேண்டாம். ஏழை அப்பாவித் தாய்மார்கள் ஏனையோரின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றார்கள். அதாவது, அவர்கள் இராவணனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றார்கள். எனவே, அவர்களால் என்ன செய்ய முடியும்? நீங்கள் கடவுள் இராமரின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றீர்கள். அம்மக்கள் இராவணனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றார்கள். இந்த யுத்தம் தொடர்கின்றது, ஆனால் இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் ஒரு யுத்தம் இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் வித்தியாசமான வழிகளில் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தொடர்ந்தும் உங்களைச் சீர்திருத்திக் கொள்ளுங்கள். ஒவ்வோர் இரவும் உங்கள் அட்டவணைகளைப் பாருங்கள்: நாள் முழுவதும் நான் ஏதாவது அசுர நடத்தையைக் கொண்டிருந்தேனா? ஒரு பூந்தோட்டத்திலுள்ள மலர்கள் வரிசைக்கிரமமாக உள்ளன. எப்பொழுதும் இரண்டு மலர்கள் ஒரேமாதிரி இருக்க முடியாது. ஆத்மாக்கள் அனைவரும் தங்களின் சொந்தப் பாகங்களைப் பெற்றுள்ளார்கள். ஒவ்வொரு நடிகரும் அவனுடைய அல்லது அவளுடைய சொந்தப் பாகத்தைத் தொடர்ந்தும் நடிக்கின்றார்கள். தந்தையும் வந்து, நிச்சயமாக ஸ்தாபனைப் பணியை மேற்கொள்கின்றார், அதன்பின்னரே அவர் திரும்பிச் செல்கின்றார். ஒவ்வொரு 5000 வருடங்களும் நிச்சயமாக அவர் வந்து உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். அவரே எல்லையற்ற தந்தை ஆதலால், நிச்சயமாக உங்களுக்குப் புதிய உலகம் எனும் ஆஸ்தியைக் கொடுப்பார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஞானமாகிய மூன்றாம் கண்ணைப் பயன்படுத்தி, ஆத்மாக்களை மட்டும் பாருங்கள். உங்கள் பௌதீகக் கண்களால் எதையும் பார்க்காதீர்கள். சரீரமற்றவர்கள் ஆகுவதைப் பயிற்சி செய்யுங்கள்.

2. தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதனால், உங்கள் குணாதிசயத்தைத் தெய்வீகமானதாக ஆக்குங்கள். உங்கள் இதயத்தை வினவுங்கள்: நான் எந்தளவிற்கு நற்குணங்கள் மிக்கவர் ஆகியுள்ளேன்? நான் நாள் முழுவதும் முற்றாகவே ஏதாவது அசுர நடத்தையைக் கொண்டிருந்தேனா?

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா எச்சரிக்கையாகவும், மாயை உட்புக முடியாதவராகவும் இருப்பதனால், மாயையின் இராஜரீகமான ரூபத்தின் நிழலிலிருந்து பாதுகாப்பாக இருப்பீர்களாக.

தற்சமயம், மாயை உங்கள் உண்மையான புரிந்துகொள்தலையும் உங்கள் புரிந்துணர்வுச் சக்தியையும் மறைத்து, தவறானதைச் சரியானதாக உங்களை அனுபவம் செய்ய வைக்கின்றாள். ஒருவர் மந்திரவித்தையைச் செய்யும்பொழுது, ஒரு நபரைக் கட்டுப்பாடு இழக்கச் செய்கின்றார். அதேபோல், இராஜரீகமான மாயை எது உண்மை என்பதை உங்களைப் புரிந்துகொள்ள அனுமதிப்பதில்லை, இதனாலேயே பாப்தாதா “கவனம் செலுத்துங்கள்!” என்பதற்கு இரட்டை அடிக்கோடிடுமாறு செய்கின்றார். மாயையின் நிழலிலிருந்து பாதுகாப்பாக இருப்பதிலும், மாயை உட்புகாதவராக இருப்பதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். தந்தையின் பாதுகாப்புக் குடையின் கீழ் குறிப்பாக உங்கள் மனதையும், புத்தியையும் வைத்திருங்கள்.

சுலோகம்:
பிறர் இலகுயோகிகளைப் பார்க்கும்பொழுது. அவர்களாலும் இலகுவில் யோகம் செய்ய இயலுகின்றது.