17.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அழியக் கூடிய சரீரங்கள் மீது அன்பு வைக்காதீர்கள், ஆனால் அழிவற்ற தந்தை மீது அன்பு கொண்டிருந்தால், நீங்கள் அழுவதிலிருந்து விடுதலை அடைவீர்கள்.

பாடல்:
அதர்மமான அன்பு என்றால் என்ன? அதன் விளைவுகள் யாவை?

பதில்:
அழியக்கூடிய சரீரங்கள் மீது பற்று வைத்திருப்பது அதர்மமான அன்பாகும். அழியக்கூடிய விடயங்களின் மீது பற்று வைத்திருப்பவர்கள் அழுவார்கள். சரீர உணர்வின் காரணமாகவே அழுகை ஏற்படுகின்றது. சத்தியயுகத்தில், அனைவரும் ஆத்ம உணர்வில் இருப்பதால், அங்கு அழுகை என்ற கேள்விக்கே இடமில்லை. அழுபவர்கள் அனைத்தையும் இழப்பார்கள். அழிவற்ற தந்தையின் அழிவற்ற குழந்தைகள் இப்பொழுது கற்பித்தல்களைப் பெறுகின்றார்கள்: ஆத்ம உணர்வுடையவராகுங்கள், நீங்கள் அழுவதிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.

ஓம் சாந்தி.
ஆத்மாக்கள் அழிவற்றவர்கள் என்றும் தந்தையும் அழிவற்றவர் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். எனவே, யாரை நீங்கள் நேசிக்க வேண்டும்? அழிவற்ற ஆத்மாக்களையே ஆகும். அழிவற்றவர்கள் மாத்திரமே நேசிக்கப்பட வேண்டும். எவருமே அழியக்கூடிய சரீரங்களை நேசிக்கக்கூடாது. முழு உலகமும் அழியக்கூடியது. அனைத்துமே அழியக்கூடியது. இச்சரீரமும் அழியக்கூடியதே. ஆனால் ஆத்மாவோ அழிவற்றவர். ஆத்மா மீதான அன்பு அழிவற்றது. ஆத்மா ஒருபோதும் மரணிப்பதில்லை. இதுவே தர்மம் எனப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் அதர்மமானவர் ஆகிவிட்டீர்கள். உண்மையில், அழிவற்றவர்கள் அழிவற்ற ஒரேயொருவர் மீதே அன்பு கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அழியக்கூடிய சரீரங்கள் மீது அன்பு கொண்டிருப்பதனாலேயே அழுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டீர்கள். நீங்கள் அழிவற்ற ஆத்மாக்கள் மீது அன்பு கொண்டிருப்பதில்லை. அழியக்கூடிய ஒன்றின்மீது அன்பு கொண்டிருப்பதாலேயே, நீங்கள் அழவேண்டியுள்ளது. இப்பொழுது உங்களை அழிவற்ற ஆத்மாக்களாக நீங்கள் கருதுவதால், அழுகை என்ற கேள்விக்கே இடமில்லை, ஏனெனில், நீங்கள் ஆத்ம உணர்வில் இருக்கிறீர்கள். எனவே, தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்குகின்றார். சரீர உணர்விலிருப்பதாலேயே நீங்கள் அழுகின்ற நிலைக்குச் செல்கின்றீர்கள். நீங்கள் அழியக்கூடிய சரீரங்களிற்காகவே அழுகின்றீர்கள். ஆத்மா ஒருபோதும் மரணிப்பதில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். எனவே, நீங்கள் அழிவற்ற ஆத்மாக்கள் அதாவது, அழிவற்ற தந்தையின் அழிவற்ற குழந்தைகள். நீங்கள் அழவேண்டிய அவசியம் இல்லை. ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கிச் சென்று, இன்னொரு பாகத்தை நடிக்கின்றார். இது ஒரு நாடகமாகும். நீங்கள் ஏன் சரீரத்தின் மீது பற்றைக் கொண்டிருக்கின்றீர்கள்? புத்தியின் யோகத்தை உங்கள் சரீரத்திலிருந்தும், அதன் உறவுமுறைகள் அனைத்திலிருந்தும் துண்டித்து, உங்களை ஓர் அழிவற்ற ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாக்கள் ஒருபோதும் மரணிப்பதில்லை. அழுபவர்கள் இழக்கிறார்கள் என நினைவுகூரப்படுகின்றது. ஆத்ம உணர்விற்கு வருவதனால், நீங்கள் தகுதி வாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். எனவே, தந்தை வந்து உங்களைச் சரீர உணர்விலிருந்து ஆத்ம உணர்வுடையவராக ஆக்குகின்றார். அவர் கூறுகின்றார்: நீங்கள் எவ்வாறு அனைத்தையும் மறந்தீர்கள்? நீங்கள் பிறவி பிறவியாக அழவேண்டியிருந்தது. இப்பொழுது உங்களுக்கு மீண்டும் ஒரு தடவை ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கான கற்பித்தல்கள் கொடுக்கப்படுகின்றது. பின்னர், நீங்கள் ஒருபோதும் அழமாட்டீர்கள். இது கண்ணீர் நிறைந்த உலகம், அதுவோ சிரிப்பு நிறைந்த உலகமாகும். இது துன்ப உலகம், அதுவோ சந்தோஷ உலகமாகும். தந்தை மிகச் சிறந்த முறையில் உங்களுக்குக் கற்பித்தல்களை வழங்குகின்றார். அழிவற்ற தந்தையின் அழிவற்ற குழந்தைகள் கற்பித்தல்களைப் பெறுகின்றார்கள். அந்த மக்கள் சரீர உணர்வடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் சரீரத்தைப் பார்த்தவாறே கற்பித்தல்களைக் கொடுக்கின்றனர். எனவே, அவர்கள் சரீரத்தை நினைவு செய்தவாறே அழுகின்றனர். சரீரம் அழிக்கப்படுவதையும் அவர்கள் பார்க்கின்றனர். எனவே, அதை நினைவு செய்வதால் என்ன நன்மை இருக்கின்றது? நீங்கள் சாம்பலை நினைவு செய்வீர்களா? அழிவற்றவர் (ஆத்மா) சென்று இன்னொரு சரீரத்தை எடுத்துவிட்டார். நற்செயல்களைச் செய்பவர்கள் நல்ல சரீரத்தை எடுப்பார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சிலர் கடும் நோய்வாய்ப்பட்ட சரீரத்தையே பெறுகின்றனர். அதுவும் அவர்களது கர்மத்திற்கேற்பவே ஆகும். அவர்கள் நற்காரியங்களைச் செய்திருந்தால், மேலே சென்றுவிடுவார்கள் என்றில்லை. இல்லை. எவருமே மேலே செல்ல முடியாது. நற்செயல்களைச் செய்தவர்கள் நல்லவர்கள் எனப்படுவார்கள். அவர்கள் நல்ல பிறவியொன்றை எடுப்பார்கள். எனினும், அவர்கள் கீழிறங்கவே வேண்டும். நாங்கள் எவ்வாறு ஏறுகின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒருவர் நற்செயல்களைச் செய்வதன் மூலம் மகாத்மா ஆகலாம். எனினும், அவரது கலைகளும் தொடர்ந்து குறைவடையவே செய்யும். தந்தை கூறுகின்றார்: அவர்கள் கடவுளை நினைவு செய்து நற்செயல்களைச் செய்வதால் நான் அவர்களுக்குத் தற்காலிக சந்தோஷத்தைக் கொடுக்கின்றேன். இருந்தபோதிலும், அவர்கள் ஏணியில் கீழிறங்கவே வேண்டும். அவர்களுக்கு ஒரு நல்ல பெயர் இருக்கலாம், எனினும், இங்கு மக்களுக்கு நற்செயல்களையும், தீய செயல்களையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாது. மந்திரசக்தி உடையவர்களுக்குப் பெருமளவு மதிப்புக் கொடுக்கப்படுகிறது. மக்கள் பித்துப்பிடித்து அவர்களின் பின்னால் செல்கின்றார்கள். அவையனைத்தும் அறியாமையே ஆகும். உதாரணமாக ஒருவர் மறைமுகமாகத் தான தர்மம் செய்து, தர்மசாலையை அல்லது வைத்தியசாலையைக் கட்டுவாராயின், அதன் பலனை நிச்சயமாகத் தனது அடுத்த பிறவியில் பெறுவார். அவர்களும் தந்தையை நினைவு செய்கின்றார்கள். அவர்கள் பிறரை அவதூறு செய்யும்வேளையிலும் கடவுளின் பெயரைக் கூறியே அதனையும் செய்கின்றார்கள். எவ்வாறாயினும் அறியாமையினால் அவர்கள் எதனையும் அறியாதிருக்கிறார்கள். அவர்கள் கடவுளை நினைவு செய்து, உருத்திரனை வழிபடுகின்றார்கள். அவர்கள் உருத்திரனைக் கடவுள் எனக் கருதுகின்றார்கள். அவர்கள் உருத்திர யாகத்தை உருவாக்குகின்றார்கள். அவர்கள் சிவனை அல்லது உருத்திரனை வழிபடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவர்கள் என்னை வழிபடுகின்றார்கள், ஆனால் விவேகமற்றதால் எதை உருவாக்குகின்றார்கள், எதைச் செய்கின்றார்கள் எனப் பாருங்கள். மனிதர்களின் எண்ணிக்கைக்கேற்ப குருமாரும் உள்ளனர். ஒரு விருட்சத்தில் புதிய இலைகளும், கிளைகளும் தோன்றும்போது அவை மிக அழகாகக் காட்சியளிக்கின்றன. சதோகுணியாக இருப்பதனால் அவர்கள் புகழப்படுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இது அழியக்கூடியவற்றின் மீது அன்பு கொண்டவர்களின் உலகமாகும். சிலர் பற்றினால் பித்துப் பிடித்தவர்களாகும் அளவிற்கு அன்பு வைத்திருக்கின்றார்கள். முக்கியமான வியாபாரிகளும் பற்றினால் பித்துப்பிடித்தவர்கள் போல் ஆகுகின்றனர். தாய்மாரிடம் ஞானம் இல்லாததால், அவர்கள் விதவைகளாகும்போது, அழியும் சரீரங்களை நினைத்து அதிகமாக அழுகின்றனர். நீங்கள் இப்பொழுது உங்களை ஆத்மாக்களாகக் கருதி, மற்றவர்களையும் ஆத்மாக்களாகவே பார்ப்பதனால் துன்பம் சிறிதளவேனும் இருக்க மாட்டாது. கல்வியே வருமானத்திற்கான மூலாதாரம் எனப்படுகின்றது. கல்வியில் ஓர் இலக்கும், குறிக்கோளும் உள்ளது. எவ்வாறாயினும், அது ஒரு பிறவிக்கானதாகும். அவர்கள் அரசாங்கத்திடமிருந்து ஊதியம் பெறுகின்றார்கள். அவர்கள் கற்று, பின்னர் வியாபாரம் செய்கின்றார்கள். அப்பொழுதே அவர்களால் பணத்தைப் பெற முடியும். இங்கு, இது புதிய விடயமாகும். அழிவற்ற இந்த ஞான இரத்தினங்களால் எவ்வாறு உங்கள் புத்தியை உங்களால் நிரப்ப முடியும்? பாபா எங்களுக்கு அழிவற்ற இந்த ஞானப் பொக்கிஷத்தைக் கொடுக்கின்றார் என்பதை ஆத்மா புரிந்து கொள்கின்றார். கடவுளே உங்களுக்குக் கற்பிப்பதனால், அவர் நிச்சயமாக உங்களை இறைவன், இறைவிகளாக ஆக்குவார். எவ்வாறாயினும், இலக்ஷ்மியையும் நாராயணனையும் இறைவன், இறைவி எனக் கருதுவது தவறாகும். நாங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகும்போது, எங்கள் புத்தி மிகவும் சீரழிந்து, மிருக புத்தியை போன்றதாகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர்கள் விலங்குகளை மிக நன்றாகப் பராமரிக்கின்றார்கள். மக்களுக்கான சேவை எதுவும் இல்லை. பந்தயக் குதிரைகள் மிக நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. இங்குள்ள மக்களின் நிலைமையைப் பாருங்கள்! அவர்கள் நாய்களைப் பெருமளவு அன்புடன் பராமரிக்கின்றார்கள், அவை தங்களை நக்குவதற்கும் இடமளிக்கின்றார்கள். அத்துடன் விலங்குகள் தங்களுடன் உறங்குவதற்கும் அவர்கள் இடமளிக்கின்றார்கள். உலகின் நிலைமை எவ்வாறு ஆகிவிட்டதெனப் பாருங்கள்! சத்தியயுகத்தில் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறமாட்டாது. எனவே, தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, மாயையாகிய இராவணன் உங்களை அதர்மம் ஆக்கிவிட்டான். இது அதர்ம இராச்சியமாகும். மக்கள் அதர்மம் ஆகியதால், முழு உலகத்திலும் அதர்மம் நிலவுகின்றது. தர்ம உலகத்திற்கும், அதர்ம உலகத்திற்குமிடையில் எவ்வளவு வேறுபாடு உள்ளது எனப் பாருங்கள்! கலியுகத்தின் நிலைமையைப் பாருங்கள். நான் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றேன். எனவே, மாயையும் தனது சுவர்க்கத்தை உங்களுக்குக் காண்பிக்கின்றாள். அவள் உங்களை கவர்கின்றாள். செயற்கையான செல்வம் பெருமளவு உள்ளது. தாங்கள் இங்கு சுவர்க்கத்தில் இருப்பதாக அவர்கள் நம்புகின்றார்கள். சுவர்க்கத்தில் மிக உயரமான 100 மாடிக் கட்டடங்கள் இருக்கமாட்டாது. அவர்கள் கட்டடங்களை எவ்வாறு அலங்கரிக்கின்றார்கள் எனப் பாருங்கள். அங்கு இரண்டு மாடிக் கட்டடங்களும் இருக்கமாட்டாது. அங்கு வெகு சில மனிதர்களே இருப்பார்கள். பெரும் நிலப்பரப்பை வைத்து என்ன செய்வீர்கள்? இங்கு மக்கள் நிலத்திற்காக அதிகளவு சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றார்கள். அங்கு, முழு நிலப்பரப்பும் உங்களுக்கேயுரியது. பகலுக்கும், இரவுக்குமிடையிலான வித்தியாசம் உள்ளது. அவர்கள் லௌகீகத் தந்தை, இவரோ பரலோகத் தந்தையாவார். பரலோகத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எதைத்தான் கொடுக்க மாட்டார்? நீங்கள் அரைக் கல்பமாக பக்தி செய்து வந்தீர்கள். தந்தை உங்களுக்கு மிகத் தெளிவாகக் கூறுகின்றார்: நீங்கள் அதன் மூலமாக முக்தியைப் பெறமாட்டீர்கள். அதாவது, அதன் மூலமாக உங்களால் என்னைச் சந்திக்க முடியாது. நீங்கள் முக்தி தாமத்தில் என்னைச் சந்திக்கின்றீர்கள். நான் முக்திதாமத்தில் வசிக்கின்றேன், நீங்களும் முக்தி தாமத்திலேயே வசிக்கின்றீர்கள். பின்னர், நீங்கள் அங்கிருந்து சுவர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள். நான் சுவர்க்கத்தில் இருப்பதில்லை. இதுவும் நாடகமேயாகும். அது பின்னர் மீண்டும் மீண்டும் அதேபோன்று நிகழும். நீங்கள் பின்னர் இந்த ஞானத்தை மறந்துவிடுவீர்கள். அது மறைந்துவிடும். சங்கமயுகம் வரும் வரைக்கும் எவ்வாறு இந்த கீதை ஞானம் இருக்க முடியும்? இப்பொழுது இருக்கும் சமய நூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவையாகும். இப்பொழுது நீங்கள் இந்த ஞானத்தைச் செவிமடுக்கின்றீர்கள். நானே விதையும், ஞானக்கடலும் ஆவேன். நான் உங்களை எதனையும் செய்ய அனுமதிப்பதில்லை. என் பாதங்களில் வீழ்வதற்கும் இடமளிப்பதில்லை. நீங்கள் யாருடைய பாதங்களில் வீழ்வீர்கள்? சிவபாபாவிற்குப் பாதங்கள் இல்லை. அது பிரம்மாவின் பாதங்களில் வீழ்வதையே குறிக்கும். நான் உங்கள் அடிமை. அவர் அசரீரியானவர் என்றும், அகங்காரமற்றவர் என்றும் கூறப்படுகின்றார். எவ்வாறாயினும், அவர் இங்கு நடிக்க வரும்போதே அகங்காரமற்றவர் எனப்படுகின்றார். தந்தை உங்களுக்கு அதிகளவு ஞானத்தைக் கொடுக்கின்றார். இது அழிவற்ற ஞான இரத்தினங்களின் தானமாகும். நீங்கள் எந்தளவை எடுத்துக்கொள்கின்றீர்கள் என்பது உங்களைப் பொறுத்ததாகும். தொடர்ந்தும் அழிவற்ற ஞான இரத்தினங்களைப் பெற்று அதனை மற்றவர்களுக்கும் தானம் செய்யுங்கள். ஒவ்வொரு இரத்தினமும் நூறாயிரக்கணக்கான பெறுமதியுடையது என இந்த இரத்தினங்களைப் பற்றிக் கூறப்படுகின்றது. ஒரேயொரு தந்தையே உங்களுக்கு ஒவ்வொரு அடியிலும் பல மில்லியன்களைக் கொடுக்கின்றார். நீங்கள் சேவையில் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும். உங்களது அடிகள் நினைவு யாத்திரையிலேயே உள்ளன. அதன் மூலமாக நீங்கள் அமரத்துவமானவர்கள் ஆகுகின்றீர்கள். அங்கு மரண பயம் கிடையாது. நீங்கள் ஒரு சரீரத்தை நீக்கிவிட்டு, இன்னொன்றை எடுக்கின்றீர்கள். நீங்கள் பற்றை வென்ற அரசனின் கதையைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்கள். தந்தை இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை இப்பொழுது உங்களையும் அவ்வாறே ஆக்குகின்றார். இது தற்காலத்தையே குறிக்கின்றது. மக்கள் இரக்ஷ பந்தன் விழாவைக் கொண்டாடுகின்றனர். அது எந்நேரத்திற்குரிய அடையாளம்? தூய்மையாகுங்கள் என எப்பொழுது கடவுள் கூறினார்? பழைய உலகம் எப்பொழுது உள்ளது, புதிய உலகம் எப்பொழுது உள்ளது என்பது பற்றி மக்களுக்கு என்ன தெரியும்? எவருக்குமே அது தெரியாது. இப்பொழுது இது கலியுகம் என்பதை அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள். சத்தியயுகம் இருந்தது இப்பொழுது அது இல்லை என அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் மறு பிறவி பற்றியும் நம்புகின்றனர். அவர்கள் 8.4 மில்லியன் பிறவிகளைப் பற்றிப் பேசுவதால், நிச்சயமாக அது மறுபிறவிகளையே குறிக்கின்றது. அனைவரும் அசரீரியான தந்தையை நினைவு செய்கின்றனர். அவரே சகல ஆத்மாக்களினதும் தந்தையாவார். அவர் மாத்திரமே வந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். லௌகீகத் தந்தையர் பலர் உள்ளனர். விலங்குகளும் தங்கள் குழந்தைகளின் தந்தையர்களே. விலங்குகளின் தந்தை என நீங்கள் இந்த ஒரேயொருவரைக் (சிவபாபா) கூறமாட்டீர்கள். சத்தியயுகத்தில், குப்பை எதுவும் கிடையாது. மனிதர்கள் எவ்வாறோ, அவ்வாறே அவர்களது தளபாடங்களும் இருக்கும். அங்கு, பறவைகள் போன்றனகூட முதற்தரமானவையாகவும், அழகானவையாகவும் இருக்கும். அங்கு அனைத்தும் மிகவும் சிறந்தவையாக இருக்கும். அங்குள்ள பழங்கள் மிக இனிமையாகவும், பெரிதாகவும் இருக்கும். அவை அனைத்தும் எங்கு சென்றுவிட்டன? இனிமை அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக கசப்பு உள்ளது. நீங்கள் மூன்றாந்தரம் ஆனவர்களாகும்போது, அனைத்துமே மூன்றாந்தரம் ஆகின்றது. சத்தியயுகம் முதற்தரமானது. எனவே, அங்கு நீங்கள் பெறுகின்ற அனைத்தும் முதற்தரமானதாகவே இருக்கும். கலியுகத்தில் அனைத்தும் மூன்றாந்தரமானதாகவே இருக்கும். அனைத்தும் சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்து செல்கின்றன. இங்கு சந்தோஷம் இல்லை. ஆத்மாக்கள் தமோபிரதானாக உள்ளதால், சரீரங்களும் தமோபிரதானாகவே உள்ளன. குழந்தைகளாகிய உங்களிடம் இப்பொழுது ஞானம் உள்ளது. அதற்கும், இப்போதுள்ளதற்கும் இடையில் பகலுக்கும், இரவுக்குமிடையிலான வேறுபாடு உள்ளது. தந்தை உங்களை மிக மேன்மையானவர்கள் ஆக்குகின்றார்! நீங்கள் எந்தளவிற்கு அவரை நினைவு செய்கின்றீர்களோ, அதற்கேற்ப ஆரோக்கியம், செல்வம் இரண்டையும் பெறுவீர்கள். வேறு என்னதான் உங்களுக்கு வேண்டும்? நீங்கள் இரண்டில் ஒன்றைக் கொண்டிராது விட்டாலும் சந்தோஷம் இருக்காது. உதாரணமாக, நீங்கள் ஆரோக்கியமாக இருந்து, உங்களிடம் செல்வம் இல்லாதுவிட்டால் அதனால் என்ன பயன்? உங்களிடம் பணம் இருந்தால் சுற்றுலாச் செல்லுங்கள் என்பது நினைவுகூரப்படுகின்றது. பாரதம் தங்கச் சிட்டுக்குருவியாக இருந்ததைக் குழந்தைகள் புரிந்துகொள்கின்றனர். இப்பொழுது தங்கம் எங்கே? தங்கம், வெள்ளி, செப்பு போன்றவை கடந்து, இப்பொழுது காகிதத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. காகிதம் நீருடன் அடித்துச் செல்லப்பட்டால், நீங்கள் எங்கிருந்து பணத்தைப் பெறுவீர்கள்? தங்கம் மிகவும் கனமானது. அது எங்கேயுள்ளதோ, அங்கேயே இருக்கும். தீயினாலும் தங்கத்தை எரிக்க முடியாது. எனவே, இங்கு அனைத்தும் துன்பமானவையாகவே உள்ளன. இவை எதுவுமே அங்கு இருக்கமாட்டாது. இந்நேரத்தில் இங்கு அளவற்ற துன்பமே உள்ளது. அளவற்ற துன்பம் உள்ளபோதே தந்தை வருகின்றார். நாளை, அளவற்ற சந்தோஷம் நிலவும். பாபா வந்து, ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்குக் கற்பிக்கின்றார். இது எதுவும் புதிதல்ல. நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்களிடம் சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் கிடையாது. இது இறுதிக் கால நிலைமையாகும். அதீந்திரிய சுகத்தைப் பற்றிக் கோபியரிடமும் கோபிகைகளிடமும் கேளுங்கள். இறுதியில், நீங்கள் அனைத்தையும் மிக நன்றாகப் புரிந்துகொள்வீர்கள். எது உண்மையான அமைதி என்பதைத் தந்தை மாத்திரமே உங்களுக்குக் கூறுகின்றார். நீங்கள் தந்தையிடமிருந்தே அமைதி என்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர். தந்தை அமைதிக்கடல் ஆவார். யார் அவரிடம் செல்லலாம் என்பதை அவர் விளங்கப்படுத்துகின்றார். இன்ன இன்ன சமயம் இன்ன இன்ன நேரத்தில் வருகின்றது. அவர்களால் சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது. பல சாதுக்களும், புனிதர்களும் இப்பொழுது உருவாகியிருக்கிறார்கள். எனவே, அவர்கள் புகழப்படுகின்றனர். அவர்கள் தூய்மையாக உள்ளதால், நிச்சயமாகப் புகழப்பட வேண்டும். அவர்கள் இப்பொழுதே புதிதாகக் கீழிறங்கியவர்கள். பழையவர்களை அந்தளவிற்குப் புகழ முடியாது. அவர்கள் சந்தோஷத்தை அனுபவித்து, இப்பொழுது தமோபிரதானம் ஆகிவிட்டனர். பலவகையான குருமார் தொடர்ந்தும் தோன்றுவார்கள். இந்த எல்லையற்ற விருட்சம் பற்றி எவருமே அறியமாட்டார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: விருட்சத்தின் வளர்ச்சிக்கேற்ப பக்தியின் விரிவாக்கமும் உள்ளது. ஆனால் விதையாகிய ஞானம் மிகவும் சிறிதாகவே உள்ளது. பக்திக்கு அரைக் கல்பம் எடுக்கின்றது. ஆனால், இந்த ஞானமோ இந்த ஒரு இறுதிப் பிறவிக்கு மாத்திரமேயாகும். நீங்கள் ஞானத்தைப் பெற்று அரைக் கல்பத்திற்கு அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பக்தி முடிவடைந்து, பகலாகுகின்றது. இப்பொழுது நீங்கள் எக்காலத்திற்குமாக முகமலர்ச்சியுடையவர்கள் ஆகுகின்றீர்கள். இது கடவுளிடமிருந்தான அழிவற்ற அதிர்ஷ்டலாபச்சீட்டு எனப்படுகின்றது. இதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இறை அதிர்ஷ்டலாபச் சீட்டிற்கும், அசுர அதிர்ஷ்டலாபச்சீட்டிற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது! அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நினைவின் ஒவ்வொரு அடியிலும் நீங்கள் பல மில்லியன்களைச் சம்பாதிக்கின்றீர்கள். இதன் மூலமாகவே நீங்கள் ஓர் அமரத்துவமான அந்தஸ்தைப் பெறவேண்டும். நீங்கள் தந்தையிடமிருந்து பெற்ற அழிவற்ற ஞான இரத்தினங்களைத் தானம் செய்யுங்கள்.

2. ஆத்ம உணர்வுடையவராகி, அளவற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்யுங்கள். சரீரங்கள் மீதுள்ள பற்றை நீக்கி, சதா முகமலர்ச்சியுடன் இருங்கள். பற்றை வென்றவர்கள் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
ஒவ்வொரு கணத்தையும் உங்களுடைய இறுதி கணம் எனக் கருதுவதன் மூலம் நீங்கள் ஒரு விசேட ஆத்மாகவிருந்து சதா ஆன்மிக சுகத்தில் நிலைத்திருப்பீர்களாக.

சங்கமயுகம் ஆன்மிக சுகத்தில் நிலைத்திருக்க வேண்டிய யுகம் என்பதால் நீங்கள் ஒவ்வொரு கணத்திலும், தொடர்ந்தும் நீங்கள் ஆன்மிக சுகத்தை அனுபவம் செய்ய வேண்டும். எந்தச் சூழ்நிலையை அல்லது பரீட்சையை இட்டும் குழப்பம் அடையாதீர்கள், ஏனெனில் இது அகால மரணத்திற்கான நேரமாகும். சந்தோஷமாக இருப்பதற்கு பதிலாக ஒரு குறுகிய நேரத்திற்கேனும் நீங்கள் குழப்பமாக இருந்தால், அந்த நேரம் உங்கள் இறுதிக் கணமாக இருக்குமாயின், உங்கள் இறுதிக்கணம் எவ்வாறாகவிருக்கும்? ஆகையாலேயே, எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பதற்கான பாடம் உங்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. எக் கணமும் உங்களை ஏமாற்றி விடலாம் என்பதால் உங்களை ஒரு விசேட ஆத்மாவாகக் கருதி, ஒவ்வொரு எண்ணத்தின் போதும் ஒவ்வொரு வார்த்தையை பேசும் போதும், ஒவ்வொரு செயலை செய்யும் போதும் சதா ஆன்மிக சுகத்தில் நிலைத்திருங்கள்.

சுலோகம்:
அசைக்க முடியாதவராக ஆகுவதற்கு, வீணான மற்றும் தூய்மையற்ற அனைத்தையும் முடியுங்கள்.