18.08.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    20.02.2001     Om Shanti     Madhuban


சிவஜெயந்தி: ஒரு சத்தியப்பிரமாணம் செய்வதுடன் உங்களை முழுமையாக அர்ப்பணிப்பதன் ஞாபகார்த்தம்.


இன்று, திரிமூர்த்திகளைப் படைத்தவரான சிவத்தந்தை, தனது பூஜிக்கத்தகுதி வாய்ந்த சாலிகிராம்களைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். இன்று, இது ஒரு சந்திப்பும் அத்துடன் ஒரு கொண்டாட்டமும் ஆகும். நீங்கள் எல்லோரும் உலகெங்கிலும் இருந்து பாப்தாதாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மிகுந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் வந்துள்ளீர்கள். தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நீங்கள் வந்திருப்பதாகக் குழந்தைகளான நீங்கள் சொல்கிறீர்கள். குழந்தைகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வந்திருப்பதாகத் தந்தை சொல்கிறார். நீங்கள் எல்லோரும் உங்களின் அலௌகீகப் பிறந்தநாளையும் கொண்டாடுவதற்காக வந்துள்ளீர்கள். கல்பம் முழுவதிலும் வேறெந்த வேளையிலும் இத்தகைய அழகான, தனித்துவமான பிறந்தநாள் இருக்க முடியாது. கல்பம் முழுவதிலும், தந்தையும் குழந்தைகளும் ஒரே நாளில் பிறந்தநாளைக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா அல்லது கொண்டாடி இருக்கிறீர்களா? இது ஏனென்றால், உலக மாற்றம் என்ற பணிக்கு, சிவத்தந்தையுடன்கூடவே பிரம்மா தாதாவும் பிராமணர்களும் தேவைப்படுகிறார்கள். பிராமணர்கள் இல்லாமல் ஒரு யாகம் வெற்றிபெற முடியாது. இதனாலேயே, தந்தையினதும் குழந்தைகளினதும் பிறந்தநாட்கள், ஜயந்திகள் ஒன்றாகவே இருக்கின்றன. குழந்தைகள் தமது இதயபூர்வமாகத் தந்தைக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். தந்தையும் ஒவ்வொரு பிராமணக் குழந்தைக்கும் அலௌகீகப் பிறந்தநாளுக்காக பல-பல - மில்லியன் மடங்கு வாழ்த்துக்களையும் அத்துடன் இதயபூர்வமான ஆசீர்வாதங்களையும் வழங்குகிறார். வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! (எல்லோரும் தமது கைகளை அசைத்தார்கள்) மிகவும் நல்லது! நீங்கள் இரண்டு கைகளால் அன்றி, ஒரு கையைத் தட்டுவதை விரும்புகிறீர்கள். அதிகளவு சந்தோஷம் உள்ளது. அதனால் உங்களால் உங்களின் கைகளைத் தட்டுவதை நிறுத்த முடிவதில்லை. அவை இயல்பாகவே அசைகின்றன.

உலகிலும், பக்தர்கள் மிகவும் கோலாகலமாக சிவஜயந்தியைக் கொண்டாடுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்களின் கொண்டாட்டம், ஓரிரவு நித்திரை இல்லாமல் இருப்பது (ஜாக்ரன்) அல்லது ஒரு நாள் விரதம் இருப்பதாகும். குழந்தைகளான உங்களிடம் ஒரேயொரு தினத்திற்கு மட்டும் அறியாமை என்ற நித்திரையில் இருந்து விழித்திருக்கும் (ஜாக்ரன்) எண்ணம் இருப்பதில்லை. அவர்கள் ஜாக்ரன் செய்கிறார்கள். ஆனால், நீங்களும் வைரம் போன்ற இந்த சங்கம யுகத்தில் இந்த ஒரு வாழ்க்கை முழுவதும் விழித்திருக்கிறீர்கள். நீங்கள் விழித்திருக்கிறீர்கள்தானே? இப்போது நீங்கள் நித்திரைக்குச் செல்ல மாட்டீர்கள்தானே? அல்லது, நீங்கள் சிறிது தூங்கிவிடுவீர்களா? அச்சா, நீங்கள் தூங்காமல் இருக்கக்கூடும். ஆனால், தூங்கிவழிகிறீர்கள். இரவு முழுவதும் விழித்திருப்பது எப்படி என்றால், நீங்களும் விழித்திருக்கிறீர்கள், மற்றவர்களையும் விழித்திருக்கச் செய்கிறீர்கள். இந்த ஞான வாழ்க்கையில், விழித்திருப்பது என்றால், இருளில் இருந்து வெளியே வெளிச்சத்திற்குள் வருவதாகும். நீங்கள் எல்லோரும் இந்த ஆன்மீக விழித்தலை விரும்புகிறீர்கள்தானே? நீங்கள் பிறப்பு எடுத்து, உங்களின் பிறந்தநாளைக் கொண்டாடிய கணத்தில் இருந்து என்ன சத்தியப் பிரமாணங்களை எடுத்துள்ளீர்கள்? உங்களுக்கு அவை ஞாபகம் இருக்கின்றனவா? குழந்தைகளான நீங்கள் சொல்கிறீர்கள்: அவற்றை நினைப்பது மட்டுமன்றி, எமது வாழ்க்கைகளும் இயற்கையான சத்தியப்பிரமாணம் ஆகியுள்ளன. எமது வாழ்க்கைகள் தூய உணவு, தூய்மையான தொடர்புகள், தூய எண்ணங்கள் உடையவை ஆகியுள்ளன. இவை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு மட்டுமல்ல. ஆனால், இந்த சத்தியப்பிரமாணங்களை எமது வாழ்க்கைகளில் நாம் சிறிது சிறிதாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளோம். அவை இயல்பானதாகவும் எமது சுபாவமாகவும் ஆகியுள்ளன. நீங்கள் உங்களின் சுபாவத்தைத் தூய்மையாக ஆக்கியுள்ளீர்கள்தானே? உங்களின் சுபாவம் அப்படி ஆகியுள்ளதா அல்லது நீங்கள் அதை அப்படி ஆக்க வேண்டியுள்ளதா? அது அப்படி ஆகியுள்ளதல்லவா? இணங்கினால் தலையசையுங்கள், அவ்வளவுதான். அது அப்படி ஆகியுள்ளதா? உங்களின் சுபாவத்தில் தூய்மையின்மை முடிந்து, உங்களின் வாழ்க்கைகளில் தூய்மை வெளிப்படுகிறதா? நீங்கள் இப்போது வைரம் போன்று பெறுமதிவாய்ந்த சிவஜயந்தியையும் சாலிகிராம் ஜயந்தியையும் கொண்டாடியுள்ளீர்கள். வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் உள்ள குழந்தைகளும் அதே வேளையில் அதைக் கொண்டாடுகிறார்கள். உங்களுடனும் தந்தையுடனும் கூடவே அவர்களும் எல்லோரும் மிகவும் சந்தோஷமாக இருப்பதை பாப்தாதா பார்க்கிறார்.

இன்று, உங்களின் ஞாபகார்த்தமாக, பக்தர்கள் குறிப்பாக ஒரு பலி கொடுக்கிறார்கள். நீங்கள் எல்லோரும் உங்களின் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் உங்களைத் தந்தையிடம் அர்ப்பணித்தீர்கள். அதன் ஞாபகார்த்தமாக, பக்தர்கள் தங்களைப் பலி கொடுப்பதில்லை. ஆனால், அதற்குப் பதிலாக, ஓர் ஆட்டைப் பலி கொடுக்கிறார்கள். அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லையா? அவர்களுக்கு ஆடு மட்டும்தான் கிடைத்ததா? இதன் அர்த்தம் உங்களுக்குத் தெரியும். ஏனென்றால், சரீர உணர்விற்கான மிகப்பெரும் காரணம், ‘நான்’ என்ற உணர்வேயாகும். (இந்தியில் மே என்றால் நான் என்று அர்த்தம்). ‘நான்’ என்ற உணர்வை நீங்கள் அர்ப்பணிக்கும்போதே, நீங்கள் பிராமணர்கள் ஆகுகிறீர்கள். எனவே, ஓர் ஆடு என்ன செய்யும்? மே, மே! எனவே, இது ‘நான்’ என்ற சரீர உணர்வின் அடையாளமாகும். சரீர உணர்வின் ‘நான்’ என்ற உணர்வானது, மிகவும் சூட்சுமமானது. அத்துடன் பல்வேறு வடிவங்களையும் கொண்டது. ‘நான்’ என்ற முதல் உணர்வானது, ‘நான் ஒரு சரீரம், நான் இன்னார்’ என்பதாகும். அதன்பின்னர், நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, உறவுமுறைகளில் நீங்கள் அகப்பட்டுக்கொள்ளும்போது ‘நான்’ என்பதன் வெவ்வேறு வடிவங்கள் ஏற்படுகின்றன. அதன்பின்னர், நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, பதவியின் ‘நான்’ என்ற வெவ்வேறு வடிவங்கள் ஏற்படுகின்றன. அதைவிடச் சூட்சுமமானது என்னவென்றால், உங்களின் சொந்தச் சிறப்பியல்பின் ‘நான்’ என்ற உணர்வு. இது உங்களை மேலே இருந்து கீழே கொண்டு வந்துவிடுகிறது. உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பியல்பு உள்ளது. அது புற ரூபத்திலோ அல்லது சூட்சுமமான ரூபத்திலோ எப்படி இருந்தாலும், ஒரு சிறப்பியல்பு இல்லாத ஒரு மனிதர்கூட இல்லை. இந்த ஞான வாழ்க்கையிலும், ஒவ்வொரு பிராமணருக்கும் நிச்சயமாகக் குறைந்தபட்சம் ஒரு சிறப்பியல்பாவது இருக்கும். எவ்வாறாயினும், இந்த ஞான வாழ்க்கையில், சிறப்பியல்பானது இறைவனால் அருளப்பட்ட பரிசாகும். இது இறை பரிசாகும். இறைவன் உங்களுக்குக் கொடுத்த பரிசில் நீங்கள் ‘நான்’ என்ற உணர்வைக் கொண்டுவந்தால், அது இராஜரீகமான அகங்காரமாகவும் ‘நான்’ என்ற மிகப்பெரும் உணர்வாகவும் ஆகுகிறது. ஆகவே, நீங்கள் ஏற்கனவே உங்களை அர்ப்பணித்துவிட்டீர்கள். ஆனால், மேலும் நீங்கள் எதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது?

ஆசிரியர்களான நீங்கள் எல்லோரும் உங்களை என்னவென்று அழைக்கிறீர்கள்? நீங்கள் அர்ப்பணித்திருக்கிறீர்கள், அப்படித்தானே? ஆசிரியர்களான நீங்கள் எல்லோரும் உங்களை அர்ப்பணித்திருக்கிறீர்களா? அச்சா, வீட்டில் தமது குடும்பங்களுடன் வாழ்பவர்கள் அர்ப்பணித்திருக்கிறீர்களா? ஆமா அல்லது இல்லையா? நீங்கள் அர்ப்பணித்துள்ளீர்கள். பாண்டவர்களான நீங்கள் உங்களை அர்ப்பணித்திருக்கிறீர்களா? மிகவும் நல்லது. பாராட்டுக்கள்! நீங்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் உங்களை அர்ப்பணித்திருக்கிறீர்கள். அது மிகவும் நல்லது. இப்போது, எதிர்காலத்திலும் நீங்கள் சோதிக்க வேண்டும்..... பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? நாங்கள்தான் அர்ப்பணித்துள்ளோமே, எனவே இப்போது நாங்கள் வேறு என்ன செய்ய வேண்டியுள்ளது? என நீங்கள் சொல்லக்கூடும். ஒன்று, அர்ப்பணித்தல். ஆனால், அதன்பின்னர் முழுமையான அர்ப்பணித்தல். முழுமையான அர்ப்பணித்தலில் விசேடமாகக் கீழ்க்கோடிட வேண்டியது, உங்களின் மனங்கள், புத்திகள், சம்ஸ்காரங்களை அர்ப்பணித்தல். இது ஏனென்றால், முன்னேறிச் செல்வதற்கு, நீங்கள் உங்களின் முயற்சிகளில் வேகமாக அடிகளை எடுத்து வைக்க வேண்டும். நீங்கள் இப்போதும் உங்களின் பிராமண வாழ்க்கையின் தற்போதைய சூழலுக்கேற்ப நீங்கள் அதைச் செய்கிறீர்கள். ஏனென்றால், இங்கே இருப்பவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்களே. உங்களின் மனங்களில் வீணானவற்றின் ஆதிக்கம் மட்டும் இருக்கிறது. தீயது எதுவும் இல்லை. ஏனென்றால், தீயவை அனைத்தும் முடிவடைந்துவிட்டன. எவ்வாறாயினும், தற்போதைய சூழலுக்கேற்ப, வீணானவையும் எதிர்மறையான விடயங்களும் அதிகளவில் புத்திகளின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தக் காரணத்தால், மிகச்சரியான, உண்மையான தீர்மானங்களை எடுப்பதற்கான உங்களின் உணர்ந்து கொள்ளும் சக்தி குறைவடைகிறது. ‘ஆமாம், இது தவறு, இது சரியல்ல’ என்ற புரிந்துணர்வினூடாகவே இனங்காணுதல் இடம்பெறும். எவ்வாறாயினும், ஒன்று, பொது அறிவுடன் இனங்காணுதல். மற்றையது, உங்களின் இதயபூர்வமாக இனங்காணுதல். உங்களின் இதயபூர்வமாக நீங்கள் எதையாவது இனங்கண்டால், உலகமே மாறினாலும், நீங்கள் மாற மாட்டீர்கள். எனவே, உங்களுக்கு மனதையும் புத்தியையும் பற்றிக் கூறப்பட்டது. இப்போது சம்ஸ்காரங்கள். உங்களின் சம்ஸ்காரங்கள் 63 பிறவிகள் பழைமையானவை என்பதனால், அவை இயல்பானவை ஆகிவிட்டன. வேறு வார்த்தைகளில் கூறினால், ‘இது தவறில்லை, ஆனால் இது எனது சுபாவம்’ என நீங்கள் கூறுகிறீர்கள். ஆகவே, பழைய சம்ஸ்காரங்களில் சிலது அழிக்கப்பட்டு, சிலது அடக்கப்பட்ட பின்னர், அவை மீண்டும் வெளிப்படுகின்றன. எவ்வாறாயினும், முழுமையான அர்ப்பணிப்பு என்றால், ஒவ்வோர் ஆத்மாவிற்காகவும் உங்களின் மனங்களின் நோக்கங்களும் உணர்வுகளும் மாற்றப்பட வேண்டும். ஆத்மாக்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், எப்போதும் பல்வகையினர் இருப்பார்கள் என பாப்தாதா இதைக் குறிப்பிடுகிறார். இதுவே கல்ப விருட்சம் ஆகும். அதில் பல்வகை இல்லாவிட்டால், எந்தவிதமான அழகும் இருக்காது. எவ்வாறாயினும், ஒவ்வோர் ஆத்மாவிற்கும் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் இருக்க வேண்டும். நீங்கள் சாபங்களையும் நல்லாசிகளாகவும் தூய உணர்வுகளாகவும் மாற்ற வேண்டும். ஒவ்வோர் ஆத்மாவும் நிச்சயமாகத் தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்ற நல்லாசிகளைக் கொண்டிருங்கள். ‘இவர் ஒருபோதும் மாறப்போவதில்லை’ என்று நினைக்காதீர்கள். அவர்களின் நீதிபதியாகி, அவர்கள் ஒருபோதுமே மாறப் போவதில்லை எனத் தீர்ப்பளிக்காதீர்கள். நீங்கள் பஞ்சபூதங்களையும் மாற்றி, அவற்றை சதோகுணி ஆக்குவீர்கள் என்ற சவாலை விடுத்திருப்பதனால், அதை நீங்கள் செய்யவே வேண்டும். அவை அப்படி ஆகுமா இல்லையா என்ற கேள்வியே இல்லை. ஆனால், நீங்களே அப்படி அவற்றை ஆக்கவேண்டும். ‘அதைச் செய்யவே வேண்டும்’ என்ற வார்த்தைகளை நீங்கள் கீழ்க்கோடிட வேண்டும். எனவே, பஞ்சபூதங்களால் மாற முடியும், ஆனால் ஆத்மாக்களால் மாற முடியாதா? ஆத்மாக்கள் சடப்பொருளின் அதிபதிகள். சடப்பொருள் மாறும். ஆனால் அதிபதிகள் மாறமாட்டார்களா? ஏன்? அதனால், தற்போது, தன்னை - மனம், புத்தி, சம்ஸ்காரங்கள் - மாற்றிக் கொள்வதே செய்ய வேண்டிய ஒரேயொரு சேவையாகும். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.

எல்லோரும் கேட்கிறார்கள்: இந்த வருடம் நாம் என்ன செய்யப் போகிறோம்? நீங்கள் இரட்டைச் சேவை செய்ய வேண்டும். முதலில், உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள்! உங்களின் அதிர்வலைகள், சூழல், சகவாசம், இதயபூர்வமான ஒத்துழைப்பு, இதயத்தின் ஆசீர்வாதங்கள் என்பவை மற்றவர்களில் இலகுவான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உங்களை அர்ப்பணியுங்கள். இந்தளவிற்கு நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நீங்கள் அனைத்தையும் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். இது ஒரு வகையான சேவை. மற்றையது, ஏனையவர்களுக்குச் சேவை செய்வது. பெறுபேறுகளில் பார்க்கும்போது, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும், எல்லா இடங்களிலும், கிராமங்களிலும்கூட பிராமணக் குழந்தைகளான நீங்கள் எத்தகைய சேவை செய்தாலும், நீங்கள் தந்தை மீதுள்ள அன்பினால் அதைச் செய்துள்ளீர்கள். அதற்காக பாப்தாதா பற்பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். நீங்கள் எதிர்காலத்தில் என்ன செய்வீர்கள்?

பிராமணர்களின் எண்ணிக்கையில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை பாப்தாதா பார்க்கிறார். இதைவிட வேகமான வளர்ச்சி ஏற்படும். எவ்வாறாயினும், இத்துடன்கூடவே, மக்கள் விரும்பும் வகையில் நீங்கள் செய்த சேவை, வெவ்வேறு செயல்திட்டங்களின் மூலம் செய்யப்படும் சேவை மிகவும் நன்றாக உள்ளது. இப்போது, வெவ்வேறு இடங்களில் மிக நல்ல ஒத்துழைக்கும் ஆத்மாக்கள், நல்ல கருவிகள் ஆகியுள்ளார்கள். அவர்கள் மிகவும் நல்ல ஒத்துழைக்கும் ஆத்மாக்கள். அவர்கள் ஒத்துழைப்பிற்கான ஓரடியை எடுத்து வைத்துள்ளார்கள். அவர்கள் ஓரடியை முன்னால் வைத்துள்ளார்கள். எவ்வாறாயினும், மற்றைய அடி என்னவென்றால், இலகு யோகியாகவும் ஒரு கர்ம யோகியாகவும் ஆகுவதாகும். வெகு சிலரே குறிப்பிட்ட அளவிற்கு கர்ம யோகிகளாகவும் இலகு யோகிகளாகவும் ஆகியுள்ளார்கள். இதுவே இரண்டாவது நிலையாகும். இப்போது, இத்தகைய ஆத்மாக்கள் மேடையில் நடைமுறைப் பாகத்தை நடிக்க வேண்டும். ஒரு மைக் எப்போதும் மேடையிலேயே இருக்கும். ஆகவே, அவர்கள் மைக்குகள் ஆகவேண்டும். நிச்சயமாகப் புலப்படும் முறையில் சேவை மேடைக்கு வரவேண்டும். நீங்கள் மைற் (சக்தி), அவர்கள் மைக். எப்படி பிரம்மாபாபா சூட்சும ரூபத்தில் மைற்றாக இருந்து, குழந்தைகளான உங்களை மைக்குகள் ஆக்கியுள்ளாரோ, அதேபோல், இப்போது மைற்றாகி, இத்தகைய மைக்குகளைத் தயார் செய்யுங்கள். அவர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள்மீது நம்பிக்கை இருக்கிறது. அவர்களால் வேகமாகச் செல்ல முடியும். எவ்வாறாயினும், இப்போது இத்தகைய ஆத்மாக்களுடன் உங்களின் தொடர்பை அதிகரிப்பது அவசியாகும். என்ன செய்ய வேண்டும் என்றும் எப்படி அதைச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் அறிய விரும்புகிறார்கள். மைற்றாகி, அவர்களின் உலகீய தொழில்களுக்கும் அவர்களின் ஆன்மீகச் சேவைக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணியவண்ணம், கடைசியாக வந்திருப்பவர்களால் வேகமாகச் செல்ல முடியும் என்றும் முதலில் வருபவர்களின் வரிசையில் வரமுடியும் என்றும் காட்டுங்கள். இத்தகைய ஆத்மாக்கள் இருக்கிறார்கள். அவர்களை வெளிப்படுத்த வேண்டும், அவ்வளவே. அவர்களுடன் தொடர்பில் இருந்து, அவர்களுக்கு ஒரு சகாஷைக் கொடுத்து – ஆன்மீகத்தின் சகாஷ், அதிர்வலைகளினதும் சூழலினதும் சகாஷ் - வெளிப்படுத்துவதற்குக் கருவிகள் ஆகுகின்ற வழிமுறை, சமநிலையான வாழ்க்கையே மிகவும் நல்லதும் இலகுவானதும் ஆகும் என அவர்களுக்குக் காட்டுங்கள். இது சரிதானே? நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டீர்கள்தானே?

சிறிய பூங்கொத்துக்களைத் தயார் செய்யுங்கள். ஓகே, பெரிய பூங்கொத்து என்றில்லை. ஆனால் குறைந்தபட்சம் ஐந்து அல்லது பத்து பூக்களைக் கொண்டதொரு பூங்கொத்தைக் கொண்டு வாருங்கள். பாப்தாதாவின் கண்களில் அவர்கள் எங்கும் இருக்கிறார்கள். உங்களுக்குக் கேட்டதா? பாண்டவர்களுக்கு இது கேட்டதா? மிகவும் நல்லது!

இரட்டை வெளிநாட்டவர்கள் குதிப்பதில்லை, ஆனால் பறக்கிறார்கள். எனவே, யார் முதல் பூங்கொத்தைக் கொண்டு வருவீர்கள்? வெளிநாட்டைச் சேர்ந்தவர்களா அல்லது பாரதத்தைச் சேர்ந்தவர்களா? யார் அதைக் கொண்டு வருவீர்கள்? அல்லது, இருவரும் ஒரே வேளையில் கொண்டு வருவீர்களா? வெளிநாட்டில் இருந்து வரும் பூங்கொத்து ஒருபுறம் இருக்கும். பாரதத்தில் இருந்து வரும் பூங்கொத்து மறுபுறம் இருக்கும். இரண்டு பூங்கொத்துகளும் மேடையில் வருவார்கள். எப்படி இந்த விழாவை நீங்கள் கொண்டாடுகிறீர்களோ, அதேபோல், இரண்டு பூங்கொத்துகளுடனும் - ஒன்று பாரதத்தில் இருந்தும், மற்றையது வெளிநாட்டில் இருந்தும் வந்திருக்கும் - நாம் அந்த விழாவைக் கொண்டாடுவோம். இது சரிதானே? வெளிநாட்டில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? அடுத்த பருவகாலத்தில் நீங்கள் அவர்களை அழைத்து வருவீர்களா? நீங்கள் அவர்களை அழைத்து வருவீர்களா? பாரதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை அழைத்து வருவீர்களா? தமது உலகீயத் தொழிலுக்கும் ஆன்மீகப் பணிக்கும் இடையே சமநிலையைப் பேணுபவர்களை அழைத்து வாருங்கள். உங்களைப் போன்ற பிராமண வாழ்க்கை வாழ்பவர்கள் அல்ல. ஆனால், உலகீயத்தையும் ஆன்மீகத்தையும் இரண்டையும் கொண்டிருப்பவர்கள். அவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். மக்கள் உங்களிடம் திருஷ்டிக்காக வருவார்கள். அச்சா, ஜெயந்தி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் பெயர்களைப் பற்றி நினைக்கிறீர்களா? நிர்மலா, மோகினி, நீங்களும் பெயர்களைப் பற்றியே நினைக்கிறீர்கள், அப்படித்தானே? இங்கிருக்கும் பாண்டவர்களைப் பாருங்கள்! பாரதத்தில் வெகு சில பாண்டவர்களே இருக்கிறார்கள். அவர்கள் அல்லாவிற்குச் சமமானவர்கள்! பாருங்கள், சிலர் இங்கும் அமர்ந்திருக்கிறார்கள். இங்கே முன்னால் அமர்ந்திருப்பது பிரயன்தானே? (அவுஸ்திரேலியாவின் சகோதரர் பிரயனுடன் பேசுகிறார்). ஒரு பூங்கொத்தைத் தயார் செய்ய வேண்டும்தானே? மிக நல்ல ஆத்மாக்கள் இருக்கிறார்கள். நீங்கள் என்ன பெயரைப் பயன்படுத்துகிறீர்கள்? என்சிஓ (தேசிய ஒருங்கமைப்பு அலுவலகம்). அச்சா. வெளிநாட்டு என்சிஓ வைச் சேர்ந்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! என்சிஓ ஆகுவது இலகுவானதல்ல! நீங்கள் அற்புதங்களைச் செய்து காட்ட வேண்டும்! உங்களால் அதைச் செய்ய முடியும். நிலம் இப்போது தயாராக இருப்பதனால் அது பெரிய விடயமல்ல. விதையும் விதைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பராமரிப்பு என்ற நீரே தேவைப்படுகிறது. இப்போது அந்த விதைக்குப் பராமரிப்பு என்ற நீர் தேவைப்படுகிறது. அச்சா.

ஆசிரியர்களும் பலர் வந்துள்ளார்கள். ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்! நீங்கள் எல்லோரும் சேவை செய்துள்ளீர்கள்தானே? எனவே, சேவைக்குப் பாராட்டுக்கள்! அச்சா. குஜராத்தின் நிலைமை என்ன? (குஜராத்தில் பெரியதொரு பூகம்பம் ஏற்பட்டிருந்தது.) குஜராத்தில் குழப்பம் ஆரம்பமாகியுள்ளது. குஜராத்தில் அதிகளவு குழப்பமும் வெளிநாட்டில் சிறிதளவு குழப்பமும் இடம்பெற்றுள்ளன. நீங்கள் பயப்படவில்லைத்தானே? பூமி அதிர்கிறது. ஆனால் உங்களின் இதயங்கள் அதிரவில்லைத்தானே? பூமி சிறிது அதிர்ந்தது. சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டது. அங்கிருந்து வந்திருப்பவர்கள், எழுந்து நில்லுங்கள்! அகமதாபாத்தில் இருந்து வந்திருப்பவர்கள், எழுந்து நில்லுங்கள்! அச்சா. உங்களின் இதயங்கள் அதிர்ந்ததா? அல்லது பூமி அதிர்ந்ததா? என்ன நடந்தது? அது உங்களின் இதயங்களையும் சிறிது அசைத்ததா? அது அசைக்கவில்லை! நீங்கள் தைரியசாலிகள்! தைரியத்தைப் பேணுவதன் மூலமும் தந்தையின் பாதுகாப்புக் குடையை உங்களின் மீது வைத்திருப்பதன் மூலமும் குழந்தைகளான நீங்கள் உங்களின் பதிவேட்டை நன்றாக வைத்திருந்ததை பாப்தாதா கண்டார். உங்களில் எவரும் தோல்வி அடையவில்லை. நீங்கள் எல்லோரும் சித்தி அடைந்தீர்கள். சிலர் குறைந்தளவு மதிப்பெண்களுடனும் சிலர் அதிகளவு மதிப்பெண்களுடனும் சித்தி அடைந்துள்ளீர்கள். எங்கும் வரிசைக்கிரமமே. ஆயினும் நீங்கள் சித்தி அடைந்துள்ளீர்கள்! பாராட்டுக்கள்! மிகவும் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து யார் வந்துள்ளார்கள்? (ஒருவர் புஜ் இலிருந்தும் இன்னொருவர் அண்மித்த ஒரு நகரத்தில் இருந்தும் வந்திருந்தார்கள்) அச்சா, நீங்கள் ஆயிரம் கரங்களைக் (புஜம் - கரங்கள்) கொண்ட ஒரேயொருவருடன் புஜ் இல் இருந்தீர்கள். அச்சா, நீங்கள் அந்தப் பரீட்சையில் சித்தி அடைந்தீர்கள்! நீங்கள் மிக நன்றாகச் செய்தீர்கள்! எதிர்காலத்திலும், தளம்பல் அடையாதீர்கள்! இது தொடர்ந்து நிகழும். பயப்படாதீர்கள். (இது ஒவ்வொரு நாளும் நடக்கிறது) அது நடக்கட்டும்! மாற்றம் நிகழ வேண்டும். இயற்கையும் அதன் பணியைச் செய்யும். மனித ஆத்மாக்கள் இயற்கையைத் தமோகுணி ஆக்கியிருப்பதனால், அவளும் நாடகத்தின் ஒவ்வொரு விளையாட்டிலும் தனது சொந்த வேலையைக் காட்டுவாள். அதுவும் ஒரு விளையாட்டே. விளையாட்டைப் பார்க்கும்போது, உங்களின் ஸ்திதியைத் தளம்பல் அடைய அனுமதிக்காதீர்கள். புறச் சூழ்நிலைகள் மாஸ்ரர் சர்வசக்திவான் ஆத்மாக்களின் ஆதி நிலையின் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள். அதற்குப் பதிலாக, ஆத்மாக்கள் தமது மனங்களின் துயரத்தில் இருந்து விடுபடுவதற்குக் கருவிகள் ஆகுங்கள். ஏனென்றால், தியானத்தின் மூலம் மட்டுமே உங்களால் மனங்களின் கடுந்துயரத்தை முடிக்க முடியும். மருத்துவர்கள் தமது பணியைச் செய்வார்கள். விஞ்ஞானிகள் தமது பணியைச் செய்வார்கள். அரசாங்கமும் தனது பணியைச் செய்யும். அவர்களின் மனங்களில் உள்ள கடுந்துயரத்தையும் பதட்டத்தையும் முடிப்பதே உங்களின் கடமை ஆகும். பதட்டத்தில் இருந்து விடுபட்ட வாழ்க்கைத் தானத்தைக் கொடுங்கள்! ஒத்துழைப்பைக் கொடுங்கள்! தற்சமயம், உள்நாடும் வெளிநாடுகளும் எல்லோருமே ஒத்துழைக்கிறார்கள். அத்துடன் தமது ஒத்துழைப்பை வழங்குகிறார்கள்தானே? அவர்கள் மிக நல்ல பணியைச் செய்கிறார்கள். அது என்ன நாடாக இருந்தாலும் அல்லது யாராக இருந்தாலும், அவர்கள் எல்லோருக்கும் பாரத தேசத்தின் மீது அன்பு உள்ளது என்பதையே இது காட்டுகிறது. அவர்கள் எல்லோரும் தாம் செய்ய வேண்டியதைச் செய்கிறார்கள். நீங்கள் உங்களின் பணியைத் தொடர்கிறீர்கள். தீப்பிடிக்கும்போது, தீயணைப்புப்படையினர் பயப்பட மாட்டார்கள். ஆனால் அவர்கள் அந்தத் தீயை அணைப்பார்கள். நீங்கள் எல்லோரும் மக்களின் மனங்களில் உள்ள கடுந்துயரம் என்ற தீயை அணைப்பவர்கள் ஆவீர்கள். அச்சா.

குஜராத் உறுதியானவர்கள்தானே? நீங்கள் ஆயிரம் கரங்களைக் கொண்ட ஒரேயொருவரின் பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பவர்கள். இதைக் குஜராத்தில் கண்டதனால், இப்போது எங்கே அது நடந்தாலும், நீங்கள் இப்போது அனுபவசாலிகள் ஆகியுள்ளீர்கள். பாருங்கள், எவராலும் இயற்கையுடன் ஒத்துப் போகாமல் இருக்க முடியாது. குஜராத்திற்கு வா! அபுவிற்கு வராதே! பம்பாய்க்கு வராதே! என உங்களால் சொல்ல முடியாது. இல்லை! அது சுதந்திரமாக இருக்கிறது. எவ்வாறாயினும், நீங்கள் எல்லோரும் உங்களின் சொந்த ஸ்திதியை ஆட்ட, அசைக்க முடியாததாக வைத்திருக்க வேண்டும். அத்துடன் உங்களின் மனங்களினதும் புத்திகளினதும் இணைப்புகளைத் தெளிவாக வைத்திருக்க வேண்டும். உங்களின் இணைப்புகள் தெளிவாக இருக்கும்போது, நீங்கள் தொடுகைகளைப் பெறுவீர்கள். பாப்தாதா உங்களுக்கு முன்னரும், அவர்களுடையது வயர் இல்லாதது (வயர்லெஸ்), உங்களுடையது விகாரமற்ற (வைஸ்லெஸ்) புத்தி எனக் கூறியுள்ளார். அப்போது உங்களால் மிக விரைவாகவும் தெளிவாகவும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் என்ன நடக்கப் போகிறது என்பதையும் தீர்மானிக்க முடியும். ‘நாம் வெளியே போவோம்! நாம் உள்ளே இருப்போம்! கதவுக்கு அருகில் இருப்போம்! கூரையில் அமர்ந்திருப்போம்!’ என்றெல்லாம் நீங்கள் நினைக்க வேண்டிய அவசியமில்லை. இல்லை! எங்கே பாதுகாப்பு உள்ளதோ, அங்கே மட்டுமே உங்களின் பாதங்கள் செல்லும். நீங்கள் மிகவும் பயந்தால் - உண்மையில், நீங்கள் பயப்படக்கூடாது - ஆனால், நீங்கள் மிகவும் பயப்பட்டால், அதிகளவு பயத்தைக் கொண்டிருந்தால், அப்போது அபயம் அளிக்கும் இடமான, வீடான மதுவனம் உங்களுக்கு உள்ளது. பயப்படாதீர்கள்! இது எதுவுமேயில்லை. இப்போது, எல்லாமே நடக்கவிருக்கிறது! பயப்படாதீர்கள்! இது ஒரு விளையாட்டே! மாற்றம் இடம்பெற வேண்டியுள்ளது. விநாசம் அல்ல, ஆனால் மாற்றம். விருப்பமின்மைக்குரிய மனோபாவம் எல்லோரிலும் உருவாக்கப்பட வேண்டும். கருணை நிறைந்தவராகி, சகல சக்திகளையும் பயன்படுத்துங்கள். கருணை கொண்டு, சக்திவாய்ந்த சகாஷை வழங்குங்கள். உங்களுக்குப் புரிகிறதா?

உங்களால் ஒரு விநாடியில் உங்களின் மனதையும் புத்தியையும் ஸ்திரமாக்க முடிகிறதா? நில்! என்று சொன்னதும் அவை நிற்க வேண்டும். இப்போது, ஒரு விநாடியில், உங்களின் மனமும் புத்தியும் முற்றிலும் ஒருமுகப்பட்டு, ஒரு புள்ளியாக வேண்டும். ஒரு புள்ளியில் அமிழ்ந்திருங்கள். அச்சா. (பாப்தாதா அப்பியாசத்தைச் செய்வித்தார்)

எங்கும் உள்ள அதிமேன்மையான பிராமணர்களுக்கும், தமது சத்தியத்தைப் பேண வேண்டும் என்ற திடசங்கற்பத்தை சதா கொண்டிருக்கும் எங்கும் உள்ள ஸ்திரமான ஆத்மாக்களுக்கும் சுய சேவைக்கும் மக்களுக்கு நன்மை செய்யும் சேவைக்கும் முழுமையான தைரியத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருக்கும் எங்கும் உள்ள மகத்தான, சேவையாளர் ஆத்மாக்களுக்கும் இன்றைய சிவஜயந்திக்கு, வைரம் போன்று பெறுமதியான ஜயந்திக்கு, அன்பான மற்றும் தனித்துவமான ஜயந்திக்கு வாழ்த்துக்கள். இத்துடன் கூடவே ஆசீர்வாதங்களும் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
உங்களின் இதயமானது தந்தையின் அன்பால் நிறைந்திருப்பதன் மூலம் சகல கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டிருக்கும் உண்மையான அன்பான ஆத்மா ஆகுவீர்களாக.

குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் தந்தை சமமான அன்பையே வழங்குகிறார். ஆனால், குழந்தைகளான நீங்களோ உங்களின் சொந்தக் கொள்ளளவிற்கேற்பவே அந்த அன்பை எடுத்துக் கொள்கிறீர்கள். நாளின் ஆரம்பத்தில் அமிர்த வேளையில் தந்தையின் அன்பை எடுத்துக் கொள்பவர்கள், வேறு எவரின் அன்பினாலும் கவரப்படுவதில்லை. ஏனென்றால், அவர்களின் இதயங்களில் இறையன்பு உள்ளது. அவர்களின் இதயங்களை அன்பினால் முற்றாக நிரப்பாவிட்டால், அவர்களின் இதயங்களில் சிறிது இடைவெளி இருப்பதனால், மாயை வெவ்வேறு அன்பின் ரூபங்களில் அவர்களைக் கவரும். ஆகவே, உண்மையான அன்புடையவர்கள் ஆகி, இறையன்பால் நிரம்பியிருங்கள்.

சுலோகம்:
தமது சரீரங்கள், பழைய உலகம், பழைய சரீர உறவுகள் எல்லாவற்றுக்கும் அப்பால் பறப்பவர்களே, இந்திரப்பிரஸ்தில் வசிப்பவர்கள் எனப்படுவார்கள்.

அறிவித்தல்: இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சர்வதேச யோகா தினம். பிராமணக் குழந்தைகள் எல்லோரும் குறிப்பாக மாலை 6.30 இலிருந்து 7.30 வரை, கருணைநிறைந்த தந்தையுடன் இருந்து, மாஸ்ரர் கருணைநிறைந்தவர் என்ற ஸ்திதியில் யோகா தபஸ்யாவில் இருந்து, ஆத்மாக்கள் எல்லோருக்கும் தூய்மை சக்தியை வழங்குங்கள். சூழலில் தூய அதிர்வலைகளைப் பரப்பும் சேவையைச் செய்யுங்கள்.