20.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, வேலை செய்யும்போது ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும் தந்தையையும், வீட்டையும் நினைவு செய்யுங்கள். இது உங்களது தைரியச் செயலாகும்.

பாடல்:
தந்தை மீது மரியாதையும் அவமரியாதையும் எப்பொழுது, எவ்வாறு செலுத்தப்படுகின்றது?

பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை மிகவும் நன்றாக நினைவு செய்யும் போது, நீங்கள் அவருக்கு மரியாதை செலுத்துகின்றீர்கள். உங்களுக்குத் தந்தையை நினைவு செய்வதற்கு நேரமில்லையென்று நீங்கள் கூறினால், அவரை அவமரியாதை செய்கிறீர்கள். உண்மையில் நீங்கள் தந்தையை அன்றி உங்களையே அவமரியாதை செய்கின்றீர்கள். நீங்கள் சொற்பொழிவாற்றுவதில் மாத்திரம் பிரபல்யமடையாமல், நினைவு யாத்திரையைக் கொண்டிருப்பதிலும் பிரபல்யமானவர் ஆகுங்கள். உங்கள் நினைவு அட்டவணையை வைத்திருங்கள். நினைவின் மூலமே ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். 84 பிறவிகளின் சக்கரம் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஞானத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் பல பிறவிகளாகக் கற்றுள்ளதுடன், தொடர்ந்தும் கிரகித்துள்ளீர்கள். இது முற்றிலும் இலகுவானது; இது புதிய ஒன்றல்ல. தந்தை இங்கமர்ந்திருந்து, சத்திய யுகத்திலிருந்து, கலியுகத்தின் இறுதிவரை, எத்தனை பிறவிகளும், மறு பிறவிகளும் எடுத்துள்ளீர்கள் என்பதை விளங்கப்படுத்துகிறார். இந்த ஞானம் ஓர் இலகுவான முறையில் ஏற்கெனவே உங்கள் புத்தியில் உள்ளது. இது ஒரு கல்வியாகும். நீங்கள் படைப்பின் ஆரம்பம், மத்தி மற்றும் இறுதியைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் வேண்டும். தந்தையைத் தவிர வேறு எவராலும் இதனை விளங்கப்படுத்த முடியாது. தந்தை கூறுகிறார்: யோகம் என்றும் அழைக்கப்படுகின்ற, நினைவு யாத்திரையானது, இந்த ஞானத்தை விட மேலும் மேன்மையானதாகும். “யோகம்’ என்ற வார்த்தை மிகவும் பிரபல்யமானதாகும். ஆனால், இந்த யோகமே, நினைவு யாத்திரையாகும். யாத்திரை செல்லும் மக்கள், தாங்கள் இன்ன இன்ன யாத்திரைத் தலத்திற்கு யாத்திரை செல்வதாகக் கூறுகின்றார்கள். அவர்கள் ஸ்ரீநாத் அல்லது அமர்நாத்திற்குச் செல்கிறார்கள், அவர்கள் அவ் இடங்களை நினைவு செய்கின்றார்கள். அதேபோன்று, ஆன்மீகத் தந்தை, மிகவும் நீண்ட நினைவு யாத்திரையை உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! மக்கள் அந்த யாத்திரைகளிலிருந்து வீடு திரும்புகின்றார்கள். இது நீங்கள் முக்திதாமத்திற்கு சென்று அங்கு வசிப்பதற்காக செய்கின்ற ஒரு யாத்திரையாகும். நீங்கள் பாகங்களை நடிக்க வேண்டி இருந்தாலும், அவை இப்பழைய உலகத்தில் இருப்பதில்லை. உங்களுக்கு இப்பழைய உலகத்தில், விருப்பமின்மை உள்ளது. இது இராவணனின் தீய இராச்சியமாகும். ஆகவே, நினைவு யாத்திரையே பிரதான விடயம் ஆகும். எவ்வாறு நினைவு செய்வது என்பதைக்கூட சில குழந்தைகள் புரிந்து கொள்வதில்லை. ஒருவர் நினைவு செய்கிறாரா இல்லையா என்பது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். இது புலப்படக்கூடிய ஒன்றல்ல. ஒருவர் எந்தளவுக்கு நினைவு யாத்திரை ஸ்திதியில் நிலைத்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியாது. அவர் மாத்திரமே அதை அறிவார். பலருக்கு இவ் வழிமுறை காட்டப்பட்டுள்ளது. நன்மையளிக்கின்ற தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, சிவபாபாவை நினைவு செய்யுங்கள். எவ்வாறிருந்தாலும், தொடர்ந்தும் உங்கள் சேவையைச் செய்யுங்கள். உதாரணமாக பாதுகாப்புக் கடமையில் சில குழந்தைகள் ஈடுபட்டிருக்கின்றார்கள்: அவர்கள் நடந்து திரியும் போது, அவர்களுக்கு நினைவில் நிலைத்திருப்பது மிகவும் இலகுவாகும். நீங்கள் தந்தையைத் தவிர வேறு எதனையும் நினைவு செய்யக்கூடாது. தந்தை உதாரணங்களைப் பயன்படுத்தி உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இந்த நினைவு யாத்திரையில் நீங்கள் வருவதும் போவதுமாக இருக்க வேண்டும். கிறிஸ்தவ போதகர்கள் மௌனமாக நடப்பது போன்று, குழந்தைகளாகிய நீங்களும் பெருமளவு அன்புடன் தந்தையையும், வீட்டையும் நினைவுசெய்ய வேண்டும். இந்த இலக்கு மிகவும் உயர்ந்ததாகும். பக்தர்களும் தொடர்ந்தும் இந்த முயற்சியைச் செய்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்களுக்குத் தாங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் எனத் தெரியாது. கலியுகம் முடிவடையும்போது, தாங்கள் திரும்புவோம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களுக்குக் கற்பிப்பதற்கு எவரும் இல்லை, ஆனால், குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. நீங்கள் பாதுகாப்புக் கடமையில் இருக்கும்போது, எவ்வளவுக்கு அதிகமாக ஏகாந்தத்தில் இருந்து, தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவுக்கு நல்லது. நினைவு செய்வதனால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பல பிறவிகளின் பாவச் சுமை உங்கள் தலையில் உள்ளது. முதலில் சதோபிரதான் ஆகுபவர்களே முதலில் இராம இராச்சியத்திற்குச் செல்கின்றார்கள். ஆகவே அவர்களே அதிகளவு நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும். இது ஒவ்வொரு கல்பத்திற்குமான கேள்வி என்பதால், அவர்களுக்கு நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. இங்கு சண்டை அல்லது சச்சரவு என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் வரும் போதும், பின்னர் திரும்பும் போதும், அமர்ந்திருக்கும் போதும் காவல் செய்தல், தந்தையை நினைவு செய்தல் எனும் இரு பணிகளையும் உங்களால் ஒரே நேரத்தில் செய்ய முடியும். செயல்களைச் செய்யும் போது, தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். பாதுகாப்புக் கடமையில் உள்ளவர்களே அதிகளவு நன்மையை அனுபவம் செய்கின்றார்கள். அது பகலாகவோ அல்லது இரவாகவோ இருந்தாலும், பாதுகாப்புக் கடமையில் உள்ளவர்கள் நினைவில் நிலைத்திருக்கும் பழக்கத்தைக் கிரகித்தால், அதிகளவு நன்மையைப் பெற முடியும். தந்தை உங்களுக்குச் சிறந்த சேவையைச் செய்வதற்குக் கொடுத்துள்ளார்-பாதுகாப்புக் கடமையும், நினைவு யாத்திரையும். தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதற்கான ஒரு வாய்ப்பை நீங்கள் பெறுகிறீர்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதற்கு உங்களுக்குப் பல்வேறு வழிமுறைகள் காட்டப்பட்டுள்ளன. நீங்கள் இங்கு இருக்கும்போது நினைவில் நிலைத்திருக்கும் அளவிற்கு உங்களால், வெளியே உங்கள் வியாபாரம் போன்றவற்றில் இருக்கும்போது நினைவு செய்ய முடியாதிருக்கும். ஆகவே நீங்கள் மதுவனத்திற்குப் புத்துணர்ச்சி பெறுவதற்காக வருகிறீர்கள். ஆகவே, மலைகளில் ஏகாந்தத்திற்குச் சென்று, பாறை ஒன்றில் அமர்ந்திருந்து, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். ஒருவரோ அல்லது வேறு இரண்டு அல்லது மூன்று பேர் சென்றாலும் பரவாயில்லை. இங்கு இதனைச் செய்வதற்கு மிக நல்ல வாய்ப்பு உள்ளது. தந்தையின் நினைவே பிரதானமான விடயமாகும். பாரதத்தின் புராதன யோகம் மிகவும் பிரபல்யமானதாகும். இந்த நினைவு யாத்திரை மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள்; நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். ஆகவே நீங்கள் இதில் மிகச்சிறந்த முயற்சி செய்ய வேண்டும். வேலைகள் செய்யும்போது தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதைச் செய்து காட்டுவது, தைரியமான செயலாகும். நீங்கள் இல்லறப் பாதைக்கு உரியவர்கள் என்பதால், நீங்கள் நிச்சயமாகச் செயல்களைச் செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்தவாறு, வியாபாரம் போன்றவற்றைச் செய்யும்போதும் தந்தையின் நினைவு இருக்கட்டும். இதில் உங்களுக்கு அதிகளவு வருமானம் உள்ளது. சில குழந்தைகளின் புத்தியில் இது பதிவதில்லை என்றாலும், ஓர் அட்டவணையை வைத்திருக்கும்படி தந்தை தொடர்ந்து உங்களுக்குக் கூறுகிறார். சிலர் சிறிது காலத்திற்குத் தங்கள் அட்டவணையை எழுதுகின்றார்கள். தந்தை உங்களுக்குப் பல வழிமுறைகளைக் காட்டுகிறார். பாபாவிடம் வருவதற்குக் குழந்தைகள் விரும்புகிறார்கள். இங்கு நீங்கள் அதிகளவு வருமானத்தைச் சம்பாதிக்க முடியும். இங்குள்ள ஏகாந்தம் மிகவும் சிறந்ததாகும். தந்தை இங்கு அமர்ந்திருந்து, நேரடியாக உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும், ஏனெனில் பல பிறவிகளின் பாவங்கள் உங்கள் தலையில் உள்ளன. விகாரம் காரணமாக பல சண்டை, சச்சரவுகள் இடம்பெறுகின்றன் பல தடைகளும் உள்ளன. சிலர் கூறுகிறார்கள்: பாபா, நாங்கள் தூய்மையாக இருப்பதற்கு அவர்கள் எங்களை அனுமதிப்பதில்லை. தந்தை கூறுகிறார்: குழந்தாய், நினைவு யாத்திரையில் நிலைத்திருந்து, உங்கள் தலைமீது இருக்கும் பல பிறவிகளின் பாவச்சுமையை அகற்றிடுங்கள். வீட்டில் இருக்கும்போதும், தொடர்ந்தும் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். நீங்கள் எங்கு அமர்ந்திருந்தாலும் நினைவுசெய்ய முடியும். எங்கு நீங்கள் வாழ்ந்தாலும் இதனை நீங்கள் பயிற்சி செய்ய முடியும். யார் வந்தாலும், அவர்களுக்கு இந்தச் செய்தியைக் கொடுங்கள்: தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். இது யோகசக்தி என்று அழைக்கப்படுகிறது. சக்தி என்றால் பலம், வலிமை. தந்தை, சர்வ சக்திவான் என்று அழைக்கப்படுகிறார். ஆகவே, எவ்வாறு நீங்கள் அச் சக்தியைத் தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள்? தந்தையே கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! கீழிறங்கி வரும்போது, நீங்கள் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். ஆகவே அந்தச் சக்தி இப்போது முற்றாக முடிவடைந்துவிட்டது. ஒரு சதப் பெறுமதி கூட எஞ்சவில்லை. உங்கள் மத்தியிலும் சிலர் இதனை மிகவும் நன்றாக விளங்கப்படுத்தி, தந்தையை நினைவு செய்கிறீர்கள். ஆகவே, உங்கள் அட்டவணை எவ்வாறு உள்ளது என்று நீங்களே உங்களைக் கேட்டுப் பார்க்க வேண்டும். நினைவு யாத்திரையே பிரதான விடயம் எனத் தந்தை குழந்தைகள் அனைவருக்கும் கூறுகிறார். நினைவின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்களை எச்சரிப்பதற்கு எவரும் இல்லாவிட்டாலும், உங்களால் தந்தையை நினைவு செய்ய முடியும். நீங்கள் வெளிநாட்டில் தனியே வாழ்ந்து கொண்டிருந்தாலும்கூட, உங்களால் நினைவில் நிலைத்திருக்க முடியும். உதாரணத்திற்கு, நீங்கள் திருமணமான ஒரு தம்பதியாக இருந்து, உங்கள் மனைவி வேறோர் இடத்தில் வாழ்வாராயின், அவருக்கு எழுதிக் கூறுங்கள்: தந்தையை நினைவு செய்தால் உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும் என்னும் ஒரு விடயத்தை நினைவு செய்யுங்கள். விநாசம் முன்னால் உள்ளது. தந்தை தொடர்ந்தும் பல நல்ல வழிமுறைகளை விளங்கப்படுத்துகிறார். ஆனால், நீங்கள் அதைச் செய்கிறீர்களோ இல்லையோ, அது உங்களைப் பொறுத்ததாகும். தந்தை கொடுக்கின்ற ஆலோசனை மிகவும் சிறந்தது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். செய்தியை அனைவருக்கும், அதாவது எங்கள் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் நாங்கள் சந்திக்கும் அனைவருக்கும் கொடுப்பதே, எங்கள் கடமையாகும். அவர்கள் உங்கள் நண்பர்களாகவும் இருக்கலாம் அல்லது வேறு எவராகவும் இருக்கலாம். சேவை செய்வதில் நீங்கள் ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்களிடம் படங்களும், பட்ஜூம் உள்ளன. அவை மிகச் சிறந்தனவாகும். இந்த பட்ஜினால் எவரையும் இலக்ஷ்மியாகவோ அல்லது நாராயணனாகவோ ஆக்க முடியும். நீங்கள் திரிமூர்த்தியின் படத்தையும் மிகவும் நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு மேலே சிவபாபா உள்ளார். அம்மக்கள் திரிமூர்த்தியின் உருவம் ஒன்றைச் செய்கிறார்கள். அவர்கள், அதற்கு மேல் சிவபாபாவின் உருவத்தைக் காட்டுவதில்லை. அவர்கள் சிவபாபாவை அறியாததால், பாரதத்தின் படகு மூழ்கியுள்ளது. இப்போது, சிவபாபாவின் மூலம் மாத்திரமே பாரதம் என்ற படகு அக்கரைக்குச் செல்ல முடியும். அவர்கள் கூவி அழைக்கிறார்கள்: “ஓ, தூய்மையாக்குபவரே, வந்து, தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குங்கள்”. இருந்தபோதும், அவர்கள் அவரைச் சர்வவியாபி என்று கூறுகிறார்கள்! இந்தத் தவறு சதங்கள் பெறுமதியானது. தந்தை இங்கமர்ந்திருந்து, சொற்பொழிவாற்றும் முறையைப் பற்றி உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தை தொடர்ந்தும் எவ்வாறு சேவை செய்வது என்பது பற்றியும், அருங்காட்சியகங்கள் திறப்பது பற்றியும் வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். அப்போது பலர் வருவார்கள். ஒரு சர்க்கஸ் பல பெரிய நகரங்களுக்குச் செல்கிறது. அவர்களிடம் அதிகளவு உபகரணங்கள் உள்ளன. அவர்களைப் பார்ப்பதற்கு மக்கள் பல கிராமங்களிலிருந்து செல்கின்றார்கள். இதனாலேயே தந்தை கூறுகிறார்: அம்மக்கள் அதனைப் பார்க்கும்போது, சந்தோஷமடைந்து, மற்றவர்களுக்கும் அதனையிட்டுக் கூறும் வகையிலான, அத்தகைய அழகானதோர் அருங்காட்சியகத்தைக் கட்டுங்கள். என்ன சேவைகள் இடம்பெறுகின்றனவோ, அவை முன்னைய கல்பத்தில் இடம்பெற்றதைப் போன்றே இடம்பெறுகின்றன என்றும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சதோபிரதான் ஆகுவது பற்றி நீங்கள் அதிகளவு அக்கறை செலுத்த வேண்டும். இதிலேயே சில குழந்தைகள் கவனயீனமாக இருக்கிறார்கள். மாயையும் இந்த நினைவு யாத்திரையில் பல தடைகளை உருவாக்குகிறாள். உங்கள் இதயத்தைக் கேளுங்கள்: என்னிடம் அந்தளவு ஆர்வம் உள்ளதா? நான் முயற்சி செய்கின்றேனா? ஞானம் ஒரு பொதுவான விடயம். தந்தையைத் தவிர, வேறு எவராலும் 84 பிறவிகளின் சக்கரத்தை விளங்கப்படுத்த முடியாது. எவ்வாறாயினும் நினைவு யாத்திரையே பிரதானமானதாகும். இறுதியில் ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவரும் நினைவு செய்யப்படக்கூடாது. தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு முழு வழிகாட்டல்களையும் கொடுக்கிறார். பாபாவை நினைவு செய்வதே பிரதான விடயமாகும். நீங்கள் எவருக்கும் விளங்கப்படுத்த முடியும். அவர்கள் எவராக இருந்தாலும், நீங்கள் பட்ஜை அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். வேறு எவரிடமும் அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதக்கம் இல்லை. இராணுவத்தில் இருப்பவர்கள், ஏதாவது நல்லது செய்யும் போது, ஒரு பதக்கத்தைப் பெறுகிறார்கள். ராய் சஹாப் என்னும் பதக்கத்தைப் பார்க்கும் எவரும், அவர் வைஸ்ரோயிடமிருந்து (அரச பிரதிநிதி) ஒரு பட்டத்தைப் பெற்றுள்ளார் என்பதை காண்பார்கள். முன்னர் வைஸ்ரோய்கள் இருந்தார்கள். ஆனால், இப்போது அவர்களிடம் எவ்வித அதிகாரமும் இல்லை. இப்போது பல சச்சரவுகள் உள்ளன. மனிதர்கள் அதிகளவுக்கு அதிகரித்துள்ளதால், நகரங்களில் அவர்களுக்கு நிலம்; தேவைப்படுகின்றது. தந்தை இப்போது சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். ஆகவே பலர் அழிக்கப்பட்டு, மிகச்சிலரே எஞ்சியிருப்பார்கள். அங்கு அதிகளவு நிலம் இருக்கும், அங்கு அனைத்தும் புதியனவாக இருக்கும். அப் புதிய உலகிற்குச் செல்வதற்கு நீங்கள் மிகச்சிறந்த முயற்சியைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு மனிதரும் ஒரு மிகவும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறார். ஒருவர் முழுமையாக முயற்சி செய்யாது விட்டால், அவர் சித்தியெய்த மாட்டார் என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தான் சித்தியெய்த மாட்டார் என்பதை அவரே புரிந்துகொண்டு, கற்பதை நிறுத்திவிட்டு, தொழில் தேடுவார். இந்நாட்களில் பல கடுமையான தொழிற்சட்டங்கள் அவர்களுக்கு உள்ளன. மனிதர்கள் மிகவும் சந்தோஷமற்று இருக்கிறார்கள். பாபா இப்போது, 21 பிறவிகளுக்கு எத் துன்பத்தின் சுவடும் இல்லாத அத்தகையதொரு பாதையை உங்களுக்குக் காட்டுகிறார். தந்தை கூறுகிறார்: உங்களால் எந்தளவு நேரத்திற்கு நினைவு யாத்திரையில் இருக்க முடியுமோ, அந்தளவுக்கு நினைவில் நிலைத்திருங்கள். இரவு நேரம் மிகவும் சிறந்ததாகும். எவ்வாறாயினும், படுத்திருக்கும்போதும், பாபாவை நினைவு செய்யுங்கள். எவ்வாறாயினும் சிலர் உறங்கி விடுகிறார்கள். முதியவர் ஒருவரால் நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாது. ஆகவே நிச்சயமாக அவர் உறங்கி விடுவார். படுத்திருக்கும்போது அவர் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்வார். இதில் அதிகளவு வருமானம் உள்ளதால், அவர் அதிகளவு உள்ளார்ந்த சந்தோஷத்தை அனுபவம் செய்வார். இன்னும் நேரம் எஞ்சியுள்ளது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால் எப்போது மரணம் சம்பவிக்கும் என்று தெரியாது. ஆகவே தந்தை விளங்கப்படுத்துகிறார்: நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும். வெளியே, நகரங்களில் நினைவு யாத்திரை செய்வது சிரமமாகும். நீங்கள் இங்கு வரும்போது, உங்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது. இங்கு எதனையிட்டும் கவலைப்பட வேண்டியதில்லை. இதனாலேயே நீங்கள் இங்கு தொடர்ந்தும் உங்கள் அட்டவணையை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் நடத்தையும் தொடர்ந்தும் சீர்திருத்தப்படும். எவ்வாறாயினும் மாயை மிகவும் சக்திவாய்ந்தவள், வெளியில் உள்ளவர்கள் கொடுக்கின்ற அளவிற்கு இந்த வீட்டில் உள்ளவர்கள் இதற்கு மதிப்பளிப்பதில்லை. எவ்வாறாயினும், தற்சமயம் கடவுளின் அன்பில் தங்களை இழந்துள்ள சகோதரர்களின் பெறுபேறுகள் சிறந்தனவாக உள்ளன. சில புத்திரிகள் எழுதுகிறார்கள்: திருமணம் செய்துகொள்ளும்படி அவர்கள் எங்களை அதிகளவு துன்புறுத்துகிறார்கள். நாங்கள் என்ன செய்யலாம்? உறுதியும், விவேகமும் நிறைந்த புத்திரிகள் ஒருபோதும் இவ்வாறு எழுத மாட்டார்கள். எவராவது இவ்வாறு எழுதினால், அவர் ஒரு வெள்ளாடு அல்லது செம்மறி போன்றவர் என்று பாபா புரிந்துகொள்கின்றார். உங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றுவது உங்கள் சொந்தக் கரங்களிலேயே தங்கியுள்ளது. இந்த உலகில் பல வகையான துன்பங்கள் உள்ளன. பாபா இப்போது மிகவும் இலகுவான முறையில் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது பிரபுவும் அதிபதியுமானவரின் குழந்தைகள் ஆகியுள்ளதால், நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள் ஆவீர்கள். தந்தை உங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகிறார். இருந்தபோதும் நீங்கள் தந்தையை அவதூறு செய்கிறீர்கள்! அதுவும் போலியான அவதூறாகும். நீங்கள் மிகவும் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். கேட்கவே வேண்டாம்! ஒருவரால் இன்னும் எந்தளவுக்கு சகித்துக்கொள்ள முடியும்? மக்கள் ஒருவரையொருவர் பயமுறுத்திக் கூறுகிறார்கள்: நீங்கள் இன்னும் விரக்தியை விளைவித்தால், நான் உங்களை முடித்துவிடுவேன். தந்தை இங்கமர்ந்திருந்து, இதனை விளங்கப்படுத்துகிறார். சமயநூல்களில் கதைகள் மாத்திரமே எழுதப்பட்டுள்ளன. பாபா உங்களுக்கு மிகவும் இலகுவான வழிமுறைகளைக் காட்டுகிறார். செயல்களைச் செய்யும்போது, நினைவு செய்யுங்கள். இதில் பெருமளவு நன்மை உள்ளது. அதிகாலையில் இங்கு வந்து, நினைவில் அமர்ந்திருங்கள்; நீங்கள் பெருமளவு மகிழ்ச்சியை அனுபவம் செய்வீர்கள். எவ்வாறாயினும் இதனைச் செய்வதில் உங்களுக்கு அதிகளவு ஆர்வம் இருப்பதில்லை. தனது மாணவர்களின் நடத்தையிலிருந்து யார் சித்தியெய்த மாட்டார் என்பதை ஓர் ஆசிரியரால் புரிந்துகொள்ள முடியும். அதேபோன்று, ஒவ்வொரு கல்பத்திலும் யார் சித்தியெய்துவதில்லை என்பதையும், அதுவும் கல்பம் கல்பமாகச் சித்தியெய்த மாட்டார்கள் என்பதையும் தந்தை புரிந்து கொள்கிறார். சொற்பொழிவுகள் ஆற்றுவதிலும், கண்காட்சிகளில் விளங்கப்படுத்துவதிலும் அவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தாலும், அவர்கள் நினைவு செய்வதில்லை; அதில் அவர்கள் சித்தி எய்துவதில்லை. அது அதிகளவு அவமரியாதையைக் காட்டுகிறது. உண்மையில் அவர்கள் தங்களைத் தாங்களே அவமரியாதை செய்கின்றார்கள். சிவபாபாவை அவமரியாதை செய்ய முடியாது. நினைவு செய்வதற்கு நேரமில்லை என்று, உங்களில் எவராலும் கூறமுடியாது; பாபா உங்களை நம்பமாட்டார். நீராடும்போதும் நீங்கள் நினைவுசெய்ய முடியும். உண்ணும்போதும் தந்தையை நினைவு செய்யுங்கள். இதில் நீங்கள் பெருமளவு வருமானத்தைச் சம்பாதிக்க முடியும். சில குழந்தைகள் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் மாத்திரம் மிகவும் பிரபல்யம் பெற்றவர்கள்; ஆனால் அவர்கள் யோகம் செய்வதில்லை. அந்த அகங்காரமும் அவர்களை விழச் செய்கிறது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சர்வசக்திவானான தந்தையிடமிருந்து சக்தியைப் பெறுவதற்கு, உங்களது நினைவு அட்டவணையை அதிகரியுங்கள். நினைவு செய்வதற்குப் பல்வேறு வழிமுறைகளை உருவாக்குங்கள். ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து, உங்களுக்கான மேலதிக வருமானத்தைச் சேகரியுங்கள்.

2. சதோபிரதான் ஆகுவது பற்றி அக்கறை செலுத்துங்கள். கவனயீனமாக இருந்து தவறுகள் செய்யாதீர்கள். அகங்காரம் கொள்ளாதீர்கள். சேவை செய்வதில் ஆர்வம் கொள்ளுங்கள். அத்துடன், நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எல்லாவற்றையும் தந்தையிடம் ஒப்படைப்பதன் மூலம் இலேசாகவும் ஒளியாகவும் (டபிள்லைட்) ஆகி, பற்றற்றவராகவும் அன்பானவராகவும் இருப்பீர்களாக.

தந்தைக்குச் சொந்தமாகுதல் என்றால், உங்களின் சுமைகள் அனைத்தையும் தந்தையிடம் ஒப்படைத்தல் என்று அர்த்தம். இலேசாகவும் ஒளியாகவும் இருத்தல் என்றால், எல்லாவற்றையும் தந்தையிடம் ஒப்படைத்தல் என்று அர்த்தம். இந்தச் சரீரமும் என்னுடையதல்ல. இந்தச் சரீரமே உங்களுக்குச் சொந்தமாக இல்லாதபோது, வேறு என்ன எஞ்சியுள்ளது? நீங்கள் எல்லோரும் ஒரு சத்தியத்தைச் செய்துள்ளீர்கள்: இந்தச் சரீரம் உங்களுடையது, இந்த மனம் உங்களுடையது, செல்வம் அனைத்தும் உங்களுடையது. எல்லாமே தந்தைக்குச் சொந்தமாக இருக்கும்போது, எப்படி ஏதாவது சுமைகள் இருக்க முடியும்? ஆகவே, தாமரையின் உதாரணத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, சதா அன்பானவராகவும் பற்றற்றவராகவும் இருங்கள். நீங்கள் டபிள் லைற் ஆகுவீர்கள்.

சுலோகம்:
உண்மையான பாண்டவர்கள் என்றால், ஆன்மீகத்தால் அதிகாரத்தோரணையை முடித்து, சரீரத்தைப் பற்றிய தமது விழிப்புணர்வு அனைத்தையும் உருகச் செய்து விடுபவர்கள்.