21.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே நீங்கள் வாழும் கலங்கரைவிளக்கங்கள். நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து, அவர்களது வீட்டிற்கான பாதையைக் காட்ட வேண்டும்.

பாடல்:
நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, பல ஆத்மாக்கள் எவ்வழிகாட்டலை, எவ்வழிமுறையில் பெற உள்ளார்கள்?

பதில்:
நீங்கள் முன்னேறிச் செல்லும் போது, பலரும் பெறும் வழிகாட்டல்கள்: பிரம்மகுமார்கள், பிரம்மகுமாரிகளிடம் செல்லுங்கள். அவர்கள் நீங்கள் வைகுந்தத்தின் இளவரசர்கள் ஆகுவதற்கான ஞானத்தை உங்களுக்கு வழங்குவார்கள். அவர்கள் பிரம்மாவின் காட்சியைப் பெறுவதன் மூலம் இச்சமிக்ஞையைப் பெறுவார்கள். பொதுவாக அவர்கள் பிரம்மாவினது அல்லது ஸ்ரீகிருஷ்ணருடைய காட்சியைப் பெறுகின்றார்கள். ஆரம்பகாலத்தில் காட்சிகளின் பாகம் இடம்பெற்றது போன்றே இறுதியிலும் இடம்பெறும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகின்றார். அவரால் அனைவரிடமும் வினவ முடியாது. அவர் புத்திரி நளினியிடம் வினவுகின்றார்: நீங்கள் இங்கு என்ன செய்கின்றீர்கள்? இங்கு நீங்கள் யாருடைய நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள்? தந்தையின் நினைவிலா? நீங்கள் தந்தையின் நினைவில் மாத்திரமா அல்லது அத்துடன் வேறெதனையும் நினைவு செய்கின்றீர்களா? தந்தையை நினைவுசெய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். வேறு எதனை நீங்கள் நினைவு செய்கின்றீர்கள்? இது புத்தியின் வேலையாகும். ஆத்மாக்களாகிய நாங்கள் எங்களது வீட்டிற்குச் செல்ல வேண்டும். எனவே நாங்கள் வீட்டை நினைவு செய்ய வேண்டும். அச்சா, வேறு என்ன நீங்கள் செய்ய வேண்டும்? நீங்கள் வீட்டிற்குச் சென்று வெறுமனே அங்கே அமர்ந்திருப்பீர்களா? அவர்கள் விஷ்ணுவைச் சுயதரிசனச் சக்கரத்துடன் காட்டியிருக்கின்றார்கள். தந்தை இப்பொழுது அதன் அர்த்தத்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். சுயம் அதாவது ஆத்மாவே தனது 84 பிறவிச் சக்கரத்தின் காட்சியை பெற்றார். எனவே, அச்சக்கரமும் சுற்றப்பட வேண்டும். நாங்கள் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்து, பின்னர் வீடு திரும்புகின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் எங்கள் பாகங்களை நடிப்பதற்காக நாங்கள் அங்கிருந்து சத்தியயுகத்திற்குச் செல்வோம். அதன் பின்னர் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருவோம். சக்கரம் போன்றவற்றை விஷ்ணு வைத்திருப்பதில்லை. அவர் சத்தியயுக தேவர் ஆவார். அதனை விஷ்ணு பூமி என்றோ இலக்ஷ்மி நாராயணனின் பூமி என்றோ அல்லது சுவர்க்கம் என்றோ அழைக்கலாம். சுவர்க்கத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. நீங்கள் அதனை ராதை, கிருஷ்ணரின் இராச்சியம் என்று அழைப்பீர்களாயின், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ராதை கிருஷ்ணருக்கென ஓர் இராச்சியம் கிடையாது. ஏனெனில் அவர்கள் வெவ்வேறு இராச்சியங்களைச் சேர்ந்த இளவரசர், இளவரசி ஆவார்கள். அவர்கள் தங்கள் திருமணத்திற்குப் பின்னர், இராச்சியத்தின் அதிபதிகள் ஆகுகின்றார்கள். எனவே, அவர்கள் விஷ்ணுவை ஒரு சக்கரத்துடன் காட்டுகின்றார்கள். ஆனால், உண்மையில் அது உங்களுடைய சக்கரமாகும். எனவே, நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் போது, வெறுமனே மௌனமாக இருந்தால் மாத்திரம் போதாது. உங்கள் ஆஸ்தியையும் நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். இதனாலேயே இச்சக்கரம் உள்ளது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் கலங்கரைவிளக்கங்கள். நீங்கள் நடமாடும், பேசும் கலங்கரைவிளக்கங்கள் ஆவீர்கள். நீங்கள் ஒரு கண்ணில் சாந்திதாமத்தையும், மறு கண்ணில் சந்தோஷதாமத்தையும் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இரண்டையும் நினைவுசெய்ய வேண்டும். நினைவுசெய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் வீட்டை நினைவுசெய்வதன் மூலம், வீட்டிற்குச் செல்வீர்கள். அத்துடன் சக்கரத்தையும் நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். உங்களுக்கு மாத்திரமே இந்த முழுச் சக்கரத்தினது ஞானமும் உள்ளது. நீங்கள் 84 பிறவிச்சக்கரத்தின் சுற்றி வந்திருக்கின்றீர்கள். இப்பொழுது இந்த மரணபூமியில் இது உங்கள் இறுதிப்பிறவியாகும். புதிய உலகம் அமரத்துவ பூமி எனப்படுகின்றது. ‘அமரத்துவம்’ என்றால், நீங்கள் சதா உயிர்வாழ்கின்றீர்கள் அதாவது நீங்கள் என்றுமே மரணிப்பதில்லை என்று அர்த்தமாகும். இங்கே, மக்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்கும் போதே, நோய் ஏற்பட்டு திடீரென மரணிக்கின்றார்கள். அங்கே மரண பயம் இருக்க மாட்டாது. ஏனெனில், அது அமரத்துவ உலகமாகும். நீங்கள் முதுமை அடையும் போதும், நீங்கள் கருப்பை என்ற மாளிக்கைச் செல்வீர்கள் என்பதை அறிந்திருப்பீர்கள். இப்பொழுது நீங்கள் கருப்பை என்ற சிறைக்கே செல்கின்றீர்கள். அங்கே, கருப்பை ஒரு மாளிகையைப் போன்றிருக்கும். எவருமே தண்டனையைப் பெறும் வகையில், அங்கு எப்பாவமும் செய்யப்படுவதில்லை. இங்கே, மனிதர்கள் பாவங்கள் செய்வதாலேயே தண்டையை அனுபவம் செய்கின்றார்கள். பின்னர், அவர்கள் கருப்பையில் இருந்து வெளியேறியதும், மீண்டும் பாவங்களை செய்யத் தொடங்குகின்றார்கள். இது பாவத்மாக்களின் உலகமாகும். இங்கு துன்பம் அன்றி, வேறு எதுவுமே இல்லை. அங்கே ‘துன்பம்’ என்ற வார்த்தையே இருக்க மாட்டாது. எனவே சாந்திதாமத்தை ஒரு கண்ணிலும் சந்தோஷதாமத்தை மறுகண்ணிலும் வைத்திருங்கள். நீங்கள் பிறவிபிறவியாக தபஸ்யா செய்து, மந்திரங்களை ஓதியபோதிலும், இந்த ஞானம் உங்களுக்கு இருக்கவில்லை. அது பக்தியாகும். சதோபிரதான் ஆகுவதற்கான வழிமுறை அங்கு உங்களுக்குக் காட்டப்படுவதில்லை. எவரும் இதனை அறியமாட்டார்கள். ‘உங்களுடைய சரீரம் உட்பட அனைத்தையும் துறந்து விடுங்கள்….’ என கிருஷ்ண பகவான் கூறியதாக மாத்திரமே அவர்கள் கேட்டிருக்கின்றார்கள். இது அவர்கள் வாசித்து, பிறருக்கும் எடுத்துரைக்கும் கீதையின் வாசகங்கள் ஆகும். நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும் என்று உங்களுக்குக் கூறப்படவில்லை. கடவுள் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதற்காக வந்த போது, அவர் திரும்பிச் செல்லும் முன்னர், கடவுள் இதனைக் கூறினார் என்று அவர்கள் வெறுமனே கூறி, அதையே வாசிக்கின்றார்கள். பரமாத்மாவான பரமதந்தைக்கும் பதிலாக அவர்கள் கீதையில் கிருஷ்ணரின் பெயரை இட்டுள்ளார்கள். கிருஷ்ணர் இரதத்தின் சாரதியாவார். அவருக்கு ஓர் இரதம் தேவையா? அவர் ஒரு சரீரதாரியே. ‘கிருஷ்ணர்’ என்ற பெயரை அவருக்குக் கொடுத்தது யார்? ஒரு குழந்தை பிறந்து ஆறாவது நாளில் அவர்கள் பெயர் சூட்டு விழாவைக் கொண்டாடுகின்றார்கள். தந்தை சிவன் என்று மட்டுமே அழைக்கப்படுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் பிறப்பு, மறுபிறப்பிற்குள் வருவதால், சரீரங்களிற்கான பெயர்கள் மாற்றமடைகின்றன. சிவபாபா பிறப்பு, இறப்பிற்குள் வருவதில்லை. அவர் எப்பொழுதும் சிவனாகவே உள்ளார். மக்கள் பூச்சியத்தை இடும்போது ‘சிவனே’ என்று கூறுகின்றார்கள். ஆத்மா அதி சூட்சுமமான ஒரு புள்ளியாவார். ஒருவர் ஓர் ஆத்மாவின் காட்சியைப் பெறும் போது, அவரால் அதனைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு இறைவியின் காட்சி கிடைக்கும் போது அவர்கள் சந்தோஷமடைகின்றார்கள். அச்சா. அதன் பின்னர் என்ன நடக்கின்றது? அதனால் பேறுகள் கிடைப்பதில்லை, அர்த்தமும் இல்லை. அவர்கள் தீவிரமாக பக்தி செய்து காட்சியைப் பெற்று, அதன் மூலம் சந்தோஷமடைந்தார்கள். எவ்வாறாயினும், அவர்களுக்கு முக்தியோ ஜீவன்முக்தியோ கிடைக்கும் என்றில்லை. அவை அனைத்தும் பக்தி மார்க்கமாகும். இங்கு, இதுவோ ஞான மார்க்கமாகும். இங்கே, மக்கள் பொதுவாக பிரம்மாவின் காட்சியையும் பின்னர் ஸ்ரீகிருஷ்ணரின் காட்சியையும் பெறுகின்றார்கள். ‘இந்த பிரம்மாவிடம் சென்றால் நீங்கள் ஸ்ரீகிருஷ்ணரின் உலகிற்கோ அல்லது வைகுந்தத்திற்கோ செல்வீர்கள்’ என (காட்சியினூடாக) அவர்களிடம் கூறப்படுகின்றது. அவர்களால் இலக்ஷ்மி நாராயணனது காட்சியையும் பெற முடியும். ஒரு காட்சி கிடைப்பதால், அவர்கள் சற்கதி அடைந்துள்ளார்கள் என்று அர்த்தமல்ல. ‘அங்கு செல்லுங்கள்’ என்றொரு சமிக்ஞையே கிடைக்கின்றது. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் போது, பலரும் காட்சியை பெறுவதுடன், வழிகாட்டல்களையும் பெறுவார்கள். உங்களுடைய திரிமூர்த்தி படமும், பிரம்மகுமாரிகளின் பெயரும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுகின்றன. எனவே அவர்களுக்கு பிரம்மாவின் காட்சி கிடைக்கும்: ‘அர்ஜுனர் விஷ்ணுவினதும், விநாசத்தினதும் காட்சியைக் கண்டதைப் போன்று, அவரிடம் செல்வதனால் வைகுந்தத்தின் இளவரசர் ஆகுவது எவ்வாறு என்பதற்கான ஞானம் உங்களுக்குக் கிடைக்கும்’. நீங்கள் ஒரு தாமரை மலர் போன்றவர் ஆக வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். எனினும் நீங்கள் சதா அவ்வாறாக இல்லாததால், ஆபரணங்கள் விஷ்ணுவிடம் கொடுக்கப்பட்டுள்ளன. தேவர்களுக்கு சங்கு போன்றன ஏன் தேவையாகும்? உங்கள் உதடுகள் மூலம் ஞானத்தைப் பேசுதலே, சங்கை ஊதுதல் ஆகும். தந்தை உங்களுக்குத் தாமரை மலரின் அர்த்தத்தையும் விளங்கப்படுத்துகின்றார். பிராமணர்களாகிய நீங்கள் இந்நேரத்தில் தாமரை மலர் போன்று ஆகவேண்டும் கதாயுதம் ஐந்து விகாரங்களாகிய மாயையை வெற்றி கொள்வதாகும். தந்தை உங்களுக்கு வழிமுறையைக் காட்டுகின்றார். சதா என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். தூய்மையாக்குபவரான தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் தூய்மையாக்குபவராக இருக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: உங்கள் சரீரங்களில் இருந்து உங்கள் அனைவருக்கும் விடுதலையளித்து உங்களைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்ல வருமாறு நீங்கள் என்னை கூவியழைக்கின்றீர்கள். எனவே தந்தை வந்து ஆத்மாக்கள் அனைவரையும் தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குகின்றார், ஏனெனில் தூய்மையற்ற ஆத்மாக்களினால் வீட்டிற்கு அல்லது சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் தூய்மையாக வேண்டுமாயின் என்னை நினைவுசெய்யுங்கள். நினைவுசெய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நான் இதற்கான உத்தரவாதத்தைக் கொடுக்கின்றேன். மக்கள் கூவியழைக்கின்றார்கள்: ஓ, தூய்மையாக்குபவரே வாருங்கள்! எங்களைத் தூய்மையாக்கி, புதிய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள். எனவே அவர்கள் எவ்வாறு செல்வார்கள்? தந்தை சிலவற்றை உங்களுக்கு நேரடியாகவே கூறுகின்றார்: இது தந்தையின் இலகுவான ஞானமும் இலகுவான விடயங்களும் ஆகும். அவர் கூறுகின்றார்: உங்கள் செயல்களைச் செய்யும் போதும், என்னை நினைவு செய்யுங்கள்! உங்கள் தொழில் போன்றவற்றை நீங்கள் செய்யலாம், உணவு தயாரிக்கலாம், ஆனால் நினைவில் நிலைத்திருந்து செய்தால் உணவு தூய்மையாகும். இதனாலேயே தேவர்களுமே பிரம்மபோசனத்தை விரும்பினார்கள் என்று நினைவுகூரப்படுகின்றது. இந்த புத்திரிகளும் சூட்சும உலகிற்கு ‘போங்’ எடுத்துச் செல்லுகின்றார்கள், அங்கே ஒரு சந்திப்பு இடம்பெறுகின்றது. அங்கே பிராமணர்களினதும் தேவர்களினதும் ஒன்றுகூடல் இடம்பெறுகின்றது. அவர்கள் உணவை ஏற்றுக் கொள்வதற்காக வருகின்றார்கள். பிராமண புரோகிதர்கள் தங்கள் உணவை உட்கொள்ளும் முன்னர் ஒரு மந்திரத்தை ஓதுவதுண்டு. பிரம்ம போசனம் அதிகளவு புகழப்படுகின்றது. சந்நியாசிகள் பிரம்மதத்துவத்தை மாத்திரமே நினைவுசெய்கின்றார்கள். அவர்களுடைய தர்மம் வேறுபட்டதாகும். அவர்கள் எல்லைக்குட்பட்ட சந்நியாசிகள். அவர்கள் தங்கள் வீடு, தங்கள் குடும்பம், தமது செல்வம் போன்ற அனைத்தையும் துறந்து விட்டதாகக் கூறுகின்றார்கள். இப்பொழுது அவர்கள் உள்ளே (நகரங்களுக்குள்) பிரவேசித்துள்ளார்கள். உங்களுடையது எல்லையற்ற துறவறமாகும். நீங்கள் இப்பழைய உலகையுமே மறக்கின்றீர்கள். பின்னர் நீங்கள் புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். வீட்டில் குடும்பத்துடன் வாழும் போதும், நீங்கள் சாந்திதாமத்தினூடாக சந்தோஷதாமத்திற்குச் செல்ல வேண்டும் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் சாந்திதாமத்தையும் நினைவு செய்ய வேண்டும். நீங்கள் தந்தைiயும், சாந்திதாமத்தையும், சந்தோஷதாமத்தையும் நினைவுசெய்ய வேண்டும். இது எங்களுடைய பல பிறவிகளில் இறுதி பிறவியாகும். எங்களுடைய 84 பிறவிகளும் இப்பொழுது நிறைவுசெய்யப்பட்டுள்ளன. நாங்கள் சூரிய வம்சத்திலிருந்து, சந்திர வம்சத்தவராகி, அதன் பின்னர் வைசியர்களாகவும் சூத்திரர்களாகவும் ஆகினோம். ஆத்மாவே பரமாத்மா என்றும், ஆத்மா பரமாத்மா என்பதால் அவர் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை என்;றும் அவர்கள் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவர்கள் கூறுகின்ற அர்த்தம் தவறானது. தந்தை இங்கிருந்து ‘ஹம்ஸோ’ என்பதன் அர்த்தத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாவாகிய நான், பரமாத்மாவான பரமதந்தையின் குழந்தை, முதலில் சுவர்க்க வாசியான ஒரு தேவராக இருந்த நான், பின்னர் சந்திர வம்ச சத்திரியன் ஆகினேன். 2500 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் நாங்கள் விகாரம் நிறைந்த வைசியர்கள் ஆகவும், சூத்திரர்களாகவும் ஆகினோம். இப்பொழுது நாங்கள் உச்சிக்குடுமியான பிராமணர்கள் ஆகியுள்ளோம். நாங்கள் இங்கிருக்கும் போது, இது 84 பிறவிகளுக்கு குத்துக்கரணம் அடிப்பதைப் போன்றுள்ளது. எங்களுக்கு இந்தக் குத்துக்கரணம் பற்றிய ஞானம் உள்ளது. முன்னர் மக்கள் யாத்திரையில் செல்லும்போது தாம் குத்துக்கரணம் அடிக்கும் பாதையை குறித்துக் கொள்வதுண்டு. உங்களுடைய உண்மையான யாத்திரை சாந்தி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்குமேயாகும். நீங்களே அனைவருக்கும் இவ்வறிவுரையை வழங்கும் ஆன்மீக யாத்திரிகர்கள்: தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்கள் சாந்திதாமத்திற்குச் செல்வீர்கள். சாதுக்கள், புனிதர்கள் அனைவரும் சாந்திதாமத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்கின்றார்கள். எனினும் எவராலும் அங்கு செல்ல முடியாது. அனைவரும், அதாவது முழுக்கூட்டமும் அங்கு ஒன்றாகவே செல்வார்கள். சத்தியயுகத்தில் வெகு சிலரே இருப்பார்கள், பின்னர் வளர்ச்சி ஏற்படுகின்றது எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள். தேவர்கள் சுயதரிசன சக்கரதாரிகள் அல்ல. எவ்வாறாயினும், இந்நேரத்தில் நீங்கள் மாயையுடன் யுத்தம் புரிகின்றீர்கள். அந்த யுத்தத்திலும்கூட, சக்திவாய்ந்தவர்கள் என்று தாம் கருதுகின்ற பக்கத்திடம் அவர்கள் தஞ்சம் புகுகின்றார்கள். இந்நேரத்தில் நீங்கள் யாரிடம் புகலிடம் தேடுகின்றீர்கள்;? கணவன், மனைவி இருவரும் கூறுகின்றார்கள்: நான் உங்களிடமே புகலிடம் தேடுகின்றேன். என்னுடையவர் ஒரேயொரு சிவபாபாவே அன்றி வேறு எவருமில்லை. சகல ஆத்மாக்களினதும் தந்தை ஒரேயொருவரே. நீங்கள் அந்த ஒரேயொருவரின் குழந்தைகள் ஆவீர்கள். சாதுக்களும், புனிதர்களும் அந்த ஒருவர் அல்ல. அவ்வாறாயின், பல கடவுள்கள் இருக்க வேண்டும்! தமது வீட்டுடனும், குடும்பத்துடனும் முகம் கோணிக்கொள்பவர்கள் கடவுள் ஆகிவிடுகின்றனர்! கோடீஸ்வரர்களாக உள்ள பல செல்வந்தர்கள் அவர்களிடம் சென்று, அவர்களுடைய சீடர்கள் ஆகுகின்றனர். பின்னர் அவர்கள் தூய்மையற்ற உணவை உண்டு மகிழ்கின்றார்கள். அவர்கள் தமோபிரதான் மனிதர்கள். அவர்கள் ஒவ்வொரு வாரமும் அங்கு சென்று பிரார்த்தனை செய்வார்கள். இந்துக்களுக்குத் தங்கள் சொந்த சமயத்தைப் பற்றியே எதுவும் தெரியாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உண்மையில் நீங்கள் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்திற்குரியவர்கள். எவ்வாறாயினும் இப்பொழுது நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டதால் உங்களைத் தேவர்கள் என அழைக்கமுடியாது. அந்த தர்மம் இப்பொழுது மறைந்து விட்டது. மக்கள் மிகவும் விகாரமுடையவர்களாக இருப்பதுடன், அவர்கள் தவறான பார்வையும் கொண்டிருக்கின்றார்கள். பாபாவிடம் சென்ற ஓர் அமைச்சர் கூறினார்: எனது பார்வை தவறானதாக ஆகுகின்றது. தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, குற்றமற்ற பார்வை உடையவர்களாகுங்கள். நீங்கள் தவறான பார்வை கொண்டவர்களாக இருக்கும்வரை தூய்மை அற்றவர்களாகவே இருப்பீர்கள். உங்களை சகோதரர்களாகக் கருதுங்கள். அப்போது அத் தவறான பார்வை முடிந்துவிடும். ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள், எங்களுடைய ஆஸ்தியை ஒரேயொரு தந்தையிடமிருந்து கோருகின்றோம். ஆத்மாவின் சிம்மாசனம் இந்த நெற்றியாகும். இது அமரத்துவ சிம்மாசனம் எனப்படுகின்றது. அமரத்துவமான ஆத்மா இந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றார். இச்சரீரம் களி மண்ணாலான ஒரு பொம்மையாகும். முழுப்பாகமும் ஆத்மாவில் பதியப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தியை தருவதற்காக நான் 5000 வருடங்களுக்குப் பின் வந்திருக்கின்றேன். நீங்கள் உங்களது ஆஸ்தியான ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் போன்றவற்றைக் கோரிக்கொள்வதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். சத்திய யுகத்தில் நீங்கள் பெருமளவு செல்வத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் 21 தலைமுறைகளுக்குத் தேவர்களாகின்றீர்கள். வயோதிப வயதை அடையும்வரை அங்கு எவரும் மரணிப்பதில்லை. இங்கு, மக்கள் எங்காவது அமர்ந்திருக்கும்போது திடீரென மரணிக்கின்றார்கள். சிலவேளைகளில் அவர்கள் கருப்பையில்கூட மரணித்துவிடுகின்றார்கள். அங்கு, துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. அது இராம இராச்சியமாகிய சந்தோஷதாமம் என அழைக்கப்படுகின்றது. இதுவோ இராவண இராச்சியமாகிய துன்பதாமமாகும். சத்தியயுகத்தில் இராவணன் இருப்பதில்லை. எனவே நீங்களும் இந்த 84 பிறவிகளின் சக்கரத்தை உங்கள் புத்தியில் வைத்திருந்து மிகவும் சந்தோஷத்தில் நிலைத்திருங்கள். நீங்கள் புதிய உலகத்து அதிபதிகளாக, அதாவது, சத்தியயுகத்து அதிபதிகளாக ஆகப்போகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். கீதையில் கூறப்படுகின்றது: கடவுள் பேசுகின்றார்: ஓ, குழந்தைகளே, உங்கள் சரீரத்தையும் அனைத்து சரீர உறவுகளையும் துறவுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அந்த ஒரு கடவுளே உங்களுடைய உண்மையான நண்பன் ஆவார். அல்லா- அவால்டின்(முதல் தர்மம்) மற்றும் ஹத்தம்-தாய் (உங்கள் வாயில் மணியை இடுதல்) அனைத்தும் இந் நேரத்திற்குரிய நாடகங்களே. குறைந்தளவில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் பெரும்பாடு படுகிறார்கள். எல்லையற்ற தந்தை இச்சனத்தொகையைப் பெருமளவு குறைக்கின்றார். சத்திய யுகத்தில் முழு உலகினதும் சனத்தொகை 900,000 ஆக இருக்கும். அங்கு இத்தனை மில்லியன் மக்கள் இருக்கமாட்டார்கள். அனைவரும் முக்திதாமமாகிய சாந்தி தாமத்திற்குச் செல்வார்கள். இது ஓர் அற்புதமே. அவர் ஏனைய தர்மங்கள் அனைத்தையும் அழித்து, ஒரு தேவ தர்மத்திற்கான அத்திவாரத்தை இடுகின்றார். நீங்கள் இந்த 84 பிறவிகளின் சக்கரம் உங்கள் புத்தியில் மிக நன்றாகப் பதியுமாறு செய்யவேண்டும். இதுவே சுயதரிசனச் சக்கரமாகும். இது எவருடைய தொண்டையையும் துண்டிக்கின்ற சக்கரமன்று. சமய நூல்களில், கிருஷ்ணரைப் பற்றி இம்சைக்குரிய (வன்முறையான) விடயங்கள் கூறப்பட்டுள்ளன. சுயதரிசனச் சக்கரம் மூலம் அவர் அனைவரையும் கொன்றதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே அதுவும் ஒரு அவதூறேயாகும். அவர்கள் அவரை வன்முறையாளராக ஆக்கிவிட்டனர்! நீங்கள் இரட்டை அஹிம்சாவாதிகள் ஆகுகின்றீர்கள். காம வாளைப் பிரயோகிப்பதும் வன்முறையே ஆகும். தேவர்கள் தூய்மையானவர்கள் எனப்படுகின்றனர். நீங்கள் யோக சக்திமூலம் உலக அதிபதிகளாக முடியுமாயின், யோக சக்திமூலம் ஏன் குழந்தைகள் பிறக்கமுடியாது? அவர்கள் தாங்கள் ஒரு குழந்தையைப் பெறப்போகின்றோம் என்ற ஒரு காட்சியைப் பெறுவார்கள். பாபா(பிரம்மா) தான் இப்பழைய சரீரத்தை நீக்கி, பின்னர் வாயில் ஒரு தங்கக் கரண்டியைக் கொண்டிருப்பார் என்பதைப் புரிந்து கொள்கின்றார். நீங்கள் அமரத்துவ பூமியில் பிறவி எடுக்கும்போது உங்கள் வாயில் ஒரு தங்கக் கரண்டியைக் கொண்டிருப்பீர்கள் என்பதை நீங்கள் மாத்திரமே புரிந்து கொள்கின்றீர்கள். ஏழைப் பிரஜைகளும் தேவைப்படுகின்றனர். அங்கு எவ்வகையான துன்பத்தினதும் கேள்விக்கே இடமில்லை. பிரஜைகள் பெருமளவு செல்வத்தையோ, அல்லது செழிப்பையோ கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் சந்தோஷத்தையும், நீண்ட ஆயுளையும் கொண்டிருப்பார்கள். அரசர்கள், அரசிகள் செல்வந்தப் பிரஜைகள் அனைவரும் தேவைப்படுகின்றனர். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சந்தோஷத்தில் நிலைத்திருப்பதற்கு, தந்தையின் நினைவில் இருப்பதுடன், 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள். சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றி, கடவுளை உங்கள் உண்மையான நண்பனாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

2. இரட்டை அஹிம்சாவாதி ஆகுவதற்கு, உங்கள் குற்றப் பார்வையைக் குற்றமற்றதாக மாற்றுங்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள் என்பதைப் பயிற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சர்வசக்திவான் தந்தையை உங்களுடன் ஒன்றிணைந்தவராக்கி, வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

சர்வசக்திவான் தந்தையுடன் ஒன்றிணைந்திருக்கும் குழந்தைகள், சகல சக்திகளுக்கான உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். எங்கு சகல சக்திகளும் உள்ளனவோ, அங்கே வெற்றி இல்லாமல் போவதற்கான சாத்தியமே இல்லை. நீங்கள் சதா தந்தையுடன் ஒன்றிணைந்தவராக இல்லாவிட்டால், வெற்றியும் குறைவாகவே இருக்கும். நீங்கள் உங்களுடன் ஒன்றிணைந்திருக்கும் சகவாசத்தின் பொறுப்பை சதா நிறைவேற்றுகின்ற, உங்களின் அழியாத சகபாடியை சதா உங்களுடன் வைத்திருந்தால், வெற்றி உங்களின் பிறப்புரிமை ஆகும். ஏனென்றால், வெற்றி எப்போதும் மாஸ்ரர் சர்வசக்திவான்களின் முன்னாலும் பின்னாலும் இருக்கும்.

சுலோகம்:
உண்மையான வைஷ்ணவர்கள், விகாரம் என்ற அழுக்கையே தொடாதவர்கள் ஆவார்கள்.