22.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே இதுவே உங்களின் பெறுமதிமிக்க நேரம் ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் தந்தையின் முழுமையான உதவியாளர்கள் ஆகுகின்றீர்கள். உதவியாளர்கள் ஆகும் குழந்தைகள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருகின்றனர்.
கேள்வி:
சேவாதாரிக் குழந்தைகள் எந்த சாக்குப்போக்குகளைக் கூறக்கூடாது?பதில்:
சேவாதாரிக் குழந்தைகளாகிய நீங்கள் ஒருபோதும் இந்தச் சாக்குப்போக்கைச் செய்யக்கூடாது: பாபா இங்கே குளிராக இருக்கிறது அல்லது இங்கே வெப்பமாக இருக்கிறது அதனால் என்னால் இங்கே சேவை செய்ய முடியாது. சிறிது குளிராகவோ அல்லது சிறிது வெப்பமாகவோ இருக்கும் போது உணர்ச்சி வசப்படாதீர்கள். நீங்கள் எதையும் சகிக்க முடியாதவர்களாக இருக்கக்கூடாது. இந்தத் துன்ப பூமியில் நீங்கள் இன்பம் துன்பம் வெப்பம் குளிர் புகழ்ச்சி இகழ்ச்சி அனைத்தையும் சகிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். ஒருபொழுதும் சாக்குப் போக்குகளைச் செய்யாதீர்கள்.பாடல்:
ஓ மனமே பொறுமையுடன் இரு! உனது சந்தோஷ நாட்கள் வரவுள்ளன.ஓம் சாந்தி.
சந்தோஷம் துன்பம் என்றால் என்ன என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும். இந்த வாழ்க்கையில் நீங்கள் எப்பொழுது சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள் எப்பொழுது துன்பத்தைப் பெறுகிறீர்கள் என்பதை நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். இது இப்பொழுது துன்ப உலகமாகும். நீங்கள் இன்பம் துன்பம் புகழ்ச்சி இகழ்ச்சி அனைத்தையும் இன்னும் ஒரு குறுகிய காலத்திற்குச் சகித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அவை அனைத்திற்கும் அப்பால் செல்ல வேண்டும். உங்களிற் சிலர் சிறிது வெப்பத்தை உணரும் போது நான் குளிர்மையான இடத்திற்குச் செல்ல விரும்புகிறேன் எனக் கூறுகின்றீர்கள். இப்பொழுது குளிராகவோ அல்லது வெப்பமாகவோ இருந்தாலும் குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்ய வேண்டும். இப்பொழுதுள்ள இந்தச் சிறு அசௌகரியம் புதியதல்ல. இது துன்ப பூமியாகும். சந்தோஷ பூமிக்குச் செல்வதற்கு குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முழுமையான முயற்சியைச் செய்ய வேண்டும். இது உங்களது அதிபெறுமதி வாய்ந்த நேரமாகும். சாக்குப் போக்குகளை கூற முடியாது. தந்தை சேவாதாரிக் குழந்தைகளுடன் பேசுகிறார். எவ்வாறு சேவை செய்வது என்று தெரியாத குழந்தைகளால் எந்தப் பயனும் இல்லை. பாரதத்தை மாத்திரம் அல்லாது முழு உலகையும் சந்தோஷபூமி ஆக்குவதற்காகவே தந்தை இங்கு வந்துள்ளார். ஆகவே பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் உதவியாளர்கள் ஆக வேண்டும். தந்தை வந்துள்ளார் ஆகையால் நீங்கள் அவரது வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். சுவர்க்கமாக இருந்த பாரதம் இப்பொழுது நரகமாக உள்ளது. அது மீண்டும் சுவர்க்கம் ஆக்கப்பட வேண்டும். இதுவும் இப்பொழுது உங்களுக்குத் தெரியும். சத்திய யுகம் தூய அரசர்களின் இராச்சியம். அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள். பின்னர் அவர்கள் தூய்மையற்ற அரசர்கள் ஆகுகிறார்கள். கடவுளின் பெயரில் தானம் செய்வதனால் அவர்களும் பலத்தைப் பெறுகின்றனர். தற்பொழுது மக்களின் அரசாங்கமே உள்ளது. அவர்களால் பாரதத்திற்குச் சேவை செய்ய முடியாது. ஒரேயொரு எல்லையற்ற தந்தை மாத்திரமே பாரதத்திற்கும் முழு உலகிற்கும் சேவை செய்கிறார். தந்தை இப்பொழுது குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: இனிய குழந்தைகளே இப்பொழுது எனது உதவியாளர்கள் ஆகுங்கள். அவர் அதிகளவு அன்புடன் விளங்கப்படுத்துகிறார். ஆத்ம உணர்வில் இருக்கும் குழந்தைகள் அவரைப் புரிந்து கொள்கின்றனர். எவ்வாறு சரீர உணர்வுடைய குழந்தைகளால் அவருக்கு உதவ முடியும்? அவர்கள் மாயையின் சங்கிலியில் சிக்கியுள்ளார்கள். அனைவரும் மாயையின் சங்கிலிகளில் இருந்தும் குருமார்களின் சங்கிலிகளில் இருந்தும் விடுதலை அடைவதற்கான வழிகாட்டல்களைத் தந்தை இப்பொழுது உங்களுக்குக் கொடுத்துள்ளார். இது உங்களின் வியாபாரம். தந்தை கூறுகிறார்: எனக்கு மிக நன்றாக உதவி செய்பவர்கள் சிறந்த அந்தஸ்தைக் கோருவார்கள். தந்தையே நேரடியாகக் கூறுகிறார்: நான் சாதாரணமாக இருப்பதனால் நான் எவ்வாறானவர் என்பதோ அல்லது நான் என்ன செய்கிறேன் என்பதோ மிகச்சரியாக எவருக்கும் தெரியாது. தந்தை எங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார். அவர்களுக்கு இது தெரியாது. இலக்ஷ்மியும் நாராயணனும் உலக அதிபதிகளாக இருந்தனர் என்பது எவருக்கும் தெரியாது. அவர்கள் எவ்வாறு அந்த இராச்சியத்தைப் பெற்றார்கள் என்பதையும் பின்னர் அதனை எவ்வாறு இழந்தார்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். மக்களின் புத்திகள் முற்றிலும் சீரழிந்து விட்டன. ஒவ்வொருவருடைய புத்தியிலும் உள்ள பூட்டைத் திறப்பதற்கும் ஒவ்வொருவரினதும் புத்தியை கல்லிலிருந்து வைரமாக மாற்றுவதற்கும் இப்பொழுது தந்தை வந்துள்ளார். பாபா கூறுகின்றார்: இப்பொழுது எனது உதவியாளர்கள் ஆகுங்கள். கடவுளின் உதவியாளர்கள் பற்றி மக்கள் பேசுகின்றார்கள், ஆனால் அவர்களோ கடவுளின் உதவியாளர்கள் ஆகுவதில்லை. கடவுள் யாரைத் தூய்மை ஆக்குகின்றாரோ அவர்களே தங்களைப் போல் பிறரையும் தூய்மையாக்க வேண்டும் என்று கடவுள் கூறுகிறார். ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! உங்களைத் தூய சுவர்க்க வாசிகளாக ஆக்குவதற்குத் தந்தை வந்துள்ளார். இது மரண பூமி என்பதைப் பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். எங்காவது அமர்ந்திருக்கும் போது மக்கள் திடீரென இறந்து விடுகின்றனர். ஆகவே அவ்வாறு நடப்பதற்கு முன்னர் ஏன் நாங்கள் தந்தையிடம் இருந்து எங்கள் முழு ஆஸ்தியையும் கோரி எங்களது எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சியைச் செய்யக்கூடாது? மக்கள் தங்கள் ஓய்வு ஸ்திதியை அடையும் போது பக்தி செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என நம்புகின்றனர். அவர்கள் தங்கள் ஓய்வு ஸ்தியை அடையும் காலம் வரை அவர்கள் பெருமளவு பணம் போன்றவற்றைச் சம்பாதிக்கின்றனர். இது இப்பொழுது உங்கள் அனைவரினதும் ஓய்வு ஸ்திதி ஆகும். ஆகவே நீங்கள் ஏன் தந்தையின் உதவியாளர் ஆகக்கூடாது? நீங்கள் தந்தையின் உதவியாளர் ஆகிவிட்டீர்களா என உங்கள் இதயத்தையே கேளுங்கள். சேவை செய்கின்ற குழந்தைகள் மிகவும் பிரபல்யமானவர்கள்; அவர்கள் மிக நல்ல முயற்சியைச் செய்கின்றார்கள். யோகத்தில் நிலைத்திருப்பதன் மூலம் உங்களால் சேவை செய்ய முடியும். நினைவுச் சக்தியின் மூலம் நீங்கள் முழு உலகையும் தூய்மையாக்க வேண்டும். நீங்கள் முழு உலகையும் தூய்மை ஆக்குவதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். உங்களுக்கு நிச்சயமாக ஒரு தூய உலகம் தேவைப்படுகின்றது. ஆகையால் பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. இப்பொழுது அனைவரிடமும் கூறுங்கள்: சரீர உணர்வைத் துறவுங்கள்! ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். அனைவருமே அவரையே நினைவு செய்கின்றார்கள். சாதுக்கள் புனிதர்கள் போன்றோரும் ஒரு விரலை மேலே சுட்டிக் காட்டி ஒரேயொருவரே பரமாத்மா, அவர் மாத்திரமே அனைவருக்கும் சந்தோஷத்தை அருள்கின்றார் என்பதைக் கூறுகிறார்கள். மக்கள் கடவுளை அல்லது பரமாத்மாவைப் பற்றிப் பேசிய போதிலும் அவர்களில் எவருக்குமே அவரைத் தெரியாது. சிலர் கணேசரைத் (யானைக் கடவுள்) தொடர்ந்தும் நினைவு செய்கின்றார்கள். சிலர் அனுமனை (குரங்குக் கடவுள்) நினைவு செய்கின்றார்கள், சிலரோ தங்கள் சொந்தக் குருவை நினைவு செய்கின்றார்கள். அவை அனைத்துமே பக்தி மார்க்கத்திற்கு உரியவை என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். பக்தி மார்க்கம் அரைக்கல்பத்திற்குத் தொடர்கின்றது. பெரிய ரிஷிகளும் முனிவர்களும் “நேற்றி நேற்றி (இதுவும் அல்ல அதுவும் அல்ல) எங்களுக்குப் படைப்பவரையும் தெரியாது, படைப்பையும் தெரியாது” என்று கூறி வருகின்றார்கள்: தந்தை கூறுகின்றார்: அவர்கள் திரிகாலதரிசிகள் (முக்காலமும் அறிந்தவர்கள்) அல்ல. ஒரேயொருவரே ஞானக்கடலான விதையாவார். அவர் பாரதத்திற்கே வருகின்றார். மக்கள் சிவஜெயந்தியையும்; (சிவனின் பிறப்பு) கீதை ஜெயந்தியையும் (கீதையின் பிறப்பு) கொண்டாடுகின்றார்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு சிவனைத் தெரியாது. சிவபாபா கூறுகின்றார்: நான் மாத்திரமே தூய்மையாக்குபவரான ஞானக்கடல் ஆவேன். இவ்வாறாகக் ஸ்ரீகிருஷ்ணரையிட்டு எவருமே கூற மாட்டார்கள். ‘கீதையின் கடவுள் யார்?’ என்ற படம் மிகவும் சிறந்ததாகும். குழந்தைகள் அனைவரதும் நன்மைக்காகவே தந்தை இப்படங்கள் அனைத்தையும் உருவாக்கியுள்ளார். சிவபாபாவின் முழுமையான புகழை எழுதுங்கள். அனைத்தும் இதிலேயே தங்கியுள்ளது. மேல் இருந்து கீழே வருகின்ற அனைவருமே தூய்மையானவர்கள். தூய்மையாகாமல் எவராலும் வீடு திரும்ப முடியாது. தூய்மை ஆகுவதே பிரதான விடயம். அது ஆத்மாக்கள் அனைவரதும் வசிப்பிடமான தூய உலகமாகும். இங்கே உங்கள் பாகங்களை நடிக்கும் போது நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். அதிதூய்மையாக இருந்தவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளார்கள். தேவ தர்மத்தின் சகல பெயரும் சுவடும் மறைந்து விட்டன. தேவ தர்மத்தின் பெயர் இந்துசமயம் என்று மாற்றப்பட்டுள்ளது. நீங்கள் மாத்திரமே சுவர்க்க இராச்சியத்தைக் கோரி பின்னர் அதனை இழக்கின்றீர்கள். இது தோல்வியையும் வெற்றியையும் பற்றிய நாடகம் ஆகும். மாயையினால் தோற்கடிக்கப்படுபவர்கள் அனைத்தினாலும் தோற்கடிக்கப்படுகின்றார்கள். மாயையை வெற்றி கொள்பவர்கள் அனைத்தையும் வெற்றி கொள்கின்றார்கள். இராவணனின் பெரியளவு கொடும்பாவியைத் தயாரிப்பதற்கு மக்கள் அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றார்கள். பின்னர் அதனை ஒரேநாளில் அழித்து விடுகின்றார்கள். அவனே எதிரியாவான். அது பொம்மைகளுடன் விளையாடுவதைப் போன்றதாகும். அவர்கள் சிவபாபாவின் ஓர் உருவத்தையும் செய்கின்றார்கள். அவர்கள் அதனை வழிபட்ட பின்னர் அதனை உடைத்து விடுகின்றார்கள். அவ்வாறே அவர்கள் தேவர்களின் உருவங்களையும் உருவாக்கி பின்னர் அவற்றை மூழ்கடித்து விடுகின்றார்கள். அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லையற்ற வரலாற்றையும் புவியியலைப் பற்றியும் எவ்வாறு இவ்வுலகச் சக்கரம் சுழல்கின்றது என்பதையும் அறிவீர்கள். வேறு எவருக்குமே சத்திய திரேதாயுகங்களைப் பற்றித் தெரியாது. அவர்கள் உருவாக்கியுள்ள தேவர்களின் விக்கிரகங்கள் இழிவுபடுத்துபவையாகவே உள்ளன. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிய குழந்தைகளே, உலக அதிபதிகள் ஆகுவதற்கு தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுங்கள். நினைவில் நிலைத்திருந்து உணவைத் தயாரியுங்கள். அதனை உண்ணும் போதும் நினைவில் நிலைத்திருங்கள். தந்தையே கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால் நீங்கள் மீண்டும் ஒருமுறை உலக அதிபதிகள் ஆகுவீர்கள். தந்தையும் மீண்டும் ஒருமுறை வந்துள்ளார். நீங்கள் இப்பொழுது முழுமையாக உலக அதிபதிகள் ஆக வேண்டும். தாயையும் தந்தையையும் பின்பற்றுங்கள். தந்தையை மாத்திரம் பின்பற்றுவதாக இருக்கக்கூடாது. தாங்கள் அனைவருமே தந்தை எனச் சந்நியாசிகள் கூறுகின்றனர். ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா எனக் கூறுவதன் மூலம் அவர்கள் இதனைச் செய்கின்றனர். அது தவறானது. இங்கே தாய் தந்தை இருவரும் முயற்சி செய்கின்றார்கள். ‘தாயையும் தந்தையையும் பின்பற்றுங்கள்’ என்ற கூற்று இவ்விடத்தையே குறிப்பிடுகின்றது. உலக அதிபதிகளாக இருந்தவர்கள் தூய்மையாக இருந்தார்கள் என்றும் இப்பொழுது அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகி விட்டார்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை தூய்மையானவர்கள் ஆகுகின்றார்கள். நாங்களும் அவரது ஸ்ரீமத்தைப் பின்பற்றி அந்த அந்தஸ்தை அடைகின்றோம். அவர் இவரினூடாக வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். நாங்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டும். உங்களில் சிலர் அவற்றைப் பின்பற்றுவதில்லை. எனினும் ‘பாபா பாபா’ என்று கூறுவதன் மூலம் உங்கள் வாய்களை இனிமையாக்கிக் கொள்கின்றீர்கள். அவரது வழிகாட்டல்களைப் பின்பற்றுபவர்கள் மாத்திரமே தகுதியான குழந்தைகள் என அழைக்கப்படுகின்றார்கள். மம்மாவையும் பாபாவையும் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இராச்சியத்திற்குள் பிரவேசிப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இது புரிந்து கொள்வதற்கான விடயமாகும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அவ்வளவே! 84 பிறவிகளை எடுக்கும் போது அவர்கள் எவ்வாறு தூய்மை அற்றவர்கள் ஆகினார்கள் என்பதையும் அவர்கள் இப்பொழுது மீண்டும் தூய்மையாக வேண்டும் என்பதையும் பிறருக்கு விளங்கப்படுத்துங்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவில் நிலைத்து இருக்கின்றீர்களோ அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். அதிகளவு நினைவில் நிலைத்திருப்பவர்களே முதலில் புதிய உலகிற்குச் செல்வார்கள். நீங்கள் பிறரையும் உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்க வேண்டும். கண்காட்சிகளுக்கு மம்மாவும் பாபாவும் சென்று விளங்கப்படுத்த முடியாது. வெளிநாட்டில் இருந்து ஒரு முக்கிய விருந்தாளி வரும் போது வந்தவர் யார் என்பதைப் பார்ப்பதற்கு அதிகளவினர் ஒன்றுகூடுகின்றனர். இவர் மிகவும் மறைமுகமானவர் ஆவார். தந்தை கூறுகின்றார்: நான் பிரம்மாவின் சரீரத்தின் மூலம் பேசுகின்றேன். நான் இந்தக் குழந்தைக்குப் பொறுப்பாவேன். சிவபாபாவே உங்களுடன் உரையாடி உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்றே நீங்கள் எப்பொழுதும் கருத வேண்டும். நீங்கள் சிவபாபாவை மாத்திரம் பார்க்க வேண்டும், இவரை அல்ல. உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி பரமாத்மாவான தந்தையை நினைவு செய்யுங்கள். நான் ஓர் ஆத்மா. ஓர் ஆத்மாவில் அவரது முழுப் பாகமும் உள்ளது. இந்த ஞானத்தை உங்கள் புத்தியில் சுழற்றுங்கள். உங்கள் புத்தியில் உலக விடயங்கள் மாத்திரமே இருந்தால் நீங்கள் எதனையும் புரிந்து கொள்ளவில்லை என்பதே அதன் அர்த்தம். அவர்கள் முற்றிலும் சீரழிந்தவர்கள். எவ்வாறாயினும் அத்தகையவர்களுக்கும் நன்மையளிக்க வேண்டும். அவர்கள் சுவர்க்கத்திற்குச் சென்றாலும் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர மாட்டார்கள். அவர்கள் தண்டனையை அனுபவம் செய்து பின்னர் வீடு திரும்புவார்கள். நீங்கள் எவ்வாறு ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியும் என்று தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். முதலில் நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தை சுழற்றுபவர் ஆகி பிறரையும் அவ்வாறு செய்யுமாறு செய்யுங்கள். உறுதியான யோகிகள் ஆகி பிறரையும் அவ்வாறு ஆக்குங்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள்! பின்னர் நீங்கள் கூறுகின்றீர்கள்: ‘பாபா நாங்கள் மறந்து விடுகின்றோம். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உண்மையைப் பேசாத பலரும் உள்ளனர். பலரும் மறந்து விடுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: உங்களிடம் வருகின்றவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவடைவதால் நாங்கள் வீடு திரும்ப வேண்டும். “இராமர் சென்ற போது இராவணனும் சென்றான்” என்று கூறப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் மிகவும் எளிமையானது. இந்தச் சங்கமயுகத்தில் மாத்திரமே நிச்சயமாக இராமர் இராவணன் இருவரின் குடும்பங்களும் இருக்கின்றன. அனைவருமே அழிய உள்ளார்கள் என்பதும் வெகுசிலர் மாத்திரமே எஞ்சியிருப்பார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் தொடர்ந்தும் முன்னேறிச் செல்லும் பொழுது நீங்கள் எவ்வாறு இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். ஆரம்பத்திலேயே உங்களுக்கு அனைத்தும் கூறப்பட மாட்டாது. அவ்வாறாயின் அது நாடகமாக இருக்க முடியாது. நீங்கள் அதனை ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பார்க்க வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் காட்சிகளைப் பெறுவீர்கள். உலகில் வேறு எவருக்கும் 84 பிறவிகளின் சக்கரம் தெரியாது. இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப உள்ளீர்கள் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. இப்பொழுது நீங்கள் இராவண இராச்சியத்திலிருந்து விடைபெறுகின்றீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் சொந்த இராச்சியத்துக்குள் செல்வீர்கள். இன்னமும் சொற்ப நாட்களே உள்ளன. இச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. நீங்கள் இச்சக்கரத்தைப் பல தடவைகள் சுற்றி வந்துள்ளீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கின்ற கர்ம பந்தனங்கள் அனைத்தையும் மறந்து விடுங்கள். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும் போதும் தொடர்ந்தும் அவர்களை மறந்து விடுங்கள். இந்த நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். மகாபாரத யுத்தத்தின் பின்னரே சுவர்க்க வாசல்கள் திறக்கின்றன. இதனாலேயே பாபா கூறுகின்றார்: “சுவர்க்க வாசல்” என்ற பெயர் மிகவும் நல்லது. இந்த யுத்தங்கள் எப்பொழுதும் இடம்பெறுகின்றன எனச் சிலர் கூறுகின்றார்கள். அவர்களிடம் கேளுங்கள்: ஏவுகணைகளுடனான யுத்தம் எப்பொழுது இடம்பெற்றது? இந்த ஏவுகணை யுத்தமே இறுதியானதாகும். 5000 வருடங்களுக்கு முன்னர் இந்த யுத்தம் இடம்பெற்ற போதே இந்த யாகமும் உருவாக்கப்பட்டது. இந்தப் பழைய உலகம் இப்பொழுது அழிக்கப்பட உள்ளது. புதிய இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. உங்கள் இராச்சியத்தைக் கோருவதற்காகவே நீங்கள் இந்த ஆன்மீகக் கல்வியைக் கற்கின்றீர்கள். ஆன்மீக வியாபாரமே உங்கள் வியாபாரம் ஆகும். பௌதீக ஞானம் உங்களுக்கு எவ்வகையிலும் பயனளிக்கப் போவதில்லை. சமயநூல்களும் கூட உங்களுக்கு எவ்வகையிலும் பயனற்றது. ஆகவே நீங்கள் ஏன் உங்களை இந்த வியாபாரத்தில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது? தந்தை உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். உங்களை எந்தக் கல்வியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அம்மக்கள் ஒரு பட்டத்தைப் பெறுவதற்குக் கற்கின்றார்கள். ஆனால் நீங்களோ ஓர் இராச்சியத்தைப் பெறுவதற்காகக் கற்கின்றீர்கள். இரவிற்கும் பகலுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது. அக் கல்விகளின் மூலம் நீங்கள் சிறிதளவு நிலக்கடலைகளையேனும் பெறுவீர்களா அல்லது இல்லையா என உங்களுக்குத் தெரியாது. ஒருவர் தனது சரீரத்தை விட்டுச் செல்லும் போது நிலக்கடலைகளையும் விட்டு செல்கின்றார். இந்தக் கல்வி உங்களுடன் சேர்ந்து வரும். மரணம் உங்கள் தலைமீதே உள்ளது. ஆகையால் அது இடம்பெறும் முன்னர் நீங்கள் ஒரு முழு வருமானத்தைச் சம்பாதிக்க வேண்டும். இந்த வருமானத்தைத் தொடர்ந்தும் சம்பாதிக்கும் பொழுது உலகமும் அழிக்கப்படும். உங்கள் கல்வி முடிவடையும் போது விநாசம் இடம்பெறும். மனிதர்கள் அனைவரும் தங்கள் கைப்பிடியினுள் சில நிலக்கடலைகளை மாத்திரமே வைத்திருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அதனைக் குரங்குகளைப் போன்று பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது இரத்தினங்களைப் பெறுகின்றீர்கள். அந்த நிலக்கடலைகள் மீதுள்ள உங்கள் பற்றைத் துறந்து விடுங்கள். அவர்கள் அனைத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் போது அவர்கள் கைப்பிடியளவு நிலக்கடலைகளை விட்டு விடுவார்கள். இங்குள்ள அனைத்தும் தூசாகப் போகின்றது. அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இந்த ஆன்மீகக் கல்வியை கற்று பிறருக்கும் கற்பிக்க வேண்டும். அழிவற்ற இந்த ஞான இரத்தினங்களினால் உங்கள் கரங்களை நிரப்புங்கள். நிலக்கடலைகளைத் துரத்திச் செல்வதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.2. நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. ஆகவே உங்கள் கர்ம பந்தனங்களில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் ஆகி பிறரையும் அவ்வாறு செய்யத் தூண்டுங்கள். தாயையும் தந்தையையும் பின்பற்றி ஓர் இராஜ அந்தஸ்திற்கு உரிமையுடையவர் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வோர் எண்ணத்தையும் சோதிப்பதன் மூலம் வீணானவற்றின் எந்தக் கணக்கையும் முடிக்கின்ற ஒரு மேன்மையான சேவையாளர் ஆகுவீர்களாக.ஒரு மேன்மையான சேவையாளரின் ஒவ்வோர் எண்ணமும் சக்திவாய்ந்தது. ஓர் எண்ணமேனும் வீணானதாக இருக்கக்கூடாது. ஏனென்றால் சேவையாளர் என்றால் உலக மேடையில் நடிப்பவர் என்று அர்த்தம். முழு உலகமும் உங்களைப் பிரதி செய்கிறது. எனவே உங்களுக்குள் ஒரு வீணான எண்ணம் ஏற்பட்டாலும் நீங்கள் அதை உங்களுக்காக மட்டும் வீணாக்குவதில்லை. ஆனால் ஏனைய பலருக்கும் நீங்கள் கருவி ஆகுகின்றீர்கள். ஆகவே இப்போது எந்தவொரு வீணானவற்றின் கணக்கையும் முடித்து மேன்மையான சேவையாளர் ஆகுங்கள்.
சுலோகம்:
சேவைக்கான சூழலுடன்கூடவே எல்லையற்ற விருப்பமின்மையின் மனோபாவத்தையும் உருவாக்குங்கள்.அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வால் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.
சங்கமயுகமே ஒன்றிணைந்திருப்பதற்கான யுகம் ஆகும். உங்களால் தந்தையிடம் இருந்து பிரிந்திருக்க முடியாது. நீங்கள் எல்லா வேளைக்கும் சகபாடிகளாக இருக்கிறீர்கள். சதா தந்தையுடன் இருத்தல் என்றால் சதா திருப்தியாக இருத்தல் என்று அர்த்தம். தந்தையும் நீங்களும் சதா ஒன்றிணைந்து இருக்கிறீர்கள். உங்களின் ஒன்றிணைந்த ரூபத்தின் சக்தியே மகத்தான சக்தியாகும். அந்தச் சக்தியால் உங்களால் ஒரு பணிக்குப் பதிலாக ஆயிரம் பணிகளைச் செய்ய முடியும். ஏனென்றால் ஆயிரம் கரங்களைக் கொண்ட தந்தை உங்களுடன் இருக்கிறார்.