23.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவராகிய தந்தையை நினைவுசெய்யுங்கள். அப்பொழுது உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்களுடைய இலக்குக்கு இட்டுச் செல்லும்.

பாடல்:
நடக்கும்பொழுதும் உலாவித் திரியும்பொழுதும் நினைவில் இருக்க வேண்டும் என்ற வழிகாட்டலைத் தந்தை ஏன் உங்களுக்குக் கொடுத்;துள்ளார்?

பதில்:
1. நினைவினூடாக மாத்திரமே உங்களின் பல பிறவிகளின் பாவச் சுமைகள் அகற்றப்படும். 2. நினைவினூடாக மாத்திரமே ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் நினைவில் இருப்பதற்கான பயிற்சியை இப்பொழுது முதல் கொண்டிருந்தால், உங்களுடைய இறுதிக் கணங்களில், ஒரேயொரு தந்தையின் நினைவில் உங்களால் நிலைத்திருக்க முடியும். இறுதிநேரத்தைப் பற்றி நினைவுகூரப்பட்டுள்ளது: தங்களுடைய இறுதிக் கணங்களில் தங்களுடைய மனைவியை நினைவுசெய்பவர்கள்… 4. தந்தையை நினைவுசெய்வதால், 21 பிறவிகளின் சந்தோஷம், உங்களின் முன்னிலையில் தோன்றுகின்றது. முழு உலகிலும் தந்தையைப் போன்று இனிமையானவர்கள் எவருமே இல்லை. இதனாலேயே தந்தையின் வழிகாட்டல்: குழந்தைகளே, நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும், என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்.

ஓம் சாந்தி.
நீங்கள் யாருடைய நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள்? அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவிப்பவருடனான இந்த உறவுமுறையே, அனைத்திலும் இனிமையான உறவுமுறை ஆகும். தந்தை குழந்தைகளாகிய உங்களைப் பார்க்கும்பொழுது, உங்களின் பாவங்கள் அனைத்தும் தொடர்ந்தும் அழிக்கப்படுகின்றன. ஆத்மா சதோபிரதான் ஸ்திதியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றார். எல்லையற்ற துன்பம் உள்ளது. நினைவுகூரப்படுகிறது: அவர் துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்பவரும் ஆவார். உங்களைத் துன்பங்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பதற்கு, இப்பொழுது உண்மையாகவே தந்தை வந்துள்ளார். சுவர்க்கத்தில், துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ கிடையாது. அத்தகையதொரு தந்தையை நினைவுசெய்வது, அதிமுக்கியம் வாய்ந்தது. ஒரு தந்தை தன் குழந்தைகள் மீது அன்பைக் கொண்டிருக்கின்றார். எந்தக் குழந்தைகள் மீது தந்தை அன்பு செலுத்துகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: உங்களைச் சரீரங்களாக அன்றி, ஆத்மாக்களாகக் கருதுங்கள். மிகச் சிறந்த இரத்தினங்கள், நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் தந்தையை நினைவுசெய்கிறார்கள். இதை அவர் ஏன் கூறுகின்றார்? உங்களுடைய பல பிறவிகளின் பாவக் கலசம் நிறைந்துள்ள காரணத்தினால் ஆகும். ஆகவே, இந்த நினைவு யாத்திரையினூடாக மாத்திரம், நீங்கள் பாவாத்மாக்களிலிருந்து புண்ணியாத்மாக்களாக ஆகுவீர்கள். இது ஒரு பழைய சரீரம் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆத்மாவே துன்பத்தைப் பெறுகின்றார். சரீரம் காயப்படும்பொழுது, ஆத்மா வலியை உணர்கின்றார். ஆத்மா கூறுகின்றார்: நான் நோய்வாய்ப்பட்டும், சந்தோஷமற்றும் இருக்கின்றேன். இது துன்ப உலகாகும். நீங்கள் எங்கு சென்றாலும், அங்கு துன்பத்தைத் தவிர எதுவுமிருக்காது. சந்தோஷ பூமியில் துன்பம் இருக்க முடியாது. நீங்கள் துன்பத்தைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, நீங்கள் துன்ப பூமியில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தமாகும். சந்தோஷ பூமியில் சிறிதளவு துன்பம் கூட இருப்பதில்லை. சிறிது நேரமே எஞ்சியுள்ளது, நீங்கள் இந்நேரத்தில் தந்தையை நினைவுசெய்வதற்கு முழு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் அதிகளவில் நினைவைக் கொண்டிருக்கும்பொழுது, தொடர்ந்தும் அதிகளவில் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் முயற்சி செய்து, இறுதியில், ஒரு தந்தையைத் தவிர எதையும் நினைவுசெய்யாத, அத்தகையதொரு ஸ்திதியை உருவாக்க வேண்டும். ஒரு பாடல் உள்ளது: இறுதிக் கணங்களில் தங்களின் மனைவியை நினைவுசெய்பவர்கள்… இவையே இறுதிக் கணங்கள். இது துன்ப பூமியாகிய, பழைய உலகின் முடிவாகும் நீங்கள் இப்பொழுது சந்தோஷ பூமிக்குச் செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாகி விட்டீர்கள். நீங்கள் இதை நினைவுசெய்ய வேண்டும். சூத்திரர்களுக்குத் துன்பமே உள்ளது. நாங்கள் துன்பத்திலிருந்து அப்பாற் சென்று, இப்பொழுது சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, நாங்கள் ஒரு தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அவர் அதி அன்புக்குரிய தந்தையாவார். அவரை விட இனிமையானது எது? அப் பரமாத்மாவாகிய பரமதந்தையை மாத்திரம் ஆத்மா நினைவுசெய்கின்றார். அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை. இவ்வுலகில் அவரை விட இனிமையானது எதுவும் இல்லை. பல குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் எவ்வளவு நேரத்தில் அவர் நினைவுசெய்வார்? ஒரு விநாடியில். அச்சா, எவ்வாறு முழு உலகச் சக்கரமும் சுழல்கின்றது? இதன் மிகச்சரியான அர்த்தம் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உள்ளது. உதாரணத்திற்கு, மக்கள் ஒரு நாடகத்தைப் பார்த்துவிட்டு, திரும்பிச் செல்லும்பொழுது, எவரேனும் ஒருவர் அவர்களிடம் முழு நாடகமும் ஞாபகத்தில் உள்ளதா, இல்லையா என வினவும்பொழுது, அவர்கள் “ஆம்” என்று கூறியவுடனேயே, முழு நாடகமும் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அவர்களின் புத்தியில் பிரவேசிக்கிறது. எவ்வாறாயினும், அதைப் பற்றிப் பேசுவதற்கு, அவர்களுக்கு நேரம் எடுக்கும். பாபாவே எல்லையற்ற பாபா. நீங்கள் அவரை நினைவுசெய்வதால், 21 பிறவிகளின் சந்தோஷம் உங்களின் முன்னிலையில் தோன்றுகின்றது. நீங்கள் இந்த ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களின் முன்னிலையில், ஒரு விநாடியில் தந்தையின் ஆஸ்தி தோன்றுகின்றது. ஒரு குழந்தை பிறந்தவுடன், ஒரு வாரிசு பிறந்துள்ளார் என்பது அவருடைய தந்தைக்குத் தெரியும். அவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் நினைவுசெய்வார். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட குழந்தை, நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் தனிப்பட்ட நினைவைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எல்லையற்ற தந்தையின் ஒரு வாரிசு ஆவீர்கள். சத்திய யுகத்தில், அங்கு ஒரு மகனே இருப்பார். அவரே சொத்துக்கள் அனைத்துக்கும் வாரிசு. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைக் கண்டுகொண்டதும், ஒரு விநாடியில் உலக அதிபதிகள் ஆகினீர்கள். அதற்கு நீண்டநேரம் எடுப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். உங்களை ஒரு பெண்ணாகக் கருத வேண்டாம். ஒவ்வோர் ஆத்மாவும் ஓர் ஆண் ஆவார். பாபா கூறுகின்றார்: நான் குழந்தைகள் அனைவரையும் நினைவுசெய்கின்றேன். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். வருகின்ற ஏனைய சமயத்தவர்கள் அனைவரும் கூறுகின்றார்கள்: அந்த அனைத்துச் சமயத்தவர்களும் சகோதரர்கள். எவ்வாறாயினும், அவர்கள் இதைப் புரிந்துகொள்வதில்லை. நீங்களே பாபாவின் அதி அன்புக்குரிய குழந்தைகள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். நிச்சயமாக நீங்கள் தந்தையிடமிருந்து உங்களுடைய முழுமையான எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவீர்கள். நீங்கள் அதை எவ்வாறு கோருவீர்கள்? குழந்தைகளாகிய நீங்கள் அதை ஒரு விநாடியில் நினைவுசெய்கின்றீர்கள். நாங்கள் சதோபிரதானாக இருந்தோம். பின்னர் நாங்கள் தமோபிரதான் ஆகினோம். நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகவேண்டும். நீங்கள் பாபாவிடமிருந்து உங்களின் சுவர்க்க சந்தோஷ ஆஸ்தியைக் கோர வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். சரீரங்கள் அழியக்கூடியவை. ஆத்மாவே தனது சரீரத்தை நீக்கிச் செல்கின்றார். அவர் சென்று, ஒரு புதிய சரீரத்தில் ஒரு கருப்பையில் பிரவேசிக்கின்றார். கரு தயாரானதும், அதில் ஆத்மா பிரவேசிக்கின்றார். எவ்வாறாயினும், அது இராவணனின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. விகாரங்களின் ஆதிக்கம் காரணமாக, ஆத்மா சிறையில் பிரவேசிக்கின்றார். அங்கு, இராவணன் இல்லை. அங்கு துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. உங்களுக்கு வயதாகும்பொழுது, நீங்கள் அச் சரீரத்தை நீக்கி, இன்னுமொரு சரீரத்தில் பிரவேசிப்பீர்கள் என்பதை அறிவீர்கள். அங்கு, பயம் என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கு, அதிக பயம் உள்ளது. அங்கு, நீங்கள் பயமற்றவர்களாக இருக்கின்றீர்கள். தந்தை எல்லையற்ற சந்தோஷத்துக்குள் குழந்தைகளாகிய உங்களை அழைத்துச் செல்கின்றார். சத்திய யுகத்தில் எல்லையற்ற சந்தோஷமும், கலியுகத்தில் எல்லையற்ற துன்பமும் உள்ளன. இதனாலேயே இது துன்ப பூமி என அழைக்கப்படுகின்றது. தந்தை உங்களுக்கு எச்சிரமத்தையும் கொடுப்பதில்லை. நீங்கள் வீட்டில் உங்களுடைய குடும்பத்துடன் வசித்து, உங்களுடைய குழந்தைகளைப் பராமரித்தாலும் கூட, தந்தையை நினைவுசெய்ய வேண்டும். குருமார்கள், புனிதர்கள் போன்றவர்கள் அனைவரையும் துறந்து விடுங்கள். நான் குருமார்கள் அனைவரிலும் மகத்துவமானவர். அவர்கள் அனைவரும் எனது படைப்புக்கள். என்னைத் தவிர, வேறெவருமே, தூய்மையாக்குபவர் என அழைக்கப்பட முடியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரரை நீங்கள் தூய்மையாக்குபவர் என அழைப்பீர்களா? இல்லை. தேவர்கள் கூட இவ்வாறு அழைக்கப்பட முடியாது. என்னைத் தவிர எவரும் இவ்வாறு அழைக்கப்பட முடியாது. குழந்தைகளாகிய நீங்கள், கங்கையைத் தூய்மையாக்குபவர் என அழைப்பீர்களா? அந்த நீராறுகள் எப்பொழுதும் ஒடிக் கொண்டிருக்கின்றன. கங்கை, பிரம்மாபுத்திரா முதலிய ஆறுகள் எப்பொழுதும் உள்ளன. மக்கள் எப்பொழுதும் அவற்றில் நீராடுகின்றார்கள். மழைபெய்யும்பொழுது, வெள்ளம் ஏற்படுகின்றது, அதுவும் துன்பமே. எல்லையற்ற துன்பம் உள்ளது. வெள்ளத்தில், எத்தனை பேர் மரணிக்கின்றார்கள் என்று பாருங்கள். சத்திய யுகத்தில், துன்பமென்ற கேள்விக்கே இடமில்லை. அங்கு மிருகங்களுக்கும் கூட துன்பம் கிடையாது. அவற்றுக்கு அகால மரணமும் கிடையாது. இந்நாடகம் இவ்வாறே உருவாக்கப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்தில் அவர்கள் பாடுகின்றார்கள்: பாபா, நீங்கள் வரும்பொழுது, நான் உங்களுக்கு மாத்திரம் உரியவனாகுவேன். அவர் வருகின்றார், இல்லையா? அவர் துன்ப பூமியின் இறுதிக்கும் சந்தோஷ பூமியின் ஆரம்பத்துக்கும் இடையில் வருகின்றார். எவ்வாறாயினும், இது எவருக்கும் தெரியாது. உலகின் ஆயுட்காலம் என்ன என்பது எவருக்கும் தெரியாது. தந்தை உங்களுக்கு அனைத்தையும் இலகுவாகக் கூறுகின்றார். உலகின் ஆயுட்காலம் 5000 வருடங்கள் என்பது உங்களுக்கு முன்னர் தெரியுமா? அது நூறாயிரம் வருடங்களென அந்த மக்கள் கூறுகின்றார்கள், ஆனால் ஒவ்வொரு யுகமும் 1250 வருடங்கள் எனத் தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். சுவாஸ்திகாவில் அவர்கள் மிகச்சரியாக 4 சம பாகங்களைக் காண்பிக்கின்றார்கள். அவற்றுக்கு இடையில் சிறிதளவு வித்தியாசமேனும் இருப்பதில்லை. ஒரு மிகச்சரியான கணக்கு இருக்க வேண்டும் என்றே பகுத்தறிவும் கூறுகின்றது. ஜெகந்நாத் புரியில், அவர்கள் ஒரு விசேட பானையில் சோறு சமைக்கும்பொழுது, அது இயல்பாகவே நான்கு சம பாகங்களாகப் பிரிகின்றன. அதைச் செய்வதற்கான ஒரு வழிமுறையை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். அங்கு மக்கள் அதிகளவு சோற்றை உண்கின்றார்கள். நீங்கள் ஜெகந்நாத் என்றோ அல்லது ஸ்ரீநாத் என்றோ அழைத்தாலும், அவை ஒன்றே. அவர்கள் இருவரையும் அவலட்சணமாக இவர்கள் காண்பிக்கிறார்கள். ஸ்ரீநாத் ஆலயத்தில், நெய்க் கலசங்களை வைத்திருப்பதால், நீங்கள் நெய்யில் வறுக்கப்பட்ட மிகச்சிறந்த போஷாக்குணவைப் பெறுகின்றீர்கள். அவை அனைத்தையும் விற்பதற்கு, அவர்கள் வெளியே கடைகளை வைத்துள்ளார்கள். அவர்கள் அங்கு மிகப் பெருமளவில் போக்கைப் படைக்கின்றார்கள். யாத்திரிகர்கள் அனைவரும் சென்று, கடைகளிலிருந்து அதை வாங்குகின்றார்கள். ஜெகந்நாத்தில் அவர்கள் சோற்றை மாத்திரம் தயாரிக்கின்றார்கள். ஒன்று ஜெகந்நாத், மற்றையது ஸ்ரீநாத் ஆகும். அவர்கள் சந்தோஷ பூமியையும், துன்ப பூமியையும் காண்பிக்கின்றார்கள். ஸ்ரீநாத் சந்தோஷ பூமிக்கும், மற்றையது (ஜெகந்நாத்) துன்ப பூமிக்கும் உரித்தானவை. மக்கள் காமச் சிதையில் அமர்ந்ததால், இந்நேரத்தில் அவலட்சணமானவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் ஜெகந்நாத்துக்குச் சோற்றையே போக்காகப் படைக்கின்றார்கள். ஒன்றை (ஜெகந்நாத்) ஏழையாகவும், மற்றையதை (ஸ்ரீநாத்) செல்வந்தம் மிக்கதாகவும் அவர்கள் காண்பிக்கின்றார்கள். ஒரு தந்தை மாத்திரம் ஞானக்கடல். பக்தியானது அறியாமை என அழைக்கப்படுகின்றது, நீங்கள் அதிலிருந்து எதையும் பெறுவதில்லை. அங்கு, குருமார்கள் பெரும் வருமானத்தைப் பெறுகின்றார்கள். ஒருவர் திறமைசாலியாக இருந்து, ஏனையோர் அவரிடமிருந்து எதையாவது கற்றால், அவர்கள் கூறுவார்கள்: இவரே எனது குரு, அவர் எனக்கு இதைக் கற்பித்தார். பிறவி எடுக்கின்ற அவர்கள் அனைவரும் பௌதீகமானவர்கள். இப்பொழுது உங்களுடன் இருப்பவர் யார்? சரீரமற்ற தந்தையே. அவர் கூறுகின்றார்: இது என்னுடைய சரீரமல்ல. இதுவே முழுமையான 84 பிறவிகளை எடுத்துள்ள, உங்களுடைய தாதாவின் சரீரம் ஆகும். உங்களைச் சந்தோஷ பூமிக்கு அழைத்துச் செல்லும்பொருட்டு, நான் இவருடைய பல பிறவிகளின் இறுதியில் இவரினுள் பிரவேசிக்கின்றேன். இவர் கௌமுக் (பசுவின் வாய்) எனவும் அழைக்கப்படுகின்றார். கௌமுக்கைப் பார்ப்பதற்கு, மிகத் தொலைவிலிருந்தும் மக்கள் வருகின்றார்கள். இங்கும் ஒரு கௌமுக் உள்ளது. நிச்சயமாக மலைகளிலிருந்தே தண்ணீர் வருகின்றது. ஒவ்வொரு நாளும் மலைகளிலிருந்து கிணற்றுக்குத் தண்ணீர் வருகின்றது. அது ஒருபொழுதும் ஓய்வதில்லை. தண்ணீர் தொடர்ந்தும் வருகின்றது. அருவிகள் எங்கிருந்து வந்தாலும், அவர்கள் அதைக் கங்கைநீர் என அழைக்கின்றார்கள். அவர்கள் அதைக் கங்கைநீர் என்று கருதிக் கொண்டு, நீராடுவதற்கு அங்கு செல்கின்றார்கள். எவ்வாறாயினும், அந்நீரினூடாக, எவரும் தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையானவர்களாக முடியாது. தந்தை கூறுகின்றார்: நானே தூய்மையாக்குபவர். ஓ! ஆத்மாக்களே, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! உங்களின் சரீரங்களையும், உங்களுடைய சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, என்னை நினைவுசெய்யுங்கள், அப்பொழுது உங்களுடைய பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். தந்தை உங்களைப் பல பிறவிகளின் பாவங்களிலிருந்து விடுவிக்கின்றார். இந்நேரத்தில், உலகிலுள்ள அனைவரும் தொடர்ந்தும் பாவம் செய்கின்றார்கள். கர்ம வேதனை உள்ளது. நீங்கள் அனைவரும் உங்களுடைய முற்பிறவிகளில் பாவம் செய்துள்ளீர்கள். 63 பிறவிகளின் கணக்குகள் உள்ளது. சந்திரனின் கலைகள் போன்று, சிறிதுசிறிதாக, உங்களுடைய கலைகள் தொடர்ந்தும் குறைவடைகின்றன. இதுவே எல்லையற்ற பகலும், இரவும் ஆகும். இப்பொழுது முழு உலகின் மீதும், குறிப்பாகப் பாரதத்தின் மீதும் இராகுவின் சகுனங்கள் உள்ளன. இராகுவின் கிரகணம் உள்ளது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அவலட்சணமானவர்களில் இருந்து அழகானவர்களாகிக் கொண்டிருக்கின்றீர்கள். இதனாலேயே ஸ்ரீ கிருஷ்ணரும் சியாம்சுந்தர் என அழைக்கப்படுகின்றார். அவர்கள் உண்மையிலேயே அவரை அவலட்சணமாகச் சித்தரித்துள்ளார்கள். அவர் காமச் சிதையில் அமர்ந்தார் என்கின்ற காரணத்தினால், அவர்கள் இந்த அடையாளத்தைக் காண்பித்துள்ளார்கள். எவ்வாறாயினும், மக்களின் புத்தி முற்றாகவே வேலை செய்வதில்லை. அவர்கள் சிலவேளைகளில் அவரை அழகானவராகவும், சிலவேளைகளில் அவலட்சணமானவராகவும் காண்பிக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது அழகானவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சதோபிரதான் ஆகுவதற்கு முயற்சி செய்யும்பொழுது மாத்திரம் அவ்வாறு ஆகுவீர்கள். இதில் சிரமம் என்னும் கேள்விக்கே இடமில்லை. நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைச் செவிமடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள், பின்னர் அது மறைந்து விடும். மக்கள் கீதையைக் கற்று, கூறினாலும் இந்த ஞானத்தை அவர்களால் கூறமுடியாது. அது பக்தி மார்க்கத்துக்கான சமயநூல் ஆகும். பக்தி மார்க்கத்துக்குரிய பல சம்பிரதாயங்களும், பல சமயநூல்களும்; உள்ளன. சிலர் சிலவற்றை வாசிக்கிறார்கள், ஏனையோர் வேறு எதையோ செய்கின்றார்கள். மக்கள் இராமரின் ஆலயத்துக்குச் செல்கின்றார்கள், அவர்கள் இராமரையும் அவலட்சணமானவராகக் காண்பித்துள்ளார்கள். அவர்கள் ஏன் அவர்களை அவலட்சணமாகக் காண்பிக்கின்றார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். கல்கத்தா காளியும் உள்ளார். அவர்கள் அவரை “மா, மா” (தாயே, தாயே) என்று ௮ழைத்து, விரக்தியை அனுபவம் செய்கின்றார்கள். அவரே அதி பயங்கரமானவர், அவர்கள் அவருடைய மிகப் பயங்கரமான ரூபத்தையும் காண்பிக்கின்றார்கள். அவர்கள் அவரை “தாயே” என அழைக்கின்றார்கள். உங்களிடம் இந்த ஞான அம்பும், ஞான வாளும் உள்ளதால், அவர்கள் அவரை ஆயுதங்களுடன் காண்பித்துள்ளார்கள். உண்மையில், முன்னர், அவர்கள் மக்களைக் காளிக்கு அர்ப்பணிப்பது வழக்கமாகும். அரசாங்கம் அதை நிறுத்திவிட்டது. முன்னர், சிந்தியில், அவர்கள் அந்தத் தேவிக்கு ஓர் ஆலயத்தை அமைத்திருக்கவில்லை. ஒரு குண்டு வெடித்தபொழுது, ஒரு பிராமணக் குருக்கள் கூறினார்: இங்கு தனக்கு ஓர் ஆலயம் இல்லை எனக் காளி கூறியுள்ளாள், அது மிக விரைவில் கட்டப்பட வேண்டும், இல்லையெனில், இன்னுமொரு குண்டு இங்கு வெடிக்கும். அவர்கள் பெருமளவு பணத்தைச் சேகரித்தனர். ஆலயமும் கட்டப்பட்டது. பாருங்கள், இப்பொழுது ஏராளமான ஆலயங்கள் உள்ளன! மக்கள் பல்வேறு இடங்களுக்கு அலைகின்றார்கள். அவ்விடயங்கள் அனைத்திலிருந்தும் உங்களை விடுவிக்கும்பொருட்டே தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் எவரையும் அவதூறு செய்வதில்லை. தந்தை உங்களுக்கு நாடகத்தையும், எவ்வாறு இவ்வுலகச் சக்கரம் உருவாக்கப்பட்டது என்பதையும் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் பார்த்துள்ளவை அனைத்தும் மீண்டும் தோன்றும். இப்பொழுது இல்லாத விடயங்களும் உருவாக்கப்படும். முன்னர் உங்களுடைய இராச்சியம் இருந்ததை இப்பொழுது நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். இப்பொழுது அதை நீங்கள் இழந்துள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவதற்கு விரும்பினால், முயற்சி செய்யுங்கள்! பக்தி மார்க்கத்தில் பல சமயக் கதைகளைச் செவிமடுத்து வந்தீர்கள். நீங்கள் அமரத்துவக் கதையைச் செவிமடுத்தீர்கள், ஆனால் எவராவது அமரத்துவமானவர்கள் ஆகினீர்களா? எவராவது ஞானமாகிய மூன்றாம் கண்ணைப் பெற்றார்களா? தந்தை இங்கமர்ந்திருந்து இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். அக்கண்களால் தீயவை எவற்றையும் பார்க்க வேண்டாம். அனைத்தையும் குற்றக் கண்களால் அல்லாது, குற்றமற்ற கண்களால் பாருங்கள். இப் பழைய உலகைப் பார்க்க வேண்டாம்‚ அது அழிக்கப்படவுள்ளது. தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களுக்கு 21 பிறவிகளுக்கான இராச்சியத்தைக் கொடுத்த பின்னர், நான் செல்லப் போகின்றேன். அங்கு, வேறு எவருடைய இராச்சியமும் இருக்காது. அங்கு துன்பத்தைப் பற்றிய குறிப்பே கிடையாது. அங்கு, நீங்கள் மிகவும் சந்தோஷமானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் இருக்கின்றீர்கள். இங்கு, மக்கள் பட்டினியால் மரணிக்கின்றார்கள். அங்கு, நீங்கள் முழு உலகையும் ஆட்சிசெய்கிறீர்கள். உங்களுக்குச் சிறிதளவு நிலமே தேவைப்படுகின்றது. முதலில் அது சிறிய பூந்தோட்டமாக இருந்து, பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து, கலியுக இறுதியில், மிகவும் பெரியதாக ஆகுகின்றது, ஐந்து விகாரங்களின் ஆதிக்கத்தின் காரணமாக, அது ஒரு முட்காடு ஆகுகின்றது. தந்தை கூறுகின்றார்: காமமே கொடிய எதிரி. அதன் ஆரம்பத்திலிருந்து மத்தியினூடாக இறுதிவரை நீங்கள் துன்பத்தை அடைகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் இந்த ஞானத்தையும், அந்தப் பக்தியையும் விளங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். விநாசம் உங்களின் முன்னிலையில் உள்ளது. ஆகவே, இப்பொழுது விரைவாக முயற்சி செய்யுங்கள். இல்லாவிடின், உங்களின் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதால் மாத்திரமே உங்களின் பாவங்கள் அழிக்கப்பட முடியும். ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். முன்னைய கல்பத்தில் முயற்சி செய்தவர்கள், நிச்சயம் அதை மீண்டும் செய்வார்கள். பின்தங்கி விடாதீர்கள்! ஒரேயொரு தந்தையைத் தவிர எவரையும் நினைவுசெய்ய வேண்டாம்! ஏனைய அனைவரும் உங்களுக்குத் துன்பத்தையே விளைவிக்கின்றார்கள். உங்களுக்குச் சதா சந்தோஷத்தைக் கொடுப்பவரை நினைவுசெய்யுங்கள். இதைப் பற்றிக் கவனயீனமாக இருக்க வேண்டாம்! நீங்கள் அவரை நினைவுசெய்யாது விட்டால், எவ்வாறு தூய்மையாகுவீர்கள்? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுடைய கண்களால் தீயவை எவற்றையும் பார்க்க வேண்டாம். தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ள குற்றமற்ற கண்ணாகிய, ஞானமாகிய மூன்றாவது கண்ணால் அனைத்தையும் பாருங்கள். சதோபிரதான் ஆகுவதற்கு, முழு முயற்சி செய்யுங்கள்.

2. உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் பராமரிக்கும் வேளையில் அனைவரிலும் அதி அன்பானவராகிய, தந்தையை நினைவுசெய்யுங்கள். இறுதியில், ஒரு தந்தையைத் தவிர எதையும் நினைவுசெய்யாத, அத்தகையதொரு ஸ்திதியை உருவாக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆதார ரூபமாக இருந்து, உங்கள் மேன்மையான மனோபாவம் மூலம் உலகின் சூழ்நிலையை மாற்றுவீர்களாக.

குழந்தைகளான நீங்கள் உங்களின் சொந்த வாழ்வுகளுக்கு மட்டும் ஆதாரம் அளிப்பதில்லை, ஆனால் உலகின் சகல ஆத்மாக்களுக்கும் ஆதார ரூபங்கள் ஆகுகின்றீர்கள். உங்கள் மேன்மையான மனோபாவத்தினால், உலகின் சூழ்நிலை மாற்றமடைகின்றது. உங்கள் தூய பார்வை மூலம் ஆத்மாக்கள், உலகின் சடப்பொருள் இரண்டும் தூய்மையாக்கப்படுகின்றன. உலகம் (சிருஷ்டி) உங்கள் பார்வையால் (திருஷ்டி) மாற்றமடைகின்றது. உங்கள் மேன்மையான செயல்களால் உலகம் மேன்மையாக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது அத்தகையதொரு பெரிய பொறுப்புக் கிரீடத்தை அணிந்துகொள்வதனால், எதிர்காலத்திலும் கிரீடத்தையும், சிம்மாசனத்தையும் பெறுவீர்கள்.

சுலோகம்:
சர்வசக்திவான் தந்தையை உங்கள் சகபாடியாக்கினால், எந்தத் தடைகளாலும் உங்களை நிறுத்த முடியாது.