24.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, சங்கமயுகத்தில் தந்தை ஞாபகப்படுத்துகின்ற விடயங்களைக் கடைந்தால், நீங்கள் சதா முகமலர்ச்சியுடன் இருப்பீர்கள்.

பாடல்:
சதா இலேசாக இருப்பதற்கான வழிமுறை யாது? நீங்கள் சந்தோஷமாக இருப்பதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை என்ன?

பதில்:
சதா இலேசாக இருப்பதற்கு, நீங்கள் இப்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தையும் அநாதியான சத்திரசிகிச்சை நிபுணரின் முன்னிலையில் ஒப்படைப்பதுடன், உங்கள் தலைமீதுள்ள, பிறவி பிறவியாக நீங்கள் செய்த பாவங்களுக்காக நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். நினைவினூடாக மாத்திரமே உங்கள் பாவங்கள் அழியும். அதன் பின்னர் சந்தோஷம் இருக்கும். தந்தையை நினைவு செய்வதனால் ஆத்மா சதோபிரதான் ஆகுவார்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்களே ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்திற்குரியவர்களாக இருந்தீர்கள் என்பதையும், நீங்களே இராச்சியத்தை ஆட்சி செய்ததுடன், உண்மையில் நீங்களே உலக அதிபதிகளாகவும் இருந்தீர்கள் என்பதும் உங்களுக்கு ஞாபகத்தில் உள்ளது. அந்நேரத்தில் வேறு எந்தச் சமயமும் இருக்கவில்லை. நாங்கள் சத்தியயுகத்தில் பிறவி எடுத்த பின்னர், 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்தோம். நாங்கள் இப்பொழுது முழு விருட்சத்தையும் நினைவு செய்கிறோம். தேவர்களாக இருந்த நாங்கள், இராவண இராச்சியத்திற்குள் வந்த பின்னர், தேவர்கள் என்று அழைப்பதற்குத் தகுதியற்றவர்கள் ஆகினோம். இதனாலேயே அவர்கள் அதனை வேறொரு சமயமாகக் கருதியுள்ளனர். வேறு எவரது சமயமும் மாறுவதில்லை. உதாரணமாக, கிறிஸ்துவின் சமயம் கிறிஸ்தவமும், புத்தரின் சமயம் பௌத்தமும் ஆகும். புத்தர் தனது சமயத்தை இன்ன நேரத்தில் ஸ்தாபித்தார் என்று அனைவரது புத்தியிலும் உள்ளது. இந்துக்களுக்கு தமது சமயத்தைப் பற்றியோ, தமது சமயம் எப்போது ஆரம்பித்ததென்றோ அல்லது அதனை ஸ்தாபித்தவர் யார் என்றோ தெரியாது. அவர்கள் நூறாயிரம் வருடங்கள் எனப் பேசுகின்றார்கள். குழந்தைகளாகிய உங்களிடம் மாத்திரமே முழு உலகச் சக்கரத்தின் ஞானமும் உள்ளது. இது கியான், விக்கியான் என்று அழைக்கப்படுகின்றது. அவர்கள் தமது கட்டடத்தை “விக்கியான் பவன்” என அழைத்திருந்தாலும், தந்தையே அதன் உண்மையான அர்த்தத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: அது ஞானமும், யோகமும் ஆகும். அதாவது படைப்பவரதும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானமும் ஆகும். நீங்கள் நாஸ்திகர்களாக இருந்தீர்கள் என்பதையேனும் அறியாதிருந்தீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொண்டுள்ளீர்கள். இந்த ஞானம் சத்தியயுகத்தில் இருக்க முடியாது. ஆசிரியரே இப்பொழுது உங்களுக்கு இதனைக் கற்பிக்கின்றார். நீங்கள் இதனைக் கற்று, உங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெறுகிறீர்கள், ஏனெனில் நீங்கள் வாழ்வதற்கு ஒரு புதிய உலகம் தேவை. தூய தேவர்கள் இப்பழைய பூமியில் கால் பதிக்க முடியாது. தந்தை வந்து உங்களுக்காக புதிய உலகை ஸ்தாபிப்பதுடன், பழைய உலகை அழிக்கின்றார். எங்களுக்காக விநாசம் நிச்சயமாக இடம்பெற வேண்டும். நாங்கள் இப்பாகத்தை ௧ல்பம் ௧ல்பமாக நடிக்கின்றோம். பாபா வினவுகின்றார்: நீங்கள் முன்பு எப்போதாவது என்னைச் சந்தித்துள்ளீர்களா? நீங்கள் பதிலளிக்கின்றீர்கள்: பாபா, எங்கள் இராச்சிய பாக்கியத்தை உங்களிடமிருந்து பெறுவதற்காக, நாங்கள் ஒவ்வொரு சக்கரமும் உங்களைச் சந்திக்கின்றோம். நாங்கள் எல்லையற்ற சந்தோஷமான எங்கள் இராச்சிய பாக்கியத்தை முன்னைய சக்கரத்திலும் பெற்றுள்ளோம். இப்பொழுது இவ்விடயங்கள் அனைத்தையும் நீங்கள் நினைவு செய்கிறீர்கள் என்பதால் அவற்றை நீங்கள் கடைய வேண்டும். இதனையே சுயதரிசனச் சக்கரம் என பாபா அழைக்கின்றார். முன்னர் நாங்கள் சதோபிரதானாக இருந்தோம். ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கென நடிப்பதற்கு ஒரு பாகத்தைக் கொண்டுள்ளார் என்பதை நீங்களும் நினைவு செய்கின்றீர்கள். நான் ஒரு சின்னஞ்சிறிய அழிவற்ற புள்ளி, ஆத்மாவாகிய எனது பாகம் அநாதியாகத் தொடர்கின்றது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது மீண்டும் இடம்பெறுகின்றது. புதிதாக எதனையும் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது. எவருமே அநாதியான முக்தியைப் பெறமுடியாது. சிலர் முக்தியை வேண்டுகின்றார்கள். முக்தி, மோட்சத்திலிருந்து வேறுபட்டது. இதனை நீங்கள் உங்கள் விழிப்புணர்வில் வைத்திருக்க வேண்டும். உங்கள் விழிப்புணர்வில் இதனை நீங்கள் வைத்திருந்தால், பிறருக்கும் இதனை நீங்கள் ஞாபகப்படுத்துவீர்கள். இதுவே உங்கள் தொழில் ஆகும். தந்தை உங்களுக்கு அறியத் தந்துள்ளவற்றை, நீங்கள் பிறருக்கு ஞாபகப்படுத்தினால், உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரமுடியும். உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதற்கு நீங்கள் அதிக முயற்சி செய்ய வேண்டும். பிரதான முயற்சி யோகத்திலேயே உள்ளது. இதுவே நினைவு யாத்திரையாகும். தந்தையைத் தவிர வேறு எவராலும் இதனைக் கற்பிக்க முடியாது. இப்பொழுது நீங்கள் மனிதரிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான கல்வியைக் கற்கின்றீர்கள். மீண்டும் ஒரு முறை நீங்கள் புதிய உலகிற்குச் செல்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதன் பெயர் அமரத்துவ பூமியாகும். ஆனால் இதுவோ மரணபூமியாகும். இங்கு மரணம் எங்கிருந்தாலும் சடுதியாக வரும். அங்கு மரணம் என்பதன் பெயரோ அல்லது அதன் சுவடோ இல்லை. ஏனெனில் மரணம் உண்மையில் ஆத்மாவிற்கு வருவதில்லை. மரணம் இனிப்பான ஒன்றல்ல. நாடகத்திற்கேற்ப, நேரம் வரும்போது, ஆத்மா பிரிந்து செல்கின்றார். ஆத்மா பிரிந்து செல்லவேண்டிய நேரம் வரும்போது, அவர் பிரிந்துவிடுகின்றார். எவராலும் மரணத்தை நிறுத்திவிட முடியாது. ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கிவிட்டு, இன்னொன்றை எடுக்கின்றார். மரணம் என்பது உண்மையில் எதுவுமேயில்லை, ஆனால் அவர்கள் பல கட்டுக்கதைகளை எழுதியுள்ளார்கள். அது அமரத்துவ பூமியாகும். அங்கு சரீரங்கள் நோயற்றிருக்கும். சத்திய யுகத்தில் பாரத மக்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் யோகிகளாக உள்ளனர். இப்பொழுது உங்களுக்கு யோகிகளுக்கும் போகிகளுக்கும் (இந்திரிய சுகத்தில் ஈடுபடுபவர்கள்) இடையில் உள்ள வேறுபாடு தெரியும். உங்கள் ஆயுட்காலம் இப்பொழுது அதிகரிக்கின்றது. நீங்கள் எந்தளவிற்கு யோகத்தில் நிலைத்திருக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்கள் பாவங்களும் அழிந்து ஒர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதுடன், உங்கள் ஆயுட்காலமும் நீடிக்கும். ஓர் அரசனும், அரசியும் தமது ஆயுட்காலம் முழுமையடைந்ததும், எவ்வாறு தமது சரீரத்தை நீக்குகிறார்களோ அவ்வாறே பிரஜைகளும் சரீரங்களை நீக்குகின்றார்கள். எனினும் அந்தஸ்தில் வித்தியாசம் உள்ளது. இப்பொழுது தந்தை உங்களுக்குக் கூறுகிறார்: சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுகின்ற குழந்தைகளுக்கே இந்த ஆபரணங்கள் உரியதாகும். வீட்டில் நீங்கள் குடும்பத்துடன் வாழ்ந்தாலும், தாமரை மலர் போல் வாழ்கின்றீர்கள். உங்களைத் தவிர வேறு எவராலும் இவ்வாறு வாழமுடியாது. இப்பிறவியில் நீங்கள் எவ்வளவு பாவங்களைச் செய்துள்ளீர்கள் என்பதையும் நீங்கள் நினைவு செய்கின்றீர்கள். இதனாலேயே பாபா கூறுகின்றார்: அவை அனைத்தையும் அநாதியான சத்திரசிகிச்சை நிபுணரின் முன்னிலையில் ஒப்படைத்தால் நீங்கள் இலேசாகி விடுவீர்கள். எனினும் நீங்கள் யோகம் செய்யவேண்டும். ஏனெனில் நீங்கள் பல பிறவிகளின் பாவங்களைச் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். யோகத்தின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன் நீங்கள் சந்தோஷமாகவும் இருப்பீர்கள். தந்தையின் நினைவின் மூலம் நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நினைவின் மூலமே நீங்கள் இவ்வாறு ஆகலாம் என்பதும் உங்களுக்குத் தெரியும் என்பதால் யார்தான் நினைவு செய்ய மாட்டார்கள்? எனினும் இது ஒரு யுத்தகளமும் ஆகும். மிக உயர்ந்த அந்தஸ்தை அடைவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து அதிமேலான ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பதை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதனைச் சக்கரம் சக்கரமாகப் பெறுகின்றீர்கள். பலரும் உங்களிடம் வருவார்கள். அவர்கள் வந்து மன்மனாபவ எனும் மகாமந்திரத்தை உங்களிடமிருந்து பெறுவார்கள். மன்மனாபவ என்பதன் அர்த்தம்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். இதுவே மகாத்மா ஆகுவதற்கான மகா மந்திரம் ஆகும். அம்மக்கள் மகாத்மாக்கள் அல்லர். உண்மையில், ஸ்ரீகிருஷ்ணரை ஒரு மகாத்மா எனலாம், ஏனெனில் அவர் தூய்மையானவர். தேவர்கள் எப்பொழுதும் தூய்மையானவர்கள். தேவர்கள் இல்லறப் பாதைக்குரியவர்கள். ஆனால் சந்நியாசிகள் துறவறப் பாதைக்குரியவர்கள். பெண்கள் அலைந்து திரிய முடியாது. இத்தீய விடயங்கள் அனைத்தும் இப்பொழுது கலியுகத்தில் இடம்பெறுகின்றன. அவர்கள் பெண்களைக்கூட சந்நியாசினிகளாக மாற்றி அவர்களையும் தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். எவ்வாறாயினும் அவர்களின் தூய்மையே பாரத்திற்கு ஆதாரமாக இருக்கின்றது. ஒரு பழைய கட்டடத்தை மீண்டும் புதிய தோற்றமுடையது ஆக்குவதற்கு வர்ணம் பூசுவது போன்று, அந்த சந்நியாசிகளும் அதற்கு (பாரதத்திற்கு) சிறிது வர்ணம் பூசி அதைச் சிறிதளவு பாதுகாக்கின்றனர். எனினும் தந்தை கூறுகின்றார்: அது வேறானதொரு சமயம், அவர்கள் தூய்மையாக இருக்கிறார்கள். பாரத பூமியில் மாத்திரமே தேவர்களுக்கென பல ஆலயங்கள் உள்ளதுடன் பக்தி போன்றனவும் அதிகளவில் உள்ளன. நீங்கள் கூறுவது போன்று அதுவும் ஒரு நாடகமே. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குத் தேவை. சிவனுக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்பெயர்களுக்கேற்ப அவருக்குப் பல ஆலயங்களும் தொடர்ந்து கட்டப்படுகின்றன. பல ஆலயங்கள் உள்ளன. அதிகளவு செலவு செய்யப்பட்ட போதிலும் அரைக்கல்பத்திற்கே அவர்கள் சந்தோஷத்தைப் பெறுகின்றார்கள். பெருந்தொகையான பணத்தைச் செலவிட்டுள்ளபோதிலும் விக்கிரங்கள் உடையவே செய்கின்றன. அங்கே ஆலயங்கள் போன்றவற்றிற்கான அவசியம் இல்லை. அரைக்கல்பத்திற்கு பக்தி நீடித்தது என்பதையும் அரைக்கல்பத்திற்கு பக்தி என்று எதுவுமே இருக்கவில்லை என்பதையும் நீங்கள் இப்போது நினைவு செய்கிறீர்கள். இந்தப் பல்வகை விருட்சத்தைப் பற்றித் தந்தை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார். கலியுகத்தின் கால எல்லை மாத்திரம் 40,000 வருடங்களாயின் கிறிஸ்தவம் போன்றவற்றின் காலஎல்லையும் அதிகரிக்க வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: கிறிஸ்தவ சமயத்திற்கு இந்த வரையறை உள்ளது. கிறிஸ்து இந்த நேரத்தில் வந்தார், இந்த சமயம் இந்த நேரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் எப்போது அவர்கள் செல்வார்கள்? அவர்களுக்கு அது தெரியாது. அவர்கள் சக்கரத்தின் கால எல்லையை நீடித்திருக்கிறார்கள். விநாசத்திற்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றது என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். அவர்களுடையது விஞ்ஞானம், உங்களுடையதோ மௌனம். நீங்கள் அதிகளவு மௌனத்திற்குள் செல்லும் அளவிற்கேற்ப, அவர்களும் விநாசத்திற்கான மிகச் சிறந்த பொருட்களைத் தொடர்ந்தும் அதிகளவு கண்டுபிடிப்பார்கள். அவர்கள் நாளுக்கு நாள் தொடர்ந்தும் மிகவும் தரமான பொருட்களைச் செய்வார்கள். தந்தை வந்து, புதிய உலகை உங்களுக்காக உருவாக்குகின்றார் என்ற சந்தோஷம் உங்களிடம் உள்ளது. எனவே நாங்கள் இந்தப் பழைய உலகில் இருக்கப் போவதில்லை. இது பாபாவின் அற்புதமாகும்! பாபா, சுவர்க்கத்தை நீங்கள் உருவாக்குவதும் மிக அற்புதமாகும்! இப்போது நீங்கள் இவை அனைத்தையும் நினைவு செய்கின்றீர்கள். அந்த மக்கள் படைப்பவரையோ, படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ அறியாதிருக்கின்றார்கள். அதனை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் அதிக ஞானோதயம் பெற்றுள்ளீர்கள். மக்கள் காரிருளில் உள்ளனர். அதில் வித்தியாசமுள்ளது. சற்குரு ஞானத் தைலத்தைத் தரும்போது, அறியாமை எனும் இருள் மறைந்துவிடுகிறது. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு ஞானத்தைப் பற்றித் தெரியாது. நீங்கள் இப்போது பக்தியைப் பற்றி அறிந்திருப்பதுடன், ஞானத்தைப் பற்றியும் அறிந்துள்ளீர்கள். எப்போது பக்தி ஆரம்பமாகி, அது எப்போது முடிவடையும் என்பது பற்றிய அனைத்தையும் நீங்கள் நினைவு செய்கிறீர்கள். எப்போது தந்தை ஞானத்தைக் கொடுத்தார், அது எப்போது முடிவடையும் என்பதனையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். அது வரிசைக்கிரமமானது. சிலர் பெருமளவு அறிந்துள்ளனர். மற்றவர்கள் சிறிதளவே பெற்றுள்ளார்கள். அதிகளவு அறிந்தவர்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். நீங்கள் இதனை நினைவு செய்தால் மட்டுமே, உங்களால் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். உங்களுக்கு விழிப்புணர்வு அற்புதமானது. உங்கள் புத்தி முன்னர் எவ்வாறு இருந்தது? பக்தியினாலும், மந்திரங்களை உச்சரிப்பதாலும், தபஸ்யாவினாலும், யாத்திரையினாலும், தலைவணங்குவதாலும் உங்கள் நெற்றி தேய்ந்துவிட்டது. பக்தியின் விழிப்புணர்வுக்கும், ஞானத்தின் விழிப்புணர்விற்கும் இடையில் பெருமளவு வித்தியாசமுள்ளது. ஆரம்பத்திலிருந்து நீங்கள் பக்தி செய்ததால் இப்போது நீங்கள் அதனைப் பற்றி அறிவீர்கள். நீங்களே சிவனை முதலில் வழிபட்டவர்களும், பின்னர் நீங்களே தேவர்களையும் வழிபட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். வேறு எவரும் இதனை நினைவு செய்யமாட்டார்கள். படைப்பின் ஆரம்பம், மத்தி இறுதியையும் பக்தி போன்றனவற்றையும் நீங்கள் நினைவு செய்கின்றீர்கள். அரைக்கல்பமாக நீங்கள் பக்தி செய்யும்போது, தொடர்ந்தும் நீங்கள் கீழே இறங்கினீர்கள். மலை போன்ற துன்பம் இன்னமும் வரவிருக்கின்றது. அவை வருவதற்கு முன்னர், குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரை மூலம் உங்கள் பாவங்களை அழிக்க முயற்சி செய்யவேண்டும். இதனையே நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றீர்கள். ஆயிரக்கணக்கானோர் உங்களிடம் வருவார்கள். இப்பாதையை உங்கள் சகோதர சகோதரிகளுக்குக் காட்ட முயற்சி செய்யுங்கள். இப்போது நீங்கள் ஞானத்தையும் பக்தியையும் நினைவு செய்கின்றீர்கள். இந்த நாடகம் முழுவதையும் நீங்கள் உங்கள் முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமமாக இப்பொழுது அறிகின்றீர்கள் என்பதே இதன் அர்த்தமாகும். அதனை ஒருவர் எவ்வளவு நன்றாக அறிந்துள்ளாரோ, அந்தளவிற்கு அவரால் அதனைப் பிறருக்கு விளங்கப்படுத்த முடியும். குழந்தைகளாகிய நீங்களே இதனை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். ‘மகன் தந்தையை வெளிப்படுத்துவார்’ என நினைவுகூரப்படுகின்றது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார், பின்னர் குழந்தைகளாகிய நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவீர்கள். நீங்கள் ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றீர்கள். இந்த ஞானம் பக்தியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. நினைவுகூரப்படுகிறது: ஒரேயொரு கடவுளே வந்து, பக்தர்கள் அனைவருக்கும் பலனைத் தருகின்றார். அனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகள். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகள் அனைவரையும் அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்கும் அழைத்துச் செல்கின்றேன். சக்கரம் சக்கரமாக, இந்த ஞானத்தை இப்பொழுதே நீங்கள் அறிகின்றீர்கள். அங்கே உங்களிடம் இந்த ஞானம் இருக்க மாட்டாது. நீங்கள் தூய்மையற்றவர்களாகி விட்டதால், உங்களைத் தூய்மையாக்குவதற்கு தந்தை உங்கள்மீது பெருமளவு முயற்சி செய்கின்றார். இதனாலேயே இது நினைவு கூரப்படுகின்றது: நான் என்னை உங்களுக்கு அர்பணிக்கின்றேன். நான் உங்களுக்காக என்னைத் தியாகம் செய்கின்றேன்… யாருக்கு? தந்தைக்காகும். பின்னர் தந்தை இவர் எவ்வாறு தன்னை அர்ப்பணித்தார் என்ற உதாரணத்தைத் தருகின்றார். இவ்வாறு உதாரணமாக இருப்பவரையே நீங்கள் பின்பற்ற வேண்டும். அவர்கள் பின்னர் இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றார்கள். நீங்கள் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு, அவர்கள் செய்தது போன்று நீங்களும் உங்களை அர்ப்பணிக்க வேண்டும். செல்வந்தர்களால் தங்களை ஒருபோதும் அர்ப்பணிக்க முடியாது. இங்கு நீங்கள் அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும். செல்வந்தர்கள் நிச்சயமாகத் தங்கள் செல்வத்தை நினைவு செய்கின்றார்கள். ‘தனது மனைவியை இறுதியில் நினைவு செய்பவர்கள்…’ என்பது நினைவு கூரப்பட்டுள்ளது. அப்பணத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எவருமே எதனையும் எடுத்துச்செல்ல முடியாது, ஏனெனில் அனைத்தும் அழியப்போகின்றது. நான் உங்களிடமிருந்து எடுப்பவைகளை வைத்திருந்து, நான் என்ன செய்ய முடியும்? சரீரம் உட்பட அனைத்தும் அழியவுள்ளது. நீங்கள் மரணித்த பின்னர், உலகமும் உங்களுக்கு மரணித்து விடும். அந்தச் செல்வம் போன்ற எதுவுமே எஞ்சி இருக்காது. கருட புராணத்தில், அவர்கள் பயங்கரமான கதைகளை மக்களைப் பயப்படுத்துவதற்காகக் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அந்தப் புராணங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்துக்குரியவை. இராவண ஆட்சியின் போது, அரைக் கல்பத்திற்கு பக்தி மார்க்கம் தொடர்கின்றது. எப்போது இராவணனை எரிக்கத் தொடங்கினீர்கள் என்று எவரையாவது கேட்டால், தொன்றுதொட்ட காலத்தில் இருந்து எனக் கூறுவார்கள்! ஓ! ஆனால் இராவணன் தொன்றுதொட்ட காலம் முதல் இருக்கவில்லை. அவர்கள் அறியாதிருப்பதால், தொன்றுதொட்ட காலம் முதல் எனக் கூறுகின்றார்கள்! குழந்தைகளாகிய நீங்கள் இராவண இராச்சியம் எப்போது ஆரம்பமாகியது என்பதை இப்பொழுது நினைவு செய்கிறீர்கள். படைப்பவரதும், படைப்பினதும் இரகசியங்களையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை இப்போது கூறுகின்றார்: குழந்தைகளே, சதா என்னை மாத்திரம் நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிந்து விடும். தொடர்ந்தும் இவ்விதமாக ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்யுங்கள். நீங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து நடந்து செல்லும்போது, உங்கள் மத்தியில் இவ்விடயங்களைப் பற்றிப் பேசுங்கள். முழுக் குழுவினரும் இந்த நினைவு ஸ்திதியில் நடந்து சென்றால், உங்கள் மௌனம் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும். பாதிரிமார்களும் கிறிஸ்துவின் நினைவில் முழுமையான மௌனத்தில் நடந்து செல்லும்போது. அவர்கள் எவரையும் பார்க்கக்கூட மாட்டார்கள். இங்கே, லௌகீக வியாபாரம் போன்ற எதுவும் உங்களுக்கு இல்லாததால், உங்களால் பெருமளவு நினைவில் நிலைத்திருக்க முடியும். சூழல் மிகவும் நல்லது. வெளியில் சூழல் மிகவும் அசுத்தமாக உள்ளது. இதனாலேயே சந்நியாசிகளின் ஆச்சிரமங்கள் வெகுதொலைவில் உள்ளன. உங்களுடையது எல்லையற்ற துறவறமாகும். பழைய உலகம் முடிவடையப் போகின்றது. இது இடுகாடு. இதுவே தேவதைகளின் பூமியாகப் போகின்றது. அங்கு இரத்தினங்களும் வைரங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகள் இருக்கும். இலக்ஷ்மி நாராயணன் தேவதைகளின் பூமியின் அதிபதிகளாக இருந்தார்கள். இப்போது அவர்கள் அவ்வாறில்லை. தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு சக்கரத்திலும் சங்கமயுகத்தில் வருகின்றேன். இந்த முழுச் சக்கரமும் மீண்டும் மீண்டும் தொடரும். தந்தை நினைவுபடுத்துவதால் நீங்கள் இந்நேரத்தில் அனைத்தையும் நினைவு செய்கின்றீர்கள். முன்னர், இவை எதுவுமே உங்கள் புத்தியில் இருக்கவில்லை. நீங்கள் இந்த விழிப்புணர்வின் போதையில் இருக்கும்போது, உங்களால் மற்றவர்களுக்கு இதனை சந்தோஷத்துடன் விளங்கப்படுத்த முடியும். நீங்கள் இந்த விழிப்புணர்வைப் பேணியவாறே உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். அச்சா.

எப்பொழுதும் இவ்விழிப்புணர்வின் போதையில் இருக்கின்ற, இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளுக்கு, உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி என்பவற்றை மிக நன்றாகப் புரிந்துகொண்டு, அதனை உங்கள் விழிப்புணர்வில் கொண்டிருந்து, மற்றவர்களுக்கும் ஞாபகப்படுத்துங்கள். ஞானத் தைலத்தை வழங்கி, அறியாமை எனும் இருளை அகற்றுங்கள்.

2. தந்தை பிரம்மாவைப் போன்று முழுமையாக உங்களை அர்ப்பணிப்பதற்கு, முழுமையாக அவரைப் பின்பற்றுங்கள். உங்கள் சரீரம் உட்பட அனைத்துமே அழியப்போகின்றது. ஆகவே, இறுதிக் கணத்தில் எதனையும் நினைவு செய்யாதிருக்க முன்னேற்பாடாக மரணித்து வாழுங்கள்.

ஆசீர்வாதம்:
மரணித்து வாழ்வதால், சாதாரணமானதை முடித்து விசேட சம்ஸ்காரங்களை உங்கள் இயல்பான சுபாவமாக ஆக்குவீர்களாக.

ஒருவருக்கு என்னென்ன சுபாவங்கள் உள்ளனவோ அவை இயல்பாகவே வெளிப்படும். நீங்கள் எதனையும் யோசிக்கவோ அல்லது எதனையும் ஆக்கவோ அல்லது எதனையும் செய்யவோ வேண்டியதில்லை. ஏனெனில் அது இயல்பாகவே நடக்கும். அவ்வாறே, மரணித்து வாழ்வதன் மூலம் புதுப்பிறவியை எடுத்திருக்கும் பிராமணர்களின் சுபாவங்கள், விசேட ஆத்மாக்களின் சிறப்பியல்புகளாக இருக்கும். அந்த சிறப்பியல்புகளின் சம்ஸ்காரங்கள் உங்களுடைய இயல்பான சுபாவமாக இருக்கட்டும். அப்பொழுது ஒவ்வொருவரின் இதயத்திலிருந்தும் வெளிப்படும்: இதுவே எனது சுபாவம். சாதாரணமாக இருப்பது கடந்தகால சுபாவமாகும். அது தற்போதையது அல்ல. ஏனெனில் நீங்கள் இப்பொழுது புதுப்பிறவி எடுத்திருக்கிறீர்கள். உங்களுடைய புதுப்பிறவியின் சுபாவம், சிறப்பியல்களை கொண்டதே அன்றி சாதாரணமானது அல்ல.

சுலோகம்:
கற்களுடன் அல்லாது சதா ஞான இரத்தினங்களுடன் விளையாடுபவர்களே இராஜரீகமானவர்கள் ஆவார்கள்.