25.08.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    04.11.2001     Om Shanti     Madhuban


சத்தியமானவர் ஆகுங்கள். காலத்திற்கேற்ப, உங்களின் மனோபாவம், பார்வை, செயல்களை எல்லையற்றவை ஆக்குவதற்காக திடசங்கற்பமான எண்ணம் என்ற தீபத்தை ஏற்றுங்கள்.


இன்று, அன்புக்கடலான பாப்தாதா, தனது அதிகபட்ச அன்பான, நீண்ட காலம் தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்ட இனிமையிலும் இனிமையான குழந்தைகளைச் சந்திக்க வந்துள்ளார். நீங்கள் எல்லோரும் ஒரு சந்திப்பைக் கொண்டாட வந்துள்ளீர்கள்தானே? நீங்கள் ஓடோடி வந்துள்ளீர்கள். எனவே, பாப்தாதாவும் குழந்தைகளான உங்களைச் சந்திக்க ஓடோடி வந்துள்ளார். நீங்கள் எல்லோரும் இந்த உலகில் இருந்து வந்துள்ளீர்கள். பாப்தாதா, அப்பாலுள்ள இடத்தில் இருந்தும் சூட்சும உலகில் இருந்தும் வந்துள்ளார். எனவே, யார் மிகத் தொலைவில் இருந்து வந்திருப்பது? யார் மிகத் தொலைவில் வசிப்பது? இரட்டை வெளிநாட்டவர்கள் மிகத் தொலைவில் வசிக்கிறார்களா? இல்லை. தந்தையே எல்லோரிலும் மிகத் தொலைவில் வசிக்கிறார். அவர் மிகத் தொலைவில் வசிக்கிறார். இந்த வேளை, பாப்தாதா இரட்டை வெளிநாட்டு மற்றும் பாரதவாசிக் குழந்தைகளையிட்டு ஒரு விடயத்தில் மிகவும் பெருமை அடைகிறார். பாபா எதையிட்டுப் பெருமை அடைகிறார்? பாபாவிற்குச் சொல்லுங்கள்! குழந்தைகளின் தைரியத்தைப் பார்க்கும்போது, குறிப்பாக இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளின் தைரியத்தைப் பார்க்கும்போது, சந்தர்ப்பம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், நீங்கள் இங்கே தந்தையைச் சந்திக்க வந்துவிடுகிறீர்கள் என்பதைப் பார்த்து பாப்தாதா மிகவும் பெருமை அடைகிறார். நீங்கள் இங்கே வந்துவிட்டீர்கள். உங்களுக்கு நாடகத்தின் விளையாட்டுக் காட்டப்பட்டது. ஆனால், தந்தையும் குழந்தைகளும் சந்திப்பதை நாடகத்தாலும் தடுக்க முடியவில்லை. ஆகவே, குறிப்பாக இத்தகைய தைரியத்தைக் கொண்டுள்ள குழந்தைகளின் மீது பாப்தாதா ஆசீர்வாதங்களைப் பொழிகிறார்.

இன்று, இந்தக்கணத்தில், குழந்தைகளான நீங்கள் எவரும் நீங்கள் விரும்பிய ஆசீர்வாதத்தை உங்களால் பெற முடியும். நீங்கள் அதை இலகுவாகப் பெறுவீர்கள். ஆனால், நீங்கள் மீண்டும் மீண்டும் இந்த ஆசீர்வாதத்தை அமிர்தவேளையிலும் உங்களின் கர்மயோகி ஸ்திதியிலும் உங்களின் இதயத்தில் நினைக்க வேண்டும். மனச்சோர்வு அடையாதீர்கள். நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளீர்கள். பௌதீகக் கண்களின் மத்தியில் சதா என்ன பிரகாசிக்கிறது? எல்லோருடைய கண்களின் மத்தியிலும் என்ன பிரகாசிக்கிறது? எனவே, உங்களின் கண்ணின் மணி சதா பிரகாசிக்கிறதா? அதேபோல், சதா புள்ளியான தந்தையை உங்களின் கண்களில் வைத்திருங்கள். உங்களால் இதைச் செய்ய முடியும்தானே? அல்லது, இது கடினமா? (இது இலகுவானது) எனவே, பௌதீகப் புள்ளி நிலையாக இருப்பதைப் போல், புள்ளியான தந்தையும் சதா உங்களின் கண்களில் கலந்திருக்க வேண்டும். நீங்கள் அவரை உங்களுக்குள் கலந்துவிட்டீர்களா? அவர் அவற்றில் பொருந்தியிருக்கிறாரா? அவர் வெளியே வரமாட்டார்தானே? புள்ளியான தந்தை சதா உங்களின் கண்களில் அமிழ்ந்திருப்பாராயின், உங்களின் கண்கள் எதனாலும் கவரப்பட மாட்டாது. நீங்கள் சிரமப்படுவதில் இருந்து விடுபடுவீர்கள். உங்களின் பார்வை வேறெந்தத் திசையிலும் செல்லாது. நீங்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பீர்கள். என்னதான் நடந்தாலும், புள்ளியான தந்தை சதா உங்களின் கண்களில் அமிழ்ந்திருக்க வேண்டும். அவர் சதா உங்களின் கண்களில் அமிழ்ந்திருந்தால், அவர் மட்டுமே சதா உங்களின் இதயத்தில் அமிழ்ந்திருப்பார். எனவே, பாப்தாதாவை உங்களின் இதயத்திலும் கண்களிலும் அமிழ்த்துவதே, பிரபுவான அவரை மகிழ்விப்பதற்கான வழிமுறையாகும். பிரபுவான பாப்தாதா மகிழ்ந்தார் என நீங்கள் நினைக்கிறீர்களா? பிரபு உங்களுடன் மகிழ்ச்சி அடைந்தார் என நீங்கள் நினைக்கிறீர்களா? எத்தனை சதவீதம்? (சிலர் 99 சதவீதம் எனக் கூறினார்கள். சிலர் 75 சதவீதம் எனக் கூறினார்கள்) உங்களுக்கு நன்றி! பாப்தாதாவை மகிழ்விப்பது மிகவும் இலகுவானது. பாப்தாதாவை மகிழ்விப்பதற்கான இலகுவான வழிமுறை, நேர்மையான இதயத்தைக் கொண்டிருப்பதாகும். நேர்மையான இதயத்தையிட்டு பிரபு மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வொரு செயலிலும் உண்மையுள்ளவராக இருங்கள். சத்தியம் மகத்தானது. நேர்மையான இதயத்தைக் கொண்டிருப்பவர்கள், தமது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் சகல இரகசியங்களையும் சதா புரிந்து கொள்வார்கள்(ராஸ்யுக்த்). அதாவது, அவர்கள் இரகசியங்களைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படுவார்கள். நீங்கள் ராஸ்யுக்தாக இருப்பதுடன் எந்தளவிற்கு நீங்கள் ராஸ்யுக்தாக இருக்கிறீர்கள் என்பதை இனங்கண்டு கொள்வதன் அடையாளம் என்னவென்றால், இரகசியங்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களின் சொந்த ஸ்திதியால் நீங்கள் ஒருபோதும் குழப்பம் அடைய மாட்டீர்கள். அதாவது, நீங்கள் ஒருபோதும் மனச்சோர்வடைய மாட்டீர்கள். உங்களின் எண்ணங்களாலும் மனோபாவத்தாலும் விழிப்புணர்வாலும் அல்லது பார்வையாலும் நீங்கள் எவரையும் குழப்ப மாட்டீர்கள். ஏன்? தமது சொந்த சுபாவத்தையும் சம்ஸ்காரங்களையும் அத்துடன் மற்றவர்களின் சுபாவத்தையும் சம்ஸ்காரங்களையும் அறிந்து கொள்பவர்கள், ராஸ்யுக்த் ஆவார்கள். ஆகவே, தந்தையை மகிழ்விப்பதற்கான வழிமுறை, ராஸ்யுக்தாக இருந்தவண்ணம் செயல்படுவதாகும். ராஸ்யுக்த் என்றால், உங்களுடனும் குழப்பம் அடையக்கூடாது. மற்றவர்களையும் குழப்பக்கூடாது.

காலத்திற்கேற்ப, சதா உங்களின் மனதையும் புத்தியையும் உங்களின் கனவுகளில்கூடத் தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருங்கள். சில குழந்தைகள் தமது இதயபூர்வமான சம்பாஷணைகளில் சொல்கிறார்கள்: பாப்தாதா சக்திகளை வழங்குகிறார். ஆனால், அந்த சக்திகள் சரியான நேரத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. சகல குழந்தைகளுடனும் சகபாடியாக இருக்கும் குறிப்பிட்ட உறவுமுறையைக் கொண்டிருப்பதன் மூலம், பாப்தாதா குறிப்பாக இத்தகைய வேளையில் மேலதிக உதவியை வழங்குகிறார். ஏன்? குழந்தைகளான உங்களைச் சம்பூரணமாக்கி, தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்லும் பொறுப்பு தந்தையினுடையதாகும். தந்தையே அதற்குப் பொறுப்பு. ஆகவே, இத்தகைய வேளையில் தந்தை குறிப்பாகத் தனது பொறுப்பை நிறைவேற்றுகிறார். ஆனால், சிலவேளைகளில், குழந்தைகளின் மனங்களின் பிடிக்கும் சக்தியின் ஆளி, நிறுத்தப்பட்டு விடுகிறது. அப்போது, தந்தையால் என்ன செய்ய முடியும்? தந்தை அந்த ஆளியைப் போடுவதற்கு முயற்சி செய்கிறார். ஆனால் அதற்கு நேரம் எடுக்கிறது. இதனாலேயே, அந்த ஆளியைப் போட்டதும், ‘நான் அதைச் செய்திருக்கக்கூடாது, ஆனால் அது நடந்துவிட்டது!’ என நீங்கள் சொல்கிறீர்கள். ஆகவே, சதா உங்களின் பிடித்துக் கொள்ளும் சக்தியின் ஆளியைப் போட்டு வைத்திருங்கள். இதை நீங்கள் உங்களின் தொடுகை சக்தி என்றும் பிடித்துக் கொள்ளும் சக்தி என்றும் குறிப்பிடுகிறீர்கள். மாயை அந்த ஆளியை நிறுத்த முயற்சி செய்கிறாள். அவள் அதை ஒரு விநாடியில் நிறுத்திவிட்டுச் சென்றுவிடுகிறாள். ஆகவே, காலத்தின் இக்கட்டான நிலை அதிகரிக்கிறது. அது மேலும் அதிகரிக்கும். நீங்கள் பயப்படவில்லைத்தானே? பாப்தாதா முன்னரும் உங்களைக் கேட்டார்: நீங்கள் ஏன் இந்த வருடத்தைக் கொண்டாடினீர்கள்? எந்த வருடத்தை நீங்கள் கொண்டாடினீர்கள்? உங்களின் சம்ஸ்காரங்களை மாற்றுவதன் மூலம் உலகை மாற்றுதல். இது உறுதியா? நீங்கள் அதைக் கொண்டாடினீர்கள்தானே? அல்லது, நீங்கள் அதை மறந்து விட்டீர்களா? (நாம் அதைக் கொண்டாடுகிறோம்) எனவே, குழந்தைகளுக்கு மாற்றத்திற்கான உறுதியான எண்ணம் இருப்பதனால், இயற்கையும் தந்தையைக் கேட்கிறது: நான் சுத்தம் செய்வதற்கான ஆயத்தங்களைச் செய்தாலும், சுத்தம் செய்வதற்குக் கருவிகளாக இருப்பவர்கள், எல்லாவற்றையும் செய்யும்போதும் எண்ணங்களைக் கொண்டிருக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதைச் செய்வதா வேண்டாமா என அவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் - எல்லாவற்றையும் விரைவாகச் செய்வதா அல்லது மெதுவாகச் செய்வதா என்று நினைக்கிறார்கள். எனவே, நான் என்ன செய்வது? இயற்கை கேட்பதனால், பாப்தாதா இயற்கைக்கு என்ன பதில் அளிப்பது? இரட்டை வெளிநாட்டவர்களே, பேசுங்கள்! (நாம் சிறிது காத்திருப்போம்.) அது நல்ல பதில் இல்லை. இரட்டை வெளிநாட்டவர்கள் சிறிது காலம் காத்திருந்தால், அவர்களால் விமானத்தைப் பிடிக்க முடியாமல் போய்விடும். இப்போது உங்களால் விமானத்தைப் பிடிக்க முடிந்தது. விமானத்தில் வரும்போது நீங்கள் தூங்கினீர்கள்தானே? நீங்கள் இங்கே சௌகரியமாக வந்தீர்கள்தானே? முழு ஒன்றுகூடலிலும், இங்கே வரும்போது யாருக்காவது ஏதாவது சிரமம் இருந்ததா? உங்களின் கைகளை உயர்த்துங்கள். (தமது விமானம் பறக்காமல் திரும்பி வந்தது என ஒருவர் கூறினார்.) நீங்கள் உரிய நேரத்தில் வந்தீர்கள். அது தைரியத்திற்குரிய விடயமாகும். சிறிது பயந்தவர்கள், அங்கேயே இருந்துவிட்டார்கள். நீங்கள் வரவேண்டும் என்ற திடசங்கற்பமான எண்ணம் உங்களுக்கு இருந்தது. அதனால் நீங்கள் இங்கே வந்து சேர்ந்தீர்கள். ஒரேயொரு விமானமே திரும்பிச் சென்றது. அவ்வளவுதான்! அது பரவாயில்லை. அவர்கள் பின்னர் இதைவிடச் சிறந்ததைப் பெறுவார்கள். இப்போது, நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, இயற்கையும் சுத்தப்படுத்துபவர்களும் அதிக எண்ணங்களை ஏற்படுத்த வைக்காதீர்கள். ஏனென்றால், இப்போதும், ஸ்தாபனையைச் செய்பவர்களுக்கு சிலவேளைகளில் பல எண்ணங்கள் தோன்றுகின்றன: நாம் என்ன செய்வது? நாம் இப்படிச் செய்வோமா? நாம் இப்படி அதைச் செய்ய வேண்டுமா? நாம் அதைச் செய்ய வேண்டாமா? அது சரியாக இருக்குமா இல்லையா? அது மிகத் தெளிவாக இருக்க வேண்டும்: ஆம் அல்லது இல்லை. எது சரி என்றும் எது பிழை என்றும் அது தெளிவாக இருக்க வேண்டும். ஆகவே, இந்த வருடம் நீங்கள் கொண்டாடுவதனால், இயற்கையும் ஆயத்தங்களைச் செய்யும். அது இப்போதும் அதைச் செய்கிறது. எவ்வாறாயினும், ஸ்தாபனைக்குக் கருவிகளாக இருக்கும் ஆத்மாக்கள், சுயத்தை அல்லது மற்றவர்களைப் பொறுத்தவரை எதைப் பற்றியும் சிந்திப்பதற்கு நேரம் எடுக்கக்கூடாது. நீங்கள் ஒரு விநாடியில் தெளிவான தொடுகைகளைப் பெற வேண்டும். ஒரு புள்ளி வைப்பதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? (ஒரு விநாடி). உங்களின் நடைமுறை வாழ்க்கையில் நீங்கள் ஒரு புள்ளி வைக்கும்போது, அதற்கு ஒரு விநாடி எடுக்கிறதா? எந்தவொரு சூழ்நிலைக்கும் ஒரு புள்ளி (முற்றுப்புள்ளி) வைப்பதற்கு அல்லது ஒரு புள்ளி என்ற ஸ்திதியில் ஸ்திரமாகுவதற்கு ஒரு விநாடி எடுக்கிறதா? அதற்கு ஒரு விநாடி எடுக்கிறதா? நடைமுறையில், அதற்கு ஒரு விநாடியிலும் குறைந்த நேரம் எடுக்கிறதா? உதாரணமாக, ஒரு சூழ்நிலை உங்களுக்கு முன்னால் வரும்போது, அதற்கு ஒரு புள்ளி வைப்பதற்கு உங்களுக்கு ஒரு விநாடி எடுக்குமா? பாண்டவர்களே, அதற்கு ஒரு விநாடி எடுக்குமா? (சிலவேளைகளில்) ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பாண்டவர்களுக்கு நேரம் எடுக்கிறது! அவர்கள் எல்லோரும் (சக்திகள்) அதற்கு ஒரு விநாடியே எடுப்பதாகச் சொல்கிறார்கள். சக்திகளுக்கு அந்த சக்தி உள்ளதா? (பாண்டவர்கள் சத்தியத்தையே கூறுகிறார்கள்) இல்லை, இருவரும் உண்மையே பேசுகிறார்கள். ஏனென்றால், இப்போது அவர்களால் ஒரு புள்ளியை வைக்கக்கூடியதாக இருக்கும். உங்களால் இப்போது ஒரு புள்ளியை வைக்க முடியாமலிருக்கும். ஆகவே, ஒரு வேறுபாடு காணப்படுகிறது. மற்றும்படி, எல்லோரும் உண்மையாகவே இருக்கிறார்கள். நீங்கள் நேர்மையான இதயங்களைக் கொண்டிருப்பவர்கள். அச்சா.

மண்டபம் நிறைந்துள்ளது. மக்கள் கீழேயும் அமர்ந்துள்ளார்கள். ஆனால் அவர்கள் பாப்தாதாவின் முன்னாலேயே இருக்கிறார்கள். (ஹிஸ்ரி மண்டபத்திலும் தியான மண்டபத்திலும் அமர்ந்திருக்கிறார்கள்) எவ்வாறாயினும், இந்த நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள், அமர்ந்திருந்து, பாப்தாதா மதுவனத்திற்கு வந்துள்ளார் என நினைவு செய்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் தமது தொலைநோக்குப் பார்வை என்ற பைனாகுலர்களால் பார்க்கிறார்கள். அவர்களும் இப்போது பாப்தாதாவின் முன்னால் வருகிறார்கள். தொலைவில் அமர்ந்திருந்தாலும், அவர்களின் மனங்களால் அவர்கள் மதுவனத்திலேயே இருக்கிறார்கள். உங்களின் இந்த வசதிகள், பௌதீக உலகின் வசதிகள் தளம்பல் அடையக்கூடும். ஆனால், இந்த ஆன்மீகத் தொலைநோக்குப் பார்வை ஒருபோதும் பாழாகாது. பாப்தாதாவால் எங்கும் உள்ள, சகல நிலையங்களிலும் உள்ள குழந்தைகள் எல்லோரையும் தனக்கு முன்னால் பார்க்க முடிகிறது. அச்சா.

நீங்கள் தீபாவளியைக் கொண்டாடினீர்களா? சங்கமயுகம், கொண்டாடுவதற்கான யுகமாகும். நீங்கள் அகநோக்குடையவராகி, அதீந்திரிய சுகத்தின் களிப்பில் கொண்டாடினாலென்ன, சேவை செய்வதில் மகாதானிகள் ஆகி, ஆத்மாக்களுக்கு மகாதானத்தை வழங்குவதன் மூலம் கொண்டாடினாலென்ன, உங்களுக்குள்ளே இதயபூர்வமான சம்பாஷணை செய்தாலென்ன, நீங்கள் நடனம் ஆடியவண்ணம், மற்றவர்களுடன் உறவுமுறையிலும் தொடர்பிலும் வரும்போது, ஒருவர் மற்றவரின் சிறப்பியல்புகளைப் பார்த்தாலென்ன, அவர்களின் சிறப்பியல்புகளின் நறுமணத்தை எடுத்துக் கொண்டாலென்ன, அது ஒரு தொடர்ச்சியான கொண்டாட்டம் ஆகும். இழப்பிற்கான நேரம் இப்போது முடிவிற்கு வந்துவிட்டது. இது இழப்பதற்கான யுகம் இல்லையல்லவா? இது இப்போது கொண்டாடுவதற்கும் சம்பாதிப்பதற்குமான யுகமாகும். இது சேமிப்பதற்கான யுகமாகும். எனவே, குழந்தைகளான நீங்கள் கொண்டாடுகிறீர்களா என பாப்தாதா சதா பார்க்கிறார். ஏனென்றால், நீங்கள் ஏதாவதொரு வழிமுறையில் கொண்டாட வேண்டும். ஏனென்றால், சங்கமயுகத்தில் உங்களிடம் இழக்கின்ற மற்றும் கொண்டாடுகின்ற இரண்டின் ஞானமும் உள்ளன. இதனாலேயே, நீங்கள் எதையாவது தொலைத்த பின்னர் கொண்டாடுவதில் அர்த்தம் உள்ளது. இப்போது, இழப்பதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். நிறுத்துங்கள்! எதையும் இழக்காதீர்கள்! ஓர் எண்ணத்தையேனும் வீணாக்காதீர்கள். சம்பாதிக்கும் வேளையில் நீங்கள் இழந்தால், எப்போதுதான் நீங்கள் சம்பாதிப்பீர்கள்? அதன்பின்னர் உங்களுக்கு நேரமே கிடைக்காது. உங்களிடம் உள்ள பொக்கிஷங்கள் அனைத்திலும் மிகப் பெரிய பொக்கிஷம் என்னவென்று சோதித்துப் பாருங்கள். எண்ணங்கள், நேரம், இந்த ஞானம் என்ற பொக்கிஷங்கள் உங்களின் நடைமுறை வாழ்க்கையில் வரவேண்டும். இந்த ஞானத்தைக் கேட்பதும் அதைக் கூறுவதும் முதல் நிலையாகும். எவ்வாறாயினும், கியான் என்றால் இந்த ஞானம் என்று அர்த்தம். இந்த ஞானம் என்னவென்று நீங்கள் சொல்வீர்கள்? இந்த ஞானம் ஒளியும் சக்தியும் ஆகும். நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்தானே? எனவே, கியான் மற்றும் இந்த ஞானம் என்பதன் அர்த்தம், உங்களின் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் ஒளியும் சக்தியும் இருக்கும்போது, நீங்கள் ஞானம் நிறைந்தவர் எனப்படுகிறீர்கள்.

குமாரிகளான நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் ஆகப் போகின்றீர்கள்தானே? வெறுமனே பாடநெறியை மட்டும் கொடுப்பவர்கள் ஆகாதீர்கள். வெறுமனே சொற்பொழிவுகள் மட்டும் கொடுப்பவர்கள் ஆகாதீர்கள். அத்துடன் கூடவே, உங்களின் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் இந்த ஞானத்தின் ஒளியையும் சக்தியையும் கொண்டிருங்கள். பாப்தாதாவிற்குக் குமாரிகளிடம் விசேடமான அன்பு உள்ளது. ஏன்? நீங்கள் உங்களின் வாழ்க்கைக்கான தீர்மானத்தை எடுத்துள்ளீர்கள். நீங்கள் தீர்மானத்தை எடுத்துள்ளீர்கள்தானே? அல்லது, நீங்கள் இன்னமும் தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளதா? இதைப் பற்றி நீங்கள் அதிகளவு சிந்தித்துள்ளீர்களா? அல்லது, நீங்கள் திரும்பிச் சென்றபின்னர், அதைப் பற்றிச் சிந்திப்பீர்களா? நீங்கள் அதைப் பற்றி உறுதியாகச் சிந்தித்திருந்தால், அதற்காகப் பாராட்டுக்கள்! பாருங்கள், உங்களுக்குப் பல தயார் நிலையிலுள்ள கரங்கள் கிடைப்பார்கள்! இங்கே பயிற்சிக்காக வந்துள்ள குமாரிகள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எத்தனை பேர் இருக்கிறீர்கள்? (80) யார் இன்னமும் சேவையில் ஈடுபடவில்லை? இன்னமும் நிலையங்களைப் பார்த்துக் கொள்ளாதவர்கள், உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள்! அவர்களை எண்ணுங்கள்! அரைவாசி பேர். அச்சா. நீங்கள் இந்தளவு கரங்களைப் பெறுவீர்கள்தானே? வலது கரமா அல்லது இடது கரமா? நீங்கள் வலது கரங்கள் ஆகுவீர்கள்தானே? அது நல்லது. நீங்கள் குமாரிகள். எனவே, பாப்தாதா குமாரிகளான உங்களுக்கு நிலையம் என்ற வீட்டைக் கொடுத்துள்ளார். அத்துடன் நீங்கள் கணவரையும் கண்டடைந்துள்ளீர்கள். உங்களுக்கு எப்போதும் ஒரு வீடும் கணவரும் தேவையாக உள்ளன. குமாரிகளான நீங்கள் இப்போது உங்களின் கணவரைக் கண்டுள்ளீர்கள். அத்துடன் நீங்கள் இப்போது ஒரு வீட்டையும் பெறுவீர்கள். உங்களுக்கு ஒரு நிலையம் கிடைக்கும். குமார்களும் அவற்றைப் பெறுவார்கள். குமார்கள் நினைக்கிறார்கள்: ஏன் நாங்கள் மட்டும் பின்னால் விடுபட வேண்டும்? நீங்கள் பின்னால் இல்லை. நீங்கள் முன்னாலேயே இருக்கிறீர்கள். குமார்கள் இல்லாமல் சேவையைத் தொடர முடியாது. எந்தவொரு நிலையத்தையும் பாருங்கள். கடின உழைப்புடைய குமார்கள் யாரும் அங்கே இல்லாவிட்டால், சகோதரிகளால் எதையும் செய்ய முடியாதிருக்கும். இருவரும் அவசியம். இதனாலேயே, பாண்டவர்களின் பெயரும் உள்ளது. சக்திகளின் பெயரும் உள்ளது. உங்கள் இருவரின் பெயர்களும் உள்ளன. அச்சா.

இந்த வேளையில், நீங்கள் ஒவ்வொருவரும் கருணைநிறைந்தவராகவும் அருள்பவராகவும் ஆகி, நிச்சயமாக ஒவ்வோர் ஆத்மாவிற்கும் எதையாவது அருள வேண்டும். உங்களின் மனதால் சேவை செய்வதன் மூலமோ அல்லது உங்களின் நல்லாசிகளாலோ நீங்கள் அருள்புரிந்தாலென்ன, மேன்மையான சகாஷை வழங்குகின்ற மனோபாவத்தின் மூலம் அருள்புரிந்தாலென்ன, சக்திவாய்ந்த, ஆன்மீக வார்த்தைகளைப் பேசுவதால் அருள்புரிந்தாலென்ன, உங்களின் அன்பான உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளால் அருள்புரிந்தாலென்ன, எந்தவோர் ஆத்மாவிற்கும் கிடைக்காமல் போகக்கூடாது. அருள்பவர்கள் ஆகுங்கள்! கருணைநிறைந்தவர்கள் ஆகுங்கள்! அவர்கள் அழுகிறார்கள். அவர்கள் தந்தையின் முன்னால் தமது சொந்த மொழிகளில் அழுகிறார்கள்: எங்களுக்கு அமைதியைக் கொடுங்கள்! எங்களுக்கு அன்பைக் கொடுங்கள்! எங்களுக்கு உங்களின் இதயபூர்வமான அன்பைக் கொடுங்கள்! எங்களுக்கு சந்தோஷக் கதிர்களைக் காட்டுங்கள்! தந்தையால் எப்படி இவற்றைக் கொடுக்க முடியும்? அவர் இவற்றைக் குழந்தைகளான உங்களின் மூலமே வழங்குவார், அப்படித்தானே? நீங்கள் எல்லோரும் தந்தையின் வலது கரங்கள். ஏதாவதொன்றைக் கொடுக்கும்போது, அதைக் கைகளாலேயே கொடுப்பார்கள். எனவே, நீங்கள் எல்லோரும் தந்தையின் வலது கரங்கள்தானே? பாண்டவர்களான நீங்கள் வலது கரங்களா? அந்த வலதுகரங்கள், வலது கரங்களான உங்களின் ஞாபகார்த்தம் ஆகும். பல வலது கரங்களின் ஞாபகார்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? பல்வகை ரூபத்தின் சித்திரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அதில் எத்தனை கரங்கள் காட்டப்பட்டுள்ளன? உங்களின் சித்திரம் வலது கரத்திற்குரியதாகும். குமாரிகளே, அதில் உங்களின் சித்திரமும் காட்டப்பட்டுள்ளதல்லவா? ஆகவே, தந்தை இப்போது வலது கரங்களான உங்களினூடாக ஆத்மாக்களுக்கு ஒரு துளி சந்தோஷத்தையும் அமைதியையும் வழங்கச் செய்வார், அப்படித்தானே? அந்த ஏழை, ஆதரவற்றவர்களுக்கு நீங்கள் ஒரு துளியையேனும் வழங்காவிட்டால், அவர்கள் மிகவும் பரிதவிப்பார்கள். இப்போது, சகல எல்லைகளுக்கும் அப்பால் செல்லுங்கள். உங்களின் நேரத்தை எல்லைக்குட்பட்ட விடயங்களிலும் எல்லைக்குட்பட்ட சம்ஸ்காரங்களிலும் வீணாக்காதீர்கள். இன்று, பாப்தாதா குழந்தைகள் எல்லோருக்கும் அவர்கள் இங்கே அமர்ந்திருந்தாலென்ன அல்லது நிலையங்களில் இருந்தாலென்ன, இந்தத் தேசத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ இருந்தாலென்ன, இந்த சமிக்கையைக் கருணைநிறைந்த உணர்வுகளுடன் வழங்குகிறார். பாப்தாதா மிக நீண்ட காலமாகக் குழந்தைகள் எல்லோருடைய எல்லைக்குட்பட்ட விடயங்களை – எல்லைக்குட்பட்ட சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்கள், விஷமத்தனமான சம்ஸ்காரங்கள், கெட்டித்தனம் மற்றும் கவனயீனம் என்பவற்றைப் பார்த்து வருகிறார். எல்லாமே நன்றாகவே இருக்கிறது எனச் சில குழந்தைகள் நினைக்கிறார்கள். பார்ப்பது யார்? அனைத்தையும் அறிந்தவர் யார்? எவ்வாறாயினும், இன்றுவரை பாப்தாதா கருணைநிறைந்தவராகவே இருக்கிறார். ஆகவே, எல்லாவற்றையும் பார்க்கும்போதும் கேட்கும்போதும், அவர் கருணைநிறைந்தவராகவே இருக்கிறார். எவ்வாறாயினும், பாப்தாதா கேட்கிறார்: எவ்வளவு காலத்திற்கு பாப்தாதா கருணைநிறைந்தவராக இருப்பார்? எவ்வளவு காலத்திற்கு? உங்களுக்கு மேலதிகமான நேரம் தேவையா? காலமும் தந்தையிடம் கேட்கிறது: இறுதியில் எவ்வளவு காலத்திற்குக் காத்திருப்பது? இயற்கையும் கேட்கிறது. பதில் அளியுங்கள்! பதில் சொல்லுங்கள்! இப்போதும், தந்தையின் ரூபமே இன்னமும் தொடர்கிறது. அவரே ஆசிரியராகவும் சத்குருவாகவும் இருக்கிறார். எவ்வாறாயினும், தந்தையின் ரூபமே தொடர்கிறது. மன்னிப்புக் கடலின் பாகம் நடக்கிறது. ஆனால், தர்மராஜின் பாகம் ஆரம்பித்தால் என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்வீர்கள்? தர்மராஜின் பாகத்தின் போதும், ‘ஆஹா குழந்தைகளே! ஆஹா!’ என்ற ஒலி காதுகளில் எதிரொலிக்க வேண்டும் என்பதே பாப்தாதாவின் விருப்பமாகும். அந்த வேளையில், தந்தையிடம் முறைப்பாடு செய்யாதீர்கள்: பாபா, நீங்கள் எங்களுக்குச் சொல்லவில்லை. இல்லாவிட்டால், நாங்கள் தயாராக இருந்திருப்போம். ஆகவே, இப்போது எல்லைக்குட்பட்ட, அற்பமான விடயங்களிலும் சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களிலும் நேரத்தை வீணாக்காதீர்கள். எல்லாம் நன்றாகவே நடக்கிறது, எல்லாமே ஓகே என நினைக்காதீர்கள். அவை அனைத்தும் சேமிக்கப்படுகிறது. அது இரண்டு மடங்காக, மூன்று மடங்காக, நூறு மடங்காகச் சேமிக்கப்படுகிறது. அது அப்படியே நன்றாக இல்லை. ஆகவே, இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தின் தீபத்தை உங்களின் இதயத்தில் ஏற்றிவையுங்கள். எல்லைக்குட்பட்டதில் இருந்து, உங்களின் மனோபாவம், பார்வை, செயல் அனைத்தையும் எல்லையற்றவை ஆக்க வேண்டும். இதனாலேயே, பாப்தாதா கூறுகிறார்: நீங்கள் அதை அவ்வாறு ஆக்க வேண்டும். இன்று, பாபா கூறுகிறார்: நீங்கள் அதை அப்படி ஆக்க வேண்டும். பின்னர் அவர் என்ன சொல்வார்? மிகவும் தாமதமாகிவிட்டது! காலத்தைப் பாருங்கள், சேவையைப் பாருங்கள். சேவை அதிகரிக்கிறது. காலமும் முன்னால் விரைவாக ஓடிக் கொண்டிருக்கிறது. எவ்வாறாயினும், நீங்கள் எல்லைக்குட்பட்டவராக இருக்கிறீர்களா அல்லது எல்லையற்றவராக இருக்கிறீர்களா? எல்லைக்குட்பட்ட விடயங்களின் பின்னால் துரத்திச் செல்லாதீர்கள். அதன்பின்னர், எல்லையற்ற மனோபாவமும் சுயமரியாதைக்குரிய ஸ்திதியும் உங்களின் பின்னால் துரத்திக் கொண்டு வரும்.

இந்த வருடம் இதுவரை நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதைப் பார்த்து பாப்தாதா திருப்தி அடைகிறார். அவர் உங்களுக்கு நன்றிகளையும் தெரிவிக்கிறார். எவ்வாறாயினும், இப்போது நீங்கள் செய்யும் சேவையின் அனுபவத்தை அவர்களுக்குக் கொடுங்கள். அவர்களைத் தீச்சுடருக்கு அர்ப்பணிக்கும் விட்டில் பூச்சிகள் ஆக்குங்கள். நீங்கள் அவர்களை ஒத்துழைப்பவர்களாகவோ அல்லது சகபாடிகளாகவோ எப்படி ஆக்கினாலும், அவர்கள் ஏதாவதொன்றாக ஆகட்டும். அனுபவச் சுரங்கத்தைத் திறவுங்கள். இதுவரை நன்றாகவே உள்ளது. ஆனால் அவர்கள் சுற்றிப் பறந்துவிட்டுச் சென்றுவிடும் விட்டில் பூச்சிகள் ஆகக்கூடாது. பலம்வாய்ந்த விட்டில்பூச்சிகள், அனுபவத்தின் பாடநெறியைக் கொடுப்பதன் மூலம் உருவாக்கப்படுவார்கள். இதுவரை, ‘இது மிகவும் நல்லது, இது சுவர்க்கம் போல் இருக்கிறது! இது உண்மையான ஞானம், இதுவே ஞானம்’ என்ற அனுபவத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். இந்தளவிற்கு சேவையின் பெறுபேறு நன்றாக உள்ளது. இப்போது, அனுபவத்தின் சொரூபமாகி, அவர்களுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுங்கள். ஓர் அனுபவத்தைக் கொடுப்பவர் ஆகுவதென்றால், தந்தையுடன் நேரடி உறவுமுறையை வைத்திருத்தல் என்று அர்த்தம். இப்போது, இத்தகைய அனுபவசாலி விட்டில் பூச்சிகளை உருவாக்குங்கள். ஒத்துழைக்கும் ஆத்மாக்களை உருவாக்கியதற்குப் பாராட்டுக்கள்! இப்போது மேலும் அதிகமாக உருவாக்குங்கள்! இதுவரை, இது பேறுகளை அடையக்கூடியதோர் இடம் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், குறைந்தபட்சம் தந்தையுடன் சிறியதோர் இணைப்பை நீங்கள் உருவாக்க வேண்டும். அப்போதே அவர்கள் தொடர்ந்து தீச்சுடரின் பின்னால் ஓடுவார்கள். இந்த வருடம், நீங்கள் செய்யும் சேவையில், குறிப்பாக நீங்கள் அனுபவத்தை வழங்குகின்ற பாடநெறியைக் கொடுக்க வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். இதனூடாகவே காட்சிகள் தென்படும். தந்தையும் நடைமுறையில் வெளிப்படுத்தப்படுவார். நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டீர்களா? நீங்கள் திட்டத்தைப் பெற்றீர்களா? இப்போது, இந்த வருடத்தின் பெறுபேறு என்னவாக இருக்கும் என நாம் பார்ப்போம். அச்சா.

பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் எங்கும் உள்ள மிக மேன்மையான ஆத்மாக்கள் எல்லோருக்கும் தமது எல்லைக்குட்பட்ட சுபாவங்களையும் சம்ஸ்காரங்களையும் சதா மாற்றுகின்ற, எல்லையற்ற முறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் ஆத்மாக்களுக்கும் ஒரு விநாடியையோ அல்லது ஓர் எண்ணத்தையோ வீணாக்காதவர்களுக்கும், சேகரிக்கின்ற, தீவிர முயற்சியாளர் குழந்தைகளுக்கும் சதா கருணைநிறைந்தவர்களாகி, பிராமண ஆத்மாக்களோ அல்லது தாகத்துடன் இருக்கும் ஆத்மாக்களோ, சகல ஆத்மாக்களுக்கும் ஏதாவதொன்றின் ஒரு துளியை அருள்கின்ற அருள்பவர்களுக்கும் சகாஷ் வழங்குபவர்களுக்கும் பெரிய இதயங்களைக் கொண்ட இத்தகைய குழந்தைகளுக்கும் பாப்தாதாவிடமிருந்து அதிக, அதிக, அதிக, அதிகளவு அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சோம்பேறித்தனத்தில் இருந்தும் கவனயீனத்தில் இருந்தும் விடுபட்டு, ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் உலகிற்கு நன்மை செய்கின்ற பொறுப்பை நிறைவேற்றுவீர்களாக.

நீங்கள் புதியவரோ அல்லது பழையவரோ, ஒரு பிராமணராக இருப்பதென்றால், உலகிற்கு நன்மை செய்யும் பொறுப்பை எடுத்துக் கொள்ளுதல் என்று அர்த்தம். உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கும் போதெல்லாம், நீங்கள் அதை விரைவாக நிறைவேற்றுகிறீர்கள். ஆனால் உங்களுக்குப் பொறுப்பு இல்லாதபோது, நீங்கள் கவனயீனம் ஆகுகிறீர்கள். பொறுப்பானது சோம்பேறித்தனத்தையும் கவனயீனத்தையும் முடிக்கிறது. ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பவர்கள், களைப்பற்றவர்கள். தமது சொந்த முகங்களாலும் செயல்களாலும் அவர்கள் தொடர்ந்து மற்றவர்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகரிக்கிறார்கள்.

சுலோகம்:
காலத்திற்கேற்ப சக்திகளைப் பயன்படுத்துவது என்றால், ஞானி ஆத்மாவாகவும் யோகி ஆத்மாவாகவும் இருத்தல் என்று அர்த்தம்.

ஓம் சாந்தி
அறிவித்தல்: இன்று எமது அதியன்பிற்குரிய தாதி பிரகாஷ்மணிஜீயின் நினைவு நாள். தாதிஜி எப்படி ஒவ்வொரு செயலிலும் உண்மையாக இருந்து, தனது நேர்மையான இதயத்தால் உண்மையான பிரபுவை மகிழ்வித்ததுடன் அவரின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாரோ, அதேபோல், நாமும் தாதிஜியைப் போல் ஆகவேண்டும். இதுவே தாதிஜிக்கு நாம் செய்யும் உண்மையான, அன்பான அஞ்சலியாகும்.