26.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அதி மகத்துவமான தந்தை, முக்கியமானவர்களாகிய உங்களைப் பெருமளவு முயற்சி செய்யச் செய்வதில்லை. அவர் கூறுகிறார்: இரு வார்த்தைகளை மாத்திரம் நினைவு செய்யுங்கள்: அல்பா மற்றும் பீற்றா.

பாடல்:
ஆன்மீகத் தந்தையின் எப் பிரதான பணியின் மூலம் அவர் மகிழ்ச்சியை அனுபவம் செய்கிறார்?

பதில்:
தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதே ஆன்மீகத் தந்தையின் பிரதான பணியாகும். உங்களைத் தூய்மையாக்குவதில், தந்தை மகத்தான மகிழ்ச்சியை அனுபவம் செய்கிறார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சற்கதியை அளிப்பதற்கு வருகிறார். இப்போது நீங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்பதால், அவர் உங்கள் அனைவரையும் சதோபிரதான் ஆக்குகிறார். இந்த ஒரு பாடத்தை உறுதியாக்கிக் கொள்ளுங்கள்: நான் ஓர் ஆத்மா, ஒரு சரீரமல்ல, இப் பாடத்தின் மூலம் நீங்கள் தந்தையை நினைவு செய்யவும், தூய்மையாகவும் முடியும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை அமர்ந்திருந்து, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தை, குழந்தைகளாகிய உங்களைத் தூய்மையாக்குவதில், மகிழ்ச்சியை அனுபவம் செய்கிறார். ஆகவே, அவர் கூறுகிறார்: தூய்மையாக்குபவராகிய தந்தையை நினைவு செய்யுங்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஆவார்; வேறு எவராலும் இவ்வாறு இருக்க முடியாது. இந் நேரத்திலேயே, நீங்கள் இப்போது நிச்சயமாக வீடு திரும்ப வேண்டும் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் மேலும் அதிக முயற்சியை செய்வதைத் தூண்டுவதற்காக, நினைவு யாத்திரையைக் கொண்டிருப்பது அவசியம் எனத் தந்தை கூறுகிறார். நினைவு செய்வதனால் மாத்திரமே நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள்; அடுத்தது கல்வியாகும். முதலில், தந்தையான அல்பாவையும், பின்னர் இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள். இதற்கான வழிகாட்டல்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எவ்வாறு நீங்கள் 84 பிறவிகள் எடுக்கின்றீர்கள் என்பதும், எவ்வாறு சதோபிரதானிலிருந்து, தமோபிரதானாக மாறுகிறீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஏணியிலிருந்து கீழிறங்குகிறீர்கள். இப்போது, நீங்கள் மீண்டும் சதோபிரதான் ஆகவேண்டும். சத்தியயுகமே தூய உலகம். அங்கு ஒருவர்கூட தூய்மையற்றவராக இருப்பதில்லை. சத்தியயுகத்தில் இவ் விடயங்கள் இருக்க மாட்டாது. தூய்மையாகுவதே பிரதான விடயமாகும். இப்போது, தூய்மையாகுங்கள், அப்போது மாத்திரமே நீங்கள் புதிய உலகிற்குச் சென்று, ஓர் இராச்சியத்தைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். அனைவரும் தூய்மையானவர்கள் ஆகவேண்டும். அங்கு, எவரும் தூய்மையற்றவராக இருக்க மாட்டார்கள். சதோபிரதான் ஆகுவதற்கு முயற்சி செய்பவர்களே, தூய உலகின் அதிபதிகள் ஆகுவார்கள். இது முக்கியமானதொரு விடயமாகும். தந்தையை நினைவு செய்வதனால், நீங்கள் சதோபிரதான் ஆகவேண்டும். தந்தை உங்களைப் பெருமளவு முயற்சி செய்யச் செய்வதில்லை. அவர் கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். அவர் மீண்டும், மீண்டும் கூறுகிறார்: இந்த ஒரு பாடத்தை உறுதியாக்கிக் கொள்ளுங்கள்: நீங்கள் ஒரு சரீரமல்ல, ஓர் ஆத்மர் அவ்வளவுதான். முக்கியஸ்தர்கள் அதிகளவு வாசிப்பதில்லை; அவர்களுக்குச் சாராம்சம் சுருக்கமாகவே கூறப்படுகிறது. முக்கியஸ்தர்களுக்கு எவ்விதச் சிரமமும் கொடுக்கப்படுவதில்லை. சதோபிரதானிலிருந்து தமோபிரதானாக மாறுவதற்கு எத்தனை பிறவிகள் எடுத்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். அது 63 பிறவிகள் எனக் கூற முடியாது; அதற்கு 84 பிறவிகள் பிடிக்கும். நீங்கள் சுவர்க்கவாசிகளாக, சதோபிரதானாக இருந்தீர்கள், அதாவது, சந்தோஷ தாமத்தின் அதிபதிகளாக இருந்தீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. அது ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் என்றும் அழைக்கப்பட்ட, சந்தோஷ தாமமாக இருந்தது. அவர்களும் மனிதர்களே, ஆனால், அவர்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருந்தார்கள். இந்நேரத்தில் மனிதர்கள் அசுர குணங்களைக் கொண்டிருக்கிறார்கள். அசுரர்களுக்கும் தேவர்களுக்குமிடையில் ஒரு யுத்தம் இடம்பெற்ற பின்னரே, தேவர்களின் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது எனச் சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளது. முன்னர், நீங்கள் அசுரர்களாக இருந்தீர்கள் என்று தந்தை விளங்கப்படுத்துகிறார். தந்தை வந்து, உங்களைப் பிராமணர்கள் ஆக்கினார். அவர் உங்களுக்குப் பிராமணர்களிலிருந்து தேவர்கள் ஆகுவதற்கான வழியைக் காட்டுகிறார். எவ்வாறாயினும், அசுரர்களுக்கும் தேவர்களுக்குமிடையில் ஒரு யுத்தம் நடைபெற்றது என்ற கேள்விக்கே இடமில்லை. தேவர்களையிட்டு, தேவர்களின் தர்மமே அதியுயர்ந்த அகிம்சா தர்மம் எனக் கூறப்பட்டுள்ளது. தேவர்கள் ஒருபோதும் யுத்தம் புரிவதில்லை. அங்கு வன்முறை என்ற கேள்வியே இருக்க முடியாது. சத்தியயுகத்தின் தெய்வீக இராச்சியத்தில் எவ்வாறு ஒரு யுத்தம் இருக்க முடியும்? அசுரர்களுடன் யுத்தம் புரிவதற்கு, சத்திய யுகத்துத் தேவர்கள் இறங்கி வருவார்களா அல்லது தேவர்களுடன் யுத்தம் புரிவதற்கு அசுரர்கள் அங்கு செல்வார்களா? இரண்டுமே சாத்தியமில்லை. இது பழைய உலகம்; அது புதிய உலகம். ஆகவே, எவ்வாறு யுத்தம் இடம்பெற முடியும்? பக்தி மார்க்கத்தில் மக்கள் செவிமடுக்கின்ற அனைத்துக்கும் தொடர்ந்தும் “உண்மை, உண்மை!” எனக் கூறுகிறார்கள்: அவர்களின் புத்தி முற்றிலும் தொழிற்படுவதில்லை. அவர்களின் புத்தி உண்மையிலேயே, கல்லுப் போன்று உள்ளது. கலியுகத்தில், மக்கள் கல்லுப் புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால், சத்தியயுகத்தில் அவர்கள் தெய்வீகப் புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள். அந்த இராச்சியம் தெய்வீகப் பிரபுவிற்கு உரியதாகும். இங்கு எந்த இராச்சியமும் இல்லை. துவாபர யுகத்து அரசர்களும் தூய்மையற்றே இருந்தார்கள். அவர்கள் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடங்களை அணிந்திருந்தார்கள்; ஆனால், அவர்கள் ஒளியிலான கிரீடத்தைக் கொண்டிருக்கவில்லை, அதாவது, அவர்கள் தூய்மையானவர்களாக இருக்கவில்லை. அங்கு அனைவரும் தூய்மையானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு மேலே ஒளிவட்டம் இருந்தது என்று அர்த்தம் அல்ல‚ இல்லை. அவர்களுடைய தூய்மையைக் குறிப்பதற்கே, படங்களில் ஒளிவட்டம் காட்டப்பட்டுள்ளது. இந்நேரத்தில் நீங்களும் தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். உங்களுடைய ஒளி எங்கே? தந்தையுடன் யோகம் செய்வதனால் நீங்கள் தூய்மையாகுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கு விகாரத்தின் சுவடுகூட இருக்க மாட்டாது. இராவணனின் விகார இராச்சியம் அழிக்கப்பட்டிருக்கும். இது இன்னமும் இராவண இராச்சியமே என்பதை நிரூபிப்பதற்கே, இங்கு இராவணன் காட்டப்படுகிறான். அவர்கள் ஒவ்வொரு வருடமும் இராவணனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள். ஆனால், அவன் எரிக்கப்படுவதில்லை. இப்பொழுது, நீங்கள் அவனை வெல்கிறீர்கள், பின்னர் இந்த இராவணன் இருக்கமாட்டான். நீங்கள் அகிம்சாவாதிகள். யோக சக்தி மூலமே உங்களின் வெற்றி பெறப்படுகிறது. பிறவிபிறவியாக உள்ள உங்கள் பாவங்கள், நினைவு யாத்திரை மூலம் அழிக்கப்படவுள்ளன. உங்கள் எண்ணற்ற பிறவிகள் எப்போது ஆரம்பமாகுகின்றன? உங்கள் பாவச் செயல்கள் எப்போது ஆரம்பமாகுகின்றன? நீங்களே, முதலில் வருகின்ற, ஆதி, சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள். சூரிய வம்சத்துக்கு உரியவர்கள், சந்திர வம்சத்தினர் ஆகும்போது, இரு சுவர்க்கக் கலைகள் குறைவடைகின்றன. பின்னர் உங்கள் சுவர்க்கக் கலைகள் படிப்படியாகக் குறைவடைகின்றன. தந்தையை நினைவு செய்து சதோபிரதான் ஆகுவதே இப்போது பிரதான விடயம் ஆகும். முன்னைய கல்பத்தில் சதோபிரதான் ஆகியவர்கள் மீண்டும் அவ்வாறு ஆகுவார்கள் அவர்கள் தொடர்ந்தும் வருவார்கள். அனைவரும் வரிசைக்கிரமமாக உள்ளனர். பின்னர், நாடகத்திற்கேற்ப, அவர்கள் வரும்போது, அவ்வாறு வரிசைக்கிரமமாகவே வருவார்கள். அவர்கள் வந்து, பிறவி எடுப்பார்கள். இந்த நாடகம் ஒரு தனித்துவமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு விவேகமும் தேவை. நீங்கள் கீழிறங்கியது போன்று, மேலேறவும் வேண்டும். நீங்கள் வரிசைக்கிரமமாகச் சித்தியடைந்து, பின்னர், வரிசைக்கிரமமாக இங்கு கீழிறங்கி வருவீர்கள். சதோபிரதான் ஆகுவதே உங்கள் இலக்கும் இலட்சியமும் ஆகும். அனைவரும் முழுமையாகச் சித்தியடைவார்கள் என்றில்லை. 100 புள்ளிகளுக்குப் பின்னர், அவை தொடர்ந்தும் குறைவடையும். இதனாலேயே, நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். இந்த முயற்சியை செய்வதிலேயே நீங்கள் சித்தியடைவதில்லை. சேவை செய்வது இலகுவானதாகும். அருங்காட்சியகத்தில் நீங்கள் விளங்கப்படுத்தும் விதம் நீங்கள் எந்தளவுக்குக் கற்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. எவராவது ஒருவர் சரியாக விளங்கப்படுத்தவில்லை என்பதை ஒரு பிரதான ஆசிரியர் அவதானித்தால், அவர் சென்று விளங்கப்படுத்துவார், அவரே சென்று, அவருக்கு உதவி செய்வார். அனைவரும் மிகச் சரியாக விளங்கப்படுத்துகிறார்களா அல்லது இல்லையா அல்லது எவராவது கேள்வி கேட்டால் குழப்பம் அடைகின்றார்களா என்பதை அவதானிப்பதற்கு ஓரிரு மேற்பார்வையாளர்களும் கடமையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நிலையங்களை விட, கண்காட்சிகளில் சிறப்பாக சேவை இடம்பெறுகின்றது என்பதையும் கண்காட்சிகளை விட அருங்காட்சியகங்களில் மிகச் சிறந்த சேவை இடம்பெறுகின்றது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அருங்காட்சியகங்களில் சிறந்த படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதனைப் பார்ப்பவர்கள் சென்று மற்றவர்களுக்கு அதனையிட்டுக் கூறுகிறார்கள், இறுதிவரை தொடர்ந்தும் இது இடம்பெறும். “இறை தந்தையின் உலக பல்கலைக்கழகம்” என்ற வார்த்தைகள் சிறந்தன. இதில் மனிதர்களையிட்டு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனை யார் ஆரம்பித்து வைக்கிறார்கள்? திறப்பு விழாவிற்குப் பிரபல்யமானவர்களை வருமாறு நீங்கள் அழைக்கும்போது, பிரபல்யமானவர்களின் பெயரைக் கேள்விப்பட்டு, ஏனைய பலரும் வருவார்கள் என்று தந்தை கூறியுள்ளார். ஒருவரால், பலர் வருவார்கள். இதனாலேயே, முக்கிய நபர்களின் அபிப்பிராயத்தைப் பிரசுரிக்குமாறு கூறி தந்தை டெல்கிக்கு எழுதினார், அதனால் மக்கள் அதனை வாசிக்கும்போது, ‘அந்த முக்கிய நபர்கள் அனைவரும் உங்களிடம் வந்து, சிறந்த அபிப்பிராயங்களைத் தெரிவிக்கிறார்கள்' என்று கூறுவார்கள். இவற்றைப் பிரசுரிப்பது நல்லதாகும். இதில், மந்திரவித்தை என்ற கேள்விக்கே இடமில்லை. இதனாலேயே, நீங்கள் அபிப்பிராயங்கள் அனைத்தையும் கொண்ட புத்தகம் ஒன்று உருவாக்க வேண்டும் என்று தந்தை தொடர்ந்தும் எழுதுகிறார். நீங்கள் அவற்றையும் இங்கு விநியோகிக்க வேண்டும். சரீரமும் பொய், மாயையும் பொய் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்தும் இதில் அடங்கியுள்ளது. இது அசுரர்களின் இராச்சியமாகிய, இராவண இராச்சியம் என்று கூறுபவர்கள் பலர் உள்ளனர். எவருக்கு இராச்சியம் உரியதாக உள்ளதோ, அவர்களே முதலில் அக்கறை கொள்ள வேண்டும். அவர்கள் கூறுகிறார்கள்: தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குங்கள்! ஆகவே, தூய்மையற்ற இந்த நிலையில் அனைத்தும் அடங்கியுள்ளது. அனைவரும் கூவி அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே! ஆகவே அவர்கள் நிச்சயமாகத் தூய்மையற்றவர்களாக இருக்க வேண்டும்! பரமாத்மாவாகிய பரமதந்தை தூய்மையாக்குபவரா அல்லது நதிகளும், ஏரிகளும் தூய்மையாக்குபவரா எனக் காட்டுவதற்கு ஒரு மிகச்சரியான படத்தை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். அம்ரித்சாரில் ஓர் ஏரியில், நீர் முற்றாக அசுத்தமாகி விட்டாலும், அம்மக்கள் அதனை அமிர்த ஏரியாகவே கருதுகிறார்கள். அதனை ஓர் அமிர்த ஏரியாகக் கருதி, மகாராஜாக்கள் அதனைச் சுத்தப்படுத்துகின்றார்கள். இதனாலேயே அம்ரித்சர் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. கங்கை நீர்கூட அமிர்தமாகவே கருதப்படுகிறது! அந்த நீர் மிகவும் அசுத்தமாகுகின்றது; கேட்கவே வேண்டாம்! பாபா அந்த ஆறுகள் போன்றவற்றில் நீராடியுள்ளார். அந்த நீர் மிகவும் அசுத்தமானதாகும். மக்கள் அதிலிருந்து சேற்றை எடுத்து, தங்கள் மீது பூசிக்கொள்கின்றார்கள். பாபா இதனை அனுபவம் செய்துள்ளார். பாபா ஒரு பழைய அனுபவம் வாய்ந்த சரீரத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இவரைப் போன்று அனுபவம் வாய்ந்தவர் எவரும் இல்லை. பேரரசர்களையும், வைஸ்ரோய் போன்றவர்களையும் சந்தித்த அனுபவங்களும் அவருக்கு உள்ளன. அவர் தினை, சோளம் போன்றவற்றையும் பார்லியையும் விற்றிருக்கிறார். அவருடைய குழந்தைப் பராயத்தில், நான்கு முதல் ஆறு அணாக்கள் (சதங்கள்) சம்பாதிப்பதில் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார். இப்போது அவர் எங்கு வந்தடைந்துள்ளார் என்று பாருங்கள்! இந்தக் கிராமத்துச் சிறுவன் எவ்வாறு ஆகிவிட்டார் என்று பாருங்கள்! தந்தையும் கூறுகிறார்: நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கிறேன். இவருக்குத் தனது சொந்தப் பிறவிகள் பற்றித் தெரியாது. 84 பிறவிகளை எடுத்த பின்னர், இறுதியில் அவர் எவ்வாறு கிராமத்துச் சிறுவன் ஆகினார் எனத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். தெய்வீகச் செயல்கள் கிருஷ்ணருடையதோ அல்லது கம்சனுடையதோ (அசுரர்) அல்ல. கிருஷ்ணரைப் பற்றிக் கூறிய வெண்ணெய்ப் பானையை உடைப்பது போன்ற அவ்விடயங்கள் அனைத்தும் பொய்யானதாகும். தந்தை எவ்வளவு எளிமையான முறையில் விளங்கப்படுத்துகிறார் என்று பாருங்கள்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் அமரும் போதும், நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும் என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நானே ஆத்மாக்கள் அனைவரினதும் அதிமேலான தந்தை ஆவேன். நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதும், அந்த ஒரேயொருவரே தந்தை என்பதும் உங்களுக்குத் தெரியும். சகோதரர்களாகிய நாங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையையே நினைவு செய்கிறோம். மக்கள் கூறுகிறார்கள்: “ஓ கடவுளே, ஓ ஈஸ்வரா”. ஆனால் அவர்களுக்கு எதுவும் தெரியாது. தந்தை இப்போது தனது அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். நாடகத் திட்டத்திற்கேற்ப, இது கீதையின் யுகம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் தந்தை இந்நேரத்தில் வந்து, உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். அதன்மூலம் நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை ஏற்று, பேசுகிறார். தந்தையும் தனது தெய்வீக, அலௌகீகப் பணிகளையும் செய்யவேண்டும் என்பதால், அவர் ஒரு சரீரத்தின் ஆதாரத்தைப் பெறுகிறார். அரைக் கல்பத்திற்கு, மனிதர்கள் சந்தோஷமற்றவர்கள் ஆகுவதால், அவர்கள் அவரை அழைக்கிறார்கள். தந்தை ஒரு கல்பத்தில் ஒருமுறை மாத்திரமே வருகிறார். நீங்கள் உங்கள் பாகங்களை மீண்டும் மீண்டும் நடிக்கிறீர்கள். தேவ தர்மமே ஆதியும், அநாதியுமானதாகும், ஆனால் அதன் அத்திவாரம் இப்போது இல்லை. அவர்களுடைய உருவங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. ஆகவே, நீங்களும் இலக்ஷ்மி, நாராயணன் போல் ஆகவேண்டும் என்று தந்தை கூறுகிறார். உங்கள் இலக்கும், இலட்சியமும் உங்கள் முன்னிலையில் உள்ளன. அதுவே ஆதி சனாதன தேவ தர்மமாகும். இந்து சமயம் என்று ஒரு சமயமும் இல்லை. இந்து என்ற பெயர் இந்துஸ்தானிலிருந்து பெறப்பட்டது. சந்நியாசிகள் வசிப்பிடமாகிய, பிரம்ம தத்துவத்தைக் கடவுள் என்று குறிப்பிடுவது போன்று, அவர்;கள் வசிக்கும் இந்தத் தேசம் அவர்களின் சமயம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்து சமயம் ஆதியும், அநாதியுமான சமயமல்ல. இந்துக்கள் தேவர்களின் விக்கிரகங்களின் முன்னே சென்று, அவற்றிற்குத் தலை வணங்குகின்றார்கள். அவர்கள் ஒருகாலத்தில் தேவர்களாக இருந்தவர்களின் புகழைப் பாடுகின்றார்கள். அதே தேவர்களே இந்துக்கள் ஆகியுள்ளார்கள். அவர்களின் தர்மமும் செயல்களும் சீரழிந்து விட்டன. ஏனைய அனைத்துச் சமயங்களும் இப்போது உள்ளன. ஆனால், தேவ தர்மம் மறைந்துவிட்டது. பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் பின்னர் பூஜிப்பவர்களாகி, அந்தத் தேவர்களைப் பூஜிக்கிறார்கள். அவர்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்த வேண்டியுள்ளது. கிருஷ்ணரைப் பற்றி அதிகளவு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவரே சத்தியயுகத்தின் முதல் இளவரசர், ஆகவே 84 பிறவிகளும் அவருடனேயே ஆரம்பிக்கின்றன. தந்தை கூறுகிறார்: நான் இவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியிலேயே இவரில் பிரவேசிக்கிறேன். ஆகவே அவர் நிச்சயமாகத் தனது கணக்கைப் பற்றி உங்களுக்குக் கூறுவார். இந்த இலக்ஷ்மியும், நாராயணனும் முதல் இலக்கத்தவர்கள் ஆகினார்கள். ஆகவே முதலாவதாக இருந்தவர், பின்னர் இறுதி இலக்கம் ஆகுகின்றார். ஒரு கிருஷ்ணர் மாத்திரம் இருக்கவில்லை; விஷ்ணுவின் வம்சத்தவர்களாக இருந்த ஏனையோரும் இருந்தார்கள். இந்த விடயங்கள் உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். நீங்கள் இவ்விடயங்களை மறக்கக்கூடாது. அருங்காட்சியகங்கள் இப்போது தொடர்ந்தும் திறக்கப்படுகின்றன இன்னும் பல திறக்கப்படும். பலரும் வருவார்கள். மக்கள் ஆலயங்களுக்குச் சென்று, தலை வணங்குகின்றார்கள். பக்தர்கள் உங்களிடம் வந்து, இலக்ஷ்மி, நாராயணனின் படத்தைப் பார்க்கும்போது அதன் முன்னால் அவர்கள் பணத்தை வைப்பதை நீங்களும் பார்க்கிறீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: புரிந்துகொள்வதே இங்கு முக்கியமானதாகும், அவர்களுக்கு முன்னால் பணத்தை வைப்பதல்ல. இப்போது நீங்கள் சிவாலயத்திற்குச் சென்றால், அங்கு நீங்கள் பணத்தை வைப்பீர்களா? உங்களுக்கு அவர்கள் அனைவரது வாழ்க்கை வரலாறும் தெரியும் என்பதால், நீங்கள் விளங்கப்படுத்தும் நோக்குடன் அங்கு செல்வீர்கள். பல ஆலயங்கள் உள்ளன. முக்கியமானது சிவாலயமாகும். அவர்கள் ஏன் ஏனைய விக்கிரகங்களை அங்கு வைக்கிறார்கள்? அவை ஒவ்வொன்றிற்கும் முன்னே அவர்கள் பணத்தை வைத்தால், அது பின்னர் அர்ச்சகருக்கு ஒரு வருமானம் ஆகுகிறது. ஆகவே அதை ஒரு சிவாலயம் என்றா அல்லது சிவனின் குடும்பத்தின் ஆலயம் என்றா அழைக்க வேண்டும்? சிவபாபா இந்தக் குடும்பத்தை உருவாக்கியுள்ளார். பிராமணர்களாகிய நீங்களே உண்மையான குடும்பம் ஆவீர்கள். சாலிகிராம்கள் சிவனின் குடும்பத்தைக் குறிக்கின்றன. பின்னர் நாங்கள் சகோதர, சகோதரிகளான, ஒரு குடும்பம் ஆகுகின்றோம். முதலில் நீங்கள் சகோதரர்கள், பின்னர் தந்தை வரும்போது நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆகிறீர்கள். பின்னர் நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்லும்போது, குடும்பம் மேலும் பெரிதாகுகிறது. அங்கு திருமணங்களும் இடம்பெறுகின்றன. ஆகவே குடும்பம் மேலும் அதிகம் விரிவடைகிறது. நாங்கள் எங்கள் வீட்டில், அதாவது அமைதி தாமத்தில் வசிக்கும்போது, நாங்கள் சகோதரர்களாகவே உள்ளோம், ஒரேயொரு தந்தை மாத்திரம் இருப்பார். இங்கு நீங்கள் மனித குலத்தின் தந்தையின் குழந்தைகள், அதாவது, சகோதர சகோதரிகள். வேறு எந்த உறவு முறையுமில்லை. பின்னர், இராவணனின் இராச்சியத்தில், பெருமளவு விரிவாக்கம் உள்ளது. தந்தை தொடர்ந்தும் அனைத்து இரகசியங்களையும் விளங்கப்படுத்துகிறார். இருந்தபோதும் அவர் கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் எண்ணற்ற பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். கற்பதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. தந்தையை நினைவு செய்வதே பிரதான விடயம் ஆகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. முழுப் புள்ளிகளுடன் சித்தியடைவதற்கு, உங்கள் புத்தியைச் சதோபிரதானாகவும், தெய்வீகமானதாகவும் ஆக்குங்கள். மேலோட்டமான புத்தியை உடையவரிலிருந்து, சூட்சுமமான புத்தி உடையவராக மாறி, நாடகத்தின் தனித்துவமான இரகசியங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

2. தந்தையைப் போன்று, தெய்வீக, அலௌகீகச் செயல்களை இப்போது செய்யுங்கள். இரட்டை அகிம்சாவாதிகள் ஆகி, யோகசக்தியின் மூலம் உங்கள் பாவங்களை அழித்துவிடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் கர்மத்திற்கும் யோகத்திற்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுவதன் மூலம் ஒரு கர்மயோகியாகி, ஆசீர்வாதங்களை அனுபவம் செய்வீர்களாக.

ஒரு கர்மயோகி என்பவரின் ஒவ்வொரு செயலும் யோகியுக்தாக இருக்கும். கர்மயோகி ஆத்மா எப்போதும் கர்மத்திற்கும் யோகத்திற்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுவார். கர்மத்திற்கும் யோகத்திற்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுவதன் மூலம், உங்களின் ஒவ்வொரு செயலுக்காகவும் நீங்கள் எப்படியோ தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். ஆனால், அத்துடன்கூடவே, உங்களுடன் தொடர்பில் அல்லது உறவுமுறையில் வருகின்ற எவருடைய ஆசீர்வாதங்களையும் நீங்கள் பெறுவீர்கள். யாராவது நல்லது எதையாவது செய்யும்போது, அவருக்காக உங்களின் இதயபூர்வமாக ஆசீர்வாதங்கள் வெளிப்படும். ஏனென்றால், அந்தச் செயல் மிகவும் நல்லதாக இருந்திருக்கும். எதையும் நல்லதெனக் கருதுவது ஓர் ஆசீர்வாதமாகும்.

சுலோகம்:
ஒரு விநாடியில் உங்களின் எண்ணங்களை நிறுத்தும் பயிற்சியானது, கர்மாதீத் ஸ்திதியை நெருக்கமாகக் கொண்டுவரும்.