27.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, சுயஉணர்வு நிலையில் தந்தையை நினைவுசெய்யுங்கள். வெறுமையான ஸ்திதிக்குச் செல்வதோ அல்லது உறக்கத்திற்குச் செல்வதோ யோகம் அல்ல.

பாடல்:
இங்கு கண்களை மூடியவாறு அமர்ந்திருப்பதற்கு நீங்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை?

பதில்:
நீங்கள் கண்களை மூடியவாறு அமர்ந்திருப்பீர்களாயின், திருடனால் உங்கள் கடையிலிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச் செல்ல முடியும். திருடியாகிய மாயை, உங்களைப் புத்தியில் எதனையும் கிரகிக்க விடமாட்டாள். நீங்கள் கண்களை மூடியவாறு யோகத்தில் அமர்வீர்களாயின், நீங்கள் நித்திரையாகி விடுவீர்கள், நீங்கள் எதனையும் அறிந்துகொள்ளமாட்டீர்கள். எனவே, உங்கள் கண்களைத் திறந்தவாறே அமர்ந்திருங்கள். நீங்கள் உங்களுடைய வேலையைச் செய்கின்ற போதும், உங்கள் புத்தியினால் தந்தையை நினைவுசெய்யுங்கள். இதில் ஹத்த யோகம் என்ற கேள்விக்கே இடமில்லை.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: இவரும் ஒரு குழந்தையே. சரீரதாரிகள் அனைவரும் அவருடைய குழந்தைகளே. எனவே, ஆன்மீக தந்தை ஆத்மாக்களுக்குக் கூறுகின்றார்: ஆத்மாவே பிரதானமானவர். இதனை மிகநன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் இங்கு முன்னால் அமர்ந்திருக்கும் போது, உங்களை உங்கள் சரீரத்திலிருந்து விடுவித்து, காணாமல் போய்விடக்கூடாது. உங்களை சரீரத்திலிருந்து விடுவித்து, காணாமல் போவது என்பது நினைவு யாத்திரை ஸ்திதியல்ல. இங்கு நீங்கள் விழிப்பாக அமர்ந்திருக்க வேண்டும். நீங்கள் நடக்கும் பொழுதும், நடமாடும் பொழுதும், அமர்ந்திருக்கின்ற பொழுதும், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கின்ற போது சுயநினைவற்றவராகுங்கள் என்று தந்தை உங்களுக்கு கூறுவதில்லை. இங்கு அமர்ந்திருக்கும்பொழுது பலர் நழுவிப் போய்விடுகிறார்கள். நீங்கள் இங்கு விழிப்புடன் அமர்ந்து இருக்க வேண்டும். நீங்கள் தூய்மையாகவும் வேண்டும். தூய்மை இல்லாமல் உங்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியாது. உங்களால் எவருக்கும் நன்மை செய்யவும் முடியாது, மற்றவர்களுக்கு உங்களால் இதனைக் கூறவும் இயலாது. தாங்களே தூய்மையாக இல்லாது மற்றவர்களை அவ்வாறு ஆகுமாறு கூறுபவர்கள் பண்டிதர்கள் போன்றவர்கள். நீங்கள் உங்களைப் புத்திசாதுரியமானவர்களாகக் கருதக் கூடாது. இல்லையேல், உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தும். நீங்கள் உங்கள் கண்களை மூடி வெறுமையான ஸ்திதிக்கு செல்ல முடியும் என்று எண்ணாதீர்கள். அது நினைவுசெய்யும் ஸ்திதியல்ல. இங்கு, நீங்கள் சுயநினைவு நிலையில் இருந்து தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தூங்கிவிழுவது நினைவு செய்வதல்ல. குழந்தைகளாகிய உங்களுக்குப் பல கருத்துக்கள் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் ஏழாவது உலகத்திற்கு செல்வதாகவும் (உணர்வு ஸ்திதி) அவர்கள் இவ் உலகைப் பற்றிய விழிப்புணர்வு அறவே இல்லாதவர்களாகவும் இருப்பதாக சமயநூல்களில் காட்டப்பட்டுள்ளது. உங்களுக்கு உலகத்தைப் பற்றித் தெரியும். அதாவது இது ஒரு அசுத்த உலகம். எவருக்கும் தந்தையைத் தெரியாது. அவர்கள் தந்தையை அறிந்திருப்பார்களாயின், உலகச் சக்கரத்தையும் அறிந்திருப்பார்கள். இந்தச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்றும் மனிதர்கள் எவ்வாறு மறுபிறவி எடுக்கிறார்கள் என்றும் தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். சத்தியயுகத்தில், நீங்கள் முதியவர்களானாலும் உங்களுடைய முகம் சுருக்கமடையாது. சந்நியாசிகள் ஹத்த யோகம் செய்கின்றார்கள். அவர்கள் தங்கள் கண்களை மூடிக் கொண்டு, குகைகளில் அமர்ந்திருக்கும் போது, முதுமையடைந்து, சுருக்கமும் விழுகின்றது. தந்தை உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசிக்கும்போதும் நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். வெறுமையான ஸ்திதிக்கு செல்வது என்பது உண்மையில் ஒரு ஸ்திதியல்ல. நீங்கள் உங்களுடைய தொழில் போன்றவற்றைச் செய்யவும் வேண்டும், உங்கள் குடும்பத்தைப் பராமரிக்கவும் வேண்டும். நீங்கள் வெறுமையான ஸ்திதிக்கு செல்லக் கூடாது. உங்களுடைய வேலைகளைச் செய்கின்ற பொழுதும், உங்கள் புத்தியின் மூலம் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் உங்களுடைய வேலையைச் செய்கின்ற பொழுது, நிச்சயமாக உங்களுடைய கண்களைத் திறந்தவாறே செய்கின்றீர்கள். உங்களுடைய தொழில் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபடுகையில் உங்கள் புத்தியின் யோகத்தை தந்தையுடன் இணையுங்கள். நீங்கள் இதைப் பற்றி கவனயீனமாக இருக்கக்கூடாது. நீங்கள் கடையிலிருக்கும் போது உங்களுடைய கண்களை மூடிக்கொண்டு இருப்பீர்களாயின், எவராவது உங்களுடைய பொருட்களை களவாடிச் சென்றுவிட்டாலும் நீங்கள் அறியமாட்டீர்கள். அது சரியான ஸ்திதியல்ல. ஒருவரின் சரீரத்திலிருந்து பற்றற்றவராகுகின்ற பயிற்சி ஹத்த யோகிகளினது ஆகும். மாயாஜால சக்தியுடையவர்களே அவ்வாறு செய்வார்கள். தந்தை இங்கிருந்து உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார், அதாவது நீங்கள் இதற்காக உங்கள் கண்களை மூடக்கூடாது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது, நீங்கள் நினைவுசெய்த நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் மறந்து, தந்தை ஒருவரை மட்டும் நினைவுசெய்யுங்கள். நினைவுயாத்திரை இல்லாமல் உங்கள் பாவங்கள் அகற்றப்படமாட்டாது. சூட்சும உலகிற்கு போக் கொண்டுசெல்பவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள், என்ன நடைபெறுகின்றது? அவர்கள் அங்கிருக்கும் வரை அவர்களுடைய பாவங்கள் அழிக்கப்பட முடியாது. அவர்களால் சிவபாபாவை நினைவுசெய்யவோ பாபாவின் முரளியைச் செவிமடுக்கவோ முடியாது, எனவே இழப்பு ஏற்படுகின்றது. எவ்வாறாயினும், இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது, இதனாலேயே அவர்கள் அங்கு செல்கிறார்கள். அவர்கள் பின்னர் கீழே வந்து, முரளியைச் செவிமடுப்பார்கள். இதனாலேயே பாபா கூறுகின்றார்: சென்று விரைவாகத் திரும்பி வாருங்கள், அங்கேயே இருக்காதீர்கள். அத்தகைய களிப்பூட்டும் விளையாட்டுக்களுக்கு பாபா முற்றுப்புள்ளி வைக்கிறார். இவ்வாறு சுற்றுவது இலட்சியமின்றி அலைவதைப் போன்றதாகும். பக்தி மார்க்கத்தில் பெருமளவு அலைச்சலும், அழுகையும் உள்ளது. ஏனெனில் அது இருண்ட மார்க்கமாகும். மீரா சுவர்க்கத்திற்கு திரான்சில் சென்றார். அது யோகமோ அல்லது கல்வியோ அல்ல. அவர் அதன் மூலம் ஜீவன் முக்தியை அடைந்தாரா? அவர் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குத் தகுதியுடையவராகினாரா? அவருடைய பல பிறவிகளின் பாவம் அகற்றப்பட்டதா? நிச்சயமாக இல்லை! பல பிறவிகளின் பாவம் தந்தையின் நினைவின் மூலம் மட்டுமே அகற்றப்பட முடியும். காட்சிகள் போன்றவற்றைக் காண்பதில் எந்த நன்மையும் இல்லை. அது பக்தியாகும். அது நினைவோ அல்லது ஞானமோ அல்ல. பக்திமார்க்கத்தில் இவற்றைக் கற்பிப்பதற்கு எவரும் இல்லை. எனவே அவர்கள் எவ்வளவு காட்சிகளைப் பெற்றிருந்தாலும் அவர்களால் ஜீவன் முக்தியைப் பெற முடியாது. ஆரம்பத்தில், குழந்தைகள் தாங்களாகவே திரான்சில் சென்றார்கள். மம்மாவும் பாபாவும் திரான்சில் செல்லவில்லை. ஆரம்பத்தில், பாபா ஸ்தாபனையினதும், விநாசத்தினதும் காட்சியைக் கண்டார். அதன் பின் எதுவும் நடைபெறவில்லை. நான் எவரையும் மேலே அனுப்புவதில்லை. ஆம், நான் (பிரம்மா) அவர்களுடன் கீழே அமர்ந்து கூறுகின்றேன்: 'பாபா, இவரின் நூலை இழுங்கள்" அது நாடகத்தில் இருப்பின், அவருடைய நூல் இழுக்கப்படும். இல்லாவிடில், அது இழுக்கப்படாது. பலர் காட்சிகளைப் பெறுகிறார்கள். அனேகமானோர் ஆரம்பத்தில் காட்சிகளைப் பெற்றார்கள், அனேகமானோர் இறுதியில் காட்சியைப் பெறுவார்கள். அது இரைக்கு மரணமும், வேடனுக்கு சந்தோஷமுமாகும். எண்ணற்ற மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் இங்கேயே சரீரத்தை விட்டுச் செல்ல வேண்டும். எவரும் தங்களின் சரீரத்தையோ அல்லது எதனையேனும் சத்தியயுகத்திற்கோ அல்லது மௌனதாமத்திற்கோ எடுத்துச் செல்ல முடியாது. எண்ணற்ற மனிதர்கள் இருக்கிறார்கள். அனைவரும் அழியப்போகின்றனர். ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இப்பொழுது பிரம்மாவின் மூலம் ஸ்தாபிக்கப்படுகின்றது. புதல்விகளாகிய நீங்கள் கிராமங்களுக்குச் சென்று, பெருமளவு சேவை செய்கிறீர்கள். 'உங்களை ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள்" என நீங்கள் அவர்களுக்கு கூறுகிறீர்கள். இராஜயோகத்தை எவ்வாறு கற்பிப்பது என்பது சந்நியாசிகளுக்குத் தெரியாது. தந்தையைத் தவிர வேறு எவரால் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும்? தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். பின்னர் நீங்கள் உங்கள் இராச்சியத்தைப் பெற்று எல்லையற்ற சந்தோஷத்துடன் இருப்பீர்கள். அங்கு நினைவு செய்ய வேண்டிய அவசியமிருக்காது. அங்கு துன்பத்தின் சுவடு சிறிதளவும் இருக்காது. உங்களுடைய ஆயுட்காலம் நீண்டதாகவும், உங்களுடைய சரீரம் நோயற்றதாகவும் இருக்கும். இங்கு, பெருமளவு துன்பம் இருக்கின்றது. தந்தை உங்களுக்குத் துன்பத்தைக் கொடுப்பதற்காகவே இந்த நாடகத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதல்ல. இது சந்தோஷம் துன்பம், வெற்றி தோல்வி போன்றவற்றை கொண்ட ஒரு உண்மையான, அநாதியான நாடகமாகும். சந்நியாசிகளுக்கு இவை தெரியாது. எனவே எவ்வாறு அவர்களால் எதனையாவது விளங்கப்படுத்த முடியும்? அவர்கள் பக்தி மார்க்கத்திற்கான சமயநூல்களைக் கற்கிறார்கள். 'உங்களை ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவுசெய்யுங்கள்" என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. சந்நியாசிகள் தங்களை ஆத்மாக்களாகக் கருதி பிரம்ம தத்துவத்தை நினைவுசெய்கிறார்கள். அவர்கள் பிரம்ம தத்துவத்தைக் கடவுளாகக் கருதுகிறார்கள். அவர்கள் பிரம்ம தத்துவ ஞானத்தை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். உண்மையில், பிரம்ம தத்துவம் ஆத்மாக்களாகிய நீங்கள் வசிக்கும் வசிப்பிடமாகும், ஆனால் தாங்கள் தத்துவத்துடன் இரண்டறக் கலப்பார்கள் என அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய ஞானம் முற்றிலும் தலைகீழானது. இங்கு, எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். கடவுள் நாற்பதாயிரம் வருடங்களுக்குப் பின் வருவார் என அவர்கள் கூறுகிறார்கள். அது அறியாமை இருள் என அழைக்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: புதிய உலகத்தை ஸ்தாபிப்பதும், பழைய உலகத்தை அழிப்பதும் நானே. நான் ஸ்தாபனையை முன்னெடுத்துச் செல்கின்றேன். விநாசம் முன்னால் உள்ளது. இப்பொழுது விரைந்து தூய்மை ஆகுங்கள்! அதன் மூலமே உங்களால் தூய உலகத்திற்குச் செல்ல முடியும். இது ஒரு பழைய தமோபிரதான் உலகம், அதாவது இது இலக்ஷ்மி நாராயணரின் இராச்சியம் அல்ல. அவர்களுடைய இராச்சியம் புதிய உலகத்தில் இருந்தது. அது இப்பொழுது இல்லை. அவர்கள் தொடர்ச்சியாக மறுபிறவி எடுக்கிறார்கள். சமயநூல்களில் பல விதமான விடயங்கள் எழுதப்பட்டுள்ளன. கிருஷ்ணர் அர்ஜுனனின் இரதச் சாரதியாக அமர்ந்திருப்பதாக அவர்கள் காட்டியிருக்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குள் அமர்ந்திருந்தார் என்பதல்ல. ஸ்ரீகிருஷ்ணர் சரீரதாரியாக இருந்தார். போர் என்ற கேள்விக்கே இடமிருக்கவில்லை. அவர்கள் பாணடவ சேனை, கௌரவ சேனை எனப் பிரிந்திருந்தார்கள். எவ்வாறாயினும், இங்கு அவ்வாறு இடம்பெறுவதில்லை. அவை பக்திமார்க்கத்திற்கான எண்ணற்ற சமயநூல்கள். அவை சத்தியயுகத்தில் இருப்பதில்லை. அங்கு, உங்கள் ஞானத்தின் வெகுமதியான உங்கள் இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். அங்கு, சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. தந்தை புதிய உலகத்தை ஸ்தாபிக்கின்றார், எனவே புதிய உலத்தில் நிச்சயமாக சந்தோஷம் இருக்கும். தந்தை ஒரு பழைய வீட்டைக் கட்டுவாரா? தந்தை ஒரு புதிய வீட்டையே கட்டுவார். அந்த உலகம் சதோபிரதான் உலகம் என அழைக்கப்படுகின்றது. இந்த உலகம் இப்பொழுது தூய்மையற்று தமோபிரதானாக இருக்கின்றது. நீங்கள் இப்பொழுது இராவணனின் அந்நிய இராச்சியத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். சிவபாபா இராமர் என அழைக்கப்படுகிறார். அவர்கள் 'இராமா, இராமா" என மந்திரத்தை உச்சரித்து, இராமரின் பெயரில் தானம் செய்கின்றார்கள். இப்பொழுது, இராமருக்கும் சிவபாபாவுக்கும் இடையில் பெருமளவு வித்தியாசம் இருக்கின்றது. சிவபாபா இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: என்னை மட்டும் நினைவுசெய்யுங்கள். இப்பொழுது நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கு திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் தந்தையை நினைவுசெய்து தூய்மையாகும் வரை உங்களால் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாதிருக்கும். உங்களுக்குள் வெகுசிலரே தந்தையை மிகச் சரியாக நினைவு செய்கிறீர்கள். உங்கள் உதடுகளின் மூலம் எதனையும் கூறுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. பக்திமார்க்கத்தில் மக்கள் 'இராமா, இராமா" என அவர்களின் உதடுகளின் மூலம் கூறுகிறார்கள். எவரேனும் இதனை உச்சரிக்காவிட்டால் அவர்கள் அவரை நாஸ்திகர் என அழைக்கிறார்கள். அவர்கள் மிகவும் உரத்துப் பாடுகிறார்கள். மரம் வளர்கையில், பக்திமார்க்கத்திற்கான சம்பிரதாயங்களும் வளர்ச்சியடைகின்றன. விதை மிகவும் சிறியது. உங்களிடம் எதுவுமில்லை, நீங்கள் எந்த ஒலியையும் எழுப்புவதுமில்லை. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, என்னை நினைவு செய்யுங்கள் என்று உங்களுக்கு கூறப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் உதடுகளின் மூலம் எதனையும் கூறவேண்டியதில்லை. குழந்தைகள் தங்கள் புத்தியின் மூலம் தங்களின் பௌதீகத் தந்தையை நினைவுசெய்கிறார்கள். அவர்கள் அமர்ந்திருந்து, ''பாபா, பாபா" என்று கூறுவதில்லை. ஆத்மாக்களின் தந்தை யார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்களே. ஆத்மாக்களுக்கு வேறு எந்தப் பெயரும் இல்லை. எவ்வாறாயினும், சரீரத்தின் பெயர்கள் மாறுகின்றன. ஆத்மா ஆத்மாவே. அவரோ பரமாத்மா. அவரின் பெயர் சிவன். அவருக்குத் தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. தந்தை கூறுகின்றார்: நான் எனக்கென ஒரு சரீரத்தைக் கொண்டிருப்பேனாயின், நானும் பிறப்பும் மறுபிறப்பும் எடுக்க வேண்டும். பின்னர் உங்களுக்கு ஜீவன் முக்தியை யார் அருள்வார்? பக்திமார்க்கத்தில் மக்கள் என்னை நினைவு செய்கிறார்கள். பல ரூபங்கள் இருக்கின்றன. இப்பொழுது நீங்கள் நரகவாசிகளிலிருந்து சுவர்க்கவாசிகள் ஆகின்றீர்கள். நீங்கள் நரகத்தில் பிறப்பெடுத்திருக்கிறீர்கள் ஆயினும், நீங்கள் சுவர்க்கம் செல்வதற்காக இறப்பீர்கள். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வதற்காகவே இங்கு வந்திருக்கிறீர்கள். ஒரு பாலம் கட்டப்படுவதற்கு முன், அவர்கள் அத்திவார விழாவை நடத்தி, அதன் பின்பே பாலம் கட்டும் பணி தொடர்கின்றது. தந்தை சுவர்க்க ஸ்தாபனையின் ஆரம்ப விழாவை (அத்திவார விழா) முன்னரே செய்துவிட்டார். இப்பொழுது ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. ஒரு கட்டடத்தைக் கட்டுவதற்கு நேரம் எடுக்கின்றதா? அரசாங்கம் ஒன்றைக் கட்ட ஆரம்பித்தால், அவர்கள் அதனை ஒரு மாதத்துக்குள் கட்டி முடித்துவிடுவார்கள். கட்டப்பட்ட வீடுகளை வெளிநாடுகளில் நீங்கள் வாங்கலாம். சுவர்க்கத்தில் உங்கள் புத்தி ஆழமாகவும், சூட்சுமமானதாகவும், சதோபிரதானாகவும் இருக்கும். விஞ்ஞானிகள் மிகச் சாதுரியமான புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மிக விரைவாகக் கட்டுவார்கள். அங்கு, இரத்தினங்களால் பதிக்கப்பட்ட சுவர்கள் இருக்கும். இ;க்காலத்தில், அவர்கள் போலியான நகைகளை மிக விரைவாகத் தயாரிக்கிறார்கள். அவை உண்மையானவற்றை விட அதிகளவில் பிரகாசிக்கின்றன. இக்காலத்தில் மிக விரைவாக பொருட்களை உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்களும் அவர்களிடம் இருக்கின்றன. அங்கு, ஒரு வீட்டைக் கட்டுவதற்கு நீண்டகாலம் எடுக்காது. அனைத்தையும் சுத்தப்படுத்துவதற்கு நேரம் எடுக்கின்றது. பொன் நகரமாகிய துவாரகை கடலின் கீழிருந்து தோன்றுமென்பதல்ல. எனவே, தந்தை கூறுகின்றார்: உண்ணுங்கள், பருகுங்கள், ஆனால் தந்தையை நினைவுசெய்யுங்கள். அதன் மூலமே உங்களுடைய பாவங்கள் அழிக்கப்பட முடியும். வேறு முறைகள் இல்லை. நீங்கள் பல பிறவிகளாகக் கங்கையில் நீராடுகிறீர்கள், ஆனால் எவராலும் முக்தியையோ ஜீவன் முக்தியையோ அடைய முடியவில்லை. இங்கு, தந்தை நீங்கள் தூய்மையாகுவதற்கான வழிமுறையினைக் காட்டுகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் தூய்மையாக்குபவர். 'ஓ தூய்மையாக்குகின்ற பாபாவே வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்." என நீங்கள் கூவி அழைத்தீர்கள். நாடகத்தின் இறுதியில், நடிகர்கள் அனைவரும், தயாரிப்பாளரும் மேடையில் தோன்றுகின்றனர். அவர்;கள் அனைவரும் மேடையில் நிற்பார்கள். அதே போன்று இங்கும் நடைபெறுகின்றது. ஆத்மாக்கள் அனைவரும் கீழே வந்த பின்னர் நீங்கள் திரும்பிச் செல்ல ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் இன்னும் தயாராகவில்லை. நீங்கள் இன்னும் உங்களுடைய கர்மாதீத ஸ்திதியை அடையவில்லை. எனவே எவ்வாறு விநாசம் இடம்பெற முடியும்? புதிய உலகத்திற்காக உங்களுக்குக் கற்பிக்கவே தந்தை வந்திருக்கிறார். அங்கு, மரணம் இல்லை, அதாவது நீங்கள் மரணத்தை வெல்கிறீர்கள். உங்களை மரணத்தை வெல்லச் செய்பவர் யார்? மரணங்களுக்கு எல்லாம் மரணமாக இருப்பவர். அவர் பெருந்தொகையானோரைத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். நீங்கள் பெருமளவு சந்தோஷத்துடன் திரும்புகின்றீர்கள். தந்தை இப்பொழுது அனைவரின் துன்பத்தையும் அகற்ற வந்துள்ளார். இதனாலேயே மக்கள் அவரின் புகழைப் பாடுகின்றார்கள்: தந்தையாகிய கடவுளே எங்களைத் துன்பத்திலிருந்து விடுவியுங்கள்! எங்களை அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் அழைத்துச் செல்லுங்கள். எவ்வாறாயினும், தந்தை இப்பொழுது சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார் என்பது மனிதர்களுக்குத் தெரியாது. நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்லும்போது மரம் மிகச் சிறியதாக இருக்கும், பின்னர் விரிவாக்கம் இடம்பெறும். இப்பொழுது மற்றைய சமயங்கள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால் அந்த ஒரு சமயம் இல்லை. பெயர், ரூபம், இராச்சியம் போன்ற அனைத்தும் மாறுகின்றன. ஆரம்பத்தில் நீங்கள் இரட்டைக் கிரீடத்தைக் கொண்டிருந்தீர்கள். பின்னர் நீங்கள் ஒற்றைக் கிரீடம் உடையவர்கள் ஆகிவிட்டீர்கள். சோமநாதர் ஆலயம் கட்டப்பட்ட போது, அங்கு பெருமளவு செல்வம் இருந்தது. அதுவே மிகப் பெரிய ஆலயம். அது கொள்ளையடிக்கப்பட்டது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் பலமில்லியன்மடங்கு பாக்கியசாலிகள் ஆகின்றீர்கள். ஒவ்வொரு அடியிலும் தந்தையைத் தொடர்ச்சியாக நினைவுசெய்வதனால் நீங்கள் பலமில்லியன்களைச் சேமிக்கின்றீர்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்வதனால் உங்களால் பெருமளவு வருமானத்தைச் சம்பாதிக்க இயலுகின்றது. எனவே நீங்கள் ஏன் அத்தகைய தந்தையை நினைவுசெய்வதற்கு மறக்கிறீர்கள்? நீங்கள் தந்தையை எந்தளவுக்கு நினைவுசெய்கிறீர்களோ எந்தளவுக்கு சேவை செய்கின்றீர்களோ, அந்தளவுக்கு உயர்ந்த அந்தஸ்தை நீங்கள் பெறுவீர்கள். பல நல்ல குழந்தைகள் முன்னேறிச் செல்லும் போது விழுகிறார்கள். உங்களுடைய முகத்தை நீங்கள் அழுக்காக்குவீர்களாயின், நீங்கள் சம்பாதித்த வருமானம் அனைத்தும் இழக்கப்படும். நீங்கள் ஒரு பெரிய அதிர்ஷ்ட இலாபத்தை இழப்பீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் குடும்பத்தைப் பராமரிக்கும் அதேவேளையில், உங்களுடைய புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் இணைத்திருங்கள். கவனயீனமாக இருந்து, தவறு செய்யாதீர்கள். தூய்மையைக் கிரகிப்பதின் மூலம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மையை ஏற்படுத்துங்கள்.

2. நினைவுயாத்திரையிலும் இந்தக் கல்வியிலும் ஒரு வருமானம் ஈட்டப்பட உள்ளது. திரான்ஸ் என்பது அலைந்து திரிவது மட்டுமே. அதில் எந்த நன்மையும் இல்லை. எந்தளவுக்கு சாத்தியமோ, அந்தளவுக்கு விழிப்பாக இருங்கள். தந்தையை நினைவுசெய்து உங்கள் பாவங்களை அழித்துக்கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
 உங்களின் மேன்மையான விழிப்புணர்வினால் உங்களின் ஸ்திதியையும் சூழலையும் மேன்மையாக்குவதன் மூலம் எல்லோருடனும் ஒத்துழைப்பீர்களாக.

யோகம் என்றால் மேன்மையான விழிப்புணர்வில் இருத்தல் : மேன்மையான ஆத்மாவான நான், மேன்மையான தந்தையின் குழந்தை. இந்த விழிப்புணர்வு உங்களுக்குள் இருக்கும்போது, உங்களின் ஸ்திதியும் மேன்மை அடையும். மேன்மையான ஸ்திதியினால் இயல்பாகவே மேன்மையான சூழல் உருவாக்கப்படும். அது பல ஆத்மாக்களைத் தன்னை நோக்கி ஈர்க்கும். யோகத்தில் இருந்தவண்ணம் ஆத்மாக்களான நீங்கள் எங்கே இருந்து எதைச் செய்தாலும், சூழலும் மற்றவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கும். இத்தகைய ஒத்துழைக்கும் ஆத்மாக்கள், தந்தையாலும் உலகினாலும் நேசிக்கப்படுகிறார்கள்.

சுலோகம்:
அசைக்க முடியாத ஸ்திதி என்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பதன் மூலம், நீங்கள் இராச்சிய சிம்மாசனத்தைப் பெறுவீர்கள்.