29.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இங்கே நீங்கள் கல்வி கற்பதற்காக வந்திருக்கிறீர்கள். உங்கள் கண்களை நீங்கள் மூட வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் பொதுவாகக் கண்களைத் திறந்தவண்ணமே கல்வி கற்பார்.

பாடல்:
குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கக்கூடாத, ஆனால் பக்தி மார்க்கத்தில் பக்தர்களுக்கு இருக்கும் பழக்கம் எது?

பதில்:
பக்தி மார்க்கத்தில் அவர்கள் தேவ தேவியரில் யாரேனும் ஒருவரது விக்கிரகத்திற்கு முன்னால் சென்று, தொடர்ந்து ஏதேனும் ஒன்றைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். எதையாவது கேட்கும் பழக்கத்தை அவர்கள் ஏற்படுத்திவிட்டார்கள். அவர்கள் இலக்ஷ்மியின் முன்னால் சென்று செல்வத்தைக் கேட்கிறார்களாயினும், அவர்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது இந்தப் பழக்கம் இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தையின் ஆஸ்திக்கு உரிமை இருக்கிறது. நீங்கள் சரீரமற்ற தந்தையைத் தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான். இதன் மூலமே நீங்கள் உண்மையான வருமானமொன்றை சம்பாதித்துக்கொள்ள முடியும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கிருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இது ஒரு பாடசாலை. ஆனாலும், இங்கே நீங்கள் சரீரதாரிகள் எவரையுமோ அல்லது படங்கள் எதையுமோ பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இங்கே, எவரையும் பார்க்கின்ற போதிலும், சரீரமற்றவரை நோக்கியே உங்கள் புத்தி செல்ல வேண்டும். பாடசாலையில் மாணவர்களின் கவனம் எப்போதும் ஆசிரியர் மீதே இருக்கும். ஏனெனில், அவரே கற்பிப்பதால் அவர்கள் நிச்சயமாக அவர் கூறுவதைக் கேட்கவேண்டும். அதன் பின் அவர்கள் அவருக்குப் பதிலளிக்கவும் வேண்டும். ஆசிரியர் ஒருவர் ஒரு கேள்வி கேட்கும்போது, மாணவர்கள் ‘என்னால் பதிலளிக்க முடியும்.’ என்று சைகை செய்வார்கள். இது தனித்துவம் வாய்ந்த ஒரு பாடசாலை, ஏனெனில், இந்தக் கல்வி தனித்துவமானது. கற்பிப்பவருக்கு சரீரமில்லை. எனவே, நீங்கள் கற்பதற்குக் கண்களைத் திறந்தவாறு அமர்ந்திருக்க வேண்டும். பாடசாலையில் உள்ள மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு முன்னால், கண்களை மூடியவாறு அமர்ந்திருப்பார்களா? பக்தி மார்க்கத்தில், அவர்கள் கண்களை மூடியவாறு மணிமாலையை உருட்டிக் கொண்டிருப்பதுண்டு. சாதுக்களும் தங்கள் கண்களை மூடியவாறே அமர்ந்திருப்பார்கள். தனது மனம் விஷமம் புரியும் என ஒவ்வொருவரும் நினைப்பதனால், பெண்களை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். ஆனாலும், இன்றைய உலகம் தமோபிரதானமானது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இங்கே நீங்கள் சரீரத்தைப் பார்த்தாலும், சரீரமற்றவராகிய அவரை நினைவு செய்வதிலேயே உங்கள் புத்திகள் மும்முரமாக இருக்கின்றன. சரீரத்தைப் பார்த்துக் கொண்டு சரீரமற்றவரை நினைவு செய்கின்ற சாதுவோ சந்நியாசியோ யாருமே இல்லை. அந்த பாபாவே இங்கே இந்த ரதத்தில் இருந்து எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் பேசுகிறார். ஆத்மாவே எல்லாவற்றையும் செய்கிறார். சரீரம் எதையுமே செய்வதில்லை. ஆத்மா கேட்டுக் கொண்டிருக்கிறார். பௌதீக ஞானத்தையோ ஆன்மீக ஞானத்தையோ ஆத்மாவே கேட்டுக் கொண்டிருந்து எடுத்துரைக்கிறார். ஆத்மாவே பௌதீக ஆசிரியர் ஆகுகிறார். சரீரத்தின் மூலம் பௌதீகமான கல்வியொன்றை நீங்கள் கற்கிறீர்கள். ஆனால், ஆத்மாவே அதைக் கற்கின்றார். நல்ல, தீய சம்ஸ்காரங்கள் எல்லாம் ஆத்மாவாலேயே உட்கிரகிக்கப்படுகின்றன. சரீரம் சாம்பலாகிப் போகின்றது. மனிதர்கள் எவருக்கும் இது தெரியாது. அவர்களுக்கு‚ ‘நான் இன்ன, இன்னார்.’ ‘நான் ஒரு பிரதம மந்திரி.’ என்ற சரீர உணர்வு இருக்கிறது. ‘ஆத்மாவாகிய நான் இந்த பிரதம மந்திரியின் சரீரத்தை எடுத்திருக்கிறேன்.’ என்று அவர்கள் கூறப் போவதில்லை. ஆத்மாவே எல்லாவற்றையும் செய்கிறார் என்று நீங்கள் மட்டுமே புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மா அழிவற்றவர். இங்கே ஒரு பாகத்தை நடிப்பதற்காக நீங்கள் சரீரத்தைப் பெற்றிருக்கிறீர்கள். சரீரத்தில் ஆத்மா இல்லையென்றால், சரீரத்தால் எதுவுமே செய்ய முடியாது. ஆத்மா சரீரத்தை விட்டுப் பிரியும் போது, சரீரம் வெறும் சடலமாகவே இருக்கும். ஆத்மாவை இந்தக் கண்களால் காண முடியாது. அது சூட்சுமமானது. தந்தை கூறுகிறார்: தந்தையை உங்கள் புத்தியால் நினைவு செய்யுங்கள். சிவபாபா இவர் மூலம் உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது உங்கள் புத்தியில் இருக்கிறது. இதுவும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு சூட்சுமமான விடயமேயாகும். சிலர் மிக நன்றாகப் புரிந்து கொள்கிறார்கள். மற்றவர்களோ புரிந்துகொள்வதே இல்லை. இவ்வளவே புரிந்து கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. அல்பா என்றால் கடவுள், பாபா. கடவுள் அல்லது ஈஸ்வரன் என்று மட்டுமே கூறினால், நீங்கள் தந்தையின் உறவை அனுபவிக்கமாட்டீர்கள். இந்த நேரத்தில் எல்லோருக்கும் கல்லுப்புத்தியே இருக்கிறது. ஏனெனில், அவர்களுக்கு படைப்பவராகிய தந்தையையும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் தெரியாது. இந்த உலகத்தின் வரலாறும் புவியியலும் தொடர்ந்தும் மீண்டும் இடம்பெறுகிறது. இப்போது இது சங்கமயுகம். இதைப் பற்றி எவருக்குமே தெரியாது. இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆனால், உங்களுக்கும் இது ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. இப்போது பாபா உங்களை ஞானத்தால் அலங்கரிக்கிறார். ஆனால், இங்கிருந்து நீங்கள் சென்றதுமே மாயை உங்களைப் புழுதியில் உருட்டி, உங்கள் ஞான அலங்காரங்களைச் சீரழித்து விடுகின்றாள். தந்தை உங்களை அலங்கரிக்கின்றார். ஆனால், நீங்கள் உங்கள் முயற்சியை எடுக்கவும் வேண்டும். சில குழந்தைகள் தாங்கள் அலங்கரிக்கப்படவே இல்லை என்பது போல மூர்க்கமாகப் பேசுகிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் மறந்து விடுகிறார்கள். பின்னால் சென்று அமரும் மாணவர்கள், கல்வியில் அவ்வளவாக மனதைச் செலுத்துவதில்லை. அவர்கள் ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று செல்வந்தர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் எதையுமே கற்பதில்லை. ஆனால், இது மிக மேன்மையான ஒரு கல்வியாகும். கற்காமல் உங்களால் எதிர்கால அந்தஸ்தொன்றைப் பெற்றுக் கொள்ள முடியாது. இங்கே, நீங்கள் செல்வந்தராகுவதற்காக ஒரு தொழிற்சாலையில் இருந்து வேலை செய்யத் தேவையில்லை. இங்கே எல்லாமே அழிந்துபோகப் போகின்றது. உங்கள் அழிவற்ற வருமானம் மட்டுமே உங்களோடு கூட வரும். ஒருவர் இறக்கும் போது வெறுங்கையுடனேயே செல்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் தன் கையில் எதையுமே கொண்டு செல்வதில்லை. நீங்களோ கை நிறையக் கொண்டு செல்வீர்கள். இதுவே உண்மையான வருமானம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே 21 பிறவிகளுக்கு உங்கள் உண்மையான வருமானமாகும். எல்லையற்ற தந்தையே உங்களை உண்மையான வருமானத்தை சம்பாதித்துக் கொள்ளச் செய்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் இந்த சரீரத்தைப் பார்க்கிறீர்கள். ஆனாலும், சரீரமற்ற தந்தையையே நீங்கள் நினைவு செய்கிறீர்கள். ஏனெனில், நீங்களும் ஆத்மாக்களே. ஆத்மாக்கள் தங்கள் தந்தையை மட்டுமே பார்க்கிறார்கள். நீங்கள் அவரிடம் கற்கின்றீர்கள். ஆத்மாவையோ பரமாத்மாவையோ நீங்கள் கண்களால் காண்பதில்லை என்கின்ற போதும், உங்கள் புத்தியால் அவர்களை நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள்: ஆத்மாவாகிய நான் அழிவற்றவன். இந்த சரீரம் அழிந்து போகக்கூடியது. இந்தத் தந்தை குழந்தைகளாகிய உங்களைத் தனக்கு முன்னால் பார்த்தாலும், ஆத்மாக்களுக்கே தான் விளங்கப்படுத்துகிறார் என்று அவர் தனது புத்தியில் அறிந்து வைத்திருக்கிறார். தந்தை உங்களுக்குக் கற்பிப்பது சத்தியத்தைத் தவிர வேறெதுவுமேயில்லை. அதில் பொய்மையின் சுவடு சிறிதளவேனும் கிடையாது. இது பொய்யான உலகம். நீங்கள் சத்திய உலகத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். கலியுகம் பொய்யான பூமியும் சத்தியயுகம் சத்திய பூமியும் ஆகும். இரவுக்கும் பகலுக்குமான வேறுபாடு காணப்படுகிறது. சத்தியயுகத்தில் துன்பம் என்பதற்கே இடமில்லை. அதன் பெயரே சந்தோஷ தாமம் ஆகும். எல்லையற்ற தந்தை மட்டுமே உங்களை அந்த சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆக்குவார். ஏனைய எல்லோருக்கும் சரீரம் இருக்கின்ற போதிலும், அவருக்கு சரீரமில்லை. அவரது ஆத்மாவின் பெயர் மாற்றமடைவதுண்டா? அவரது பெயர் என்றுமே சிவன் என்பதேயாகும். ஏனையோர் அனைவரும் ஆத்மாக்கள் எனப்படுகிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்கள் அவர்களின் சரீரங்களையே குறிக்கின்றன. சிவலிங்கம் அசரீரியானவரைக் குறிக்கின்றது. ‘ஞானக்கடலும், அமைதிக்கடலும்” என்பது சிவனின் புகழேயாகும். அவர் தந்தையாகவும் இருக்கிறார். நிச்சயமாக நீங்கள் அவரிடமிருந்து ஒரு ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வீர்கள். படைப்பு, படைப்பிடமிருந்து எந்த ஆஸ்தியையும் பெற்றுக் கொள்வதில்லை. படைப்பவரே தனது குழந்தைகளுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பார். ஒருவருக்கு சொந்தக் குழந்தைகள் இருக்கும் போது, அவர் தன் சகோதரருடைய குழந்தைகளுக்கு ஆஸ்தியைக் கொடுப்பாரா? இங்கேயும் எல்லையற்ற தந்தை தனது எல்லையற்ற குழந்தைகளுக்கே ஆஸ்தியைக் கொடுப்பார். மக்கள் கற்பதன் மூலம் சட்டத்தரணிகள் போன்றவர்கள் ஆகுவதைப் போல், இதுவும் ஒரு கல்வியாகும். அவர்களின் யோகம் கல்வியுடனும், அதைக் கற்பிப்பவருடனும் இணைக்கப்பட்டு இருக்கும். இங்கே உங்களுக்குக் கற்பிப்பவர், ஒரு சரீரமற்றவர் ஆவார். ஆத்மாக்களாகிய நீங்களும் சரீரமற்றவர்கள் ஆவீர்கள். தந்தை கூறுகிறார்: நான் ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கிறேன். தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை ஒரு தடவையே வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். ஆத்மாவே கற்கின்றார். சரீரத்தின் மூலம் துன்பத்தையும் சந்தோஷத்தையும் அனுபவிப்பவர் ஆத்மாவே ஆவார். ஆத்மா ஒருவர் சரீரத்தை விட்டுச் சென்று விட்டார் என்றால் அதன் பின் அந்த சரீரத்தை நீங்கள் எவ்வளவு தான் அடித்தாலும், அது வெறும் தூசியை அடிப்பது போலாகும். மீண்டும் மீண்டும் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். எல்லாவற்றையும் வரிசைக்கிரமமாகவே நீங்கள் உட்கிரகித்துக் கொள்கிறீர்கள் என்பது பாபாவிற்குத் தெரியும். சிலர் ஒன்றையுமே புரிந்து கொள்ள முடியாத அளவுக்குப் புத்தியற்றவர்களாக இருக்கிறார்கள். ஞானம் மிக இலகுவானது. பார்வையற்றவர்கள், அங்கவீனர்கள், முடமானவர்களாலும் கூட இதைப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில், எல்லாமே ஆத்மாவுக்கே விளங்கப்படுத்தப்படுகிறது. ஆத்மா முடமானவரோ அங்கவீனரோ இல்லை. சரீரம் தான் அவ்வாறானதாக இருக்கிறது. தந்தை இங்கிருந்து எல்லாவற்றையும் உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். ஆனாலும், அவர்கள் பக்தி மார்க்கத்திலிருந்தே கண்களை மூடி அமர்ந்திருக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால், இங்கேயும் அதையே செய்கிறார்கள். அதிலே அவர்கள் போதையடைந்தவர்களைப் போல இருக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: உங்கள் கண்களை மூடாதீர்கள். எவரையேனும் உங்களுக்கு முன்னால் பார்க்கும் போது, புத்தியில் தந்தையை வைத்திருங்கள். அப்பொழுது தான், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது மிக இலகுவானது! இருந்த போதிலும் நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, என்னால் உங்களை நினைவு செய்ய முடியாதிருக்கின்றது. ஓ! உங்களுக்கு எல்லைக்குட்பட்ட ஆஸ்தியைத் தரும் உங்கள் பௌதீகத் தந்தையை இறக்கும்வரை உங்களால் நினைவு செய்ய முடிகின்றது. ஆனால் இவரோ சகல ஆத்மாக்களுக்கும் எல்லையற்ற தந்தையாக இருக்கிறார். அப்படியிருந்தும், உங்களால் அவரை நினைவு செய்ய முடியாதிருக்கிறது! ‘ஓ தந்தையே, இறைவா, எனக்கு வழிகாட்டுங்கள்!’ என்று இந்தத் தந்தையை நீங்கள் அழைத்தீர்கள். உண்மையில் இவ்வாறு கூறுவது தவறு. தந்தை ஒருவருக்கு மட்டும் வழிகாட்டி ஆகுவதில்லை. அவரே எல்லையற்ற வழிகாட்டி. அவர் ஒரேயொருவரை மட்டும் விடுதலை செய்யப் போவதில்லை. தந்தை கூறுகிறார்: நான் வந்து எல்லோருக்கும் சற்கதி கொடுக்கிறேன். அனைவரையும் சாந்தி தாமத்திற்கு அனுப்பி வைப்பதற்காக நான் வந்திருக்கிறேன். இங்கே எதையுமே கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் எல்லையற்ற தந்தையாவார். அவர்கள் எல்லைக்குட்பட்டதற்குள் வந்து, தொடர்ந்தும் ‘நான்!, நான்!’ ‘ஓ இறைவா, எனக்குச் சந்தோஷத்தைக் கொடுங்கள்! என் துன்பத்தை அகற்றுங்கள்! நான் கீழ்த்தரமான பாவியாவேன்! என் மீது கருணை காட்டுங்கள்!’ என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: எல்லையற்ற பழைய உலகத்தைப் புதியதாக்குவதற்காக நான் வந்திருக்கிறேன். தேவதேவியர்கள் புதிய உலகத்தில் வசிக்கிறார்கள். நீங்கள் முற்றிலும் தூய்மையற்றவர்களாகிய பின்பு, ஒவ்வொரு ஐயாயிரம் வருடத்திற்கு ஒருமுறை நான் வருகிறேன். இது அசுரத்தனமான சமுதாயம். உண்மையைப் பேசும் சத்குரு ஒரேயொருவரே இருக்கிறார். அவர் மட்டுமே தந்தையும் ஆசிரியரும் சத்குருவும் ஆவார். தந்தை கூறுகிறார்: இந்தத் தாய்மார்கள் சுவர்க்கத்தின் வாசலைத் திறந்து வைப்பார்கள். ‘சுவர்க்கத்தின் வாயில்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும், மக்களுக்கு இதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவர்கள் நரகத்தில் இருப்பதாலேயே அழைக்கிறார்கள். பாபா இப்போது உங்களுக்கு சுவர்க்கத்திற்கான பாதையைக் காட்டுகிறார். தந்தை கூறுகிறார்: நான் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கி, உங்களைத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக வருகிறேன். இப்போது உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழியும். இந்த ஒரேயொரு விடயத்தை எல்லோருக்கும் கூறுங்கள்: தந்தை கூறுகிறார்: மாயையை வென்றவர்களாகி, அதன் மூலம் உலகத்தை வென்றவர்கள் ஆகுங்கள். உங்கள் அனைவருக்குமே உலக அதிபதிகளாகும் வழியை நான் காட்டுகின்றேன். தீபாவளியின்போது மக்கள் இலக்ஷ்மியை வழிபாடு செய்கிறார்கள். அவரிடம் அவர்கள் செல்வத்தைக் கேட்கிறார்கள். ‘எனக்கு நல்லாரோக்கியம் கொடுங்கள்.’ என்றோ அல்லது ‘என் ஆயுளை அதிகரியுங்கள்.’ என்றோ அவர்கள் அவரிடம் கேட்பதில்லை. தந்தையிடமிருந்து நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். உங்கள் ஆயுள் மிக நீண்டதாகுகின்றது. இப்போது அவர் ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் போன்ற எல்லாவற்றையுமே உங்களுக்குத் தருகிறார். அவர்கள் இலக்ஷ்மியிடம் வெறும் கற்களையும் கூழாங்கற்களையுமே கேட்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அவைகூடக் கிடைப்பதில்லை. வெறுமனே அந்தப் பழக்கதோஷத்தை வளர்த்து வைத்திருக்கிறார்கள். எதையாவது இறைஞ்சிக் கேட்பதற்கென்றே அவர்கள் தேவதேவியர்களுக்கு முன்னால் செல்கிறார்கள். இங்கே, நீங்கள் தந்தையை எதையுமே கேட்க வேண்டிய அவசியமில்லை. தந்தை உங்களைக் கேட்கிறார்: இடையறாது என்னையே நினைவு செய்வதன் மூலம் நீங்கள் அதிபதிகள் ஆகுவீர்கள். உலகச் சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம், பூகோள ஆட்சியாளர்கள் ஆகுவீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களை உட்கிரகிக்கவும் வேண்டும். தந்தையிடமிருந்து நீங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவதால், இதற்காக எதையுமே கூற வேண்டியதில்லை. இப்போது அவர்களை நீங்கள் வழிபடுவீர்களா? நீங்களே அவ்வாறு ஆகுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, ஏன் அந்தப் பஞ்ச பூதங்களை நீங்கள் வழிபட வேண்டும்? நாங்கள் உலக ஆட்சியதிகாரத்தைப் பெறுகிறோம். எனவே, இவற்றுடன் நாங்கள் என்ன செய்யப் போகின்றோம்? இப்போது நீங்கள் கோவில்கள் போன்றவற்றுக்குச் செல்வதில்லை. தந்தை கூறுகிறார்: அவை எல்லாம் பக்தி மார்க்கத்து சம்பிரதாயங்கள். ஞானத்தில், ‘சதா என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள்!’ என்ற ஒன்றே இருக்கிறது, அவ்வளவுதான். இந்த நினைவின் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் சகல நற்குணங்களாலும் நிறைந்தவர்களாக இருந்தீர்கள். மீண்டும் நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும். மக்கள் இதைப் புரிந்துகொள்வதில்லை. கல்லுப்புத்தி கொண்டவர்களோடு தந்தை பெரும்பாடுபட வேண்டியுள்ளது. உங்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கவேண்டும். தந்தையொருவரைத் தவிர வேறெந்த சாது, சந்நியாசிகளாலும் உங்களுக்கு இவற்றைக் கூறமுடியாது. இவர் கடவுள் அல்ல. இப்போது அவர் தன் பல பிறவிகளின் இறுதியில் இருக்கிறார். முழுமையாக 84 பிறவிகளையும் எடுத்தவருக்குள் நான் பிரவேசிக்கின்றேன். அவர் ஒரு கிராமத்துப் பையனாக இருந்தார். பின்பு அவர் அவலட்சணமானவரிலிருந்து அழகானவராகுகிறார். அவர் ஒரு முழுக்கிராமத்துப் பையனாக இருந்தார். அதன் பின், அவர் சற்றுச் சாதாரணமானவராகியதும், பாபா அவருக்குள்ளே பிரவேசித்தார். ஏனெனில், சூளை(பத்தி) உருவாக்கப்பட வேண்டியிருந்தது. அவர்களுக்கெல்லாம் உணவளிப்பது யார்? எனவே, சாதாரண நிலையில் இருந்த ஒருவர் தேவைப்பட்டார். இவையெல்லாம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். தந்தையே கூறுகிறார்: இவரின் பல பிறவிகளின் இறுதியில் இவருக்குள்ளே நான் பிரவேசிக்கிறேன். இவர் முற்றிலும் தூய்மையற்றவர் ஆகிவிட்டார். இவரே பின்பு அதி தூய்மையானவராகவும் ஆகப் போகின்றவர். அவர் 84 பிறவிகள் எடுத்திருக்கிறார். உங்களுக்கும் அதுவே பொருந்தும். வெறுமனே ஒரேயொருவர் மட்டுமல்ல, பலர் இருக்கிறார்கள். சூரிய, சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர்களாகப் போகின்றவர்கள் மட்டுமே வரிசைக்கிரமமாக அவர்களின் முயற்சிக்கேற்ப இங்கே வருகிறார்கள். ஏனையோரால் இங்கே தொடர்ந்து இருக்க முடியாதிருக்கும். தாமதமாக வருபவர்கள், சிறிதளவு ஞானத்தையே கேட்டுப் பின்னர் தாமதமாகவே கீழிறங்கி வருவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை உங்கள் மீது சூட்டும் ஞான அலங்காரங்களை நிரந்தரமாகப் பேணிக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். மாயையின் புழுதியில் உங்கள் ஞான அலங்காரத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள். நன்றாகக் கற்று, அழிவற்ற வருமானத்தை சம்பாதித்துக் கொள்ளுங்கள்.

2. உங்களுக்கு முன்னால், இந்தச் சரீரத்தை, அதாவது, இந்தச் சரீர வடிவத்தைப் பார்க்கின்ற போது, உங்கள் புத்தியால் சரீரமற்றவராகிய தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் கண்களை மூடியவாறு அமர்ந்திருக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். எல்லையற்ற தந்தையிடம் எதையுமே கேட்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இந்த நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த தீவிர முயற்சியாளராகி, துரிதமாகச் செல்வதன் மூலம் முதலில் வருவீர்களாக.

அவ்யக்த பாகத்தில் வருகின்ற ஆத்மாக்கள், ‘பிந்தி வந்து வேகமாகச் செல்வார்கள், வேகமாகச் சென்று முதலில் வருவார்கள்’ என்ற ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளார்கள். எனவே, இந்த நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களைப் பயிற்சி செய்யுங்கள். இந்த அவ்யக்த பராமரிப்பு, இலகுவாக உங்களைச் சக்திவாய்ந்தவர்கள் ஆக்குகிறது. அத்துடன் உங்களால் முடிந்த அளவிற்கு முன்னேறிச் செல்லவும் முடியும். பாப்தாதாவும் கருவி ஆத்மாக்களும் சதா உங்கள் எல்லோருக்கும் முன்னால் பறவுங்கள் என்ற ஆசீர்;வாதங்களை வழங்குவதனால், நீங்கள் இலகுவாக, வேகமாகச் செல்லும் பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள்.

சுலோகம்:
‘அசரீரியானவரும் பௌதீகமானவரும் சமமானவர்கள்’ என்ற மகா மந்திரத்தின் விழிப்புணர்வுடன் சதா யோகி ஆகுங்கள்.