30.08.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் துன்பத்தை அகற்றுபவராகிய தந்தை உங்களைச் சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளார், நீங்கள் சுவர்க்கத்தில் இளவரசிகள் ஆகப் போகின்றீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்க வேண்டும்.

பாடல்:
குழந்தைகளின் எந்த ஸ்திதியைக் கண்டு தந்தை கவலைப்படுவதில்லை, ஏன்?

பதில்:
குழந்தைகளிற் சிலர் முதற்தரமான நறுமணமுள்ள மலர்கள் ஆவார்கள். சிலர் முற்றிலும் நறுமணம் அற்றவர்களாக உள்ளனர். சிலரின் ஸ்திதி மிகவும் நன்றாக உள்ளது, ஆனால் பிறரோ மாயையின் புயல்களால் தோற்கடிக்கப்படுகின்றார்கள். இவை அனைத்தையும் பார்த்தும் தந்தை கவலையடைவதில்லை, ஏனெனில் சத்தியயுக இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவது அவருக்குத் தெரியும். இருப்பினும் தந்தை உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்: குழந்தைகளே, இயலுமானவரை நினைவில் நிலைத்திருங்கள். மாயையின் புயல்களுக்குப் பயப்படாதீர்கள்.

ஓம் சாந்தி.
அனைவரிலும் இனிமையிலும் இனிமையான, எல்லையற்ற தந்தை இங்கமர்ந்திருந்து, இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை மிகவும் இனிமையானவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அடுத்து, உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்ற ஆசிரியரும் மிகவும் இனிமையானவர். நீங்கள் இங்கமர்ந்திருக்கும்பொழுதும், பாபா மிகவும் இனிமையானவர் என்பதை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் அவரிடமிருந்து சுவர்க்க ஆஸ்தியைப் பெறவுள்ளீர்கள். நீங்கள் இங்கு விலைமாந்தர் இல்லத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள், தந்தை மிகவும் இனிமையானவர்! தந்தை உங்களை அரைக் கல்பத்திற்குச் சந்தோஷ தாமத்திற்கு அனுப்புவார் என்ற சந்தோஷத்தை நீங்கள் உங்கள் இதயத்தில் கொண்டிருக்க வேண்டும். அவரே துன்பத்தை அகற்றுபவர். முதலில் அவர் எங்கள் பாபா. பின்னர் அவர் எங்கள் ஆசிரியராகவும் ஆகி, முழு உலகச் சக்கரத்தின் இரகசியங்களையும் எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறு சக்கரம் சுற்றுகிறது என்பதையும்,

எவ்வாறு நீங்கள் 84 பிறவிகளினூடாகச் செல்கிறீர்கள் என்பதையும் வேறு எவராலும் விளங்கப்படுத்த முடியாது. இவை அனைத்தையும் அவர் ஒரு நொடிப் பொழுதில் விளங்கப்படுத்துகின்றார். பின்னர், அவர் உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார். நீங்கள் இங்கேயே இருக்கப் போவதில்லை. அவர் ஆத்மாக்கள் அனைவரையும் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார். சொற்ப நாட்களே எஞ்சியுள்ளன. ‘பெருமளவு காலம் கடந்து விட்டது. இன்னமும் சொற்ப காலமே எஞ்சியுள்ளது’ என்று கூறப்படுகின்றது. எனவே என்னை அடிக்கடி மேலும் அதிகளவில் நினைவுசெய்தால், நீங்கள் பல பிறவிகளாகச் சேமித்த உங்கள் பாவச் சுமை முடிவடையும். மாயையுடனான யுத்தம் இடம்பெறுகின்றது, எனவே என்னை நீங்கள் நினைவுசெய்ய முயற்சிக்கும்பொழுது, அவள் உங்களை அந்த நினைவில் இருந்து விலக்குவதற்கு முயற்சி செய்கின்றாள். பாபா இதனையிட்டும் உங்களை எச்சரிக்கின்றார். ஆகையால், ஒருபொழுதும் இதனைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். உங்களுக்கு எதிர்மறையானதும், பாவகரமானதுமான எண்ணங்களின் புயல்கள் பல எவ்வளவு இருந்தாலும் நீங்கள் முழு இரவும் அந்த எண்ணங்களில் உங்கள் உறக்கத்தை இழந்தாலும், பயப்படாதீர்கள். தைரியமாக இருங்கள்! பாபா கூறுகின்றார்: அப்புயல்கள் நிச்சயமாக வரும். உங்களுக்குக் கனவுகளும் வரும். அவ் விடயங்கள் எதனையிட்டும் பயப்படாதீர்கள். இது ஒரு யுத்தகளமாகும். அனைத்தும் அழிவடைய உள்ளது. நீங்கள் மாயையை வெற்றியீட்டவே யுத்தம் செய்கின்றீர்கள். அதற்கு நீங்கள் மூச்சை நிறுத்துதல் போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்றில்லை. ஆத்மா சரீரத்தில் இருக்கும்பொழுதே, சுவாசிக்க முடியும். இங்கே நீங்கள் மூச்சை நிறுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஹத்தயோகத்தில், அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். பாபா அதனை அனுபவம் செய்துள்ளார். அவர் அதனைச் சிறிதளவு கற்றுள்ளார், ஆனால் அதற்கு ஒருவருக்கு நேரமும் இருக்க வேண்டும். இந்நாட்களில், மக்கள் உங்களிடம் கூறுகின்றார்கள்: உங்கள் ஞானம் நல்லது, ஆனால்

எங்களுக்கு நேரம் இல்லை. எங்களிடம் பல தொழிற்சாலைகள் போன்றன உள்ளன. தந்தை உங்களிடம் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, முதலில் தந்தையை நினைவுசெய்யுங்கள், அதன்பின்னர் சக்கரத்தை நினைவுசெய்யுங்கள்; அவ்வளவுதான்! அது சிரமமா? சத்திய, திரேதாயுகங்களில் அது அவர்களின் இராச்சியமாக இருந்தது. பின்னர் இஸ்லாம், பௌத்தம் போன்றவற்றின் விரிவாக்கம் இடம்பெற்றது. அம்மக்கள் (தேவர்கள்) தங்கள் தர்மத்தை மறந்ததால், அவர்களால் இனிமேலும் தங்களைத் தேவர்கள் என அழைக்க முடியாதுள்ளது, ஏனெனில் அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகினார்கள். தேவர்கள் தூய்மையாக இருந்தார்கள். எவ்வாறாயினும், நாடகத்திட்டத்திற்கு ஏற்ப, தங்களைப் பின்னர் இந்துக்கள் என்று அழைக்க ஆரம்பித்தனர். உண்மையில், இந்துசமயம் என்றொரு சமயம் இல்லை. பாரதத்திற்கு இந்துஸ்தான் என்ற பெயர் பின்னரே கொடுக்கப்பட்டது. அதன் உண்மையான பெயர் பாரதம் என்பதாகும். அவர்கள் “பாரத தாய்மார்களுக்கு வந்தனங்கள்” என்று கூறுகின்றார்கள். அவர்கள் ‘இந்துஸ்தான் தாய்மார்களுக்கு’ என்று கூறுவதில்லை. பாரதத்தில் மாத்திரமே அந்தத் தேவர்களின் இராச்சியம் இருந்தது. பாரதம் மாத்திரமே புகழப்படுகின்றது. தந்தையை எவ்வாறு நினைவுசெய்ய வேண்டும் எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை உங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்ல வந்துள்ளார். யாரை? ஆத்மாக்களை. நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகத் தந்தையை நினைவுசெய்கின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் தூய்மையாகுவீர்கள். நீங்கள் தொடர்ந்தும் தூய்மையாகுவீர்கள், அப்பொழுது நீங்கள் தண்டனையை அனுபவம் செய்ய மாட்டீர்கள். நீங்கள் தண்டனையை அனுபவம் செய்ய நேர்ந்தால், உங்கள் அந்தஸ்து குறைக்கப்படும். ஆகவே, நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக பாபாவை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாகத் தொடர்ந்தும் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பாபாவை நினைவுசெய்ய முடியாதுள்ள, பல குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் சலிப்படைந்து நீங்கிச் செல்கின்றார்கள். அவர்கள் போராடவும் முயற்சிப்பதில்லை. அத்தகைய குழந்தைகளும் உள்ளனர். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதும் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. சித்தியெய்த முடியாதவர்களும் பலர் இருப்பார்கள். ஏழைப் பிரஜைகளும் தேவைப்படுகிறார்கள். எவ்வாறாயினும், அங்கு துன்பம் இல்லாதபொழுதும், செல்வந்தர்களும் ஏழைகளும் இருக்கின்றார்கள். இதுவே கலியுகம். இங்கே செல்வந்தர்கள்;, ஏழைகள் இருசாராரும் துன்பத்தையே அனுபவம் செய்கின்றார்கள், ஆனால் அங்கோ இருசாராரும் சந்தோஷமாக உள்ளனர். செல்வந்தர், ஏழைகள் என்ற உணர்வு இருந்தாலும், அங்கு துன்பம் எனும் குறிப்பே இல்லை, ஆனால், அது வரிசைக்கிரமமாகவே உள்ளது. அங்கே நோய்கள் எதுவும் இல்லை, ஆயுட்காலங்களும் நீண்டவை. நீங்கள் இத் துன்ப பூமியை மறந்து விடுகின்றீர்கள். சத்திய யுகத்தில் நீங்கள் துன்பத்தை நினைவுசெய்யவும் மாட்டீர்கள். இப்பொழுதே தந்தை உங்களுக்கு இத் துன்ப பூமியையும், அந்தச் சந்தோஷ பூமியையும் நினைவூட்டுகிறார். சுவர்க்கம் இருந்தது என்று மக்கள் கூறுகிறார்கள், ஆனால் அது எப்பொழுது இருந்தது, அது எவ்வாறு இருந்தது? அவர்களுக்கு எதுவும் தெரியாது. நூறாயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய எதனையும் எவராலும் நினைவுசெய்ய முடியாது. தந்தை கூறுகின்றார்: நேற்று நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்கள், நாளை மீண்டும் அதனைக் கொண்டிருப்பீர்கள். அவர் இங்கமர்ந்திருந்து, மலர்களாகிய உங்களைப் பார்க்கின்றார்: இந்த மலர் நல்லவர். அவர் இவ்வகையான முயற்சியைச் செய்கின்றார். அவர் ஸ்திரமானவர் அல்ல. இவருக்குக் கல்லுப்புத்தி உள்ளது. தந்தை எதனையிட்டும் கவலைப்படுவதில்லை. ஆம். குழந்தைகளாகிய நீங்கள் விரைவாகக் கற்று, செல்வந்தர்கள் ஆக வேண்டும் என்று அவர் உணர்கின்றார். அவர் உங்களுக்குக் கற்பிக்க வேண்டும். நீங்கள் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள், ஆனால் நீங்கள் விரைவில் கற்று, திறமைசாலிகளாக வேண்டும். இது உயிருள்ள மலர்கள் வாழும் பூந்தோட்டம் என்பதால், தந்தை இங்கமர்ந்திருந்து, நீங்கள் எவ்வளவுக்குக் கற்று, பிறருக்கும் கற்பிக்கின்றீர்கள் என்பதையும், நீங்கள் எத்தகைய மலர்கள் என்பதையும் பார்க்கின்றார். நீங்கள் மலர்களைப் பார்த்தவுடனேயே அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். பாபா உங்களுக்குச் சுவர்க்கம் என்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்தால், உங்கள் பாவங்களும் தொடர்ந்தும் அழிக்கப்படும். இல்லாவிட்டால், தண்டனையை அனுபவம் செய்வதுடன், நீங்கள் பின்னர் ஒரு குறைந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். இது தண்டனையை அனுபவம் செய்த பின்னர் ஒரு சப்பாத்தியைப் பெறுவது என அழைக்கப்படுகிறது. உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழியும் வகையில் தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் சக்கரத்தையும் அறிந்திருக்க வேண்டும். சக்கரம் தொடர்ந்தும் சுழலுகிறது; அது என்றுமே நிறுத்துவதில்லை. அது ஒரு பேன் போன்று தொடர்ந்தும் நகர்கின்றது. ஒரு பேன் மிக மெதுவாக நகருகின்றது. இந்த எல்லையற்ற நாடகமும் மிகவும் மெதுவாக நகருகின்றது; அது தொடர்ந்தும் விநாடிக்கு விநாடி நகர்கின்றது. 5000 வருடங்களில் எவ்வளவு நிமிடங்களும், விநாடிகளும் உள்ளன என்பதைச் சில குழந்தைகள் கணக்கிட்டு, பாபாவிற்கு அதனை அனுப்பியுள்ளனர். அது நூறாயிரக்கணக்கான வருடங்களாயின், எவராலும் அதனைக் கணக்கிட முடியாது. தந்தையும் குழந்தைகளும் இங்கு அமர்ந்துள்ளார்கள். பாபா இங்கமர்ந்திருந்து, ஒவ்வொருவரையும் அவதானிக்கின்றார். இவர் பாபாவை அதிகளவு நினைவு செய்கின்றார். இவர் இந்த ஞானத்தை அதிகளவு பெற்றுள்ளார், இவர் பிறருக்கும் அதிகளவில் விளங்கப்படுத்துகின்றார். அது மிகவும் இலகுவானதாகும். நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களிடம் பட்ஜ் உள்ளது. அவர்களிடம் ‘இவர் சிவபாபா’ என்று கூறுங்கள். மக்கள் காசிக்குச் செல்லும்பொழுது, அவர்கள் ‘சிவபாபா சிவபாபா!’ என்று உரத்துக் கூவி, அழைத்து அவரை நினைவுசெய்கின்றார்கள். நீங்கள் சாலிகிராம்கள். ஆத்மாக்கள் மிகவும் சின்னஞ்சிறிய நட்சத்திரங்கள். அவர்களுக்குள் அத்தகைய மிகப்பெரிய பாகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆத்மாக்கள் அளவில் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ ஆகுவதில்லை. அவர்கள் ஒருபொழுதும் அழிக்கப்படுவதில்லை. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். நாடகத்தில் அவர்களுக்கு உள்ள பாகங்கள் அவர்களில் பதியப்பட்டுள்ளன. ஒரு வைரமே அனைத்திலும் உறுதியானது. அதனை விட உறுதியான கல் எதுவும் இல்லை என்பதை நகைவியாபாரிகள் அறிவார்கள். ஓர் ஆத்மா எவ்வளவு சின்னஞ்சிறியவர் எனவும், ஆத்மாவில் எவ்வளவு பெரியதொரு பாகம் பதியப்பட்டுள்ளது எனவும், எவ்வாறு ஆத்மா என்றும் அழிக்கப்படுவதில்லை எனவும் ஆத்மாவைப் பற்றிச் சிந்தியுங்கள். தந்தை, ஆசிரியர், சற்குரு என்று அழைப்பதற்கு இன்னுமோர் ஆத்மாவோ அல்லது வேறெந்த எந்த மனிதரோ இவ்வுலகில் இல்லை. அவர் எல்லையற்ற தந்தையாவார். அவர் ஆசிரியரும் ஆவார். அவர் அனைவருக்கும் ‘மன்மனாபவ’ என்ற கற்பித்தலைக் கொடுக்கின்றார். அவர் உங்களிடமும் கூறுகின்றார்: நீங்கள் வேறு சமயத்தினர் எவரையேனும் சந்திக்கும்பொழுது, ‘நீங்கள் அல்லாவை நினைவுசெய்கின்றீர்களா?’ என்று அவர்களிடம் வினவுங்கள். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பித்தலைக் கொடுக்கிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். இவ்வாறு கூறியது யார்? ஆத்மாவே கூறினார். மக்கள் இவ்வாறு பாடியபொழுதிலும், அவர்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் அனைவரும் சீதைகளும், நான் இராமரும் ஆவேன். நானே பக்தர்கள் அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றேன். அவர் அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். அனைவரும் முக்தி தாமத்திற்குச் செல்கின்றார்கள். சத்திய யுகத்தில் வேறு சமயங்கள் எதுவும் இல்லை. அங்கே நாங்கள் மாத்திரமே உள்ளோம், ஏனெனில் நாங்கள் மாத்திரமே தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுபவர்கள். இங்கே எத்தனை ஆலயங்கள் உள்ளன என்பதைப் பாருங்கள்! உலகம் மிகவும் பெரியது, அதில் பல பொருட்கள் உள்ளன. அப்பொருட்கள் எதுவும் அங்கிருக்க மாட்டாது. பாரதம் மாத்திரமே இருக்கும். புகையிரதப் பாதைகள் கூட இருக்க மாட்டாது. அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். அங்கே புகையிரதப் பாதைக்கான அவசியம் இருக்கமாட்டாது. அங்கு அது சிறு நகரமாக இருக்கும். தொலைவில் உள்ள கிராமங்களுக்குச் செல்வதற்குப் பயணிப்பதற்கே புகையிரதப் பாதைகள் தேவைப்படுகின்றன. பாபா உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குத் தொடர்ந்தும் பல வெவ்வேறு கருத்துக்களை விளங்கப்படுத்துகின்றார். இங்கமர்ந்திருக்கும்பொழுது, உங்கள் புத்தியில் இந்த ஞானம் அனைத்தும் உள்ளது. அதேபோன்று பரமாத்மாவாகிய பரமதந்தையிடமும் ஞானம் அனைத்தும் பதியப்பட்டுள்ளதால், அவர் அதனை உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். அமைதி தாமத்தில் வசிக்கின்ற, அமைதிக் கடலான தந்தையே அதிமேலானவர். ஆத்மாக்களாகிய நாங்களும் அங்கே இனிய வீட்டில் வசிக்கின்றோம். மக்கள் அமைதிக்காக அதிகளவு பிரயத்தனம் செய்கின்றார்கள். சாதுக்களும் எவ்வாறு மன அமைதியைப் பெற முடியும் என்று வினவுகின்றார்கள். அவர்கள் அதற்காகப் பல்வேறு வழிமுறைகளை உருவாக்குகின்றார்கள். ‘ஆத்மாவிற்கு ஒரு மனமும், புத்தியும் உள்ளன என்றும், ஆத்மாவின் ஆதிதர்மம் அமைதி’ என்பதும் நினைவுகூரப்பட்டுள்ளது. ஆத்மாவிற்கு வாயோ, பௌதீக அங்கங்களோ இல்லாததால், அங்கு நிச்சயமாக அமைதி இருக்கும். ஆத்மாக்களாகிய எங்களின் வசிப்பிடமானது முற்றிலும் அமைதி நிலவுகின்ற, இனிய வீடாகும். பின்னர் அங்கிருந்து நாங்கள் எங்கள் சந்தோஷ பூமிக்குச் செல்கின்றோம். நாங்கள் இப்பொழுது துன்ப பூமியிலிருந்து சந்தோஷ பூமிக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றோம். தந்தை எங்களைத் தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். உலகம் மிகப் பெரியதாகும். அங்கே இக் காடுகள் போன்றன இருக்க மாட்டாது. பல்வேறு மலைகள் போன்றனவும் இருக்க மாட்டாது. எங்கள் இராச்சியம் மாத்திரமே இருக்கும். அவர்கள் சுவர்க்கத்தின் சிறியதொரு மாதிரியை உருவாக்குவதைப் போன்றே, அங்கு சிறிய சுவர்க்கமே இருக்கும். என்ன நடைபெறவுள்ளது என்ற அற்புதத்தைப் பாருங்கள். உலகம் மிகவும் பெரியதாகும். இங்கே அவர்கள் அனைவரும் தொடர்ந்தும் தங்கள் மத்தியில் சண்டை இடுகின்றார்கள். அதன்பின்னர் இவ்வுலகம் அழிக்கப்பட்டு, எங்கள் இராச்சியம் மாத்திரமே எஞ்சியிருக்கும். அனைத்தும் அழிந்த பின்னர், இவை அனைத்தும் எங்கு செல்லும்? அவை அனைத்தும் கடலுக்கு அடியிலும், பூமிக்கு அடியிலும் செல்லும். அவற்றின் பெயரோ அல்லது சுவடோ எதுவும் எஞ்ச மாட்டாது. கடலுக்குள் செல்கின்ற எதுவும் அதற்குள் அழிக்கப்படுகிறது. கடல் அதனை முழுமையாக விழுங்கி விடுகின்றது. தத்துவங்கள் தத்துவங்களுடன் அமிழ்ந்து, மண்ணோடு மண்ணாகி விடும். பின்னர் உலகம் சதோபிரதான் ஆகும். அந்நேரத்தில், “புதிய சதோபிரதான் தத்துவம்” என்று கூறப்படுகின்றது. அங்கே உங்களுக்கு இயற்கையான அழகு இருக்கும்; அங்கே நீங்கள் உதட்டுச்சாயம் போன்றவற்றை இடுவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள் சுவர்க்கத்தின் இளவரசிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இந்த ஞானத்தில் நீராடாது விட்டால், தேவர்கள் ஆக மாட்டீர்கள். வேறெந்த வழியும் இல்லை. தந்தை என்றும் அழகானவர். ஆத்மாக்களாகிய நீங்கள் அவலட்சணமானவர்கள் ஆகியுள்ளீர்கள். அன்பிற்கினியவர் மிகவும் அழகான பயணி. அவர் வந்து, உங்களை அழகானவர்கள் ஆக்குகின்றார். தந்தை கூறுகிறார்: நான் இவரில் பிரவேசித்துள்ளேன். நான் ஒருபொழுதும் அவலட்சணமானவர்; ஆகுவதில்லை. நீங்கள் அவலட்சணமானவராக இருக்கிறீர்கள், நீங்கள் இப்பொழுது அழகானவர்கள் ஆகுகிறீர்கள். ஒரேயொரு பயணி மாத்திரமே சதா எப்பொழுதும் அழகானவர். இந்த பாபா அவலட்சணமாகிப் பின்னர் அழகானவர் ஆகுகின்றார். அவர் உங்கள் அனைவரையும் அழகானவர்கள் ஆக்கி, உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அழகானவர்கள் ஆகி, பிறரையும் அழகானவர்கள் ஆக்க வேண்டும். தந்தை அவலட்சணமானவராகவும், அழகானவராகவும் ஆகுவதில்லை. அவர்கள் தந்தையின் பெயருக்குப் பதிலாக

ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரை இட்டு, கீதையில் ஒரு தவறை இழைத்துள்ளார்கள். அதுவே ஒரு தவறு என்று

அழைக்கப்படுகின்றது. சிவபாபாவே உலகை அழகாக்குகின்றார், ஆனால் அவர்கள் அவரின் பெயருக்குப்

பதிலாக, முதலில் சுவர்க்கத்தில் அழகானவராக ஆகுபவரின் பெயரைப் புகுத்தியுள்ளார்கள். எவரும் இதனைப் புரிந்துகொள்வதில்லை. பாரதம் மீண்டும் அழகானதாகும். அம்மக்கள் 40,000 வருடங்களின் பின்னர் சுவர்க்கம் வரும் என்று எண்ணுகின்றார்கள், ஆனால் முழுச் சக்கரமுமே 5000 வருடங்களை மாத்திரமே உடையது என நீங்கள் விளங்கப்படுத்துகின்றீர்கள். தந்தை ஆத்மாக்களாகிய உங்களிடம் இப்பொழுது பேசுகின்றார். அவர் கூறுகிறார்: நான் அரைக் கல்பத்திற்கு உங்கள் அன்பிற்கினியவர். நீங்கள் என்னை அழைத்துக் கொண்டிருந்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து, ஆத்மாக்களாகிய எங்களை, காதலிகளாகிய எங்களைத் தூய்மையாக்குங்கள்! எனவே அவரின் வழிகாட்டல்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். வியாபாரம் போன்றவற்றைச் செய்யாதீர்கள் என்று பாபா உங்களுக்குக் கூறுவதில்லை. இல்லை. நீங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். வீட்டில், உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து, உங்கள் குழந்தைகளைப் பராமரிக்கும்பொழுதும், உங்களை ஆத்மாக்கள் என்று கருதி, என்னை நினைவுசெய்யுங்கள். ஏனெனில், நானே தூய்மையாக்குபவர். நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பராமரிக்கலாம், ஆனால் மேலும் குழந்தைகளைப் பெறாதீர்கள். இல்லாவிட்டால், நீங்கள் தொடர்ந்தும் அவர்களையே நினைவுசெய்வீர்கள். அவர்கள் அனைவரும் உங்களுக்கு இருந்தபொழுதும், நீங்கள் அவர்களை மறக்க வேண்டும். நீங்கள் பார்க்கின்ற அனைத்தும் அழிவடையவுள்ளது. சரீரங்கள் அழிக்கப்படும், ஆத்மாக்கள் தந்தையின் நினைவின் மூலம் தூய்மை ஆகுவார்கள். பின்னர் நீங்கள் புதிய சரீரங்களைப் பெறுவீர்கள். இதுவே ஓர் எல்லையற்ற துறவறம். ஒரு தந்தை புதிய வீடொன்றைக் கட்டும்பொழுது, அவர்களின் இதயங்கள் பழைய வீட்டிலிருந்து அகல்கின்றன. சுவர்க்கத்தில் என்னதான் இருக்க மாட்டாது? அங்கே எல்லையற்ற சந்தோஷம் இருக்கிறது. இங்கேயே சுவர்க்கம் இருக்கும். தில்வாலா ஆலயத்தில் முழுமையானதொரு ஞாபகார்த்தம் உள்ளது. நீங்கள் கீழே தபஸ்யா செய்வது காட்டப்பட்டுள்ளது. எனவே, சுவர்க்கம் எங்கு காட்டப்படும்? அவர்கள் சுவர்க்கத்தைக் கூரையின் உட்புறத்தில் காட்டியுள்ளார்கள். கீழே, நீங்கள் இராஜயோக தபஸ்யா செய்கின்றீர்கள், மேலே இராஜ அந்தஸ்து காட்டப்படுகின்றது. ஆலயம் மிகவும் அழகாக உள்ளது. மலை உச்சியில் தங்க விக்கிரகங்கள் இருக்கின்ற, அச்சல்கார் உள்ளது. அங்கே அதை விடவும் மேலே குரு சிக்கார் உள்ளது. குருவே அதி உச்சியில் அமர்ந்துள்ளார். அதிமேலானவர் சற்குருவே ஆவார், இடையில் அவர்கள் சுவர்க்கத்தைக் காட்டியுள்ளார்கள். எனவே தில்வாலா ஆலயமே மிகச்சரியான ஞாபகார்த்தமாகும். நீங்கள் இராஜயோகத்தைக் கற்கின்றீர்கள், பின்னர் இங்கே சுவர்க்கம் இருக்கும். தேவர்கள் இங்கே வாழ்ந்தார்கள். அவர்களுக்காக இப்பொழுது தூய உலகம் உருவாக்கப்படுகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அக்கண்களால் அனைத்தையும் பார்க்கும்பொழுதிலும், அவற்றை மறப்பதற்குப் பயிற்சி செய்யுங்கள். பழைய வீட்டிலிருந்தும், பழைய உலகிலிருந்தும் உங்கள் இதயத்தை அகற்றுங்கள். உங்கள் புதிய வீட்டை நினைவுசெய்யுங்கள்.

2. இந்த ஞானத்தில் நீராடி, அழகான இளவரசிகள் ஆகுங்கள். தந்தையே அழகான பயணியாக இருப்பதால், அவரை நினைவுசெய்து, உங்கள் ஆத்மாவை அவலட்சணமானவரிலிருந்து அழகானவர் ஆக்குங்கள். மாயையுடனான உங்கள் யுத்தத்தையிட்டுப் பயப்படாதீர்கள். நீங்கள் நிச்சயமாக வெற்றியாளர் ஆகுவீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் “மாஸ்டர் கருணை நிறைந்தவராகவும்”, மகா தானியாகவும் ஆகி. பெருந்தன்மையாக சந்தோஷப் பொக்கிஷத்தை விநியோகிப்பீர்களாக.

மக்கள் அதிகளவு நேரத்தையும், பணத்தையும் தற்காலிகமான சந்தோஷத்தை அனுபவம் செய்வதில் செலவழிக்கின்றார்கள். ஆனால் அப்பொழுதும் அவர்கள் உண்மையான சந்தோஷத்தைக் கண்டடைவதில்லை. அத்தகைய தேவைப்படும் நேரத்தில் ஆத்மாக்களாகிய நீங்கள் மகாதானிகளாகி, பெருந்தன்மையாக சந்தோஷ தானத்தைக் கொடுக்க வேண்டும். இதற்கு, கருணை எனும் தெய்வீகக் குணம் வெளிப்பட்டும். உங்கள் உயிரற்ற விக்கிரகங்கள் காட்சிகள் அருள்வதனால், உங்கள் உயிருள்ள ரூபங்களிலும், நீங்கள் கருணை நிறைந்தவர்களாகி, தொடர்ந்தும் சந்தோஷத்தை விநியோகிக்க வேண்டும், ஏனெனில் அந்த ஆத்மாக்கள் ஓர் ஆதிக்கத்தின் கீழ் உள்ளார்கள். ஒருவர் என்றுமே செவிமடுக்கப் போவதில்லை என்று ஒருபொழுதும் எண்ணாதீர்கள்: நீங்கள் கருணைநிறைந்தவர்களாகி, தொடர்ந்தும் விநியோகிக்க வேண்டும். உங்கள் நல்லாசிகள் நிச்சயமாக அவர்களுக்குப் பலன் அளிக்கும்.

சுலோகம்:
யோக சக்தி மூலம் தங்கள் பௌதீகப் புலன்கள் அனைத்தையும் தங்கள் கட்டளைகளின் கீழ் செயற்படுத்துபவர்களே சுய இராச்சிய அதிபதிகளான, தங்கள் சுயத்தின் அதிபதிகள் ஆவார்கள்.